தினமணி இப்போது ஜெயா மணி.
தினமணி மேல் நம்பிக்கையில்லை – தினமணி வாசகர்கள் Posted by வினவு இந்த கட்டுரை வினவு தளத்தில் இருந்து மீள் பதிவு. காரணம் நானும் தினமணியின் தீவிர வாசகனாக இருந்துவந்தவன்.ஏ .என்.சிவராமன் காலத்தில் இருந்த தினமணியின் பெருமையை கேள்விப்பட்டே தினமணியின் வாசகனானேன். 28 ஆண்டுகளாக தினமும் வாங்கியவன்.இன்னமும் தினமணி சுடர்,வணிகமணி ,இளைஞர் மணி தினமணி கதிர் போன்றவைகளை சேர்த்து வைத்திருப்பவன். ஆனால் என்று நிமிர்ந்த நன்னடை வைத்தி வந்து ஆசிரியர் நாற்காலியில் வந்து அமர்ந்து" பே நாயை " திறந்தாரோ அன்றில் இருந்து தினமணி வர்க்க பேதம் காண ஆரம்பித்து முற்றிலும் ஜெயா ஆதரவு இதழாக அதிமுகவின் இன்னொரு எம்ஜிஆர் ஆகமாறி விட்டது.அதிலும் மதி கருத்துப்படங்கள் ரசிக்கும் படி இருந்தாலும் விட விதைகளை தூவி வருகிறது. தினமணி தினமும் படிப்படியாக நிறம் மாறும் பச்சோந்தியாக மாறியதும் நானும் படிப்படியாக வாங்குவதை நிறுத்தி இப்போது தினமணி சுவரொட்டியை கூட படிப்பது கிடையாது. ஆனால் வைத்தியோ தனது தினமணி அழிந்தாலும் பரவா யில்லை என்று ஜெயா ஜால்ராவை இன்னும் பலமாக ஒலிக்க...