இடுகைகள்

ஆபத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தலை கேட்கும் சாமி.

படம்
பாரத் மாதா கீ ஜே என்று முழங்காதவர்களின் தலையை துண்டிப்பேன் என்று கடந்த 2016-ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பாபா ராம்தேவுக்கு எதிராக பிணையில் வெளி வரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கத்தை இந்தியர்கள் அனைவரும் முழங்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தினர்.  அதே கருத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பும் வலியுறுத்தியது. இந்நிலையில் பாரத தாயை வணங்குவோம் என்ற அர்த்தம் கொண்ட பாரத் மாதா கீ ஜேவை முழங்குவதற்கு முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதாவது கடவுளை தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று முஸ்லிமின் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய பாபா ராம்தேவ், பாரத் மாதா கீ ஜே என்ற கோஷத்தை முழங்காதவர்களின் தலையை துண்டிப்பேன் என்று கருத்து தெரிவித்திருந்தார்.  இது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து முன்னாள் உள்துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சுபாஷ் பத்ரா ஹரியாணா மாநிலம் ரோத்தக் நீதிமன்றத்தில் பாபா ராம்தேவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்...

மாவீரன் மோடி.

படம்
இந்திய பாமர மக்களுக்கு எதிரான ஆணைகளை போட்ட விட்டு வெளிநாடுகளுக்கு ஓடிப்போய்விடுவதே மோடியின் ராஜ தந்திரமாய் போய்விட்டது. பணமதிப்பிழப்பு காலங்களில் 500,1000 செல்லாது என்று இரவில் அறிவித்து விட்டு பகலில் விமானம் ஏறி விட்டார்.இந்தியாவில் உள்ள மக்களில் 90% வாங்கி வரிசையில் சாப்பிட கூட இயலாமல்  காத்துக்கிடந்து மயங்கிய போதும் ,பணம் செல்லாதா என்று பலர் உயிரை இழந்து அவர்கள் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்த போதும்  இப்படித்தான் ஒடி வெளிநாடுகளில் போய் ஒளிந்து கொண்டார். அந்த பணமதிப்பிழப்பு மக்களை கொடுமைப்படுத்தியதை பற்றி  இந்திய வந்த பின்னரும் வாயே திறக்கவில்லை. பாராளுமன்றத்தில் கேள்விகள்,ஆர்ப்பாட்டங்களும் நடந்த போதும் மன்மோகன் சிங்குக்கு அண்ணனாக வாயில் சூயிங்கம் போட்டு ஒட்டிக்கொண்டார். அனால் இன்றுவரை கறுப்புப்பணம் ஒழிந்ததாக ஆய்வுகள் அறிவிக்கவில்லை.மாறாக கறுப்புப்பணம் அதிகரித்திருப்பது வருமான,அமுலாக்க துறையினர் சோதனைகள் மூலம் தெரிகிறது. இதுவரை 64 தடவைகள் வெளிநாடுகள் ,பயணங்கள்,ஒப்பந்தங்கள் இந்திய மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது.? ஐ.டிதுறையில் வெளிநாடுகளின் முட...

நம்மையும் காயப்படுத்தி விடும்!

படம்
ரொம்பவும் கவலையாக இருக்கிறது. தமிழ் நாட்டின் முகநூல் மக்களை பற்றி எண்ணினால். சமூக வலைத்தளங்கள் மூலம் சிலநாடுகளில் அரசியல் மாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்துள்ளது.பல ஆக்கப்பூர்வமான செயல்கள் நடந்துள்ளன.தேவையான ரத்தப் பிரிவை பரவவிட்டு பல உயிர்களை காத்திருக்கிறார்கள். படிக்க முடிந்து கல்விக்கட்டணம் கட்ட முடியாத மாணவர்களுக்கு நிதி பிரித்து படிக்க வைத்துள்ளார்கள். அரசியல் கட்சிகளின் இன்றைய முக்கிய பிரசார களமாகவும் முகநூல்,டுவிட்டர் உள்ளது.அதில் இயங்காத அரசியல் தலைவர்களே  இல்லை எனலாம். நேரடியாக இல்லாவிட்டாலும் ஆள்வைத்து அரசியல் செய்ப்பவர்கள் உண்டு. ஆனால் அவ்வாறு நல்லவை நடக்கும் சமுக வலைத்தளங்களில் சாதி,மத வெறியை தூண்டும், சண்டைகளை உருவாக்கும் பணிகளும் சிலரால் நடக்கிறது.இவை திட்டமிட்டே செய்யப்படுகிற செயலாகவே தெரிகிறது. இவர்களில் பலர் தங்கள் பெயர்களிலேயே சாதியை துணையாக்கி உள்ளார்கள். இவைகளை விடக் கொடுமை இன்றைய கொடூர கொலையான சுவாதி கொலையை இவர்கள் கையாளும் விதம். இக்கொலையை நேரில் பார்த்தவர்கள்  போலவே அப்போது கும்மிடிப்பூன்டியில்  கொய்யாப்பழத்...

மனிதன்X இயந்திர மனிதன்

படம்
இன்னும் 30 ஆண்டுகளில் ரோபோக்கள் காரணமாக  மனிதர்கள் வேலை இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். நவீன கண்டுபிடிப்புகள் மூலம் உலகம் முழுவதும் தற்போது இயந்திரமயமாகி கொண்டுவருகிறது. ஜப்பானியர்களே நவீன ரோபோக்களை உருவாக்கினர்.  முதல் ரோபோவை, 1954ம் ஆண்டு ஜார்ஜ் தேவோல் என்பவர் வடிவமைத்தார்.  அதை முதலில் "யுனிமேட்' என அழைத்தனர். இது 1960ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது.  இது வெப்பமான உலோக துண்டுகளை கையாள பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் யுனிமேட் க்கு ரோபோ என்ற பெயரை சூட்டினார்கள். ரோபோ என்பதற்கு, மனிதன் இடும் கட்டளைகளை, நிறைவேற்றும் இயந்திர மனிதன், என பொதுவாக கூறலாம்.  ரோபோ எனும் சொல்லை முதன்முதலில் செக் குடியரசு எழுத்தாளர் காரெல் கேபெக் என்பவர் 1920ம் ஆண்டு தான் எழுதிய நாவலில் பயன்படுத்தினார்.  அவரது ஆர்.யு.ஆர்., எனும் நாடகத்தில் ரோபோ கதாபாத்திரத்தை அறிமுகம் செய்தார்.  மனிதர்கள் போல் தோற்றம் கொண்ட இயந்திரங்கள், தொழிற்சாலையில் வேலை செய்வது போல், காட்சி அமைத்திருந்தார். ...

கபாலியும் கபாலிகர்களும்...,

படம்
பாஜக ரஜினியை தன கட்சிக்குள் இழக்க முயற்சிக்கிறது.ஆனால் தமிழகத்தில் ரஜினி அரசியல் வாய்ஸ் எடுபடாது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லையோ? ரசினிக்கு தெரிந்ததெல்லாம் வெல்கிற கட்சிக்கு வாய்ஸ் கொடுப்பது. கோடிக்கணக்கில் வாங்கும் பணத்துக்கு பாதுகாப்பு தேடிக்கொள்வது.அதுதான் அவரின் அரசியல் . தற்பொதைய நடிகர் சங்கத்தேர்தலில் கூட விஷால் அணிக்கு பகிரங்கமாக கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தும் கூட மற்றொரு பிரபலமான,அதிரடி வாய்ஸ் ரஜினி வாயையே திறக்கவில்லை.கடைசியாக வாக்களித்து விட்டு "வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா செய்ய வேண்டும் "என்று கடுமையான [?] வாய்சை ஊடகங்கள்  ஒலிவாங்கியை பார்த்து எச்சரித்து விட்டு போயிருக்கிறார். பா ரதிய ஜனதாவை வெறும் அகோரி, சங்கர மட, ஆதீனங்களின் கட்சியாக மட்டும் சுருக்குவது தவறு. கஞ்சா, நெய் பொங்கல், புளியோதரையால் வரும் சக்தியையோ இல்லை சதியையோ ஒரு ஊட்டி தேநீரை அருந்தியபடியே நாம் எதிர்கொண்டு விடலாம். ஆனால் அமேசான் காட்டின் ‘மூலிகை திரவ’த்தை ஆம்வேயால் அருந்திக் கொண்டு, மெக்டனோல்டு, பர்கரோடு புல்லட் புரூஃப் இறுமாப்பில் மௌரியா ஷெர்ட்டனில் கதைக்கும் கனவான்களை அப்ப...