இடுகைகள்

காப்பீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊழல். காப்பீடு...

படம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளே போய் வெளியே வந்து வீட்டில் அமைதியாக இருந்தாலும் துணை கிரகங்கள் அமைச்சர்கள் தலைமையில்  அதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுவது வெளிப்படையாகவே மக்கள்   அறிந்த உண்மை.   தினந்தொறும் ஒவ்வொரு ஊழல் முறைகேடுகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த பணத்தாசையால் அதிகாரி [தற்]கொலை செயததால் அமைச்சர் ஒருவர் பாளை சிறையில் வாடுகிறார். இன்றைய ஊழல் பரபரப்பு செய்தி. உயிர் காக்கும் துறையையும்  அதிமுக அமைச்சர்  பெருமக்கள் விட்டு  வைக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் புதிய தகவல்.  தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து அரசு  செயல்படுத்தும் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தான் அதிநவீன முறையில் ஊழல் நடைபெற்றுகிறது. முந்தைய ஆட்சியில் காப்பீடு திட்டத்தில் குறைபாடு  இருப்பதாகக் கூறி, அதற்கு பதிலாக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் கடந்த 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  தமிழகத்தில் அரசு  மருத்துவமனைகள் உள்பட 769 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 650க்கும் மேற்பட்டவை தனி...

காப்பீடை காப்போம்.

படம்
மோடியின் மத்திய அரசு தனது முதல் வரவு-செலவு அறிக்கையிலேயே காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக அதிகரிப்போம் என பராக்..பராக்..என அறிவித்து விட்டது. இந்த அறிவிப்பு பல்வேறுஎச்சரிக்கைகளை, இந்திய நாட்டு மக்களுக்கும், நாட்டுக்கும், அரசியலுக்கும் குறிப்பாக பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.க்கும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இந்திய நாட்டின்,அனைத்து மாநிலங் களிலும்,மக்கள் பெரும்பாலானோர் தங்களது கடின உழைப்பால் சேமிக்கப்பட்ட நிதியை, போலி நிதி நிறுவனங்கள், சீட்டு கம்பெனிகள் என போட்டு ஏமாறுவது வாடிக்கையாகிவிட்டது.  அண்மையில் இந்த வகையில் மேற்கு வங்கத்தின் சாரதா சிட் ஃபண்ட் கம்பெனியில் பணம் செலுத்தியமக்கள், முதலீடு செய்த பணம் கூட திரும்பக்கிடைக் காமல் நடுத்தெருவில் நிற்கிறார்கள். இந்த கம்பெனியின் தலைமை நிர்வாகி,நிறுவன அதிபர் சுதிப்தா சென் எத்தனை வருடங்கள் ஆனாலும் சிறையில் இருக்கிறேன்.  ஆனால் பணம் மட்டும் திருப்பித்தர இயலாது என்கிறார். அவரது தொலைக்காட்சி ஊடகத்தை தனது அடாவடி அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வெற்றிபெற்றது மம்தாவ...