இடுகைகள்

அழிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு

படம்
ரஜினிக்கு, ரஜினி ரசிகன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் துரை எழுதுவது தங்களோடு நேரில் பேசிப் பழகியவன் என்ற முறையில் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்! வீட்டில், படப்பிடிப்பில் விழாக்களில், எப்போதுமே தாங்கள் பதற்றம் நிறைந்தவராகவே காணப்பட்டீர்கள். கொடி பறக்குது, படப்பிடிப்பின் போது வெள்ளை பேண்ட்டில் இருந்து, காக்கி பேண்ட்டிற்கு மாறியபடி என்னிடத்தில் பேசினீர்கள்.  அந்த எளிமை எனக்கு பிடித்திருந்தது. "ரஜினி ரசிகன்" பத்திரிகை ஆசிரியர் துரை தங்களது இமேஜை காப்பாற்றி கொள்ளக்கூட பொய் சொல்லத் தெரியாதவர்கள் நீங்கள். என்னை பொறுத்தவரை அடிப்படையிலேயே ‘யூவார் எ டிஸ்டர்ப்டு சைல்டு’ எப்போதுமே பதற்றம் நிறைந்தது. தங்கள் நடவடிக்கை என்பது எனது பார்வை. தவிர்க்கவே முடியாமல் எம்.ஜி.ஆரை குறித்து சில விஷயங்களை பேசியாக வேண்டும். பள்ளிப் பருவத்திலேயே வறுமை, பசி, பட்டினியை அறிந்தவர் கஷ்டமறிந்து பலருக்கு உதவியவர். தனது 20 வயதிற்குள்ளாகவே அரசியல் குறித்து அவருக்கு ஒரு கனவு இருந்தது. அதற்காக திட்டமிட்டு கட்சியில் இணைந்தார். தனது படங்களில் வசனங்களில் பாடல்களில் கட்சி கொள்கையை பரப்பினார் அவரது...

போதை அடிமைகள்

படம்
 பணத்தை இழந்தால் சம்பாதிக்க முடியும்.  உடல் நலத்தை இழந்தால் அவ்வளவுதான். போதை வஸ்துக்கள் உடல் நலத்தையும் அதனால் ஏற்படும் நஷ்டத்தையும் தனிமனிதனுக்கு மட்டுமின்றி வீட்டிற்கும் நாட்டிற்கும் தருகிறது.  பல ஆண்டுகளாக நாட்டில் நோய்களும், தற்கொலைகளும், போதை மருந்துகளின் நடமாட்டத்தால் அதிகரித்திருப்பது கவலை தரும் விஷயம். அந்தளவுக்கு எங்கு பார்த்தாலும் அரசு டாஸ்மாக் மது விற்பனை நடக்கிறது.  அரசுக்கு டாஸ்மாக் வருமானத்தை விட மனமில்லை. போதைக்கு அடிமையாவது குறித்து ஒவ்வொருவரும் வேறு வேறு காரணங்களை காட்டுகின்றனர்.  பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பாமரர்கள் அவர்கள் பகுதியில் குறைந்த விலையில் கிடைக்கும் மட்ட ரக போதைப் பொருட்களை சிறு வயதில் நட்பு வட்டாரத்தின் மூலம் பழகி பின்பு அதற்கு நிரந்தர அடிமையாகின்றனர். படித்த, மேல்மட்டத்தினர் தகுதிக்கு ஏற்றவாறு அதிக விலையுள்ள போதை பொருட்களை உபயோகிக்கின்றனர். இந்தியாவில் 2 சதவீத மாணவர்கள் நிரந்தர போதை அடிமைகள் என உலக சுகாதார அறிக்கை கூறுகிறது. தடுப்பு மற்றும் ஒழிப்பு- உலகின் போதை மருந்து விற்பனையாளர்களின் நெட் ஒர்க் 76 நாடுகள...

இதற்கும் ரெகுபதிதான் விசாரிப்பாரா?

படம்
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் இயங்கிய கிரானைட் குவாரிகளில் பல்வேறு முறை கேடுகள் நடப்பதாக 2012-ம் ஆண்டு மதுரை ஆட்சியராக இருந்த சகாயத்துக்கு புகார்கள் வந்தன. இது குறித்து அவர் நேரடியாக விசாரணையில் இறங்கினார். 91 குவாரிகளில் ஆய்வு செய்த ஆட்சியர் சகாயம், இது குறித்து 2012 மே மாதம் 19-ம் தேதி தமிழக தொழில் துறை முதன்மை செயலாளருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார். சகாயம் இதில், 39,30,431 கன மீட்டர் அளவுக்கு அரசு அனுமதி பெறாத புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு ரூ.15,721 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உரிமத்தொகை ரூ.617 கோடியும் சேர்த்தால் மொத்த இழப்பு ரூ.16,338 கோடி எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கை அனுப்பப்பட்ட 9 நாட்களில் ஆட்சி யர் பொறுப்பிலிருந்து சகாயம் மாற்றப்பட்டார். அதே நாளான 2012 மே 28-ம் தேதி அன்சுல் மிஸ்ரா மதுரை ஆட்சியராக பொறுப்பேற்றார். சகாயம் அரசுக்கு அனுப்பிய அறிக்கை மீது அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அறிக்கையில் இடம் பெற்றிருந்த தகவல்கள் 2012 ஜூலை மாத இறுதியில் ஊடகங்களில் வெளியாயின. ஆகஸ்ட் முதல்...

கங்கையும் பாவமும்.

படம்
இந்தியாவின் 23 வது பணக்காரர்? சன் தொலைக்காட்சி உரிமையாளர் கலாநிதி மாறன் தான் இன்று  இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் நிறுவன தலைவராக இருக்கிறார்.சொத்து மதிப்பில் இந்திய அளவில் 23வது பனக்காரர். இந்திய கார்ப்பரேட்டுகளிலேயே அதிக அளவில் ஊதியம் பெறுபவர்கள் சன் குழுமத்தின் செயல் தலைவர் கலாநிதி மாறன் மற்றும்செயல் இயக்குநரான அவரது மனைவி காவேரி கலாநிதி ஆகிய இருவருமாவார்கள் என்று தெரிய வந்திருக்கிறது .2013-14ஆம் ஆண்டில் அவர்கள் ஒவ்வொருவரும் பெற்ற சம்பளம் 59.89 கோடி ரூபாயாகும்.  இதில்அவர்களுடைய அனைத்துவிதமான படிகள் மற்றும் சலுகைகளும் இதில் அடக்கம்.சன் குழுமத்தின் 2013-14ஆம் ஆண்டு ஆண்டறிக்கையின்படி, எக்சிகியூடிவ் சேர்மனான கலாநிதி மாறன், 13.1 கோடி சம்பளமாகப் பெற்றார். சலுகைகள் மற்றும் இதர படிகள் என்கிற விதத்தில் 46.7 கோடி ரூபாய்பெற்றார். இதே அளவிற்கான தொகைகளை காவேரி கலாநிதியும் எக்சிகியூடிவ் இயக்குநர் என்ற முறையில்பெற்றார்.  2012-13ஆம் ஆண்டில் கணவனும் மனைவியும் ஒருங்கிணைந்து 112.4 கோடி ரூபாய் எடுத்துக் கொண்டனர்.இதற்கு முந்தைய ஆண்டில் இவர்கள் இவ்வாறு 114 கோடி ரூபாய் எடுத்துக்...

மோடியின் முகமூடி

படம்
பீகாரில் நடந்த இடைத்தேர்தலில் லாலு பிரசாரத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கொண்ட கூட்டணி  பத்து தொகுதிகளில் 6 இடங்களை கைப்பற்றியுள்ளது. பா. ஜனதா 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பீகார் சட்டப்பேரவையில் காலியாக உள்ள 10 இடங்களுக்கு, கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக ஆளும் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாரத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து மகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அடுத்ததாக நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கு, இது அரையிறுதி தேர்தலாக கருதப்பட்டது. இந்நிலையில் மேற்கூறிய இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,  ராஷ்ட்ரீய ஜனதாதளம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி  6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா கட்சி 4 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை முன்னிறுத்தி பா.ஜனதா மேற்கொண்ட பிரசாரமே, அக்கட்சிக்கு வெற்றியை தேடித்தந்ததாக கூறப்பட்ட நிலையில், பீகாரில...

புகையிலை எதிர்ப்பு .....!

படம்
புகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.  பள்ளி மாணவர்களும் இப்பழக்கத்துக்கு அடிமையாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எத்தனையோ உயிர் பறி போனாலும், அதில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.  இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மே 31 ம் தேதி, உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. "அனைத்து வித புகையிலை விளம்பரங்கள், ஸ்பான்ஷர்ஷிப்பை தடைசெய்தல்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து. "புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே' இத்தினத்தின் நோக்கம். புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.  மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரமாக புகையிலை இருக்கிறது.  புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது "சிகரெட்'.  இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்...

தேச துரோகிக்கு வக்காலத்து

படம்
"எனது அருமை நண்பர் சஞ்சய்த்துக்கு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது.  அவருக்கு இப்போது இருக்கும் ஒரே வழி மன்னிப்புக்கான மேல்முறையீடு. அது அவருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவருக்கு நல்ல பரிகாரம் கிடைக்க வேண்டும். அவரது எஞ்சிய வாழ்க்கை அமைதியாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்." -இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த்  தனது அறிக்கையில் கூறி வாய்ஸ் கொடுத்துள்ளார். 1993ம் ஆண்டு நடந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ப இந்தி நடிகர் சஞசய்தத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேரடியாக ஈடுபடா விட்டாலும் அனுமதியின்றி உயர்ரக துப்பாக்கிகள்,ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளை  வைத்திருந்ததும், வெடிவைத்த குற்றவாளிகளுக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து தப்பிக்க உதவியதும் அதனை சட்டவிரோதமாக அழித்ததும் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. ஆயுத தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 6 ஆண்டுகள் மட்டும் தண்டன...

NO FIRE ZONE

படம்
இந்தியாவின் காலில் தொங்கிக்கொண்டிருக்கும் ஈழத்தீவில் அதன் மூத்த குடி மக்கள் கொத்து,கொத்தாக அழிக்கப்பட்டுள்ளனர். என்னவென்றே உலகம் அறியா சிறுவர்கள் [பாலச்சந்திரன் உட்பட]கொன்று குவிக்கப்படிருக்கிறார்கள். ஆனால் அதை தட்டி கேட்க உரிமையுள்ள இந்திய அரசோ அதற்கு நட்பு நாடு என்று புத்தனாக தன்னை காட்டிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் குடி மக்களான தமிழர்களின் ரத்த உறவுகள் கொலைகளை தட்டி கேட்க இந்திய ஆட்சியாளர்களை தடுப்பது எது.அந்நிய நாட்டு விவகாரம் என்ற சாக்கு போக்கு வெண்டாம்.பாலஸ்தீனம்,ஈராக்,வங்க தேசம் என்று அந்நிய நாடுகளில் தலை விட்டு   இந்தியா. இன்றைக்கு வங்க தேசமாக  கிழக்கு பாகிஸ்தான் உருமாற பாகிஸ்தானுடன் போரிட்டதுதான் இந்தியா . தனி ஈழம் உருவாக்க இந்திய சோனியா அரசு இலங்கை ராஜபக்சேயுடன் போர் தொடுக்க சொல்லவில்லை அமேரிக்கா,ஆஸ்திரெலியா,கனடா போன்ற மேலை நாடுகள் எல்லாம் இலங்கை பக்சே அரசுக்கு எதிராக கண்டனம்,ஐ.நாவில் தீர்மானம் என்று மனிதாபிமானத்துடன் செயல் படும் போது தமிழர்கள் வாழும் இந்தியா இலங்கை கொலை குற்றங்களுக்கு அமைதியாக் ஆதரவு தருவது ஏ ன்? சோனியாவின் சொந்த விருப்...