புகையிலை எதிர்ப்பு .....!



புகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.
 பள்ளி மாணவர்களும் இப்பழக்கத்துக்கு அடிமையாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் எத்தனையோ உயிர் பறி போனாலும், அதில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.
 இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மே 31ம் தேதி, உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

"அனைத்து வித புகையிலை விளம்பரங்கள், ஸ்பான்ஷர்ஷிப்பை தடைசெய்தல்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து. "புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே' இத்தினத்தின் நோக்கம். புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.

 மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரமாக புகையிலை இருக்கிறது.

 புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது "சிகரெட்'. 
இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. 
இவற்றில் 43 புற்றுநோய் ஏற்படுத்தக் கூடியவை.
அருகில் இருப்பவரும் பாதிக்கப்படுகின்றனர்.
உலகளவில் 6 விநாடிக்கு ஒருவரும், ஆண்டுக்கு 60 லட்சம் பேரும், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர்.

2030க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 
இதில் 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர். சிகரெட் பிடிப்பவர்களால், அருகில் இருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 6 லட்சம் பேர் இப்படி பாதிக்கப்படுகின்றனர் என உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அதிகம்புகை பழக்கத்துக்கு அடிமையாகி, உயிரை விடுவதை விட, புகையிலை பழக்கத்தை விடுவதே சிறந்தது. 
படிப்படியாக நிறுத்தாமல் ஒரேயடியாக நிறுத்துவதே சிறந்தது. 
இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. 
புகைக்காமல் இருந்தால் ரத்த அழுத்தம், இருதயத்துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு சீரடையும்.
 புகை பிடிக்காமல் ஒருநாள் இருந்தால், ரத்தத்தில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்சைடு வெளியேற்றப்படுகிறது. நுரையீரல் சுத்தமாகிறது. இரண்டு நாட்கள் இருந்தால், உடலில் சேர்ந்துவிட்ட நிக்கோடின் அகற்றப்படும். 
சுவைக்கும் திறனும், நுகரும் திறனும் அதிகரிக்கும். மூன்று நாட்களுக்கு பிறகு, சுவாசிப்பது எளிதாகிறது. 
2 முதல் 21 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் சீரடைகிறது. 
3 முதல் 9 மாதங்களுக்குள் இருமல், தும்மல் போன்ற குறைபாடுகள் குறைகிறது. நுரையீரலில் செயல்பாடு 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது.
 4 ஆண்டுகளுக்குப் பிறகு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு பாதியாக குறைகிறது.
 10 ஆண்டுகளுக்கு பிறகு நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது.

புகைபிடிக்கும் பழக்கத்தை விட்ட முதல் வாரம் சிரமமாக இருக்கும். 
எனினும், இதனால் கிடைக்கும் பலன் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
"உடலுக்கு அபாயமான புகையிலை பழக்கத்‌தை கைவிட ஆயிரம் காரணங்கள் உள்ளன.
அதனால் கிடைக்கும் பலன் ஒன்றேனும் உண்டா?
இனியும் அப்பழக்கத்‌தை தொடர ஒரு உருப்படியான காரணம் சொல்ல முடியுமா?"


------------------------------------------------------------------------------------------------------------------------------------
"புரூஃபன் மற்றும் டிக்லோஃபெனக் போன்ற பெயின்கில்லர் மாத்திரைகளை அதிக அளவில் வழமையாக பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டுபிடித்திருக்கிறது.

ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்றே இதனைக் கண்டுபிடித்திருக்கிறது.
600 சோதனைகள் நடத்தப்பட்டதில், ஒவ்வொரு 1000 நோயாளிகளில் மூன்று பேருக்கு மேலதிகமாக இதய நோய் வருவதாகவும், அதில் ஒருவருக்கு அது மிகவும் கடுமையானதாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், சிறிய அளவில் இந்த மாத்திரைகளை எடுப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்."
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
பணவீக்கத்துடன் இணைந்த பங்கு பத்திரம்
 ----------------------------------------------------------------------------------------------------
பொது மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை தடுக்க, முதல் முறையாக வரும் 4ம் தேதி விலைவாசியுடன் இணைந்த ரூ.1,000 கோடி மதிப்பீட்டிலான பங்குகளை மத்திய அரசு வெளியிடுகிறது. தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால், ஆண்டுக்கு ஆண்டு வெளிநாட் டில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வதும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏராளமான அளவு அந்நியச் செலாவணி செலவாகிறது.

இதை தடுத்து நிறு த்த மாற்று திட்டங்களை அமல்படுத்தி பொது மக்களை கவர வேண்டுமென ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.
 இதன்படி, பணவீக்கத்துடன் இணைந்த பங்கு பத்திரத்தை (ஐஐபி) வெளியிட மத்திய அரசு தீர்மானித்தது. ரூ.12,000 கோடி முதல் ரூ.15,000 கோடி மதிப்பீட்டிலான ஐஐபி வெளியிடப்படும் என்று இம்மாத தொடக்கத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த பங்கு பத்திரங்களின் முதிர்வு காலம் 10 ஆண்டுகளாகும். இது விலைவாசி புள்ளியுடன் இணைந்தது என்பதால், விலைவாசி அதிகரித்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

இதனால் முதலீடு செய்தவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். அதாவது, தங்கத்தில் முதலீடு செய்தால் அதன் விலையேற்றத்துக்கு ஏற்ப லாபம் கிடைப்பது போல், இந்த பங்கு பத்திரத்தின் முதிர்வு தொகையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. முதல்கட்டமாக ரூ.1,000 கோடிக்கு ஐஐபியை வரும் 4ம் தேதி வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

‘விலைவாசி புள்ளியுடன் இணைந்த மத்திய அரசின் பங்குகள்,2023’ வரும் 4ம் தேதி வெளியிடப்படும். இதில் 20 சதவீதம் வரை சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. முடிவு செய்யப்பட்ட ஏலத்தொகையின் அடிப்படையில் இந்த பங்குகள் ஏலம் விடப்படும். 10 ஆண்டு முதிர்வு காலத்தை இப்பத்திரங்கள் கொண்டிருக்கும். மத்திய அரசின் கடன்வாங்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பங்கு பத்திர வெளியீடு அமையும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சாதாரணமாக, மத்திய அரசின் கடன் தொகை பங்கு வெளியீடுகளில் சில்லரை முதலீட்டாளர்களுக்கு 5 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படும். ஆனால், தற்போது ஐஐபியில் 20 சதவீதம் வரை ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒவ்வொரு மாத இறுதி செவ்வாய்க்கிழமைகளில், அடுத்தடுத்து ஐஐபிகள் வெளியிடப்பட உள்ளது. இரண்டாவது கட்டமாக அக்டோபரில் ஐஐபி வெளியிடப்படும். அது முற்றிலுமாக சில்லரை முதலீட்டாளர்களுக்காக வெளியிடப்பட உள்ளது.

suran

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?