இடுகைகள்

வேதாந்தா 20 பேர்கள் உயிரிழப்பு!

படம்
சத்தீஸ்கர் வெடி விபத்து: வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் மீது வழக்குப் பதிவு! சத்தீஸ்கர் மாநிலத்தில் வேதாந்தா மின் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20 பெர் உயிரிழந்தது தொடர்பாக வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் உள்ளிட்டோருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சிங்கிதராய் கிராமத்தில் உள்ள அத்தேனா பவர் பிளாண்டின் யூனிட்-1 பகுதியில், பாய்லரில் இருந்து டர்பைனுக்கு உயர் அழுத்த நீராவி கொண்டு செல்லும் எஃகு குழாய் வெடித்ததால் விபத்து ஏற்பட்டது. மதியம் சுமார் 2.30 மணியளவில் நடந்த இந்த வெடிப்பில் பல தொழிலாளர்கள் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகினர். இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் (பிரிவு 106), இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் அலட்சியம் (பிரிவு 289) உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் உள்ளிட்ட 8 முதல் 10 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது மேலும் பொறுப்புக்கூறுவோர் கண்டறியப்பட்டால், அவர்களும் சேர்க்கப்படுவார்கள்,” என்று காவல் துறை தெரி...

தமிழ்நாடு வெல்லட்டும்!

படம்
தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது! தொகுதி மறுசீரமைப்பு' என்ற பெயரால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் குரலை ஒடுக்கத் திட்டமிடுகிறது ஒன்றிய பா.ஜக. இதற்கு எதிராக மாபெரும் எழுச்சி முழக்கங்களை தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுப்பி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து வீடுகள்தோறும், வீதிகள்தோறும் கருப்புக் கொடியை ஏற்ற உத்தரவிட்டு இருந்தார். கழக நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டமும், கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் அவசரமாகக் கூட்டப்பட்டது. அதில் நாடாளுமன்றத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும், மக்கள் மன்றத்துக்கு இதனை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் விரிவாக விளக்கி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். நாமக்கல்லில் தேர்தல் பரப்புரையில் இருந்த முதலமைச்சர் அவர்கள் கருப்புக்கொடி ஏற்றினார்கள். தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நகலைத் தீயிட்டு எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஏனென்றால் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் சட்டமானது, தமிழ்நாட்டுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவே இருக்கிறது. அரசியலமைப்புச் சட்ட (131ஆவது திருத...

வடக்கு மட்டுமே போதும்!

படம்
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியுள்ள தீ, டெல்லியை சுட்டெரிக்கும். ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை. கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா மீது நள்ளிரவு வரை விவாதம். 3 மசோதாக்கள் மீதும் இன்று மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு.  தொகுதி மறுவரையறையால் தென்மாநிலங்கள் வஞ்சிக்கப்படும் என திருமாவளவன் கண்டனம். நாட்டை ஆள்வதில் தமிழ்நாட்டின் பங்கை நீர்த்துப் போகச்செய்ய பாஜக சதி -சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உறுதி. தமிழ்நாட்டு எம்.பி.க்களின் எண்ணிக்கை 59-ஆக உயரும் என அமித்ஷா விளக்கம்.  @ தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என எடப்பாடி பழனிசாமி உறுதி. யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என பாஜக உறுதி அளித்துள்ளதாக, கோவையில் பேச்சு.ஊதுகுழலாக இருந்த பழனி எப்போது பாஜக வில் இணைந்தார்? பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றம்   தள்ளுபடி. பாஜ தலைவர் நிதின்நபின் உட்பட 16 பேர் மாநிலங்...

கோயபல்ஸ் நிம்மி மாமி!

படம்
  இ ரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனியில் பிரச்சார அமைச்சராகவும், ஹிட்லருக்கு வலது கரமாகவும் திகழ்ந்தவன் கோயபல்ஸ் என்பதை அனைவரும் அறிவோம். அவனது சிறப்பு என்பதே ‘புளுகு’வதில் அவனுக்கு நிகர் வேறு எவரும் இலர் என்பதே ஆகும். இந்தியாவைப் பொருத்தமட்டில் காவிகள் அரசியலில் தலை தூக்கிய பிறகு, ஆர்.எஸ்.எஸ் – பாஜக இந்துத்துவ சங்கிக் கும்பல் சகல துறைகளிலும் ‘காவி அடிப்பதிலும்’, ‘புளுகித் தள்ளுவதிலும்’, காவிகளுக்கு நிகர் காவிகளே என்று சகல துறைகளிலும் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  அதற்கு அண்மை எடுத்துக்காட்டுத் தான் மோடி- அமித்ஷா கை பானமாக விளங்கும் நிர்மலா சீதாராமன் அவிழ்த்துக் கொட்டிய புளுகு மூட்டைகள் ஆகும். ஏற்கனவே விவசாயிகளின் பல்வேறு உரிமைகளைப் பறித்து, கார்பரேட் நலன்கள் சார்ந்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, அதன் காரணமாக டெல்லியில் நடத்திய மாபெரும் விவசாயிகள் போராட்டத்தையும், காவிக் கூட்டத்தை குறைந்தபட்சம் அடிபணிய வைத்ததையும் நாடு மறந்து விடாது. அப்படி இருக்கின்ற பொழுது சிந்திக்கின்ற ஒவ்வொன்றையும் பாசிச பாஜக அரசு கார்ப்பரேட் நலன் கருதியே அமைவதால் ஏற்கனவே புண்பட்டுப் ப...

இன்றைய மக்களவை!

படம்
# இன்று  மக்களவையில்  நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று (ஏப்ரல் 16, 2026) நடைபெற்று வரும் சிறப்பு அமர்வின் முக்கிய நிகழ்வுகள் பற்றி பார்ப்போம். # நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று தொடங்கியுள்ள சிறப்பு அமர்வு, தேசத்தின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது மற்றும் தொகுதிகள் மறுவரையறை செய்வது தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்தக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பின்னரே இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்ற நிபந்தனை இருந்ததால் அது இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை. தற்போது அதற்கான 'அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா' மற்றும் 'தொகுதிகள் மறுவரையறை மசோதா' ஆகியவற்றை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்துள்ளார். இவற்றுடன் சேர்த்து யூனியன் பிரதேச சட்டங்கள் தொடர்பான திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர...