இடுகைகள்

கருணைக் கொலை!

படம்
  கமல் செய்திருப்பது தியாகம்.. பெருந்தன்மையை வரலாறு பாராட்டும்.. முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் வாபஸ் இல்லை : ரயில் டிக்கெட் புக்கிங்கில் ஏப்ரல் 1ம் தேதி முதல்  மாற்றங்கள். 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக  எரிபொருள் தட்டுப்பாட்டால் உலகின் முதல் நாடாக அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது பிலிப்பைன்ஸ் அரசு மாவட்டங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது: வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு ஏப்.9ம் தேதி முதல் 29ம் தேதி வரை கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை:- இந்திய தேர்தல் ஆணையம் . அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வதை மோடி செய்வார்: ராகுல்காந்தி . சிபிஐ எப்ஐஆர்-ஐ ரத்து செய்யக்கோரும் லாலுவின் மனு தள்ளுபடி: டெல்லி உயர்நீதிமன்றம் . முதல் சட்டபூர்வ கருணைக் கொலை! சண்டிகரை சேர்ந்த ஹரீஷ் ராணா கடந்த 2013ஆம் ஆண்டு தனது விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் மூளைப் பகுதியில் பலத்த காயமடைந்தார். இந்த விபத்தில் அவரது மூளையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் Persistent Vegetative State எனப்படும் 'மீள முடியாத கோமா' நிலைக்குச் சென்றார். கட...

சரிவைச் சந்திக்கும் தங்கம்

படம்
சரிவைச்சந்திக்கும்தங்கம். பின்னணி என்ன? 2022-ஆம் ஆண்டின் இறுதியில் தங்கம் கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க விலை உயர்வு முடிவை எட்டியுள்ளது.   தற்போது ஈரானில் நிலவும் போர் பதட்டங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள், இந்தச் சூழலைத் தலைகீழாக மாற்றியுள்ளன.  இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தைத் தொட்டாலும், தற்போது 1980-களுக்குப் பிறகு காணப்படாத ஒரு கடுமையான வாராந்திர சரிவைச் சந்தித்துள்ளது.  வழக்கமாகப் போர் அல்லது பதட்டமான சூழல்களில் முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு 'பாதுகாப்பான புகலிடமாக' (Safe Haven) கருதுவார்கள். ஆனால், தற்போது நிலைமை முரண்பாடாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்:  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மின்சாரக் கட்டமைப்பைத் தாக்குவேன் என்ற தனது அச்சுறுத்தலைச் செயல்படுத்தினால், வளைகுடா நாடுகளின் எரிசக்தி மற்றும் நீர் உள்கட்டமைப்புகளைத் தாக்கிப் பதிலடி கொடுக்கக்கூடும் என்று ஈரான் கூறியுள்ளது. இந்த எச்சரிக்கை சந்தையில் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளது.  ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 110 டாலருக்கு மேல் ...

இருண்ட நாட்கள்!

படம்
📍 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் அழகு நிறைந்த நகரங்கள் உருவாக்கப்படும். சாலை மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி. 📍 திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு. 4 கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து.. 📍 தொகுதிகள் குறைந்தாலும் அரசியல் சூழல் காரணமாக 5 தொகுதிகளை ஏற்பதாக பெ.சண்முகம் பேட்டி. மதவெறி சக்தி கூட்டணி வரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் திட்டவட்டம். 📍 2021 தேர்தலைவிட பாஜகவுக்கு 7 தொகுதிகள் கூடுதலாக ஒதுக்கிய அதிமுக. பாமகவுக்கு 5 இடங்களை குறைத்து 18 தொகுதிகள் மட்டுமே கொடுத்ததால் கூட்டணியில் சலசலப்பு. 📍 தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை புறக்கணித்தார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன். கேட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளை வழங்க மறுத்ததால் பங்கேற்க மறுப்பு என தகவல். தேர்தல் ஆணையம் பாஜக சின்னத்தோடு வெளியிட்ட அறிக்கை கேரளாவில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து வெளியான ஒரு அறிக்கையில் பாஜகவின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர...