இடுகைகள்

தியாகம் இல்லாமல்

படம்
  “தியாகம் இல்லாமல் சாதனை இல்லை” தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிறிய கிராமத்தில் ராமசாமி-கருப்பாயி தம்பதிக்கு 3-வது மகனாக பிறந்தவர் நல்லகண்ணு. அடித்தட்டு மக்களின் உரிமைக்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அற்பணித்தவர்.இவரின் வாழ்க்கையின் பெரும்பகுதி போராட்டங்களிலும் சிறை சாலைகளில் கழிந்தது. இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் உறுதியான காவலராக விளங்கியவர் நல்லகண்ணு. “தியாகம் இல்லாமல் சாதனை இல்லை” என்ற தனது எண்ணத்தை வாழ்வில் நடைமுறையாகக் காட்டியவர் அவர். ஆர்.என்.கே என்று அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் நல்லகண்ணு, தனது கொள்கைக்கும் மக்கள் நலனுக்கும் முழு அர்ப்பணிப்புடன் வாழ்ந்த அரசியல் தலைவர் ஆவார். பாரதியாரின் புரட்சிப் பாடல்கள் மற்றும் வ.உ.சிதம்பரனாரின் சுதந்திர இயக்கப் பாதை ஆகியவை நல்லகண்ணுவின் மனதில் விடுதலைச் சிந்தனையை விதைத்தன. மாணவப் பருவத்திலேயே போராட்டங்களில் கலந்துகொண்ட அவர், காந்தியை விட நேருவின் பொதுவுடைமை கருத்துகளால் அதிகம் ஈர்க்கப்பட்டு பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார். இந்த ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்ட காலத்தில் இளைஞர்களை ஒருங்கிணைத்து ஆங்கிலேய...

நீதித்துறையில் நிலவும் ஊழல்”

படம்
என்சிஇஆர்டி புத்தகத்தில்  “நீதித்துறையில் நிலவும் ஊழல்” குறித்த பாடம்  தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) திங்கள் கிழமை வெளியிட்டுள்ள புதிய 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் “நீதித்துறை யில் நிலவும் ஊழல்” மற்றும் வழக்கு களின் பெரும் தேக்கம் உள்ளிட்ட வைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.  “நமது சமூகத்தில் நீதித்துறை யின் பங்கு” (The role of the judiciary in our society) என்ற தலைப்பிலான அத்தியாயத்தில், நீதித்துறையின் பல்வேறு நிலைக ளில் நிலவும் ஊழல்; போதிய எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லாமை; சிக்கலான சட்ட நடை முறைகள்; போதிய உள்கட்ட மைப்பு வசதிகள் இல்லாமை ; தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை உள்ளிட்டவைகளின் தொகுப்புகள் பாடமாக கொடுக்கப் பட்டுள்ளன.  வழக்குகள் தேக்கம் குறிப்பாக, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தோராயமான எண்ணிக்கையை இந்தப் பாடப்புத்தகம் வழங்கி யுள்ளது.  அதில், உச்சநீதிமன்றம் சுமார் 81,000 வழக்குகள் ; உயர்நீதி மன்றங்கள் 62,40,000 வழக்கு கள்; மாவட்ட மற்றும் கீழமை நீதி மன...

அரசியல் கௌடில்யர் ராகுல்?

படம்
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழு சென்னை வருகை. இன்று புதுச்சேரியிலும், அடுத்த 2 நாட்கள் தமிழ்நாட்டிலும் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறது. கன்னியாகுமரி இலங்கை மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்ட 90 புதிய குடியிருப்புகள் திறப்பு. இன்று நடைபெறும் அரசு விழாவில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்த வரிகள் உயர்த்தப்படும் என்ற எடப்பாடி பேட்டியால் மக்கள் அதிர்ச்சி. காலையில் கருணைத் தொகை.. மாலையில் உதவித் தொகை என மாற்றம். புதிய கட்சியை தொடங்கி, கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார் வி.கே.சசிகலா. இனியும் மௌனமாக இருந்தால் மக்கள் மன்னிக்க மட்டார்கள் என உருக்கம் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவே வெற்றி பெறும் என அமித்ஷாவே கூறினார். ஓ.பன்னீர்செல்வம் பேட்டியால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு சென்னை புறநகர் ரயில்கள் குறைப்பு குறித்து ரயில்வே உரிய தகவல் வழங்கவில்லை என அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு. முன்கூட்டியே தகவல் அளித்திருந்தால் உரிய நடவடிக்கை எடுத்திருக்க முடியும் என விளக்கம் அகமதாபாத் மெட்ரோ ரயில் ...

ஊருக்குத்தான் உபதேசமா?

படம்
நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று மனதின் குரல் என்ற பெயரில் உரையாற்றி வருகிறார்.  ஒவ்வொரு மாதமும் ஏராளமான அறிவுரைகளையும், ஒப்பேறாத ஆலோசனைகளையும் அள்ளி விடுவது அவரது வழக்கம். அத்துடன் போலியான பிம் பத்தையும் அவர் உருவாக்கி தனக்குத்தானே பாராட்டி, கைதட்டிக் கொள்வார். பிப்ரவரி மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.  ஜெயலலிதாவுடனான தனது ஒவ்வொரு சந்திப்பும், உரையாடலும் தனக்கு புத்துணர்ச்சி அளித்ததாக அவர் கூறியுள்ளார். 2014 மக்களவைத் தேர்தலின்போது, மோடி யின் குஜராத் மாடலை கடுமையாக விமர்சித்த வர் ஜெயலலிதா.  குஜராத்தில் கடந்த பத்தாண்டு களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 65 சத வீதம் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர் அந்தத் தேர்தலின்போது மோடியா, இந்த லேடியா என்று கேட்டதை மோடி வசதியாக மறந்துவிட்டார். அதுமட்டுமின்றி, பாஜகவுடன் தான் கூட்டணி வைத்துக் கொண்டது மிகப் பெரிய தவறு என்றும், இனிமேல் அந்த தவறை செய்யமாட்டேன் என்றும் ஜெயலலிதா கூறிய தையும் மறந்துவிட முடிய...

தோழர் நல்லகண்ணு

படம்
  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், எளிமையின் அடையாளமுமான ஆர். நல்லகண்ணு உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி 1-ம் தேதி இரவு நல்லகண்ணு அவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார்.  கடந்த 20 நாட்களுக்கு மேலாக அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வயது மூப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாகவே அவர் அவ்வப்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று இரவு முதல் அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை குறித்த தகவல் அறிந்ததும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர் வீரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைந்த வண்ணம் உள்ளனர். தமிழக முதல்வர்  மு. க.ஸ்டாலின்   மற்றும் பிற அரசிய...