விவாதிக்க மறுக்கும் மோடி அரசு
எப்ஸ்டீன், நரவனே விவகாரங்களை விவாதிக்க மறுக்கும் மோடி அரசு மக்களவை நாள் முழுவதும் முடங்கியது முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கு மோடி அரசு அனுமதி மறுப்பதால் மக்களவை திங்களன்று நாள் முழுவதும் முடங்கியது. பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உட னான பிரதமர் மோடியின் தொடர்பு குறித்த செய்திகளும், இந்தியாவின் பாதுகாப்பில் பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டதாக முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்திய விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்களின் நலன்களுக்கு எதிராக, அமெரிக்காவுடன் அவசர கதி யில் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருப்பதே, எப்ஸ்டீன் விவகாரத்தி லிருந்து தப்பிக்கவும்தான் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஆனால், இந்த விவகாரங்கள் குறித்து பதிலளிக்காமல் மூடி மறைக்கும் வேலையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. இவை அனைத்தும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் என்பதால், மக்களவையில் விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவற்றுக...