இடுகைகள்

அதிர்ச்சி பார்ட்டி

படம்
  அதிர்ச்சி பார்ட்டி இந்தியாவில் வெறும் இரண்டே நாட்களில் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வரும் ஒரு அரசியல் நையாண்டி (Satirical) இயக்கம் தான் இந்த ‘காக்ரோச் ஜனதா கட்சி’.  இது ஒரு உண்மையான அரசியல் கட்சி அல்ல என்றாலும், இன்ஸ்டாகிராமில் ஆளுங்கட்சியான பாஜாக-வை (BJP) விட அதிக ஃபாலோயர்களைப் (10 மில்லியனுக்கும் மேல்) பெற்று உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (CJI) சூர்யகாந்த், ஒரு வழக்கின் விசாரணையின் போது வேலையில்லாத இளைஞர்களை சமூகத்தில் உள்ள “கரப்பான் பூச்சிகள்” (Cockroach) மற்றும் “ஒட்டுண்ணிகள்” (Parasites) என்று ஒப்பிட்டுப் பேசியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியதே இந்த இயக்கம் தொடங்க முக்கிய பின்னணியாகும்.  பின்னர் அவர் அளித்த விளக்கத்தில், தான் ஒட்டுமொத்த இளைஞர்களைப் பழிக்கவில்லை என்றும் தகுதியில்லாமல் குறுக்கு வழியில் தொழிலில் நுழைபவர்களையே அவ்வாறு குறிப்பிட்டதாகவும் கூறினார்.  இருந்தபோதிலும், இந்த வார்த்தையால் கோபமடைந்த இளைஞர்கள் தங்களின் எதிர்ப்பைக் காட்ட, “எங்களை கரப்பான் பூச்சி என்று சொன்னால், நாங்கள் அதே பெய...

அதிர்ச்சி டெண்டர் !

படம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து நடத்தப்பட்ட குதிரை பேரங்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த விசாரணை நிறைவடையும் வரை மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த மனு கோருகிறது. சென்னையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்;  இதில் இந்திய ஒன்றியம், சிபிஐ மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றை அவர் எதிர் மனுதாரர்களாகச் சேர்த்துள்ளார். அரசு அமைப்பது குறித்த குற்றச்சாட்டுகள் அந்த மனுவில் “ தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது; இருப்பினும், தொடக்கத்தில் அரசு அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை பலம் அஅக்கட்சியிடம்இருக்கவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் (IUML) ஆகிய கட்சிகள், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெகவுக்கு தங்கள் ஆதரவை அறிவித்தன. மே 10-ஆம் தேதி விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார்; பின்னர், சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெட...

மரணிக்கும் ஜனநாயகமும்

படம்
  தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு. ராஜேஷ் குமார், விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என அறிவிப்பு. தவெக அமைச்சரவையில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் இடம்பெற உள்ளதாக தகவல். இன்று நடைபெறும் ஐயூஎம்எல் நிர்வாகக் குழு  கூட்டத்திற்கு பின் அறிவிப்பு  தவெக அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாது என்ற தகவலால் சி.வி.சண்முகம் தரப்பு அதிர்ச்சி. நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் 25 பேர் ஆதரவு அளித்த நிலையில், ஏமாற்றம்.  தவெக, அதிமுக ஆதரவை பெற்றால் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்வோம். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் மீண்டும் திட்டவட்டம் . தமிழ்நாட்டில் நேற்று 15 இடங்களில் 100 டிகிரியை தாண்டி கொளுத்திய வெயில். சென்னையில் 108 டிகிரி வெயில் சுட்டெரித்ததால் மக்கள் அவதி. அருப்புக்கோட்டை, பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் வெளுத்து வாங்கிய கோடை மழை. பலத்த காற்றுடன் பெய்த மழையால், காரியாபட்டியில் சோலார் பேனல்கள் உடைந்து விழுந்து சேதம். சங்கரன்கோவில் மருத்துவமனையில் ஆய்வு என்ற பெயரில் தவெகவினர் அத்துமீறல். அரசியல் கட்சியினர் ஆய்வு நடத்த யார் அனுமதி கொடுத்தத...

படித்ததும் கிழித்து விடவும்!

படம்
 'வாட்ஸ் அப்' புது வசதி, வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்கள் தாங்கள் அனுப்பும்/பெறும் மெசேஜ்கள் பார்த்தவுடன் தானாகவே மறையும் ‘After Reading’ என்ற அம்சத்தை டெஸ்ட் (சோதனை) செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அம்சம் எப்படி செயல்படும் என்பது குறித்து பார்ப்போம். மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது  இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம்.  இத்தகைய சூழலில் பயனர்கள் தாங்கள் அனுப்பும்/பெறும் மெசேஜ்கள் பார்த்தவுடன் தானாகவே மறையும் ‘After Reading’ என்ற அம்சத்தை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை வாட்ஸ்அப் குறித...

அலுவலகப் பணிகளுக்கும். ஆபத்து ?

படம்
🔹 இன்று காலை வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள். இணையதளம் மற்றும் செல்போனில் அறிந்து கொள்ள ஏற்பாடு. 🔹 ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து மருந்து விற்பனையாளர்களை இன்று வேலைநிறுத்தம். தமிழ்நாட்டில் மட்டுமே 42,000 மருந்தகங்கள் மூடப்படும் ஆபத்து. 🔹 எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து. தவெக பரப்புரை குறித்து ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியை மேற்கோள்காட்டி பதிவு. 🔹 அதிமுக தன் பக்கம் உள்ளதை நிரூபிக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டிய பழனிசாமி. பதவிக்காக கட்சியின் மூத்த நிர்வாகிகளே துரோகம் செய்து விட்டதாக வேதனை. 🔹  செங்கோட்டையன் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்த தேடப்படும் குற்றவாளி. 300 கோடி ரூபாய் மோசடி செய்த வின் ஸ்டார் சிவக்குமாரை கைது செய்யுமாறு பாதிக்கப்பட்டவர்கள் புகார். 🔹 ஓசூரில் பணி முடிந்து வீடு திரும்பிய காவல்துறை பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை. வேனை நிறுத்தி ஓட்டுநர் அத்துமீறியதாக பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு குற்றச்சாட்டு 🔹 தேனி அருகே அழைப்பிதழ் தருவது போல வீட்டில் நுழைந்து தம்பதிக்கு அரிவாள் வெட்டு. காயமடைந...