இடுகைகள்

விலக நேரும்?

படம்
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நீடிப்பதால், தொழிற்சாலை மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தியது இந்தியன் ஆயில் நிறுவனம். வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பிரபல ஹோட்டல்களில் உணவு வகைகள்,இயங்கும் காலம் குறைக்கப்பட்டுள்ளன. ஒரு எல்பிஜி சிலிண்டர் வாங்கியபின் மற்றொரு சிலிண்டர் வாங்குவதற்கான கால இடைவெளியை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தியது மத்திய அரசு. வீட்டிற்கு பயன்படுத்தும் சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெங்களூருவில் ஹோட்டல்கள் இன்று முதல் மூடல். சிலிண்டர் தேவை மற்றும் கையிருப்பு விவரத்தை தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ‘கற்றனைத் தூறும் அறிவு‘ சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 400 ...

உரங்களுக்குத் தட்டுப்பாடு அபாயம்!

படம்
தமிழ்நாட்டில் சிலிண்டர் கையிருப்பு தொடர்பாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை. சிலிண்டர் தேவை மற்றும் கையிருப்பு விவரத்தை தெரிவிக்க எண்ணெய் பிரதிநிதிகளுக்கு உத்தரவு வர்த்தக சிலிண்டர் முன்பதிவு நிறுத்தப்பட்டதால் பெங்களூரில் இன்று ஹோட்டல்களை மூட முடிவு. பிரதமர் தலையிட்டு தீர்வு காண சென்னை ஹோட்டல் உரிமையாளர் சங்கங்கள் கடிதம். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை பாஜகவால் தமிழ்நாட்டை ஆள முடியாது என முதலமைச்சர் சூளுரை. அதிமுக முகமூடி போட்டு வந்தாலும் பாஜகவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவோம் என அதிரடி கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கோரும் விஜய். டெல்லியில் இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில் கோரிக்கை பொருளாதார சீரழிவுக்கு முக்கியமான விவகாரம் பற்றி விவாதிக்க மறுப்பது ஏன் என ராகுல்காந்தி கேள்வி. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை விட்டே ஓடி விட்டதாகவும் கடும் விமர்சனம். இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை என ஒன்றிய அரசு தகவல். கச்சா எண்ணெய் விலை பேரல் 130 டாலரை தாண்டாத வரை ஆ...

இன்று! நாளை?

படம்
  இ ன்றைக்கு நிதிஷ்குமாருக்கு ஏற்பட்டிருக்கு அதே கதி நாளை எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும் என்கிற பரபரப்பு எழுந்திருக்கிறது. பீகார் சட்டமன்ற தேர்தலில்  என்.டி.ஏ. கூட்டணியில் ஜேடிஏ இணைந்து போட்டியிட்டு வென்றது.   இதில் பாஜகவுக்கு 89 இடங்களும் ஜேடியுவுக்கு 85 இடங்களும் கிடைத்தன.  கூட்டணி தர்மத்தின் படி நிதிஷ்குமாரையே முதல்வராக்கியது பாஜக.  ஆனால் சில மாதங்களிலேயே அவரை முதலமைச்சர் நாற்காலியில் இருந்து இறங்கச்சொல்லி இருக்கிறது பாஜகவின் அழுத்தம்.  முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் நிதிஷ்குமார். புதிதாக அமையவிருக்கும் என்.டி.ஏ. – ஜேடியு கூட்டணி ஆட்சியில் பாஜகவை சேர்ந்தவர் முதல்வர் நாற்காலியில் உட்கார இருக்கிறார். ’நிதீஷ்குமாருக்கு வழங்கப்பட்ட அணுகுமுறையை பார்த்த பிறகு, என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் ஒரு செய்தி தெளிவாக சென்றிருக்க வேண்டும். மோடி மற்றும் அமித்ஷா நடத்தும் இந்த கூட்டணியில், கூட்டாளிகள் உண்மையான கூட்டாளிகள் அல்ல — அவர்கள் வெறும் பயணிகள் மட்டுமே. அதனால் தான் எடப்பாடி பழனிசாமி  போன்ற தலைவர்கள் அடுத்த ...

தமிழ்நாடு காட்டிய பாதை!

படம்
திருச்சியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாநில மாநாடு. 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ம் கட்ட அமர்வு இன்று தொடக்கம். சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும் என எதிர்பார்ப்பு. அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி உறுதி. தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என்ற விமர்சனத்திற்கு பதில். தமிழ்நாடு காட்டிய பாதை! மராட்டிய மாநிலத்தின் முக்கியமான அமைப்புகளில் ஒன்று நவநிர்மான் சேனா. அதன் தலைவராக இருப்பவர் ராஜ்தாக்கரே. சிவசேனாவை நிறுவிய பால்தாக்கரேவின் உறவினர்.  சொந்தக் காரணங்கள் மற்றும் உள்கட்சிப் பிரிச்சினைகளால் அவர் தனி அமைப்பை நடத்தி வருகிறார். மஹாராஷ்டிராவில் மராட்டிய மொழிக்கும், மராட்டிய மக்களுக்கும் முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதுதான் அந்த அமைப்பின் முதன்மை நோக்கமாகும். சிவசேனாவை பால்தாக்கரே தொடங்கியதும் இந்த அடிப்படையில்தான். மகாராஷ்ட்ராவின் மாநில மொழி என்கிற மராட்டியம் என்கிற போது அதுதானே முதன்மையாக இருக்கும்?  இதற்கு...

கரும் மழை..!

படம்
  சிறுவர்கள் சமூக தளங்கள் கட்டுப்பாடு. அரசு பரிசீலனை இநதியாவில், குழந்தைகள் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை செய்வதற்கு மாறாக, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வயதின் அடிப்படையில், கட்டுப்பாடுகள் மற்றும் கவும் நுணுக்கமான மற்றும் தரப்படுத்தப்பட்ட அணுகுமுறையைப் அமல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அரசாங்க உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ஒரு மூத்த அரசு அதிகாரி ஒருவர் 8-12 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் இருக்கும், 12-16 வயதுடையவர்களுக்கு மற்றொரு கட்டுப்பாடுகள் இருக்கும், மேலும் 16-18 வயதுடையவர்களுக்கு வெவ்வேறு நடவடிக்கைகள் இருக்கும்" என்று தெரிவித்தார். இது ஒரு தனிச் சட்டமாக இருக்கும், மேலும் அரசாங்கம் இதை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது," என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியள்ளார்.  பகலில் குறிப்பிட்ட நேரங்களில் குழந்தைகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டை அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த சில வாரங்களாக அ...