இடுகைகள்

கெஞ்சுகிறீர்களே, உங்கள் வீரம் என்ன?”

படம்
  “கெஞ்சுகிறீர்களே, உங்கள் வீரம் என்ன?” - ஆ.ராசா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, பேசியதாவது. “கெஞ்சுகிறீர்களே, உங்கள் வீரம் என்ன?” அரசியலமைப்பு ஒழுக்கம் இன்றி உரையாற்றி இருக்கிறார் முதலமைச்சர் விஜய். தான் வகிக்கும் பதவிக்கு பொருத்தமானவராக இல்லாமல் பிதற்றி இருக்கிறார். கர்ஜித்ததாக சொல்லி கொண்டு கத்தி பேசியிருக்கிறார் முதலமைச்சர் விஜய். அல்லு சில்லு வீட்டிற்கு நீங்களே சென்று சால்வை போட்டு அவர்கள் வாக்கை வாங்கினீர்கள். தமிழ்த்தாய் வாழ்த்திற்காக கெஞ்சுகிறீர்களே, உங்கள் வீரம் என்ன? நோ கமெண்ட்ஸ் அமைச்சா்கள் கச்சத்தீவு, மேகதாது விவகாரம் என எதைப்பற்றி கேட்டாலும் தவெக அமைச்சா்களின் ஒரே பதில் நோ கமெண்ட்ஸ். கச்சத்தீவு பற்றி கேள்வி கேட்டால் போராடுவோம், கேட்கிறோம் என பதில் கூறாமல் நோ கமெண்ட்ஸ் என பதில் சொல்கிறாா்கள். உங்கள் சக்தி என்னவானது? பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னால் உங்கள் சக்தி என்னவானது விஜய் bro? எங்களை தீய சக்தி, தீய்ந்து போன சக்தி என விமா்சித்தீா்களே bro, பிரதமருக்கு முன்னால் உங்கள் சக்தி என்னவானது? திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியதை ஏன் எதிா்க்கவில்லை விஜய் bro? மதம்...

இருண்ட ஆட்சியா?

படம்
அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தையை நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு. அமெரிக்காவுக்கு சொந்தமான வணிக கப்பல் மீது ஏவுகணை வீசி தாக்கியதால் பதற்றம் அதிகரிப்பு திருச்சி ககழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் விஜய். தமிழ்நாட்டில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு முந்தைய அரசே காரணம் என குற்றச்சாட்டு முதலமைச்சர் ஆன பிறகும் தேர்தல் பிரச்சாரம் போலவே விஜய் பேசியுள்ளதாக திமுக பதிலடி. ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும்போதும் திமுக பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறார் என்றும் விமர்சனம். சென்னையில் கட்சி பதவி மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தவெக பிரமுகர் அடித்துக் கொலை. கொலையாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரக்கோரி உறவினர்கள் சாலை மறியல். மத்திய கிழக்கு நாடுகளை போல கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். குற்றங்கள் அதிகரிப்பது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து. பெண்கள் பாதுகாப்பு? தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண் காரில் அழைத்துச் செல்லப்பட்டு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுக்கப்பட்டு கூட்டுப் பா...

சரியும் சட்டம் ஒழுங்கு

படம்
சரியும் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவுடன் புதிய கூட்டணியை அமைத்து ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நாளில் இருந்தே, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கோவை சூலூர் பகுதியில் சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடலூரில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதும், சென்னை வேளச்சேரியில் மூதாட்டி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதும், மதுராந்தகத்தில் மூதாட்டியை நகைக்காக கொலை செய்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மரக்காணத்தில் 11வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை, கடலூர் அருகே வடலூரில் 30 வயது இளம்பெண்ணின் சடலம் மீட்பு உள்ளிட்டவை சட்டம் ஒழுங்கை நிலைகுலைய வைக்கின்றன. எப்போதுமே கொலை களமாக திகழும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தற்போது கண்ணில் கண்டவர்களை எல்லாம் அரிவாளால் வெட்டி சென்ற ஒரு கும்பல் 10 பேரை வெட்டி காயப்படுத்தியுள்ள...

ஒவ்வொரு நாளும்......

படம்
 🔹 கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக கனமழை. வேடசந்தூர் அருகே சூறாவளி காற்றில் பறந்த தகர மேற்கூரையால் போக்குவரத்து பாதிப்பு. 🔹 சி.வி.சண்முகம் ராஜினாமா செய்த மாநிலங்களவை இடத்துக்கு இடைத்தேர்தல். வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம். 🔹 சென்னை கோயம்பேட்டில் கார் ஏற்றி 18 வயது இளம்பெண் கொடூரக் கொலை. 2 பேர் கைது, மேலும் 5 பேரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரம். 🔹 காவிச்சாயம் பூசப்பட்ட வள்ளுவர் சிலைக்கு ஆளுநர் மரியாதை செலுத்தியதற்கு வலுக்கும் கண்டனம். வள்ளுவரின் சிந்தனைகளை சிறுமைப்படுத்துவதா என தவெக, திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக கேள்வி. 🔹 வெளியூர் சென்றவர்கள் ஒட்டுமொத்தமாக சென்னை திரும்புவதால், விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு. மதுரையில் இருந்து சென்னை வர 17 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பால் பயணிகள் அதிர்ச்சி. 🔹 மானாமதுரை அருகே திருப்புவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெட்ரோல் பங்க்குகள் மூடல். வாகனங்களுக்கு எரிபொருள் கிடைக்காமல் மக்கள் அவதி. 🔹 பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு 2 லட்சத்து 81 ஆயிரம் பேர் விண்ணப்பம். விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளையுடன்...

கனமழை தொடரும்!

படம்
  18 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் தகவல் வேலூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிாி, திருப்பத்தூா், திருவண்ணாமலை, தருமபுாி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூா், கரூா், திண்டுக்கல், தேனி, நீலகிாி, கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் வரும் ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வள்ளுவரை அவமதிக்கும் செயல் சி.பி.எம் சண்முகம் கண்டனம் திருவள்ளுவரை சனாதனி என வரையறுக்கும் ஆளுநரின் கருத்து கடும் கண்டனத்திற்கு உரியது. எம்மதத்தையும் சாராதவரை காவி உடை தரித்தவராக உருவகப்படுத்துவது வள்ளுவரை அவமதிக்கும் செயல் என சி.பி.எம் மாநில செயலர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா? மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 79 அடியாகக் குறைந்து சரிந்துள்ளதன் காரணமாக, இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுமா என்ற பலத்த சந்தேகம் டெல்டா பகுதி விவசாயிகளிடையே எழுந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் குறுவை சாகுபடிப் பணிகளைத் தடையின்றி மேற்கொள்வதற்...