இரண்டானவன் முடிவில்ஒன்றாவன்!
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினார்கள். அவர்கள் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து அ.தி.மு.க. கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட 25 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதேபோல் எஸ்.பி.வேலுமணி தரப்பில் எங்களிடம் தான் அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே தாங்கள் நியமித்தவரைதான் அ.தி.மு.க. கொறடாவாக அங்கீகரிக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு 90 நாட்கள் வரை அதிகாரம் உள்ளது. ஆனால் மனு கொடுத்தவர்கள் 15 நாட்களுக்குள் சமரசமாகி மனுவை வாபஸ் பெறவும் அவகாசம் உள்ளது. அதன் அடிப்படையில் இந்த மனுக்களை வாபஸ் பெற நாளை (28-ந்தேதி) வரை அவகாசம் உள்ளது. அதன் பிறகும் மனுக்களை வாபஸ் பெறாவிட்டால் அந்த மனுக்கள் மீது ...