இடுகைகள்

10 ஆண்டுகளில் நீதிபதிகள் மீது

படம்
  9000  புகார்களா? கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது 8 ஆயிரத்து 630 புகார்கள்  மக்களவை கூட்டத்தொடரில் திமுக எம்பி மாதேஸ்வரன் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் பதவி வகித்த நீதிபதிகள் மீது எத்தனை புகார் பெறப்பட்டுள்ளது? அந்த புகார்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.  திமுக எம்பி-யின் கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேவால் பதிலளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதில் பொதுமக்களை அதிர்ச்சிக்கு ஆழ்த்தியுள்ளது.  கடந்த 2016ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையில் ஒவ்வொரு ஆண்டும் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபகள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கிடைக்கப்பெற்ற புகார்களின் எண்ணிக்கையை ஆண்டுவாரியாக கீழே காணலாம். 2016ம் ஆண்டு -  729 2017ம் ஆண்டு - 682 2018ம் ஆண்டு - 717 2019ம் ஆண்டு - 1037 2020ம் ஆண்டு - 518 2021ம் ஆண்டு - 686 2022ம் ஆண்டு - 1012 2023ம் ஆண்டு - 977 2024ம் ஆண்டு - 1170 2025ம் ஆண்டு - 1102 கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக கடந்த 2024ம் ஆண்டில...

ஏமாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்ட திட்டம்

படம்
பி.எம்.கேர்ஸ் :  பி.எம்.கேர்ஸ் நிதி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு, “அந்த நிதியம் ஒரு தனியார் நிதியம்; எனவே, அதை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது” என்று நாடாளுமன்றச் செயலகத்திற்கு “அறிவுறுத்தி” பிரதமர் அலுவலகம் “உத்தரவு” போட்டுள்ளது. தனியார் நிதி குறித்து விவாதிக்க முடியாது என்பது சரிதான் - ஆனால் பி.எம்.கேர்ஸ் தனியார் நிதியமா என்கிற கேள்வி முக்கியமானது. இப்போது அதைத் தனியார் நிதியம் என்று அரசு சொல்வது இந்திய மக்களையும், நாடாளுமன்றத்தையும், நீதிமன்றத் தையும் ஏமாற்றுவதற்கான ஒரு செயலே அன்றி, உண்மையில் அது தனியார் நிதியம் அல்ல.  அரசே உருவாக்கிய நிதியம் 2020 மே 6-ஆம் தேதி பத்திரிகை தகவல் அலுவல கம் (PIB) வெளியிட்டுள்ள செய்தியின் இரண்டாவது பத்தி இப்படி விவரிக்கிறது: “கோவிட் போன்று மிகத் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் பாதிப்பு களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க, அதற்கென்று பிரத்யேகமாக ஒரு நிதியம் தேவைப்படுகிறது என்பதை இந்திய அரசாங்கம் உணர்ந்தது.  அதனடிப்படையில், 2020 மார்ச் 28 அன்று ஒரு நிதியம் உருவாக்கப்பட்டு, அதற்குப் ‘பிரதம மந்திரியி...

வெற்றி விடுக்கும் எச்சரிக்கை

படம்
பெண்களின் வங்கிக் கணக்குகளில் அதிகாலையில் வரவு வைக்கப்பட்ட ரூ.5,000. 3 மாத மகளிர் உரிமைத் தொகையுடன், கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ.2,000 வழங்கல். 1.31 கோடி பேரின் வங்கிக் கணக்குகளில், செலுத்தப்பட்ட ரூ.6,550 கோடி. சுதந்திர இந்தியாவில், ஒரே நாளில் செயல்படுத்தப்பட்ட மிகப்பெரிய மக்கள் நலத் திட்டம் என பொருளாதார வல்லுநர்கள் பாராட்டு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை அதிமுகவினர் மறந்துவிட்டதாக சேலம் கூட்டத்தில் விஜய் பேச்சு. கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு, கொள்ளையடிக்கும் அனுபவம் தனக்கு இல்லை என்றும் காட்டம். கேள்விகளுக்கு பதில் சொல்வது தான் தலைவரின் கடமை என விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி. பிரச்னையை சந்திக்கும் திறன்கூட விஜய்க்கு இல்லை என்றும் விமர்சனம்.  5ஆண்டு ஆட்சியில் எவ்வளவு பேருக்கு எந்தெந்த துறைகளில் அரசு வேலை? பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின். திராவிட மாடல் 2.0 அரசு அமைவதையும் மக்களுக்கு கிடைக்க உள்ள நன்மைகளையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது: அமைச்சர் எஸ். ரகுபதி. வெற்றி விடுக்கும் எச்சரிக்கை! நாடு தழுவிய அளவில் பிப். 12 அன்று நடை பெற்ற அகில இந்திய பொதுவேலைநிறுத்தம், ...

உணர்ந்தும்,உணராமல்!

படம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.  அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்க வேண்டிய மக்களவைத் தலைவர், பா.ஜ.க.வைச் சேர்ந்தவராகவே நடந்து கொள்வது நாடாளுமன்ற மாண்புக்கு மாபெரும் இழுக்கு. அதை உணர்ந்தும், உணராதவர்போலேயே அவர் செயல்பட்டு வருகிறார்.  அவரை அப்படித்தான் செயல்பட வேண்டும் என்று ஒன்றிய ஆட்சி மேலிடம் கட்டளை பிறப்பித்துள்ளது. 1. மக்களவை அலுவல்களை நடத்துவதில்அவைத்தலைவர் ஓம் பிர்லா முற்றிலும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார். 2. பல்வேறு நேரங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேச ஓம் பிர்லா அனுமதிப்பது இல்லை. 3. நாடாளுமன்ற அடிப்படை ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது. 4. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கான முழு அனுமதியை பிப்ரவரி 2 ஆம் தேதி ஓம் பிர்லா வழங்கவில்லை. பொதுவாகவே ராகுல் காந்தியைப் பேச அனுமதிப்பது இல்லை. 5. எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களை தன்னிச்சையாக பிப்ரவரி 3 ஆம் தேதியன்று இடைநீக்கம் செய்துள்ளார். ஜனநாயக முறைப்படி நடந்து கொண்ட அவர்களுக்கு தண்டனை தரப்பட்டுள்ளது. 6. பா.ஜ.க. எம்.ப...

தேசபக்தியல்ல; துரோகம்!

படம்
இந்தியாவின் சுதந்திரப் போராட்டக் களத்தில் உணர்ச்சிப் பிழம்பாகத் திகழ்ந்த ‘வந்தே மாதரம்’ பாடல் இன்று மீண்டும் ஒரு விவாதப் பொருளாக்கப்பட்டிருப்பது தற்செயலானது அல்ல.  1937-இல் நேரு, சுபாஷ் சந்திர போஸ், மௌலானா ஆசாத் போன்ற ஆளுமைகளும், மகாகவி ரவீந்திரநாத் தாகூரும் இணைந்து எடுத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை இன்று “திருத்துகிறோம்” என்ற பெயரில் சிதைக் கத் துடிப்பது தேசத்தின் பன்முகத்தன்மை மீதான நேரடித் தாக்குதலாகும். ஆனந்த மடம் நாவலின் ஒரு பகுதியாகப் பிறந்த இப்பாடலின் பிந்தைய சரணங்கள் தாய் நாட்டை ஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டுத்  தெய்வமாகச் சித்தரிக்கின்றன.  இந்தியா என்பது ஒரு மதம் சார்ந்த தேசமல்ல; அது பல நம்பிக்கைகள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்க ளின் சங்கமம்.  “உருவ வழிபாட்டை ஏற்காத பிற மதத்தினர் இப்பாடலை முழுமையாக ஏற்பதில் தயக்கம் காட்டுவார்கள்” என்ற தாகூரின் கருத்தை ஏற்று, முதல் இரண்டு சரணங்களை மட்டும் தேசியப் பாடலாக அறிவித்தது அன் றைய தலைவர்களின் முதிர்ச்சியைக் காட்டு கிறது. அது ஒரு ‘வெட்டு’ அல்ல; அது இந்தியா வின் பன்முகத்தன்மையை இணைக்கும் ‘பாலம்’. இன்று ஆட்சி ...