இடுகைகள்

நீரிணை கடந்த கப்பல்கள்?

படம்
ஹோர்முஸ் நீரிணையை கடந்த கப்பல்; இந்தியக் கொடியுடன் கூடிய எல்.பி.ஜி கப்பல் ஒன்று வெள்ளிக்கிழமை இரவு நீரிணையை கடந்துள்ளதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் ஈரான்,  ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதனால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவற்றை ஏற்றிக் கொண்டு வரும் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டன. இந்நிலையில், இந்தியக் கொடியுடன் கூடிய எல்.பி.ஜி கப்பல் ஒன்று வெள்ளிக்கிழமை இரவு நீரிணையை கடந்துள்ளதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. இந்திய கப்பல் கழகத்திற்கு சொந்தமான ஷிவாலிக் கேஸ் கப்பல் வெள்ளிக்கிழமை இரவு ஹோர்முஸ் நீரிணையை கடந்து சனிக்கிழமை அதிகாலை 12:45 மணியளவில் ஓமன் வளைகுடாவில் இருந்ததாக 'மரைன் டிராஃபிக்' தரவுகள் உறுதிப்படுத்தின. இதேபோல் மற்றொரு எல்பிஜி கப்பலான நந்தா தேவியும் சில மணி நேரங்களில் இந்த நீரிணையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் பேசிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.   மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்...

கார்க் தீவு தாக்குதல்?

படம்
நாடு முழுவதும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு நீடிக்கும் தட்டுப்பாடு. உணவகங்கள் அடுத்தடுத்து மூடப்படும் நிலையில், உணவுகளின் விலையும் உயர்வு. வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை தொடக்கம்.18 ஆண்டு கால காத்திருப்பிற்கு பலன் கிடைத்துள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி. அரை நூற்றாண்டில் பெற வேண்டிய வளர்ச்சியை 5 ஆண்டுகளில் பெற்ற சென்னை. திராவிட மாடல் அரசு சாதித்து காட்டியுள்ளதாக முதலமைச்சர் பெருமிதம். அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என கட்சி பெயரை அறிவித்தார் சசிகலா. கட்சியின் சின்னம் தென்னந்தோப்பு என்றும் அறிவிப்பு. கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் தயாரிப்பு பாதிப்பு. 5,000 தொழிற்சாலைகள் மூடப்படும் சூழலால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம். "தொழில் என்றால் என்ன?" -மார்ச் 17 முதல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு. இன்ஸ்டாகிராமில் இருந்து எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் அம்சங்களை நீக்குவதாக அறிவித்தது மெட்டா நிறுவனம். என்ஆர்.காங்கிரசுக்கு-16, பாஜ-14: புதுச்சேரியில் முடிவுக்கு வந்தது என்டிஏ கூட்டணி தொகுதி பங்க...

ஈரான் ஒரு பார்வை!

படம்
 கடந்த 1979-ஆம் ஆண்டு புரட்சி, இரானின் ஆட்சியாளர்களை அதிகாரத்திற்குக் கொண்டு வந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அவர்கள் இப்போது தங்களுடைய மிக மோசமான தருணத்தை எதிர்கொள்கின்றனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதல்களில் அதிஉயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி மற்றும் பிற உயர்மட்ட ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர்.  மேலும் முக்கிய உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுமே ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகச் சமிக்ஞை அளித்துள்ளன. மேலும் இரானியர்கள் தங்கள் ஆட்சியை தூக்கியெறியுமாறு இருநாடுகளும் வலியுறுத்துகின்றன. ஆயினும், இரானின் ஆட்சியானது நீடித்திருக்கக்கூடிய மற்றும் எளிதில் வீழ்த்தப்பட முடியாத ஓர் அதிகாரக் கட்டமைப்பைத் திட்டமிட்டு உருவாக்கியுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் அதன் வலிமைக்கு என்ன காரணம்? மத்திய கிழக்கின் பிற நாடுகளில் இருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது? மொஜ்தபா காமனெயி, தனது தந்தையின் கடுமையான ஆட்சியைத் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரானின் முடியாட்சியை வீழ்த்தியதில...