இடுகைகள்

சீர்காழி வைகோவிற்கு தந்த ஆப்பு !

படம்
  வைகோ-விற்கு ஆப்பு. கொடுத்த சீர்காழி எம்எல்ஏ சென்னையில் வைகோ தலைமையில் நடைபெற்ற மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப. செந்தில் செல்வன் பங்கேற்கவில்லை.  இதற்கான காரணம் கேட்ட போது, அவர் கட்சியின் உயர்நிலைக் குழுவில் உறுப்பினராக இல்லாததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று மதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இதறலு மறுப்பு தெரிவித்துள்ள எம்எல்ஏ செந்தில் செல்வன், "நான் ஏற்கனவே மதிமுகவிலிருந்து விலகி தற்போது திமுக உறுப்பினராக உள்ளேன்". ஏற்கனவே முழுமையாக திமுக-வில் இணைந்து விட்டதால் மதிமுக கூட்டத்தில் பங்கேற்கத் தேவையில்லை என விளக்கம் கொடுத்து உள்ளார்.  இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதிமுக தலைமை திமுக கூட்டணியில் இருந்து விலகி, ஆளுக்கு கட்சியாக உள்ள தவெக-விற்கு ஆதரவளிக்க திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டு வென்றனர்.  கூட்டணி மாற திட்டமிட்டு வருவதால் தங்கள் கட்சி வேட்பாளர்களாக களமிறங்கி வ...

எதிர்வினை !

படம்
 📄 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே 3 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சரிந்து விழுந்ததால் பதற்றம். 6 மணி நேரமாகியும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என புகார். 📄 வணிக சிலிண்டருக்கான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்.   ஒன்றிய அரசு அறிவிப்பு. 📄 ஒன்றிய அரசு என்பதற்குப் பதில் இந்திய அரசு எனக் குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய்.  திடீர் மாற்றம். 📄 சட்டமன்றத்தில் இல்லாவிட்டாலும் மக்கள் மனதில் இருப்பதாக முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி.கோட்டையில் தம்மை காண வேண்டும் என்றால், அங்குள்ள கோப்புகளை பாருங்கள் என்றும் அறிவுரை. 📄 தவெக ஆதரவால் கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு மீண்டும் பதவி.நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணிக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு. 📄 முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை 16 மணி நேரம் சோதனை. பணம் பறிமுதல் தொடர்பாக அறிக்கைகளில் முரண்பாடு இருந்ததால் குழப்பம், 📄 சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யை கேள்வி கேட்டதால், சோதனை நடத்தப்பட்டதாக எ.வ.வேலு குற்றச்சாட்டு. 40 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட...

‘ரீல்ஸ்’ வெளியிடும் அரசு

படம்
  #  குற்றச்சாட்டுகளை கூறுகிறீர்கள் என்றால் ஆதாரத்தோடு கூறுங்கள்; ஆதாரம் இல்லையென்றால் பொத்தாம் பொதுவாக குற்றம் சுமத்தாதீர்கள் . ஒவ்வொரு ஆண்டும் தேதி மாறாமல் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது -  செந்தில் பாலாஜி. @  திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவது தொடர்பாக திமுக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  # முதல்வர் விஜய் நேற்று பணி ஆணை வழங்கியவர்கள் எல்லோருமே திமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான். ஏதோ இந்த 40 நாளில் அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு நடத்தி, முடிவுகள் அறிவித்து, தேர்வு செய்யப்பட்டது போல ‘வெளிப்படையாக தேர்வு நடந்தது’ என ரீல்ஸ் வெளியிடப்படுகிறது. ஏதோ இத்தனை ஆண்டுகள் மின்சார வாரியத்தில் யாருக்குமே பணி உயர்வு வழங்கப்படாததுபோல, அமைச்சர் பேசுகிறார். பணி நியமனங்களும், பதவி உயர்வுகளும் தேர்தல் அறிவிப்பால் மேற்கொள்ள முடியவில்லை.-செந்தில் பாலாஜி. # தினமும் சினிமாக்காரர்களை சந்தித்து சிரித்து பேசி மகிழும் உங்களுக்கு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல நேரமில்லையா அல்லத...