சரியும் சட்டம் ஒழுங்கு
சரியும் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவுடன் புதிய கூட்டணியை அமைத்து ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நாளில் இருந்தே, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கோவை சூலூர் பகுதியில் சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடலூரில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதும், சென்னை வேளச்சேரியில் மூதாட்டி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதும், மதுராந்தகத்தில் மூதாட்டியை நகைக்காக கொலை செய்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மரக்காணத்தில் 11வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை, கடலூர் அருகே வடலூரில் 30 வயது இளம்பெண்ணின் சடலம் மீட்பு உள்ளிட்டவை சட்டம் ஒழுங்கை நிலைகுலைய வைக்கின்றன. எப்போதுமே கொலை களமாக திகழும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தற்போது கண்ணில் கண்டவர்களை எல்லாம் அரிவாளால் வெட்டி சென்ற ஒரு கும்பல் 10 பேரை வெட்டி காயப்படுத்தியுள்ள...