இடுகைகள்

தேங்கிய கோப்புகள் மலை....

படம்
  ஓசூர் அருகே அமைய வேண்டிய ஒருங்கிணைந்த விமானப் பரிசோதனை மையத்தை ஆந்திராவுக்கு மாற்றியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.ஒன்றிய அரசு மீது தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குற்றச்சாட்டு. சென்னையில் கிளாண்டர்ஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட குதிரை உயிரிழப்பு.ஆபத்தான தொற்று என்பதால் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு. ஆறுகளில் குறையும் ஆக்ஸிஜன் அளவு.. சீன ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை. வெப்பமண்டலப் பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், 2100க்குள் மேலும் 4% முதல் 5% வரை ஆக்சிஜன் குறையக்கூடும் என்றும் தகவல். தேங்கிய கோப்புகளும், இலாகா இல்லா அமைச்சர்களும்? விஜய் தலைமையிலான தனிப்பெரும்பான்மை இல்லாத த.வெ.க. அரசு, நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த மே10 ஆம் தேதி ஒருவழியாக பதவியேற்றது. விஜய்யுடன் சேர்த்து 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். வழக்கமாக பதவியேற்பு நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே அமைச்சர்களுக்கு இலாகாக்கள் அறிவிக்கப்படும் நிலையில், இம்முறை பல நாட்கள் கடந்தும் எந்த அமைச்சருக்கும் அதிகாரப்பூர்வமாக துறைகள் ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் முதலமைச்சரை சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் வரை...

தோரியமே துணை?

படம்
  அதிமுக கொறடா உத்தரவை மீறிய 25 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டம். ஆளுநரை இன்று நேரில் சந்தித்து முறையிட எடப்பாடி பழனிசாமி முடிவு என தகவல். உச்சநீதிமன்றத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இனி காணொலி வாயிலாக விசாரணை. எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க 50% பணியாளர்கள் 2 நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தல். தவெக ஆட்சியமைத்து ஒரு வாரம் ஆகவுள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கம், துறை ஒதுக்கீட்டில் இழுபறி. ஆளுநர் அர்லேகரை, முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று சந்திக்க வாய்ப்பு. பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றத்தைத் திரும்பப் பெற வேண்டும். ஒன்றிய அரசுக்கு  ஜோசப் விஜய் வலியுறுத்தல். எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு 3-வது முறையாக சபாநாயகர் உடன் சந்திப்பு. அதிமுக கொறடா விவகாரத்தில் சட்டப்படி முடிவெடுக்கப்படும் என சபாநாயகர்  அறிவுறுத்தல். தவிர்க்க முடியாததா இந்த விலை உயர்வு? பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.3 அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடந்து சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.67க்கும், டீசல் விலை லிட்ட ருக்கு ரூ.95.25க்கும் விற்கப்ப...

சனாதனம் ஒழிக!

படம்
பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தரப்பினர் தரப்பில் விவாதங்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, காங்கிரஸ், சிபிஎம், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏக்கள், தவெக அரசு ஆட்சியில் நீடிப்பதற்கு ஆதரவு அளிப்பதாகப் பேசினர். இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெகவையும் முதலமைச்சர் விஜயையும் கடுமையாக விமர்சித்து பேசினார். இறுதியாக அவர் பேசி முடிக்கும் போது, “வெல்க தமிழ், வளர்க தமிழ்நாடு, மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று கூறினார். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர் பேசினார். இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அவர் மீது சிலரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப,  ‘மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்’-னு க...

# ஷோபா மாடல் ?

படம்
  மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மறுசீரமைப்பு என்ற அறிவிப்பால் குழப்பம். பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என பெண்கள் அச்சம். அதிமுகவில் எம்.எல்.ஏ. ஹரி உட்பட மேலும் 2 நிர்வாகிகளின் பதவிகளை பறித்தார் எடப்பாடி பழனிசாமி. கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர எந்த தியாகத்திற்கு தயார் என பரபரப்பு அறிக்கை. அதிமுகவின் தோல்வி குறித்து பொதுக்குழுவை கூட்டி ஆலோசிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்.  அதிமுக அலுவலகங்களை கைப்பற்றுவது தொடர்பாக இரு அணிகளிடையே வலுக்கும் மோதல். புதுக்கோட்டையில் போட்டி போராட்டம்... கரூரில் அதிமுக அலுவலக பூட்டு உடைக்கப்பட்டதால் பரபரப்பு.  அமெரிக்காவில் மிகப்பெரிய அளவுக்கு முதலீடு செய்வதாக உறுதி. அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட அந்நாட்டு நீதித் துறை முடிவு. சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியதற்கு யாரும் கோயிலுக்கு போகக் கூடாது என்று அர்த்தம் அல்ல. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே தங்கள் வழி என உதயநிதி ஸ்டாலின் விளக்கம். போலி வாக்காளர் அட்டையை பயன்படுத்தி திருவாடனை தொகுதியில் வாக்களித்த இலங்கை தம்பதி. மதுரை விமான ந...