இடுகைகள்

சில புள்ளி விவரங்கள்

படம்
தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர்ராவ்வின் மகள் கவிதா   தெலுங்கானா ராஷ்டிர சேனா (TRS) என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்  கள்ளக்குறிச்சியில் விவசாய கிணற்றில் விழுந்து தந்தை, மகன் உயிரிழப்பு!   அவிநாசி தொகுதியில் எனக்கு 100 சதவீத வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். எங்களது வெற்றி தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மேற்கு வங்க தேர்​தல் வெற்​றிக்கு பிறகு டெல்​லியை கைப்பற்​று​வேன்" - மம்தா பானர்ஜி. தமிழ்நாட்டில் 84.69% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாக்கு சதவீதத்தை உயர்த்தி காட்டிய எஸ்ஐஆர்.  சில புள்ளி விவரங்கள்.   கடந்த 25 ஆண்டுகளாக நடந்த தேர்தலில் எஸ்ஐஆர் பணியால் வாக்கு சதவீதம் உயர்த்தி காட்டப்பட்டுள்ளது. ஆனால், வாக்களித்தவர்கள் எண்ணிக்கை படுமோசமான நிலையில் உள்ளது என்பது புள்ளி விவரங்கள் மூலம் தெளிவாக தெரிகிறது. எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழகத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளா...

எதற்கு இந்த ஆணையம்?

படம்
  சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி. பெல்களூரில்ல் வேலை செய்தார். இவர் கடந்த 2016ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் ராம்குமார் என்பவரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறையில் இருந்த ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தற்கொலை பலருக்கு ஐயத்தைக் கிளப்பியது. சிறையில் அதிக உயரத்தில் உள்ள மின் இணைப்பை எப்படி வாயால் கடித்து தற்கொலை செய்ய முடியும் என்ற கேள்வி அனைவராலும் எழுப்பப் பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கபட்ட புகாரின் பெயரில் விசாரனை நடத்திய தேசிய உரிமைகள் ஆணையம். சென்னை காவல் ஆணையரின் அறிக்கை கோரியது. இதனை தொடர்ந்து ஆணையர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக முடிவுக்கு வந்த ஆணையம்.  வழக்கை கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் முடித்து ...

காரணம் ஆயிரம்?

படம்
தற்போது நடந்து முடிந்திருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில்  சுமார் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.  இதை குறித்து சில பத்திரிகைகள் பலவாறு ஊகத்தை வைத்து பல வதந்திகளை பரப்பி வருகின்றன. இப்படி வாக்குகள் அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்?  வாக்கு சதவீதம் அதிகரிப்பதை வைத்து தேர்தல் முடிவுகளைக் கணிக்க முடியுமா? தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.  இதற்கு முன்பாக, 2011ஆம் ஆண்டின் சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிகபட்சமாக 78.29 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆகவே இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகரித்திருக்கும் வாக்கு சதவீதத்தை வைத்து, தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கலாம் என்ற விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, வாக்கு சதவீதம் வெகுவாக அதிகரித்தால் அது அப்போதைய ஆளும் கட்சிக்கு பாதகமாக இருக்கும் என்பது பொதுவான புரிதலாக இருக்கிறது.  ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து நடந்த பொதுத் தேர்தல்களில் வாக்கு சதவீதங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், வெவ்வேறு...

வாக்குப் பதிவு,.!

படம்
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அறிவிப்பு. ஓராண்டை கடந்தும் நீடிக்கும் நடவடிக்கை இந்திய வான்வௌியில் பாக். விமானங்கள் பறக்க மே 24 வரை தடை நீட்டிப்பு. 152 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் மேற்கு வங்கத்தில் 92 சதவீதம் வாக்குப்பதிவு; பல இடங்களில் வன்முறை; பாஜ வேட்பாளருக்கு தர்மஅடி. ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்றவர்களிடம் தகராறு செய்த வேட்பாளர் தமிழிசை வாக்காளர்கள் கடும் வாக்குவாதம்   போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரானின் கப்பலை அமெரிக்கா சிறைபிடித்தது.இந்திய மாலுமி சிக்கித்தவிப்பு. வெடி விபத்தில் 14 பேர் பலி திருச்சூர் பூரம் திருவிழாவில் வாணவேடிக்கை நிகழ்ச்சி கைவிடல். ஊதிய உயர்வு, போனஸ் உச்ச வரம்பை நீக்க வலியுறுத்தல் 40 ஆயிரம் சாம்சங் தொழிலாளர்கள் தென்கொரியாவில் போராட்டம்: மே 21 முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு. ஓட்டு போட தெரியாமல் முழித்த முன்னாள் அமைச்சர்திண்டுக்கல்சீனிவாசன்.பொத்தானுக்கு பதில் சிகப்பு விளக்கை  அமுக்கி ஓட்டு விழவில்லை என புகார் செய்த திண்டுக்கல் சீனிவாசன். ...

மாற்றம் ஒன்றே மாறாதது!

படம்
தேர்தல் நிலவரம் மாற்றம் வேண்டும்.அதற்காக இளம் வாக்காளர் மடக்கு ஊதி சின்னத்திற்கு வாக்களிக்கிறோம். ரொம்ப சரி. என்ன மாற்றத்தை விரும்புகிறீர்கள்? கல்வி,வேலை,சுகாதாரம் அடைத்தும் இந்திய மாநிலங்களைவிட தமிழ்நாடு ஒருபடி முன்னே முதலிடம். உ.பி,பீகார் என மற்ற மாநிலமக்கள் வேலை வாய்ப்பு,மருத்துவசிகிச்சைக்கு தமிழ்நாடு வருகின்றனர். இங்கு தரமான மருத்துவத்தை இலவசமாகப் பெற்றுச்செல்கின்றனர். தொழில்,வேலை வாய்ப்பு தாராளம். நீங்கள் தேடும் மாற்றம் கல்வியறிவற்று காலில் செருப்பு அணியாமல் துண்டை தோளில் போடாமல் இடுப்பில் கட்டும் 1950 ஆண்டுகள் செல்லும் மாற்றம்? அல்லது நூறு ரூபாய் சினிமா டிக்கட்டை ஆயிரத்துக்கு வாங்கி ஆட்டம் போடும் சுதந்திரமா?கட்அவுட் மேலேறி கீழே விழுந்து சாகும் உரிமை,தாய்,தந்தை,மனைவி,குழந்தைகளை  வெளியே தள்ளி கூத்தியாளுடன் ஆட்டம் போடும் மாற்றமா? அரசியலை வாழ்வியல் முன்னேறத்துக்கான வழியாகப்பாருங்கள். சீரழிவுக்கானவழியாகப் பார்க்காதீர். நாம் நம் முன்னோர் ஐம்பதாண்டு அனுபவித்த அவலங்களை விட்டு ஒழித்த தலைவர்கள் ஆற்றிய பணகளை அசைபோட்டுப்பார்த்து புதிய படிகளில் முன்னேறப் பார்ப்போம். நூறு ரூபாய் டிக்கட்டை ...

கனவுகள் தொடர்கதை?

படம்
  தேர்தல் -2026. சிதைந்த கனவுகள்? முதல்வர் கனவு சிதைந்து போனதால் ஆத்திரம் அடைந்த நடிகர் விஜய், தேர்தல் பிரசார இறுதிநாளில் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக அட்டாக் செய்ததின் பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.  தமிழக தேர்தலை பொறுத்தவரையில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைந்து தேர்தலை சந்திக்கும். ஏதாவது ஒரு தேர்தலில் 3வது அணி அமையும்.  சில கட்சிகள் தனித்தே தேர்தலை சந்திக்கும். ஆனால் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 4 அணிகள் களத்தில் இறங்கியுள்ளது. இதில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்று விடலாம் என்ற எண்ணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருந்தார்.  இதற்கான ரகசிய ஏற்பாடுகளை செய்து வந்தார். இதற்கு முன்னோட்டமாக பிரசார கூட்டத்தில் தவெக கொடியை தூக்கிப்பிடித்து சிலர் அசைத்தனர். இதனை பார்த்த எடப்பாடியோ, பிள்ளையார் சுழி போட்டாச்சு என அவருக்கே உரித்தான சிரிப்பில் கூறினார்.  இதனால் தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என கட்சி தொண்டர்கள் கூறிவந்தனர். இதுதொடர்பாக அதிமுக தரப்பில்...

வாக்களியுங்கள்!

படம்
  சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை,புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது தபால் கணக்குப் புத்தகங்கள், ஓட்டுநர் உரிமம் ,பாஸ்போர்ட்,புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அடையாளமாகக் காட்டி வாக்களிக்கலாம் என தேர்த ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 'இசிஐநெட்' இணையதளம் மூலம், வாக்காளர் அடை யாள அட்டை எண்ணை பதிவு செய்தோ அல்லது பதிவு செய் யப்பட்ட செல்போன் எண்ணை வைத்தோ புதிய டிஜிட்டல் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது. தமிழகத்தின் தன்னுரிமை காக்க! 2026 ஏப்ரல் 23 - தமிழகத்தின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்திய ஜனநாய கத்தின் உயிர்நாடியைத் தீர்மானிக்கப் போகும் நாள். மாநில உரிமைகளைப் பறிக்கும் ‘ஒற்றை ஆட்சி’ அதிகாரத்திற்கும், கூட்டாட்சித் தத்து வத்தைப் போற்றும் ‘மக்களாட்சி’ மாண்பிற்கும் இடையிலான போர். தமிழகம் மத உணர்வுகளை மதிக்கும் மண், ஆனால் மதவெறியை மிதிக்கும் மண். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, கடந்த ஐந்து ஆண்...