இடுகைகள்

கொளத்தூர் குளறுபடிகள்!

படம்
  கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தோல்வி அடைந்தார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார். இந்தநிலையில் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், ”கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்தின் அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு அனுமதி கிடைத்தவுடன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ தலைமையிலான வழக்கறிஞர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்தனர். குறிப்பாக வாக்கு பதிவு மையங்களான 1, 17,28 ,32 ,75 ,78, 79 ,84 ,87 ,112 ,122 157 ,170 உள்ளிட்ட வாக்கு சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த விவிபேடு, ஈவிஎம் இயந்திரம், கண்ட்ரோல் யூனிட் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. அப்போத...

முடக்கும் கொள்கைகள்.

படம்
🔸 சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை. ஓ.எம்.ஆர். சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி 🔸 2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை. முதலமைச்சர் வசமுள்ள நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம். 🔸 மழைக்கால கூட்டத்தொடர் முடிந்தும் முறைப்படி நாடாளுமன்றத்தை ஒத்திவைக்காதது ஏன்? என காங்கிரஸ் கேள்வி. காலதாமதத்திற்கு பின்னால் அரசியல் சதி உள்ளதாகவும் குற்றச்சாட்டு. 🔸 வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு இ-கே.ஒய்.சி. எனப்படும் சுய விவர பதிவுக்கான காலக்கெடு வரும் 31-ம் தேதி வரை நீட்டிப்பு. 🔸 ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறிகளின் விற்பனை கிடுகிடு உயர்வு. ரூ.15 கோடிக்கு காய்கறிகள் விற்பனையானதாக வியாபாரிகள் தகவல். 🔸 பிரான்சில் நடந்த கார் பந்தயத்தில் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்தின் கார். நல்வாய்ப்பாக காயங்களின்றி உயிர் தப்பினார். இந்தியப் பொருளாதாரத்தை முடக்கும்  கொள்கைகள். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதாரப் போர் தீவிரமடைந்து வரும் சூழலில்,வர்த்தக முறைகேடுகள் மற்றும...

தமிழ்நாடு புறக்கணிப்பு..?

படம்
  நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. இதனால் தேநீர் கடைகளில் டீ, காபி விலை உச்சவிலைக்கு உயருகிறது. 1 கிலோ சர்க்கரை விலை ரூ40, ரூ50 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ65, ரூ75 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒன்றிய அரசு சீனி ஏற்றுமதிக்கு சீரான நிலைவரும் வரை தடைவிதிக்கவேண்டும். இந்திய பெண்கள் கபடி அணியில் கண்ணகி நகர் கார்த்திகா புறக்கணிப்பு: வட மாநில ஆதிக்கம்? வலுக்கும் எதிர்ப்பு தமிழ்நாடு அணி தொடர்ந்து 3 முறை சீனியர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. அதிக புள்ளிகள் எடுத்த வீராங்கனையாகத் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகா முதலிடத்தில் இருக்கிறார். கண்ணகி நகர் கார்த்திகா புறக்கணிப்பு: இந்திய கபடி தேர்வில் தொடரும் வடமாநில ஆதிக்கம் – பின்னணியில் வீராங்கனையின் எதிர்காலத்தை முடக்கும் அதிகார அழுத்தம்? இந்திய பெண்கள் கபடி அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விளையாட்டு உலகிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் புயல் வீசி வருகிறது. சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை கார்த்திகா அணியில...

நூறாவது நாள் வந்த பயம்?

படம்
  "இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்வதை தடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தின் முடிவை, கல்லூரிகளுக்கு அனுப்பிய கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பது கண்டிக்கத் தக்கது ஒட்டு மொத்த பிரச்னைக்கும் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரை பொறுப்பாக்குவதையும் வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த விளக்கம் கேட்கும் கடிதத்தையும் திரும்பப் பெற வேண்டும்" -தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் அறிக்கை. 📌 திமுக பார்க்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லையென செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு. Comeback கொடுப்பதிலும் திமுகதான் ஸ்பெஷலிஸ்ட் என்றும் பெருமிதம். 📌 இந்தியா கூட்டணியில் த.வெ.க.விற்கு தற்போது இடமில்லை என்று மாணிக்கம் தாகூர் பேட்டி. எம்.பி.க்கள் இல்லாத கட்சியை அழைக்க முடியாது என்றும் விளக்கம். மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த அரசு பள்ளி ஆசிரியரை கீழேதள்ளிதாலிசெயின்பறிப்பு பட்டப்பகலில் ஜிஎஸ்டி சாலையில் வழிப்பறி 📌 தவெக அரசுக்கு தாங்கள் வேண்டுமா? அதிகாரிகள் வேண்டுமா? என பெ.சண்முகம் கேள்வி. முதலமைச்சர் ஜ...

நாங்கள் வேண்டுமா?

படம்
தலைமைச் செயலர் சாய்குமார் வேண்டுமா?? மே ல்நோக்கிச் செல்ல வேண்டிய ஒரு வாகனம் தட்டுத் தடுமாறி அதே இடத்தில் நின்று, அதன்பிறகு பாதாளத்தை நோக்கி வந்துவிட்டால், மீண்டும் அதை மேல்நோக்கிச் செலுத்துவது எவ்வளவு கடினமோ, அதேபோல்தான் தமிழ்நாட்டுக்கும் நடந்திருக்கிறது என்று முதலமைச்சர் விஜய்யை தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப்பாதையில் விரைந்து சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தை ஒப்படைத்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை , செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  நடிகர்விஜய்,ஆதவ்அர்ஜூனா, ஜெகதீஷ் பழனிசாமி , விர்சுவல் வாரியர், வாய்ஸ் ஆப்காமன், த.வெ.க,தற்குறிகளுக்கு சமர்ப்பணம். மாணவர்கள் போராட்டத்தை தடை செய்ய சுற்றறிக்கை வெளியான விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும். தலைமை செயலாளரின் நடவடிக்கை சட்டவிரோதமானது.  அவர் பதவியில் ...

நன்றி.!

படம்
 

வாயை மூடிக் கொண்டது ஏன்?

படம்
தனியாருக்கு இணையாக, ஆவினும் லிட்டருக்கு 50 ரூபாய் வழங்கக் கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம். நாளை மறுநாள் முதல் ஆவினுக்குப் பால் வழங்குவதை நிறுத்தப்போவதாக அறிவிப்பு கரும்பு விளைச்சல் சரிவால் சர்க்கரை விலை கிலோவிற்கு 20 முதல் 25 ரூபாய் உயர்வு. சர்க்கரை பதுக்கப்படுவதை அரசு தடுக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை தாய் மாமன் தங்க மோதிர திட்டத்தில் ஒரு பைசாவுக்கு டெண்டர் கோரிய 2 நிறுவனங்களுக்கு பணியாணை. ஒரு கிராம் தங்கத்தின் விலை நீங்கலாக கூடுதல் கட்டணங்களுக்கு விலைப்புள்ளி நிர்ணயம் மக்களவைத் தொகுதிகள் 543-ஆக நீடிக்க வேண்டும் என முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசாதது ஏன்? சட்டமன்றத் தீர்மானத்திற்கு விரோதமாக முதலமைச்சர் விஜய் செயல்படுவதாக திமுக குற்றச்சாட்டு " டிரம்ப் முதல் மோடி வரை.. விஜய் வாய் திறக்கவில்லையே ஏன்? – சுப்பராயன் எம்பி டி ரம்ப், மோடியிலிருந்து தமிழ்நாட்டு அதிகாரிகள் வரை, அச்சப்பட்டுக் கலங்குவது, மார்க்சிய தத்துவஞானத்தை தாங்கி நிற்கிற கம்யூனிஸ்டுகளைக் கண்டு தான் என சுப்பராயன் எம்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்பர...