குடிநீர் பஞ்சம்.தீர்க்க
பனிப் பாறைகள்...! உலக அளவில் நன்னீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. இந்நிலையில், அண்டார்டிகா மற்றும் ஆர்க்டிக் துருவப் பகுதிகளில் உள்ள பிரம்மாண்டமான பனிப்பாறைகளைக் கடல் வழியே கப்பல்கள் மூலம் இழுத்து வந்து நன்னீராக மாற்றும் திட்டத்தை சர்வதேச விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் மீண்டும் பரிசீலித்து வருகின்றனர். கடந்த 1977-ம் ஆண்டு சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது அல்-பைசல், அரேபிய தீபகற்பத்தின் கடுமையான குடிநீர் பஞ்சத்தைத் தீர்க்க இந்த யோசனையை முதன்முதலில் உலகுக்கு முன்வைத்தார். இத்திட்டத்தின் சாத்தியக்கூறை நிரூபிப்பதற்காக, அலாஸ்கா பகுதியில் இருந்த சுமார் 1.5 டன் எடையுள்ள மிகப்பெரிய பனிப்பாறை ஒன்றை ஐயோவா மாநிலத்துக்குப் பிரத்யேகக் கப்பல் மூலம் வெற்றிகரமாக இழுத்து வந்து செயல்முறை விளக்கமும் அளித்தார். அக்காலத்தில் தொழில்நுட்பக் குறைபாடுகள், பனிப்பாறை வழியிலேயே உருகுவதைத் தடுக்கும் முறைகள் இல்லாதது மற்றும் அதிகப்படியான கடற்போக்குவரத்துச் செலவு ஆகிய காரணங்களால் இத்திட்டம் வணிக ர...