இடுகைகள்

காவிரி நீர்!

படம்
  உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.  இதற்காக மாதம் ஒருமுறை கூட்டங்கள் நடத்தப்பட்டு, நீர் இருப்பு மற்றும் மழைப்பொழிவு நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், மேட்டூர் மற்றும் கர்நாடக அணைகளின் தற்போதைய நீர் இருப்பு, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் உள்ளது.  ஜூன் மாதத்தில் கர்நாடக அணைகளுக்கு எந்தவித நீர்வரத்தும் இல்லை. ஜூலை மாதத்தில் போதிய மழை இல்லாததால்...

மேகதாது :பா.ஜக துரோக நிலைபாடு!

படம்
 📌 காவிரியின் குறுக்கே அணை கட்ட தமிழ்நாடு அரசின் அனுமதி கர்நாடகாவுக்கு தேவையில்லை. நாடாளுமன்றத்தில் ஒன்றிய நீர்வளத்துறை இணையமைச்சர் அளித்த பதிலால் அதிர்ச்சி. 📌 தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் புதிய வானிலை மாற்றம் உருவாகி உள்ளதாக ஸ்பெயின் அரசு கவலை. இதுவரை 77 ஆயிரம் ஹெக்டேர் நிலம் எரிந்து சேதம் என தகவல். 📌 கரூர் நெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது. விஜய் அரசின் அரசாணை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை அதிரடி தீ்ர்ப்பு. 📌 போகிற போக்கில் அரசு வேலை வழங்குவதா என தவெக அரசுக்கு நீதிபதிகள் காட்டம். சாலை விபத்தில் தினந்தோறும் உயிரிழக்கும் நபர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க முடியுமா? என்றும் சரமாரி கேள்வி. 📌 எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை. 📌 ராணிப்பேட்டை தவெக மாவட்டச் செயலாளர் மீது பாலியல் புகார். 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் புகார். 📌 போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது ...

அடுத்து எத்தனால் கட்கரி

படம்
  ‘ E20 ஜனதா கட்சி’   நிதின் கட்கரிக்கு ’வேட்டு’?  பின்னணி என்ன? நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிராக டெல்லியில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ – காக்ரோச் ஜனதா கட்சி (CJP) டெல்லியில் தொடங்கிய போராட்டம் மத்திய கல்வித் துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானின் பதவியையே பறித்தது. ”காக்ரோச்” வழியில் தற்போது ‘E20 ஜனதா கட்சி’ (E20 Janta Party) என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டு பேசுபொருளாகி இருக்கிறது. இந்த கட்சியினர், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி ஆகியோரது ராஜினாமாவை கோருகின்றனர். ஒன்றுய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின், “எத்தனலாலில் பெட்ரோல் கலக்கும்” கொள்கைக்கு எதிராக உருவாகி இருக்கிறது இந்த E20 ஜனதா கட்சி. மத்திய அரசின் எத்தனால் கொள்கை கரும்பு, மக்காச்சோளம், அரிசி கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது ‘எத்தனால்’ (Ethanol). எத்தனாலை பெட்ரோலுடன் குறிப்பிட்ட சதவீதத்தில் கலந்து வழங்குவது என்பதுதான் ஒன்றிய அரசின் கொள்கை. இதன் பெயர் இபிபி திட்டம் (EBP – Ethanol Blended Petrol)...

மூன்றே மாதத்தில்..

படம்
 தமிழ்நாட்டில் பதவியேற்ற மூன்று மாதங்களில் த.வெ.க. அரசு பல்வேறு திட்டங்களுக்காக, 20 ஆயிரத்து 881 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றாததற்கு முந்தைய அரசு கடன் வாங்கியதை காரணம் காட்டிய விஜய், தற்போது வாங்கியுள்ள கடன் தொகைக்கு என்னப் பதில் சொல்லப்போகிறார் என கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசுக்கு, மாநில சரக்கு மற்றும் சேவை வரி, முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம், விற்பனை மற்றும் வர்த்தகம் மீதான வரி என, பல வகையில் வருவாய் கிடைக்கிறது. அரசு பணியாளர்கள் சம்பளம், ஓய்வூதியம், கடனுக்கான வட்டி போன்றவற்றுக்காக செலவு செய்யப்படுகிறது. வரவை விட, செலவு அதிகம் இருப்பதால், கடன் பத்திரங்கள் விற்பனை, வங்கிகள் போன்றவற்றில் கடன்கள் வாங்கப்படுகின்றன. இவற்றில், கடன் பத்திரங்கள் விற்பனை வாயிலாக பெறப்படும் கடன்தான் அதிகம். இவ்வாறு வாங்கப்படும் கடன்களில், சாலை அமைத்தல், பாலம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை, அரசு மேற்கொள்கிறது. இந்த நோக்கங்களுக்காகவே முந்தைய தி.மு.க. அரசு கடன் வாங்கியது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையில...

கரூர் விஜய் அரசு வேலை.ரத்து!

படம்
பா.ஜ.க ஆட்சியில் கல்வி அமைச்சர்களும் , பதவிக்காலமும் ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' ஆகிய மூவரும் முந்தைய மோடி ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சர்களாகக் குறுகிய காலம் பணியாற்றியுள்ளனர். என். டி. ஏ அரசின் 12 ஆண்டு கால ஆட்சியில் நான்கு கல்வி அமைச்சர்கள் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டுமே மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். அவர்தான் தர்மேந்திர பிரதான். பல தேர்வுத் தாள் கசிவு விவகாரங்கள் தொடர்பாக ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டங்கள் நீடித்து வந்த நிலையில், அவர் சனிக்கிழமை (ஜூலை 25) தனது பதவியை ராஜினாமா செய்தார். தர்மேந்திர பிரதான் சுமார் ஐந்து ஆண்டுகள் அமைச்சராகப் பணியாற்றினார். அவருக்கு முன் இருந்தவர்களின் பதவிக் காலம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஸ்மிருதி இரானி சுமார் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருந்தார்.  மேலும் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை சுமார் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். கல்வி அமைச்சராக இருந்த நீண்ட பதவிக் காலத்தில், பிரதான் தேசியக் கல்விக் கொள்கையை (NEP) ஆதரித்தார், தாய்மொழி மற்றும் பலமொழ...

எதிர்வரும். பேரிடர்.......

படம்
📌 தேர்வு சீர்திருத்தங்களை மேற்கொள்ள 6 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைத்தது ஒன்றிய அரசு. இனி தேர்வுகளின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும் என பிரதமர்  திட்டவட்டம். 📌 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதலாவது தங்கப் பதக்கம். பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று பெருமை சேர்த்த ஹாட்ரிக் தங்க மங்கை மீராபாய் சானு. 📌 காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு வெள்ளிப் பதக்கம். மற்றொரு போட்டியில் மணிப்பூரைச் சேர்ந்த ரிஷிகாந்த் சிங்கும் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல். 📌 சிவகாசி அருகே பட்டாசு வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு. போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 11 பேர் கைது. 📌 தண்ணீரின்றி வறண்ட நீர்நிலைகளால் கடலூர் மாவட்டத்தில் குறையும் நிலத்தடி நீர்மட்டம். செயற்கை செறிவூட்டும் முறையை பயன்படுத்தி நீர் ஆதாரத்தை பெருக்க கோரிக்கை. 📌 காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் மின்வெட்டு. காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் சாலை மறியல். 📌 தூத்துக்குடி அருக...