இடுகைகள்

ஒரு போட்டோ எடுக்க ரூ.6 கோடி.

படம்
◼️ மதுரையில் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் கொட்டித் தீர்த்த கனமழை. கர்டர் ரயில்வே தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியதால், போக்குவரத்து நிறுத்தம். ◼️ திங்கள் அல்லது செவ்வாய் முதல் கிராமப்புற ரேஷன் கடைகளிலும் வெங்காயம் விற்பனை. அடுத்த மாதம் முதல் கோதுமை மாவு பாக்கெட் விற்கப்படும் என்றும் அமைச்சர் வெங்கடரமணன் தகவல். ◼️ அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக தொடர விரும்பி இசக்கி சுப்பையா கடிதம் அளித்த விவகாரம். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேட்டி. ◼️ தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் கொலை. முதற்கட்டமாக இரண்டு பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை. ◼️ நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே பஞ்சாயத்து தலைவர் செங்கல்லால் அடித்துக் கொலை. தனது வீட்டிற்கு குடிநீர் வரவில்லை எனக் கூறி தாக்குதல் நடத்தியவர் கைது. ◼️ ஓசூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் லஞ்சம் வாங்கிய விவகாரம். கைதான இடைத்தரகரின் சேலம் வீட்டில் 6 கிலோ தங்கம், 27 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல். ◼️ டெல்லியில் ஏர் இந்தியா விமானம் தாழ்வாக பறந்து...

மானம்,மரியாதை இழந்து...!

படம்
மானம்,மரியாதை இழந்து...! கெஞ்சி கூத்தாடி ஆட்சியமைத்த விஜய் என்றும் மானம், மரியாதை இழந்து ஆதரவளித்த காங்கிரஸ் என்றும் முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.  தமிழ்நாடு முதல்வர் விஜய் பற்றி தற்போது வட மாநிலங்களிலும் அதிகளவு ரீல்ஸ் பரப்பப்படுகிறது. அடுத்த பிரதமர் வேட்பாளர் விஜய் என தவெகவினர் கூறி வருகின்றனர்.  இந்தசூழலில் முன்னாள் சபாநாயகர் அப்பாவு விஜய் அரசையும், தவெக கூட்டணி கட்சியினரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,  ”2026-ல் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததும் விசிக, CPI, CPM , IUML ஆகிய கட்சித் தலைவர்களையும் மற்றும் அதிமுகவில் ஒரு பிரிவு தலைவர் இல்லத்திற்கும் சென்று கெஞ்சி கூத்தாடி ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தவர் விஜய். ஆனால் காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தியையோ, தமிழ்நாடு கங்கிரஸ் தலைவரையோ நேரில் சந்தித்து ஆதரவு கேட்காத தற்குறி தவெகவு க்கு, மானம் மரியாதை இழந்து ஆதரவு கொடுத்து பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அவமானம் போதாது என்று, அடுத்த பிரதமர் விஜய் தான் என்று அமைச்சர் ஒருவர் சட்டமன்றத்தில் பேசிய போது சட்டமன்ற மேஜையை தட்...

மோ(ச)டி வித்தை

படம்
 📰 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப் 17 ராக்கெட். 18வது நிமிடத்தில் சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தம். 📰 கேள்விகளுக்கு திங்கள்கிழமை பதில் அளிப்பதாக கூறிவிட்டு அவையில் இருந்து வெளியே சென்ற முதலமைச்சர் விஜய். சட்டப்பேரவையில் இருந்து ஓடியது யார் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதாக உதயநிதி பதிலடி. 📰 டிவி சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என்பது போல் அமைச்சர்கள் பேரவையில் பதில். முதலமைச்சர் கவனிக்கும் துறைகளின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பது பற்றி உதயநிதி விமர்சனம். 📰 தவெக ஆட்சியில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. தனது தோட்டத்திலேயே மின் வயர்கள் திருடப்பட்டதாக புகார். 📰 காவல்துறை மானியக் கோரிக்கையில், எஸ்.ஐ. தேர்வு குறித்து தவறான தகவல். எழுத்துத் தேர்வு முடியாதநிலையில், உடல் தகுதித் தேர்வு முடிந்ததாக அறிவிப்பு. 📰 சென்னை மற்றும் புறநகரில் காற்றுடன் பெய்த கனமழை. மதுரையில் கொட்டித் தீர்த்த மழையால் வெள்ளக்காடாக மாறிய சாலைகள். 📰 தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதத்திலும் வாட்டி வதைக்கும் வெயில். அதிகபட்சமாக ...

ஓடிப் போவது யார்..!

படம்
  " 3நாள் டைம் தர்றேன், தயாராகி வாங்க!" - உதயநிதி இன்று சட்டமன்றத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை மற்றும் காவல்துறை மானிய கோரிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது தவெக அரசின் மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், ஒரு கட்டத்தில் முதலமைச்சருக்கு நேரடியாகச் சவால் விடுத்தார். "நான் கேட்கும் காரசாரமான கேள்விகளுக்கு எல்லாம் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, முதலமைச்சர் விஜய் அவர்கள் நன்றாக தயாராகி வர வேண்டும்; வரும் திங்கள்கிழமை இதற்கெல்லாம் அவர் முறையான பதிலுரையை வழங்க வேண்டும்" என பேசினார் உதயநிதி. உதயநிதி ஸ்டாலினின் இந்த சவாலுக்கு உடனடியாக மைக் பிடித்து பதிலடி கொடுத்தார் முதல்வர் விஜய். பேசுகையில், "எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் வரும் திங்கள்கிழமை நான் அவையில் விரிவாகவும், தெளிவாகவும் விளக்கமளிப்பேன். ஆனால், உங்கள் மூலமாக எதிர்க்கட்சியினரிடம் நான் ஒன்றை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். திங்கள்கிழமை நான் பதில் பேசும்போது அவையில் இருக்கும் யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது (வெளிநடப்பு செய்யக...

அரசுக்கு சிகப்பு எச்சரிக்கை

படம்
  தமிழகத்தின் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் மைனஸ் 1% குறைந்திருப்பது, மாநிலத்தின் வருவாய் இயந்திரத்துக்கு சிவப்பு எச்சரிக்கை” என முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “தமிழகத்தின் வருவாய் இயந்திரம் சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறது.  இதே நிலை தொடர்ந்தால், செலவுகளைக் குறைப்பதா, மேலும் கடன் வாங்குவதா என்ற கடினமான நிலைக்கு தமிழக அரசு விரைவில் தள்ளப்படலாம். ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி புள்ளிவிவரங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை.  2025 ஆகஸ்டில் ரூ.10,329 கோடியாக இருந்த தமிழகத்தின் ஜிஎஸ்டி வசூல், 2026 ஆகஸ்டில் ரூ.10,189 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது -1% (மைனஸ் 1) சரிவு.  ஆனால் இதே காலகட்டத்தில் ஒட்டு மொத்த, இந்தியா +9%, கர்நாடகா +13%, குஜராத் +15%, தெலங்கானா +16%, உத்தரப் பிரதேசம் +19%, மகாராஷ்டிரா +8%, தமிழகம் மட்டும் - 1% . சாதாரண மக்களுக்கு இந்த ஜிஎஸ்டி எண்ணைப் பற்றி ஏன் கவலை இருக்க வேண்டும். ? ஏனென்றால், தமிழக அரசின் சொந்த வரி வருவாயில் சுமார் 38% எஸ்ஜிஎஸ்டி மூலமாக மட்டுமே வருகிறது.  வளர்ச்சிப் பணிகளுக...