இடுகைகள்

மூன்றே மாதத்தில்..

படம்
 தமிழ்நாட்டில் பதவியேற்ற மூன்று மாதங்களில் த.வெ.க. அரசு பல்வேறு திட்டங்களுக்காக, 20 ஆயிரத்து 881 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றாததற்கு முந்தைய அரசு கடன் வாங்கியதை காரணம் காட்டிய விஜய், தற்போது வாங்கியுள்ள கடன் தொகைக்கு என்னப் பதில் சொல்லப்போகிறார் என கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசுக்கு, மாநில சரக்கு மற்றும் சேவை வரி, முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம், விற்பனை மற்றும் வர்த்தகம் மீதான வரி என, பல வகையில் வருவாய் கிடைக்கிறது. அரசு பணியாளர்கள் சம்பளம், ஓய்வூதியம், கடனுக்கான வட்டி போன்றவற்றுக்காக செலவு செய்யப்படுகிறது. வரவை விட, செலவு அதிகம் இருப்பதால், கடன் பத்திரங்கள் விற்பனை, வங்கிகள் போன்றவற்றில் கடன்கள் வாங்கப்படுகின்றன. இவற்றில், கடன் பத்திரங்கள் விற்பனை வாயிலாக பெறப்படும் கடன்தான் அதிகம். இவ்வாறு வாங்கப்படும் கடன்களில், சாலை அமைத்தல், பாலம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை, அரசு மேற்கொள்கிறது. இந்த நோக்கங்களுக்காகவே முந்தைய தி.மு.க. அரசு கடன் வாங்கியது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையில...

கரூர் விஜய் அரசு வேலை.ரத்து!

படம்
பா.ஜ.க ஆட்சியில் கல்வி அமைச்சர்களும் , பதவிக்காலமும் ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' ஆகிய மூவரும் முந்தைய மோடி ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சர்களாகக் குறுகிய காலம் பணியாற்றியுள்ளனர். என். டி. ஏ அரசின் 12 ஆண்டு கால ஆட்சியில் நான்கு கல்வி அமைச்சர்கள் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டுமே மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். அவர்தான் தர்மேந்திர பிரதான். பல தேர்வுத் தாள் கசிவு விவகாரங்கள் தொடர்பாக ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டங்கள் நீடித்து வந்த நிலையில், அவர் சனிக்கிழமை (ஜூலை 25) தனது பதவியை ராஜினாமா செய்தார். தர்மேந்திர பிரதான் சுமார் ஐந்து ஆண்டுகள் அமைச்சராகப் பணியாற்றினார். அவருக்கு முன் இருந்தவர்களின் பதவிக் காலம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஸ்மிருதி இரானி சுமார் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருந்தார்.  மேலும் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை சுமார் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். கல்வி அமைச்சராக இருந்த நீண்ட பதவிக் காலத்தில், பிரதான் தேசியக் கல்விக் கொள்கையை (NEP) ஆதரித்தார், தாய்மொழி மற்றும் பலமொழ...

எதிர்வரும். பேரிடர்.......

படம்
📌 தேர்வு சீர்திருத்தங்களை மேற்கொள்ள 6 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைத்தது ஒன்றிய அரசு. இனி தேர்வுகளின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும் என பிரதமர்  திட்டவட்டம். 📌 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதலாவது தங்கப் பதக்கம். பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று பெருமை சேர்த்த ஹாட்ரிக் தங்க மங்கை மீராபாய் சானு. 📌 காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு வெள்ளிப் பதக்கம். மற்றொரு போட்டியில் மணிப்பூரைச் சேர்ந்த ரிஷிகாந்த் சிங்கும் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல். 📌 சிவகாசி அருகே பட்டாசு வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு. போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 11 பேர் கைது. 📌 தண்ணீரின்றி வறண்ட நீர்நிலைகளால் கடலூர் மாவட்டத்தில் குறையும் நிலத்தடி நீர்மட்டம். செயற்கை செறிவூட்டும் முறையை பயன்படுத்தி நீர் ஆதாரத்தை பெருக்க கோரிக்கை. 📌 காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் மின்வெட்டு. காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் சாலை மறியல். 📌 தூத்துக்குடி அருக...

மூன்று மாத்ததிலே வாங்கியக் கடன்.!

படம்
  தமிழக அரசின் நிதி நிலைமை மற்றும் கடன் சுமை குறித்த புதிய அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.  நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே தமிழக அரசு வாங்கியுள்ள கடன்களும், அதற்காகச் செலுத்தியுள்ள வட்டித் தொகையும் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் மொத்தக் கடன் சுமை சுமார் 10 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ள நிலையில், தற்போதைய புதிய புள்ளிவிவரங்கள் மாநிலத்தின் நிதி நெருக்கடியை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் மூன்று மாதங்களில் மட்டும், பல்வேறு மூலதன திட்டங்களுக்காகத் தமிழக அரசு இருபதாயிரத்து எண்ணூற்று எண்பத்தொன்று (20,881) கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.  அதுவும் தேர்தல் நடை முறை ஏப்ரலில் அமுலுக்கு வந்து தேர்தலுக்குப்பின்  த.வெ.க. ஆட்சி மே-10'ல் அமைந்த பின்  அரசு வாங்கியது மாநிலத்தின் உள்கட்டமைப்புப் பணிகளான சாலை அமைத்தல் மற்றும் பாலங்கள் கட்டுதல் போன்ற தேவைகளுக்காக இந்தக் கடன்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு சொந்த வ...

மாநில மொழிக்குஎதிரான அத்துமீறல்!

படம்
  தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடமா? . பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தை மூன் றாவது இடத்திற்கு தள்ளியிருக்கும், ஆளுநர் அர்லேகரின் அடாவடி. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-ஆவது பட்டமளிப்பு விழா, ஜூலை 28 அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ் வில் தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்கிறார். எனவே, இந்நிகழ்வில் முதலில் வந்தே மாதரம், அதன் பிறகு தேசிய கீதம், மூன் றாவதாகவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்று ஆளுநர் அலு வலகத்திலிருந்து சுற்றறிக்கை வந்துள் ளதாகவும், அதன்படியே இந்நிகழ்ச்சி நடைபெறும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.சந்திரசேகர் தெரி வித்துள்ளதை ஏற்க முடியாது. இது மாநில உரிமை மற்றும் மாநில மொழி யின் மீது நடைபெறுகிற அத்துமீறலா கும்  ஆளுநர் தமிழ்நாடு கொடுக்கின்ற சம்பளம் வாங்கும் ஒன்றிய அரசால் நியமனம் செய்யப்பட்டவர் மட்டுமே.. மனோன்மணியம் சுந்தரனாருக்கு இழைக்கப்படும் அவமதிப்பு. ஆளுநர் பங்கேற்கிறார் என்பதற்கா கவே ஒரு மாநிலத்தின் பாடலை பின் வரி சைக்கு தள்ளுவது ஏற்புடையதல்ல. மாநில அரசின் கீழ் செயல்படும் ஒரு பல்கலைக்கழகத்தில் மாநிலப் பாட...

குற்றமே. இல்லை...

படம்
 📌 முதல் முறையாக போராட்டங்களுக்கு பணிந்து மோடி அமைச்சரவையில் ஒருவர் ராஜினாமா. மாதக்கணக்கில் நடந்த போராட்டங்களை கண்டுகொள்ளாத மோடி அரசு, இளைஞர்கள் எழுச்சியால் பின்வாங்கியது. 📌 நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று பிரதான் ராஜினாமா செய்ததை அடுத்து, போராட்ட களத்தில் கொண்டாட்டம். ஒன்றிய அமைச்சர்களின் பேச்சுவார்த்தையை அடுத்து, ஒரு மாதத்திற்கு மேல் நீடித்த சிஜேபி போராட்டம் வாபஸ். 📌 நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம். மாணவர்களின் நலனுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு இருப்பதாகக் கூறி கண்டன முழக்கம். 📌 வீதிகளிலும், இணையத்திலும் போராடி இளைஞர்கள் வெற்றி பெற்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. வேளாண் சட்டங்களைப் போல, நீட் ஒழிப்பையும் உறுதி செய்வோம் என திட்டவட்டம். 📌 தர்மேந்திர பிரதான் ராஜினாமாவிற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு.  📌 நீட் வினாத்தாள் கசிவு மாணவர்களுக்கு சாதகமாக அமைந்ததாக நிர்மலா சீதாராமன் சர்ச்சைக் கருத்து. இன்னும் அதிகமாகப்படித்து,செயல்திறனைமேம்படுத்திக்கொண்டதாக சில மாணவர்கள் கூறியதாக பேட்டி. ?...