இடுகைகள்

நன்றி மறப்பது நன்றன்று...!

படம்
  தி.மு.க.வும் இசுலாமியர்களும் ! இசு­லா­மி­யர்­களை தி.மு.க. கொச்­சைப்­ப­டுத்­தி­விட்­ட­தாக த.வெ.க. உறுப்­பி­னர் ஒரு­வர் சட்­ட­மன்­றத்­தில் பேசி, அதற்கு கடு­மை­யான எதிர்ப்பு கிளம்­பி­ய­தும் அதைத் திசை திருப்­பு­வ­தற்­காக அழு­தும் நாட­கம் நடத்தி இருக்­கி­றார்.  இவை அனைத்­தும் சபை மாண்­புக்கு இழுக்கு ஏற்­ப­டுத்­தும் காட்­சி­க­ளாக உள்­ளன. இசு­லா­மிய மக்­க­ளுக்கு திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும், கழக அர­சு­க­ளும், தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞ­ரும், இன்­றைய தலை­வர் திரா­விட மாடல் நாய­கன் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஆற்­றிய பணி­களை இசு­லா­மிய மக்­கள் மறக்க மாட்­டார்­கள்.  என்­றைக்­கும் அவர்­கள் நன்­றிப் பெருக்­கு­டன் இருக்­கக் கூடி­ய­வர்­கள். சில­ரைப் போல கூலிக்கு விலை போகக் கூடி­ய­வர்­கள் அல்ல. தமிழ்­நாட்­டின் மிகப்­பெ­ரிய அர­சி­யல் மாற்­றத்தை 1967 ஆம் ஆண்டு சட்­ட­ச­பைத் தேர்­த­லில் உரு­வாக்­கி­யது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். அந்த மாற்­றத்தை உரு­வாக்­கி­ய­வர் பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள்.  அவ­ருக்­குத் தோள் கொடுத்து நின்­ற­வர் கண்­ணி­யத்­துக்­கு­ரிய காயிதே மில்­லத். 1972 ஆம் ஆண்டு...

இயற்கைப் பேரிடர்.,!

படம்
▪️ நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 389 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 1,000 பேரை தேடும் பணி தீவிரம். ▪️ 72 மணி நேரத்துக்குள் நேபாளத்தில் மீண்டும் ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு என சீனா எச்சரிக்கை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம். ▪️ பெருவெள்ளத்தில் சிக்கிய 290 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என தகவல். 200 இந்தியர்கள் சீன எல்லையில் சிக்கித் தவிப்பு. ▪️ வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை தகவல். எஞ்சியவர்களை விரைந்து மீட்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை. ▪️ நேற்று அமைச்சர்களின் பதிலுரை இல்லாமலேயே சட்டப்பேரவை நிறைவு. பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி துறைகளின் அமைச்சர்கள் இன்று பதிலுரை. ▪️ பேரவையில் ஆதவ் அர்ஜூனா பேசினாலே சண்டையாக மாறிவிடுகிறது என பிரேமலதா விமர்சனம். கூட்டத் தொடர் முடியும் வரை பேச அனுமதிக்கக்கூடாது என சபாநாயகரிடம் வலியுறுத்தல். ▪️ சென்னை ரிப்பன் மாளிகையில் விசில் அடித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம். முதல்வர் விஜய்யை சந்திக்கும் வரை போராட்டம் வாபஸ் பெற மாட்டாது என திட்டவட்டம். ▪️ பெருந்தலைவ...

நேபாள பேரிடர்...,...!

படம்
  ஆகஸ்ட் 25ஆம் தேதி வரலாற்றில் இல்லாத அளவில் 9 மணி நேரம் 43 நிமிடங்கள் இடைவெளி இல்லாமல் அவை நடைபெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக நொடி கூட நேரலை துண்டிக்கப்படாமல் ஒளிபரப்பு செய்யப்படுவது கவனம் ஈர்த்துள்ளது. ஒத்துழைப்பு கொடுத்த உறுப்பினர்களுக்கு நன்றி என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.  ஆதவ்  பேச ஆரம்பிக்கும்வரை அவை நல்லாதான் போகுது- பிரேமலதா விஜயகாந்த் நான் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் நேரடியாக சொல்லிவிட்டேன்; அவை அமைதியாக போய்க் கொண்டிருக்கிற போது அவர் பேச எழுந்தவுடன்  சண்டைக்கு மாறிவிடுகிறது என்று உரிமையுடன் கூறிவிட்டேன். மக்களுக்காக மக்கள் பிரச்னையைப் பற்றி பேச நாங்கள் புள்ளி விவரத்துடன் வருகிறோம்; ஆனால் ஏறக்குறைய ஒரு மணி நேரம்தான் மக்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால் மீதி நேரம் முழுவதும் சண்டைதான் போய்க்கொண்டிருக்கிறது என பிரேமலதா விஜயகாந்த் அவையில் ஆதவை தாக்கி பேசியுள்ளார்.  படுத்துக்கிட்டும போத்திக்கலாம் சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாத நடைமுறைகள் குறித்து எழுந்த காரசாரமான விவாதத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, "இன்று காலையிலிருந...

இந்தியா பாவம்!

படம்
  ▪️ நேபாளத்தில் பனிப்பாறைகள் உருகியதால், கோர தாண்டவமாடிய பெருவௌ்ளம். வீடுகள், சாலைகள், பாலங்கள் என அனைத்தையும் வாரி சுருட்டிச் சென்றதால் அதிர்ச்சி. ▪️பெருவௌ்ளத்தில் இருந்து தப்பித்து வீடுகளின் மேற்கூரைகளில் தஞ்சமடைந்த மக்கள். ஹெலிகாப்டர்களில் சென்று பொதுமக்களை பத்திரமாக மீட்டது நேபாள ராணுவம். ▪️நேபாளம் வெள்ள பாதிப்பில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. 700-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம். ▪️மேட்டூர் அணையை செப்டம்பர் 1-முதல். 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு... ▪️பணி நிரந்தரம் கோரி ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு. ▪️நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் குறித்து அறிவதற்கான உதவி எண்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு. தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல். அடுத்த பிரதமர்? 2 029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தென்னிந்திய மாநிலங்களில் 60 எம்.பி.க்கள் இடங்களைக் கைப்பற்றும்; முதல்வர் விஜய், நாட்டின் பிரதமராக உருவெடுப்பார் என்று விஜய்யின் அரசவை சோ திடர் ரிக்கி ராதன் ப...