இடுகைகள்

டெல்லி செல்லும் பின்னணி

படம்
எடப்பாடி  பழனிசாமி டெல்லி செல்லும் பின்னணி ! தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரை இன்னும் எந்த கூட்டணி கட்சிக்கும் தொகுதிகளை பிரித்து கொடுக்கவில்லை. விரைவில் தொகுதி பங்கீடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாலும், கூட்டணிக்குள் தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்தசூழலில் இன்று (மார்ச் 19) சென்னை வந்து எடப்பாடியை சந்தித்து பேச இருந்தார் பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல். ஆனால், மாறாக டெல்லி சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அவர் டெல்லி செல்வது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் பியூஸ் கோயல் தரப்பில் விசாரித்தபோது, “தமிழகத்தில் கூட்டணி தொடர்பாக ஈபிஎஸிடம் பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால் பியூஸ் கோயல் திடீ...

விலை ஏன் குறைகிறது?

படம்
  வேலை இல்லா வல்லரசு! இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பெரும் பொருளாதாரம் என்று ஒரு புறம் பெரு மிதப்படுகிறோம்.  ஆனால் மறுபுறம் அந்தப் பெருமிதத்தின் கீழே, ஆழத்தில், ஒரு கசப்பான உண்மை நெளிவது கண்முன் தெரி கிறது.  இந்தக் கொடும் முரண்பாட்டை  அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ‘இந்தியப் பணிச் சூழல் அறிக்கை 2026’ அம்பலப் படுத்தியிருக்கிறது. இந்தியாவின் 20 முதல் 29 வயதிற்குட்பட்ட 6 கோடியே 30 லட்சம் பட்டதாரிகளில், 1 கோடியே 10 லட்சம் பேர் முழுமையாக வேலை யில்லாமல் தவிக்கிறார்கள்.    இதில் மிகவும் கவலையளிக்கும் அம்சம் என்னவென்றால், பட்டம் முடித்த ஓராண்டுக்குள் நிரந்தரமான சம்ப ளம் வாங்கும் வேலையில் சேருபவர்கள் வெறும் 7 சதவிகிதம் பேர் மட்டுமே.  மீதமுள்ள 93 சதவிகி தம் இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் தற்காலிக வேலைகளிலும், தகு திக்குக் குறைவான பணிகளிலும், உணவு விநி யோகம் போன்ற நிச்சயமற்ற வாழ்வாதாரங்க ளிலும் தள்ளப்படுகிறார்கள்.  ஒரு பொறியியல் பட்டதாரி உணவு விநியோகம் செய்வது என்பது அந்தத் தனிநபரின் தோல்வி அல்ல; அது அந்த நாட்டின் அறிவுசார் மூலதனத்தை  முறையா...

இந்தியா ஆபத்து?

படம்
   ஏற்பட்டுள்ள பேராபத்து இந்தியா என்ற சிந்தனையோட்டம் என்பது, சாவர்க்கரின் இந்துத்துவ சித்தாந்தத்தினால் பின்னப்பட்ட புனைகதைகளால் உருவாக்கப் பட்டது அல்ல.  மாறாக, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை அகற்றுவதற்காகத் தேசிய சுதந்திரப் போராட்டத்தில் சிந்தப்பட்ட இரத்தம் மற்றும் வியர்வை யினால் இது வடிவமைக்கப்பட்டது. இந்தச் சிந்தனை யோட்டமே, 1950 ஜனவரி 26 அன்று அரசமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படைத் தூண்களுக்கு வலுவான அஸ்திவாரமாக அமைந்தது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகள் பொருளாதார மற்றும் அரசியல் இறையாண்மை மற்றும் காலனித்துவ நீக்கத்தை நோக்கிய பயணம் ஆகியவை சுதந்திரப் போராட்டத்தின் தர்க்கரீதியான தொடர்ச்சியாகும்.  இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும்; அது மக்கள் தங்கள் விருப்ப மான நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கான சுதந்தி ரத்தையும் சமத்துவத்தையும் அங்கீகரிக்க வேண்டுமே  தவிர, குறிப்பிட்ட பிரிவினரைத் திருப்திப்படுத்துவ தற்காக அல்ல.  அதேபோல், அது ஜனநாயகமாக இருக்க வேண்டும்; ஜனநாயகம் இல்லாமல் சமூகத்தில் நலிந்தவர்களுக்கும் அதிகாரம் பெற்ற வர்களுக்கும் இடையிலான இடைவெளியையும், செல...

ஈரான்-அமெரிக்கா கள( நில)வரம்

படம்
தென் மாவட்டங்களில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல். போடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த ஓ.பன்னீர்செல்வமும் இன்றைய நேர்காணலில் பங்கேற்பு. தி.மு.க - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை. இன்றே உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பு. ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜினாமா. ஈரானால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதால் போரை ஆதரிக்க முடியாது என ஜோசப் கென்ட் கருத்து. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் லெபனானில் இதுவரை 111 குழந்தைகள் உட்பட 912 பேர் உயிரிழப்பு. லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் போர்க்குற்றம் என ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு கண்டனம். தனக்கு நடிகை நயன்தாரா வேண்டும் என்று சி.வி.சண்முகம் அநாகரீக பேச்சு. பெண்களுக்கு பாதுகாப்பு கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சை கருத்து. சி.வி.சண்முகத்தை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் சர்ச்சை பேச்சு. திமுக சார்பில் பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி ஆபாசமாக பேசிய...