இடுகைகள்

கனமழை தொடரும்!

படம்
  18 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் தகவல் வேலூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிாி, திருப்பத்தூா், திருவண்ணாமலை, தருமபுாி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூா், கரூா், திண்டுக்கல், தேனி, நீலகிாி, கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் வரும் ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வள்ளுவரை அவமதிக்கும் செயல் சி.பி.எம் சண்முகம் கண்டனம் திருவள்ளுவரை சனாதனி என வரையறுக்கும் ஆளுநரின் கருத்து கடும் கண்டனத்திற்கு உரியது. எம்மதத்தையும் சாராதவரை காவி உடை தரித்தவராக உருவகப்படுத்துவது வள்ளுவரை அவமதிக்கும் செயல் என சி.பி.எம் மாநில செயலர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா? மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 79 அடியாகக் குறைந்து சரிந்துள்ளதன் காரணமாக, இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுமா என்ற பலத்த சந்தேகம் டெல்டா பகுதி விவசாயிகளிடையே எழுந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் குறுவை சாகுபடிப் பணிகளைத் தடையின்றி மேற்கொள்வதற்...

சென்றார்!வந்தார்!

படம்
🔹  ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் படத்திற்கு மீண்டும் காவிச்சாயம் பூசப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு.. இந்த விவகாரத்திலும்  விஜய் பயந்து நடுங்கக் கூடாது என உதயநிதி ஸ்டாலின் கண்டனம். 🔹 சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள், 3 மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம். ஆளுநரின் முதன்மைச் செயலாளராக இருந்த கிர்லோஸ்குமாரும் இடமாற்றம். 🔹 திமுகவின் எதிர்காலம் நம்பிக்கை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் உறுதி. GenZ தலைமுறையினர் சந்திப்பு கூட்டத்தை பதிவிட்டு நெகிழ்ச்சி. 🔹 அபிஷேக் பானர்ஜி மீது பாஜக திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு. சிகிச்சை அளிக்கக் கூடாது என மருத்துவமனைகளுக்கும் அழுத்தம் கொடுத்ததாக மம்தா பரபரப்பு புகார். 🔹 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி மீது பாஜக ஆதரவாளர்கள் தாக்குதல். கற்கள், முட்டைகளை வீசி கடுமையாக தாக்கியதால் பலத்த காயம். 🔹 அடுத்த 4 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணிப்பு. 🔹 சென்னையில் டெலிவரி ஊழியரை கடுமையாக தாக்கிய ஓட்டல் ...

சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!

படம்
 * கையால் ஆகாத ஒரு @@@@ ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு* பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! , சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாகத் திட்டமிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு விஜய் தலைமையிலான அரசு முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில், தற்போது அங்கு கைப்பற்றப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கட்டுவதற்கான பேச்சுவாத்தை நடப்பதாகவும், அதேவேளையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் எவ்விதமான முடிவும் எடுக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சொன்ன நோ, வெறும் ஒரு விமான நிலையத்தோடு மட்டும் முடிவடையாமல், அதனைச் சுற்றி திட்டமிட்டு இருந்த சுமார் 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மெகா உள்கட்டமைப்புத் திட்டங்களையும், 1 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் என மொத்தமாகப் பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. சீட்டுக்கட்டுப்போல் சரியும் திட்டங்கள் பரந்தூர் திட்டத்தை மையமாகக் கொண்டு சென்னைக்கு மேற்கே உருவாக்கப்படவிருந்த பிரம்மாண்ட...

அறிக்கை என்னாச்சு?

படம்
🔹 சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கோடை மழை. பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலைக்குப் பிறகு மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி. 🔹 தமிழ்நாட்டில் நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்ததால், சிரமம் அடைந்த மக்கள். அதிகபட்சமாக திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. 🔹 தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இரவில் மின் வெட்டு தொடருவதால், மக்கள் போராட்டம். புதுக்கோட்டை அரசு அலுவலகத்தில் அமைச்சர் முகமது பர்வேஸ் ஆய்வின்போதே மின்வெட்டு ஏற்பட்டதால் பரபரப்பு. 🔹 தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம். தற்போதைய டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம். 🔹 தென்காசி, நெல்லை மாவட்டத்தின் இருவேறு பகுதிகளில், தெருக்களில் நின்ற மக்களை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல். இருசக்கர வாகனங்களில் வந்து அட்டூழியத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலா என அறிய, 4 பேரைஹப் பிடித்து போலீஸ் விசாரணை. 🔹 டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் முடிந்து கடைகள் திறக்கப்பட்டதால் அலைமோதிய கூட்டம். தனியார் பார்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் வாங்கியதாக மதுகுடிப...