எரிகிறது...
எரிகிறது... வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளை விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. சிலிண்டருக்கு ரூ.29 உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் கடந்த மூன்று மாதத்தில் சிலிண்டர் விலை ரூ.89 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.957.50 ஆகவும், வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.3,283 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. போர்ச்சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று ஒன்றிய அரசு நியாயப்படுத்துகிறது. ஆனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் பீப்பாய் 108 டாலருக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது சுமார் 15 டாலர் குறைந்துள்ளது. ஆனால் சர்வதேசச் சந்தை நிலவரத்தை காரணம் காட்டி தொடர்ச்சியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படுவது அநியாயமாகும். ஒன்றிய ஆட்சியாளர்கள் வேறொரு விநோ தமான காரணத்தையும் முன் வைக்கின்றனர். 5 மாநில சட்டமன்றத் தேர்தல் காரணமாக எரி பொருள் மற்றும் சமையல் எரிவா...