இடுகைகள்

நீதிமன்றம் வாங்க!

படம்
ஆதாரத்துடன் நீதிமன்றம்  வாங்க!   கடந்த திமுக ஆட்சியில் மொத்தம் உள்ள 32 துறைகளில் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் மருமகனுமான சபரீசனும் தலா 16 துறைகள் எனப் பிரித்துக் கொண்டு ஊழல் செய்து பணம் வசூலித்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அண்மையில்  பேசியிருந்தார். அதேபோன்று, திமுக ஆட்சிக்காலத்தில் மின் கட்டண உயர்வு மூலம் கிடைத்த வருவாயால் பயனடைந்தது சபரீசனா அல்லது முதல்வரின் குடும்பத்தினரா என்ற கேள்வியை எழுப்பியதுடன், திமுக – அதிமுக இணைந்து செயல்படுவதாகவும் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் விமர்சனம் செய்திருந்தார்.  இந்நிலையில் சபரீசன், தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகிய இருவரும் அவதூறு கருத்துக்களைப் பரப்பியதாக வழக்கறிஞர் மூலம் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.  அதாவது கடந்த சில தினங்களாக ஊடகங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளில் தம்மைக் குறித்து உள்நோக்கத்துடன், உண்மைக்கு மாறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்த இரு அமைச்சர்களும் தொடர்ந்து கூறி வருவதாக சபரீசன் தர...

அதானிக்கு காலக்கெடு

படம்
நண்பர்களுக்கு தலைமைச் செயலகத்தில் தனி அறை! ரகசிய கூட்டங்களில் கலந்து கொள்வது ஏன்? வில்சன் கேள்வி ஜான் ஆரோக்கிய சாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் அரசு ஊழியர்கள் இல்லை என்றால், ரகசிய ஆவணங்கள் பரிமாறப்படும் மிக ரகசியமான கூட்டங்களில் அவர்கள் எந்தத் தகுதியின் அடிப்படையில் கலந்து கொள்கிறார்கள்? என்று தி.மு.க எம்.பி வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார். த.வெ.க அரசு தனது நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அரசு பதவிகளை வழங்குவதாக கருத்து பரவி வருகிறது. முன்னதாக, முதல்வர் விஜயின் அரசியல் ஆலோசகராக ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியானபோது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து அந்த நியமனத்துக்கான அரசாணை திரும்பப் பெறப்பட்டது. அதேபோல், சமீபத்தில் முதல்வரின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அரசாணை மே 12-ஆம் தேதி தேதியிடப்பட்டிருந்த நிலையில், சுமார் 40 நாட்களுக்குப் பின்னரே அது பொதுவெளியில் வெளியானது விவாதத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, தயாரிப்பாளர் வெங்கட் ரமணா டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இந்தச் சூ...

பச்சோந்தியே கேளுடா..வச்சேன் குறி நானுடா

படம்
  மதிமுக தற்போது திமுகவுடனான தங்களது கூட்டணியை முறித்துக்கொண்டது. கடந்த பத்து வருடங்களாக திமுக கூட்டணியில் தொடர்ந்து வந்த வைகோவின் மதிமுக தற்போது கூட்டணியை முறித்துக்கொள்வதாக அறிவித்து இருக்கின்றனர்.  திமுக கூட்டணியில் இருந்து விலகி மதிமுக தவெகவிற்கு செல்ல இருப்பதாகவும் தெரிகின்றது. வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தவெகவுடன் தோழமையாக இருந்து செயல்படுவோம் என வைகோ அறிவித்து இருக்கின்றார். மேலும் முதலமைச்சர் விஜய்யை சந்தித்தது குறித்தும், மதிமுகவின் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யும் பட்சத்தில் அவர்களை வெற்றிபெற செய்வது என பொறுப்பு என அவர் உத்தரவாதம் கொடுத்தது குறித்தும் பேசியிருக்கிறார் வைகோ.  மேலும் மதிமுக வேட்பாளர்களுக்காக தான் பரப்புரை செய்ய இருப்பதாகவும் வைகோவிடம் முதலமைச்சர் விஜய் தெரிவித்தாராம். இதையெல்லாம் வைகோசெய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் திமுகஉடனான கூட்டணியை முறித்துக்கொண்டதற்கான காரணம் குறித்து வைகோ பேசினார்.  சமீபத்தில் முக ஸ்டாலினை ஒரு விழாவில் சந்தித்ததாகவும் ஆனால் அவர் என்னிடம் பேசவில்லை எனவும் தெரிவித்தார் வைகோ. இந்நிலையில...

*'கே.பாக்யராஜ்'

படம்
  பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73.  தமிழ்த் திரையுலகில், தமது தனித்துவ திரைக்கதை பாணியால் வெகுவாக ஈர்த்தவரும், நகைச்சுவை, சென்டிமென்ட் கூடிய நடிப்பாற்றலால், தமிழ் ரசிகர்களை மகிழ்வித்தவருமான பாக்யராஜின் இழப்பு, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்திற்கு, மாபெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரைத்துறை மீது கொண்ட பேரார்வம் காரணமாக இயக்குநர்கள் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பாக்யராஜ் பணியாற்றினார்.  கடந்த 1977ஆம் ஆண்டில், தனது திரைப்பயணத்தை பாக்யராஜ் தொடங்கினார். இவரது பயணத்தில், இயக்குநர் இமயம் பாரதிராஜா உடன் ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் பணியாற்றியது, ஒரு மைல்கல்லாக மாறியது.  கமல், ஸ்ரீதேவி ,ரஜினி மட்டுமின்றி, இந்த படம் பாக்யராஜ் வாழ்விலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. சில நிமிட காட்சியில் பாக்யராஜ் யாரென்றே தெரியாத நிலையில், திரையில் தோன்றினாலும், இன்றும் காட்டிக் கொடுத்து விடுகிறது அவரது குரல்… ‘கிழக்கே போகும் ரயில்’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பாக்யராஜ் பணியாற்றி...

பித்தலாட்டம்-3

படம்
🔹 கர்நாடகாவைச் சேர்ந்தவரை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிப்பதா? காவிரி பிரச்சினைக்கு எப்படி தீர்வு கிடைக்கும் தமிழ்நாட்டில் தவெகவில் வேறு தமிழர்களே கிடைக்கவில்லையா?என த.வெ.க. அரசுக்கு தலைவர்கள் கண்டனம். 🔹மாணவர்களுக்கு சாதி விவரம் அடங்கிய அடையாள அட்டை வழங்கப்படும் என செங்கோட்டையன் பேட்டி. சாதி அடையாளத்தை ஊக்குவிக்கும் கருத்து என தங்கம் தென்னரசு கண்டனம். 🔹சரக்கு கப்பல்கள் மீதான ஈரானின் டிரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா பதில் தாக்குதல். தங்கள் ஏவுகணைத் தளங்கள் மீதான தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி. வெனிசுலா நிலநடுக்கம்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 920ஆக உயர்வு. பரிசு பொருளுடன் காத்திருந்து... காத்திருந்து... காலங்கள் போகுதடி தவெகவில் சேர பனையூர் கேட்டில் தவம் கிடக்கும் விஜயபாஸ்கர், நாள் பயணமாக இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர் டகாய்ச்சி. ராமர் கோயில் காணிக்கை முறைகேடு உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த காங். கோரிக்கை. அமைச்சருக்கும்-அமைச்சருக்கும் சண்டை மாட்டிக்கிட்டு முழிக்கும் அரசு அதிகாரிகள்: மேடையிலேயே ஜெகதீஸ்வரி-கீர்த்தனா மோதல்,டோஸ் கலெக்டர் சமாதானம். ...

சீர்காழி வைகோவிற்கு தந்த ஆப்பு !

படம்
  வைகோ-விற்கு ஆப்பு. கொடுத்த சீர்காழி எம்எல்ஏ சென்னையில் வைகோ தலைமையில் நடைபெற்ற மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப. செந்தில் செல்வன் பங்கேற்கவில்லை.  இதற்கான காரணம் கேட்ட போது, அவர் கட்சியின் உயர்நிலைக் குழுவில் உறுப்பினராக இல்லாததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று மதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இதறலு மறுப்பு தெரிவித்துள்ள எம்எல்ஏ செந்தில் செல்வன், "நான் ஏற்கனவே மதிமுகவிலிருந்து விலகி தற்போது திமுக உறுப்பினராக உள்ளேன்". ஏற்கனவே முழுமையாக திமுக-வில் இணைந்து விட்டதால் மதிமுக கூட்டத்தில் பங்கேற்கத் தேவையில்லை என விளக்கம் கொடுத்து உள்ளார்.  இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதிமுக தலைமை திமுக கூட்டணியில் இருந்து விலகி, ஆளுக்கு கட்சியாக உள்ள தவெக-விற்கு ஆதரவளிக்க திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டு வென்றனர்.  கூட்டணி மாற திட்டமிட்டு வருவதால் தங்கள் கட்சி வேட்பாளர்களாக களமிறங்கி வ...