மேலே இருக்கிறவன்…?
எ ல்லாத்தையும் மேல இருக்குறவனே பார்த்துக்குவான்னு சொன்னா எப்படி? கீழ இருக்குறவனுக்கு எதையாவது ஒப்படைங்கடாங்கிற கவுண்டமனி காமெடி மாதிரி, அதிமுக கூட்டணி விவகாரம், தொகுதிப்பங்கீடு உள்ளிட்ட எல்லாவறையும் பாஜக டெல்லி மேலிடம் கவனித்துக்கொண்டாலும், யாருக்கு எத்தனை சீட்? யாருக்கு எந்தெந்த தொகுதிகள்? என்கிற விபரத்தை அறிவிக்கும் வாய்ப்பையாவது பெற்றார் எடப்பாடி பழனிசாமி. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமாகாவுக்கு 5, ஐஜேகேவுக்கு 2, புரட்சி பாரதத்திற்கு 1, தமமுகவுக்கு 1 என்று அறிவித்த பழனிசாமி, இத்தனை இடங்கள் போக மீதமிருக்கும் இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது என்று அறிவித்தார். பல கட்டமாக டெல்லி சென்று அங்கே முட்டிமோதி பலரும் தொகுதிப்பங்கீடு செய்து கொண்டு முடிவானதைத்தான் அறிவித்தார். ஆனால், திமுகவில் தொகுதிப்பங்கீடு இழுபறியில் இருக்கிறது. அதிமுக கூட்டணியில் ஒரே நாளில் தொகுதிப்பங்கீடு முடிந்துவிட்டது பாருங்கள் என்று சிரித்தார். உண்மை அதுவல்ல என்பதால் அவரது கட்சியினரே அந்த சிரிப்பை ரசித்திருக்க மாட்டார்கள். டெல்லி ...