இடுகைகள்

ஊழல்-மோசடி குற்றவாளி

படம்
  ஊழல் - மோசடிக் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்  மதுரை மாநகர காவல் ஆணையரா? பல்வேறு முறைகேடுகள், குற்றச்சாட்டுக் களில் சம்பந்தப்பட்டுள்ள அபிஷேக் தீட்சித்தை, மதுரை மாநகர காவல் ஆணையராக நியமித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்யவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாகவும், சட்ட விரோதமாகவும் “கந்தன் முருகன் வாக்கு” என்ற காணொளியை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளவர்களை கண்டறிந்து உரிய நட வடிக்கை எடுக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தியுள்ளது.   இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.  சண்முகம் சார்பில் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ. ஆறுமுக நயினார், வெ. ராஜசேகரன் மற்றும் மூத்த தலைவர் ப. சுந்தர்ராசன் ஆகியோர், தமிழக  தலைமை தேர்தல் அதிகாரியைச் சந்தித்து, நேரில்  வலியுறுத்தியதுடன், எழுத்துப்பூர்வமான புகார் மனுவை அளித்து முறையிட்டனர்.  அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் ஒரு சில  மாவட்ட ஆட்ச...

தேர்தல் நி(க)லவரம்.

படம்
₹ சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சியான அ.இ.பு.த.ம.மு கழகத்தின் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றம் செய்து சசிகலா அறிவித்துள்ளார். விளாத்திக்குளம் தொகுதியில் பொன்பாண்டி, உளுந்தூர்பேட்டை தொகுதியில் ரா.உதயகுமார் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.. ₹ தமிழக சட்டசபை தேர்தலில், போட்டியிடும் தேசிய கட்சிகளான காங்கிரஸ் தி.மு.க . கூட்டணியிலும், பா.ஜ.க அ.தி.மு.க கூட்டணியிலும் இணைந்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் அனைவரும் வேட்பாளர்களை அறிவித்தாலும் இந்த இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வந்தது. வேட்பு மனு தாக்கல் செய்ய 2 நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் பா.ஜ.க. கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.  ₹ பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இதில் முன்னாள் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பெயர் இல்லை. ₹ சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சியான அ.இ.பு.த.ம.மு கழகத்தின் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றம் ச...

தொண்டர்களின் மைன்ட் வாய்ஸ் ?

படம்
தமிழ்நாட்டில் விடுமுறைக்குப் பிறகு இன்று 3வது நாளாக வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது; இன்றும் வரும் திங்கள் கிழமையும் மட்டுமே அவகாசம் உள்ளது  பழனிசாமி சொன்னதையும் செய்யமாட்டார், சொந்தமாகவும் செய்ய மாட்டார் என மக்கள் விமர்சிப்பதாக நெல்லை கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு அதிமுக ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஜோலார்பேட்டை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அமெரிக்காவின் F35 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய நிலையில், மாயமான விமானியை தேடும் பணியில் அமெரிக்கா இறங்கியுள்ளது புதுச்சேரி தேர்தல்; காரைக்காலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி தொடக்கம். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் ஒரு சதி.ஐந்து மாநிலங்களில் தேர்தல் நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏன் என ப.சிதம்பரம் கேள்வி. இந்தியைத் திணிப்பதில் ஒன்றிய அரசு மும்முரமாக இருப்பது தெரிகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்  ஏகாதிபத்தியத்தின் இருள்  சர்வதேச அரசியலில் கியூபா என்பது ஒரு நாடு மட்டுமல்ல, அது அடக்குமுறைகளுக்கு அஞ்சாத ஒரு போராட்டத்தின் அடையாளம்.  இன்று அம...

தேர்தல் நி(க)லவரம்.(03/04/26)

படம்
# திருச்சியில் நடைபெற்ற தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில், ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் துரைராஜை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார். # புதுச்சேரியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி . சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்லும் பிரதமர் இன்று மாலை புதுச்சேரி அஜந்தா சிக்னல் சந்திப்பு-அண்ணா சாலை வரை 1.7 கி.மீ.க்கு சாலை வலம் செல்கிறார்.  # சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில்,  தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரதோர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் பிரதமர் வருகை, அரசியல் கட்சித் தலைவர்களுக்கான பரப்புரை பாதுகாப்பு, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பு குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது. வரும் 6 மற்றும் 13ம் தேதிகளில் கூடுதலாக 250 கம்பெனி சி.ஆர்.பி.எப் வீரர்கள் தமிழ்நாடு வருகை தர உள்ளனர் # பாஜக தங்களுக்கு ஒரு ச...