இடுகைகள்

அந்நிய செலாவணி :.ஒரு பார்வை.

படம்
  இன்றைய உலகமயமாக்கல் சந்தையில் ஒரு நாட்டின் முதுகெலும்பாக இருப்பது அந்நிய செலாவணி. ஒரு நாடு அந்நிய செலாவணி வைத்திருக்கும் அளவைப் பொறுத்தே பொருளாதாரம் மதிப்பிடப்படுகிறது; ஏற்றுமதியும் இறக்குமதியும் முடிவாகிறது. முன்பெல்லாம், சில வாரங்களுக்கு மட்டும்தான் அந்நிய செலாவணி கையிருப்பு நம் நாட்டிடம் இருந்தது. ஆனால், கடந்த பல தசம ஆண்டுகளாக ஓர் ஆண்டு இறக்குமதிக்கு தேவையான அந்நிய செலாவணி கையிருப்பாக ஆர்பிஐ வைத்திருக்கிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, ஜூலை 3-ம் தேதி முடிந்த வாரத்தில், அந்நிய செலாவணி கையிருப்பு 726 கோடி டாலர் அதிகரித்து, 67,419.30 கோடி டாலர் இருக்கிறது’ என தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு ஆசியாவில் போர் தொடங்குவதற்கு முன்பாக, கடந்த பிப்ரவரி 27-ம் தேதி முடிந்த வாரத்தில், ரிசர்வ் வங்கியிடம் அதிகபட்சமாக 72,849.40 கோடி டாலர்கள் கையிருப்பு இருந்தது.  அதன்பின், கச்சா எண்ணெய் விலை உயர்வு, தங்கம் இறக்குமதி அதிகரிப்பு ஆகியவற்றால் அதிகமாக டாலரை செலவிட வேண்டியிருந்ததால், இந்திய ரூபாய்க்கு நெருக்கடி ஏற்பட்டு, மதிப்புக் குறைந்தது, டாலரின் தேவையும் அதிகரித்து, கையிருப்பும் க...

தென்காசி பட்டணம்?

படம்
  இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கில் இருந்து தொடங்கி எழுதுவோம், வரலாற்றில் பெருமிதம் கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைத்திடவும் பலம் பெறுவோம் என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ”திமுக அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும். தமிழரின் வரலாற்றையும் நமது பண்பாட்டையும் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும் வருவதோடு, வரலாற்றைத் திரிபுவாதங்களால் திசை திருப்பும் சூழ்ச்சிகளும் அரங்கேறும் காலத்தில், தமிழ்த் தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.  அதுதான் கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை! மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம்.  இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கிலிருந்து தொடங்கி எழுதுவோம்!  வரலாற்றில் பெருமிதம் கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைத்திடவும் பலம் பெறுவோம்!” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி கிராமத...

12ஆயிரம் ஆண்டுகள்,!

படம்
📃 வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 15 பேரின் உடல்கள் மும்பை வந்தன. 10 தமிழர்களின் சடலங்களையும் இன்று சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு. 📃 கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச உடைகளை அணியக்கூடாது என்ற புதிய நிபந்தனைகளை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. 📃 சென்னையில் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியிலேயே மின்வெட்டு. பல மணி நேரம் மின்சாரம் இல்லாததால் ஊழியர்கள் அவதி. 📃 அதிமுகவில் இருந்து தவெக சென்றவர்கள் சனிக்கிழமை சந்தையில் விற்கப்பட்டவர்கள். அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம். 📃 ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் வணிகக் கப்பல்கள் மீது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பால் மத்திய கிழக்கில் குழப்பம் 📃 ஹோர்முஸ் நீரிணை மேலாண்மையில் அமெரிக்காவுக்கு எந்தவித பங்கும் இல்லை என ஈரான் திட்டவட்டம். அனுமதியின்றி அமெரிக்கப் படைகள் நுழைய முயன்றால் கடும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை. 📃 ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையம் மீது தாக்குதல். பதிலடியாக சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசியதால்...

தாய்மாமன் சீர்.....

படம்
தாய்மாமன் சீர் தடியடி? . டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என த.வெ.க.வினர் பொய் பட்டியலை வெளியிட்டாலும் பல கடைகள் மூடாமல் இருப்பதை பொதுமக்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர். ; இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களின் மேல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது பொய்யர்களின. விஜயின் அரசு. நான் ரீல் தாய்மாமன் அல்ல ரியல் தாய்மாமன் என பேசிய முதலமைச்சர் விஜய்க்கு பள்ளி மாணவ, மாணவிகளை விட மதுக்கடைகள் தான் முக்கியமா? முதலமைச்சர் வெறும் வாயில் வடை சுடாமல், அராஜக ஆட்சி நடத்தாமல் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்! குதிரை பேரத்துக்கு மறைமுக குட்டு தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியானதாக உள்ளது. முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு மற்றும் அதிமுக எம்எல்ஏக்களாக தேர்வு பெற்ற 6 பேர் ராஜினாமா செய்த தொகுதிகள் இதில் அடங்கும். காலியான தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்தவகையில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்ப...

தவெக குட்கா அருண்.!

படம்
"நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று." நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும். 📃 சிவகங்கையில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 3 கிலோ போதைப் பொருள் சிக்கியது. மலேசியாவுக்கு கடத்த முயன்ற 4 பேரைக் கைது செய்து விசாரணை. 📃 தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடைபெறுவதாக ஆளுநரைச் சந்தித்து மீண்டும் புகார் அளிக்க திமுக திட்டம். எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியை குறிப்பிட்டு புகார். 📃 திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்குக் கோபம் வந்தால் தவெக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு. 📃 கர்நாடகா அரசின் அரசு மரியாதையோடு பழம்பெரும் பாடகி ஜானகி உடல் தகனம். 30 குண்டுகள் முழங்க பண்ணைத் தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது.   எழுத்தாளர் பூமணி காலமானார்.* சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளரும், கரிசல் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையுமான பூமணி காலமானார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் 1947 மே 12ஆம் தேதி பிறந்த பூமணியின் இயற்பெயர் பூ...

எண்ணித் துணிக கர்மம்

படம்
  பிர­த­மர் மோடியி டம் பத்­தி­ரிகை சுதந்­தி­ரம் குறித்து கேள்வி எழுப்­பிய நார்வே பெண் பத்­தி­ரி­கை­யா­ள­ரின் சமூ­க­வ­லை­தள பதி­வு­கள் இந்­தி­யா­வில் பெரும் விவா­தத்தை ஏற்ப டுத்­தி­யுள்­ளன. கடந்த மே மாதத்­தில் நார்வே நாட்­டின் ஒஸ்லோ நக­ரில் நடந்த இந்­தி­யா–­நார்வே உச்சி மாநாட்­டின் போது, அங்கு வருகை தந்த இந்­திய பிர­த­மர் மோடியிடம் நார்வே நாட்­டைச் சேர்ந்த பெண் பத்­தி­ரி­கை­யா­ளர் ஹெல் லிங் ஸ்வென் சன் பத்­தி­ரிகை சுதந்­தி­ரம் மற்­றும் மனித உரி­மை­கள் குறித்து கேள்வி எழுப்பினார்.  உல­கி­லேயே மிக உயர்ந்த பத்­தி­ரிகை சுதந்­தி­ரம் கொண்ட நார்வே நாட்­டின் பத்­தி­ரி­கையா ளர்­க­ளின் கேள்­வி­க­ளுக்கு ஏன் பதி­ல­ளிக்க மறுக்­கி­றீர்­கள் என்று அவர் கேட்­டார்.  உலக பத்­தி­ரிகை சுதந்­திர குறி­யீட்­டில் 180 நாடு­க­ளில் நார்வே 1வது இடத்­தி­லும், இந்­தியா 157வது இடத்திலும் உள்­ளதை சுட்­டிக்காட்டி அவர் கேட்ட இந்த கேள்­வியை பிர­த­மர் மோடி புறக்­க­ணித்­து ­விட்டு அங் கிருந்து சென்­றார்.  அதே நாளில் ஒன்­றிய வெளி­யு­றவு அமைச்­ச­கம் பிற பத்­தி­ரிகையாளர்­க­ளு­டன் இவ­ரை­யும் அழைத்து இந்­தி­யா­...