துக்ளக் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று மத்திய கிழக்கு போர் தொடர்பாக முக்கிய தகவல்களை அறிவிப்பார் எனச் சொல்லப்பட்டது. போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாகவே டிரம்ப் பேசுவார் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், டிரம்ப்பின் பேச்சு வழக்கம் போலத் தெளிவைத் தருவதற்குப் பதிலாகக் குழப்பத்தையே அதிகரித்தது. வளைகுடா போர் 5வது வாரமாகத் தொடரும் சூழலில் இன்று காலை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். போரினால் விலைவாசி உயர்வு ஏற்படும் சூழலில், அமெரிக்க மக்கள் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இதனால் போரை முடிப்பது தொடர்பாக டிரம்ப் பேசுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். வழக்கம் போலத் தெளிவைத் தருவதற்குப் பதிலாகக் குழப்பத்தையே அதிகரித்தது. அடுத்த சில வாரங்களில் ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், அவர்களை மிகக் கடுமையாகத் தாக்க உள்ளதாகவும் ட்ரம்ப் எச்சரித்தார். இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஈரான் போர் முழுமையடைய உள்ளது என்றார். அதாவது வேலையை முடிக்கப் போகிறோம் என்றும் மிக அருகே இருக்கிறோம் எனவும் டிரம்ப் குறிப்...