இடுகைகள்

அழியாச் சித்தாந்தம்!

படம்
  " கம்யூனிசம்" . அழியாச் சித்தாந்தம்!  நாட்டில் எங்கெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியில் இருந்தார்களோ அங்கெல்லாம் வளர்ச்சியைக் கொண்டு வர முடியவில்லை என்று வளர்ச்சி நாயகன் (விகாஸ் புருஷ்) என்று படம் காட்டப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி யின் வலக்கரம் அமித் ஷா ஞாயிறன்று அலர் தூற்றியிருக்கிறார். ஏதோ இவர்களது கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் எல்லாம் வளர்ச்சி பொங்கி வழிவது போல. பாஜக ஆளும் மாநிலங்களின் பின்தங்கிய நிலை குறித்த விவாதங்கள் பெரும்பாலும் தொ டர்ச்சியான சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வு களையே காட்டுகின்றன என்று ஆக்ஸ்பாம் இந்தியாவின் அறிக்கை குறிப்பிடுகிறது.  நாட்டின் செல்வத்தில் 60 சதவீதத்துக்கு மேல் 5 சதவீத மக்களிடமே உள்ளது என்றும் அது சம மாக விநியோகிக்கப்படவில்லை என்றும் அது  மேலும் குட்டு வைக்கிறது. ஆர்எஸ்எஸ்சின் இந்துத்துவா- கார்ப்பரேட் கூட்டின் விளைவாக அவர்களது நெருங்கிய நட்பு வட்ட முதலாளிகளான அம்பானியும் அதா னியும் உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்ததையும் நாட்டின் அனைத்து வளங்க ளையும் அனைத்துத் துறைகளையும் அவர்க ளுக்குத் தாரை வார்ப்பதையுமே வளர்ச்சி என...

கொலை முயற்சி புலம்பல்

படம்
  மோடிக்கு புதிதல்ல! பி ரதமர் மோடியை பெண் எம்.பிக்கள் தாக்க முற்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அன்று மக்களவையில் என்ன நடந்தது என்ன? என்று வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மக்களவையில் கடந்த 28ம் தேதியில் இருந்து  பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.  கடந்த 4ம் தேதி அன்று பிரதமர் மோடி அவைக்கு வருவதற்கு முன்பாக எதிர்க்கட்சி பெண் எம்.பிக்கள் பிரதமர் இருக்கைக்கு அருகில் சென்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதிய புத்தகத்தில் இருக்கும் சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து பேச மக்களவை எதிர்க்கட்சிதலைவர் ராகுல்காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இந்த எதிர்ப்பில் ஈடுபட்டனர். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு  பிரதமர் மோடி பதிலளித்து பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நேரத்தில் இந்த அமளியினால் மோடி வரவில்லை.  உடனே, ’’பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்துள்ளன.  அதனால் எதுவும் தவறாக நடந்து விடக்கூடாது என்பதாலேயே பிரதமர் மோடியை இன்று அவைக்கு வர வேண்டாம் என்று சொன்னேன். அவர் வந்து அசம்பாவிதம் நடந்திருந்தால் மக்களவைக்...

குழப்மும் ,கூட்டணியும்!

படம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை முடுக்கிவிட நடவடிக்கை. இன்று சென்னை வரும் துணை தேர்தல் ஆணையர், அடுத்த 2 நாட்களுக்கு விரிவான ஆலோசனை தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் ஆயத்த பணிகள் தீவிரம். 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு. திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 400+ நிறைவேற்றம்” - கனிமொழி எம்.பி தகவல். பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்திய ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி தலைவிக்கு பாஜ மாவட்ட தலைவர் டார்ச்சர்: தற்கொலைக்கு முயற்சி. சிறுபான்மையினரின் எஞ்சியுள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி நடத்திய பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி 39 ஆண்டுகளுக்குப் பின் மக்களவை சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம். வாக்கெடுப்பு முடியும் வரை சபாநாயகர் இருக்கையில் ஓம் பிர்லா அமர மாட்டார் எனத் தகவல். கால் வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி கூட்டணிக் கட்சிகளுடன் வரும் 22-ம் தேதி முதல் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை. பேச்சு வார...

விவாதிக்க மறுக்கும் மோடி அரசு

படம்
  எப்ஸ்டீன், நரவனே விவகாரங்களை விவாதிக்க மறுக்கும் மோடி அரசு மக்களவை நாள் முழுவதும் முடங்கியது முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கு மோடி அரசு அனுமதி மறுப்பதால் மக்களவை திங்களன்று நாள் முழுவதும் முடங்கியது.   பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உட னான பிரதமர் மோடியின் தொடர்பு குறித்த செய்திகளும், இந்தியாவின் பாதுகாப்பில் பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டதாக முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.   இந்திய விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்களின் நலன்களுக்கு எதிராக, அமெரிக்காவுடன் அவசர கதி யில் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருப்பதே, எப்ஸ்டீன் விவகாரத்தி லிருந்து தப்பிக்கவும்தான் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.   ஆனால், இந்த விவகாரங்கள் குறித்து பதிலளிக்காமல் மூடி மறைக்கும் வேலையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.  இவை அனைத்தும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் என்பதால், மக்களவையில் விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  ஆனால், அவற்றுக...

சனாதன (நீதிபதி) கள்"

படம்
“சனாதன ஒழிப்பு” பற்றி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர் சங்க மாநாட்டில் பேசியது குறித்து சமூக வலைதளத்தில் எதிர்வினை ஆற்றிய, சங்கி அமித் மாளவியா “80 சதவிகிதமான மக்களை இனப்படுகொலைக்கு ஆளாக்க சொல்கிறீர்களா?” என்று பதிவிட்டிருந்தார். சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்றால் சனாதனம் என்ற பெயரில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிற பாகுபாடுகளை ஒழிக்க வேண்டுமென்பதுதான் அர்த்தமே தவிர, அதைப் பின்பற்றுகிற இந்துக்களை கொல்ல வேண்டுமென்பது அர்த்தம் கிடையாது. இது தெரிந்திருந்தாலும் சங்கிகள், இதைப்பயன்படுத்தி ஒரு சமூகப் பதற்றத்தை உருவாக்கலாம், அதன் மூலம் தமிழ்நாட்டில் திராவிட அரசியலுக்கு எதிராக ஒரு வெறுப்புணர்வை உருவாக்கலாம் என்ற உள்நோக்கத்தோடு வன்ம கருத்துக்களை பரப்பினர். இதனால், அமித் மாளவியாவுக்கு எதிராக திருச்சி நகர காவல் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. அந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்துள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தனி நீதிபதி ஸ்ரீமதி, அரசியலமைப்புக்கு புறம்பான, பல்வேறு அபத்தமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.  “சனாதன ஒழிப்பு என்ற சொல்லாடல், அந்தத் தர்மத...

"என் பெயர் முகமது தீபக்.."

படம்
  உத்தராகண்ட் மாநிலம் கோத்வாரை சேர்ந்த 46 வயதான ஜிம் உரிமையாளர் தீபக் குமார். இவர் கடந்த வாரம் தனது நண்பர் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அருகே இருந்த 70 வயதான கடைக்காரர் ஒருவரிடம் பஜ்ரங் தள் அமைப்பினர் சிலர் பிரச்சனை செய்துள்ளனர். அதாவது அந்த முதியவர் பாபா ஸ்கூல் டிரஸ் என்ற பெயரில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். பாபா என்ற பெயரை இந்துக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் இதனால் கடையின் பெயரை மாற்ற வேண்டும் எனச் சொல்லி அச்சுறுத்தியுள்ளனர். இதைக் கண்ட தீபக், அவர்களிடம் நியாயம் கேட்டுள்ளார். அந்த முஸ்லீம் கடைக்காரருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இந்தக் கடை 30 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.. திடீரென வந்து பெயரை மாற்றச் சொல்வதை ஏற்க முடியாது என சொல்லியுள்ளார். அப்போது அங்கிருந்த பஜ்ரங் தள் உரிமையாளர்கள் தீபக்கையும் அச்சுறுத்தியுள்ளனர். மேலும், பெயரைச் சொல்லும்படியும் கட்டாயப்படுத்தியுள்ளனர். அப்போதும் அஞ்சாமல் அவர், "எனது பெயர் முகமது தீபக்" என்று கூறியுள்ளார். தனது இந்து பெயரில்முஸ்லீம் பெயரையும் இணைத்து, இந்தியாவின் ஒற்றுமை குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தும் நோக்கில் அவர் இப்...