இடுகைகள்

தன் தலையில் தானே.....!

படம்
  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க) முன்னாள் முதன்மைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பனையூர் பாபு, தனது ஆதரவாளர்கள் மற்றும் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தி.மு.க.வில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது. புதிதாகக் கட்சியில் இணைந்தவர்களை வரவேற்றுப் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், லட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகளில் ஒருவராக தங்களை இணைத்துக்கொள்ள வந்துள்ள அனைவரையும் முதன்மை தொண்டனாக வரவேற்கிறேன்.  பனையூர் பாபு கொள்கைக்காக உறுதியோடு உழைக்கக்கூடிய ஒரு செயல்வீரர்; அதற்கு அவரது அரசியல் பயணமே சாட்சி. ஆதிதிராவிடர் மக்களுக்கு தி.மு.க. அரசு எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.  தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் வேலை அதிகமாக இருக்கும். அத்தகைய உழைப்பிற்குத் தயாராக வந்துள்ள உங்களை மனதார வரவேற்கிறேன் என்றார். தொடர்ந்து தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) ஆட்சி குறித்து மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனங்கள...

கொள்கை, கோட்பாடற்றக் கட்சி

படம்
 🔹 திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும் என மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு. 🔹மூன்றே மாதங்களில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு. சென்னையில் 29 ரூபாய் அதிகரித்து, 957 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயம். 🔹தவெக தலைமையிலான ஆட்சி எப்போதும் வேண்டுமானாலும் கவிழும் என எடப்பாடி எச்சரிக்கை. முதலமைச்சர் நாற்காலியின் இரண்டு கால்கள் இரவல் கால்கள் என்றும் விமர்சனம். 🔹கட்சிக்கு கட்சிக்கு கையேந்தி பதவி வாங்குவதாக காங்கிரஸ் குறித்து சீமான் விமர்சனம். திமுக போட்ட பிச்சையால்தான் காங்கிரசுக்கு 10 எம்.பி. கிடைத்திருப்பதாகவும் கண்டனம். 🔹தமிழ்நாட்டில் 13 இடங்களில் சதமடித்த வெயில்.அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. 🔹டெல்லி கரப்பான்பூச்சி போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஆனி ராஜா மீது தாக்குதல். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம். 165 பக்தர்களுக்கு வைகுண்ட பதவி .! உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற சார்தாம்...

யார் அந்த ராசா ?

படம்
  1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா தொடங்கியபோது, தன்னை கட்சியின் பொதுச் செயலாளராக மட்டுமே அறிவித்துக் கொண்டார்.  காரணம், அந்த இடம் பெரியாருக்கானது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். திராவிடர் கழகத்தின் வழிக்காட்டியாக தந்தை பெரியார் எப்போதும் நீடிக்கிறார் என்பதை உணர்த்தும் விதமாக, திமுகவின் தலைவர் பதவியை பெரியாருக்கானது என்று அப்பீடத்தை காலியாகவே வைத்திருந்தார் அண்ணா.  ஆனால், அண்ணா மறையும் வரை கட்சியின் பொதுச் செயலாளராக அவர் எடுக்கும் முடிவே கட்சியின் முடிவாக இருந்தது. அண்ணாவின் மறைவு வரை திமுகவின் முழு அதிகாரத்தையும் கொண்ட ஒரு பதவி என்றால், அது பொதுச் செயலாளர் பதவி தான்.  அது திமுகவைவிட அதிமுகவில் இன்றளவும் பின்பற்றப்படுகிறது என்பதே நிதர்சனம். அண்ணா மறைவிற்குப் பிறகு கலைஞர் கருணாநிதி திமுகவின் தலைவராக மாறிய நிலையில், அனைத்து அதிகாரங்களும் தலைவருக்கே சென்றது.  இருந்தாலும், பொதுச் செயலாளருக்கே நிர்வாகிகள், வேட்பாளர்கள், நடவடிக்கைகள் என அனைத்தையும் கையாலும் அதிகாரம் வழங்கப்பட்டது.  அண்ணாவிற்கு பிறகு திமுகவின் பொதுச் செயலாள...

நிர்வாகிகளின் அராஜகங்கள்!

படம்
 🔹 தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 106 டிகிரி பாரன்ஹீட் சுட்டெரித்த வெயில். கடலூர், பரங்கிப்பேட்டை, வேலூர், நாகை உள்ளிட்ட 8 இடங்களில் 100 டிகிரியைத் தாண்டியது. 🔹கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் இனறு த.வெ.க.வில் இணைவதாக வெளியான தகவலால் அதிமுகவினர் அதிர்ச்சி. 🔹புதிதாக கட்சி தொடங்கி அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அண்ணாமலை அறிவிப்பு. கரு. நாகராஜன் உள்பட பலர் பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலைக்கு ஆதரவு. 🔹தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாத பாஜகவின், பெயர் மாற்றப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம். அண்ணாமலை தொடங்கிய அமைப்பு, ஆர்.எஸ்.எஸ்., மற்றுமொரு அமைப்பு தான் என்றும் பெ.சண்முகம் குற்றச்சாட்டு. 🔹பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலையில்லா ஆண் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் 3 தனிப்படைகள் அமைத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ரயில்வே போலீசார் விசாரணை. 🔹சென்னை பெரம்பூரில் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு. போதையில் அத்துமீறிய 20 வயது இளைஞர் போக்சோ வழக்கில் கைது. 🔹கேரளத்தில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை. ரெட் அலர்ட் விட...