இடுகைகள்

ஏன் திடீர் பாசம்?

படம்
  சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் வரும் 12ம் தேதி முதல் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடங்க உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு. தமிழ்நாட்டில் நெருங்கும் தேர்தல்.. களைகட்டும் தேர்தல் பரப்புரை ஜானகி எம்.ஜி.ஆர் மறைவும் ஆர்.எம்.வீ அளித்த வாக்கு மூலமும்! ஏன் திடீர் பாசம்?  ஜானகி எம்.ஜி.ஆர். மறைந்தபோது, கடற்கரையில் அடக்கம் செய்யக்கேட்டதாகவும், தி.மு.க. அரசு அன்று அனுமதி தரவில்லை என்றும் வாய்க்கு வந்த பொய் மூட்டையை அவிழ்த்துள்ளார் பழனிசாமி.  அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், ஏதுமில்லை. ஏதாவது பொய்யைச் சொல்லி பிழைப்பை நடத்திக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. 1996 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவி ஏற்கிறார் தலைவர் கலைஞர். தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தவர்கள் படம் எல்லாம் வரிசையாக கோட்டையில் அமைச்சரவை அரங்கில் மாட்டப்பட்டு இருக்கும்.  ஆனால் அதில் ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களின் படம் இல்லை  ஜெயலலிதா வைக்கவில்லை. இதனை உணர்ந்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள், உடனடியாக ஜானகி எம்.ஜி.ஆர். படத்தை மாட்டச் சொன்னார்கள். எனவே, தி.மு.க.வுக்கு பெருந்தன்மையை பழனிசாமி போதிக்கத் தேவையில்லை. ...

வரையறை மோசடி?

படம்
  தொகுதி வரையறை மோசடி? நாட்டில், கடந்த 1951, 1961, 1971 ஆகிய மூன்று ஆண்டுகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. 1971ல் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 10.10 லட்சம் மக்கள் தொகை என்ற அடிப்படையில் 543 நாடாளுமன்ற தொகுதிகள் கொண்டுவரப்பட்டது. அதுதான், இன்றுவரை தொடர்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் - இந்தியாவிலேயே தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில், ஒன்றிய அரசின் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தியதன் விளைவாக மக்கள்தொகையில் எண்ணிக்கை விகிதாச்சாரம் நமக்கு குறைந்துவிட்டது. இதை அடிப்படையாக கொண்டு மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை முக்கியமாக கருதி 1976-ல் பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் ஆட்சி நடந்தபோது குடும்ப கட்டுப்பாடு போன்ற இந்தியாவுக்குரிய சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை முறையாக பின்பற்றக்கூடிய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்கிற காரணத்தினால் 2001 வரை, அதாவது அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதே தொகுதிகள்தான் இருக்கவேண்டும் என்று அரசியல் திருத்த சட்டம் 42 கொண்டு...

மூட நம்பிக்கை !

படம்
  சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என்று 2018-ல் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீது, உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. அப்போது, மத நடைமுறை மூடநம்பிக்கையா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியுமா? என்பது குறித்து மத்திய அரசுக்கும் நீதிபதிகளுக்கும் இடையே முக்கிய விவாதம் நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், மத நடைமுறைகளை வெறும் மூடநம்பிக்கை என்று முத்திரை குத்த மதச்சார்பற்ற நீதிமன்றங்களுக்கு கல்விசார் தகுதி கிடையாது.  நீதிபதிகள் சட்ட வல்லுநர்களே தவிர, மத வல்லுநர்கள் அல்ல. ஒரு மதத்தில் வழிபாடாக இருப்பது மற்றவருக்கு மூடநம்பிக்கையாகத் தெரியலாம். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் நீதிமன்றம் இதில் தலையிடுவது ஆபத்தானது.  ஏதாவது மத நடைமுறை சீர்திருத்தப்பட வேண்டும் என்றால், அதைச் சட்டப்பேரவை (Legislature) தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, நீதிமன்றம் அல்ல. இதற்கு பதிலளித்த நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி-அஹ்சானுத்தீன் அமானுல்லா, ...

விபத்துகள் தொடர்கதை!

படம்
  புது நீர் வழிப்பாதையை அறிவித்த ஈரான்   லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து மூடப்பட்ட ஹார்மஸ் நீர்வழிப்பாதையை திறக்க முடியாது என, மாற்று வழியை ஈரான் அறிவித்துள்ளது. முக்கிய கப்பல் வழித்தடமான ஹார்மஸ் நீரிணை பகுதியில் உள்ள கடல் கண்ணி வெடிகளை கருத்தில் கொண்டு, கப்பல்களுக்கான மாற்று வழியை பயன்படுத்தும்படி ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கா உடனான நிலையற்ற இரண்டு கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றதன் விளைவாக, தற்காலிகமாக ஹார்மஸ் நீரிணையை திறப்பதாக ஈரான் அறிவித்தது. இந்நிலையில் தான் மாற்று வழிப்பாதையை பயன்படுத்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெளியிட்ட அறிக்கை என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஆவணத்தில், “ கடல்சார் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கும், கடல் கண்ணிவெடிகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், ஹார்மஸ் நீரிணையை கடக்க விரும்பும் அனைத்துக் கப்பல்களும் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தைக்கான கச்சா எண்ணெய் விநியோக சங்கிலியில் முக்கிய பங்கு வக...