இடுகைகள்

ஏமாற்று வேலை

படம்
  மோடியின் மகளிர் ஒதுக்கீடு மசோதா மகளிர் இட ஒதுக்கீட்டை தி.மு.க. எதிர்க்கிறது என்பது போன்ற தோற்றத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மகளிருக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை தி.மு.க. எதிர்க்கவில்லை. மகளிர் இடஒதுக்கீட்டை முன்னிறுத்திக் கொண்டு நியாயமற்ற தொகுதி வரையறையையும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்வதையும்தான் எதிர்க்கிறோம். "பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நாங்கள் முழுமனதோடு ஆதரிக்கிறோம். அதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. ஆனால், பொறுப்போடு செயல்பட்ட மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்காமலேயே, அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் கோருகிறோம். அவர்களின் நோக்கம் உண்மையானதாக இருந்தால், இப்போதுள்ள தொகுதி அளவிலேயே மகளிருக்கான 33 இட ஒதுக்கீட்டை வழங்குவதை எதுவும் தடுக்கவில்லையே?” என்றுதான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிக்கை வெளியிட்டு இருந்தார்கள். மகளிருக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்காமல் இழுத்தடித்தது பா.ஜ.க. அரசுதானே? மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தை 2...

தமிழ்நாடு வெல்லும்!

படம்
  தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டதை பட்டாசு வெடித்து கொண்டாடிய முதலமைச்சர். தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகம். தொகுதி மறுவரையறைக்கான மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வி. அரசியலமைப்பு சட்டத் திருத்தத்திற்கு மூன்றில் இரு பங்கு ஆதரவு பெற முடியாததால், மோடி அரசுக்கு பெரும் பின்னடைவு. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டுவந்த ஒரு மசோதா, முதல் முறையாக தோல்வி. தொகுதி மறுவரையறையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக வாக்களித்ததால், பாஜக அதிர்ச்சி. அரசியலமைப்பு மீதான தாக்குதலை முறியடிக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி பேட்டி. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற பெயரில், நாட்டின் அரசியல் கட்டமைப்பை பாஜக மாற்ற முயன்றதாக கண்டனம். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று பரப்புரை. பொன்னேரி, சோளிங்கர், துறையூர் உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் செய்வதாக காங்கிரஸ் அறிவிப்பு . தொகுதி மறுசீரமைப்பு, தொடர்பான 3 மசோதாக்களும் மக்களவையில் தோற்கடிக்கப்பட்டன மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களுக்கும் ஆதரவாக 298 உறுப்பினர்களும், எத...

வேதாந்தா 20 பேர்கள் உயிரிழப்பு!

படம்
சத்தீஸ்கர் வெடி விபத்து: வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் மீது வழக்குப் பதிவு! சத்தீஸ்கர் மாநிலத்தில் வேதாந்தா மின் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20 பெர் உயிரிழந்தது தொடர்பாக வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் உள்ளிட்டோருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சிங்கிதராய் கிராமத்தில் உள்ள அத்தேனா பவர் பிளாண்டின் யூனிட்-1 பகுதியில், பாய்லரில் இருந்து டர்பைனுக்கு உயர் அழுத்த நீராவி கொண்டு செல்லும் எஃகு குழாய் வெடித்ததால் விபத்து ஏற்பட்டது. மதியம் சுமார் 2.30 மணியளவில் நடந்த இந்த வெடிப்பில் பல தொழிலாளர்கள் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகினர். இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் (பிரிவு 106), இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் அலட்சியம் (பிரிவு 289) உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் உள்ளிட்ட 8 முதல் 10 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது மேலும் பொறுப்புக்கூறுவோர் கண்டறியப்பட்டால், அவர்களும் சேர்க்கப்படுவார்கள்,” என்று காவல் துறை தெரி...

தமிழ்நாடு வெல்லட்டும்!

படம்
தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது! தொகுதி மறுசீரமைப்பு' என்ற பெயரால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் குரலை ஒடுக்கத் திட்டமிடுகிறது ஒன்றிய பா.ஜக. இதற்கு எதிராக மாபெரும் எழுச்சி முழக்கங்களை தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுப்பி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து வீடுகள்தோறும், வீதிகள்தோறும் கருப்புக் கொடியை ஏற்ற உத்தரவிட்டு இருந்தார். கழக நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டமும், கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் அவசரமாகக் கூட்டப்பட்டது. அதில் நாடாளுமன்றத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும், மக்கள் மன்றத்துக்கு இதனை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் விரிவாக விளக்கி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். நாமக்கல்லில் தேர்தல் பரப்புரையில் இருந்த முதலமைச்சர் அவர்கள் கருப்புக்கொடி ஏற்றினார்கள். தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நகலைத் தீயிட்டு எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஏனென்றால் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் சட்டமானது, தமிழ்நாட்டுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவே இருக்கிறது. அரசியலமைப்புச் சட்ட (131ஆவது திருத...