கொந்தளிக்கும் பட்டினப்பாக்கம்
புதிய தலைமை செயலகம் வேண்டாம்! கொந்தளிக்கும் பட்டினப்பாக்கம்! பட்டினம்பாக்கத்தில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமை செயலக வளாகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். செப்.3ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் சென்னையில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடியில் புதிய ஒருங்கிணைந்த தலைமை செயலக வளாகம் கட்டப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். இதுதான் தற்போது புதிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. புதிய தலைமை செயலக வளாகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட பட்டினம்பாக்கம் பகுதியில் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்களின் நிலை என்ன? இவர்களை எங்கு அப்புறப்படுத்தப்போகிறீர்கள்? போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. இது குறித்து மக்களின் மனநிலையை அறிய சென்றது. மீனவ மக்கள் அனைவரும் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். "வலைக்கு போவது, பிடிக்கப்படும் மீன்களை விற்று குடும்பத்தை நடத்துவது. இதுதான் எங்க வாழ்வாதாரம். அவங்க சொல்றதை போல நாளைக்கு இங்க ...