இடுகைகள்

சதிவலையில் சிக்காதீர்!

படம்
  கர்நாடகாவின் சதிவலையில் சிக்காதீர்! , மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை! தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம், தற்போது மாநில அரசியலில் புதியதொரு போர்க்களமாக மாறியுள்ளது. கர்நாடக அரசின் அழைப்பை ஏற்று, காவிரி மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு, டெல்டா விவசாயிகளிடமும் எதிர்க்கட்சிகளிடமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.   இதற்கு எதிராகத் தனது அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவு மூலமாகக் கடுமையான கண்டனக் கணைகளைத் தொடுத்துள்ளார் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின். முதலமைச்சரின் இந்த முடிவை ஒரு "விஷப் பரீட்சை" என்று வர்ணித்துள்ள மு.க.ஸ்டாலின், கர்நாடக அரசு விரித்துள்ள சதிவலையில் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் தன்னிச்சையாகப் போய் சிக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது அறிக்கையில், "கடந்த காலங்களில் காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற யோசனை...

தரங்கெட்ட மாற்றம்.,

படம்
 📌  மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் கிளர்ச்சி. நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு முற்றும் நெருக்கடி. 📌  நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ் நாட்டிலும் கிளர்ந்தெழுந்த மாணவர்கள். மாணவர் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கம். 📌  தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் விடிய விடிய காத்திருப்பு போராட்டம். செல்போன் டார்ச்சை ஒளிரவிட்டும், தீப்பந்தங்களை ஏந்தியும்  அரசுக்கு எதிர்ப்பு. 📌  தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என CJP திட்டவட்டம். மீண்டும் இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் முடிவுகளை தெரிவிப்பதாக ஜெ.பி.நட்டா பேட்டி, 📌  நீட் தேர்வு நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர ஒன்றிய அரசு முடிவு. தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் 47 பேர் அதிரடி பணிநீக்கம்.  ' தரங்கெட்ட மாற்றம்." நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவை தனது தங்கச்சி என்றும், ‘நீட் தேர்வை எதிர்ப்பேன்’ என்றும் வேஷம் போட்ட விஜய் ஆட்சிக்கு வந்ததும் நீட...

கையில காசு குடத்திலே குடிநீரு.,!

படம்
குடிநீர் மக்களின் அடிப்படை உரிமையா? அல்லது தனியார் நிறுவனங்களின் வணிகப் பொருளா? என்ற கேள்வியை முன்வைக்கும் வகையில், சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை 30 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு தனியார் நிறுவனமான சூயஸிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவு, பெரும் விவாதத்தையும் மக்கள் மத்தியில் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது. குடிக்கும் தண்ணீரை கூட தனியாருக்கு தாரை வார்க்கதான் இந்த அரசை தேர்ந்தெடுத்தோமா? என கொந்தளித்து போயுள்ளனர் சேலம்வாழ் மக்கள்.ஊருக்கே தண்ணீரை வாரி இறைக்கும் மேட்டூர் அணையை தன்னகத்தே கொண்டிருக்கும் சேலம் மாநகர மக்களே, இனி குடிநீருக்கே கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை யாராலும் நம்ப முடியாது. ஏதோ வறட்சியால் இந்த நிலைமை வரவில்லை, மாறாக அரசின் தனியார் மய நடவடிக்கையால் வந்த வினை தான் இது. சூயஸ் (Suez) என்ற தனியார் நிறுவனத்திடம் குடிநீர் விநியோகத்தை ஒப்படைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை தான் இப்போது லைம் லைட்டுக்கு வந்து விவாதத்தை பற்ற வைத்திருக்கிறது. தற்போதைய நிலையில் மேட்டூர் அணையின் தொட்டில்பட்டி நீரேற்று நிலையம் மூலம் தினமும் 155 எம்.எல்.டி. குடிநீர் சேலம் மாநகர...

போர்க் குணம்

படம்
“ வினாத்தாள் கசிவு - இன்று அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய நடவடிக்கை. வினாத்தாள் கசிவுகள் என்பது சாதாரண விஷயம் அல்ல. லட்சக்கணக்கான மாணவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் பாதிக்கக்கூடியது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். "மாணவர்களுடன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயார். கடந்த 24 மணி நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்த 4 முறை அழைப்பு. சிவகங்கை, திருப்பத்தூர் தொகுதியில் மறு எண்ணிக்கை கோரி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கு வாபஸ் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - விரைவு நீதிமன்றத்தை அமைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு கடந்த 17ம் தேதி விசாரணைக்காக தூத்துக்குடி தென்பாகம் போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் இன்று உயிரிழப்பு. போலீசார் தாக்கியதாக சிகிச்சையில் இருக்கும்போது அருணாச்சலம் பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சி. "CJP கட்சியினர் போராட்டம் காரணமாக டெல்லி நாடாளுமன்றம் பகுதியில் இணைய சேவை முழுமையாக முடக்கம் வினாத்தாள் கசிவு வழக்கு விசாரணைக்காகச் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைப்பது குறித்துப் பிரதமர் நரேந்...

தூத்துக்குடியில் மற்றொரு மரணம்!

படம்
தொடரும் லாக்கப் மரணங்கள்..! தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காவல் நிலைய மரணங்கள் அதிகரித்து வருகிறது.  இந்த சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளி காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  தற்போது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞர் மது விற்பனை செய்ததாக கூறி அருணாச்சலம் (வயது 26] காவல் துறையினர் விசாரணைக்காக கடந்து 17 ஆம் தேதி காலை கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்த போது இளைஞர் அருணாச்சலத்திற்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் உடனடியாக சிகிச்சை அளிக்க தூத்துக்குடியில் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்து சென்று அனுமதித்துள்ளனர்.  தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கேட்ட உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  மேலும் காவல்துறையினர் தாக்கியதில் தான் தன்னுடைய மகன் அருணாச்சலம் உயிரிழந்ததாக பரபரப்பு க...