இடுகைகள்

மூன்று மாத்ததிலே வாங்கியக் கடன்.!

படம்
  தமிழக அரசின் நிதி நிலைமை மற்றும் கடன் சுமை குறித்த புதிய அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.  நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே தமிழக அரசு வாங்கியுள்ள கடன்களும், அதற்காகச் செலுத்தியுள்ள வட்டித் தொகையும் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் மொத்தக் கடன் சுமை சுமார் 10 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ள நிலையில், தற்போதைய புதிய புள்ளிவிவரங்கள் மாநிலத்தின் நிதி நெருக்கடியை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் மூன்று மாதங்களில் மட்டும், பல்வேறு மூலதன திட்டங்களுக்காகத் தமிழக அரசு இருபதாயிரத்து எண்ணூற்று எண்பத்தொன்று (20,881) கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.  அதுவும் தேர்தல் நடை முறை ஏப்ரலில் அமுலுக்கு வந்து தேர்தலுக்குப்பின்  த.வெ.க. ஆட்சி மே-10'ல் அமைந்த பின்  அரசு வாங்கியது மாநிலத்தின் உள்கட்டமைப்புப் பணிகளான சாலை அமைத்தல் மற்றும் பாலங்கள் கட்டுதல் போன்ற தேவைகளுக்காக இந்தக் கடன்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு சொந்த வ...

மாநில மொழிக்குஎதிரான அத்துமீறல்!

படம்
  தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடமா? . பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தை மூன் றாவது இடத்திற்கு தள்ளியிருக்கும், ஆளுநர் அர்லேகரின் அடாவடி. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-ஆவது பட்டமளிப்பு விழா, ஜூலை 28 அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ் வில் தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்கிறார். எனவே, இந்நிகழ்வில் முதலில் வந்தே மாதரம், அதன் பிறகு தேசிய கீதம், மூன் றாவதாகவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்று ஆளுநர் அலு வலகத்திலிருந்து சுற்றறிக்கை வந்துள் ளதாகவும், அதன்படியே இந்நிகழ்ச்சி நடைபெறும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.சந்திரசேகர் தெரி வித்துள்ளதை ஏற்க முடியாது. இது மாநில உரிமை மற்றும் மாநில மொழி யின் மீது நடைபெறுகிற அத்துமீறலா கும்  ஆளுநர் தமிழ்நாடு கொடுக்கின்ற சம்பளம் வாங்கும் ஒன்றிய அரசால் நியமனம் செய்யப்பட்டவர் மட்டுமே.. மனோன்மணியம் சுந்தரனாருக்கு இழைக்கப்படும் அவமதிப்பு. ஆளுநர் பங்கேற்கிறார் என்பதற்கா கவே ஒரு மாநிலத்தின் பாடலை பின் வரி சைக்கு தள்ளுவது ஏற்புடையதல்ல. மாநில அரசின் கீழ் செயல்படும் ஒரு பல்கலைக்கழகத்தில் மாநிலப் பாட...

குற்றமே. இல்லை...

படம்
 📌 முதல் முறையாக போராட்டங்களுக்கு பணிந்து மோடி அமைச்சரவையில் ஒருவர் ராஜினாமா. மாதக்கணக்கில் நடந்த போராட்டங்களை கண்டுகொள்ளாத மோடி அரசு, இளைஞர்கள் எழுச்சியால் பின்வாங்கியது. 📌 நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று பிரதான் ராஜினாமா செய்ததை அடுத்து, போராட்ட களத்தில் கொண்டாட்டம். ஒன்றிய அமைச்சர்களின் பேச்சுவார்த்தையை அடுத்து, ஒரு மாதத்திற்கு மேல் நீடித்த சிஜேபி போராட்டம் வாபஸ். 📌 நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம். மாணவர்களின் நலனுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு இருப்பதாகக் கூறி கண்டன முழக்கம். 📌 வீதிகளிலும், இணையத்திலும் போராடி இளைஞர்கள் வெற்றி பெற்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. வேளாண் சட்டங்களைப் போல, நீட் ஒழிப்பையும் உறுதி செய்வோம் என திட்டவட்டம். 📌 தர்மேந்திர பிரதான் ராஜினாமாவிற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு.  📌 நீட் வினாத்தாள் கசிவு மாணவர்களுக்கு சாதகமாக அமைந்ததாக நிர்மலா சீதாராமன் சர்ச்சைக் கருத்து. இன்னும் அதிகமாகப்படித்து,செயல்திறனைமேம்படுத்திக்கொண்டதாக சில மாணவர்கள் கூறியதாக பேட்டி. ?...

சதிவலையில் சிக்காதீர்!

படம்
  கர்நாடகாவின் சதிவலையில் சிக்காதீர்! , மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை! தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம், தற்போது மாநில அரசியலில் புதியதொரு போர்க்களமாக மாறியுள்ளது. கர்நாடக அரசின் அழைப்பை ஏற்று, காவிரி மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு, டெல்டா விவசாயிகளிடமும் எதிர்க்கட்சிகளிடமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.   இதற்கு எதிராகத் தனது அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவு மூலமாகக் கடுமையான கண்டனக் கணைகளைத் தொடுத்துள்ளார் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின். முதலமைச்சரின் இந்த முடிவை ஒரு "விஷப் பரீட்சை" என்று வர்ணித்துள்ள மு.க.ஸ்டாலின், கர்நாடக அரசு விரித்துள்ள சதிவலையில் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் தன்னிச்சையாகப் போய் சிக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது அறிக்கையில், "கடந்த காலங்களில் காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற யோசனை...

தரங்கெட்ட மாற்றம்.,

படம்
 📌  மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் கிளர்ச்சி. நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு முற்றும் நெருக்கடி. 📌  நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ் நாட்டிலும் கிளர்ந்தெழுந்த மாணவர்கள். மாணவர் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கம். 📌  தமிழ்நாடு முழுவதும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் விடிய விடிய காத்திருப்பு போராட்டம். செல்போன் டார்ச்சை ஒளிரவிட்டும், தீப்பந்தங்களை ஏந்தியும்  அரசுக்கு எதிர்ப்பு. 📌  தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என CJP திட்டவட்டம். மீண்டும் இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் முடிவுகளை தெரிவிப்பதாக ஜெ.பி.நட்டா பேட்டி, 📌  நீட் தேர்வு நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர ஒன்றிய அரசு முடிவு. தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் 47 பேர் அதிரடி பணிநீக்கம்.  ' தரங்கெட்ட மாற்றம்." நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவை தனது தங்கச்சி என்றும், ‘நீட் தேர்வை எதிர்ப்பேன்’ என்றும் வேஷம் போட்ட விஜய் ஆட்சிக்கு வந்ததும் நீட...

கையில காசு குடத்திலே குடிநீரு.,!

படம்
குடிநீர் மக்களின் அடிப்படை உரிமையா? அல்லது தனியார் நிறுவனங்களின் வணிகப் பொருளா? என்ற கேள்வியை முன்வைக்கும் வகையில், சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை 30 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு தனியார் நிறுவனமான சூயஸிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவு, பெரும் விவாதத்தையும் மக்கள் மத்தியில் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது. குடிக்கும் தண்ணீரை கூட தனியாருக்கு தாரை வார்க்கதான் இந்த அரசை தேர்ந்தெடுத்தோமா? என கொந்தளித்து போயுள்ளனர் சேலம்வாழ் மக்கள்.ஊருக்கே தண்ணீரை வாரி இறைக்கும் மேட்டூர் அணையை தன்னகத்தே கொண்டிருக்கும் சேலம் மாநகர மக்களே, இனி குடிநீருக்கே கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை யாராலும் நம்ப முடியாது. ஏதோ வறட்சியால் இந்த நிலைமை வரவில்லை, மாறாக அரசின் தனியார் மய நடவடிக்கையால் வந்த வினை தான் இது. சூயஸ் (Suez) என்ற தனியார் நிறுவனத்திடம் குடிநீர் விநியோகத்தை ஒப்படைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை தான் இப்போது லைம் லைட்டுக்கு வந்து விவாதத்தை பற்ற வைத்திருக்கிறது. தற்போதைய நிலையில் மேட்டூர் அணையின் தொட்டில்பட்டி நீரேற்று நிலையம் மூலம் தினமும் 155 எம்.எல்.டி. குடிநீர் சேலம் மாநகர...