இத்தாலி காதல் முதல்,.,
'" இத்தாலிய கிராமத்து காதல் முதல் ஸ்ரீபெரும்புதூர் கண்ணீர் வரை' சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம் 60 ஆண்டு கால இந்திய வாழ்க்கையின் வலிகளை முதன்முறையாக புத்தகமாக எழுதியுள்ளார் சோனியா காந்தி. இந்திய அரசியலின் மிக சக்தி வாய்ந்த, அதே நேரத்தில் எப்போதும் ஒரு புதிரான ஆளுமையாகவே பார்க்கப்படுபவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி (79) தனது சுயசரிதையை எழுதியுள்ளார். 544 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம், அமெரிக்காவின் புகழ் பெற்ற பதிப்பகமான ‘ஆல்ஃபிரட் ஏ நாஃப்’ மூலம் வரும் நவம்பர் 10 அன்று உலகளவில் வெளியாகிறது. அன்றைய தினம் அச்சுப் புத்தகம் மற்றும் மின்புத்தக வடிவில் வெளியிடப்படும். இதன் ஒலிப்பதிப்பு பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தால் வெளியிடப்படும். முதற்கட்டமாக 1,00,000 பிரதிகள் அச்சிடப்படும் என பதிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சில பகுதிகள் தற்போது வெளியாகி சர்வதேச மற்றும் இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுயசரிதை புத்தகம், 1965-ல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 19 வயது மாணவியாக இருந்த சோனியா...