நன்றி மறப்பது நன்றன்று...!
தி.மு.க.வும் இசுலாமியர்களும் ! இசுலாமியர்களை தி.மு.க. கொச்சைப்படுத்திவிட்டதாக த.வெ.க. உறுப்பினர் ஒருவர் சட்டமன்றத்தில் பேசி, அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதும் அதைத் திசை திருப்புவதற்காக அழுதும் நாடகம் நடத்தி இருக்கிறார். இவை அனைத்தும் சபை மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் காட்சிகளாக உள்ளன. இசுலாமிய மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகமும், கழக அரசுகளும், தமிழினத் தலைவர் கலைஞரும், இன்றைய தலைவர் திராவிட மாடல் நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய பணிகளை இசுலாமிய மக்கள் மறக்க மாட்டார்கள். என்றைக்கும் அவர்கள் நன்றிப் பெருக்குடன் இருக்கக் கூடியவர்கள். சிலரைப் போல கூலிக்கு விலை போகக் கூடியவர்கள் அல்ல. தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை 1967 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். அந்த மாற்றத்தை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அவருக்குத் தோள் கொடுத்து நின்றவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத். 1972 ஆம் ஆண்டு...