இடுகைகள்

படம்
  🔸 தமிழ்நாட்டில் காய்கறி, அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை அதிகரிப்பு. விலைவாசியை கட்டுப்படுத்த தவெக அரசு தவறிவிட்டதாக மக்கள் குற்றச்சாட்டு. 🔸 பணி நிரந்தரம் கோரி ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு. 🔸 6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம். குதிரை பேரம் தொடர்பாக எடப்பாடி - செங்கோட்டையன் இடையே நேரடி மோதல். 🔸 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பாக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொந்தளிப்பு. தவெகவை விலைக்கு வாங்க முடியாதா? என சவால். 🔸 ஆளுநர் அர்லேகருடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சந்திப்பு. த.வெ.க. மீதான குதிரை பேர புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். 🔸 பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்துவிட்டு அதே இடத்தில் மற்ற தொழில்களை தொடங்குவோம் என்பதா?. தவெக அரசின் அறிவிப்பு முன்னுக்குப் பின் முரணானது என நயினார் நாகேந்திரன் கண்டனம். 🔸 சாதிச் சான்றிதழ் வழங்க அதிகாரி தாமதப்படுத்தியதற்கு மாணவி பொறுப்பேற்பதா? மாணவியின் விண்ணப்பத்தை ஏற்று மருத்துவக் கலந்தாய்வில் அனுமதிக்...

திருப்பதிக்கு அரோகரா(

படம்
  பரந்தூர் ஏர்போர்ட் அரோகரா  திருப்பதிக்கு கிடைத்த வாய்ப்பு .   வேகமாக வளர்ச்சியை எட்டும் ஆந்திர அரசு தமிழக அரசு இன்றைய தினம் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் ஆந்திர மாநிலத்தின் திருப்பதி விமான நிலையத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் ஆண்டிற்கு 3 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் புதிய பயணிகள், சரக்கு போக்குவரத்து, சர்வதேச மற்றும் உள்நாட்டு வழித்தடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, புதிய விமான சேவை என நெருக்கடி அதிகரித்து வருகிறது. எனவே சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை கட்டமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு கடந்த திமுக ஆட்சியில் பரந்தூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அப்பகுதி கிராம மக்களின் தொடர் எதிர்ப்பால் நிலம் கையகப்படுத்துவதில் இழுபறி ஏற்பட்டது. ஏறக்குறைய. 94%நிலம் எடுக்ப்பட்டு அதற்கானப் பணத்தையும் நில உரிமையாளர்கள் பெற்...

இது ஊழலா!

படம்
🔸 சென்னையில் 2வது நாளாக இரவு நேரத்தில் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை. திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில் குளம் போல தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள் அவதி. 🔸 90 அடியை நெருங்கும் மேட்டூர் அணை. சம்பா சாகுபடிக்காவது அணை திறக்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு 🔸 மேஜையில் இருப்பதாக கூறப்படும் 3 கோப்புகளை தைரியமிருந்தால் திறந்து பார்க்கட்டும் என முதலமைச்சருக்கு உதயநிதி சவால். தவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதாளத்துக்கு சென்று கொண்டிருப்பதாக விமர்சனம் 🔸 பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவிப்பு. இடைக்கால ஏற்பாடாக மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவுபடுத்தப்படும் என்றும் விளக்கம். 🔸 பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும். அற்ப சொந்த, அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். 🔸 மின்சாரத்துறையை தனியார் மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு. இன்று முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக சிஐடியு அறிவிப்பு. 🔸 செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியி...