வெள்ளை அறிக்கை தேவை....¡
* மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் நடவடிக்கைகளில் தலையிட்டு இடைக்காலத் தடை விதிப்பதற்கான காரணங்கள் இல்லை எனக் கூறியுள்ளது. இதனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் தொடர்ந்து நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது. * தமிழகத்திற்கு நாள்தோறும் 6,000 கனஅடி காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, அந்த அளவை 3,000 கனஅடியாகக் குறைக்கக் கோரி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள நான்கு முக்கிய அணைகளிலும் நீர்வரத்து கடுமையாகக் குறைந்துள்ளதால் கூடுதல் நீரைத் திறந்துவிட முடியாத சூழல் நிலவுவதாகக் கர்நாடக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது. வெள்ளை அறிக்கை தேவை ....¡ தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் கடந்த 10ம் தேதி...