இடுகைகள்

கொந்தளிக்கும் பட்டினப்பாக்கம்

படம்
  புதிய தலைமை செயலகம் வேண்டாம்!  கொந்தளிக்கும் பட்டினப்பாக்கம்!   பட்டினம்பாக்கத்தில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமை செயலக வளாகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். செப்.3ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் சென்னையில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடியில் புதிய ஒருங்கிணைந்த தலைமை செயலக வளாகம் கட்டப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். இதுதான் தற்போது புதிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. புதிய தலைமை செயலக வளாகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட பட்டினம்பாக்கம் பகுதியில் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்களின் நிலை என்ன? இவர்களை எங்கு அப்புறப்படுத்தப்போகிறீர்கள்? போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. இது குறித்து மக்களின் மனநிலையை அறிய சென்றது. மீனவ மக்கள் அனைவரும் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். "வலைக்கு போவது, பிடிக்கப்படும் மீன்களை விற்று குடும்பத்தை நடத்துவது. இதுதான் எங்க வாழ்வாதாரம். அவங்க சொல்றதை போல நாளைக்கு இங்க ...

மக்களாட்சியை கேலிக் கூத்தாக்கும்

படம்
மக்களாட்சியை கேலிக் கூத்தாக்கும் மக்கள் விரோதிகள்..! தமிழகத்தில் மே 10ம் தேதி புதிய அரசு பொறுப்பேற்ற, 5 மாதத்தில் தாராபுரம், மதுராந்தம் ெதாகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா மூலம் ஒரு தொகுதியை ஏற்கனவே இழந்துள்ள தவெக அரசுக்கு, காங்., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்ததன்மூலம் அரசுக்கு பெரும்பான்மை கிடைத்தது. இந்த சூழலில் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு அதிமுகவில் ஒரு பிரிவினர் தவெக ஆதரவு நிலை எடுத்தனர். இதில் அதிமுக எம்எல்ஏக்களான மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதையடுத்து முதல்வர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு உட்பட 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த பரபரப்பான சூழலில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் திருச்சி கிழ...

தம்ஸ் அப் காட்டும் சந்தர்ப்பவாதக் கூட்டணி

படம்
  தம்ஸ் அப் காட்டும்  சந்தர்ப்பவாதக் கல்லாப் பெட்டி கூட்டணி " விஜய் இப்போது அமைத்திருப்பதை மனச்சாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி என்று அழைப்பதே பொருத்தமானது. அவரது வார்த்தைகள்தான் இங்கு கடன் வாங்கப்பட்டுள்ளன." என்று முரசொலி காட்டமாக விமர்சித்து இருக்கிறது. "சந்தர்ப்பவாதம் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிகிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் போட்டோ சூட்டிங்கில் பங்கெடுத்துள்ளார்கள்." என்று முரசொலி காட்டமாக விமர்சித்து இருக்கிறது. தி.மு.க -வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழ், 'மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி' எனக் குறிப்பிட்டு விஜய் தலைமையிலான த.வெ.க கூட்டணியை கடுமையாக சாடியிருக்கிறது. அந்தக் கட்டுரையில், "மதச்சார்பற்ற – சமூகநீதி – வெற்றி கூட்டணி என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். அவர்களது முகங்களைப் பாருங்கள். யாரையெல்லாம் ‘கல்லாப்பெட்டி கூட்டணி கட்சிகள்’ என்று விஜய் சொன்னாரோ அவர்களை எல்லாம் சேர்த்து வைத்துக் கொண்டுள்ளார். அப்படியானால் அவர்களை விஜய் வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் ‘கல்லாப்பெட்டி கூட்டணிக் கட்சிகள்’ என்...

கஜானா காலியாக இருக்கும்போது

படம்
கஜானா காலியாக இருக்கும்போது ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச்செயலகமா. ? விஜய்யை விளாசிய இபிஎஸ்   கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி ரூ. 1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது என எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு பதவியேற்று 100 நாட்களை கடந்துள்ள நிலையில், தற்போதுள்ள தலைமைச்செயலகத்தில் இட நெருக்கடி இருப்பதாகவும் எனவே புதிய தலைமைச்செயலகம் கட்ட திட்டமிட்டது. இதற்கான இடங்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கிய நிலையில், 1200 கோடியில் புதிய தலைமைச்செயலகம் கட்டப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகம் அமைக்கப்படும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த மீனவ அமைப்புகள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.  அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தே...

தமிழ் நாட்டில் தமிழுக்குத் தடையா?

படம்
தமிழுக்குத் தடையா? மதுரை மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா இம்மாதம் 17ஆம் தேதிநடைபெறவுள்ளது. மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு தமிழிலும் நடைபெறுவதை, சமஸ்கிருதத்திற்கு நிகராக அனைத்து நிகழ்வுகளிலும் தமிழுக்கும் சம அந்தஸ்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு இந்து சமய அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் உண்டு. மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு தமிழலும் நடத்தக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தள்ளுபடி செய்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. குடமுழுக்கின்போது, தமிழ் ஓதுவார்கள், பன்னிரு திருமுறைகள் பாட பிரத்தியேகமாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் தமிழ் திருமுறைகள் தனியாக பாடப்படும். ஆனால் குடமுழுக்குதொடர்பான சடங்குகளில் சமஸ்கிருதம் மட்டுமே இடம்பெறும் என்பதாக புரிந்து கொள்ளவேண்டியுள்ளது. 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி தஞ்சை பெரிய கோவிலிலும், 2023ஆம் ஆண்டுபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலிலும், 2026ஆம் ஆண்டு கரூர் கல்யாண வெங்கடரமணசுவாமி கோவிலிலும் நடந்த குடமுழுக்கு விழாக்கள் சமஸ்கிருதம் மட்டுமின்றி தமிழிலும்நடத்...