இடுகைகள்

இதற்கு மேல் அவமானம்..?

படம்
பழநி மடத்தின் ரூ.150 கோடி இடத்தை பாஜ பிரமுகர் மனைவி ஆக்கிரமிப்பு: மீட்கக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட கனிமவள தடையை எதிர்த்து பொதுநல வழக்கு: தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு தமிழை தாழ்த்தி பேசியதற்கு அமைச்சர் மரியவில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.828.36 கோடி விடுவிப்பு அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம், பிறகே தேசிய கீதம்; தமிழ்த்தாய் வாழ்த்தை இறுதியில் பாட அறிவிப்பாணையில் வற்புறுத்தவில்லை: உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்.. சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்! நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம். நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகள் கோழைகள்: மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன். மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு! தமிழகம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு பணிக்குழு அமைப்பு - ரூ. 264 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு  தனது மனோன்மணீயம் நாடகத்தில் தமிழ்த் தெய்வ வணக்கமாகச் சுந்தர...

காலத்தின் அவசியம்..!

படம்
* சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி, “தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான தீர்மானம் நீர்த்துப்போக செய்யும். த.வெ.க அரசின் தீர்மானம், ஆளுநரையோ, மத்திய அரசையோ கட்டுப்படுத்தாது.  ஆனால் த.வெ.க அரசு, ஒன்றிய பா.ஜ.க அரசு என சொல்லவே அஞ்சுகிறது. மசோதா கொண்டு வந்து சட்ட அங்கீகாரம் பெற்று தர வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து - சட்ட அங்கீகாரம் வேண்டுமென்பது தி.மு.க-வின் கோரிக்கை.” என்று கூறினார். * காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139ஆவது கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.  காவிரி ஆற்றில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் குறித்து விவாதிப்பதற்காக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.  ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மொத்தமாக 88 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டிய நிலையில், கர்நாடகா அரசு வெறும் 10 டிஎம்சி மட்டுமே திறந்துள்ளது.  இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான 45.5 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய சூழலில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. * சட்டப்பேரவையின் வினாக...

மாற்றம் இல்லை!

படம்
📰 அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக்கும் வகையில் சட்டமன்றத்தில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. 📰 தேர்தலுக்கு பின் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்டோரை மீண்டும் சேர்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் வற்புறுத்தல். 📰 மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு.  📰 ஜார்க்கண்டில் மாணவர்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து 3 தேர்வுகளை ரத்து செய்ய அரசு ஒப்புதல். தேர்வு முறைகேடு புகாரில் மாநில தேர்வாணையத்தின் 3 உறுப்பினர்கள் ராஜினாமா 📰 அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தை கைவிட்டு ஈரான் போரை முடிவு கொண்டு வர டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல். ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறக்க முன்வர வேண்டும் என நிபந்தனை வைக்கவும் திட்டம். 📰 அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளை முழுமையாக நீக்க வேண்டும். ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் நிபந்தனை உலகை மிரட்டும் எல் நினோ இந்தியாவிற்குப் பெரும் ஆபத்து - எச்சரிக்கை வழக்கமாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பசிபிக் பெருங்கடலில் நிகழும் எல் நினோவின் போது கடல்நீர் சற்ற...

ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம்

படம்
“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” உடன்பிறப்புகளுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய கடிதம் உடன்பிறப்பே, இளைஞர்களைப் பற்றி இப்போதுதான் எனக்கு அக்கறை ஏற்பட்டுள்ளது போலக் கற்பனை செய்து கொண்டு, இறுமாப்பு, கர்வம், ஆணவம் இவற்றின் இறுக்கமான பிடியில் சிக்கியுள்ள, அரசியலுக்குப் புதிய வரவுகள் சிலர், எடுத்த எடுப்பிலேயே, தங்களை ஏணி மீது ஏற்றி, செங்கோலைக் கையிலே கொடுத்து விடுவார்கள் மக்கள் என நம்பிக் கொண்டு, எனக்கு ஏன் இளைஞார்கள் மீது திடீர்க் கவலை என்று கேட்டுள்ள கிறுக்குத்தனமான கேலியைச் சில ஏடுகள் வெளியிட்டிருப்பதைக் கண்டு வியந்தேன். சிரிப்பையும் அடக்க இயலவில்லை. பழுத்த பழமாம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பகுத்தறிவுப் பிரச்சாரத்தை இளமைப் பருவத்திலேயே தொடங்கிவிட்டதை நாடறியுமே! அந்தத் தென்னாட்டுச் சாக்ரடீசின் தன்னிகரற்ற தளபதியாக விளங்கிய அறிஞர் அண்ணா, தனது 29வது வயதில் பெரியாரின் பேரன்பைப் பெற்று, திராவிடர் இயக்கத்தின் தளபதியாகவே போற்றப்பட்டது, அவரது நல் இளமைக் காலத்தில் தானே! அவர் எழுதத் தொடங்கி இடையில் நிறுத்த...

எல்லாவற்றின முன்னாலும்.....?

படம்
🔹 தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் கூட்டிய கூட்டத்தை 37 எம்.பி-க்கள் புறக்கணித்தனர். காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 19 பேர் மட்டுமே பங்கேற்பு.(சுதா,காங்' எம்.பி,புறக்கணிப்பு) 🔹காவிரி விவகாரத்தை திசைதிருப்பவே எம்.பி-க்கள் கூட்டத்தை கூட்டியிருப்பதாக திமுக விமர்சனம். நியாயமான தொகுதி மறுவரையறை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் திட்டவட்டம். 🔹காவிரி நீரை பெற்றுத் தர முடியாத முதல்வர் விஜய் நடத்திய கூட்டம், ஓடும் நீரில் கோலம் போடும் வீண் முயற்சி என அதிமுக கடும் விமர்சனம். 🔹அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்புகள். விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து பயணிக்கும் பலரின் மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு. 🔹ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் மாணவர்கள். அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 16-வது நாளாக நீடிக்கும் போராட்டம் தமிழகத்தில் தொழில் முதலீடு பின் தங்கியது ஏன் ?  தமிழகத்தில் தொழில் துறையில் பல்வேறு முதலீடுகள் ஈர்க்க புதிதாக பதவியேற்றுள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ள நி...