இடுகைகள்

காவி­ரிக்­காக பொங்­கிய

படம்
  காவி­ரிக்­காக பொங்­கிய  பொங்கு தமி­ழர்க்கு இன்­னல் விளைந்­தால் சங்­கா­ரம் நிஜ­மென்று சங்கே முழங்கு- என்­றார் புரட்­சிக் கவி­ஞர் பார­தி­தா­சன். காவிரி உரிமை பறிக்­கப்­ப­டும் நேர­மான இன்று தனது வீறு­கொண்ட ஆர்ப்­பாட்ட போர்ப்­பாட்டை நிகழ்த்­திக் காட்டி இருக்­கி­றது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். காவி­ரி­யில் தமிழ்­நாட்­டுக்­குத் தர­வேண்­டிய உரிமை கொண்ட நீரைத் தர மறுக்­கி­றது கர்­நா­ட­கம். கடந்த ஜூலை மாதத்­தில் வெறும் 0.698 டி.எம்.சி.நீரை மட்­டுமே வழங்கி இருக்­கி­றது கர்­நா­ட­கம். கடந்த ஐம்­பது ஆண்­டு­ க­ளில் மிகக் குறைந்த நீரை கடந்த மாதம்­தான் பெற்­றுள்­ளோம். சட்­டப்­படி பார்த்­தால் நமக்கு 31.24 டி.எம்.சி. நீரை கர்­நா­ட­கம் வழங்கி இருக்க வேண்­டும். தண்­ணீர் வழங்­கத் தேவை­யில்லை என்ற துணிச்­சல் கர்­நா­ட­கா­வுக்கு எத­னால் வந்­தது?  இங்­குள்ள அரசு மீது அவர்­க­ளுக்கு மரி­யா­தையோ பயமோ இல்லை என்­பது இதன் மூலம் தெரி­கி­றது. ‘விஜய்க்கு அர­சி­யல் தெரி­யாது, அனு­ப­வம் இல்லை’ என்று தனது பேட்­டி­க­ளில் தொடந்து சொல்லி வரு­கி­ற­வர் கர்­நா­டக முத­ல­மைச்­சர் டி.கே.சிவக்­கு­மார். ‘எங்­க­ளுக...

பூஜ்ஜியம்' 0' தான்…

படம்
  திமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றியதை தவிர வேறு எந்த மாற்றமும் பட்ஜெட்டில் இல்லை என உதயநிதி விமர்சித்துள்ளார். மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவெக அரசுக்கு திராணி இல்லை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;நூறு நாட்களில் தவெக அரசுக்கு பூஜ்ஜியம் தான் மதிப்பெண்ணாக வழங்க முடியும்.  பட்ஜெட்டுக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண் தான். வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்? என்ற கேள்விக்கு தவெக அரசிடம் பதில் இல்லை. மாற்றம், மாற்றம் என்று கூறியவர்களின் ஆட்சியில் பெயர் மாற்றம் மட்டுமே நடந்துள்ளது. திமுக அரசின் திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர் ஒட்டி அறிவித்துள்ளது. அன்பு சோலை என திமுக கொண்டு வந்த திட்டத்துக்கு `முதியோர் பொழுதுபோக்கு மையங்கள்’ என்றும் `உலகம் உங்கள் கையில்’ என்ற லேப்டாப் திட்டத்துக்கு `வெற்றி மடிக்கணினி திட்டம்’ என்றும் `கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்துக்கு `வெற்றி வீடு திட்டம்’ என்றும் `முதல்வர் படிப்பகங்கள்’ திட்டத்துக்கு `டிஜிட்டல் நூலகம்’ என்றும் `நன்னிலம்’ திட்டத்துக்கு `மண்ணின் மகள் திட்டம்’ என்றும் பெயரை ம...

ஒரே அர்த்தம்தான்!

படம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,998 கனஅடியாக அதிகரிப்பு 🗞️ 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு. தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து ஒன்றரை மணி நேரம் போலீசார் விசாரணை. 🗞️ ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என தவெக அரசின் செயலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம். முதலமைச்சர் விஜய், தமது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டுமென அறிவுரை. 🗞️ கொட்டும் மழையிலும் செங்கிப்பட்டி காவல்நிலையம் முன் திரண்ட திமுக தொண்டர்கள். விசாரணை முடிந்து வெளியே வந்த உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு. 🗞️ உதயநிதி கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தலைவர்கள் கண்டனம். எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையை நடத்த திட்டமா? என கேள்வி. 🗞️ விவசாயிகள் பிரச்சனையை திசைதிருப்பவே கைது செய்திருப்பதாக உதயநிதி குற்றச்சாட்டு. 3,000 போலீசாருடன் தீவிரவாதி போன்று அழைத்துச் சென்றதாக கண்டனம். ஒரே அர்த்தம்தான்.. ..! கா​விரி பிரச்​சினை தொடர்​பாக இரட்டை அர்த்​தத்​தில் பேச​வில்​லை. ஒரே அர்த்​தத்​தில் தான் பேசினேன் என எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி தெரிவித்...

உதயநிதி கைது...!

படம்
 உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்பான நீதிமன்ற விசாரணையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 4, 2026) பிற்பகலில் அவரை விசாரணைக்குப் பின் ஸ்டேஷன் ஜாமீன் வழங்கி விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.  உதயநிதி தனது உரையில் எந்த இடத்திலும் திரிஷா என்ற பெயரையோ ,ஆபாசமாகவோ பேசவில்லை. ஆனால் தமிழிசை,திருமா,பெ.சண்முகம் ,புஸ்ஸீ ஆனந்த் போன்ற த.வெ.கவினர்தான் அவர்பேசியதாக கூறிவருகின்றனர் என விசாரணையில் தெரிகிறது. காவல்துறை அவரை தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றாலும், நீதிமன்றம் காவலில் வைக்க வேண்டாம் எனத் தெளிவாக கூறியுள்ளது.  நீதிமன்ற விசாரணை முக்கிய அம்சங்கள் - வழக்கு பதிவு: தஞ்சாவூர் ஈஸ்ட் போலீஸ் நிலையத்தில், பெண்களின் மரியாதையை அவமதித்தல், வெறுப்பு பேச்சு, பொது அமைதியை குலைக்கும் வகையில் தூண்டுதல் போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.     - உதயநிதி மீது BNS பிரிவு 196 (குழுக்களுக்கிடையே பகைமையை தூண்டுதல்),     - பிரிவு 192 (கலவரத்தை தூண்டுதல்),     - பிரிவு 352 (அவமதிப்பு),     - பிரிவு 79 (பெண்களின் மரியாதையை அவமதித்தல்),...

நூற்றாண்டு போராட்டம்!.

படம்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது. உச்சநீதிமன்றத்தில் தி.மு.க,வைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல். தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டப்பேரவையில் நாளை தாக்கல். தவெக-வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கப்படுமா? என எதிர்பார்ப்பு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுவதை முதலமைச்சர் விஜய் அவமானமாக நினைப்பதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சனம். டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கவும் வலியுறுத்தல் பெட்ரோலில் எத்தனால் கலப்புக்கு எதிராக பிரதமர் இல்லம் நோக்கி கெஜ்ரிவால் இன்று பேரணி. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அழுத்தத்திற்கு பணிந்து மோடி செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு அமெரிக்காவுடன் எந்த நேரடி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் திட்டவட்டம். அமெரிக்க கடற்படையின் முற்றுகை திரும்ப பெறும் வரை தற்போதை நிலையே நீடிக்கும் என்றும் அறிவிப்பு. உச்சநீதிமன்றம்: நீதிபதிகள் எண்ணிக்கை 38ஆகஉயர்த்தும்மசோதாநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.   கேரளா வெள்ளம்: கனமழையால் 15 பேர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.  பீகார்...

இந்தியாவுக்கு முன்னுதாரணம்

படம்
  இந்தியாவுக்கு முன்னுதாரணம் - சிறந்த மாநிலம்' விருது வென்ற தமிழ்நாடு உடல் உறுப்பு தானத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, 2025'ம் ஆண்டு தமிழ்நாடு நாட்டிலேயே முதன்மை மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு 'சிறந்த மாநிலம்' என்ற தேசிய விருதைப் பெற்றுள்ளது.  டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற விழாவில், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல், பாராட்டினார்.  உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை ஒருங்கிணைப்பு மற்றும் உயிர்களை காப்பாற்றும் மருத்துவச் சேவைகளை திறம்பட செயல்படுத்தியதற்காக தமிழ்நாட்டுக்கு இந்த உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விருது, உறுப்பு தானத் துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னோடி மாநிலமாக திகழ்வதை மீண்டும் உறுதிப்படுத்துவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்குக - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் அதிமுகபொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்ட...

மாலையும்-லத்தியும்!

படம்
🔹 கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறப்பு. இன்று மாலைக்குள் தமிழ்நாடு எல்லைக்கு தண்ணீர் வந்துசேரும் என எதிர்பார்ப்பு. 🔹காவிரி நீரை பெற்றுத் தராத தவெக அரசுக்கு கண்டனம். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூரில் திமுக-வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம். 🔹காவிரி நீரை திறந்து விடக்கோரி உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது தமிழ்நாடு அரசு. இன்று மனுத்தாக்கல் செய்யப்படும் எனத்  தகவல். 🔹டெல்லிக்கு போராட சென்ற தமிழ்நாடு விவசாயிகளை தடுத்து நிறுத்தி நாக்பூரில் கைது செய்த மகாராஷ்டிரா போலீசார். தமிழ்நாட்டிற்கு வரும் ரயிலில் மீண்டும் ஏற்றிவிட்டதால் பரபரப்பு. 🔹ஸ்காட்லாந்தில் நடைபெற்று வந்த 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு. 13 தங்கம் உள்பட 39 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் இந்தியா. கொள்கைத்தலைவர்( ? ) பெரியார் படத்துக்கு மாலை – பெரியார் திடலுக்கு போலீஸ்! தனது கொள்கைத் தலைவராக தந்தை பெரியாரை அறிவித்துள்ள முதலமைச்சர் விஜய், பெரியார் திடலுக்கு முன்னால் போலீஸைக் குவித்துள்ளார்.  அவரால் அறிவிக்கப்பட்ட கொள்கைத் தலைவரான பெரியாரைப் பற்றி அவ...