இடுகைகள்

கண்ணியம் மறந்ததேன்?

படம்
 🔹 மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் இ.பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் எஸ்.சுகன்யா போட்டி என திமுக தலைமை அறிவிப்பு 🔹இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, ஆதரவு திரட்டுவதில் தீவிரம். பாஜகவை அடுத்து ஏ.சி.சண்முகம், பாரிவேந்தரை சந்தித்து ஆதரவு கோரிய அதிமுக நிர்வாகிகள். 🔹தொழில் முதலீடுகளை ஈர்க்க இன்று லண்டன் புறப்படுகிறார் முதலமைச்சர் விஜய். 6 நாட்கள் பயணத்தில் முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார். 🔹சென்னை பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் அமைகிறது புதிய தலைமைச் செயலகம். ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கான அரசாணை வெளியீடு. 🔹அமெரிக்காவில் இடைத்தேர்தலுக்கு பிறகு ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் என டிரம்ப் கணிப்பு. தேர்தல் மீது தாக்கத்தை ஏற்படுத்தவே ஈரான் மீது தாக்குதல் நடத்துவதாகவும் அறிவிப்பு. கண்ணியம் மறந்ததேன்? அப்போது திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்கள் குறித்து பேசிய விஜய், “எதற்கெடுத்தாலும் திமுகவினர் மிசா , மிசா என்கிறார்கள். மிசாவில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்” எனக் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது....

எளிதில் எடைபோட முடியாது

படம்
”திமுக"வை சாதாரணமாக எடைபோட முடியாது ஏன்? தமிழக அரசியலில் சமீபத்திய தேர்தல் மாற்றங்களுக்குப் பிறகு, களத்தின் காட்சி அமைப்பே முற்றிலும் மாறியிருக்கிறது. தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, தனது அரசியல் உத்தியை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, தமிழக அரசியலை 'திமுக vs தவெக' என்றும், தலைவர்கள் அளவில் 'விஜய் vs உதயநிதி' என்றும் ஒரு இருமுனைப் போட்டியாக மாற்ற தவெக தலைமை முழு மூச்சாக முயன்று வருகிறது. ஆனால், அடிமட்ட அரசியல் எதார்த்தங்களை உற்று நோக்கும்போது, தவெக கவனிக்கத் தவறும் சில முக்கிய உண்மைகள் வெளிப்படுகின்றன. தமிழக அரசியல் வரலாற்றில் திமுக சந்தித்த வீழ்ச்சிகளும், அதிலிருந்து அது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வந்த கதைகளும் அதிகம். தேர்தல் தோல்விகள் திமுகவுக்குப் புதிதல்ல.. பலமுறை படுதோல்விகளைச் சந்தித்துவிட்டு, மீண்டும் அசுர பலத்துடன் ஆட்சிக்கு வந்த வரலாறு அக்கட்சிக்கு உண்டு. தற்போது ஆட்சியை இழந்த நிலையில் இருக்கும் திமுகவை நோக்கித் தொடுக்கப்படும் வசவுகளோ, விமர்சனங்களோ அக்கட்சிக்கு எந்தப் பெரிய இழப்பையும் ஏற்படுத்திவிடாது. சொல்லப்போனால், எதிர்க்...

ஆணையத்துக்கு சில கேள்விகள்..?

படம்
▪️ காவிரியில் வினாடிக்கு 6,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..திறந்துவிட  கர்நாடகம் மறுப்பு. ▪️ சட்டப்பேரவையில் விதிகளை மீறியதாக முதலமைச்சர் விஜய் மீது திமுக உரிமை மீறல் புகார்.. நீதிமன்றத்தில் உள்ள வழக்கு, அவையில் இல்லாதோர் பற்றி பேசியதால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்... ▪️ மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்.. தேர்தல் பறக்கும் படையினர் தொகுதி முழுவதும் தீவிர சோதனை ▪️ முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று கூடுகிறது தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டம்.. கூட்டணிக்கான பெயர், கொள்கை குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு ▪️ பிரிட்டன் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் தொழில்நுட்ப கோளாறு... ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பரிதவிப்பு... கொளத்­தூர்    தேர்தல் ஆணையம் செயல்கள் சில  கேள்­வி­கள்! கொளத்­தூர் தொகு­தி­யில் த.வெ.க. வேட்­பா­ளர் வெற்றி பெற்­றது செல்­லாது என்று அறி­விக்­கக் கோரி தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின் தாக்­கல் செய்த வழக்கு தள்­ளு­படி செய்­யப்­பட்­டா­ல...

சர்க்காரியா கமிஷன் பின்னணி என்ன?

படம்
சர்க்காரியா கமிஷன் பின்னணி என்ன? சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் , 1970-களில் செயல்படுத்தப்பட்ட வீராணம் குடிநீர்த் திட்டத்தின் ஒப்பந்தம் தொடர்பாக ரூ.40 லட்சம் கமிஷன் கோரப்பட்டதாகவும், ரூ.29 லட்சம் வழங்கப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி முரசொலி கட்டிடத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாக விஜய் குற்றம்சாட்டினார். அண்ணா தியேட்டர், அருண் ஹோட்டல், வெளிநாட்டு டிராக்டர் உள்ளிட்டவை கலைஞருக்குச் சொந்தமானவை அல்லது அவருக்கு லஞ்சமாக வழங்கப்பட்டவை என்று ஆதாரமற்ற புகார்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறிய அவர், “வார்த்தைக்கு வார்த்தை விவாதிக்க நாங்கள் தயார்” என்றார். சர்க்காரியா கமிஷனுக்குப் புகார் அளித்த எம்.ஜி.ஆர். பின்னர் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தும் கலைஞர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். சர்க்காரியா கமிஷன் பின்னணி என்ன? 1972-ல் தொடங்கிய புகார்கள் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்படுவதற்கு ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பே இந்த விவகாரம் தொடங்கிவிட்டது. கமிஷன் ஆவணங்களின்படி, 1972 நவம்பர் 4ஆம் தேதி எம்.ஜி.ராமச்சந்திரன் குடியரச...

இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா ?

படம்
🔹 டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம். தமிழ்நாட்டுக்கு கூடுதல் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வாய்ப்பு. 🔹 காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை. சர்க்காரியா ஆணையம், அமலாக்கத்துறை அறிக்கையில் திமுக மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை பட்டியலிட்டு ஆவேச பேச்சு 🔹 முதலமைச்சர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு திமுகவினர் தர்ணா. பேச அனுமதிப்பதாகக் கூறி சபாநாயகர் திடீரென முடிவை மாற்றிக் கொண்டதால் சட்டப்பேரவையில் இருந்து திமுக வௌிநடப்பு. 🔹 சினிமா சூட்டிங்கிற்கு தேவையானதை தயாரித்து ரீல்ஸுக்காக மட்டுமே முதலமைச்சர் பேசியதாக உதயநிதி விமர்சனம். சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பழி சுமத்தும் நோக்கத்தில் மட்டுமே பேசியதாக பதிலடி. 🔹 திமுக பேச வாய்ப்பு தருவதாக கூறிய இரண்டே நிமிடத்தில் முடிவை மாற்றிய சபாநாயகர். துண்டு சீட்டு வந்தவுடன் முடிவை மாற்றிக்கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குற்றச்சாட்டு.  🔹 விஜய் வெறும் கூச்சல் பேச்சு முறையால் சட்டமன்றத்த...