ஒன்றும் மாறாது!
உச்சநீதிமன்றத் தீர்ப்பால் மாறாது. டிரம்ப் அறிவிப்பு! பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது என அறிவித்துள்ள அதிபர் டிரம்ப், ‘இனி இந்தியா தான் வரி செலுத்தும், அமெரிக்கா வரி செலுத்தாது’ என கூறி உள்ளார். மேலும், பரஸ்பர வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், அனைத்து உலக நாடுகளுக்கும் புதிதாக 15 சதவீத தற்காலிக வரியை அவர் விதித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவசரகால அதிகார சட்டங்களின் கீழ், உலக நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு விதித்த பரஸ்பர வரி செல்லாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. உலக நாடுகள் மீது விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும் அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறிவிட்டார் என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகள் ரத்து செய்யப்படும் என உலக நாடுகள் நிம்மதி அடைந்தன. இந்நிலையில், அனைத்து உலக நாடுகள் மீதும் புதிதாக 10 சதவீத தற்காலிக இறக்குமதி வரியை நேற்று காலை அறிவித்த டிரம்ப்,...