இடுகைகள்

ரெட்டை. தலை பாஐக?

படம்
உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டுக்கு ரூ.2 மானியம், பாதிப்பை சந்திக்கும் தொழில் துறையினருக்கும் சலுகைகள் அறிவித்தது தமிழ்நாடு அரசு.  வணிக LPG எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு காரணமான ஒன்றிய அரசுக்கு கண்டனம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்.  கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு. டெல்லியில் மூன்றாவது முறையாக இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார் விஜய். அமெரிக்கா, இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான். தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் வரை போரை நீட்டிக்க தயார் என அதிரடி தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயரை ஆங்கிலத்தில் அதிகாரப்பூர்வமாக “Thoothukudi Airport” என்று மாற்றப்பட்டது . "வந்தே மாதரம்" பாஜகவின் இரட்டை நிலைப்பாடு! மத்தியில் ஆளும் கட்சி, 2028ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் நாகாலாந்து மாநிலத்தில் அதிகாரத்தைத் தக்கவைக்க விரும்பினால், வந்தே மாதரம் குறித்த அந்த மாநிலத்தின் கருத்துக்கள் பற்றி மௌனம் காக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பா ரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் விரக்தியில் தங்கள் கைகளைப் பிசைந்துகொண்டிருக்க வேண்டும். ஏனெ...

நீரிணை கடந்த கப்பல்கள்?

படம்
ஹோர்முஸ் நீரிணையை கடந்த கப்பல்; இந்தியக் கொடியுடன் கூடிய எல்.பி.ஜி கப்பல் ஒன்று வெள்ளிக்கிழமை இரவு நீரிணையை கடந்துள்ளதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் ஈரான்,  ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதனால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவற்றை ஏற்றிக் கொண்டு வரும் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டன. இந்நிலையில், இந்தியக் கொடியுடன் கூடிய எல்.பி.ஜி கப்பல் ஒன்று வெள்ளிக்கிழமை இரவு நீரிணையை கடந்துள்ளதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. இந்திய கப்பல் கழகத்திற்கு சொந்தமான ஷிவாலிக் கேஸ் கப்பல் வெள்ளிக்கிழமை இரவு ஹோர்முஸ் நீரிணையை கடந்து சனிக்கிழமை அதிகாலை 12:45 மணியளவில் ஓமன் வளைகுடாவில் இருந்ததாக 'மரைன் டிராஃபிக்' தரவுகள் உறுதிப்படுத்தின. இதேபோல் மற்றொரு எல்பிஜி கப்பலான நந்தா தேவியும் சில மணி நேரங்களில் இந்த நீரிணையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் பேசிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.   மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்...