இடுகைகள்

மீண்டும் வெற்றிப்பாதைக்கு,

படம்
  மீண்டும் வெற்றிப்பாதைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்தித்தது. தொடர்ச்சியாக இரு தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த அதிமுக கடந்த 2021 ஆம் தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் பெற்றது.  அதைத்தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. புதிதாக துவங்கப்பட்ட விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த நிலையில் திமுக எதிர்க்கட்சியாக இருக்கின்றது.  கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு சென்றது. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு என பலரால் சொல்லப்படுகின்றது. தேர்தலில் தோல்வி மட்டுமல்லாமல் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பலர் தவெகவில் இணைகின்றனர். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு முதல் இந்நாள் எம்எல்ஏக்கள் சிலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்து வருகின்றனர்.  இதனால் அதிமுக கட்சி மேலும் பின்னட...

தொடரும் குளறுபடிகள்!

படம்
அப்பாக்கள் அனைவருக்கும் இனிய தந்தையார் தின நல்வாழ்த்துக்கள்  பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு.   நீட் தேர்வு ரத்து கோரி ஆளுநர் மாளிகை முற்றுகை; கைது செய்ததால் மாணவர்கள்-போலீசாரிடையே தள்ளுமுள்ளு: பெண் காவலர்கள் உள்பட 5 பேருக்கு காயம்  கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த 6 வயது மகன் கொலை: மீரட்டில் தாய் குர்பித் கவுர் என்பவருடன் வாலிபர் கைது  கோவை அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தவெக பிரச்சார பாடல் இசைக்கப்பட்டதால் எதிர்ப்பு. தூய்மைப் பணியாளர்கள் நியமனம், நிர்வாகம் அனைத்தும் அரசின் நேரடிப் பொறுப்பில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த  அத்தியாவசியச் சேவையை,  எந்த நிலையிலும் தனியார் கையில் ஒப்படைக்கக்கூடாது  - CPI மாநில செயலாளர் வீரபாண்டியன்  தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரும்பூர் பகுதியில் விற்பனைக்காக 600 கிராம் கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு . தொடரும் நீட்தேர்வு குளறுபடிகள் : தவறுகளை திருத்திக்கொள்ள...

பேச்சுரிமையை நசுக்காதே?.

படம்
மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற நேரலை குறித்து, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு, வணக்கம்,  தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடைபெற்று வரும் மாண்புமிகு ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படுவதில்லை என்பதைத் தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். "கொடுத்த வாக்கைக் காப்பாற்றியுள்ளார் முதலமைச்சர். இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியிருக்கிறது. இனி சட்டப்பேரவை நேரலை தொடரும்.  இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான நிர்வாகத்திற்கு இன்றைய நிகழ்வு மிகப்பெரிய எடுத்துக்காட்டு" என மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டுச் சொன்ன அன்றே நேரலை துண்டிக்கப்பட்டிருக்கிறது. நேற்றைய தினம் (19.06.2026) மேகதாது அணை கட்டுவதைக் கண்டித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த ...

அரசுப்பள்ளியில்....,

படம்
📄 தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட நீட் தேர்வு, உயிர் கொல்லும் சூழ்ச்சி ஆகியுள்ளதாக உதயநிதி வேதனை. நீட் ஒழிப்பிற்காக திமுக அரசு எடுத்த சட்டப் போராட்டத்தை அரசு தொடர வலியுறுத்தல். 📄 திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் அரசுப் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய தவெக நிர்வாகி. அரசுப் பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவதால் பெற்றோர் அதிருப்தி. 📄 2021-ல் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது கோவை மாநகராட்சியில் முறைகேடு. புறவாசல் வழியாக நியமிக்கப்பட்ட 54 பேரை பணி நீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை. பகலில் வெயில் வாட்டிய நிலையில், மாலைக்குப் பிறகு மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி. 📄 கோவையை தொடர்ந்து சேலத்திலும் நீட் மறுதேர்வால் விரக்தியடைந்து மேலும் ஒரு மாணவி மரணம். எடப்பாடி அருகே வீட்டில் தனித்து இருந்த மாணவி தற்கொலை.  அட்லீயும்,,சட்னியும்! தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே  சுவாரச...

ஒழுங்கு நடவடிக்கை சரியே!

படம்
“தவெகவில் இணைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன், மோசடி பேர்வழிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டவர்” என அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன் நேற்று தவெகவில் இணைந்தது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் , “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த உறுப்பினரான சி.மகேந்திரன் கட்சி அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகித்தவர். சமீபகாலமாக கட்சியின் அமைப்பு விதிகளுக்கு விரோதமாகவும், கட்சியின் கோட்பாட்டு நெறிமுறைகளுக்கு எதிராகவும் செயல்பட்டதால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார். குறிப்பாக, கட்சியின் ஆரம்பகால தலைவர்களால் உருவாக்கப்பட்ட, இன்று தமிழகத்தில் மிகச் சிறந்த மதிப்புமிக்க பதிப்பகமாக வளர்ந்துள்ள நிறுவனத்தை(NCBH ) குறுக்கு வழியில் சிலர் கையகப்படுத்துவதற்கு மோசடியான ஆவணங்களைத் தயார் செய்திருந்திருந்தனர்.  அத்தகைய மோசடி பேர்வழிகளுக்கு ஆதரவாக சி.மகேந்திரன் செயல்பட்டார். எனவே, சி.மக...