விவசாயிகளின் தோழன்?
தமிழக விவசாயிகளின் உற்ற வஞ்சனைதோழன்? தமிழ்நாட்டு விவசாயிகளின் உற்ற தோழன் மோடி அரசு என கடந்த சில தினங்களாக ஒன்றிய பாஜக அரசு சார்பில் செய்தித்தாள்கள் உள்ளிட்ட பல ஊடகங்களில் விளம்பரம் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் உண்மையான நிலவரம் என்னவென்றால், ஒன்றிய பாஜக வஞ்சனை அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்பதே உண்மை. தமிழ்நாட்டு மக்களின் உற்ற தோழர் என்று கூறிக்கொண்டு, ஒன்றிய பாஜக அரசு கடந்த சில நாட்களாக நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் வெளியிட்டு வருகிறது. மார்ச் 10 அன்று தமிழக விவசாயிகளின் “உற்ற தோழன்” என்று கூறி வெளியிட்டுள்ள விளம்பரம், உண்மையில் எண்களைக் கொண்டு ஆடப்படும் ஒரு மாயாஜாலம். இந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ள ஆறு ‘சாதனை’களையும் தரவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்தபோது, அவை தமிழக மக்களைத் திசைதிருப்பும் திட்டமிட்ட வஞ்சனை என்பது உறுதியாகிறது. மீன்வளத் துறை: தேசிய பட்ஜெட்டைத் தமிழ்நாட்டின் பங்காகக் காட்டிய மெகா மோசடி விளம்பரத்திலேயே மிகப்பெரிய பொய் இதுதான். ஒன்றிய அரசின் கூற்று: தமிழக மீன்வளத் துறை மேம்பாட்டிற்கு ₹20,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் திட்டங்கள்....