இடுகைகள்

பாவம் சும்மா விடாது..!

படம்
⛽ 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெயின் விலையை குறைத்த சவுதி அரேபியா. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என எதிர்பார்ப்பு. ⛈️ மும்பை 5-வது நாளாக வெளுத்து வாங்கும் கனமழையால் முற்றிலும் முடங்கிய இயல்பு வாழ்க்கை. தொடர்மழையால் புனேவில் இடிந்து விழுந்த 2 மாடி கட்டடம். பாயிண்ட்ஸ் மேன் உயிரிழப்பு 12மணி நேர பணிமுறையை ரத்து செய்ய வேண்டும்: ரயில்வே தொழிற்சங்கம் கோரிக்கை. திருப்பத்தூர் டிஎஸ்பி ஆபீஸ் அருகே 50 வயது பெண் பாலியல் பலாத்காரம்: போதை வாலிபர் வெறிச்செயல் ⚖️ கரூர் நெரிசல் விவகாரத்தில் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிரானவழக்கு இன்று விசாரணை. திமுக தொடர்ந்த வழக்கை ஏற்றது உச்சநீதிமன்றம். இன்ஸ்டா காதலியை அபகரித்ததாக நினைத்து போட்டோகிராபரை கொன்று உடல் தண்டவாளத்தில் வீச்சு: கரூர் வாலிபர்கள் இருவர் கோவை நீதிமன்றத்தில் சரண். தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்: ஒருவர்கைது. 😡 ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சி அளிப்பதாக உதயநிதி கண்டனம். அமைச்சர் கீர்த்தனாவின் செயலுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் எதிர...

படுகொலை விசாரணை.?

படம்
  போர்க் குற்றவாளிகளுக்கு இந்தியா புகலிடமா ? காசாவில் அப்பாவி மக்களின் வீடுகளைத் தகர்த்து, மனிதநேயமற்ற முறையில் அழிவின் சுவடுகளைப் பதித்துவிட்டு, அந்தச் செயல்களைச் சமூக வலைதளங்களில் கொண்டாடிய ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரர், இந்தியாவின் இமய மலை அடிவாரத்தில் சுற்றுலாப் பயணி போல உலாவிவிட்டுத் தப்பிச் சென்றிருப்பது ஒட்டு மொத்த மனித உரிமையாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈதன் கில்போவா எனும் அந்த நபர், இஸ்ரேலிய ராணுவத்தின் 271-வது போர் பொறியியல் படைப்பிரிவில் பணியாற்றியவர்.  காசாவின் கான் யூனிஸ் மற்றும் ரஃபா பகுதிகளில் குடியிருப்பு வீடுகள் இடிக்கப்படுவதை வேடிக்கை பார்த்தும், அதை வீடியோக்களாகப் பதிவு செய்து வெளி யிட்டும் தனது வன்மத்தைக் காட்டியவர். இத்த கைய கொடுஞ்செயல்கள் நான்காம் ஜெனிவா ஒப்பந்தத்தை மீறுவதாகவும், போர்க் குற்றங்கள் என்றும் சர்வதேசச் சட்டங்கள் தெளிவாக வரை யறுத்துள்ளன. ஆனால், இத்தகைய கொடிய குற்றச்சாட்டு க்கு ஆளான நபர், இந்தியாவில் தாராளமாக சுற்றுலாப் பயணம் மேற்கொண்டது ஒருபுறம் இருக்க, அவர் மீது ‘ஹிந்த் ரஜாப் அறக்கட்டளை’ ஆதாரங்களுடன் புகார் அளித்தும் ...

அலப்பறைக் கழகம்,?

படம்
🔹 பலத்த மழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கும், மும்பை, தானே நகரங்கள். சாலைகளை தண்ணீர் சூழ்ந்ததால் ஊர்ந்து சென்ற வாகனங்கள். 🔹 கனமழையால் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து. குழந்தை உள்பட 6 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்பு. 🔹 வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு. காஷ்மீரில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து 5 பேர் மீட்பு.  🔹 தமிழ்நாட்டில் ரீல்ஸ் ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சனம். எதிரி யார் என தெரிந்து விட்டதால், அடுத்த முறை விடமாட்டோம் என திட்டவட்டம். 🔹 மதுரையில் தவெக சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கூட்ட நெரிசல். பெண்கள் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு. 🔹 திருவள்ளூர் அருகே நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் அதிகரித்த பூச்சித் தொல்லை. விளக்குகளை அணைத்துவிட்டு இருட்டில் நடந்த பொதுக்கூட்டம். 🔹 மாமல்லபுரம் அருகே கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கல்வெட்டில் இருந்த மு.க.ஸ்டாலின் பெயர் நீக்கம். பெயரை மீண்டும் பொறிக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக நிர்வாகிகள் எச்சரிக்கை. 🔹 பெ...

சங்ககால தென்காசி ..!

படம்
தமிழகத்தில் கீழடி அகழ்வாராய்ச்சி தொடங்கி, பழங்காலத் தமிழர்களின் செங்கல் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.  இந்த நிலையில், தொல்லியல் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லாக தென்காசி மாவட்டத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த மிகப்பெரிய செங்கல் கட்டமைப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய கண்டுபிடிப்பு, கீழடியைப் போன்றே தென்காசியும் தமிழர்களின் தொன்மையான நாகரிக மையமாக இருந்திருக்கலாம் என்பதற்கான வலுவான சான்றுகளைத் தந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மாநில தொல்லியல் துறையினரால் தென்காசி மாவட்டத்தின் கலிங்கப்பட்டி/மாலையடிப்பட்டி அருகே, வைப்பார் ஆற்றின் வலது கரையில் இந்த அகழ்வாய்வு நடத்தப்பட்டது.  இங்கு முற்றிலும் செங்கற்களால் கட்டப்பட்ட சதுர வடிவ ‘படிக்கிணறு’ (Stepwell) ஒன்று வெளிப்பட்டுள்ளது. தமிழகத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த இது போன்றதொரு படிக்கிணறு கண்டறியப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்தக் கிணறு 4 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட சதுர அமைப்பில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உட்பகுதிக்குள் இறங்குவதற்காகக் கல்லால் ஆன படிக்க...