இடுகைகள்

எண்ணித் துணிக கர்மம்

படம்
  பிர­த­மர் மோடியி டம் பத்­தி­ரிகை சுதந்­தி­ரம் குறித்து கேள்வி எழுப்­பிய நார்வே பெண் பத்­தி­ரி­கை­யா­ள­ரின் சமூ­க­வ­லை­தள பதி­வு­கள் இந்­தி­யா­வில் பெரும் விவா­தத்தை ஏற்ப டுத்­தி­யுள்­ளன. கடந்த மே மாதத்­தில் நார்வே நாட்­டின் ஒஸ்லோ நக­ரில் நடந்த இந்­தி­யா–­நார்வே உச்சி மாநாட்­டின் போது, அங்கு வருகை தந்த இந்­திய பிர­த­மர் மோடியிடம் நார்வே நாட்­டைச் சேர்ந்த பெண் பத்­தி­ரி­கை­யா­ளர் ஹெல் லிங் ஸ்வென் சன் பத்­தி­ரிகை சுதந்­தி­ரம் மற்­றும் மனித உரி­மை­கள் குறித்து கேள்வி எழுப்பினார்.  உல­கி­லேயே மிக உயர்ந்த பத்­தி­ரிகை சுதந்­தி­ரம் கொண்ட நார்வே நாட்­டின் பத்­தி­ரி­கையா ளர்­க­ளின் கேள்­வி­க­ளுக்கு ஏன் பதி­ல­ளிக்க மறுக்­கி­றீர்­கள் என்று அவர் கேட்­டார்.  உலக பத்­தி­ரிகை சுதந்­திர குறி­யீட்­டில் 180 நாடு­க­ளில் நார்வே 1வது இடத்­தி­லும், இந்­தியா 157வது இடத்திலும் உள்­ளதை சுட்­டிக்காட்டி அவர் கேட்ட இந்த கேள்­வியை பிர­த­மர் மோடி புறக்­க­ணித்­து ­விட்டு அங் கிருந்து சென்­றார்.  அதே நாளில் ஒன்­றிய வெளி­யு­றவு அமைச்­ச­கம் பிற பத்­தி­ரிகையாளர்­க­ளு­டன் இவ­ரை­யும் அழைத்து இந்­தி­யா­...

"சுரன்"

படம்
ஆளுநர் ஆட்சியா? தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிப்பதில் ஆளுநரின் தலையீடு கூடாது என கண்டனம் தெரிவித்து தி.க தலைவர், ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை! கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 10 பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிக்கும் பணி, அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவியின் தலையீட்டாலும், துணைவேந்தர் தேடுதல் குழுவில், விதிகளுக்குப் புறம்பாக யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினர் ஒருவரும் இடம்பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாலும் தடைப்பட்டிருந்தது.சட்டத் திருத்த மசோதாக்களை அன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்தார்! அதை எதிர்த்தும், அப்போது யு.ஜி.சி. கொண்டு வந்த புதிய விதியை எதிர்த்தும் ‘திராவிட மாடல்’ தி.மு.க. அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதே வேளையில், துணைவேந்தர் நியமனத்தைத் தமிழ்நாடு அரசே (முதலமைச்சரே) மேற்கொள்ளும் வகையில் கொண்டுவந்திருந்த 10 சட்டத் திருத்த மசோதாக்களை அன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத...

உலக மக்கள் தொகை சவால்!

படம்
  உலகெங்கும் வாழும் மக்களின் உரிமைகள், சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ‘உலகமக்கள் தொகை தினம்' உலகளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை சுமார் ‘830 கோடியை’ கடந்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலக மக்கள் தொகைப் பெருக்கத்தின் திசையைத் தீர்மானிக்கும் 8 முக்கிய நாடுகள் எவை என்ற விவாதம் தற்போது முன்னெழுந்துள்ளது. கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை 500 கோடியைத் தொட்டது. இந்த மைல்கல் உலக நாடுகளிடையே பெரும் விழிப்புணர்வையும் பொதுமக்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. இந்த வரலாற்று முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது ‘1989’ ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் ஆளும் குழு இந்தத் தினத்தை ஆண்டுதோறும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நிரந்தர நாளாக அறிவித்தது.  அதன்படி, 1990 ஜூலை 11 முதல் உலக மக்கள் . தினம் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக மக்கள் தொகை கொண்ட 8 நாடுகள்   ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சம...

குதிரை பேரத்துக்கு சாட்சி!

படம்
  குதிரை பேரம், கழுதை பேரம், நரி பேரம் அனைத்தையும் நடத்தி வருகிறவர்கள், அதே போன்ற பழியை மற்றவர்கள் மீது போடுவதற்காக, எப்படி எல்லாம் பிராடு தனங்களைச் செய்கிறார்கள் என்பதற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கே சாட்சி ஆகும்.  தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள எந்த அளவுக்கு கீழான செயலையும் விஜய் செய்வார் என்பதற்கு இது சாட்சி. பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வரும் போது கொறடா உத்தரவை மீறி தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமாம்.  இப்படி ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ.வான இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தினார்களாம் திருநாவுக்கரசு. அவருடன் சேர்ந்து சிலரைக் கைது செய்துள்ளார்கள். இந்த திருநாவுக்கரசுவை பேசச் சொன்னாராம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. அவரது தம்பி அசோக்குமாரையும் இத்துடன் சேர்த்துள்ளார்கள்.  இது பற்றி விசாரிக்க செந்தில்பாலாஜியையும் அசோக்குமாரையும் வரவழைத்து மிரட்ட நினைக்கிறது விஜய் போலீஸ். பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஊத்தங்கரை இளையராஜா ஆதரித்து வாக்களித்தால் என்ன ஆகும்?  இளையராஜாவுக்கு எம்.எல்.ஏ. பதவி...

யார் பிடித்தது ஓட்டம்?

படம்
🔹 திருச்சி கிழக்கு, கரூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தத் தடை. தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. 🔹கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி. 31 பேருக்கு முறைகேடான நியமன ஆணைகளை வழங்கினார் விஜய். 🔹ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம், ஆந்திர மாநில அமைச்சருடன் பேச்சுவார்த்தை. ரீல்ஸ் மூலம் முதலீடு வந்துவிடுமா என தவெக அரசுக்கு இபிஎஸ் கேள்வி. 🔹அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர வலியுறுத்திய ஈரானின் கோரிக்கை ஏற்பதாக டிரம்ப் அறிவிப்பு. தற்சமயம் போரை தொடர்வதில் உறுதியாக உள்ளதாகவும் திட்டவட்டம். வலியோடு இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் எனக் கூறுவதா - விஜய் அந்த வலியோடும் வேதனையோடும் @TVKVijayHQ ஓடி ஒளிந்த காட்சி! நாகரிகம்,நிதானம் தேவை! ஊழல் விற்பனர்களை வைத்து ஊழல் ஒழிப்பா? விஜயபாஸ்கர்களை மேடையில் வைத்துக்கொண்டு ஊழல் பற்றி பேசுகிறார் முதலமைச்சர் விஜய் என்று கூறி உள்ள முன்னாள் அமைச்சர் சிவசங்கர்,  திருச்சி கிழக்கு தொகுதிக்கு சென்றவரால், கரூருக்கு செல்ல முடியவில்லை; இடைத்தேர்தல் காரணமாகவே, இப்போது கரூருக்கு சென்றிருக்கிறார் என்றும் கூறி ...

ஓடிப்போனது யாரு?

படம்
கரூரில் இன்று பேசிய முதல்-அமைச்சர் விஜய், “கரூர் கம்பெனி ஓனர் ஒருத்தரு எங்க இருக்காருனே தெரியல… ஓடு ஓடுனு ஓடிக்கிட்டே இருக்காரு..” என்று வேட்டைக்காரன் பட பாடலை பாடியிருந்தார்.  இந்த நிலையில் முதல்-அமைச்சருக்கு பதிலடி தெரிவித்து செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:- கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்?எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்? மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலினும், அன்றைய தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும். அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச...