இடுகைகள்

ஈரான் ஒரு பார்வை!

படம்
 கடந்த 1979-ஆம் ஆண்டு புரட்சி, இரானின் ஆட்சியாளர்களை அதிகாரத்திற்குக் கொண்டு வந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அவர்கள் இப்போது தங்களுடைய மிக மோசமான தருணத்தை எதிர்கொள்கின்றனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதல்களில் அதிஉயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி மற்றும் பிற உயர்மட்ட ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர்.  மேலும் முக்கிய உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுமே ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகச் சமிக்ஞை அளித்துள்ளன. மேலும் இரானியர்கள் தங்கள் ஆட்சியை தூக்கியெறியுமாறு இருநாடுகளும் வலியுறுத்துகின்றன. ஆயினும், இரானின் ஆட்சியானது நீடித்திருக்கக்கூடிய மற்றும் எளிதில் வீழ்த்தப்பட முடியாத ஓர் அதிகாரக் கட்டமைப்பைத் திட்டமிட்டு உருவாக்கியுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் அதன் வலிமைக்கு என்ன காரணம்? மத்திய கிழக்கின் பிற நாடுகளில் இருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது? மொஜ்தபா காமனெயி, தனது தந்தையின் கடுமையான ஆட்சியைத் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரானின் முடியாட்சியை வீழ்த்தியதில...

மேக் இன் இந்தியா?

படம்
எரிபொருள் தட்டுப்பாடு பற்றி பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஒன்றிய அரசுக்கு துணை நின்று மேற்காசியப் போர்ச் சூழலை எதிர்கொள்வோம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி. தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உள்துறைச் செயலர் பேட்டி. ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான செய்தி பரப்பபடுவதாக விளக்கம். தேர்தல் ஆணையத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பான இறுதிக்கட்ட ஆலோசனைக் கூட்டம் நிறைவு. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி வரும் ஞாயிறு அல்லது திங்கள் வெளியாக வாய்ப்பு. நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு அதிகரிப்பு. கிராமப்புறங்களில் சிலிண்டர் முன்பதிவு இடைவெளிக் காலம் 45 நாட்களாக அதிகரிப்பு. வணிக பயன்பாட்டு கேஸ் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடல், வேலையிழப்பு என அதிகரிக்கும் பாதிப்பு. உணவுப் பொருட்கள், சிற்றுண்டிகளின் விலை உயர்வதால் பொதுமக்கள் பாதிப்பு. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு என்ற வதந்தியால் பீதி. கரூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலி சிலிண்டர்களுடன் நீண்ட வரிசையில் குவிந்த மக்கள். மின்சார அடுப்புகள், மின...

மன்மோகன் சிங் போட்ட திட்டத்தால்

படம்
  இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. அரபு நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதோடு, ஹார்முஸ் நீரிணையையும் ஈரான் முடக்கியுள்ளதால், கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பல்வேறு நாடுகளிலும் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, சமையல் எரிவாயுவிற்கு சிறிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைத்து வருகிறது. ஆனாலும், அச்சத்தின் காரணமாக மக்கள் பெட்ரோல் பங்க்குகளில் குவிந்து வருகின்றனர். ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை. அதற்கு காரணம், கடந்த 2004-ல், அப்போதைய காங்கிரஸ் அரசின் ஒரு சிறப்பான திட்டம் தான். அது என்ன என்பதை இப்போது பார்ப்போம். இந்தியாவை பொறுத்தவரை, கடந்த 20 ஆண்டுகளில் தனது கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஒருவரையே சார்ந்து இல்லாமல், பல இடங்களிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்கிறது. அதன் மூலம் தற்போது இந்தியாவிடம் சுமார் 250 மி...

உலக நாடுகள்.

இந்தியாவுக்கு எச்சரிக்கை ஈரானை விட இஸ்ரேலை ஆதரித்ததற்காக இந்தியா பெரும் விலை கொடுக்கப் போகிறது🥲 "இந்தியா BRICS அமைப்பில் ஒரு அங்கமாகும், ஆனால் அது சக உறுப்பினரான ஈரானுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று முடிவு செய்துள்ளது. இஸ்ரேலுக்கும் இந்தப் போருக்கும் ஆதரவளிக்கும் இந்தியாவின் முடிவு அதற்கு பெரும் விலையைத் தரும். ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகப் போக்குவரத்தில் விலக்கு பெற்றிருக்கக்கூடிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது இந்தியா ஈரானின் அறிவிக்கப்பட்ட எதிரியாகிவிட்டது. இதனால் இந்தியா பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும். இந்தியா அமெரிக்காவின் நட்பு நாடல்ல, அது யாருக்கும் நண்பனல்ல. இந்தியா முற்றிலும் நம்பகத்தன்மையற்றது. சக BRICS உறுப்பினரான ஈரானை இந்தியா காட்டிக்கொடுத்ததன் மூலம் இது நிரூபணமாகியுள்ளது." இரண்டாம் பேச்சாளர்: "இந்தியா தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது. வரப்போகும் பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்கும் சக்தி இந்தியப் பொருளாதாரத்திற்கு இல்லை. அமெரிக்காவைப் பற்றி மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் இந்தியா...

மத்திய கிழக்கின் எரியும் அரசியல்

படம்
  : அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் மோதல் எப்படி உருவானது? இன்றைய உலக அரசியலில் அதிகம் பேசப்படும் ஒரு விஷயம் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே இருக்கும் பதற்றம். வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன் போன்ற இடங்களில் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ளன. சில நேரங்களில் ஈரானுடன் தொடர்புடைய ஆயுத அமைப்புகள் அந்தப் பகுதிகளை ட்ரோன் அல்லது ஏவுகணைகளால் தாக்க முயற்சிக்கின்றன என்ற செய்திகள் வெளிவருகின்றன. இது மதப் பிரச்சனையா? எண்ணெய் வளங்களுக்கான போட்டியா? அல்லது உலக அரசியல் ஆதிக்கத்துக்கான போட்டியா?  இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள வரலாற்றை நீண்ட தூரம் பின்னோக்கிப் பார்க்க வேண்டியது அவசியம்.   யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம்: மூன்று மதங்களின் ஒரே மரபு முன்னோர் ஆபிரகாம் மத்திய கிழக்கு மத வரலாற்றைப் பற்றி பேசும்போது ஆபிரகாம் (இஸ்லாமிய மரபில் இப்ராஹீம்) என்ற பெயரைத் தவிர்க்க முடியாது. யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களும் அவரை ஒரு முக்கிய முன்னோராக மதிக்கின்றன. பல தெய்வங்களை வழிபட்ட காலத்தில் “ஒரே கடவுள்” என்ற எண்ணத்தை வலியுறுத்தியவர் ஆபிரகா...