நல்லா ஆள்றாங்க ஆட்சி...!
அதிமுக கட்சியில் இருந்து அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதுவரை அதிமுகவில் இருந்து மட்டும் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவி ராஜினாமா செய்து உள்ளனர். ராஜினாமா செய்த கையோடு ஆளும் கட்சியான தவெகவில் இணைந்தும் வருகின்றனர். இது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன காரணம்? அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த படுதோல்வியே. அதாவது, நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களை கைப்பற்றி தோல்வியை சந்தித்தது. இதன் மூலமாக எதிர்க்கட்சி தலைவராக ஆக முடியாத நிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டார். இங்கு தான் அதிமுகவின் பிளவு ஆரம்பித்து இருக்கிறது. ஏனென்றால், தவெக என்ற புதிய கட்சி ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கான பெரும்பான்மைக்கு சற்றே தடுமாறி போது, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இடது சாரிகள், ஐயூஎம்எல், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு கொடுத்ததால் தவெக தலைவர் முதலமைச்சரானர். ஆனால், இந்த சம்பவத்...