இடுகைகள்

தாமதம் ஏன்?

படம்
  முதல்வர்  மு.க.ஸ்டாலினின் பேரனும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இதற்கான பட்டமளிப்பு விழாவிலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேரனை வாழ்த்தினார். அதன் பிறகு லண்டனில் ஓய்வெடுத்து வந்தார். மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு இன்று சென்னை திரும்புகிறார்.  காலை 8 மணிக்கு அவர் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்புக்கு தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.  காலை 7 மணி முதல் விமான நிலையத்தில் தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் திரள தொடங்கினார்கள். சிறிய மேடை ஒன்று அமைத்து அதில் நின்று தொண்டர்கள் வரவேற்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் கட்சியினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக மேடை அமைப்பதற்கு பலகைகள் கொண்டு வரப்பட்டன.  ஆனால் மேடை அமைக்க தமிழ்நாடு காவ்துறையினர் அனுமதிக்கவில்லை. தாரை-தப்பட்டை போன்ற இசைக் கருவிகளுடன் வந்த கலைஞர்கள் வாத்தியங்களை வாசிக்க தொடங்கினார்கள்....
படம்
 📰 நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி சபரிவர்மன் கொல்லப்பட்ட வழக்கு. சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னையில் திமுக மாற்றுத்திறனாளிகள் அணி சார்பில் ஆர்ப்பாட்டம். 📰 சன் பிக்சர்ஸ் தயாரித்த ராயன் படத்திற்கு, சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிப்பு. கடந்த 2024-ல் தனுஷ் இயக்கி, நடித்த திரைப்படத்திற்கு அங்கீகாரம். 📰 கேப்டன் மில்லர், அமரன், மகாராஜா, மெய்யழகன் உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருது. 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில், 5 தமிழ் படங்கள் 9 விருதுகள் வென்று அசத்தல். 📰 சிறந்த திரைப்படமாக Article 370-ம், அதில் நடித்த யாமி கவுதம் சிறந்த நடிகையாகவும் தேர்வு. "பிரம்மயுகம்" படத்தில் நடித்த மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிப்பு. 📰 பழனி கோயில் நில மோசடி தொடர்பாக சார்பதிவாளர், நிலத்தை வாங்கியவர் வீடுகளில் சோதனை. 5 மணி நேரம் நீடித்த சிபிசிஐடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல். 📰 கோயில் நில மோசடி விவகாரத்தில் மேடை அலங்கார ஊழியர், சமையலரிடம் விசாரணை. தலைமறைவாக உள்ள வெள்ளத்துரை, சேதுபதியை பிடிக்க சிபிசிஐடி மும்முரம். 📰 விலை மதிப்பற்ற...

யார் அந்த 5மோசடி பேர்வழிகள்?

படம்
பழனி ரூ.100 கோடி நில மோசடி. பழனியில் ரூ.100 கோடி நில மோசடி விவகாரத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் இன்று சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இந்த 1.40 ஏக்கர் நிலம், 1888-ம் ஆண்டு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குத் தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலம் பக்தர்களுக்கான வாகன நிறுத்துமிடமாக (Parking lot) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ. 100 கோடி. இந்த நிலத்தைத் தனியாருக்கு விற்கவோ அல்லது மாற்றவோ கூடாது என்று பல நீதிமன்ற உத்தரவுகளும், அறக்கட்டளையின் ஆவண நிபந்தனைகளும் உள்ளன. கோயிலின் நிலங்கள் பிரிவு அதிகாரிகள், இந்த நிலத்தைப் பதிவு செய்யக்கூடாது என்று ஏற்கனவே பதிவுத் துறைக்குத் தடைகளைத் தெரிவித்து வந்தனர். இந்த நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்ய மார்ச் மாதமே முயற்சி நடந்தது. அப்போது பதிவுத்துறை அதை நிராகரித்து, ஏப்ரல் 1-ம் தேதி ‘மறுப்புச் சீட்டு’ (Refusal slip) வழங்கியது , . அதன்பின், சம்பந்தப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். கடந்த ஜூலை 6-ந் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தின் கூடுதல் பொறுப்பில் இருந...

போலீஸ் ராஜ்யம். ?

படம்
🔹 பழனி கோயிலின் ரூ.100 கோடி மதிப்பு நில பத்திரப்பதிவு முறைகேட்டில், திடீர் திருப்பம். தன்னை வழக்கில் சிக்க வைத்துள்ளதாக கூறி மனு தாக்கல் செய்த சார்பதிவாளர் ஜஸ்டினுக்கு, முன் ஜாமின். 🔹தமிழ்நாட்டில் 35 வட்டாட்சியர் அலுவலகங்களில் திடீர் லஞ்ச ஒழிப்பு சோதனை. கணக்கில் வராத 82 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி. 🔹தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான சுய ஆன்லைன் பதிவு நேற்று தொடக்கம். முதலமைச்சர் ஜோசப் விஜய், சுயமாக தனது விவரங்களை பதிவு செய்தார். 🔹குதிரை பேர விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபியிடம் அதிமுக புகார். 6 அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியதாக தவெக மீது குற்றச்சாட்டு. சென்னையிலிருந்து மதுரை சென்ற ஆம்னி பேருந்து பெரம்பலூர் அருகே தீ பிடித்து எரிந்தது விஜய்யுடன் இணைந்திருப்பது அனைவரும்  ஊழல்வாதிகள்.. அப்புறம் எப்படி இவரு லஞ்சத்த ஒழிப்பாரு?_ சகாயம் I.A.S. கேள்வி பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை. திருப்பூர் செங்கப்பள்ளி அருகே கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு நாட்டின் முதல் தனியார் ஆர்பிட்டல்...

பழனிக்கே மொட்டை,?

படம்
  காவலர்கள் நியமனத்தை தொடங்க வேண்டும் - அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதன் மூலம், ஏற்கெனவே சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கையும், காவல்துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தையும் ஒருசேர கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த அரசு. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். @ பழனி கோவில் நில மோசடி வழக்கு - சார் பதிவாளருக்கு நிபந்தனை ஜாமீன் பழனி கோவில் நில மோசடி வழக்கில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன்ஜாமின் வழங்க கூடாது என கோவில் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. # தொகுதி மறுவரையறை; தி.மு.க முடிவு தான் முக்கியம் - நவாஸ் கனி பேட்டி தொகுதி மறுவரையறை மசோதாவை தி.மு.க...