நடப்பது ஒன்று,....!
டிரம்ப் கூறுவது வேறொன்று...? இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கி மூன்று வாரங்களுக்கும் மேலாகிவிட்டது பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள அண்டை வளைகுடா நாடுகள் மீதும் இரான் தாக்குதல் நடத்துவதால் மத்திய கிழக்கு பிராந்தியம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க இரானுக்கு 48 மணிநேர அவகாசம் அளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதை செய்யாவிட்டால் இரானின் மின் உற்பத்தி நிலையங்களைத் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்ரேல் மீதான இரானின் பதிலடி தாக்குதல்களில் தெற்கு இஸ்ரேலில் அராட், டிமோனா ஆகிய நகரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை, தெற்கு இஸ்ரேலில் உள்ள அராட் என்ற சிறிய நகரத்தை இரானிய ஏவுகணை ஒன்று தாக்கியது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு அதனைத் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டது. இரானிய ஏவுகணைத் தாக்குதலில் 88 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது, அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. முதல் கட்ட தகவல்படி, இரானிய தாக்குதலில் 10 பேர் பலத்த காயமட...