தூயசக்தி நாடகம்முடிந்தது!
பிளவுபட்ட அ.தி.மு.க. என்னும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயன்று, உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருப்பதாக தவெக மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். இது தூய சக்தியா இல்லை, அடுத்த கட்சி MLAக்களைத் தூக்குற சக்தியா? என தவெகவுக்கு வாக்களித்த மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகி விட்டதாக சாடி உள்ளார். திமுக எம்எல்ஏக்கள் வெளி நடப்பு இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;தவெக ஆட்சி அமையவோ, தொடரவோ திமுக தடையாக இருக்காது என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திமுக எம்எல்ஏக்கள், நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்து உள்ளனர். சட்டமன்றத்தில் இருக்கும் தோழமைக் கட்சி எம்எல்ஏக்களான பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்து உள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை கூறிக்கொள்கிறேன். நிலைப்பாட்டை மதிக்கிறோம் இ.கம்யூ., மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய தோழமைக் கட்சிகள், குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது எ...