இடுகைகள்

கோணல் சுழி,.!

படம்
  ரயில்களில் தொடர்ந்து அச்சுறுத்தி தகராறு செய்வதையே வேலையாக்க செய்து வந்த மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவின் பேரில் இளைஞர் நவீன்(22) குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவர்களிடையே மோதலை ஏற்படுத்தி, பயணிகளுக்கு இடையூறு செய்து, பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக பல புகார்கள் அவர் மீது தொடர்ந்து எழுந்த நிலையில், திருத்தணியில் தனிப்படையினர் நவீனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். கும்மிடிப்பூண்டி அருகே சோழியம்பாக்கம் குளத்தில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை தர்சினி உயிரிழப்பு. பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும்.சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை. கோணல் சுழி,.! அ திமுக பிரச்சாரக் கூட்டத்தில் பறந்த தவெக கொடியைப் பார்த்து, ‘’பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க’’ என்று அதிமுக – தவெக கூட்டணி அமைந்துவிட்டது என்று குதூகலித்தார் எடப்பாடி பழனிசாமி.   அந்த கொடியைப் பிடித்தது தவெக தொண்டர் அல்ல.   அது அதிமுக தொண்டர்தான் என்பது பின்னர்தான் தெரியவந்தது.  எடப்பாடி பழனிசாமிக்கும்...

சட்டம் ஒழுங்கு?

படம்
SIR-க்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 11ம் தேதி விசாரணை. கணக்கெடுப்பு பணிகளை தீவிரமாக கண்காணிக்க கட்சியினருக்கு முதலமைச்சர் உத்தரவு. திமுக-வின் 75-வது ஆண்டு நிறைவையொட்டி, இளைஞர் அணி சார்பில் அறிவுத் திருவிழா. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுதொடங்கிவைக்கிறார். பீகார் மின் கொள்முதல் முறைகேடு அதானியால் ரூ.60 ஆயிரம் கோடி ஊழல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு. கோ வையில் நேற்று ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக செய்திகளில் பார்த்தேன் என்று "டிவி புகழ்" பழனிசாமி சமூக வலைதளங்களில் நீட்டி முழக்கி இருக்கிறார். உண்மை நிலை என்னவென்றால் கோவையில் யாரும் கடத்தப்படவில்லை.  ஒரு கணவன் - மனைவிக்குள் சிறிது சச்சரவு ஏற்பட்டு காரில் சென்றுள்ளார்கள். அதனை பார்த்த ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல்ல, காவல்துறை தனிப்படை அமைத்து துரிதமாக செயல்பட்டு அந்த கணவன் - மனைவியை கண்டறிந்து விசாரித்துள்ளனர். திமுக அரசு மீது திட்டமிட்டு பொய்களை வதந்திகளை ஆதாரமற்ற தகவல்களை பரப்பி அரசியல் பிழைப்பை நடத்த நினைக்கிறார் பழனிசாமி. அரைகுரையாக செய்திகளை பார்த்துவிட்டு ஒரு ...

விடாது(கருப்பு) கொடநாடு?

படம்
உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை  திமுக வழக்கு   தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ரத்து செய்யக் கோரி, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கை வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், சிறப்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 4ஆம் தேதி S.I.R. பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், வீடு வீடாக சென்று சிறப்பு தீவிர திருத்தத்துக்கான விண்ணப்பப் படிவங்களை வழங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ரத்து செய்யக் கோரி, திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ...