இடுகைகள்

வடக்கு மட்டுமே போதும்!

படம்
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியுள்ள தீ, டெல்லியை சுட்டெரிக்கும். ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை. கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா மீது நள்ளிரவு வரை விவாதம். 3 மசோதாக்கள் மீதும் இன்று மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு.  தொகுதி மறுவரையறையால் தென்மாநிலங்கள் வஞ்சிக்கப்படும் என திருமாவளவன் கண்டனம். நாட்டை ஆள்வதில் தமிழ்நாட்டின் பங்கை நீர்த்துப் போகச்செய்ய பாஜக சதி -சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உறுதி. தமிழ்நாட்டு எம்.பி.க்களின் எண்ணிக்கை 59-ஆக உயரும் என அமித்ஷா விளக்கம்.  @ தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என எடப்பாடி பழனிசாமி உறுதி. யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என பாஜக உறுதி அளித்துள்ளதாக, கோவையில் பேச்சு.ஊதுகுழலாக இருந்த பழனி எப்போது பாஜக வில் இணைந்தார்? பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றம்   தள்ளுபடி. பாஜ தலைவர் நிதின்நபின் உட்பட 16 பேர் மாநிலங்...

கோயபல்ஸ் நிம்மி மாமி!

படம்
  இ ரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனியில் பிரச்சார அமைச்சராகவும், ஹிட்லருக்கு வலது கரமாகவும் திகழ்ந்தவன் கோயபல்ஸ் என்பதை அனைவரும் அறிவோம். அவனது சிறப்பு என்பதே ‘புளுகு’வதில் அவனுக்கு நிகர் வேறு எவரும் இலர் என்பதே ஆகும். இந்தியாவைப் பொருத்தமட்டில் காவிகள் அரசியலில் தலை தூக்கிய பிறகு, ஆர்.எஸ்.எஸ் – பாஜக இந்துத்துவ சங்கிக் கும்பல் சகல துறைகளிலும் ‘காவி அடிப்பதிலும்’, ‘புளுகித் தள்ளுவதிலும்’, காவிகளுக்கு நிகர் காவிகளே என்று சகல துறைகளிலும் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  அதற்கு அண்மை எடுத்துக்காட்டுத் தான் மோடி- அமித்ஷா கை பானமாக விளங்கும் நிர்மலா சீதாராமன் அவிழ்த்துக் கொட்டிய புளுகு மூட்டைகள் ஆகும். ஏற்கனவே விவசாயிகளின் பல்வேறு உரிமைகளைப் பறித்து, கார்பரேட் நலன்கள் சார்ந்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, அதன் காரணமாக டெல்லியில் நடத்திய மாபெரும் விவசாயிகள் போராட்டத்தையும், காவிக் கூட்டத்தை குறைந்தபட்சம் அடிபணிய வைத்ததையும் நாடு மறந்து விடாது. அப்படி இருக்கின்ற பொழுது சிந்திக்கின்ற ஒவ்வொன்றையும் பாசிச பாஜக அரசு கார்ப்பரேட் நலன் கருதியே அமைவதால் ஏற்கனவே புண்பட்டுப் ப...

இன்றைய மக்களவை!

படம்
# இன்று  மக்களவையில்  நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று (ஏப்ரல் 16, 2026) நடைபெற்று வரும் சிறப்பு அமர்வின் முக்கிய நிகழ்வுகள் பற்றி பார்ப்போம். # நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று தொடங்கியுள்ள சிறப்பு அமர்வு, தேசத்தின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது மற்றும் தொகுதிகள் மறுவரையறை செய்வது தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்தக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பின்னரே இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்ற நிபந்தனை இருந்ததால் அது இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை. தற்போது அதற்கான 'அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா' மற்றும் 'தொகுதிகள் மறுவரையறை மசோதா' ஆகியவற்றை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்துள்ளார். இவற்றுடன் சேர்த்து யூனியன் பிரதேச சட்டங்கள் தொடர்பான திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர...

மசோதா நிறைவேறுமா?

படம்
பரபரப்பான சூழலில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம். மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்களை ஒன்றாக அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டம். தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்பு. ஒன்றிய அரசு தந்திரம் செய்வதாக மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு. அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய ஈரான் சென்ற பாகிஸ்தான் குழு. 2-ம் கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்பு. தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டத்தில் வெல்லும் வரை நாம் ஓயக்கூடாது. தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக ஓரணியில் திரளவும் மு.க.ஸ்டாலின் அழைப்பு.  ஒன்றிய பாஜக அரசுக்கெதிராக அனைவரும் வீடுகளில் இன்று கருப்புக் கொடி ஏற்ற திமுக வேண்டுகோள். இந்தியாவை இருண்ட காலத்துக்கு அழைத்துச் செல்ல பாஜக முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு.  ஒன்றிய அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு கடும் பாதிப்பு. தென்னிந்தியாவைவிட வடமாநிலங்களின் தொகுதிகள் நான்கு  மடங்கு வரை அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல். Snapchat App நி...