இடுகைகள்

சைலன்ட் மோட்?

படம்
  சைலன்ட் மோட்? தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் அமர்ந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்ந்து நடந்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.  கோவையில் பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து கடலூரில் 25 வயது மதிக்கப்பட பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.  இதுபோல தமிழ்நாட்டில் தினம் ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை நடந்து வருகின்றது. அரசு என்ன செய்கிறது ? என திமுக ,அதிமுக ஆகியோர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்.  அவர் வெளியிட்ட பதிவில், கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதுபோல தொடர்ச்சியாக நாடாகும் குற்ற சம்பவங்களை பார்க்கும்போது ?தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என ஒன்று இருக்கின்றதா ? இல்லையா ? என்றே தெரியவில்லை.  இந்த சோபா மாடல் ஆட்சி அமைந்தது முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைனு கு...

7 நிமிசம் கொடுத்த மோடி !

படம்
  சென்னையில் இன்று நடைபெற இருந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா திடீர் ரத்து. முதல்நாள் கையெழுத்திட்ட திட்டத்தின் தொடக்க விழா மீண்டும் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் தமிழ்நாட்டில் சிறுவன் முதல் மூதாட்டி வரை பாலியல் தொல்லைக்கு ஆளாகும் கொடுமை. காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என உதயநிதி ஸ்டாலின் கண்டனம் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுவதுதான் முதல் கடமை என சி.வி.சண்முகம் பேட்டி. வரும் 1-ம் தேதி முடிவை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் டெல்லியில் ராகுல், சோனியாவைச் சந்திக்காமல் சென்னை திரும்பிய முதலமைச்சர் விஜய். காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காதது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கவும் மறுப்பு கர்நாடக முதலமைச்சராக நாளை தேர்வு செய்யப்படுகிறார் டி.கே.சிவக்குமார். சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை பதவியேற்பு விழாவை நடத்த திட்டம் கன்னியாகுமரி, நாகர்கோவில், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழை. குளச்சலில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு. மதுரை அலங்காநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்கம் கொள்ளை. 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்...

மேகேதாட்டு.......

படம்
  கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அண்மையில் பேசுகையில், “மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை ஒன்றிய  அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும்.  ஒன்றிய  அரசின் அனுமதி கிடைத்தவுடன் பூமி பூஜை நடத்தப்படும். இதனை தமிழக அரசு எதிர்க்க எந்த உரிமையும் இல்லை” எனக் கூறினார். தமிழகத்துக்கு எதிர்க்கும் உரிமை இல்லை என்று டி.கே.சிவகுமார் கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஜனநாயகத்திலும் கூட்டாட்சியிலும் இத்தகைய அணுகுமுறை விரும்பத்தக்கதல்ல.  மேகேதாட்டு கர்நாடக மக்களுக்கு நியாயமான தேவையாக இருக்கலாம். ஆனால் அந்தத் தேவையை முன்னிறுத்தி, காவிரி பாயும் பிற மாநிலங்களின் நியாயமான உரிமைகளையும் நிராகரிக்க முடியாது. தமிழ்நாட்டின் காவிரி உரிமைகள் என்பது கர்நாடகா வழங்கிய கருணையோ அல்லது அரசியல் சலுகையோ அல்ல.  தமிழ்நாட்டின் உரிமைகள் என்பது உச்ச நீதிமன்றத்தாலும் சட்டத்தாலும் உறுதி செய்யப்பட்ட உரிமைகள். இதனை டி.கே.சிவகுமார் போன்றவர்கள் மறந்துவிடக் கூடாது. கர்நாடகாவில் காவிரி ஆறு உற்பத்தி ஆவதாலே, அதன் முழுமையான உரிமையை அம்மாநிலம் மட்டும் கோர முடியாது.  ...

ஒரு மூணு முடிச்சாவாலே

படம்
  ஒரு மூணு  முடி ச்சா வாலே தமிழக அரசியல் களம் தற்போது பல்வேறு அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்குள் நிலவும் உட்கட்சிப் பூசல்களும், புதிய கட்சிகளின் வரவும் அடுத்தடுத்து பல திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன.  இத்தகைய இக்கட்டான சூழலிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடி வருகிறார். இருப்பினும், கட்சியில் உள்ள பல முக்கிய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த தலைவர்கள் அடுத்து என்ன செய்வது, எந்த மாதிரியான முடிவை எடுத்தால் தங்களின் அரசியல் எதிர்காலத்திற்குச் சரியாக இருக்கும் என்ற குழப்பத்திலும், தீவிர ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த அரசியல் குழப்பத்தின் மையப்புள்ளியாக தற்போது மாறியிருப்பவர் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான சி.வி. விஜயபாஸ்கர் ஆவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, சி.வி. சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோரின் அணியில் இருந்து பிரிந்து சென்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிலர், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சட்டமன்றத்தில் உள்ள அவரது அறையில் நேரி...

பேரத்தில் வேகம் .செயலில்

படம்
🗞️ எடப்பாடி பழனிசாமியுடன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திடீர் சமரசம். ஒருங்கிணைந்த அதிமுகவாக செயல்படுவோம் என வேலுமணி அறிவிப்பு. 🗞️ சி.வி.சண்முகத்துடன் அதிமுகவினர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தை தோல்வி. செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் ஆவேசத்துடன் புறப்பட்ட சி.வி.சண்முகம்.  🗞️ அதிமுகவில் பிளவு இல்லை, கருத்து வேறுபாடு மட்டுமே நிலவியதாக எஸ்.பி.வேலுமணி விளக்கம். சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஒற்றுமையாக இருந்து ஆராய உள்ளதாகவும் பேட்டி. 🗞️ நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம். பொது இடங்களில் மாடுகளை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் தடை . ஒன்பது முக்கியத்துவர்கள்! முதலமைச்சரின் டெல்லி பயணம்: தனி விமானத்தில் பயணித்த 9 முக்கியப் பிரமுகர்களின் முழு விபரங்கள் என்னென்ன என்பது தொடர்பாக இங்கு காணலாம். தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், மத்திய அரசுடனான அலுவல் சார்ந்த பேச்சுவார்த்தைகளுக்காகவும், பல்வேறு மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாகத் தேசியத் தலைநகர் டெல்லிக்குச் சென்றுள்ளார். முதலமைச்சரின் இந்த மு...