வள்ளலார் மாநாடு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.2.2026) சென்னையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற “அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026”-யை தொடங்கி வைத்து, ஆற்றிய உரை. ‘தருமமிகு சென்னை’ என்று வள்ளலார் போற்றிய சென்னையில், அவர் காட்டிய அறநெறிகளை, வாழ்க்கை முறையாகவே பின்பற்றி வரும் ஆன்மீக அன்பர்களான உங்களை எல்லாம் இந்த “அனைத்துலக வள்ளலார் மாநாட்டில்” சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வள்ளலார் பாடுவதற்காக எடுத்துக்கொண்ட திருவாரூரைச் சேர்ந்தவன் என்ற பெருமையோடு இந்த மாநாட்டில் நான் பங்கேற்க வந்திருக்கிறேன். இந்த மாநாட்டை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கும், அவருக்கு துணை நிற்கக்கூடிய அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் அத்தனை பேருக்கும் நான் இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நம்முடைய சேகர்பாபு அவர்களை பொறுத்தவரைக்கும், கழகப் பணியாக இருந்தாலும் சரி, அரசின் சார்பிலான ஆன்மீகப் பணிகளாக இருந்தாலும் சரி, அதைச் சிறப்பாக செய...