தன் தலையில் தானே.....!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க) முன்னாள் முதன்மைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பனையூர் பாபு, தனது ஆதரவாளர்கள் மற்றும் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தி.மு.க.வில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது. புதிதாகக் கட்சியில் இணைந்தவர்களை வரவேற்றுப் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், லட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகளில் ஒருவராக தங்களை இணைத்துக்கொள்ள வந்துள்ள அனைவரையும் முதன்மை தொண்டனாக வரவேற்கிறேன். பனையூர் பாபு கொள்கைக்காக உறுதியோடு உழைக்கக்கூடிய ஒரு செயல்வீரர்; அதற்கு அவரது அரசியல் பயணமே சாட்சி. ஆதிதிராவிடர் மக்களுக்கு தி.மு.க. அரசு எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் வேலை அதிகமாக இருக்கும். அத்தகைய உழைப்பிற்குத் தயாராக வந்துள்ள உங்களை மனதார வரவேற்கிறேன் என்றார். தொடர்ந்து தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) ஆட்சி குறித்து மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனங்கள...