இடுகைகள்

தியாகம் செய்ய வேண்டுமாம்

படம்
  தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு. ஊத்துக்கோட்டை பகுதிகளில் மண் ஏற்றி செல்லும் போது தார்ப்பாய் போடாமல் செல்லும் லாரிகள் : விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள். தவெகவை ஆதரிக்க அதிமுக சட்டமன்ற குழு கூட்டத்தில் முடிவு: சி.வி.சண்முகம் பேட்டி. நாமகிரிப்பேட்டை அருகே நிலத்தகராறில் விவசாயி மீது ஜீப்பை ஏற்றி கொடூர கொலை: சித்தப்பா, 2 மகன்கள் கைது. முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவை தொடர்ந்து விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: ஒன்றிய அரசு உத்தரவு திருநங்கைகளுக்கு இடையே கோஷ்டி மோதல் பேசின்பிரிட்ஜ் காவல் நிலையம் மீது கற்களை வீசி கொலைவெறி தாக்குதல்: பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம். வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மூலம் விஜய்யை வளைத்துப்போடும் அமித்ஷா: கூட்டணி அமைச்சரவையிலும் சேர்ந்து தன்கட்டுப்பாடில் அரசை கொண்டுவர முடிவு இந்தியாவின் நிலை. பொருளாதார நெருக்கடி! இந்தியா நெருக்கடிகளைச் சந்தித்து வருவதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். கொரோனா மற்றும் போர்: முதலில் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள், அதனைத் தொடர்ந்து நிலவும் சர்வதேசப் பொருளாதாரச் சவால்கள் மற்றும் தற்போது மேற...

பணக்காரர்-குற்றவாளிபிரதிநிதிகள்!

படம்
  குற்றவாளி பிரதிநிதிகள்! ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) மற்றும் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் அமைப்பு ஆகியவை 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 234 வேட்பாளர்களில் 233 பேரின் சுயவிவரப் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.   இதில், தமிழக வெற்றி கழகம் சார்பில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் டி. அருண்குமாரின் பிரமாணப் பத்திரம், இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெளிவாக இல்லாத காரணத்தால் ஆய்வு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரமாணப் பத்திரத்தில், 233 எம்எல்ஏக்களில் 126 எம்.எல்.ஏ.க்கள் அதாவது 54 சதவீத பேர் தங்கள் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.  கொலை, கடத்தல் போன்ற கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக 56 எம்.எல்.ஏ.க்கள் அதாவது 24% பேர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஒரு எம்.எல்.ஏ. தன் மீது கொலை வழக்கு இருப்பதாகவும், 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் மீது கொலை முயற்சி வழக்கு இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளனர்.   இந்த பட்டியலில், அதிகபட்சமாக தேவைக் கோரல்...

ஆட்சி,அதிகாரம் படுத்தும் பாடு!

படம்
தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் மு.க.ஸ்டாலினை ஜோசப்விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்றபோது விஜயை, தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கொறடா எ.வ.வேலு, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் வரவேற்றனர். த.வெ.க. சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகர் சபாநாயகராக போட்டியிடுகிறார். அரசியல்  நி க லவரம்!  சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என அக்கட்சியைச் சேர்ந்த 17 சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைச் செயலரிடம் மனு அளித்துள்ளனர்.  இதனால், அதிமுக சட்டமன்றக் குழு தலைவர் பதவியைத் தக்கவைப்பதில் பழனிசாமிக்குச் சிக்கல் எழுந்துள்ளது. 17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று காலை தொடங்கியது. அதிமுகவில் மொத்தம் 47 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், சட்டமன்ற கட்சித் தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இதுவரை 17 எம்எல்ஏக்கள் மட்டுமே சட்டமன்றச் செயலரிடம் மனு அளித்துள்ளனர்.  ...

புயலுக்கு வாய்ப்பு?

படம்
ரூ.4050 கோடியிலான டிட்வா புயல் புனரமைப்பு திட்டத்தை விரைவுபடுத்த இந்தியா-இலங்கை முடிவு. அதிமுகவில் உட்கட்சிக் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்னும் சட்டப்பேரவைக்கான கட்சித் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹார்முஸ் நீரிணையில் சர்வதேசக் குழுவின் பணிக்கு ஈரான் எதிர்ப்பு. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். எடப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி  வாள் கொண்டு கேக் வெட்டிய சம்பவங்களில் ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அதே போல கேக் வெட்டிய ராயபுரம் தவெக எம்.எல்.ஏ. விஜய் தாமு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார். 10 வாரத்தில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது: எண்ணெய் நிறுவனங்கள் . எஸ்.பி வேலுமணி, சி.வி சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் தனியாக சட்டப்பேரவைக்கு வருகின்றனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து சட்டப்பேர...

ஆட்சித் திறமையும்தான் வேணும்

படம்
மனசும்+ஆட்சித் திறமையும்தான் வேணும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று (மே 10 ஆம் தேதி) பொறுப்பேற்று உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து,  அதோடு சில கேள்விகளையும் முன்வைத்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் தளத்தில், தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.  எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு.  மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். ‘ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு’ – என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு...