இடுகைகள்

நல்லா ஆள்றாங்க ஆட்சி...!

படம்
  அதிமுக கட்சியில் இருந்து அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதுவரை அதிமுகவில் இருந்து மட்டும் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவி ராஜினாமா செய்து உள்ளனர். ராஜினாமா செய்த கையோடு ஆளும் கட்சியான தவெகவில் இணைந்தும் வருகின்றனர். இது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன காரணம்?  அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த படுதோல்வியே. அதாவது, நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களை கைப்பற்றி தோல்வியை சந்தித்தது.  இதன் மூலமாக எதிர்க்கட்சி தலைவராக ஆக முடியாத நிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டார். இங்கு தான் அதிமுகவின் பிளவு ஆரம்பித்து இருக்கிறது. ஏனென்றால், தவெக என்ற புதிய கட்சி ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கான பெரும்பான்மைக்கு சற்றே தடுமாறி போது, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இடது சாரிகள், ஐயூஎம்எல், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு கொடுத்ததால் தவெக தலைவர் முதலமைச்சரானர். ஆனால், இந்த சம்பவத்...

வருகிறது மருந்துகளுக்கான க்யூ.ஆர் கோடு

படம்
  திமுக தயவால் 4 முறை எம்பியானீங்க... விசில போடு, வைப் பண்ணு, டான்ஸ் ஆடு தேவையில்லாமல் விமர்சனம் பண்ணாதீங்க... வைகோவுக்கு சிவசங்கர் எச்சரிக்கை அரசு உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் புதுக்கோட்டை ,கருங்காகுறிச்சியில் 9 வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொன்ற 12ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் ஜமுனா ராணி. இவர்  கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆய்வு பணிக்காக சென்றார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட அரசு வாகனத்தின் அருகே நின்றபடி சினிமா பாடலுடன் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். முதல்வர் வழி. இன்று கூடுகிறது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு. திரிணாமுல் காங்கிரசில் தீவிரமடையும் உள்கட்சி மோதல் கட்சியின் பெயர், சின்னம், பதவிகளை சட்டவிரோதமாக பயன்படுத்துகின்றனர்: ரிதாப்ரதா அணி மீது மம்தா அணி 4 காவல்நிலையங்களில் புகார் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்  தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணி காங். தலைவர்கள் பதவிக்காக யார் கா...

நீதிமன்றம் வாங்க!

படம்
ஆதாரத்துடன் நீதிமன்றம்  வாங்க!   கடந்த திமுக ஆட்சியில் மொத்தம் உள்ள 32 துறைகளில் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் மருமகனுமான சபரீசனும் தலா 16 துறைகள் எனப் பிரித்துக் கொண்டு ஊழல் செய்து பணம் வசூலித்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அண்மையில்  பேசியிருந்தார். அதேபோன்று, திமுக ஆட்சிக்காலத்தில் மின் கட்டண உயர்வு மூலம் கிடைத்த வருவாயால் பயனடைந்தது சபரீசனா அல்லது முதல்வரின் குடும்பத்தினரா என்ற கேள்வியை எழுப்பியதுடன், திமுக – அதிமுக இணைந்து செயல்படுவதாகவும் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் விமர்சனம் செய்திருந்தார்.  இந்நிலையில் சபரீசன், தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகிய இருவரும் அவதூறு கருத்துக்களைப் பரப்பியதாக வழக்கறிஞர் மூலம் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.  அதாவது கடந்த சில தினங்களாக ஊடகங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளில் தம்மைக் குறித்து உள்நோக்கத்துடன், உண்மைக்கு மாறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்த இரு அமைச்சர்களும் தொடர்ந்து கூறி வருவதாக சபரீசன் தர...

அதானிக்கு காலக்கெடு

படம்
நண்பர்களுக்கு தலைமைச் செயலகத்தில் தனி அறை! ரகசிய கூட்டங்களில் கலந்து கொள்வது ஏன்? வில்சன் கேள்வி ஜான் ஆரோக்கிய சாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் அரசு ஊழியர்கள் இல்லை என்றால், ரகசிய ஆவணங்கள் பரிமாறப்படும் மிக ரகசியமான கூட்டங்களில் அவர்கள் எந்தத் தகுதியின் அடிப்படையில் கலந்து கொள்கிறார்கள்? என்று தி.மு.க எம்.பி வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார். த.வெ.க அரசு தனது நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அரசு பதவிகளை வழங்குவதாக கருத்து பரவி வருகிறது. முன்னதாக, முதல்வர் விஜயின் அரசியல் ஆலோசகராக ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியானபோது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து அந்த நியமனத்துக்கான அரசாணை திரும்பப் பெறப்பட்டது. அதேபோல், சமீபத்தில் முதல்வரின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அரசாணை மே 12-ஆம் தேதி தேதியிடப்பட்டிருந்த நிலையில், சுமார் 40 நாட்களுக்குப் பின்னரே அது பொதுவெளியில் வெளியானது விவாதத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, தயாரிப்பாளர் வெங்கட் ரமணா டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இந்தச் சூ...

பச்சோந்தியே கேளுடா..வச்சேன் குறி நானுடா

படம்
  மதிமுக தற்போது திமுகவுடனான தங்களது கூட்டணியை முறித்துக்கொண்டது. கடந்த பத்து வருடங்களாக திமுக கூட்டணியில் தொடர்ந்து வந்த வைகோவின் மதிமுக தற்போது கூட்டணியை முறித்துக்கொள்வதாக அறிவித்து இருக்கின்றனர்.  திமுக கூட்டணியில் இருந்து விலகி மதிமுக தவெகவிற்கு செல்ல இருப்பதாகவும் தெரிகின்றது. வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தவெகவுடன் தோழமையாக இருந்து செயல்படுவோம் என வைகோ அறிவித்து இருக்கின்றார். மேலும் முதலமைச்சர் விஜய்யை சந்தித்தது குறித்தும், மதிமுகவின் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யும் பட்சத்தில் அவர்களை வெற்றிபெற செய்வது என பொறுப்பு என அவர் உத்தரவாதம் கொடுத்தது குறித்தும் பேசியிருக்கிறார் வைகோ.  மேலும் மதிமுக வேட்பாளர்களுக்காக தான் பரப்புரை செய்ய இருப்பதாகவும் வைகோவிடம் முதலமைச்சர் விஜய் தெரிவித்தாராம். இதையெல்லாம் வைகோசெய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் திமுகஉடனான கூட்டணியை முறித்துக்கொண்டதற்கான காரணம் குறித்து வைகோ பேசினார்.  சமீபத்தில் முக ஸ்டாலினை ஒரு விழாவில் சந்தித்ததாகவும் ஆனால் அவர் என்னிடம் பேசவில்லை எனவும் தெரிவித்தார் வைகோ. இந்நிலையில...