இடுகைகள்

தேசீய சனாதனக் கல்விக் கொள்கை?

படம்
  புதிதாக இந்தியாவில் எழுதப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில், இயற்பியலின் தந்தை ‘சர் ஐசக் நியூட்டனுக்கு’, மிகச்சிறந்த விமானி என்றப் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது; கர்நாடக சட்டமன்றம், ஒடிசா சட்டமன்றமாக மாற்றப்பட்டுள்ளது; ஹம்பி கோயில் வளாகம், கோனார்க் சூரியக் கோயில் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது என்னப் புத்தகமாக இருக்கும் என அனைவருக்கும் சந்தேகம் எழுந்திருக்கும். அது தனிப் புத்தகம் எதுவும் இல்லை.  தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் ஒடிசா பாடத்திட்டக் கட்டமைப்பு 2025 ஆகியவற்றின் கீழ், நடப்புக் கல்வியாண்டிற்காக பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாடப்புத்தகம்தான். ஒடிசாவில் 1 முதல் 8ஆம் வகுப்புவரை கொடுக்கப்பட்டுள்ள புதியப் பாடப்புத்தகங்களில் கண்டறியப்பட்டுள்ள 1,678 பிழைகளில் மேற்குறிப்பிட்டவை அடங்கும்.  அதிகபட்சமாக 8-ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்களில் மட்டும் 705 பிழைகளும், 7-ஆம் வகுப்பில் 387 பிழைகளும், 6-ஆம் வகுப்பில் 289 பிழைகளும் கண்டறியப்பட்டுள்ளன. மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தால் இந்தப் பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, அச்சிடப்பட்டுள்ளன.  பாடப்புத்...

எதிர்பார்ப்பு !

படம்
  நீட் மறுதேர்வில் முறைகேடு; ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற 30 பேர் பீகாரில் கைது: செல்போனுடன் பிடிபட்ட பெண் சிறையில் அடைப்பு ரூ. 7,623 கோடி வங்கி மோசடி; அனில் அம்பானி நிறுவன மாஜி சிஇஓக்கள் கைது: சிபிஐ நடவடிக்கை தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை. பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு: ஒருதலைப்பட்சமாக சபாநாயகர் நடந்துகொள்வதாக எடப்பாடி குற்றச்சாட்டு நீட் மறுதேர்வில் முறைகேடு; ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற 30 பேர் பீகாரில் கைது: செல்போனுடன் பிடிபட்ட பெண் சிறையில் அடைப்பு. உ.பியில் புதிதாக கட்டப்படும் பாலம் இடிந்து விழுந்து விபத்து: 2 தொழிலாளர்கள் காயம். கேரள அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி. ஆட்சி நடத்துவதில் கவனம் செலுத்தவில்லை; அமைச்சர், எம்எல்ஏக்களின் ரீல்ஸ் ஆட்டமே நடக்கிறது: தமிழிசை சாடல். ரூ.8 கோடி மோசடி செய்த உனக்கு கட்சி பாதுகாப்பாடா?’ சொந்த கட்சி பிரமுகரையே ஆபாசமாக திட்டிய‘ரூ.8 கோடி மோசடி செய்த உனக்கு கட்சி பாதுகாப்பாடா?’ சொந்த கட்சி பிரமுகரையே ஆபாசமாக திட்டிய நவல்பட்டு விஜி,தவெக எம்எல்ஏ: சமூக வலைதளத்தில் ‘பீப்’ ஆடியோ வைரல். மணச்சநல்லூர்.கேரம் ...

காலையில் பியூஸ் திருட்டு இரவுவில்மின்தடை?

படம்
  தூத்துக்குடியில் சூறாவளி ஏன்? தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் பகுதியில் நிகழ்ந்தது தமிழக வரலாற்றிலேயே மிகவும் அரிய, யாரும் எளிதில் பார்த்திராத ஒரு உண்மையான டொர்னடோ (Tornado - சுழற்காற்று)ஆகும். வழக்கமாக ஒடிசா, மேற்கு வங்கம் அல்லது வட இந்தியப் பகுதிகளில் மட்டுமே வீசும் இந்த டொர்னடோ, தூத்துக்குடியில் வீசியதற்குப் பின்னால் உள்ள துல்லியமான அறிவியல் காரணங்களை வானிலை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்: 1. மிகக் கடுமையான நிலப்பரப்பு வெப்பம் (Intense Daytime Heating) சம்பவம் நடந்த அன்று மதியம் வரை வாகைக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகக் கடுமையான வெயில் நிலவியது. இதனால் நிலப்பரப்பு மிகக் கடுமையாக வெப்பமடைந்து, தரையை ஒட்டியுள்ள காற்று இலகுவாகி வளிமண்டலத்தின் மேல்நோக்கி அதிவேகமாக எழும்பியது (Updraft).  2. கடல் காற்றின் ஊடுருவல் (Sea Breeze Interaction) அதே நேரத்தில், கடலிலிருந்து வந்த குளிர்ந்த, ஈரப்பதம் மிக்க காற்று நிலப்பரப்பை நோக்கி நுழைந்தது. நிலப்பரப்பில் இருந்த மிக வெப்பமான காற்றும், கடலில் இருந்து வந்த குளிர்ந்த காற்றும் வாகைக்குளம் பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்...

சாமி சத்தியமாக..,.?

படம்
🔹 பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 2 பேர் உயிரிழப்பு. பாதிக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை. 🔹தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு குப்பை அள்ளும் வண்டியில் வந்த உணவு. அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என புகார். 🔹அமோனியா வாயுக்கசிவு தொடர்பாக இறால் பதப்படுத்தும் ஆலை உரிமையாளர்கள் உட்பட 3 பேர் கைது.   ஆலை செயல்படத் தடை. 🔹இறால் பதப்படுத்தும் ஆலையில் குளிர்விப்பானில் ஏற்பட்ட கசிவே அமோனியா வாயுக்கசிவுக்கு காரணம். மூச்சுத்திணறல், ரத்தக்கசிவு, நுரையீரல் வீக்கம் என பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அலறி துடித்த சோகம். 🔹2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம்.. 🔹அமைதிப் பேச்சு வார்த்தையிலிருந்து ஈரான் வெளிநடப்பு. மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக டிரம்ப் மிரட்டியதால் வெளிநடப்பு. 🔹சிந்து நதியைத் தடுத்தால் போர் தொடுக்க தயங்க மாட்டோம். இந்தியாவுக்கு பாகிஸ்தான் பகிரங்க மிரட்டல் விடுத்த...

மீண்டும் வெற்றிப்பாதைக்கு,

படம்
  மீண்டும் வெற்றிப்பாதைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்தித்தது. தொடர்ச்சியாக இரு தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த அதிமுக கடந்த 2021 ஆம் தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் பெற்றது.  அதைத்தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. புதிதாக துவங்கப்பட்ட விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த நிலையில் திமுக எதிர்க்கட்சியாக இருக்கின்றது.  கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு சென்றது. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு என பலரால் சொல்லப்படுகின்றது. தேர்தலில் தோல்வி மட்டுமல்லாமல் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பலர் தவெகவில் இணைகின்றனர். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு முதல் இந்நாள் எம்எல்ஏக்கள் சிலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்து வருகின்றனர்.  இதனால் அதிமுக கட்சி மேலும் பின்னட...