டாஸ்மாக் ஊழியர்களின்
அவல நிலை! டாஸ்மாக் ஊழியர்களின் பணியிட பரிதாபநிலையும்,வாழ்வின் அவலநிலையும்தான் தற்போது அவர்களை போராட வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் வெறும் நாலாயிரம் ரூபாய் ஊதியத்தில் பணிக்கு முதன் முதலில் வேலைக்கு சேர்ந்தவர்கள்தான் டாஸ்மாக் ஊழியர்கள் அதுவரை தனியாரிடம் இருந்த மதுக்கடைகளை தமிழ்நாடு அரசே நடத்த ஆரம்பித்ததால் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டனர். கடைக்கு நான்குபேர்,கண்காணிப்பாள் ஒருவர் என எடுக்கப்பட்டனர். ஜெயலலிதா ஆட்சியில் மூலைக்கு மூலை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. பின் சில இடங்களில் மக்கள் பலத்த எதிர்ப்பால் கடைகள் மூடப்பட்டன. ஆனால் கடைப்பணியாளர்கள் வேலை இழப்பை தவிர்க்க மற்ற கடைகளில் அதிகமாக பிரித்து பணிக்கமர்த்தப்பட்டனர். இப்போது ஒன்பது,பத்துபேர் உள்ள கடைகள் அதிகமாக உள்ளது. இதனால் இருவர் ,இருவராக மாற்றிப் பணிபுரிவது அவர்களாக முறைவைத்து வேலைப்பார்க்கஆரம்பித்தனர். மற்றவர்கள்தங்கள் சொந்த வேலைகளைப் பார்ப்பதுடன் ஊர்சுற்ற ஆரம்பித்தனர்.பலர் சுயமாக தொழில்கள் பார்க்க ஆரம்பித்து விட்டனர். டாஸ்மாக் கடை நடப்பதில் பிரச்னை இல்லாமலிருப்பதால் அதிகாரிக...