சனாதனம் ஒழிக!
பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தரப்பினர் தரப்பில் விவாதங்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, காங்கிரஸ், சிபிஎம், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏக்கள், தவெக அரசு ஆட்சியில் நீடிப்பதற்கு ஆதரவு அளிப்பதாகப் பேசினர். இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெகவையும் முதலமைச்சர் விஜயையும் கடுமையாக விமர்சித்து பேசினார். இறுதியாக அவர் பேசி முடிக்கும் போது, “வெல்க தமிழ், வளர்க தமிழ்நாடு, மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று கூறினார். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர் பேசினார். இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அவர் மீது சிலரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ‘மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்’-னு க...