இடுகைகள்

சங்ககால தென்காசி ..!

படம்
தமிழகத்தில் கீழடி அகழ்வாராய்ச்சி தொடங்கி, பழங்காலத் தமிழர்களின் செங்கல் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.  இந்த நிலையில், தொல்லியல் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லாக தென்காசி மாவட்டத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த மிகப்பெரிய செங்கல் கட்டமைப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய கண்டுபிடிப்பு, கீழடியைப் போன்றே தென்காசியும் தமிழர்களின் தொன்மையான நாகரிக மையமாக இருந்திருக்கலாம் என்பதற்கான வலுவான சான்றுகளைத் தந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மாநில தொல்லியல் துறையினரால் தென்காசி மாவட்டத்தின் கலிங்கப்பட்டி/மாலையடிப்பட்டி அருகே, வைப்பார் ஆற்றின் வலது கரையில் இந்த அகழ்வாய்வு நடத்தப்பட்டது.  இங்கு முற்றிலும் செங்கற்களால் கட்டப்பட்ட சதுர வடிவ ‘படிக்கிணறு’ (Stepwell) ஒன்று வெளிப்பட்டுள்ளது. தமிழகத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த இது போன்றதொரு படிக்கிணறு கண்டறியப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்தக் கிணறு 4 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட சதுர அமைப்பில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உட்பகுதிக்குள் இறங்குவதற்காகக் கல்லால் ஆன படிக்க...

யோக்யதை சிறிதும் உண்டா

படம்
    த.வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்த தி.மு.க . அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. எம்.பி.வில்சன், தி.மு.க. சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன் ஆகியோர் புகார் மனு அளித்தனர். இதேபோல், அ.தி.மு.க கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.பி இன்பதுரை ஆகியோர் த.வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக மனு அளித்தனர். தி.மு.க. புகார்    சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்தனர்.  த.வெ.க. வெளிப்படையாக குதிரை பேரம் நடத்துவதாக ஆளுநரிடம் புகார் அளித்தனர். மேலும், தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளனர்.  ஆளுநரிடம் புகார் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், "த.வெ.க அரசு குதிரைபேரம் செய்து வருகிறது. இது தொடர்பான புகார்களை முழுமையாக விசாரித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வே...

ஆட்டம் ஆரம்பம்...!

படம்
  டெல்லி ஆட்டம் ஆரம்பம்...! ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசுகையில், “பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்.  நமது சமுதாயத்தில் சமூக நல்லிணக்கம் இல்லாமல் போனதுதான் மிகப்பெரிய பிரச்சனை, ஆதலால் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க  செயல்படுவேன். தேவைப்பட்டால் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு நானே நேரடியாக முதலிமைச்சரிடம் கூறுவேன்.  ஆளுநரிடமும்எதிர்பார்ப்புஇருந்தால்அரசிடமும்  மக்கள் தங்களது தேவைகளை உடனடியாக தெரிவிக்கலாம். நாங்கள் ஒன்றிணைந்து மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்போம்” என்று தெரிவித்தார். மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில் அண்மையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய ஆளுநர் அர்லேகர், “துப்பாக்கியை தூக்கிக்கொண்டு போருக்கு போவது மட்டும் தேசபக்தி கிடையாது.  நதிகளை மீட்டெடுப்பதும் தேசபக்திதான். மதுரை வைகை நதியில் நதி இருக்கிறது. ஆனால், தண்ணீர் எங்கே?  இளைஞர்கள் நதியை மீட்க முன்வர வேண்டும். வைகை நதியை யாரும் சீரமைக்காவிட்டால் நேரடியாக ஆளுநர் மாளிகையே களமிறங்கும்” என்று தெரிவித்திருந்தார்.  மேலும் மாவட்ட ஆட்சியர், கா...

தறிகெட்டு ஓடும்.....

படம்
* லண்டன் புறப்பட்டர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.. 500க்கும் மேற்பட்ட திமுகவினர் விமான நிலையத்தில் உற்சாகமாக வழியனுப்பு. 🔹 கைதான அனிதா ராதாகிருஷ்ணனை சிறையில் அடைக்க மறுப்பு. அரசு தரப்பின் வாதங்களை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவு. 🔹எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தியதாக அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு புகார். தவெக-வில் சேரச் சொல்லி போலீசார் மூலம் மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு. விஜய்யை மட்டுமல்ல, யாரையும் எதிர்கொள்வோம் எனவும் சவால்.  🔹சி.விஜயபாஸ்கர் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு. 🔹புதுச்சேரியில் சகோதரரை வீடுபுகுந்து தாக்கியதாக தவெக அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்கு. இன்று நேரில் ஆஜராக புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு. 🔹அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம். சிபிஐ. விசாரணை கோரி ராஷ்ட்ரிய ஜனதா தளம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு 🔹வெளிநாட்டுப் பங்களிப்ப ஒழுங்குமுறைக்கான சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு. டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்...