வெற்றி செல்லாது ?
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருக்கும் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு (Election Petition) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தற்போதைய முதலமைச்சர் விஜய். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார் விஜய்யின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். முக்கிய குற்றச்சாட்டுகள் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தனது மனுவில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராகப் பல்வேறு அடுக்கடுக்கான புகார்களைப் பட்டியலிட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி 18 வயதுக்குக் குறைவான குழந்தைகளைப் பயன்படுத்தி விஜய் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். விஜய் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யும்...