எண்ணித் துணிக கர்மம்
பிரதமர் மோடியி டம் பத்திரிகை சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பிய நார்வே பெண் பத்திரிகையாளரின் சமூகவலைதள பதிவுகள் இந்தியாவில் பெரும் விவாதத்தை ஏற்ப டுத்தியுள்ளன. கடந்த மே மாதத்தில் நார்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் நடந்த இந்தியா–நார்வே உச்சி மாநாட்டின் போது, அங்கு வருகை தந்த இந்திய பிரதமர் மோடியிடம் நார்வே நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஹெல் லிங் ஸ்வென் சன் பத்திரிகை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பினார். உலகிலேயே மிக உயர்ந்த பத்திரிகை சுதந்திரம் கொண்ட நார்வே நாட்டின் பத்திரிகையா ளர்களின் கேள்விகளுக்கு ஏன் பதிலளிக்க மறுக்கிறீர்கள் என்று அவர் கேட்டார். உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் 180 நாடுகளில் நார்வே 1வது இடத்திலும், இந்தியா 157வது இடத்திலும் உள்ளதை சுட்டிக்காட்டி அவர் கேட்ட இந்த கேள்வியை பிரதமர் மோடி புறக்கணித்து விட்டு அங் கிருந்து சென்றார். அதே நாளில் ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் பிற பத்திரிகையாளர்களுடன் இவரையும் அழைத்து இந்தியா...