இடுகைகள்

நன்றியும்,நக்கலும்!

படம்
  நன்றியும்,நக்கலும்! சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் முடிந்து இருக்கிறது. முதல்வராக பதவி ஏற்ற பிறகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதில் அளித்து பேசியிருக்கிறார் முதல்வர் விஜய். எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்யும் வகையில் அமைந்த அவரது உரையில், எதிர்க்கட்சிகளின் எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. அதோடு அடுத்து ஆட்சி எந்த திசையில் செல்லப்போகிறது என்ற பதிலும் இல்லை. ஒரு மாதத்தில் 200க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் நடந்திருக்கின்றன. அதில் 100க்கும் அதிகமான குற்றங்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், தவெக அரசு அமைந்த ஒரு சில நாட்களிலேயே கோவையில் 10 வயது பெண் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை, கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை, `சிங்கப்பெண் படை’ காவல்துறையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மூன்று பேர் பாலியல் தொல்லை, திருவாரூரில் ஆளுங்கட்சியின் திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர், கல்லூரி மாணவியை ஈவ்-டீசிங் செய்து இப்போது கைது செய்யப்பட்டுள்ளார், தூத்துக்குடியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு அப்பாவிப் பெண் கூட்டுப்...

இருட்டும்,,,உருட்டும்,,,?

படம்
📄 குறுவை சாகுபடிக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட கோரிய தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிப்பு. . 📄 சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக முதலமைச்சர் மாற்றி விட்டதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சனம். விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் காட்டம். 📄 எதிர்கட்சிகளின் தூண்டுதலால் போராட்டம் நடத்துவதாக விஜய் கூறியதற்கு கண்டனம். மெளனம் நீடித்தால் புரட்சி வெடிக்கும் என விவசாயிகள்சங்கம் எச்சரிக்கை. இருட்டு உள்ளத்தோடு வெள்ளை அறிக்கை! தி.மு.க. ஆட்சியின்மீது குற்றம் சொல்வதற்காக அல்ல; த.வெ.க. ஆட்சியைத் தப்பிக்க வைப்பதற்காக நிதித்துறை சார்பிலான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சியைப் பற்றியோ, நிர்வாகத்தைப் பற்றியோ, நிதியைப் பற்றியோ, அரசாங்கக் கருவூலத்தைப் பற்றியோ எதுவும் தெரியாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாக தேர்தலுக்கு முன்னதாக அள்ளி வீசினார் விஜய். அவை எதுவும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் ஆகும். அவரது சினிமா வசனத்தை நிஜம் என நம்பி வாக்களித்த அப்பாவி வாக்காளர்கள், ‘விஜய் அண்ணா! எப்போ அண்ணா வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்?’ என்று இப்போதே கேட்கத் தொடங்கி வி...

தேசீய சனாதனக் கல்விக் கொள்கை?

படம்
  புதிதாக இந்தியாவில் எழுதப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில், இயற்பியலின் தந்தை ‘சர் ஐசக் நியூட்டனுக்கு’, மிகச்சிறந்த விமானி என்றப் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது; கர்நாடக சட்டமன்றம், ஒடிசா சட்டமன்றமாக மாற்றப்பட்டுள்ளது; ஹம்பி கோயில் வளாகம், கோனார்க் சூரியக் கோயில் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது என்னப் புத்தகமாக இருக்கும் என அனைவருக்கும் சந்தேகம் எழுந்திருக்கும். அது தனிப் புத்தகம் எதுவும் இல்லை.  தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் ஒடிசா பாடத்திட்டக் கட்டமைப்பு 2025 ஆகியவற்றின் கீழ், நடப்புக் கல்வியாண்டிற்காக பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாடப்புத்தகம்தான். ஒடிசாவில் 1 முதல் 8ஆம் வகுப்புவரை கொடுக்கப்பட்டுள்ள புதியப் பாடப்புத்தகங்களில் கண்டறியப்பட்டுள்ள 1,678 பிழைகளில் மேற்குறிப்பிட்டவை அடங்கும்.  அதிகபட்சமாக 8-ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்களில் மட்டும் 705 பிழைகளும், 7-ஆம் வகுப்பில் 387 பிழைகளும், 6-ஆம் வகுப்பில் 289 பிழைகளும் கண்டறியப்பட்டுள்ளன. மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தால் இந்தப் பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, அச்சிடப்பட்டுள்ளன.  பாடப்புத்...

எதிர்பார்ப்பு !

படம்
  நீட் மறுதேர்வில் முறைகேடு; ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற 30 பேர் பீகாரில் கைது: செல்போனுடன் பிடிபட்ட பெண் சிறையில் அடைப்பு ரூ. 7,623 கோடி வங்கி மோசடி; அனில் அம்பானி நிறுவன மாஜி சிஇஓக்கள் கைது: சிபிஐ நடவடிக்கை தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை. பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு: ஒருதலைப்பட்சமாக சபாநாயகர் நடந்துகொள்வதாக எடப்பாடி குற்றச்சாட்டு நீட் மறுதேர்வில் முறைகேடு; ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற 30 பேர் பீகாரில் கைது: செல்போனுடன் பிடிபட்ட பெண் சிறையில் அடைப்பு. உ.பியில் புதிதாக கட்டப்படும் பாலம் இடிந்து விழுந்து விபத்து: 2 தொழிலாளர்கள் காயம். கேரள அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி. ஆட்சி நடத்துவதில் கவனம் செலுத்தவில்லை; அமைச்சர், எம்எல்ஏக்களின் ரீல்ஸ் ஆட்டமே நடக்கிறது: தமிழிசை சாடல். ரூ.8 கோடி மோசடி செய்த உனக்கு கட்சி பாதுகாப்பாடா?’ சொந்த கட்சி பிரமுகரையே ஆபாசமாக திட்டிய‘ரூ.8 கோடி மோசடி செய்த உனக்கு கட்சி பாதுகாப்பாடா?’ சொந்த கட்சி பிரமுகரையே ஆபாசமாக திட்டிய நவல்பட்டு விஜி,தவெக எம்எல்ஏ: சமூக வலைதளத்தில் ‘பீப்’ ஆடியோ வைரல். மணச்சநல்லூர்.கேரம் ...