இடுகைகள்

200வீரர்கள் பலி!

படம்
200 பாக்'படையினர் பலி?   அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் பல வருடங்களாக விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  அங்கு பெரும்பான்மையாக வசிக்கும் பலுச் இன மக்களின் ஆயுதக் குழு   பி.எல்.ஏ. ( Balochistan Liberation Army ) , அரசு கட்டுப்பாட்டுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நடாத்தி வருகிறது.  இந்நிலையில், பி.எல்.ஏ. வீரர்கள் பலுசிஸ்தானில் மீண்டும் புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். “Operation Herof Phase II” என்ற பெயரில் 40 மணி நேரம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் புலிகள் வெடிக் குண்டுகளை உபயோகித்து பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு பெரிய சேதம் செய்தனர்.  இதனைத்தொடர்ந்து BLA வெளியிட்ட அறிக்கைகளின் படி, பாகிஸ்தான் படைகள், போலீஸ் மற்றும் Frontier Corps உட்பட 200க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டதாக கூறியுள்ளது. முன்னதாக, பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் சில பெண்கள் தற்கொலைபோர்கள் (“Fidayeens”) ஆக பங்கேற்று வெடிக் குண்டுகள் மற்றும் IED பயன்படுத்தி ராணுவத்திற்கும் பாதுகாப்பு படைகளுக்கும் பெரும் சேதம் செய்தனர். B...

மீண்டும் பாராட்டு?

படம்
தூத்துக்குடி இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டிட பணிகள் முடிந்தும் இன்னும் பயன்பாட்டுக்கு வராதது ஏன் என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு பதில் அளிக்கும் வகையில், மத்திய அமைச்சர் மாண்டவியா நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிந்தவுடன் மார்ச் மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா சம்மதம்.அமெரிக்கா அறிவிப்பு. விமர்சித்தவரையும் மதிக்கும் பண்பு முதல்வர் பெருந்தன்மையால் மிகவும் நெகிழ்ந்து போனேன்: உச்சநீதிமன்ற ஓய்வு நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பாராட்டு .   பாலியல் குற்றச்செயலில் சிக்கிய எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடி பெயர்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் நோட்டீஸ்  . சிந்து நதி நீர் விவகாரம் இந்தியா முடிவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் உத்தரவு: பிப்.9க்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தல் . சீன ஆக்கிரமிப்பு குறித்த உரையை தொடங்கியதும் ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுப்பு: மக்களவையில் பாஜ எம்.பி.க்கள் கூச்சல் குழப்பம். மோடி, அமித்ஷா அவையிலிருந்து ஓட்டம். தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உ...

ம கா(மெடி) நதி வில்லன்

படம்
சினிமாவுல வில்லனா பார்த்தா கோபம் வரும், காமெடியனா பார்த்தா சிரிப்பு வரும். ஆனா, ஒரு நடிகரைப் பார்த்தா மட்டும் மனசுக்குள்ள ஒரு இனம் புரியாத நெருக்கம் வரும் . அவர்தான் கொச்சின் ஹனீஃபா  சலீம் அகமது கோஷ் அப்படின்னு சொன்னா யாருக்கும் தெரியாது, ஆனா 'ஹனீஃபா'ன்னு சொன்னா அந்த வெள்ளந்தி முகம் எல்லாரு கண்ணு முன்னாடியும் வந்து நிக்கும். இன்னைக்கு (பிப்ரவரி 2) அவர் நம்மளை விட்டுப் பிரிஞ்ச நாள்.  2010-ல லிவர் கேன்சர் பாதிப்புக்கு ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருந்தப்ப, திடீர் மாரடைப்பு வந்து 59 வயசுலயே 'பேக்-அப்' பண்ணிட்டுப் போயிட்டாரு. அவரோட ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? ஒரே நிமிசத்துல நயவஞ்சகமான வில்லனா முகத்தைக் காட்டுவாரு, அடுத்த செகண்டே 'ஏன்டா இப்படி பண்ணோம்'னு ஒரு பாவமான லுக் விடுவாருபாருங்க.ஹனீஃபா! கமலின் மகாநதி: இதுதான் அவருக்குப் பெரிய டர்னிங் பாயிண்ட். அந்தப் படத்துல அவர் பண்ற வில்லத்தனம் இன்னைக்கும் ரத்தத்தைக் கொதிக்க வைக்கும். வசூல் ராஜா MBBS: "பணத்தை விட பாசம் பெருசுடா..." அப்படின்னு கண்ணுல தண்ணி வர வச்சதா இருக்கட்டும்... காதலா காதலா: "சிரிச்சு சிரிச்சு ...

பாசிசத்தை வீழ்த்துவதே நமது இலக்கு!

படம்
  திராவிடமும் கம்யூனிசமும் ஒன்றுதான் - ஸ்டாலின் பேச்சு தமிழ்நாட்டில் தோல்வி என்பதால் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை பா.ஜ.க அரசு புறக்கணித்து விட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், இங்கு பா.ஜ.க.வுக்கு வேலையே இல்லை என்றார். திராவிடமும் கம்யூனிசமும் ஒன்றுதான்; பாசிசத்தை வீழ்த்துவதே நமது இலக்கு - என ஸ்டாலின் பேச்சு சென்னையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, திராவிட இயக்கத்திற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் இடையிலான ஆழமான பிணைப்பு குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார். நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த நேரத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைமைக்கும், தமிழ்நாட்டில் இயக்கத்தை வலிமையாக நடத்திக் கொண்டிருக்கும் தோழர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மட்டுமல்ல; திராவிட மாடலால் தமிழ்நாட்டை வளர்த்தெடுக்கும் முதலமைச்சராக மட்டுமல்...