இடுகைகள்

கணிப்பது எப்படி?

படம்
  தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல். அதிகபட்சமாக 169 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் கணிப்பு. புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என கணிப்பு. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தகவல். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு பின்னடைவு என கருத்துக் கணிப்பு. ஆட்சியைப் பிடிக்க திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்பு. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு 234 பார்வையாளர்கள் நியமனம். வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு. கருத்தும் கணிப்புகளும்! தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு...

அரசுக்கு ஒருபைசா நட்டமில்லை

படம்
  மின்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியில் இருந்த சமயத்தில், டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் அரசுக்கு ரூ. 397 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது சமபந்தமாக இன்று சென்னை உயர்அரசுக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்த நிலையில், இந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ள இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் தவறுகள் நடந்துள்ளது என்று ஒரு அமைப்பு புகார் தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.  இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு துவங்கிய நடைமுறை தான் இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து பல ஆண்டுகளாக டெண்டரில் மின்மாற்றிகள் வாங்குவது குறித்தான விளக்கத்தினையும் அளித்தார் செந்தில் பாலாஜி. அதன்பின்னர் பேசியவர் 1987 ஆம் ஆண்டில் இருந்து இந்த நடைமுறையை தான் மின்சார வாரியம் பின்பற்றி வருகிறது. ஆட்சி மாறி...

அதிகரிக்கும் பேரிடர்கள்- !

படம்
  குறைவான மழை. பருவமழையின் புதிய சவால்கள் இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை வீடாக குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம், நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக இந்த சீசனில் 92% சராசரி மழை மட்டுமே பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த முன்னறிவிப்பு இந்திய பருவமழையின் இயல்பான பருவக்கால, பிராந்திய மாறுபாடுகளை முழுமையாக பிரதிபலிக்கவில்லை. இவை பிந்தைய கட்டத்தில்தான் தெளிவாகத் தெரியும். சராசரியை விடக் குறைவான மழைப்பொழிவு என்ற கணிப்பு, வரவிருக்கும் பருவத்தில் ஏற்படக்கூடிய தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகளின் (Extreme rainfall events) எண்ணிக்கையைக் குறிக்கவில்லை. கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளில் இத்தகைய நிகழ்வுகள் சீராக அதிகரித்து வருவது உடன், அவை அடிக்கடி பெரிய அளவிலான பேரிடர்களாக மாறிவருகின்றன. அண்மைக் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகரிப்பதற்கு காலநிலை மாற்றமே காரணம் என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2013-ல் நடந்த கேதார்நாத் துயரத்தில் இருந்து, கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது பெரிய மழை தொடர்பான பேரிடர் நிகழ்ந்துள்ளது. 20...

தொடர்ந்து இரண்டாமாண்டு!

படம்
திராவிட மாடல் ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது நம் தமிழ்நாடு. இது சாதாரண வளர்ச்சி அல்ல, திட்டமிட்ட முன்னேற்றம் என்பதையே இது நிரூபிக்கிறது. இதுவே அனைவரையும் உள்ளடக்கிய பரவலாக்கப்பட்ட திராவிட மாடல் வளர்ச்சி" என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  மேலும் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்; "தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை! திராவிட மாடல் தனித்துவமான மாடல்! சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்! முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி! இது தொடக்கம்தான். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்!" - எனவும் தெரிவித்துள்ளார். இனி செல்லாதுங்க உங்க ஜவாப்பு! அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடைய அதிகரித்து...

யார் அந்தத் தற்குறிகள்?

படம்
 வாக்கு எண்ணிக்கை தொடர்பான நடைமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.. காலை 8 மணிக்கு, முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் என அறிவிப்பு மேற்கு வங்கத்தில் 2-ம் கட்டத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.. நாளை 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட 15 இடங்களில் சதமடித்த வெயில்.. அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு அனைத்து மருத்துவமனைகளிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவு.. வெப்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை கொளுத்தும் வெயிலால் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி மும்முரம்.. விலை டன் ஒன்று ரூ.1,300 ஆக குறைந்ததால் உற்பத்தியாளர்கள் கவலை இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே  வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து.. 8, 284 இந்திய பொருட்களுக்கு இனி நியூசிலாந்தில் வரி விலக்கு ரஷ்ய அதிபர் புதினுடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி சந்திப்பு.. ஈரானின் நலனுக்காக சாத்தியமான அனைத்தையும் செய்வோம் என புதின் உறுதி பா.ஜ.கவின் கொள்முதல் ...