இடுகைகள்

சாதனை என்பது ......

படம்
  சாதனை என்பது வெறும் நாட்கணக்கு அல்ல! இந்தியாவின் நீண்ட கால பிரதமர் என்ற சாதனையில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வின் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி முறி யடித்து விட்டதாக கூறி மத்திய அமைச்சரவை பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த சாதனைக்காக உலகத் தலைவர்கள் பலரும் மோடிக்கு ‘பாராட்டு மழை’ பொழிவதாகவும் ஊடகங்கள் ஊதுகின்றன. ஒரு ஆட்சியாளருடைய சாதனை என்பது நாட்கணக்கில் மட்டும் கணக்கிடப்படுவதில்லை. இந்தியாவின் முதல் பிரதமர் நேருவை விட அதிக நாட்கள் பிரதமர் நாற்காலியில் மோடி அமர்ந்திருக்கிறார் என்ற புள்ளிவிபரக் கணக்கு சரிதான். ஆனால் இவருடைய இந்த ஆட்சி இந்திய மக்களுக்கானதா? அல்லது இவரது கட்சியான பாஜகவை வழிநடத்தும் பாசிச அமைப் பான ஆர்எஸ்எஸ் நலன் சார்ந்ததா? என்கிற கேள்வியும், இவருடைய ஆட்சிக்காலம் ஏன் கோடானுகோடி ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டதா? அல்லது பிரதமர் மோடி யின் கார்ப்பரேட் கூட்டாளிகளின் நலனை கருத்தில் கொண்டதா? என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற் பதற்கு முன்பு வழங்கப்பட்ட வாக்குறுதிகளான ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை, கருப்புப் பணத்தை...

மின்வெட்டுத் துறை

படம்
🗞️ கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் எண்ணெய் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பம். ஹைட்ரோகார்பன் கிணறுகளால் கடல் வளம் பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்பு. 🗞️ குறுவை சாகுபடிக்காக இன்று மேட்டூர் அணையில் இருந்து, தண்ணீர் திறந்துவிடாததால் விவசாயிகள் கவலை. காங்கிரசிடம் கூட்டுவைத்து கர்நாடகாவிடம் இருந்து நீரை பெற்றுதராமல் தமிழ்நாடு அரசு ஏமாற்றுவதாக கண்டனம். 🗞️ பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டில் வலுக்கும் போராட்டம். விஜய் மவுனம் காத்து ஏமாற்றுவதாக விவசாயிகள் ஆவேசம். மின்வெட்டுத் துறை நிர்மல் குமார் ! ‘ வெறும் வாய் மட்டும் தான், செயலில் சுத்த வேஸ்ட்' என்று சொல்லும் நிலையில் தான் விஜய் ஆட்சி இருக்கிறது. அதிலும் குறிப்பாக மின்சாரத் துறையின் பெயரை 'மின்வெட்டுத் துறை' என்றே மாற்றிவிடலாம். அதற்கு அமைச்சராக இருக்கும் நிர்மல்குமார், கலர் கலராக கப்ஸா விடுகிறாரே தவிர தீர்வைக் காணும் திறமை படைத்தவராக இல்லை. தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாடு இருளில் மூழ்கி விட்டது. வாக்களித்த மக்களை மி...

" இனி கூட்டணி இல்லை!"

படம்
  ஸ்டாலின் கையில்  அறிக்கை!  இனி கூட்டணி இல்லை! எந்தவொரு அரசியல் பேரியக்கமும் தங்களின் தோல்விக்கான காரணங்களை வெறும் மேலோட்டமான கணக்கீடுகளாகப் பார்க்காமல், ஆழமான சுயபரிசோதனைக்கு உட்படுத்துவதே கள நிலவர உண்மையைக்காட்டும். அந்த வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த மாதம் 14ம் தேதி அமைத்த 36 நிர்வாகிகளைக் கொண்ட 19 களஆய்வுக் குழுக்கள், கட்சியின் அடிமட்ட எதார்த்தத்தை தலைமைக்கு கொண்டு சேர்க்கும் ஒரு முக்கிய முயற்சியாக மாறியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், இளைஞரணிப் பொறுப்பாளர்கள் எனப் பரவலான பிரதிநிதித்துவத்துடன் அமைக்கப்பட்ட இந்த குழுக்கள், தமிழகத்தின் ஒட்டுமொத்த தொகுதிகளுக்கும் நேரடியாகவே சென்று ஏகப்பட்ட தரவுகளை சேகரித்தார்கள். அந்த தரவுகள்தான், அந்த கட்சியின் எதிர்கால உத்திகளை தீர்மானிக்கும் ஆவணமாக இப்போது மாறியிருக்கின்றன. ஸ்டாலின் கையில் ரிப்போர்ட் இந்த குழுவினர், தங்களது ரிப்போர்ட்களை ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளார்கள்.. அதில், தொகுதி வாரியான அறிக்கைகள், கட்சியின் உட்கட்டமைப்பில் உள்ள பலவீனங்கள், தேர்தல் உத்திகளில் ஏற்பட்ட தவறுகள் போன்றவை அனைத்துமே புட்ட...

வெறும் தொடக்கம் மட்டுமே!

படம்
 🗞️ இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் தேவதானப்பட்டி அருகே உள்ள பண்ணையில் இன்று நல்லடக்கம். அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதால் தேனி மாவட்ட ஆட்சியர் ஆய்வு. தினசரி மின் வெட்டால் இருளில் தவிக்கும் தமிழகம் நிர்வாக திறமையின்மையால் மக்கள் பரிதவிப்பு: ஹார்ட் டிஸ்க் - பியூஸ் கேரியர் திருட்டு என உருட்டு 🗞️ காங்கிரஸ் உடனான இணைப்பு குறித்து தகவலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் மறுப்பு. இரு கட்சியினரும் சாத்தியமான கூட்டணிக்கு கதவை திறந்தே வைத்துள்ளதாகவும் தகவல். 🗞️ ஓமன் அருகே வணிக கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் மாயம். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஒன்றிய அரசு சம்மன்.     அனுபவ பொன்மொழி! விரிவாகும்   வின்பாஸ்ட்! வியட்நாமைச் சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட், தனது தூத்துக்குடி உற்பத்தி ஆலையில் ரூ. 7,000 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்ட (Phase II) விரிவாக்கத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.  இந்த விரிவாக்கத்தின் மூலம், பயணிகள் கார்களைத் தாண்டி மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் பேருந்துகளையும் தயாரிக...