இடுகைகள்

மாநில. உரிமைக்கு எதிரானது!

படம்
பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்ப்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது என முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “மாநிலப் பல்கலைக்கழகங்கள் அந்தந்த மாநிலச் சட்டங்களின் கீழ் நிறுவப்பட்டு, அவற்றின் நிர்வாகம், துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் அந்தச் சட்டங்களின்படியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இந்நிலையில், துணைவேந்தர் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உறுப்பினரைச் சேர்ப்பதற்கு மாநில அரசு இசைவு தெரிவித்திருப்பது உடனடியாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். நிறுத்த வேண்டும்.முற்றிலும். மாநில உரிமையை பலிகொடுப்பது.முட்டாள்தனமானது. மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல் குழுவின் அமைப்பு அந்தந்த பல்கலைக்கழகச் சட்டங்களில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.  அந்த அமைப்பை மாற்ற வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட சட்டத்தில், சட்டப்பேரவை மூலம் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். நிர்வாக இச...

வாயைத் திறங்க முதல்வரே!

படம்
         "சுரன்".               காவிரி நீரைத் திறந்து விட முடியாது என்றும், நீர் வேண்டும் என தமிழக அரசு கேட்கவில்லை என்றும், கர்நாடக அமைச்சர் பேசி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறி உள்ளார்.  கர்நாடக அமைச்சரின் பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.  இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;’கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீரை திறந்து விட முடியாது, நீர் வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்று கர்நாடக நீர்ப் பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  ஏற்கெனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்த பேச்சுக்கு என்ன பதில் வைத்து உள்ளார்?  முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில், கடந்த ஐந்து ஆண்டு முழுவதும், மிகச் சரியாக ஜூன் 12ஆம் தேதி...

ஊரான்வீட்டு நெய்யில் விஜய் ஸ்வீட்?

படம்
  புனே அருகே ராட்சத குப்பை குவியல் சரிந்து மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: 12 பேர் சிக்கியிருக்கலாம் என தகவல். கரூர் தவெக பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் கிளையில் முறையீடு. மாநிலம் முழுவதும் வரும் 8ம் தேதி வரை போதை பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: அனைத்து கமிஷனர்கள், ஐஜிக்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு.(அதன்பின்?) அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் மாணவர்களுக்கு பாடப் புத்தகம் வழங்கப்படவில்லை: கல்வியாளர்கள் கடும் கண்டனம் தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறுவதால் மாநில அரசுக்கு ஏற்படும் இடஒதுக்கீட்டு இழப்பை சரிசெய்ய உடனடி நடவடிக்கை: அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை. மைசூரில் அஞ்சல்துறையில் மெகா மோசடி. 44 வாடிக்கையாளர் கணக்கில் ரூ.1 கோடி திருடிய 2 பேர் கைது: சிபிஐ, நடவடிக்கை விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை கழற்றி விட பிளான் தவெக உடன் பாமக ரகசிய பேச்சு: சவுமியாவுக்கு அமைச்சர் பதவ...

குழம்பிப் போனது யாரு?

படம்
  குழம்பிப் போனது  யாரு? திமுக உடன் கூட்டணியில் இருந்தாலும், விமர்சனம் செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருப்பார்கள் என்றும், தன்னை மதிப்பிட வேறு யாருக்கும் ஆளுமையே இல்லை என்றும், திமுகவை நோக்கி திமிறி இருந்த திருமாவளவன், தற்போது அவர்களுடன் தான் கூட்டணியில் உள்ளோம் என்பதுபோல் பேசி உள்ளது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.  அது எப்படி தவெக அமைச்சரவையில் இருந்து கொண்டு அதனை எதிர்க்கும் திமுக உடன் நட்புறவில் இருக்க முடியும்? அது சாத்தியமா? அப்படியென்றால் திருமாவளவன் விமர்சனம் செய்வாரா? அல்லது விமர்சனத்திற்கு தான் பதில் அளிப்பாரா? ஒரேநேரத்தில் 2 படகில் பயணிக்க முடியுமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இருப்பது தவெக அமைச்சரவையில், ஆனால் இன்னும் கூட்டணி என்னவோ திமுக உடன் தான் என்பதுபோல் பேசிவரும் திருமாவளவன் ஏன், ”ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்” என தத்தளித்துக் கொண்டிருக்கிறார்?  இக்கரைக்கு அக்கரை பச்சையாக தெரிகிறதா?  தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாததுபோல தவெகவுடன் ஒட்ட முடியாமல் புழுங்கி கொண்டிருக்கிறாரா? அல்லது திமுகவைவிட்டு முழுமையாக விலக முடியாமல் தவி...

குதிரைப் பேர வேகம்!

படம்
  தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படாததால் மாணவர்கள் பாதிப்பு ஓசூர் ஜூஜூவாடி செக்போஸ்ட்டில் விஜிலென்ஸ் ரெய்டு: ரூ.3.40 லட்சம் பறிமுதல் நுரை பொங்கி வழியும் கெலவரப்பள்ளி அணை பெங்களூருவிலிருந்து தென்பெண்ணையில் 1400 எம்எல்டி கழிவுநீர் வெளியேற்றம்: அமைச்சர் அதிர்ச்சி தகவல் மேலும் 12 அதிமுக எம்எல்ஏக்களை தூக்கி ஆட்டத்தை தொடர்வார் விஜய்:   முன்னாள் அமைச்சர் உதயகுமார். தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக வழக்கு முன்ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி மனு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை தவெகவினருக்கு ஆர்வக்கோளாறு அமைச்சர்களுக்கு பக்குவம் வேணும்: கார்த்தி சிதம்பரம் அறிவுரை. பாட்டிலுக்கு ரூ.10 பிரச்னைக்கு தீர்வு காணவே டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவிகிதம் ஊதிய உயர்வு. பாரில் 21 வயதுக்குட்பட்டவர்களை அனுமதித்தால் பார் அனுமதி ரத்து: அமைச்சர் விக்னேஷ்  தனது கட்சியின் கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளை முதல்வர் விஜய் கட்டுப்படுத்த வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல். தொல்லியல் துறை இயக்குநராக ஜெயசீலன் நியமனம். அதிமுக பொதுச்செயலாளர், இரட்டை இலை சின்னம் விவகாரம் உயர்...