இடுகைகள்

வேட்பு மனு தாக்கல்.,

படம்
  524 வாக்குறுதிகள் கொண்ட திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வீட்டு உபயோக பொருட்கள் வாங்க 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என அறிவிப்பு . கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என திமுக அறிவிப்பு. புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கான உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்வு. நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என வாக்குறுதி. கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவிப்பு. சட்டமன்றத் தேர்தலின் கதாநாயகன் மட்டுமல்ல, கதாநாயகியும் திமுக தேர்தல் அறிக்கை தான். 200 தொகுதிகளுக்கு மேல் வென்று, திராவிட மாடல் 2.O ஆட்சி அமையும் எனவும் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடிமராமத்து திட்டம் மறுபடியும் தொடங்கப்படும். நெல்லையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி. தமிழ்நாட்டில் சட்டபேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம். விடுமுறை வருவதால், 8 நாட்களில் ...

இரவு நேர சேவை!

படம்
  இரவு நேர விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இன்று முதல் தூத்துக்குடியிலிருந்து புறப்படும் மற்ற விமானங்களின் நேரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  காலை 8:00 மணிக்குச் சென்னை புறப்பட வேண்டிய விமானம் காலை 8:10 மணிக்கும், காலை 11:25 மணிக்குச் செல்ல வேண்டிய விமானம் மதியம் 12:05 மணிக்கும், மதியம் 12:15 மணிக்கு பெங்களூரு செல்ல வேண்டிய விமானம் மதியம் 1:10 மணிக்கும், மாலை 4:15 மணிக்குச் சென்னை செல்ல வேண்டிய விமானம் மாலை 4:10 மணிக்கும் புறப்படும். முன்பு மதியம் 1:50 மணிக்குச் சென்னைக்குச் சென்று கொண்டிருந்த விமானமே தற்போது இரவு நேர சேவையாக மாற்றப்பட்டுள்ளது.  இந்த விமானம் தினமும் சென்னையிலிருந்து மாலை 6:15 மணிக்குப் புறப்பட்டு, இரவு 7:55 மணிக்குத் தூத்துக்குடி வந்தடையும். மீண்டும் தூத்துக்குடியிலிருந்து இரவு 8:15 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9:45 மணிக்குச் சென்னையைச் சென்றடையும். இந்த புதிய வசதியால் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் அவசரத் தேவைக்காகப் பயணிப்பவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  முதல் நாளான இன்றே ஏராளமான...
164 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 60-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள், 18 பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு.  வேட்பாளர் பட்டியலில் 125 பட்டதாரிகளுக்கு இடமளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 15 மருத்துவர்கள், 29 வழக்கறிஞர்கள், 17 பொறியாளர்கள் வேட்பாளர்களாக கறமிறக்கம்.  121 தொகுதிகளில் அதிமுக-வுடன் நேரடியாக மோதும் திமுக. பாஜகவுடன் 18 தொகுதிகளிலும், பாமக மற்றும் அமமுக-வுடன் 8 தொகுதிகளில் போட்டி. மகா மகா கூட்டணி அமைத்திருப்பதாகவும், தொகுதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏதும் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம். இன்று மாலை திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று தகவல். சென்னை திருவொற்றியூர், ஆ,ர்.கே.நகரில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம். மக்களோடு பயணிப்பவர்களை அதிமுக வேட்பாளர்களாக்கி இருப்பதாக பேச்சு. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடக்கம். ஏப்ரல் 6 வரை மட்டுமே அவகாசம் இருப்பதால் தொடக்கம் முதலே விறுவிறுப்படையும் என எதிர்பார்ப்பு. தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு. விருத்தாசலத...

அரசியல் மத சூதாட்டம்!

படம்
கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை கண்டறிந்து வழங்குவதில் திமுக மும்முரம். திமுக வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட வாய்ப்பு. அதிமுக 2 கட்டங்களாக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் 13 எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு மறுப்பு. நாமக்கல், லால்குடி, பரமக்குடி உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுகவினர் போர்க்கொடி. தமிழ்நாட்டில் அமைப்பு ரீதியாக பாஜகவிற்கு பலம் குறைவாக உள்ளதாக ஒப்புக்கொண்ட அமித் ஷா. தேசிய ஜனநாயக கூட்டணி வியூகத்தின் ஒரு பகுதியாக, பிராந்தியக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதாக கருத்து. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பை அலட்சியம் செய்த இஸ்ரேல். ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியதால் பதற்றம். அரசியல் சூதாட்டம்! மேற்கு வங்கத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அம்மாநிலத்தின் பாரம்பரியமான மத நல்லிணக்கம் மற்றும் கலாச்சார அடையா ளங்கள் பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளன.  ஒரு காலத்தில் வகுப்புவாத மோதல்களை ‘பூஜ்ஜிய நிலை’ காட்டிய வங்காளம், இன்று ராம நவமி ஊர்வலங்களை மையப்படுத்தி நடக்கும் அரசியல் போட்டிகளால் தத்தளிக்கிறது. வங்காளத்தின் ஆன்மா எப்போதும் துர்க்கை ...

உண்மையில் மக்கள் நலனா?

படம்
  ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் குறித்து  மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் ஆலோசனை நடத்தி உள்ளது. மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஈரான் போர் பாதிப்பு குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றுள்ளது. போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உரத் தொழில் சாலைகளில் உற்பத்தி குறைந்துள்ளது. உரம் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் வரும் சாகுபடி காலத்தில் விவசாயிகளுக்கு மாற்று உரம் உறுதி செய்வது குறித்து அமைச்சரவைக் கூட்டம் ஆலோசனை நடத்தி உள்ளது. அதே போன்று எரிவாயு பயன்படுத்தும் தொழில் சாலைகளுக்குத் தொடர் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.  நாட்டில் அவசியமான, முக்கியப் பொருள்களின் பதுக்கல் ஏற்படாமல் தடுப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி அவர்கள் பேசி இருக்கிறார்கள். ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுக்கு ரமலான் வாழ்த்துத் தெரிவித்த  மோடி, உள்கட்டமைப்புகள் மீதான தா...