இடுகைகள்

ஊருக்குத்தான் உபதேசமா?

படம்
நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று மனதின் குரல் என்ற பெயரில் உரையாற்றி வருகிறார்.  ஒவ்வொரு மாதமும் ஏராளமான அறிவுரைகளையும், ஒப்பேறாத ஆலோசனைகளையும் அள்ளி விடுவது அவரது வழக்கம். அத்துடன் போலியான பிம் பத்தையும் அவர் உருவாக்கி தனக்குத்தானே பாராட்டி, கைதட்டிக் கொள்வார். பிப்ரவரி மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.  ஜெயலலிதாவுடனான தனது ஒவ்வொரு சந்திப்பும், உரையாடலும் தனக்கு புத்துணர்ச்சி அளித்ததாக அவர் கூறியுள்ளார். 2014 மக்களவைத் தேர்தலின்போது, மோடி யின் குஜராத் மாடலை கடுமையாக விமர்சித்த வர் ஜெயலலிதா.  குஜராத்தில் கடந்த பத்தாண்டு களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 65 சத வீதம் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர் அந்தத் தேர்தலின்போது மோடியா, இந்த லேடியா என்று கேட்டதை மோடி வசதியாக மறந்துவிட்டார். அதுமட்டுமின்றி, பாஜகவுடன் தான் கூட்டணி வைத்துக் கொண்டது மிகப் பெரிய தவறு என்றும், இனிமேல் அந்த தவறை செய்யமாட்டேன் என்றும் ஜெயலலிதா கூறிய தையும் மறந்துவிட முடிய...

தோழர் நல்லகண்ணு

படம்
  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், எளிமையின் அடையாளமுமான ஆர். நல்லகண்ணு உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி 1-ம் தேதி இரவு நல்லகண்ணு அவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார்.  கடந்த 20 நாட்களுக்கு மேலாக அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வயது மூப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாகவே அவர் அவ்வப்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று இரவு முதல் அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை குறித்த தகவல் அறிந்ததும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர் வீரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைந்த வண்ணம் உள்ளனர். தமிழக முதல்வர்  மு. க.ஸ்டாலின்   மற்றும் பிற அரசிய...

பிணங்களின் மண்டை ஓடுகளை

படம்
  மெருகூட்டும்  குண்டுகள் அணுஆயுதப் பேரழிவின் விளிம்பில் உலகம்.                                                       -பேரா'விஜய் பிரசாத் 2 026 பிப்ரவரி 5-ஆம் தேதி யுடன் ‘புதிய ராணுவ உத்திசார் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம்’ (New START) காலாவதியானது. இதன் மூலம் அமெரிக்கா  மற்றும் ரஷ்யாவின் அணுஆயுதக் கிடங்குகளைக் கட்டுப்படுத்தி வந்த கடைசிச் சட்டப்பூர்வத் தடையும் நீங்கிவிட்டது.  2010-ல் கையெழுத்தாகி 2011-ல் நடை முறைக்கு வந்த இந்த ஒப்பந்தம், ஒரு அடுத்த தொடர்ச்சியான ஒப்பந்தத்தின் மூலம் நீட்டிக்கப் பட்டிருக்க வேண்டும்.  அணுஆயுதங்களின் எண்ணிக் கையைக் கட்டுப்படுத்துவது, இரு நாடுகளின் ஆயுதக் கிடங்குகளைப் பரஸ்பரம் ஆய்வு செய்வது என இது ஒரு முக்கியமான பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தது. அந்த அரண் இப்போது தகர்ந்துவிட்டது.  உண்மையில், புதிய “ஸ்டார்ட்” ஒப்பந்தத்தின் வீழ்ச்சி திடீரென நடக்கவில்லை. கடந்த பத்தாண்டு களாக அமெரிக்க-ரஷ்ய உறவில் நிலவும் விர...

எது நாட்டுக்கு அவமானம்?

படம்
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு . தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக இறுதி வாக்காளர் பட்டியலில் தகவல். 🔴 இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கீழ்கண்ட இணையதள முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம். https://www.erolls.tn.gov.in/rollpdf/SIR_FINALROLL_23022026.aspx எது நாட்டுக்கு அவமானம்?   டெ ல்லியில் நடைபெற்று வரும் இந்தியா AI மாநாட்டில் நேற்று மதியம் 12 30 மணியளவில் இந்திய இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் பத்துக்கும் மேற்பட்டோர் தங்களது சட்டைகளை கழற்றி “இந்திய பிரதமர் மோடி சோரம் போய்விட்டார்” என்று முழங்கியுள்ளனர்.  தங்களது டீசர்ட் களிலும் அதனையே முழக்கமாக அச்சிட்டு கொண்டு வந்துள்ளனர் அதை பத்திரிகையாளர் மத்தியிலும் பார்வையாளர்கள் மத்தியிலும் தெரியும் வண்ணம் வைத்து முழக்கமிட்டனர். எதிர்பாராத இந்த போராட்டத்தைக் கண்டு பதறிய போலீசு அவர்களில் நான்கு பேரை கைது செய்துள்ளது மற்றவர்களை தேடி வருகிறது.  இந்த போராட்டம் பற்றி இந்திய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கூறுகையில் “பிரதமர் சமரசம் செய்து கொண்டார்” என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, மில்லியன் கணக...

மோ(ச)டி அரசு?

படம்
எஸ்.ஐ.ஆர். பணிகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல். தங்கள் பெயர் இருக்குமா? என அறிந்துகொள்ள வாக்காளர்கள் ஆர்வம் IUML உடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தயை தொடங்கியது திமுக. மதிமுக, மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சிகளுடன் இன்று பேச்சுவார்த்தை முதலமைச்சரை நேரில் சந்தித்த கே.சி.வேணுகோபால், தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசித்ததாக தகவல். வரும் 26ம் தேதி மார்க்சிஸ்ட், 27ம் தேதி CPI மற்றும் கொ.ம.தே.க. உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது திமுக அதிமுக யாரையும் கண்டு அஞ்சியதில்லை என எடப்பாடி பழனிசாமி பேச்சு. மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதி 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என வாக்குறுதி கூட்டணிக் கட்சிகளின் சக்திக்கு ஏற்ப திமுக தொகுதிகளை ஒதுக்கும் என தொல்.திருமாவளவன் நம்பிக்கை. வலதுசாரிகளை வீழ்த்த கூட்டணி நலன் முக்கியமானது என்றும் திட்டவட்டம் டிரம்பின் வரிவிதிப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்ததன் எதிரொலி. செலுத்திய வரியைத் திருப்பித் தரக் கேட்டு நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் வழக்கு மோ (ச) டி  அரசு? தாயார் வந்த வினை! பா.ஜ.க அரசு அமைந்ததிலிருந்து பொய்யை...