இடுகைகள்

படம்
  கரூர் பரிதாப41கொலைகள் சம்பவத்தில் ஆதவ் அர்ஜூனா தான் மெயின் அக்யூஸ்ட் .  ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது செய்தியாளர்களிடம் கூறிய ஆர்.எஸ்.பாரதி "அ.தி.முக.-வை சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்களை ஆளும் கட்சியில் இணைக்கும் விழாவில் பொறுப்பற்ற முறையில் பேசியது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மக்களுக்கு ஆத்திரம் ஏற்படக்கூடிய வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசி இருக்கிறார். கரூரில் நடைபெற்ற சம்பவத்தை பற்றி அவர் பொய்யும் புரட்டுமாக பேசி உள்ளார்.கரூர் சட்டமன்ற உறுப்பினராக அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் ஆளும் கட்சியிலே சேர்ந்துவிட்ட காரணத்தினால் கரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. அந்த தொகுதி மக்களுடைய கவனத்தை திசை திருப்புகிற நோக்கத்தில் நேற்று அவ்வாறு பேசியிருக்கிறார். கரூர் சம்பவத்தின் போது எங்கள் தலைவர் தளபதி எடுத்த நடவடிக்கையை மனசாட்சி உள்ளவர்கள், அரசியல் தெரிந்தவர்கள், நாகரீகம் அறிந்தவர்கள் என அத்தனை பேருமே பாராட்டினார்கள்.  விஜய் அவர்களைப் போல 41 பேர் இறந்த போது முகத்தை மூடிக்கொ...

இம் என்றால் சிறைவாசம்(

படம்
  தமிழகத்தில் த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பார்க்கும் அதிகார அரசியலைக் கையில் எடுத்துள்ளது.  முதலில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அரசு, தற்போது அவதூறு வழக்கு என்ற பெயரில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைக் கைது செய்துள்ளது. அண்மையில் ஆத்தூர் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாகப் பேசியதாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பு வந்த ஒரு மணி நேரத்திற்குள் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின் இந்த அராஜகப் போக்கிற்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 'சினிமா ஆக்ஷன் பாணியில் விஜய் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார்' என அவர் சாடியுள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், ”முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவ...

சமூக வலைதள ஆட்சி?

படம்
சட்ட சேவைகள் குழுத்தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா நியமனம் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.74,781 கோடி இழப்பு. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் குறைக்க வாய்ப்பு இல்லை; ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அறிவிப்பு. கூடுவாஞ்சேரி அருகே நந்திவரத்தில் பரபரப்பு; குரங்கு சரமாரி கடித்து குதறியதில் பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம்: 3 வயது குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை மணிப்பூரில் வீடுகள் எரிக்கப்பட்ட விவகாரம் பிரதமரின் பிரித்தாளும் கொள்கையின் விளைவு: ராகுல்காந்தி ஆவேசம் தனியார் நர்சிங், பார்மசி கல்லூரிகளுக்கான கட்டண விவரங்களை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.3.50 கோடி மோசடி செய்த அலுவலர்கள் 2 பேர் சஸ்பெண்ட். தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிய வாகனம் மோதி 8 புத்த துறவிகள் பலி.. திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு  நீட் மறுதேர்விலும் தவறான கேள்விகள் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிப்பு  "சோசியல் மீடியாவை வைத்து ஆட்சி மாற்றமே பண்ணி இருக்கீங்க ; மேகதாது அணை கட்டுவதை தடுக்க முட...

ஏன் தேர்தல் இல்லை?

படம்
  தமிழ்நாட்டில் ஏன் தேர்தல் அறிவிக்கவில்லை? தமிழ்நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் 7 தொகுதிகள் காலியானதாக உள்ளன. இதில் 6 இடங்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த தொகுதிகள். அதிமுக ஆறு எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.  இதனையடுத்து காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது இன்பதுரை தெரிவித்துள்ளார். அதாவது அதிமுக நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் இருக்கும்போது, அவர்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கக்கூடாது. எனவே அந்த நான்கு தொகுதியிலும் தேர்தல் நடத்தக்கூடாது என்று அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் கரூர், விராலிமலையை சார்ந்த விஜயபாஸ்கர்களும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.  இதனையடுத்து மொத்தமான ஆறு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தக்கூடாது என அதிமுக சார்பில் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என அதிமுக சார்பி...

கூட்ணிக்கு என்னப் பெயர்?

படம்
 "குதிரை பேரத்தின் நம்பர் 1 குற்றவாளியே முதலமைச்சர் விஜய்தான்" -பரந்தாமன், திமுக முன்னாள் எம்.எல்.ஏ வைகோ கைது செய்யப்படுவாரா ? முதல்வர் விஜய் மீது FIR பதிவு செய்யப்படுமா ? ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவை ஆட்சிக்கு எதிராக செயல்பட வைக்க பேரம்பேசியதாகக் கூறி ஒருசிலரை கைதுசெய்ததோடு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறது தமிழ்நாடு அரசு.  ஊத்தங்கரை எம்.எல்.ஏ ராஜினாமாவும் செய்யவில்லை, தவெக ஆட்சிக்கு எதிராகவும் திரும்பவில்லை. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகம் மீது அவதூறு பரப்பும் ஒரே நோக்கில் செயல்படுகிறது தவெக. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்.எல்.ஏ-வான மன்னார்குடி எஸ்.காம்ராஜ் தற்போது தவெக கட்டுப்பாட்டில் இருக்கிறார். அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரிடம் டீல் பேசி பதவியை ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள் தவெகவினர்.  இதுபோக, திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுகவினர் எம்எல்ஏக்கள் இருவரை 'ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்' என தமிழ்நாடு முதல்வர் விஜய் பேசியதாக வைகோ பட்டவர்த்தனமாக பேசியிருக்கிறார். அதேநேரம், 'எங்கள் எம்எல்ஏக்கள...

குதிரைகள் மிரட்சி?

படம்
🔹  நியாயமற்ற வகையில் ஊதியம் வழங்கப்படும் ஜி ராம் ஜி திட்டத்தை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல். விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு ஊதியத்தை இறுதிசெய்யவும் கோரிக்கை. 🔹  தவெக தோழமைக் கட்சிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை. ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என கூட்டத்தில் பேச்சு. 🔹  இன்று தவெகவில் ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை உள்ள இருவரான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 முன்னாள் அமைச்சர்கள். அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ-க்கள் 15 பேரும் இணைய உள்ளதாக தகவல்.  🔹  அடுத்த கட்சி எம்எல்ஏக்களை தவெக குதிரை பேரம் பேசி இழுப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம். கல்லாப்பெட்டி கூட்டணி என்று கூறிய கட்சிகளை சோஃபா கூட்டணிக்குள் நுழைக்க முயற்சிப்பதாகவும் காட்டம். 🔹  அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி தாம்பரத்தில் திமுக மாணவரணியினர் போராட்டம். போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், வாகனத்தில் மேடை அமைத்து ஒலிப்பெருக்கி வைத்து முழக்கம். 🔹  நீட் குளறுபடிகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாணவர் அமைப்பினர் போராட்டம். ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான...