இடுகைகள்

பட்டாசு லாபவெறி பலிகள்!

படம்
  தமிழ்நாட்டில் நாளை மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை. வேட்பாளர்கள், கட்சித் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம். பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தேர்தல் நடத்தை விதிமீறல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். மோடி வேண்டுமா, ஸ்டாலின் வேண்டுமா என மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவும் ஸ்டாலின் பின்னால் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே உறுதி. திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை செய்ய சென்னை வந்தார் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து. 24 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம். தேர்தல் நடத்தை விதி மீறல் 11,000 சமூக ஊடக பதிவுகள் மீது நடவடிக்கை. மோடிகிட்ட சொல்லி மசோதாவ கொண்டு வர சொன்னதே நாங்கதான்! எடப்பாடி ஒப்புதல். தமிழகத்தின் தன்மானத்தை மோடியின் காலில் வைத்த தகுதியில்லாத அடிமை, சினிமா கும்பல் வேணுமா: கல்வி கொடுத்து, மொழி மற்றும் இனம் மானத்தைக் காப்பாற்றிய நம்ம திராவிட மாடல் வேண்டுமா? மக்களுக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி. தமிழ்நாடு மிரட்டல் எப்படி இருக்கும்னு காட்டிவிட்டோம்; வடவர் படையெடுப்பை முறி...

தேர்தல் ஆணையரை மாற்ற நோட்டீஸ்

படம்
  தலைமை தேர்தல் ஆணையரை மாற்ற எதிர்கட்சிகள் நோட்டீஸ் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானத்தை கொண்டு வர எதிர்கட்சிகள் தரப்பு மீண்டும் நோட்டீஸ் அளிக்க திட்டதிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே அளிக்கப்பட்ட நோட்டீஸ் இரு அவைகளிலும் நிராகரிக்கப்பட்ட நிலையில், புதிய நோட்டீஸ் தயாரிப்பது தொடர்பாக, தி.மு.க ., காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  கோவையில் பரப்புரை செய்த தேஜஸ்வி யாதவ் சட்டசபை தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்துள்ள ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது. தேர்தலுக்கு மத்தியிலும் பாஜகவின் தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க முக்கிய பங்கு வகித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பெருமிதமாக பேசியுள்ளார் 12 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கீழே உள்ள 12 மாற்று அடையாள ஆவணங்களை காட்டி வாக்கு செலுத்தலாம். இந்தி...

இரண்டு மணிக்கு ஒருமுறை..!

படம்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை திமுக தடுத்துவிட்டதாகக் குற்றம்சாட்டிய பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் கண்டனம்.பா.ஜ.க,நோக்கம் மகளிர் நலன் அல்ல.தொகுதி வரையறை மூலம் இந்தியாவை துண்டாடுவதுதான் என ஸ்டாலின் குற்றசாட்டு. தேர்தல் நடத்தை விதிகளை மீறி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியதாக கபில் சிபல் குற்றச்சாட்டு. அரசியல் ரீதியான கருத்துகளை வெளியிட்டதற்கு கண்டனம். கொள்கை உறுதி கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மோடி, அமித் ஷாவால் மிரட்டி பணியவைக்க முடியாது. தமிழ் கலாசாரத்தை அழிக்கும் பாஜக-வின் திட்டம் நிறைவேறாது.-கபில் சிபில். தமிழ்நாட்டில் இறுதிக்கட்டத்தை எட்டும் தேர்தல் பரப்புரை. பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரப்புரை. எடப்பாடி பழனிசாமியைப் பற்றி பேசி ஒரு பயனும் இல்லை என கனிமொழி சாடல். தேர்தல் முடிந்து வேறு மாநிலத்திற்கு ஆளுநராக வேண்டுமானால் போகலாம் என விமர்சனம். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானத்தை கொண்டு வர எதிர்கட்சிகள் தரப்பு மீண்டும் நோட்டீஸ் அளிக்க திட்டதிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அளிக்கப்பட்ட நோட்...

ஏமாற்று வேலை

படம்
  மோடியின் மகளிர் ஒதுக்கீடு மசோதா மகளிர் இட ஒதுக்கீட்டை தி.மு.க. எதிர்க்கிறது என்பது போன்ற தோற்றத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மகளிருக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை தி.மு.க. எதிர்க்கவில்லை. மகளிர் இடஒதுக்கீட்டை முன்னிறுத்திக் கொண்டு நியாயமற்ற தொகுதி வரையறையையும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்வதையும்தான் எதிர்க்கிறோம். "பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நாங்கள் முழுமனதோடு ஆதரிக்கிறோம். அதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. ஆனால், பொறுப்போடு செயல்பட்ட மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்காமலேயே, அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் கோருகிறோம். அவர்களின் நோக்கம் உண்மையானதாக இருந்தால், இப்போதுள்ள தொகுதி அளவிலேயே மகளிருக்கான 33 இட ஒதுக்கீட்டை வழங்குவதை எதுவும் தடுக்கவில்லையே?” என்றுதான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிக்கை வெளியிட்டு இருந்தார்கள். மகளிருக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்காமல் இழுத்தடித்தது பா.ஜ.க. அரசுதானே? மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தை 2...