இடுகைகள்

ஒன்றும் மாறாது!

படம்
உச்சநீதிமன்றத் தீர்ப்பால் மாறாது. டிரம்ப் அறிவிப்பு! பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது என அறிவித்துள்ள அதிபர் டிரம்ப், ‘இனி இந்தியா தான் வரி செலுத்தும், அமெரிக்கா வரி செலுத்தாது’ என கூறி உள்ளார். மேலும், பரஸ்பர வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், அனைத்து உலக நாடுகளுக்கும் புதிதாக 15 சதவீத தற்காலிக வரியை அவர் விதித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவசரகால அதிகார சட்டங்களின் கீழ், உலக நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு விதித்த பரஸ்பர வரி செல்லாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. உலக நாடுகள் மீது விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும் அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறிவிட்டார் என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகள் ரத்து செய்யப்படும் என உலக நாடுகள் நிம்மதி அடைந்தன. இந்நிலையில், அனைத்து உலக நாடுகள் மீதும் புதிதாக 10 சதவீத தற்காலிக இறக்குமதி வரியை நேற்று காலை அறிவித்த டிரம்ப்,...

உலகை உலுக்கும் அதானி மோசடி!

படம்
  தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட உள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா  திருச்சியில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைத்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 17% வாக்குகளை பெற்றுத்தந்த காரைக்குடி தொகுதியில் சட்டமன்ற தேர்தலிலும் சீமான் களம்காண்கிறார்.  பாஜக, ஆர்எஸ்எஸ் சக்திகளை தமிழ்நாட்டில் வர விட மாட்டோம் என்று மதுரையில் கமல் பண்பாட்டு மையம் நடத்திய ‘மறவோம் காந்தியை' நிகழ்ச்சியில் வைகொ பேச்சு. காந்தியின் மதச்சார்பின்மை கொள்கையால் வெறுத்துப் போன பாஜக, ஆர்எஸ்எஸ் என்று மதுரையில் கமல் பண்பாட்டு மையம் நடத்திய  ‘மறவோம் காந்தியை' நிகழ்ச்சியில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேசியுள்ளார்.  தவெகவைப்பற்றி யாரும் கண்டுகொள்வது கிடையாது, களத்தில் அதிமுகதான்; எங்களுக்கு எதிரி திமுக, இதுதான் கள நிலவரம். அதிமுகவிற்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சி திமுகதான். எடப்பாடி பழனிசாமியிலான தலைமையிலான கூட்டணியும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியும் களத்தில் நிற்கும்; தவெக என்...

. 1,721 கோடி ஜி.எஸ்.டி வருவாய் இழப்பு -

படம்
தமிழகத்தில் ரூ. 1,721 கோடி ஜி.எஸ்.டி வருவாய் இழப்பு - சி.ஏ.ஜி அறிக்கை தமிழகத்தில் ரூ.1,721 கோடி ஜிஎஸ்டி வருவாய் இழப்பு மற்றும் ரூ.44,000 கோடிக்கும் அதிகமான வரி நிலுவையை சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. தமிழகத்தில் 2022-23 ஆம் நிதியாண்டில் சுமார் ரூ.1,721 கோடி மதிப்பிலான வருவாய் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2022-23 ஆம் நிதியாண்டில் சுமார் ரூ.1,721 கோடி மதிப்பிலான வருவாய் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இவ்வளவு பெரிய தொகையில் அடுத்த ஓராண்டில் வெறும் ரூ.11.5 கோடியை மட்டுமே அரசால் மீட்க முடிந்துள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, மத்திய ஜி.எஸ்.டி தணிக்கையின் மூலம் மட்டும் 337 வழக்குகளில் ரூ.1,538 கோடி மதிப்பிலான முறைகேடுகள் கண்டறியப்பட்டன.  இந்த அனைத்து வழக்குகளிலும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, துறை ரீதியாகத் தவறுகள் ஒப்புக்கொள்ளப்பட்ட போதிலும், வெறும் ரூ.8.64 கோடி மட்டுமே ...