இடுகைகள்

மேகேதாட்டு.......

படம்
  கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அண்மையில் பேசுகையில், “மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை ஒன்றிய  அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும்.  ஒன்றிய  அரசின் அனுமதி கிடைத்தவுடன் பூமி பூஜை நடத்தப்படும். இதனை தமிழக அரசு எதிர்க்க எந்த உரிமையும் இல்லை” எனக் கூறினார். தமிழகத்துக்கு எதிர்க்கும் உரிமை இல்லை என்று டி.கே.சிவகுமார் கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஜனநாயகத்திலும் கூட்டாட்சியிலும் இத்தகைய அணுகுமுறை விரும்பத்தக்கதல்ல.  மேகேதாட்டு கர்நாடக மக்களுக்கு நியாயமான தேவையாக இருக்கலாம். ஆனால் அந்தத் தேவையை முன்னிறுத்தி, காவிரி பாயும் பிற மாநிலங்களின் நியாயமான உரிமைகளையும் நிராகரிக்க முடியாது. தமிழ்நாட்டின் காவிரி உரிமைகள் என்பது கர்நாடகா வழங்கிய கருணையோ அல்லது அரசியல் சலுகையோ அல்ல.  தமிழ்நாட்டின் உரிமைகள் என்பது உச்ச நீதிமன்றத்தாலும் சட்டத்தாலும் உறுதி செய்யப்பட்ட உரிமைகள். இதனை டி.கே.சிவகுமார் போன்றவர்கள் மறந்துவிடக் கூடாது. கர்நாடகாவில் காவிரி ஆறு உற்பத்தி ஆவதாலே, அதன் முழுமையான உரிமையை அம்மாநிலம் மட்டும் கோர முடியாது.  ...

ஒரு மூணு முடிச்சாவாலே

படம்
  ஒரு மூணு  முடி ச்சா வாலே தமிழக அரசியல் களம் தற்போது பல்வேறு அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்குள் நிலவும் உட்கட்சிப் பூசல்களும், புதிய கட்சிகளின் வரவும் அடுத்தடுத்து பல திருப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன.  இத்தகைய இக்கட்டான சூழலிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடி வருகிறார். இருப்பினும், கட்சியில் உள்ள பல முக்கிய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த தலைவர்கள் அடுத்து என்ன செய்வது, எந்த மாதிரியான முடிவை எடுத்தால் தங்களின் அரசியல் எதிர்காலத்திற்குச் சரியாக இருக்கும் என்ற குழப்பத்திலும், தீவிர ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த அரசியல் குழப்பத்தின் மையப்புள்ளியாக தற்போது மாறியிருப்பவர் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான சி.வி. விஜயபாஸ்கர் ஆவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, சி.வி. சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோரின் அணியில் இருந்து பிரிந்து சென்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிலர், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சட்டமன்றத்தில் உள்ள அவரது அறையில் நேரி...

பேரத்தில் வேகம் .செயலில்

படம்
🗞️ எடப்பாடி பழனிசாமியுடன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திடீர் சமரசம். ஒருங்கிணைந்த அதிமுகவாக செயல்படுவோம் என வேலுமணி அறிவிப்பு. 🗞️ சி.வி.சண்முகத்துடன் அதிமுகவினர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தை தோல்வி. செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் ஆவேசத்துடன் புறப்பட்ட சி.வி.சண்முகம்.  🗞️ அதிமுகவில் பிளவு இல்லை, கருத்து வேறுபாடு மட்டுமே நிலவியதாக எஸ்.பி.வேலுமணி விளக்கம். சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஒற்றுமையாக இருந்து ஆராய உள்ளதாகவும் பேட்டி. 🗞️ நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம். பொது இடங்களில் மாடுகளை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் தடை . ஒன்பது முக்கியத்துவர்கள்! முதலமைச்சரின் டெல்லி பயணம்: தனி விமானத்தில் பயணித்த 9 முக்கியப் பிரமுகர்களின் முழு விபரங்கள் என்னென்ன என்பது தொடர்பாக இங்கு காணலாம். தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், மத்திய அரசுடனான அலுவல் சார்ந்த பேச்சுவார்த்தைகளுக்காகவும், பல்வேறு மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாகத் தேசியத் தலைநகர் டெல்லிக்குச் சென்றுள்ளார். முதலமைச்சரின் இந்த மு...

இரண்டானவன் முடிவில்ஒன்றாவன்!

படம்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினார்கள். அவர்கள் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து அ.தி.மு.க. கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட 25 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதேபோல் எஸ்.பி.வேலுமணி தரப்பில் எங்களிடம் தான் அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே தாங்கள் நியமித்தவரைதான் அ.தி.மு.க. கொறடாவாக அங்கீகரிக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு 90 நாட்கள் வரை அதிகாரம் உள்ளது. ஆனால் மனு கொடுத்தவர்கள் 15 நாட்களுக்குள் சமரசமாகி மனுவை வாபஸ் பெறவும் அவகாசம் உள்ளது. அதன் அடிப்படையில் இந்த மனுக்களை வாபஸ் பெற நாளை (28-ந்தேதி) வரை அவகாசம் உள்ளது. அதன் பிறகும் மனுக்களை வாபஸ் பெறாவிட்டால் அந்த மனுக்கள் மீது ...