இடுகைகள்

ஆட்சி,அதிகாரம் படுத்தும் பாடு!

படம்
தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் மு.க.ஸ்டாலினை ஜோசப்விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்றபோது விஜயை, தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கொறடா எ.வ.வேலு, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் வரவேற்றனர். த.வெ.க. சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகர் சபாநாயகராக போட்டியிடுகிறார். அரசியல்  நி க லவரம்!  சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என அக்கட்சியைச் சேர்ந்த 17 சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைச் செயலரிடம் மனு அளித்துள்ளனர்.  இதனால், அதிமுக சட்டமன்றக் குழு தலைவர் பதவியைத் தக்கவைப்பதில் பழனிசாமிக்குச் சிக்கல் எழுந்துள்ளது. 17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று காலை தொடங்கியது. அதிமுகவில் மொத்தம் 47 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், சட்டமன்ற கட்சித் தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இதுவரை 17 எம்எல்ஏக்கள் மட்டுமே சட்டமன்றச் செயலரிடம் மனு அளித்துள்ளனர்.  ...

புயலுக்கு வாய்ப்பு?

படம்
ரூ.4050 கோடியிலான டிட்வா புயல் புனரமைப்பு திட்டத்தை விரைவுபடுத்த இந்தியா-இலங்கை முடிவு. அதிமுகவில் உட்கட்சிக் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்னும் சட்டப்பேரவைக்கான கட்சித் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹார்முஸ் நீரிணையில் சர்வதேசக் குழுவின் பணிக்கு ஈரான் எதிர்ப்பு. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். எடப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி  வாள் கொண்டு கேக் வெட்டிய சம்பவங்களில் ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அதே போல கேக் வெட்டிய ராயபுரம் தவெக எம்.எல்.ஏ. விஜய் தாமு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார். 10 வாரத்தில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது: எண்ணெய் நிறுவனங்கள் . எஸ்.பி வேலுமணி, சி.வி சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் தனியாக சட்டப்பேரவைக்கு வருகின்றனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து சட்டப்பேர...

ஆட்சித் திறமையும்தான் வேணும்

படம்
மனசும்+ஆட்சித் திறமையும்தான் வேணும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று (மே 10 ஆம் தேதி) பொறுப்பேற்று உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து,  அதோடு சில கேள்விகளையும் முன்வைத்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் தளத்தில், தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.  எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு.  மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். ‘ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு’ – என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு...

முதலி8த்தில் டெல்லி!

படம்
  தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையில் குற்றங்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் உள்ளன. அதில் வரதட்சணைக் கொலைகள் பற்றிய புள்ளி விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது. வரதட்சணைக் கொலைகள் அதிகம் நிகழும் பெருநகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் டெல்லி உள்ளது. 2024-ம் ஆண்டு டெல்லியில் 111 பெண்கள் வரதட்சணைக் கொடுமைக்கு பலியாகி உள்ளனர்.  இந்த பட்டியலில் டெல்லி தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2021-ம் ஆண்டு டெல்லியில் 139 பெண்கள் இறந்ததும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த பட்டியலில் கான்பூர் 2-வது இடத்தில் உள்ளது. கான்பூரில் 54 பெண்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 3-வது இடத்தில் பாட்னா இருக்கிறது. பாட்னாவில் 30 பேர் பலியாகி உள்ளனர்.  இதனைத் தொடர்ந்து லக்னோ, ஜெய்ப்பூர். காசியாபாத், ஐதராபாத், பெங்களூரு, மும்பை, ஆமதாபாத் ஆகிய நகரங்கள் உள்ளன. இந்த வரிசையில் 11-வது இடத்தில் சென்னை இருக்கிறது. சென்னையில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போர்க்கொடி? அ.தி.மு.கவில் தலைமைக்கு எதிராக முன்னணித் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள சம...

எதன் வெளிப்பாடு?

படம்
  தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் தவெக தலைவர் விஜய். விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு.  புதன்கிழமைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அமையவிருக்கும் புதிய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. தொலைநோக்கு சிந்தனை கொண்ட திமுக அரசின் திட்டங்கள் தொடர வேண்டும் என வலியுறுத்தல். விஜய்க்கு ஆதரவு தெரிவித்தாலும் திமுக கூட்டணியில் தொடர்வதாக திருமாவளவன் விளக்கம். தவெக மீதான விசிகவின் மதிப்பீடு மாறவில்லை என்றும் பேட்டி. திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கில் தவெக வேட்பாளரின் வெற்றியை இழந்த விவகாரம். முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கு அவசர மனுவாக இன்று விசாரணை. விஜய் தலைமையில் 9 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. தி.மு.க,தலைவர் மு.க.ஸ்டாலின் தெளிவாக ஆதரவு சொன்ன பிறகும் குதிரை பேரம் எதற்கு ? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தும் கடந்த 6 நாட்களாக ஆளுநர் மாளிகைக்கு சென்று, தனக்கு ப...