நன்றியும்,நக்கலும்!
நன்றியும்,நக்கலும்! சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் முடிந்து இருக்கிறது. முதல்வராக பதவி ஏற்ற பிறகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதில் அளித்து பேசியிருக்கிறார் முதல்வர் விஜய். எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்யும் வகையில் அமைந்த அவரது உரையில், எதிர்க்கட்சிகளின் எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. அதோடு அடுத்து ஆட்சி எந்த திசையில் செல்லப்போகிறது என்ற பதிலும் இல்லை. ஒரு மாதத்தில் 200க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் நடந்திருக்கின்றன. அதில் 100க்கும் அதிகமான குற்றங்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், தவெக அரசு அமைந்த ஒரு சில நாட்களிலேயே கோவையில் 10 வயது பெண் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை, கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை, `சிங்கப்பெண் படை’ காவல்துறையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மூன்று பேர் பாலியல் தொல்லை, திருவாரூரில் ஆளுங்கட்சியின் திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர், கல்லூரி மாணவியை ஈவ்-டீசிங் செய்து இப்போது கைது செய்யப்பட்டுள்ளார், தூத்துக்குடியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு அப்பாவிப் பெண் கூட்டுப்...