சதுப்பு நிலம்
"பள்ளிக்கரணை" சதுப்பு நிலம் பொதுவாகவே, மழைக்காலங்களில் சென்னையின் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். இப்படியான சூழ்நிலையில், இந்த சதுப்பு நிலமானது அதிகப்படியான மழை நீரை உறிஞ்சி சேமிப்பதால் வெள்ளப் பாதிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் பல்வேறு வகையான பறவைகள், மீனினங்கள், தாவரங்கள், உயிரினங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், 100க்கும் மேற்பட்ட வனமரங்கள் இருப்பதால் நகரத்தின் வெப்பநிலையையும் குறைக்கு உதவுகிறது. எனவே, இந்த பகுதியை ஒட்டிவாழும் மக்களின் வாழ்க்கை முறையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்கத்தில் கடந்த ஏப்ரல் 2022 ஆம் ஆண்டு சர்வதேச ஈரநிலப் பகுதிகளை பாதுகாக்கும் ‘ராம்சார் அங்கீகாரம்’ கொடுக்கப்பட்டது. இந்த ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டியது மிக முக்கிய கடமையாகிறது. இந்நிலையில், இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற இந்த சதுப்பு நிலப் பகுதியில் 1,705 ஏக்கர் சதுப்பு நிலங்களை வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், இது தவிர 1,375 ஏக்கர் சதுப்பு நிலத்தை அர...