இடுகைகள்

ஆன்டிபயாடிக்கை எதிர்கொள்ளும்

படம்
  நோய் தொற்று! இந்தியாவில் 'ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட்' (antibiotic resistant) என்பது சுகாதாரத் துறையில் மிக முக்கியமான பிரச்னையாக உருவெடுத்து வருகிறது.  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) சமீபத்தில் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட் தொடர்பாக வெளியிட்ட ஆய்வறிக்கை இதுதொடர்பான எச்சரிக்கை  அனுப்பியுள்ளது. முதலில் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட் என்பது என்ன? ஒரு நோய்த்தொற்று உங்களுக்கு ஏற்படுகிறது என வைத்துக்கொள்வோம். அந்த தொற்றுகளில் இருந்து நீங்கள் குணமடைவதற்காக மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.  ஆனால், நாளடைவில் அந்த மருந்தின் திறன் தன்னை பாதிக்காத வகையில் சில தொற்றுகள் தங்களை தகவமைத்துக் கொள்ளும். அதாவது, அந்த மருந்து குறிப்பிட்ட தொற்றுக்கு எதிராக செயல்புரியாது. அதாவது, அந்த மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை தொற்றுகள் பெற்றுவிடும். "இப்படி மாறும் தொற்றுகள் பெரும்பாலும் பாக்டீரியா தொற்றுகளாகவே உள்ளன" என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இப்படி ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை பெறும் பாக்டீரியாக்கள் 'சூப்பர்பக்' (superbug) எ...

பழனிசாமியின்

படம்
    பழைய ஊழல்கள் - 2 குட்கா வியாபாரிகளிடம் அரசாங்கத்தின் பெயரால் மாமூல் வசூல் செய்தது பழனிசாமி ஆட்சிதான் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. சென்னையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், ஐ.பி.எஸ். அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக 2017–ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் குற்றச்சாட்டு எழுந்தது. குட்கா வியாபாரிகளிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது. அப்போது தங்களது வியாபாரத்துக்குத் துணை நின்றவர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் யார் யார் என்பதை டைரி எழுதி வைத்திருந்தார்கள் வியாபாரிகள். அந்த நிறுவனத்தில் இருந்து 40 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது அ.தி.மு.க. ஆட்சியில். இது தொடர்பான வழக்கில் மத்திய கலால் வரித்துறை தாக்கல் செய்த பதிலில், “டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஏராளமான குட்கா பொருள்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதை விற்பதற்காக ரூ.55 கோடி வரை ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது. வருமான வரித்துறையும் இதனை வலிமைப் படுத்துவ...

பழைய பழனிசாமி!

படம்
*திருவண்ணாமலையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெறும் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு. உதயநிதி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். *டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ள நிலையில் டெல்லிக்குள் டீசல் வாகனங்கள் நுழைய தடை *தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக போராட வருமாறு இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக்கு முதலமைச்சர் அழைப்பு. ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் பங்கேற்கும் நிகழ்வில், தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை. *முட்டை பண்ணை கொள்முதல் விலை புதிய உச்சம் தொட்டது. நாமக்கல்லில் 5 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 20 காசுகளாக நிர்ணயம். *சென்னையில் 25 ஆண்டுகளுக்குப் முன் சட்டம் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் முதல் பேட்ஜ் மாணவர்கள் நெகிழ்ச்சி. * உடுமலையில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி. மாடி வழியாக உள்ளே புகுந்து நோட்டமிட்ட முகமூடி நபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல். *கேரள உள்ளாட்சித் தேர்தலில் 4 மாநகராட்சிகள், 54 நகராட்சிகளை கைப்பற்றி காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி. சட்டப்பேரவைத...

மனச் சோர்வா....?

படம்
உங்கள் மூளை சோர்வாக காரணங்களைக் கண்டறியும் அறிவியல்! மனச் சோர்வு(Mental Fatigue) என்பது நம் மூளை நீண்ட நேரம் கவனத்தை செலுத்திய பின் அல்லது அதிகமான சிந்தனைப் பணிகளை செய்த பின் ஏற்படும் ஆழமான சோர்வு உணர்வு. இது சாதாரணமாகவே யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். பள்ளியில் படித்து முடிந்த பிறகு, அலுவலகத்தில் எண்கள் அல்லது தகவல்களை நீண்ட நேரம் பார்த்த பிறகு, அல்லது ஒரு முழு நாளும் முடிவுகள் எடுக்கும் பொழுது சோர்வடைந்த மூளை கவனத்தைப் பிடிக்க முடியாததால், நினைவாற்றல் குறைகிறது, எளிய விஷயங்களுக்கே மனதில் குழப்பம் ஏற்படும். தவறுகள் அதிகம் நேரிடலாம். இது உடல் சோர்வு போலத்தான், ஆனால் மனம் மற்றும் மூளை சார்ந்தது. மனச் சோர்வு சாதாரணமான மனிதர்களுக்கே ஏற்படும் பிரச்சனை அல்ல; இது பல நோய்களோடும் இணைக்கப்படுகிறது. குறிப்பாக நீண்டகால COVID, ME/CFS, மனச்சோர்வு நோய்கள், Multiple Sclerosis, PTSD போன்ற நிலைகளில் இது மிகவும் ஆழமாகவும் நீடித்ததாகவும் இருக்கும். மூளை எப்போது அதிகமான கவனம், கணக்கீடு, உணர்ச்சி கட்டுப்பாடு, முடிவெடுக்கும் பணிகளை செய்கிறதோ அப்போது அதிக எரிசக்தி பயன்படுத்தும். இந்த அதிக நுண்ணறிவு (cogni...

தடைகளைத் தாண்டி...!

படம்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-ஆம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கூடுதலாக 17 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்க நடவடிக்கை. `வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் பிரம்மாண்ட விழா.  பல்வேறு திட்டங்களால் பலனடைந்த பெண்கள் அனுபவங்களைக் கூறி நெகிழ்ச்சி மேகதாது அணைத் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல். விவசாயிகளின் நலன்களைக் காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு உறுதி. திரைப்படங்கள் வெளியாகி 100 நாட்களுக்குப் பிறகே OTT-யில் வெளியிட வேண்டும். ஜன.1 முதல் புதிய விதிமுறையை அறிவித்தது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். புதிய உச்சத்தை எட்டிய முட்டை விலை. நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.6.15 காசுகளாக நிர்ணயம். ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறி மோசடி செய்த வழக்கில் விஜயபானுவுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை. இந்தியாவுக்கு எதிரான வரிகளை நீக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகம். கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு. ஓ.பன்ன...