இரவு நேர சேவை!
இரவு நேர விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இன்று முதல் தூத்துக்குடியிலிருந்து புறப்படும் மற்ற விமானங்களின் நேரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காலை 8:00 மணிக்குச் சென்னை புறப்பட வேண்டிய விமானம் காலை 8:10 மணிக்கும், காலை 11:25 மணிக்குச் செல்ல வேண்டிய விமானம் மதியம் 12:05 மணிக்கும், மதியம் 12:15 மணிக்கு பெங்களூரு செல்ல வேண்டிய விமானம் மதியம் 1:10 மணிக்கும், மாலை 4:15 மணிக்குச் சென்னை செல்ல வேண்டிய விமானம் மாலை 4:10 மணிக்கும் புறப்படும். முன்பு மதியம் 1:50 மணிக்குச் சென்னைக்குச் சென்று கொண்டிருந்த விமானமே தற்போது இரவு நேர சேவையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த விமானம் தினமும் சென்னையிலிருந்து மாலை 6:15 மணிக்குப் புறப்பட்டு, இரவு 7:55 மணிக்குத் தூத்துக்குடி வந்தடையும். மீண்டும் தூத்துக்குடியிலிருந்து இரவு 8:15 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9:45 மணிக்குச் சென்னையைச் சென்றடையும். இந்த புதிய வசதியால் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் அவசரத் தேவைக்காகப் பயணிப்பவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல் நாளான இன்றே ஏராளமான...