இடுகைகள்

சனாதனம் ஒழிக!

படம்
பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தரப்பினர் தரப்பில் விவாதங்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, காங்கிரஸ், சிபிஎம், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏக்கள், தவெக அரசு ஆட்சியில் நீடிப்பதற்கு ஆதரவு அளிப்பதாகப் பேசினர். இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெகவையும் முதலமைச்சர் விஜயையும் கடுமையாக விமர்சித்து பேசினார். இறுதியாக அவர் பேசி முடிக்கும் போது, “வெல்க தமிழ், வளர்க தமிழ்நாடு, மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று கூறினார். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர் பேசினார். இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அவர் மீது சிலரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப,  ‘மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்’-னு க...

# ஷோபா மாடல் ?

படம்
  மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மறுசீரமைப்பு என்ற அறிவிப்பால் குழப்பம். பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என பெண்கள் அச்சம். அதிமுகவில் எம்.எல்.ஏ. ஹரி உட்பட மேலும் 2 நிர்வாகிகளின் பதவிகளை பறித்தார் எடப்பாடி பழனிசாமி. கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர எந்த தியாகத்திற்கு தயார் என பரபரப்பு அறிக்கை. அதிமுகவின் தோல்வி குறித்து பொதுக்குழுவை கூட்டி ஆலோசிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்.  அதிமுக அலுவலகங்களை கைப்பற்றுவது தொடர்பாக இரு அணிகளிடையே வலுக்கும் மோதல். புதுக்கோட்டையில் போட்டி போராட்டம்... கரூரில் அதிமுக அலுவலக பூட்டு உடைக்கப்பட்டதால் பரபரப்பு.  அமெரிக்காவில் மிகப்பெரிய அளவுக்கு முதலீடு செய்வதாக உறுதி. அதானி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட அந்நாட்டு நீதித் துறை முடிவு. சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியதற்கு யாரும் கோயிலுக்கு போகக் கூடாது என்று அர்த்தம் அல்ல. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே தங்கள் வழி என உதயநிதி ஸ்டாலின் விளக்கம். போலி வாக்காளர் அட்டையை பயன்படுத்தி திருவாடனை தொகுதியில் வாக்களித்த இலங்கை தம்பதி. மதுரை விமான ந...

மாமனாவது,சீராவாது ?

படம்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், மகளிர் தங்களது வாழ்க்கையில் தலைநிமிர்ந்து நிற்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டக் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை மகளிரின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 மாதம் மாதம் வரவு வைக்கப்பட்டு வந்தது. தேர்தல் அறிவித்துவிட்டால் இந்த உரிமைத் தொகை மகளிருக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்று கருதி, முந்தைய தி.மு.க அரசு கொடை நிதியுதவியுடன் சேர்த்து ரூ.5,000 தொகையை முன்கூட்டியே வங்கியில் வரவு வைத்து அவர்களை மகிழ்வித்தது. இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் கிட்டத்தட்ட 1.31 கோடிப் பெண்கள் கடந்த 2 வருடங்களாகப் பயனடைந்து வருகிறார்கள். இதன் மூலம் தாங்கள் பொருளாதாரச் சுதந்திரத்துடன் இருப்பதாக அவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டு வந்தனர். ஏன் கணவனிடம் கைநீட்டி, 'வெளியே செல்ல வேண்டும், இந்தப் பொருள் வாங்க வேண்டும்' என்று காசு கேட்காமல், தாங்களே தங்களுக்குத் தேவையானதை வாங்கும் அளவிற்குப் பொருளாதார விடுதலையைப் பெண்களுக்குத் திராவிட மாடல் அரசு வழங்கி வந்த...