ஏன் திடீர் பாசம்?
சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் வரும் 12ம் தேதி முதல் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடங்க உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு. தமிழ்நாட்டில் நெருங்கும் தேர்தல்.. களைகட்டும் தேர்தல் பரப்புரை ஜானகி எம்.ஜி.ஆர் மறைவும் ஆர்.எம்.வீ அளித்த வாக்கு மூலமும்! ஏன் திடீர் பாசம்? ஜானகி எம்.ஜி.ஆர். மறைந்தபோது, கடற்கரையில் அடக்கம் செய்யக்கேட்டதாகவும், தி.மு.க. அரசு அன்று அனுமதி தரவில்லை என்றும் வாய்க்கு வந்த பொய் மூட்டையை அவிழ்த்துள்ளார் பழனிசாமி. அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், ஏதுமில்லை. ஏதாவது பொய்யைச் சொல்லி பிழைப்பை நடத்திக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. 1996 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவி ஏற்கிறார் தலைவர் கலைஞர். தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தவர்கள் படம் எல்லாம் வரிசையாக கோட்டையில் அமைச்சரவை அரங்கில் மாட்டப்பட்டு இருக்கும். ஆனால் அதில் ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களின் படம் இல்லை ஜெயலலிதா வைக்கவில்லை. இதனை உணர்ந்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள், உடனடியாக ஜானகி எம்.ஜி.ஆர். படத்தை மாட்டச் சொன்னார்கள். எனவே, தி.மு.க.வுக்கு பெருந்தன்மையை பழனிசாமி போதிக்கத் தேவையில்லை. ...