யாருக்கு வாக்கு......?
தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு. வாக்கு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணி மும்முரம். வாக்குப்பதிவையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கவும் ஏற்பாடு. தமிழ்நாட்டில் ஒரு மாதமாக நீடித்த அனல் பறந்த பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தொகுதிக்கு தொடர்பில்லாத நபர்கள் வெளியேற்றம். தெற்காசியாவின் மாடல் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி. தாம் செய்த பணிகள், திட்டங்களே நமக்கு வாக்கு சேகரிக்கும் என்றும் கொளத்தூரில் பரப்புரை.. மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய பிரச்சாரத்தை சேலத்தில் நிறைவு செய்தார் எடப்பாடி பழனிசாமி. முதல் தலைமுறை வாக்காளர்கள் தவறான நபரை தேர்வு செய்திட கூடாது என வேண்டுகோள். ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் வீடு அருகே கட்டுக்கட்டாக பணம் பறிமுதல். 48 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை. சூளகிரி அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் 58 லட்சம் ரூபாய் பறிமுதல். பிடிபட்ட பணத்தை கைப்பற்றி வருமான வரித்து...