வடக்கு மட்டுமே போதும்!
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியுள்ள தீ, டெல்லியை சுட்டெரிக்கும். ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை. கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா மீது நள்ளிரவு வரை விவாதம். 3 மசோதாக்கள் மீதும் இன்று மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு. தொகுதி மறுவரையறையால் தென்மாநிலங்கள் வஞ்சிக்கப்படும் என திருமாவளவன் கண்டனம். நாட்டை ஆள்வதில் தமிழ்நாட்டின் பங்கை நீர்த்துப் போகச்செய்ய பாஜக சதி -சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உறுதி. தமிழ்நாட்டு எம்.பி.க்களின் எண்ணிக்கை 59-ஆக உயரும் என அமித்ஷா விளக்கம். @ தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என எடப்பாடி பழனிசாமி உறுதி. யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என பாஜக உறுதி அளித்துள்ளதாக, கோவையில் பேச்சு.ஊதுகுழலாக இருந்த பழனி எப்போது பாஜக வில் இணைந்தார்? பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றம் தள்ளுபடி. பாஜ தலைவர் நிதின்நபின் உட்பட 16 பேர் மாநிலங்...