இடுகைகள்

யார் அந்த ராசா ?

படம்
  1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா தொடங்கியபோது, தன்னை கட்சியின் பொதுச் செயலாளராக மட்டுமே அறிவித்துக் கொண்டார்.  காரணம், அந்த இடம் பெரியாருக்கானது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். திராவிடர் கழகத்தின் வழிக்காட்டியாக தந்தை பெரியார் எப்போதும் நீடிக்கிறார் என்பதை உணர்த்தும் விதமாக, திமுகவின் தலைவர் பதவியை பெரியாருக்கானது என்று அப்பீடத்தை காலியாகவே வைத்திருந்தார் அண்ணா.  ஆனால், அண்ணா மறையும் வரை கட்சியின் பொதுச் செயலாளராக அவர் எடுக்கும் முடிவே கட்சியின் முடிவாக இருந்தது. அண்ணாவின் மறைவு வரை திமுகவின் முழு அதிகாரத்தையும் கொண்ட ஒரு பதவி என்றால், அது பொதுச் செயலாளர் பதவி தான்.  அது திமுகவைவிட அதிமுகவில் இன்றளவும் பின்பற்றப்படுகிறது என்பதே நிதர்சனம். அண்ணா மறைவிற்குப் பிறகு கலைஞர் கருணாநிதி திமுகவின் தலைவராக மாறிய நிலையில், அனைத்து அதிகாரங்களும் தலைவருக்கே சென்றது.  இருந்தாலும், பொதுச் செயலாளருக்கே நிர்வாகிகள், வேட்பாளர்கள், நடவடிக்கைகள் என அனைத்தையும் கையாலும் அதிகாரம் வழங்கப்பட்டது.  அண்ணாவிற்கு பிறகு திமுகவின் பொதுச் செயலாள...

நிர்வாகிகளின் அராஜகங்கள்!

படம்
 🔹 தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 106 டிகிரி பாரன்ஹீட் சுட்டெரித்த வெயில். கடலூர், பரங்கிப்பேட்டை, வேலூர், நாகை உள்ளிட்ட 8 இடங்களில் 100 டிகிரியைத் தாண்டியது. 🔹கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் இனறு த.வெ.க.வில் இணைவதாக வெளியான தகவலால் அதிமுகவினர் அதிர்ச்சி. 🔹புதிதாக கட்சி தொடங்கி அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அண்ணாமலை அறிவிப்பு. கரு. நாகராஜன் உள்பட பலர் பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலைக்கு ஆதரவு. 🔹தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாத பாஜகவின், பெயர் மாற்றப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம். அண்ணாமலை தொடங்கிய அமைப்பு, ஆர்.எஸ்.எஸ்., மற்றுமொரு அமைப்பு தான் என்றும் பெ.சண்முகம் குற்றச்சாட்டு. 🔹பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலையில்லா ஆண் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் 3 தனிப்படைகள் அமைத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ரயில்வே போலீசார் விசாரணை. 🔹சென்னை பெரம்பூரில் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு. போதையில் அத்துமீறிய 20 வயது இளைஞர் போக்சோ வழக்கில் கைது. 🔹கேரளத்தில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை. ரெட் அலர்ட் விட...

இதுவும் பொய்தான் !

படம்
  தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி: எங்களை யாரும் அணுகவில்லை – இந்திய கம்யூனிஸ்ட் தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைப்பது தொடர்பாகவோ அல்லது குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவு கோரியோ யாரும் தங்களை அணுகவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  இதுகுறித்து கட்சியின் தலைமையிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும், கருத்தும் கேட்கப்படவில்லை என்றும் கூறியுள்ள அக்கட்சி, இந்த விவகாரம் தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் இல்லை.இதுவும்  பொய்தான் .  என விளக்கம் அளித்துள்ளது.  மேலும், மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அல்லது மறைமுகமாக பாஜக ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவெக அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளோம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. மின்வாரிய அலுவலக ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத்திற்கு நீதிமன்றக் காவல் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர் கோபிநாத்திற்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல...

இனி "இண்டியா கூட்டணி " ?

படம்
🔹 மக்கள் வருந்தும் அளவுக்கு தவெகவின் ஆட்சி நடப்பதாக உதயநிதி விமர்சனம். தமிழ்நாட்டை சோஃபா மாடலாக மாற்றியதே தவெகவின் சாதனை என்றும் காட்டம். 🔹டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவிப்பு. காங்கிரசின் துரோகத்தால் மனக்காயமுற்ற தொண்டர்களுக்கு மதிப்பளித்து முடிவு. 🔹முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான ஒப்பந்தம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு. 3 மாதங்களில் டெண்டர் கோரப்பட்டு புதிய ஒப்பந்தாரர்களை தேர்வு செய்ய திட்டம். தூத்துக்குடி பெட்ரோலிய விற்பனை நிலையத்தில் ஊழியர்களை ஆயுதங்களுடன் வந்து  தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம்.இல்லை எனில் அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களும் ஒருநாள் மூடப்படும். 🔹கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக்கோரும் போராட்டம் டெல்லியில் நாளை நடைபெறுமா? நாடு திரும்பும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனரை கைது செய்ய ஒன்றிய அரசு திட்டம்.  🔹இஸ்ரேல் - லெபனான் தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என்றும் இஸ்ரேலிய படைகள் முழுமையாக வெளியேற வேண்டுமென ஹிஸ்புல்லா அமைப்பு நி...