தியாகம் இல்லாமல்
“தியாகம் இல்லாமல் சாதனை இல்லை” தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிறிய கிராமத்தில் ராமசாமி-கருப்பாயி தம்பதிக்கு 3-வது மகனாக பிறந்தவர் நல்லகண்ணு. அடித்தட்டு மக்களின் உரிமைக்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அற்பணித்தவர்.இவரின் வாழ்க்கையின் பெரும்பகுதி போராட்டங்களிலும் சிறை சாலைகளில் கழிந்தது. இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் உறுதியான காவலராக விளங்கியவர் நல்லகண்ணு. “தியாகம் இல்லாமல் சாதனை இல்லை” என்ற தனது எண்ணத்தை வாழ்வில் நடைமுறையாகக் காட்டியவர் அவர். ஆர்.என்.கே என்று அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் நல்லகண்ணு, தனது கொள்கைக்கும் மக்கள் நலனுக்கும் முழு அர்ப்பணிப்புடன் வாழ்ந்த அரசியல் தலைவர் ஆவார். பாரதியாரின் புரட்சிப் பாடல்கள் மற்றும் வ.உ.சிதம்பரனாரின் சுதந்திர இயக்கப் பாதை ஆகியவை நல்லகண்ணுவின் மனதில் விடுதலைச் சிந்தனையை விதைத்தன. மாணவப் பருவத்திலேயே போராட்டங்களில் கலந்துகொண்ட அவர், காந்தியை விட நேருவின் பொதுவுடைமை கருத்துகளால் அதிகம் ஈர்க்கப்பட்டு பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார். இந்த ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்ட காலத்தில் இளைஞர்களை ஒருங்கிணைத்து ஆங்கிலேய...