இடுகைகள்

கோயபல்ஸ் நிம்மி மாமி!

படம்
  இ ரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனியில் பிரச்சார அமைச்சராகவும், ஹிட்லருக்கு வலது கரமாகவும் திகழ்ந்தவன் கோயபல்ஸ் என்பதை அனைவரும் அறிவோம். அவனது சிறப்பு என்பதே ‘புளுகு’வதில் அவனுக்கு நிகர் வேறு எவரும் இலர் என்பதே ஆகும். இந்தியாவைப் பொருத்தமட்டில் காவிகள் அரசியலில் தலை தூக்கிய பிறகு, ஆர்.எஸ்.எஸ் – பாஜக இந்துத்துவ சங்கிக் கும்பல் சகல துறைகளிலும் ‘காவி அடிப்பதிலும்’, ‘புளுகித் தள்ளுவதிலும்’, காவிகளுக்கு நிகர் காவிகளே என்று சகல துறைகளிலும் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  அதற்கு அண்மை எடுத்துக்காட்டுத் தான் மோடி- அமித்ஷா கை பானமாக விளங்கும் நிர்மலா சீதாராமன் அவிழ்த்துக் கொட்டிய புளுகு மூட்டைகள் ஆகும். ஏற்கனவே விவசாயிகளின் பல்வேறு உரிமைகளைப் பறித்து, கார்பரேட் நலன்கள் சார்ந்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, அதன் காரணமாக டெல்லியில் நடத்திய மாபெரும் விவசாயிகள் போராட்டத்தையும், காவிக் கூட்டத்தை குறைந்தபட்சம் அடிபணிய வைத்ததையும் நாடு மறந்து விடாது. அப்படி இருக்கின்ற பொழுது சிந்திக்கின்ற ஒவ்வொன்றையும் பாசிச பாஜக அரசு கார்ப்பரேட் நலன் கருதியே அமைவதால் ஏற்கனவே புண்பட்டுப் ப...

இன்றைய மக்களவை!

படம்
# இன்று  மக்களவையில்  நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று (ஏப்ரல் 16, 2026) நடைபெற்று வரும் சிறப்பு அமர்வின் முக்கிய நிகழ்வுகள் பற்றி பார்ப்போம். # நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று தொடங்கியுள்ள சிறப்பு அமர்வு, தேசத்தின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது மற்றும் தொகுதிகள் மறுவரையறை செய்வது தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்தக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பின்னரே இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்ற நிபந்தனை இருந்ததால் அது இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை. தற்போது அதற்கான 'அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா' மற்றும் 'தொகுதிகள் மறுவரையறை மசோதா' ஆகியவற்றை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்துள்ளார். இவற்றுடன் சேர்த்து யூனியன் பிரதேச சட்டங்கள் தொடர்பான திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர...

மசோதா நிறைவேறுமா?

படம்
பரபரப்பான சூழலில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம். மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்களை ஒன்றாக அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டம். தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்பு. ஒன்றிய அரசு தந்திரம் செய்வதாக மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு. அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய ஈரான் சென்ற பாகிஸ்தான் குழு. 2-ம் கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்பு. தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டத்தில் வெல்லும் வரை நாம் ஓயக்கூடாது. தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக ஓரணியில் திரளவும் மு.க.ஸ்டாலின் அழைப்பு.  ஒன்றிய பாஜக அரசுக்கெதிராக அனைவரும் வீடுகளில் இன்று கருப்புக் கொடி ஏற்ற திமுக வேண்டுகோள். இந்தியாவை இருண்ட காலத்துக்கு அழைத்துச் செல்ல பாஜக முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு.  ஒன்றிய அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு கடும் பாதிப்பு. தென்னிந்தியாவைவிட வடமாநிலங்களின் தொகுதிகள் நான்கு  மடங்கு வரை அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல். Snapchat App நி...

தமிழ்நாடு எதிர்கொள்ளும் பாதிப்புகள் ?

படம்
தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தம்... கருப்பு கொடி உயரட்டும்! இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 543 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. 1971ஆம் ஆண்டு 55 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை தற்போது 140 கோடியாக உயர்ந்த நிலையில், அதற்கேற்ப எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்திற்கு, மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு முன் கடந்த 2002ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்தில், 2026க்குப் பிறகு நடக்கும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கொண்டு, தொகுதிகளை சீரமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது அதற்கேற்ற வகையில் தொகுதி மறுவரையற...

தென்றலை புயலாக்காதீர்!

படம்
தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி தொகுதி மறுவரையறையை கொண்டு வந்தால் மக்கள் மன்றத்தில் அனுமதிக்க மாட்டோம். திமுகவின் இன்னொரு முகத்தை பார்க்க நேரிடும் எனவும் ஒன்றிய பாஜக அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை. தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பவர்கள் படிப்பறிவற்றவர்கள் என்ற பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் கண்டனம். தன்மானத்தின் மீது கைவைத்தால் டெல்லிக்கு கடுமையான பதிலடி கொடுப்போம் எனவும் எச்சரிக்கை. தொகுதி மறுவரையறையால் நாடே இரண்டாக பிளவுபடும் என தமிழக அரசியல் தலைவர்கள் அச்சம். தென் இந்தியாவை வஞ்சிக்கும் பாஜக அரசின் சூழ்ச்சி எனவும் கண்டனம். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம். மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக முக்கிய முடிவெடுக்க எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு வாக்குப்பதிவுக்கு ஒரு வாரமே உள்ளதால் தமிழ்நாட்டில் அனல் பறக்கும் பரப்புரை. உணவகங்களில் சமைத்தும், காய்கறி விற்றும் வேட்பாளர்கள் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு. இந்த தேர்தலை அதிமுக, புதுப்பொலிவுடன் சந்திப்பதாக எடப்பாடி பழனிசாமி பேச்சு. 210 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அம...