இடுகைகள்

மரணவியாபாரியும்,மவுனகுருவும்!

படம்
55 பேருக்கு உதவிய ' நான் முதல்வன்' தமிழ்நாட்டில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 60 பேரில் 55 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களாவர். யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று (மார்ச். 6) வெளியானது. இதில், அகில இந்திய அளவில், மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே 2-வது இடத்தையும், ராஜா மொய்தீன் 7-வது இடத்தையும் பிடித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டி  தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி பெற்றவர்களாவர். சுமார் பத்து ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர். இந்த ஆண்டு 'நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 55 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 39 பேர் தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையத்தில் தங்கிப் பயின்று, மாதந்தோறும் உதவித்தொகை பெற்று வந்தவர்கள். சென்ற ஆண்டு 'நான் முதல்வன்' திட்டத்தின் உதவியுடன் தமிழகத்தில் 57 பேர் ...

கனவுகள் மெய்ப்படும்!

படம்
'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற 56 மாணவ, மாணவிகள் யு.பி.எஸ்.சி. தேர்வில் சாதனை.ஊக்கத் தொகையுடன் தமிழ்நாடு அரசு அளித்த பயிற்சியே சாதிக்க உதவியதாக முதலமைச்சருக்கு நன்றி! வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தி ஒன்றிய அரசு உத்தரவு. வளைகுடா நாடுகளில் போர்ச் சூழலால் இந்தியாவில் இருந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதி முடக்கம்; சுமார் 4 லட்சம் டன் அரிசி துறைமுகங்களில் தேக்கம். 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் ரூ.115 உயர்வு.எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என ஒன்றிய அரசு கூறிவந்த நிலையில், போர் சூழலை பயன்படுத்தி விலையேற்றம். வெளியுறவுக் கொள்கையில் ஒன்றிய பாஜக அரசு சமரசம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க அனுமதி, இந்தியா வந்த ஈரான் போர்க் கப்பலை தாக்கிய விவகாரங்களில் அமைதி ஏன் எனக் கேள்வி. அடுத்த 5 ஆண்டு வளர்ச்சிக்கான 14 அம்ச தொலைநோக்கு திட்டங்களை அறிவித்தார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.7 லட்சம் வீடுகள் வீடுகள் கட்டித் தரப்படும், அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படும் என உறுதி. கோழிக்கோடு - வயநா...

ரவி மாற ஊழலே காரணம்?

படம்
  இந்தியாவின் விருந்தினராக வந்திருந்த ஈரான் கப்பலைத் தாக்கி அழித்த அமெரிக்கா. கண்டுகொள்ளாத மோடி? இந்தியாவின் அழைப்பை ஏற்று வந்திருந்த ஈரான் போர்க் கப்பலை, இந்தியப் பெருங்கடலுக்கே வந்து, அமெரிக்கா தாக்கி அழித்திருக்கும் நிலையில், அதுபற்றி கண்டனம் கூட தெரிவிக்காமல், பிரதமர் நரேந்திர மோடி இந்திய நாட்டிற்கு சர்வதேச அளவில் களங்கத்தை ஏற்படுத்தியுள் ளார்.  பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய பாஜக அரசின் இந்த செயலுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.  மோடி அரசு கோழைத்தனமானது; அது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பைக் கண்டு அஞ்சுகிறது என்று பாது காப்புத் துறை சார்ந்த ஆய்வாளர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.   முக்கியத்துவம் வாய்ந்த பன்னாட்டு கடற்படை பயிற்சி இந்திய கடற்படையின் மிக  முக்கியத்துவம் வாய்ந்த பன்னாட்டு கடற்படைப் பயிற்சியாக ‘மிலான் 2026’ (MILAN 2026) உள்ளது. இந்த பயிற்சி முதன் முதலாக 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  அதன் 13-ஆவது பயிற்சி, பிப்ரவரி 19 முதல் 25 வரை, விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த பன்னாட்டு கடற்படைப் பயிற்சி மற்றும் சர்வ தேச கடற்படைக் கண்காட்சியில், இந்...

வெல்லம் கொடுத்துக் கொல்லும்

படம்
  மாணவ, மாணவிகள் இடைநில்லா கல்வியை உறுதி செய்யும் பணியில் தமிழ்நாடு மீண்டும் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.தமிழ்நாட்டில் மாணவ மாணவிகளுக்கான உயர்நிலை நிகர சேர்க்கை 2020–21ல் 46.6%-லிருந்து 2024–25ல் 71%  ஆக உயர்ந்துள்ளது, இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பு..ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக நியமனம். மாநிலங்களவை தேர்தலுக்கு திருச்சி சிவா, எல்.கே.சுதீஷ், தம்பிதுரை உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல். மனுக்கள் மீது இன்று பரிசீலனை, திரும்பப் பெற வரும் 9ம் தேதி கடைசி நாள். உங்க கனவ சொல்லுங்க திட்டம் குறித்து சென்னையில் கலந்துரையாடல். பொதுமக்களிடம் இன்று உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்துக்கு தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பு. தெலங்கானா, பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் ஆளுநர்களும் மாற்றம். இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவார். கம்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...