இடுகைகள்

பணிகளை சீர்குலைக்க

படம்
திமுக தேர்தல் பணிகளை சீர்குலைக்க ராகுல் வருகை? சென்னைக்கு அமலாக்கத்துறையின் தலைமை இயக்குநர் ராகுல் நவீன் வியாழக்கிழமை வரவுள்ளார். தில்லியில் இருந்து வருகைதரும் ராகுல் நவீன், சென்னையில் மூன்று நாள்கள் முகாமிட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார். தற்போது நீதிமன்றங்களில் உள்ள தமிழ்நாடு தொடர்பான வழக்குகளின் நிலை குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விசாரணையை அமலாக்கத்துறை வேகப்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யக் கூறி, அமலாக்கத் துறை சார்பில் தமிழ்நாடு டிஜிபி-க்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கில், அமை...

எதை சாதித்தார் ?

படம்
எதை சாதித்தார் பழனி? காப்பி அடிக்க...! த னது ஆட்சிக் காலத்து சாதனைகளை தி.மு.க. அரசு காப்பி அடிப்பதாகப் புலம்பி இருக்கிறார் பழனிசாமி. அவர் என்ன சாதித்தார்?   எந்தத் திட்டம் காப்பி அடிக்கப்பட்டது என்பதை அவர் சொல்லி இருக்க வேண்டும். அப்படி ஏதாவது இருந்தால்தானே சொல்வார்? கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடிக் கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், குறு - சிறு நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதத் திட்டம், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், உங்களுடன் ஸ்டாலின், நலன் காக்கும் ஸ்டாலின், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, பாதம் காப்போம், இதயம் காப்போம், கலைஞர் கைவினைத் திட்டம், ஊட்டச்சத்தை உறுதி செய், மகளிர் விடியல் பயணம், கலைஞர் கனவுஇல்லம், அன்புக் கரங்கள் திட்டம், அன்புச் சோலை திட்டம், தோழி விடுதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத் திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு ...

தியாகம் இல்லாமல்

படம்
  “தியாகம் இல்லாமல் சாதனை இல்லை” தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிறிய கிராமத்தில் ராமசாமி-கருப்பாயி தம்பதிக்கு 3-வது மகனாக பிறந்தவர் நல்லகண்ணு. அடித்தட்டு மக்களின் உரிமைக்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அற்பணித்தவர்.இவரின் வாழ்க்கையின் பெரும்பகுதி போராட்டங்களிலும் சிறை சாலைகளில் கழிந்தது. இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் உறுதியான காவலராக விளங்கியவர் நல்லகண்ணு. “தியாகம் இல்லாமல் சாதனை இல்லை” என்ற தனது எண்ணத்தை வாழ்வில் நடைமுறையாகக் காட்டியவர் அவர். ஆர்.என்.கே என்று அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் நல்லகண்ணு, தனது கொள்கைக்கும் மக்கள் நலனுக்கும் முழு அர்ப்பணிப்புடன் வாழ்ந்த அரசியல் தலைவர் ஆவார். பாரதியாரின் புரட்சிப் பாடல்கள் மற்றும் வ.உ.சிதம்பரனாரின் சுதந்திர இயக்கப் பாதை ஆகியவை நல்லகண்ணுவின் மனதில் விடுதலைச் சிந்தனையை விதைத்தன. மாணவப் பருவத்திலேயே போராட்டங்களில் கலந்துகொண்ட அவர், காந்தியை விட நேருவின் பொதுவுடைமை கருத்துகளால் அதிகம் ஈர்க்கப்பட்டு பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார். இந்த ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்ட காலத்தில் இளைஞர்களை ஒருங்கிணைத்து ஆங்கிலேய...

நீதித்துறையில் நிலவும் ஊழல்”

படம்
என்சிஇஆர்டி புத்தகத்தில்  “நீதித்துறையில் நிலவும் ஊழல்” குறித்த பாடம்  தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) திங்கள் கிழமை வெளியிட்டுள்ள புதிய 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் “நீதித்துறை யில் நிலவும் ஊழல்” மற்றும் வழக்கு களின் பெரும் தேக்கம் உள்ளிட்ட வைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.  “நமது சமூகத்தில் நீதித்துறை யின் பங்கு” (The role of the judiciary in our society) என்ற தலைப்பிலான அத்தியாயத்தில், நீதித்துறையின் பல்வேறு நிலைக ளில் நிலவும் ஊழல்; போதிய எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லாமை; சிக்கலான சட்ட நடை முறைகள்; போதிய உள்கட்ட மைப்பு வசதிகள் இல்லாமை ; தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை உள்ளிட்டவைகளின் தொகுப்புகள் பாடமாக கொடுக்கப் பட்டுள்ளன.  வழக்குகள் தேக்கம் குறிப்பாக, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தோராயமான எண்ணிக்கையை இந்தப் பாடப்புத்தகம் வழங்கி யுள்ளது.  அதில், உச்சநீதிமன்றம் சுமார் 81,000 வழக்குகள் ; உயர்நீதி மன்றங்கள் 62,40,000 வழக்கு கள்; மாவட்ட மற்றும் கீழமை நீதி மன...