நீரிணை கடந்த கப்பல்கள்?
ஹோர்முஸ் நீரிணையை கடந்த கப்பல்; இந்தியக் கொடியுடன் கூடிய எல்.பி.ஜி கப்பல் ஒன்று வெள்ளிக்கிழமை இரவு நீரிணையை கடந்துள்ளதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதனால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவற்றை ஏற்றிக் கொண்டு வரும் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டன. இந்நிலையில், இந்தியக் கொடியுடன் கூடிய எல்.பி.ஜி கப்பல் ஒன்று வெள்ளிக்கிழமை இரவு நீரிணையை கடந்துள்ளதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. இந்திய கப்பல் கழகத்திற்கு சொந்தமான ஷிவாலிக் கேஸ் கப்பல் வெள்ளிக்கிழமை இரவு ஹோர்முஸ் நீரிணையை கடந்து சனிக்கிழமை அதிகாலை 12:45 மணியளவில் ஓமன் வளைகுடாவில் இருந்ததாக 'மரைன் டிராஃபிக்' தரவுகள் உறுதிப்படுத்தின. இதேபோல் மற்றொரு எல்பிஜி கப்பலான நந்தா தேவியும் சில மணி நேரங்களில் இந்த நீரிணையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் பேசிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்...