நான்கு தேர்தல்கள்-
காங்கிரசே உருவாக்கும் '4' பிரச்னைகள்? தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு நீடிப்பதாக கூறப்பட்டாலும், காங்கிரஸ் கருத்து வேறுபாட்டில் ஈடுபட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய நான்கு மாநிலங்களில் வரும் ஏப்ரல்/மே மாத காலகட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இது 2026ம் ஆண்டை வெற்றியுடன் தொடங்க காங்கிரசுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற முழுமையான சட்டமன்ற தேர்தல்களான டெல்லி மற்றும் பீகார் ஆகிய இரண்டு இடங்களிலும் காங்கிரசுக்கு தோல்வியே மிஞ்சியது. எனவே தேசிய அரசியலில் தனக்கான இருப்பிடத்தை உறுதி செய்ய, 4 மாநில தேர்தலில் ஒரு இடத்திலாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது. கடந்த 2025ம் ஆண்டின் இறுதியில் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெற்ற அமோக வெற்றியை தொடர்ந்து, மீண்டும் ஆட்சி அமைக்கும் நம்பிக்கையில் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அளவிலான தேர்தலில், அக்கட்சி தலைமையிலான கூட்டணி 38 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெ...