நீதிமன்றம் வாங்க!
ஆதாரத்துடன் நீதிமன்றம் வாங்க! கடந்த திமுக ஆட்சியில் மொத்தம் உள்ள 32 துறைகளில் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் மருமகனுமான சபரீசனும் தலா 16 துறைகள் எனப் பிரித்துக் கொண்டு ஊழல் செய்து பணம் வசூலித்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அண்மையில் பேசியிருந்தார். அதேபோன்று, திமுக ஆட்சிக்காலத்தில் மின் கட்டண உயர்வு மூலம் கிடைத்த வருவாயால் பயனடைந்தது சபரீசனா அல்லது முதல்வரின் குடும்பத்தினரா என்ற கேள்வியை எழுப்பியதுடன், திமுக – அதிமுக இணைந்து செயல்படுவதாகவும் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் சபரீசன், தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகிய இருவரும் அவதூறு கருத்துக்களைப் பரப்பியதாக வழக்கறிஞர் மூலம் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதாவது கடந்த சில தினங்களாக ஊடகங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளில் தம்மைக் குறித்து உள்நோக்கத்துடன், உண்மைக்கு மாறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்த இரு அமைச்சர்களும் தொடர்ந்து கூறி வருவதாக சபரீசன் தர...