இடுகைகள்

"கொரியன் காதல்" ஆபத்து..!

படம்
  "புளு வேல் "க்கு அடுத்த அபாய விளையாட்டு. கற்பனை உலகில் மூழ்கிவிளையாடிய 3 சகோதரிகள் உயிரை மாய்த்து கொண்ட நேர்ந்த சோகம் உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 சகோதரிகள் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில், மூவரும் "Korean Love Game" விளையாட்டிற்கு அடிமையாகி இருந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணயில் தெரியவந்துள்ளது. "Korean Love Game" விளையாட்டில் அந்தச் சிறுமிகள் தங்களை 'கொரிய இளவரசிகள்' என்று கருதும் அளவுக்குக் கொரிய கலாச்சாரம், கே-பாப் மற்றும் கொரிய நாடகங்கள் மீது அதீத ஈடுபாடு கொண்டிருந்தனர். இந்த "Korean Love Game" சாதாரண விளையாட்டு அல்ல,, மாறாக குழந்தைகளைக் குறிவைத்து நடத்தப்படும் ஒரு அபாயகரமான ஆன்லைன் உளவியல் சுரண்டல். காஸியாபாத் சகோதரிகளின் தற்கொலைக்குப் பிறகு இந்த விளையாட்டு குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு குறிப்பிட்ட செயலியாக இல்லாமல், சமூக வலைதளங்களான Instagram, Discord, WhatsApp மூலமாக பரப்பப்படுகிறது.  கொரிய கலாச்சாரம் மீது ஈடுபாடு கொண்ட சிறுமிகளை அடையாளம் கண்டு, மர்ம நபர்கள் ...

முடிவடைகிறதா ஐ.டி,சகாப்தம்?

படம்
  “உங்களை மக்கள் நிராகரித்த பிறகு, நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற விரும்புகிறீர்கள்” எனக் கூறி, பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக்கோரிய பிரசாந்த் கிஷோரின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது கும்மிடிப்பூண்டியில் ரூ.2091 கோடி முதலீட்டில் மிட்சுபிஷி நிறுவனம் அமைத்துள்ள ஏசி, கம்ப்ரெஸர் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.இந்த ஆலையின் மூலம் 2104 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. கடந்த 2023 செப்டம்பரில் ஆலைக்கான அடிக்கல்லை முதலமைச்சர் நாட்டியிருந்தார். தஞ்சை மாவட்டம் வல்லத்தில் உள்ள நரசிங்கப் பெருமாள் கோயிலில் வைகானச ஆகமத்தின்படி நடக்க உள்ள குடமுழுக்கிற்கு தடை கோரியும், தென்கலை நாமத்தை அகற்றி வடகலை நாமத்தை நிறுவக் கோரியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உயர் நீதிமன்றக்கிளை.கோயிலில் வடகலை முறை பின்பற்றப்...பட்டதற்கான எந்த ஆவணங்களையும் மனுதாரர் பத்ரி நாராயணன் அளிக்காமல், கடைசி நேரத்தில் நீதிமன்றம் வந்துள்ளதாகக் கூறி அவரது மனுவும் தள்ளுபடி. மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் குடிநீர் பாட்டில்களில் கண்டறியப்பட்டுள்ளதை ஒன்றிய அரசின் அறிக்கை உறுதி செய்ததை அடு...

வரலாற்று நிகழ்வு!

படம்
  சென்னை கன்னிமாரா நூலகத்தில் ரூ.85 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கார்ல் மார்க்ஸ் சிலையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னையில் பறவைக் காய்ச்சலால் காகங்கள் உயிரிழந்தது உறுதியானது. பரவலை தடுக்க புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. வி.எஸ் அச்சுதானந்தனுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை வாங்க மாட்டோம்: மகன் அருண்குமார் முகநூலில் தகவல்  வருமானத்தை மறைத்த வழக்கு 1.10 அபராதம்.வருமான வரித்துறை நோட்டீஸுக்கு எதிராக நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு. இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். சேலத்தில் வரும் 13-ஆம் தேதி நடிகர்விஜய் நிகழ்ச்சிக்கு சிக்கல். நீதிமன்ற உத்தரவுப்படி உரிய ஆவணங்களுடன் இன்றைக்குள் விண்ணப்பிக்க போலீசார் கெடு. தேமுதிக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்பமனு விநியோகம். 234 தொகுதிகளுக்கும் விருப்பமனு அளிக்கலாம் என பிரேமலதா அறிவிப்பு. ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை செலுத்தாவிட்டால் சொத்துக்கள் ஏலம் விடப்படும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபா, தீபக் தொடர்ந்த வழக்கில், வருமான வரித்துறை தகவல். எதிர்க்கட்சிகள் மீது சவக...

மன்னிக்க வேண்டுகிறேன்!

படம்
  எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்ற பீட்டர் மண்டேல்சனை அமெரிக்க தூதராக நியமித்ததற்கு பாதிக்கப்பட்டவர்களிடம் பிரிட்டனின் பிரதமர் கியெர் ஸ்டார்மர் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக, கைதான பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, எப்ஸ்டீனுடன் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த விடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிடுவதற்கு கடந்த 2025 நவம்பரில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜன.30 அன்று 35 லட்சப் பக்கங்களைக் கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது. அந்தக் கோப்புகளில் உள்ளவை அனைத்தும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன. அமெரிக்காவுக்கான பிரிட்டனின் முன்னாள் தூதர் பீட்டர் மண்டேல்சனின் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றதும், அவர் எப்ஸ்டீனுடன் நெருங்கிய நட்பைக் கொண்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனால், கடந்த...

தமிழ் பிச்சை எடுக்க உதவாது

படம்
  திருடவும் உதவாது! "இன்று தமிழை, தமிழரைப் பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! தமிழ்... பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது” என்று மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. பேசினார். இன்று மாநிலங்களவையில் முதன்முறையாக கமல்ஹாசன் பேசினார். ஆங்கிலத்தில் உரையாற்றிய அவர், “இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி. இந்த அவையில் ஓர் உறுப்பினராக நின்று பேசுவதை நான் பெரும் கவுரவமாகக் கருதுகிறேன். சினிமா எனும் ஊடகத்தின் வழியாகப் பயணம் செய்து, தமிழகத்தின் பரமக்குடி எனும் ஒரு சிறிய ஊரிலிருந்து புறப்பட்டு வந்தவன் நான். இந்தியா என்பது மாநிலங்களால் இணைந்த ஒரு நாடு. அதுதான் இந்திய அரசியல் சாசனமும் வகுத்துக் கொடுத்திருக்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். நான் எனது மொழியை எனது ஆசிரியர்கள் வாயிலாக கற்றுக் கொண்டேன். எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய எனது ஆசிரியர்களில் ஒருவர...