ஊழல்-மோசடி குற்றவாளி
ஊழல் - மோசடிக் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர் மதுரை மாநகர காவல் ஆணையரா? பல்வேறு முறைகேடுகள், குற்றச்சாட்டுக் களில் சம்பந்தப்பட்டுள்ள அபிஷேக் தீட்சித்தை, மதுரை மாநகர காவல் ஆணையராக நியமித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்யவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாகவும், சட்ட விரோதமாகவும் “கந்தன் முருகன் வாக்கு” என்ற காணொளியை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளவர்களை கண்டறிந்து உரிய நட வடிக்கை எடுக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சார்பில் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ. ஆறுமுக நயினார், வெ. ராஜசேகரன் மற்றும் மூத்த தலைவர் ப. சுந்தர்ராசன் ஆகியோர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியைச் சந்தித்து, நேரில் வலியுறுத்தியதுடன், எழுத்துப்பூர்வமான புகார் மனுவை அளித்து முறையிட்டனர். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்ட ஆட்ச...