நீட் எதிர்ப்பு...!
“ டெல்லியில் இளைஞர்கள் மீதான காவல் துறை ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது” - உதயநிதி நீட் முறைகேடுகளுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டிருந்த சிஜேபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது காவல் துறையைக் கொண்டு ஒடுக்குமுறையை மேற்கொள்கிறது. ஜனநாயகத்தில் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்’ என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டிருந்த சிஜேபி அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மீது காவல்துறை காட்டிய அடாவடித்தனத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். டெல்லியிலிருந்து வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. அவர்களின் கவலைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அரசு தனது காவல்துறையைக் கொண்டு ஒடுக்குமுறையை மேற்கொள்கிறது. ஜனநாயகத்தில் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது. இன்று, நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல், நாட்டின் தலைநகரம் உட்பட நாடு முழுவதும் எத...