இடுகைகள்

வெள்ளை அறிக்கை தேவை....¡

படம்
  *  மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் நடவடிக்கைகளில் தலையிட்டு இடைக்காலத் தடை விதிப்பதற்கான காரணங்கள் இல்லை எனக் கூறியுள்ளது. இதனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் தொடர்ந்து நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது. *  தமிழகத்திற்கு நாள்தோறும் 6,000 கனஅடி காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, அந்த அளவை 3,000 கனஅடியாகக் குறைக்கக் கோரி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள நான்கு முக்கிய அணைகளிலும் நீர்வரத்து கடுமையாகக் குறைந்துள்ளதால் கூடுதல் நீரைத் திறந்துவிட முடியாத சூழல் நிலவுவதாகக் கர்நாடக அரசு தனது மனுவில் தெரிவித்‌துள்ளது. வெள்ளை அறிக்கை தேவை ....¡ தமி​ழ​கத்​துக்கு வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக முதல்​வர் விஜய் கடந்த 10ம் தேதி...

கடைசியில் முதலாவதாக..

படம்
  * கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சி சமயபுரம் அருகே 50க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இணைந்து காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளன.  தமிழகம் முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படததால், போராட்டம் தொடரும் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன. * த.வெ.க. கட்சியை விமர்சித்ததால் என் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. 8 மணி நேரத்துக்கு மேல் என் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அனைத்து அறைகளிலும் போலீசார் சோதனை செய்ய அனுமதித்தேன். வரும் 18ஆம் தேதி என்னை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 18ஆம் தேதி ஆஜராகி விளக்கமளித்து விட்டு தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக்கு செல்வேன்  அன்பில் மகேஸ் பேட்டி.. * கர்நாடகாவில்   பாகல்கோட் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ உமேஷ் மேட்டி. இவரின் மருமகள் அங்கிதா ஆர்யரகா...

பாடம் புகட்டுங்கள்!

படம்
 🗞️ 2000 ரூபாய்க்கு மேலான யுபிஐ வணிக பரிவர்த்தனைகளுக்கு புள்ளி நான்கு சதவீதம் கட்டணம். அக்டோபர் 15 முதல் அமலுக்கு வருவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு. 🗞️ தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிட திமுக, தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல். கடைசி நாளான இன்று அதிமுக, கம்யூனிஸ்ட், நாதக வேட்பாளர்கள் மனுதாக்கல். 🗞️ இடைத்தேர்தலில் தனித்து களமிறங்கும் இடதுசாரிகள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு. மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சுகந்தியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சுமணனும் போட்டி. 🗞️ இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தடைகோரிய வழக்கு இன்று விசாரணை. மரகதம் குமரவேல், சத்தியபாமா போட்டியிட தடை விதிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு. 🗞️ புதிய தலைமைச் செயலகம் தொடர்பான அரசாணையை திரும்ப பெறாவிட்டால் தொடர் போராட்டம். எதிர்ப்பை மீறி ஒரு செங்கல்லை வைத்தாலும் பெரும் விளைவை சந்திக்கு நேரிடும் மீனவர்கள் எச்சரிக்கை. 🗞️ முதலமைச்சர் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள துறையில் 45 லட்சம் ரூபாய் டெண்டர் ஊழல் புகார். ஜூலையில் திறந்த சிலைக்கு ஆகஸ்ட்டில் டெண்டர் விட்டதை அம்பலம்....

UPI கட்டணத்தில் முக்கிய மாற்றம்.

படம்
  UPI கட்டணத்தில் முக்கிய மாற்றம்.  MDR என்றால் என்ன? யு.பி.ஐ. (UPI) மூலம் பணம் செலுத்தும் இந்தியர்களுக்கு முக்கியமான மாற்றம் ஒன்று உருவாகியுள்ளது. ரூ.2,000 வரையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனங்கள் எந்தக் கட்டணமும் வசூலிக்க முடியாது என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில், ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு எதிர்காலத்தில் கட்டணம் விதிப்பதற்கான வாய்ப்பை இந்த புதிய அறிவிப்பு உருவாக்கியுள்ளது. இதனால், கடைகளில் ரூ.2,000-க்கு மேல் பொருட்கள் வாங்கும்போது யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தினால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது அப்படி எந்தக் கட்டணமும் அமலில் இல்லை. ஆனால், அதிக மதிப்புள்ள யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு மெர்சண்ட டிஸ்கவுண்ட் ரேட் (MDR) என்ற கட்டணத்தை அறிமுகப்படுத்துவதற்கான சட்டரீதியான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எம்.டி.ஆர். (MDR) என்றால் என்ன? எம்.டி.ஆர். (MDR) என்பது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையைச் செயல்படுத்துவதற்காக வணிகர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம். ஒருவர் கடையில் கிரெ...