பசுமை இந்தியா
அம்பலமான ஊழல் நாட்டின் காடுகளைப் பாதுகாக்கவும், வளப்படுத்தவும் உருவாக்கப்பட்ட ‘பசுமை இந்தியா இயக்கத்தின்’ (Green India Mission) செயல்பாடுகளில் மிகப்பெரும் குறைபாடுகளும் முறைகேடுகளும் நடந்துள்ளதாகத் தலைமை கணக்குத் தணிக்கையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிய பாஜக அரசின்வெற்று விளம்பரப் பூச்சுகளை அம்பலப்படுத்தியுள்ளது. தேசிய காலநிலைமாற்றக் கொள்கைத் திட்டத்தின் கீழ் உள்ள எட்டு முக்கிய திட்டங்களில் ஒன்றான இதில், நிதி ஒதுக்கீடு குறைவு, திட்டங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின்மை மற்றும் பலவீனமான கண்காணிப்பு ஆகியவை காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இலக்குகளை அடைவதில் இமாலயத் தோல்வி அடைந்துள்ளதை சிஏஜி அறிக்கை திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது. வனப்பகுதிகளின் தரத்தை மேம்படுத்துவதற் காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 91.87 சதவீதமும், புதிய காடுகளை உருவாக்குவதில் 97.57 சதவீதமும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதாவது 1.4 மில்லியன் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தில், வெறும்0.11 மில்லியன் ஹெக்டேர் மட்டுமே தரமுயர்த்தப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டிலும் முறைகேடுகள் நடந்துள்ளதுடன், எட்டு ...