இடுகைகள்

நீட் எதிர்ப்பு...!

படம்
  “ டெல்லியில் இளைஞர்கள் மீதான காவல் துறை ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது” - உதயநிதி நீட் முறைகேடுகளுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டிருந்த சிஜேபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது காவல் துறையைக் கொண்டு ஒடுக்குமுறையை மேற்கொள்கிறது. ஜனநாயகத்தில் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்’ என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டிருந்த சிஜேபி அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மீது காவல்துறை காட்டிய அடாவடித்தனத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். டெல்லியிலிருந்து வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. அவர்களின் கவலைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அரசு தனது காவல்துறையைக் கொண்டு ஒடுக்குமுறையை மேற்கொள்கிறது. ஜனநாயகத்தில் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது. இன்று, நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல், நாட்டின் தலைநகரம் உட்பட நாடு முழுவதும் எத...

தனது முறைகேடு ஊழலை மறைக்க...

படம்
  அமைச்சர் நிர்மல் குமார் தனது  ஊழல் முறைகேடுகளை மறைக்க என் மீது பழி சுமத்துகிறார்” - பி.மூர்த்தி “ தனது துறைகளில் நடக்கும் ஊழல், முறைகேடுகளை மறைப்பதற்காக அமைச்சர் நிர்மல் குமார் என் மீது அடிப்படை ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்,” என முன்னாள் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். மதுரையில் முன்னாள் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோயில் நிலத்தை தனி நபர்கள் பத்திரப்பதிவு செய்ய முடியாதபடி ஆவணங்களில் உரிய குறிப்புகள் இடம்பெற்று இருக்கும். கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு பாதுகாக்கப்பட்ட  பழநி கோயில் நிலம், தவெக ஆட்சியில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் யார் இருந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பழநி கோயில் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்தது, தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்துள்ள புகார், 200 யூனிட் இலவசம்...

ரீல்ஸ் அரசு?

படம்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாகக் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதுமில்லை. 📰 பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர். ராமர் கோயில் காணிக்கை, மேகதாது அணை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம். 📰 நாடாளுமன்றம் நோக்கி இன்று பேரணியாக செல்லப்போவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அறிவிப்பு. டெல்லி ஜந்தர் மந்தரை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம். 📰 நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். உண்ணாவிரதத்தை கைவிடுவது தொடர்பாக சோனம் வாங்சுக் நிபந்தனை. 📰 பழனி கோயில் நிலமோசடி தொடர்பாக நெல்லையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது நாளாக விசாரணை. மடம் நடத்திய முருகதாஸ் சுவாமிகளின் வாரிசுகளான 3 பேரின் வீடுகளிலும் சோதனை. 📰கீழடிக்கு முந்தைய நாகரிகம் மலையப்பட்டியில் இருந்த...

தாமதம் ஏன்?

படம்
  முதல்வர்  மு.க.ஸ்டாலினின் பேரனும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இதற்கான பட்டமளிப்பு விழாவிலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேரனை வாழ்த்தினார். அதன் பிறகு லண்டனில் ஓய்வெடுத்து வந்தார். மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு இன்று சென்னை திரும்புகிறார்.  காலை 8 மணிக்கு அவர் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்புக்கு தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.  காலை 7 மணி முதல் விமான நிலையத்தில் தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் திரள தொடங்கினார்கள். சிறிய மேடை ஒன்று அமைத்து அதில் நின்று தொண்டர்கள் வரவேற்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் கட்சியினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக மேடை அமைப்பதற்கு பலகைகள் கொண்டு வரப்பட்டன.  ஆனால் மேடை அமைக்க தமிழ்நாடு காவ்துறையினர் அனுமதிக்கவில்லை. தாரை-தப்பட்டை போன்ற இசைக் கருவிகளுடன் வந்த கலைஞர்கள் வாத்தியங்களை வாசிக்க தொடங்கினார்கள்....
படம்
 📰 நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி சபரிவர்மன் கொல்லப்பட்ட வழக்கு. சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னையில் திமுக மாற்றுத்திறனாளிகள் அணி சார்பில் ஆர்ப்பாட்டம். 📰 சன் பிக்சர்ஸ் தயாரித்த ராயன் படத்திற்கு, சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிப்பு. கடந்த 2024-ல் தனுஷ் இயக்கி, நடித்த திரைப்படத்திற்கு அங்கீகாரம். 📰 கேப்டன் மில்லர், அமரன், மகாராஜா, மெய்யழகன் உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருது. 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில், 5 தமிழ் படங்கள் 9 விருதுகள் வென்று அசத்தல். 📰 சிறந்த திரைப்படமாக Article 370-ம், அதில் நடித்த யாமி கவுதம் சிறந்த நடிகையாகவும் தேர்வு. "பிரம்மயுகம்" படத்தில் நடித்த மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிப்பு. 📰 பழனி கோயில் நில மோசடி தொடர்பாக சார்பதிவாளர், நிலத்தை வாங்கியவர் வீடுகளில் சோதனை. 5 மணி நேரம் நீடித்த சிபிசிஐடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல். 📰 கோயில் நில மோசடி விவகாரத்தில் மேடை அலங்கார ஊழியர், சமையலரிடம் விசாரணை. தலைமறைவாக உள்ள வெள்ளத்துரை, சேதுபதியை பிடிக்க சிபிசிஐடி மும்முரம். 📰 விலை மதிப்பற்ற...