இடுகைகள்

விவசாயிகளின் தோழன்?

படம்
தமிழக விவசாயிகளின் உற்ற  வஞ்சனைதோழன்? தமிழ்நாட்டு விவசாயிகளின் உற்ற தோழன் மோடி அரசு என கடந்த சில தினங்களாக ஒன்றிய பாஜக அரசு சார்பில் செய்தித்தாள்கள் உள்ளிட்ட பல ஊடகங்களில் விளம்பரம் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் உண்மையான நிலவரம் என்னவென்றால், ஒன்றிய பாஜக வஞ்சனை அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்பதே உண்மை. தமிழ்நாட்டு மக்களின் உற்ற தோழர் என்று கூறிக்கொண்டு, ஒன்றிய பாஜக அரசு கடந்த சில நாட்களாக நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் வெளியிட்டு வருகிறது. மார்ச் 10 அன்று தமிழக விவசாயிகளின் “உற்ற தோழன்” என்று கூறி வெளியிட்டுள்ள விளம்பரம், உண்மையில் எண்களைக் கொண்டு ஆடப்படும் ஒரு மாயாஜாலம். இந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ள ஆறு ‘சாதனை’களையும் தரவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்தபோது, அவை தமிழக மக்களைத் திசைதிருப்பும் திட்டமிட்ட வஞ்சனை என்பது உறுதியாகிறது. மீன்வளத் துறை: தேசிய பட்ஜெட்டைத் தமிழ்நாட்டின் பங்காகக் காட்டிய மெகா மோசடி விளம்பரத்திலேயே மிகப்பெரிய பொய் இதுதான். ஒன்றிய அரசின் கூற்று: தமிழக மீன்வளத் துறை மேம்பாட்டிற்கு ₹20,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் திட்டங்கள்....

இந்திய சமையல் வாயுவை முடக்கிய ஜலசந்தி

படம்
ஹோ ர்முஸ் ஜலசந்தி முடக்கம்! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்திற்கும் இந்தியாவில் எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கும் என்ன காரணம்? இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 31.3 மில்லியன் டன் எல்.பி.ஜி. தேவைப்படுகிறது.   இதில் 87 சதவிகிதம் வீட்டு பயன்பாடாக உள்ளது.  13 சதவிகிதம் வணிக பயன்பாடு.  தேவைப்படும் எல்.பி.ஜி.யில் 62 சதவிகிதம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.   ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் 80ல் இருந்து 90 சதவிகித இறக்குமதி நடந்து வந்தது.  தற்போது போர் காரணமாக இந்த ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் அதன் வழியாக வரவேண்டிய எல்.பி.ஜி. கப்பல்கள் இந்தியாவுக்கு வரமுடியாத நிலை இருக்கிறது.  இதனால்தான் எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாடு தற்போது நாட்டையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. சென்னை எண்ணூர் இன்டேன் பாட்டிலிங் பிளாண்டில் இருந்து சென்னைக்கு வழக்கமாக 130 லாரிகளில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 80 லாரிகளில் மட்டுமே சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.  இதில் வேறு இன்னும் ஒ...

யாருக்கு நாம் அடிமை?

படம்
  அமெரிக்கா - ஈரான் போரால் நாடு முழுவதும் அதிகரிக்கும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு. பல இடங்களில் எரிபொருள் நிரப்பி அனுப்பும் பணி நிறுத்தம். வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தி 10 சதவீதம் அதிகரிப்பு. ஓட்டல்களுக்கான தட்டுப்பாட்டை போக்குவது குறித்து ஆய்வு செய்ய மூவர் குழு அமைப்பு எரிவாயு தட்டுப்பாட்டால் சென்னையில் வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் மையங்கள் மூடல். எரிபொருள் நிரப்ப முடியாமல் வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்கள் தவிப்பு. சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவு வகைகளின் எண்ணிக்கையை குறைக்கும் உணவகங்கள். சென்னை உட்பட பல நகரங்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் விறகு அடுப்பிற்கு மாறிய உணவகங்கள். விரைந்து தீர்வு காணாவிட்டால் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விடும் என வேதனை. கேஸ் தட்டுப்பாடு தொடர்பாக உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை. மாற்று ஏற்பாடு குறித்து எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனும் ஆலோசிக்க முடிவு. சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை. தடையின்றி சமையல் எரிவாயு கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடி...