காரணம் ஆயிரம்?
தற்போது நடந்து முடிந்திருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இதை குறித்து சில பத்திரிகைகள் பலவாறு ஊகத்தை வைத்து பல வதந்திகளை பரப்பி வருகின்றன. இப்படி வாக்குகள் அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்? வாக்கு சதவீதம் அதிகரிப்பதை வைத்து தேர்தல் முடிவுகளைக் கணிக்க முடியுமா? தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இதற்கு முன்பாக, 2011ஆம் ஆண்டின் சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிகபட்சமாக 78.29 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆகவே இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகரித்திருக்கும் வாக்கு சதவீதத்தை வைத்து, தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கலாம் என்ற விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, வாக்கு சதவீதம் வெகுவாக அதிகரித்தால் அது அப்போதைய ஆளும் கட்சிக்கு பாதகமாக இருக்கும் என்பது பொதுவான புரிதலாக இருக்கிறது. ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து நடந்த பொதுத் தேர்தல்களில் வாக்கு சதவீதங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், வெவ்வேறு...