கனமழை தொடரும்!
18 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் தகவல் வேலூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிாி, திருப்பத்தூா், திருவண்ணாமலை, தருமபுாி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூா், கரூா், திண்டுக்கல், தேனி, நீலகிாி, கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் வரும் ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வள்ளுவரை அவமதிக்கும் செயல் சி.பி.எம் சண்முகம் கண்டனம் திருவள்ளுவரை சனாதனி என வரையறுக்கும் ஆளுநரின் கருத்து கடும் கண்டனத்திற்கு உரியது. எம்மதத்தையும் சாராதவரை காவி உடை தரித்தவராக உருவகப்படுத்துவது வள்ளுவரை அவமதிக்கும் செயல் என சி.பி.எம் மாநில செயலர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா? மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 79 அடியாகக் குறைந்து சரிந்துள்ளதன் காரணமாக, இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுமா என்ற பலத்த சந்தேகம் டெல்டா பகுதி விவசாயிகளிடையே எழுந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் குறுவை சாகுபடிப் பணிகளைத் தடையின்றி மேற்கொள்வதற்...