சாமி சத்தியமாக..,.?
🔹 பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 2 பேர் உயிரிழப்பு. பாதிக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை. 🔹தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு குப்பை அள்ளும் வண்டியில் வந்த உணவு. அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என புகார். 🔹அமோனியா வாயுக்கசிவு தொடர்பாக இறால் பதப்படுத்தும் ஆலை உரிமையாளர்கள் உட்பட 3 பேர் கைது. ஆலை செயல்படத் தடை. 🔹இறால் பதப்படுத்தும் ஆலையில் குளிர்விப்பானில் ஏற்பட்ட கசிவே அமோனியா வாயுக்கசிவுக்கு காரணம். மூச்சுத்திணறல், ரத்தக்கசிவு, நுரையீரல் வீக்கம் என பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அலறி துடித்த சோகம். 🔹2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம்.. 🔹அமைதிப் பேச்சு வார்த்தையிலிருந்து ஈரான் வெளிநடப்பு. மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக டிரம்ப் மிரட்டியதால் வெளிநடப்பு. 🔹சிந்து நதியைத் தடுத்தால் போர் தொடுக்க தயங்க மாட்டோம். இந்தியாவுக்கு பாகிஸ்தான் பகிரங்க மிரட்டல் விடுத்த...