இடுகைகள்

வேகமாக முன்னேறும்

படம்
வேகமாக முன்னேறும் தமிழ்நாடு.. தமிழ்நாட்டுபொருளாதாரஆய்வறிக்கை ஜெயரஞ்சன்வெளியிட்டார்! தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் வேளாண் செய்பவர்கள் 25% பேர் மட்டுமே உள்ளனர், வளர்ந்த நாடுகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வேளாண் செய்பவர்கள் இருக்கிறார்கள் என்று ஜெயரஞ்சன் தெரிவித்து உள்ளனர். மேலும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது; தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது. மின்னணு சாதன பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு பிரமாண்ட வளர்ச்சியை அடைந்துள்ளது; உலகம் முழுவதும் தோல் அல்லாத காலணிக்கு ஒரு தேவை உள்ளது, தமிழ்நாட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் அதிகரித்து வருகிறது, என்று கூறி உள்ளார். இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில் சுமார் 26% பங்களிப்புடன், தமிழ்நாடு நாட்டின் மின்னணு வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது. இம்மாநிலத்தின் மின்னணு ஏற்றுமதி மதிப்பு $14.65 பில்லியன் ஆகும...

திறந்துவிடப்படும் இந்தியா !

படம்
40 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க கோரிக்கை. சட்டப்பூர்வ தீர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். - இந்திய வானிலை ஆய்வு மையம். டெல்லியில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. பிரான்ஸ், பிரேசில் அதிபர்கள் மற்றும் சுந்தர் பிச்சை, பில்கேட்ஸ் உள்ளிட்ட 40 சி.இ.ஓ.க்கள் பங்கேற்பு. அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மூலம், இந்திய விவசாயிகளுக்கு பிரதமர் மோடி துரோகம் செய்ததாக ராகுல் விமர்சனம். இந்திய விவசாயப் பொருளாதாரத்தை வெளிநாடு கட்டுப்படுத்தும் அபாயம் எழுந்துள்ளதாக எச்சரிக்கை மகளிர் உரிமைத் தொகைக்கு ஆதி திராவிடர் நல நிதி பய...

வள்ளலார் மாநாடு!

படம்
  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.2.2026) சென்னையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற “அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026”-யை தொடங்கி வைத்து, ஆற்றிய உரை. ‘தருமமிகு சென்னை’ என்று வள்ளலார் போற்றிய சென்னையில், அவர் காட்டிய அறநெறிகளை, வாழ்க்கை முறையாகவே பின்பற்றி வரும் ஆன்மீக அன்பர்களான உங்களை எல்லாம் இந்த “அனைத்துலக வள்ளலார் மாநாட்டில்” சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வள்ளலார் பாடுவதற்காக எடுத்துக்கொண்ட திருவாரூரைச் சேர்ந்தவன் என்ற பெருமையோடு இந்த மாநாட்டில் நான் பங்கேற்க வந்திருக்கிறேன். இந்த மாநாட்டை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கும், அவருக்கு துணை நிற்கக்கூடிய அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் அத்தனை பேருக்கும் நான் இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நம்முடைய சேகர்பாபு அவர்களை பொறுத்தவரைக்கும், கழகப் பணியாக இருந்தாலும் சரி, அரசின் சார்பிலான ஆன்மீகப் பணிகளாக இருந்தாலும் சரி, அதைச் சிறப்பாக செய...

நரவனே நினைவு குறிப்புகள்!

படம்
  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சில நாட்களுக்கு முன்பு மக்களவையில் லடாக்கில் சீன ஊடுருவல் குறித்து முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனேவின் ‘நினைவுக் குறிப்பு’ புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்ட முயன்றார்.  அதற்கு ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தச் சூழலில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘வணக்கம் நண்பர்களே… எனது புத்தகம் இப்போது கிடைக்கிறது. இந்த இணைப்பைப் பின்தொடரவும். மகிழ்ச்சியான வாசிப்பு. ஜெய் ஹிந்த்’ என்று தெரிவித்த நரவனேவின் சமூகவலைதள எக்ஸ் பதிவை படித்துக் காட்டினார்.  தொடர்ந்து பேசிய அவர், “இதுதான் நரவனே சொன்ன ட்வீட்… நான் சொல்ல வரும் விஷயம் என்னவென்றால், முன்னாள் ராணுவத் தளபதி பொய் சொல்ல மாட்டார் என்று நான் நினைக்கிறேன், அல்லது பெங்குயின் பொய் சொல்கிறது. பெங்குயின் புத்தகம் வெளியிடப்படவில்லை என்று கூறுகிறது. தயவுசெய்து என் புத்தகத்தை வாங்குங்கள் என்று ஜெனரல் நரவனே ட்வீட் செய்துள்ளார்.  அவர் இதை 2023-இல் ட்வீட் செய்தார். நரவனேவை விட பெங்குயினை நீங்கள் நம்புகிற...

எகிப்தை விட பழமை சிந்து!

படம்
  மகளிருக்கு 5 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கியது மக்களுக்கு சர்ப்ரைஸ்,  விரோதிகளுக்கு ஷாக். ஆயிரம் ஆண்டுகள் பேசும் சாதனையை ஐந்தாண்டுகளில் செய்து முடித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். அரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. பாஜக-வின் கிளை கழகமாகவே அதிமுக மாறிவிட்டதாகவும் மு.க.ஸ்டாலின் விமர்சனம். நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம். தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற கோயில்களில் கொண்டாட்டங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள். திமுகவை விஜய் தொடர்ந்து விமர்சிப்பது குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில். அண்ணாவே தன்னைப் பார்த்து தான் திமுகவை தொடங்கினார் என செல்லுவார் என கிண்டல் பட்டாசு தொழிலை பாதுகாக்க ஒன்றிய அரசின் தொழில் துறைச் செயலாளரை சந்தித்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வலியுறுத்தல். 18 சதவீத ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரிக்கை. திருவண்ணாமலை, தஞ்சை, கரூர், வேலூர் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் மாசி மாத சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாடு சென்னை கீழ்ப்பாக்கத்...