இந்து தேசியத்திற்கு ..
இந்து தேசியத்திற்கு எதிரானவர் வ.உ.சிதம்பரனார்! “ தமிழ் மண்ணில் தேசியம் ஒருபோதும் வீழாது”- நாட்டின் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், வ.உ. சிதம்பரனாருக்கு 150 அடி உயர சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவர் இவ்வாறு பேசியிருப்பது கவனிக்க வேண்டியது. அடுத்து “தருமத்தை வீழ்த்தும் சக்தி உலகில் இல்லை” என்றும் பேசியிருக்கிறார். வ.உ.சி-க்குச் சிலை எடுப்பது மகிழ்ச்சியே. பாராட்டுகள். ஆனால் துணை ஜனாதிபதியின் பேச்சு சிக்கலானது. அவரது அரசியல் பூர்வீகம் ஆர்.எஸ்.எஸ் என்பதை உலகறியும். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டவர். துணை ஜனாதிபதி என்பதாலேயே இந்த பின்புலத்தை நிராகரிக்க முடியுமா? தேசியமும் ஆர்.எஸ்.எஸ்-சின் திரிபும் நீண்ட காலமாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை இந்து முன்னணியின் மறைந்த ராமகோபாலன் முன்னிறுத்தும் போதெல்லாம் அவர் சொன்ன “தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்” என்ற வாசகத்தைப் பயன்படுத்துவார். தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த முத்துராம லிங்கத் தேவர் ...