பச்சோந்தியே கேளுடா..வச்சேன் குறி நானுடா
மதிமுக தற்போது திமுகவுடனான தங்களது கூட்டணியை முறித்துக்கொண்டது. கடந்த பத்து வருடங்களாக திமுக கூட்டணியில் தொடர்ந்து வந்த வைகோவின் மதிமுக தற்போது கூட்டணியை முறித்துக்கொள்வதாக அறிவித்து இருக்கின்றனர். திமுக கூட்டணியில் இருந்து விலகி மதிமுக தவெகவிற்கு செல்ல இருப்பதாகவும் தெரிகின்றது. வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தவெகவுடன் தோழமையாக இருந்து செயல்படுவோம் என வைகோ அறிவித்து இருக்கின்றார். மேலும் முதலமைச்சர் விஜய்யை சந்தித்தது குறித்தும், மதிமுகவின் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யும் பட்சத்தில் அவர்களை வெற்றிபெற செய்வது என பொறுப்பு என அவர் உத்தரவாதம் கொடுத்தது குறித்தும் பேசியிருக்கிறார் வைகோ. மேலும் மதிமுக வேட்பாளர்களுக்காக தான் பரப்புரை செய்ய இருப்பதாகவும் வைகோவிடம் முதலமைச்சர் விஜய் தெரிவித்தாராம். இதையெல்லாம் வைகோசெய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் திமுகஉடனான கூட்டணியை முறித்துக்கொண்டதற்கான காரணம் குறித்து வைகோ பேசினார். சமீபத்தில் முக ஸ்டாலினை ஒரு விழாவில் சந்தித்ததாகவும் ஆனால் அவர் என்னிடம் பேசவில்லை எனவும் தெரிவித்தார் வைகோ. இந்நிலையில...