வேகமாக முன்னேறும்
வேகமாக முன்னேறும் தமிழ்நாடு.. தமிழ்நாட்டுபொருளாதாரஆய்வறிக்கை ஜெயரஞ்சன்வெளியிட்டார்! தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் வேளாண் செய்பவர்கள் 25% பேர் மட்டுமே உள்ளனர், வளர்ந்த நாடுகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வேளாண் செய்பவர்கள் இருக்கிறார்கள் என்று ஜெயரஞ்சன் தெரிவித்து உள்ளனர். மேலும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது; தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது. மின்னணு சாதன பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு பிரமாண்ட வளர்ச்சியை அடைந்துள்ளது; உலகம் முழுவதும் தோல் அல்லாத காலணிக்கு ஒரு தேவை உள்ளது, தமிழ்நாட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் அதிகரித்து வருகிறது, என்று கூறி உள்ளார். இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில் சுமார் 26% பங்களிப்புடன், தமிழ்நாடு நாட்டின் மின்னணு வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது. இம்மாநிலத்தின் மின்னணு ஏற்றுமதி மதிப்பு $14.65 பில்லியன் ஆகும...