200வீரர்கள் பலி!
200 பாக்'படையினர் பலி? அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் பல வருடங்களாக விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அங்கு பெரும்பான்மையாக வசிக்கும் பலுச் இன மக்களின் ஆயுதக் குழு பி.எல்.ஏ. ( Balochistan Liberation Army ) , அரசு கட்டுப்பாட்டுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நடாத்தி வருகிறது. இந்நிலையில், பி.எல்.ஏ. வீரர்கள் பலுசிஸ்தானில் மீண்டும் புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். “Operation Herof Phase II” என்ற பெயரில் 40 மணி நேரம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் புலிகள் வெடிக் குண்டுகளை உபயோகித்து பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு பெரிய சேதம் செய்தனர். இதனைத்தொடர்ந்து BLA வெளியிட்ட அறிக்கைகளின் படி, பாகிஸ்தான் படைகள், போலீஸ் மற்றும் Frontier Corps உட்பட 200க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டதாக கூறியுள்ளது. முன்னதாக, பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் சில பெண்கள் தற்கொலைபோர்கள் (“Fidayeens”) ஆக பங்கேற்று வெடிக் குண்டுகள் மற்றும் IED பயன்படுத்தி ராணுவத்திற்கும் பாதுகாப்பு படைகளுக்கும் பெரும் சேதம் செய்தனர். B...