விளம்பரத்தாலே உயர்ந்தவன்
வாழ்க்கை நிரந்தரமாகாது ! சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றிய நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 10 ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்று கொண்டார் ஜோசப் விஜய்.. அவருடன் 9 அமைச்சர்களுக்கும் ஆளுநர் பதவிப்பிராமணம் செய்து வந்தார். இந்நிலையில் தவெக ஆட்சி அமைத்ததில் இருந்து பல பொய்யான பிரச்சாரங்கள் செய்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுக்குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதாவது 'தி இந்து' நாளிதழ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தவெக ஆட்சி அமைத்ததில் இருந்து பல போலியான சித்தரிக்கப்பட்ட கதைகளை சோஷியல் மீடியாவில் பரப்பி வருவதாக தெரிவித்துள்ளது. அரசாங்கம் சார்பில் இல்லாமல் தனியார் இன்ப்ளுயன்சர்கள், யூடியூப்பினர் மற்றும் சில பத்திரிக்கையாளர்கள் கூட விஜய் புரட்சி செய்து விட்டதாக போலியாக சில செய்திகளை வெளியிட்டு வருவதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தவெக ஆட்சியில் தான் பெண் அமைச்சர் நியமிக்கப்பட்டு இருப்பதாக சில விஜய் ஆதரவாளர்கள் இணையத்தில் செய்திகள் பரப்பி வந்தன....