1989 மூன்று முதலமைச்சர்கள் வென்ற தேர்தல்!
3 முதலமைச்சர்களை எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்கு அனுப்பிய 1989ம் ஆண்டு தேர்தல். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை நடந்த ஒவ்வொரு தேர்தலும் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகவே இருந்துள்ளது. அதில் மிக மிக முக்கியமான தேர்தல் 1989ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல். ஏனென்றால், தமிழ்நாட்டின் ஆட்சி கட்டிலை அலங்கரித்த 3 முதலமைச்சர்களை சட்டசபைக்கு முதன்முறையாக அனுப்பியது இந்த தேர்தலே ஆகும். அவர்கள்தான் மு.க.ஸ்டாலின். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி . மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் மகனும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முதன்முதலில் போட்டியிட்ட தேர்தல் 1984. ஆனால், அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்த நிலையில், அடுத்து 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 30 ஆயிரத்து 184 வாக்குகள் பெற, திமுக-விற்காக களமிறங்கிய மு.க.ஸ்டாலின் 50 ஆயிரத்து 818 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதன்பின்னர், மு.க.ஸ்டாலின் எந்த தேர்தலில் தோல்வியே காணவில்லை. கடந்த சட...