அவர்கள் நீக்கும் முன்பே...!
அவர்கள் நீக்கும் முன்பே...! எஸ்.பி.வேலுமணி தரப்பிற்கு ஆதரவாக இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூன்று எம்.எல்.ஏக்கள் இன்று தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பான தங்களது ராஜினாமாவர்கள் கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி பிராபகரிடம் கொடுத்துள்ளனர். பின்னர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகத்திற்கு சென்று தவெகவில் இணைந்துள்ளனர். நடந்து முடிந்த 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்டமுடியாமல் போய்விட்டது. இதையடுத்து காங்கிரஸ், இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் அரசு அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 13 மே 2026 அன்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுக்கும் சமயத்தில் எதிர்க்கட்சியான திமுகவுடன் சேர்ந்து தேமுதிக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் 58 பேர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டனர். இதன்...