இடுகைகள்

குற்றத்தை மறைக்க

படம்
தொடரும் ‘துல்லிய’த் தாக்குதல் கடந்த பத்து நாட்களில் நான்காவது முறை யாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப் பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இம்மாதம் 15ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூ.4.78உம், டீசல் லிட்டருக்கு ரூ.4.84உம் உயர்த்தப்பட்டது. தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.2.57 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொடர் விலை உயர்வுகளின் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.107.77 அளவுக்கும், டீசல் ரூ.97.55 ஆகவும் உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. இந்த எரிபொருள் உயர்வின் காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் ஆபத்து ஏற் பட்டுள்ளது. இது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடூரமான தாக்குத லாகும். ஆனால் ஒன்றிய ஆட்சியாளர்கள் இன்னமும் விலை உயரக் கூடும் என்றே அபாயச் சங்கு ஊதுகின்றனர். போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ள தால், பழங்கள், காய்கறிகள், அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் விலையும் மேலும் ஒரு சுற்று உயரும் ஆபத்து எழுந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு போர்ச்சூழ...

இதன் பெயர்தான்

படம்
  இதன் பெயர்தான் குதிரை பேரம்   எம்.எல்.ஏ,க்களை தூக்கிய பரபரப்பு பின்னணி   அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேரை குதிரை பேரம் மூலம் ராஜினாமா செய்ய வைத்து தலைமை செலயகத்திலேயே தவெகவில் இணைத்து உறுப்பினர்கள் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் உருவாகியுள்ள புதிய அதிகாரப் போட்டி, தற்போது அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுகவின் உட்கட்சி பிரச்னையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ஆளும் கட்சியான தவெக தனது அரசியல் பலத்தை சட்டமன்றத்தில் அதிகரிக்கும் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி அணியை சேர்ந்த மதுராந்தகம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா ஆகியோர் திடீரென நேற்று தலைமை செயலகம் வந்தனர். சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை 2.30 மணிக்கு நேரில் சந்தித்து தங்களது பதவி விலகல் கடிதங்களை வழங்கினர். இம்மூவரும் அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி...

அவர்கள் நீக்கும் முன்பே...!

படம்
அவர்கள் நீக்கும் முன்பே...! எஸ்.பி.வேலுமணி தரப்பிற்கு ஆதரவாக இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூன்று எம்.எல்.ஏக்கள் இன்று தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.  இது தொடர்பான தங்களது ராஜினாமாவர்கள் கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி பிராபகரிடம் கொடுத்துள்ளனர். பின்னர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகத்திற்கு சென்று தவெகவில் இணைந்துள்ளனர். நடந்து முடிந்த 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்டமுடியாமல் போய்விட்டது.  இதையடுத்து காங்கிரஸ், இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் அரசு அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 13 மே 2026 அன்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுக்கும் சமயத்தில் எதிர்க்கட்சியான திமுகவுடன் சேர்ந்து தேமுதிக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் 58 பேர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டனர். இதன்...

ரீல்ஸ் × பரப்புரை தடை செய்க!

படம்
🗞️ தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. இடி, மின்னலுடன், சூறைக்காற்றும் வீசும் என்பதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை. 🗞️ ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை, ராசிபுரத்தில் மழையால் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம். 🗞️ கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் தமிழ்நாட்டில் பல இடங்களில் போராட்டம். பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தி பேரணி. 🗞️ கரப்பான் பூச்சி என்ற ஒரு சொல் ஒன்றிய பாஜக அரசை அலறி துடிக்கவிட்டுள்ளது. இழிவுபடுத்தக் கூறிய வார்த்தையையே இளைஞர்கள் ஆயுதமாக்கியுள்ளதாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கருத்து. 🗞️ விடுதலை சிறுத்தைகள்  கட்சியிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ., பனையூர் பாபு விலகல். அடிப்படை அரசியல் அறம் தடுமாறும் போது மவுனமாகக் கடந்து செல்ல முடியாது என விளக்கம். “ரூ.300 கோடி ரீல்ஸ் பிரச்சாரம்; 2 லட்சம் ஃபேக் ஐடிகள் உருவாக்கம்” - தவெக மீது அப்பாவு குற்றச்சாட்டு முன்னாள் சபாநாயகர் அப்பாவு, தவெக கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.  அவர் கூறு...

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி?

படம்
இந்தியாவில் படித்த பட்டதாரி இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மதுரையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்திய கரப்பான்களின் பேரணி ( Madurai Cockroach Rally ) ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமூக வொலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் கரப்பான் ஜனதா கட்சி ( Cockroach Janata Party – CJP) இயக்கத்தின் எதிரொலியாக இந்த வித்தியாசமான நையாண்டிப் போராட்டம் மதுரையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் (Gandhi Museum) இருந்து இன்று (மே 24, 2026) பிற்பகலில் இந்த விசித்திரப் பேரணி புறப்பட்டது.  கைகளில் பதாகைகளையும், தங்களின் குறியீடாக கரப்பான் பூச்சி படங்களையும் ஏந்தியபடி வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் தமுக்கம் தமிழன்னை சிலை நோக்கி பேரணியாகச் சென்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அரசுத் தேர்வு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோஷமிட்டபடி இளைஞர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர் சமீபத்தில் நீதிமன்ற விசாரணையின் போது, சமூக...