மரணவியாபாரியும்,மவுனகுருவும்!
55 பேருக்கு உதவிய ' நான் முதல்வன்' தமிழ்நாட்டில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 60 பேரில் 55 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களாவர். யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று (மார்ச். 6) வெளியானது. இதில், அகில இந்திய அளவில், மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே 2-வது இடத்தையும், ராஜா மொய்தீன் 7-வது இடத்தையும் பிடித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி பெற்றவர்களாவர். சுமார் பத்து ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர். இந்த ஆண்டு 'நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 55 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 39 பேர் தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையத்தில் தங்கிப் பயின்று, மாதந்தோறும் உதவித்தொகை பெற்று வந்தவர்கள். சென்ற ஆண்டு 'நான் முதல்வன்' திட்டத்தின் உதவியுடன் தமிழகத்தில் 57 பேர் ...