ஊருக்குத்தான் உபதேசமா?
நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று மனதின் குரல் என்ற பெயரில் உரையாற்றி வருகிறார். ஒவ்வொரு மாதமும் ஏராளமான அறிவுரைகளையும், ஒப்பேறாத ஆலோசனைகளையும் அள்ளி விடுவது அவரது வழக்கம். அத்துடன் போலியான பிம் பத்தையும் அவர் உருவாக்கி தனக்குத்தானே பாராட்டி, கைதட்டிக் கொள்வார். பிப்ரவரி மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் புகழாரம் சூட்டியுள்ளார். ஜெயலலிதாவுடனான தனது ஒவ்வொரு சந்திப்பும், உரையாடலும் தனக்கு புத்துணர்ச்சி அளித்ததாக அவர் கூறியுள்ளார். 2014 மக்களவைத் தேர்தலின்போது, மோடி யின் குஜராத் மாடலை கடுமையாக விமர்சித்த வர் ஜெயலலிதா. குஜராத்தில் கடந்த பத்தாண்டு களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 65 சத வீதம் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர் அந்தத் தேர்தலின்போது மோடியா, இந்த லேடியா என்று கேட்டதை மோடி வசதியாக மறந்துவிட்டார். அதுமட்டுமின்றி, பாஜகவுடன் தான் கூட்டணி வைத்துக் கொண்டது மிகப் பெரிய தவறு என்றும், இனிமேல் அந்த தவறை செய்யமாட்டேன் என்றும் ஜெயலலிதா கூறிய தையும் மறந்துவிட முடிய...