இடுகைகள்

யாருக்கு நாம் அடிமை?

படம்
  அமெரிக்கா - ஈரான் போரால் நாடு முழுவதும் அதிகரிக்கும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு. பல இடங்களில் எரிபொருள் நிரப்பி அனுப்பும் பணி நிறுத்தம். வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தி 10 சதவீதம் அதிகரிப்பு. ஓட்டல்களுக்கான தட்டுப்பாட்டை போக்குவது குறித்து ஆய்வு செய்ய மூவர் குழு அமைப்பு எரிவாயு தட்டுப்பாட்டால் சென்னையில் வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் மையங்கள் மூடல். எரிபொருள் நிரப்ப முடியாமல் வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்கள் தவிப்பு. சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவு வகைகளின் எண்ணிக்கையை குறைக்கும் உணவகங்கள். சென்னை உட்பட பல நகரங்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் விறகு அடுப்பிற்கு மாறிய உணவகங்கள். விரைந்து தீர்வு காணாவிட்டால் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விடும் என வேதனை. கேஸ் தட்டுப்பாடு தொடர்பாக உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை. மாற்று ஏற்பாடு குறித்து எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனும் ஆலோசிக்க முடிவு. சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை. தடையின்றி சமையல் எரிவாயு கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடி...

ஆனால் உண்மை எது?

படம்
  தே சிய ஜனநாயக கூட்டணிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும், இதனால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் சொல்கிறார்  மோடி.  ஆனால் உண்மை?  திமுகவுக்கு உள்ள செல்வாக்கை பார்த்து என்.டி.ஏ. கூட்டணிதான் அதிர்ச்சி அடைந்துள்ளது. மக்கள் நல திட்டங்களால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழகம் முழுவதும் அலை அடிக்கிறது.   இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை திமுக கூட்டணி வெல்லும் என்று நம்மூர் கருத்துக்கணிப்புகள் மட்டுமல்லாது, உலகின் மிகப்பெரிய கணிப்புச் சந்தையான பாலி மார்க்கெட்டும் தனது கணிப்பை சொல்லி இருக்கிறது.  மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்கப்போகிறார் என்பது தெரிந்ததால்தான் தவெக பக்கம் தாவ இருந்த காங்கிரஸ் கூட திமுக கூட்டணியிலேயே தொடர்கிறது.   தேமுதிக உள்ளிட்ட புதுப்புது கட்சிகளும் திமுக கூட்டணிக்கு வந்திருக்கின்றன.   திமுக கூட்டணியில் 28 கட்சிகள் உள்ளன.  28 கட்சிகளை  கூட்டணியில் வைத்து பிரம்மாண்டம் காட்டும் திமுக, திருச்சியில் நேற்று 10 லட்சம் தொண்டர்களை திரட்டி பிரம்மாண்ட மாநில மாநாடு நடத்தி இருக்கிறது.  ...

விலக நேரும்?

படம்
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நீடிப்பதால், தொழிற்சாலை மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தியது இந்தியன் ஆயில் நிறுவனம். வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பிரபல ஹோட்டல்களில் உணவு வகைகள்,இயங்கும் காலம் குறைக்கப்பட்டுள்ளன. ஒரு எல்பிஜி சிலிண்டர் வாங்கியபின் மற்றொரு சிலிண்டர் வாங்குவதற்கான கால இடைவெளியை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தியது மத்திய அரசு. வீட்டிற்கு பயன்படுத்தும் சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெங்களூருவில் ஹோட்டல்கள் இன்று முதல் மூடல். சிலிண்டர் தேவை மற்றும் கையிருப்பு விவரத்தை தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ‘கற்றனைத் தூறும் அறிவு‘ சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 400 ...

உரங்களுக்குத் தட்டுப்பாடு அபாயம்!

படம்
தமிழ்நாட்டில் சிலிண்டர் கையிருப்பு தொடர்பாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை. சிலிண்டர் தேவை மற்றும் கையிருப்பு விவரத்தை தெரிவிக்க எண்ணெய் பிரதிநிதிகளுக்கு உத்தரவு வர்த்தக சிலிண்டர் முன்பதிவு நிறுத்தப்பட்டதால் பெங்களூரில் இன்று ஹோட்டல்களை மூட முடிவு. பிரதமர் தலையிட்டு தீர்வு காண சென்னை ஹோட்டல் உரிமையாளர் சங்கங்கள் கடிதம். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை பாஜகவால் தமிழ்நாட்டை ஆள முடியாது என முதலமைச்சர் சூளுரை. அதிமுக முகமூடி போட்டு வந்தாலும் பாஜகவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவோம் என அதிரடி கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கோரும் விஜய். டெல்லியில் இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில் கோரிக்கை பொருளாதார சீரழிவுக்கு முக்கியமான விவகாரம் பற்றி விவாதிக்க மறுப்பது ஏன் என ராகுல்காந்தி கேள்வி. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை விட்டே ஓடி விட்டதாகவும் கடும் விமர்சனம். இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை என ஒன்றிய அரசு தகவல். கச்சா எண்ணெய் விலை பேரல் 130 டாலரை தாண்டாத வரை ஆ...