இடுகைகள்

இந்து தேசியத்திற்கு ..

படம்
இந்து தேசியத்திற்கு எதிரானவர்  வ.உ.சிதம்பரனார்! “ தமிழ் மண்ணில் தேசியம் ஒருபோதும் வீழாது”-  நாட்டின் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், வ.உ. சிதம்பரனாருக்கு  150 அடி உயர சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவர் இவ்வாறு பேசியிருப்பது கவனிக்க வேண்டியது.  அடுத்து “தருமத்தை வீழ்த்தும் சக்தி உலகில் இல்லை” என்றும் பேசியிருக்கிறார். வ.உ.சி-க்குச் சிலை எடுப்பது மகிழ்ச்சியே. பாராட்டுகள். ஆனால் துணை ஜனாதிபதியின் பேச்சு சிக்கலானது. அவரது அரசியல் பூர்வீகம் ஆர்.எஸ்.எஸ் என்பதை உலகறியும்.  தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டவர். துணை ஜனாதிபதி என்பதாலேயே இந்த பின்புலத்தை நிராகரிக்க முடியுமா?  தேசியமும் ஆர்.எஸ்.எஸ்-சின் திரிபும் நீண்ட காலமாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை இந்து முன்னணியின் மறைந்த ராமகோபாலன்  முன்னிறுத்தும் போதெல்லாம் அவர் சொன்ன “தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்” என்ற வாசகத்தைப் பயன்படுத்துவார். தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த முத்துராம லிங்கத் தேவர் ...

தேசிய நலனா?

படம்
  சித்தாந்தக் கூட்டா? சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ‘அணிசேராக் கொள்கை’, ‘மனிதாபிமான ஆதரவு’ ஆகிய தூண்களின் மீது கட்டமைக்கப்பட்டது.  குறிப்பாக, பாலஸ்தீன விவகாரத்தில், அடக்குமுறைக்கு உள்ளாகும் ஒரு இனத்தின் பக்கம் நிற்பதை இந்தியா தனது தார்மீகக் கடமையாகக் கருதியது.  ஆனால் இன்று நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, இஸ்ரேலுடன் கொண்டுள்ள நெருக்கம், இந்தியாவின் பாரம்ப ரியப் பெருமையையும் பிராந்தியப் பாதுகாப்பை யும் கேள்விக்குறியாக்கியுள்ளது. காந்தி, நேரு காலத்திலிருந்தே இந்தியா பாலஸ்தீனத்தின் இறையாண்மையை ஆத ரித்தது. 1988-இல் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக  அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடு இந்தியா. ஆனால் மோடி பிரதமரான பின்பு கடந்த பத்தாண்டுகளில் இந்த நிலைப்பாடு மாறியுள்ளது.  ஐநா சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களில் இந்தியா தொடர்ந்து ‘வாக்கெடுப்பிலிருந்து விலகி நிற்பது’ பாலஸ் தீனத்திற்குச் செய்யும் மறைமுகத் துரோகமும், இந்தியாவின் சர்வதேச நற்பெயருக்குக் களங்கமாகும். இந்த மாற்றத்திற்குப் பின்னால் ஒரு சித்தாந்த ஒற்றுமை உள்ளது. ஆர்.எஸ்.எஸ்-இன் ‘இந்துத் ...

பணிகளை சீர்குலைக்க

படம்
திமுக தேர்தல் பணிகளை சீர்குலைக்க ராகுல் வருகை? சென்னைக்கு அமலாக்கத்துறையின் தலைமை இயக்குநர் ராகுல் நவீன் வியாழக்கிழமை வரவுள்ளார். தில்லியில் இருந்து வருகைதரும் ராகுல் நவீன், சென்னையில் மூன்று நாள்கள் முகாமிட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார். தற்போது நீதிமன்றங்களில் உள்ள தமிழ்நாடு தொடர்பான வழக்குகளின் நிலை குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விசாரணையை அமலாக்கத்துறை வேகப்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யக் கூறி, அமலாக்கத் துறை சார்பில் தமிழ்நாடு டிஜிபி-க்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கில், அமை...