இடுகைகள்

சரியும் சட்டம் ஒழுங்கு

படம்
சரியும் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவுடன் புதிய கூட்டணியை அமைத்து ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நாளில் இருந்தே, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கோவை சூலூர் பகுதியில் சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடலூரில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதும், சென்னை வேளச்சேரியில் மூதாட்டி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதும், மதுராந்தகத்தில் மூதாட்டியை நகைக்காக கொலை செய்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மரக்காணத்தில் 11வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை, கடலூர் அருகே வடலூரில் 30 வயது இளம்பெண்ணின் சடலம் மீட்பு உள்ளிட்டவை சட்டம் ஒழுங்கை நிலைகுலைய வைக்கின்றன. எப்போதுமே கொலை களமாக திகழும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தற்போது கண்ணில் கண்டவர்களை எல்லாம் அரிவாளால் வெட்டி சென்ற ஒரு கும்பல் 10 பேரை வெட்டி காயப்படுத்தியுள்ள...

ஒவ்வொரு நாளும்......

படம்
 🔹 கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக கனமழை. வேடசந்தூர் அருகே சூறாவளி காற்றில் பறந்த தகர மேற்கூரையால் போக்குவரத்து பாதிப்பு. 🔹 சி.வி.சண்முகம் ராஜினாமா செய்த மாநிலங்களவை இடத்துக்கு இடைத்தேர்தல். வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம். 🔹 சென்னை கோயம்பேட்டில் கார் ஏற்றி 18 வயது இளம்பெண் கொடூரக் கொலை. 2 பேர் கைது, மேலும் 5 பேரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரம். 🔹 காவிச்சாயம் பூசப்பட்ட வள்ளுவர் சிலைக்கு ஆளுநர் மரியாதை செலுத்தியதற்கு வலுக்கும் கண்டனம். வள்ளுவரின் சிந்தனைகளை சிறுமைப்படுத்துவதா என தவெக, திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக கேள்வி. 🔹 வெளியூர் சென்றவர்கள் ஒட்டுமொத்தமாக சென்னை திரும்புவதால், விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு. மதுரையில் இருந்து சென்னை வர 17 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பால் பயணிகள் அதிர்ச்சி. 🔹 மானாமதுரை அருகே திருப்புவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெட்ரோல் பங்க்குகள் மூடல். வாகனங்களுக்கு எரிபொருள் கிடைக்காமல் மக்கள் அவதி. 🔹 பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு 2 லட்சத்து 81 ஆயிரம் பேர் விண்ணப்பம். விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளையுடன்...

கனமழை தொடரும்!

படம்
  18 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் தகவல் வேலூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிாி, திருப்பத்தூா், திருவண்ணாமலை, தருமபுாி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூா், கரூா், திண்டுக்கல், தேனி, நீலகிாி, கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் வரும் ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வள்ளுவரை அவமதிக்கும் செயல் சி.பி.எம் சண்முகம் கண்டனம் திருவள்ளுவரை சனாதனி என வரையறுக்கும் ஆளுநரின் கருத்து கடும் கண்டனத்திற்கு உரியது. எம்மதத்தையும் சாராதவரை காவி உடை தரித்தவராக உருவகப்படுத்துவது வள்ளுவரை அவமதிக்கும் செயல் என சி.பி.எம் மாநில செயலர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா? மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 79 அடியாகக் குறைந்து சரிந்துள்ளதன் காரணமாக, இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுமா என்ற பலத்த சந்தேகம் டெல்டா பகுதி விவசாயிகளிடையே எழுந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் குறுவை சாகுபடிப் பணிகளைத் தடையின்றி மேற்கொள்வதற்...

சென்றார்!வந்தார்!

படம்
🔹  ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் படத்திற்கு மீண்டும் காவிச்சாயம் பூசப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு.. இந்த விவகாரத்திலும்  விஜய் பயந்து நடுங்கக் கூடாது என உதயநிதி ஸ்டாலின் கண்டனம். 🔹 சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள், 3 மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம். ஆளுநரின் முதன்மைச் செயலாளராக இருந்த கிர்லோஸ்குமாரும் இடமாற்றம். 🔹 திமுகவின் எதிர்காலம் நம்பிக்கை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் உறுதி. GenZ தலைமுறையினர் சந்திப்பு கூட்டத்தை பதிவிட்டு நெகிழ்ச்சி. 🔹 அபிஷேக் பானர்ஜி மீது பாஜக திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு. சிகிச்சை அளிக்கக் கூடாது என மருத்துவமனைகளுக்கும் அழுத்தம் கொடுத்ததாக மம்தா பரபரப்பு புகார். 🔹 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி மீது பாஜக ஆதரவாளர்கள் தாக்குதல். கற்கள், முட்டைகளை வீசி கடுமையாக தாக்கியதால் பலத்த காயம். 🔹 அடுத்த 4 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணிப்பு. 🔹 சென்னையில் டெலிவரி ஊழியரை கடுமையாக தாக்கிய ஓட்டல் ...

சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!

படம்
 * கையால் ஆகாத ஒரு @@@@ ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு* பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! , சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாகத் திட்டமிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு விஜய் தலைமையிலான அரசு முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில், தற்போது அங்கு கைப்பற்றப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கட்டுவதற்கான பேச்சுவாத்தை நடப்பதாகவும், அதேவேளையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் எவ்விதமான முடிவும் எடுக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சொன்ன நோ, வெறும் ஒரு விமான நிலையத்தோடு மட்டும் முடிவடையாமல், அதனைச் சுற்றி திட்டமிட்டு இருந்த சுமார் 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மெகா உள்கட்டமைப்புத் திட்டங்களையும், 1 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் என மொத்தமாகப் பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. சீட்டுக்கட்டுப்போல் சரியும் திட்டங்கள் பரந்தூர் திட்டத்தை மையமாகக் கொண்டு சென்னைக்கு மேற்கே உருவாக்கப்படவிருந்த பிரம்மாண்ட...