ஏன் தேர்தல் இல்லை?
தமிழ்நாட்டில் ஏன் தேர்தல் அறிவிக்கவில்லை? தமிழ்நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் 7 தொகுதிகள் காலியானதாக உள்ளன. இதில் 6 இடங்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த தொகுதிகள். அதிமுக ஆறு எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். இதனையடுத்து காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது இன்பதுரை தெரிவித்துள்ளார். அதாவது அதிமுக நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் இருக்கும்போது, அவர்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கக்கூடாது. எனவே அந்த நான்கு தொகுதியிலும் தேர்தல் நடத்தக்கூடாது என்று அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் கரூர், விராலிமலையை சார்ந்த விஜயபாஸ்கர்களும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். இதனையடுத்து மொத்தமான ஆறு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தக்கூடாது என அதிமுக சார்பில் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என அதிமுக சார்பி...