இடுகைகள்

புத்தம் சரணம் கச்சாமி!

படம்
  ஆதார் அட்டை ஆதாரமே இல்லை! வங்கி முதல் டிக்கெட் பதிவு வரை எங்கே சென்றாலும், நம்மிடம் கட்டாயம் கேட்கப்படும் ஒரு ஆவணம் – ஆதார் கார்டு அல்லது ஆதார் கார்டு எண். ஆனால், அப்படிப்பட்ட ஆதார் கார்டு இந்திய குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. இதை ஆதார் கார்டிலேயே குறிப்பிட்டிருப்பார்கள். ஆதார் கார்டு என்பது தற்போது இந்தியாவில் இந்த முகவரியில் வசிக்கிறோம் என்பதற்கான அடையாள ஆவணம் மட்டுமே. சரியான ஆவணங்களைக் கொடுத்து வெளிநாட்டினர் கூட இந்தியாவில் ஆதார் கார்டை பெறலாம். ஆனால், அவர்களுக்கு ஒரே ஒரு கண்டிஷன் தான் – குறிப்பிட்ட அந்த நபர் 182 நாள்கள் அல்லது அதற்கு மேல் இந்தியாவில் தங்கியிருக்க வேண்டும். ஆதார் கார்டை வெறுமனே குடியுரிமைக்கான ஆவணம் இல்லை என்று மட்டும் சொல்லிவிட முடியாது. ஆதார் கார்டை பிறந்த தேதிக்கான ஆவணமாகவும், உறவுமுறைக்கான ஆவணமாகக் கூட பயன்படுத்த முடியாது. ஆக மொத்தம் ஆதார் கார்டு என்பது முகவரி மற்றும் அடையாளத்திற்கான ஆவணம் மட்டுமே. "புத்தம் சரணம் "! தாய்லாந்திலிருந்து கொழும்பு வந்த புத்த துறவிகள் 22 பேரிடம் இருந்து ரூ.110 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரு...

தெற்கும்,வடக்கும்

படம்
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு சூப்பராக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி. மதுரை விமான நிலையத்தில் செய்தியாளரின் கேள்விக்கு, தம்ப்ஸ் அப் காட்டி மகிழ்ச்சி. மேற்குவங்க மாநிலத்தில் நாளை மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை. இறுதிக்கட்ட பரப்புரை மம்தா, ராகுல்காந்தி, அமித்ஷா தீவிரம். இளங்கலை நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு. தேர்வு மையங்கள் எண்ணிக்கை குறித்த விவரம் விரைவில் வெளியாகிறது.  ஈரான் உடனான 2ம் கட்ட பேச்சுவார்த்தையை திடீரென ரத்து செய்த ட்ரம்ப். அமெரிக்க தூதர்கள் குழுவின் பாகிஸ்தான் பயணமும் நிறுத்திவைப்பு. . சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.23-க்கும், டீசல் 92.81 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.கவும் என்னை 24 மணி நேரமும் குறிவைகின்றனர், நான் எதற்கும் அஞ்சமாட்டேன். மேற்குவங்க பிரசாரக் கூட்டத்தில் பேச...

நரகக் குழிகள்?

படம்
அமெரிக்க அவமானம்! அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் வெளியேற விரும்புவதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது . இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் வேலை தேடியோ குடியுரிமை பெற வேண்டும் என்றெல்லாம் போராடிய காலங்கள் உண்டு.  ஆனால், தற்போது அமெரிக்காவிலிருந்த வெளியேறவே பலரும் முயல்வதாகவும் விரும்புவதாகவும் கார்னகி என்டோவ்மென்ட் என்ற சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் 54 லட்சம் இந்தியர்கள் (அமெரிக்காவின் மக்கள்தொகையில் 1.6 சதவிகிதம்) வசித்து வரும்நிலையில், அவர்களில் 40 சதவிகிதத்தினர் அமெரிக்காவைவிட்டு வெளியேற விரும்புவதாகக் கூறியுள்ளனர். அவர்களிலும் 14 சதவிகிதத்தினர் அமெரிக்காவைவிட்டு உடனடியாக வெளியேற விரும்புவதாகவும், 26 சதவிகிதத்தினருக்கு அமெரிக்காவைவிட்டு வெளியேறும் எண்ணம் அவ்வப்போது வருவதாகவும் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவைவிட்டு வெளியேறுவதற்கான காரணங்களாக, அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழல், டிரம்ப்பின் இரண்டாது பதவிக்காலத்தில் அவரின் சரியில்லாத செயல்பாடுகள்தான் காரணம் என 71 சதவிகிதத்தினர் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, விலை...

சில புள்ளி விவரங்கள்

படம்
தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர்ராவ்வின் மகள் கவிதா   தெலுங்கானா ராஷ்டிர சேனா (TRS) என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்  கள்ளக்குறிச்சியில் விவசாய கிணற்றில் விழுந்து தந்தை, மகன் உயிரிழப்பு!   அவிநாசி தொகுதியில் எனக்கு 100 சதவீத வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். எங்களது வெற்றி தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மேற்கு வங்க தேர்​தல் வெற்​றிக்கு பிறகு டெல்​லியை கைப்பற்​று​வேன்" - மம்தா பானர்ஜி. தமிழ்நாட்டில் 84.69% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாக்கு சதவீதத்தை உயர்த்தி காட்டிய எஸ்ஐஆர்.  சில புள்ளி விவரங்கள்.   கடந்த 25 ஆண்டுகளாக நடந்த தேர்தலில் எஸ்ஐஆர் பணியால் வாக்கு சதவீதம் உயர்த்தி காட்டப்பட்டுள்ளது. ஆனால், வாக்களித்தவர்கள் எண்ணிக்கை படுமோசமான நிலையில் உள்ளது என்பது புள்ளி விவரங்கள் மூலம் தெளிவாக தெரிகிறது. எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழகத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளா...

எதற்கு இந்த ஆணையம்?

படம்
  சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி. பெல்களூரில்ல் வேலை செய்தார். இவர் கடந்த 2016ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் ராம்குமார் என்பவரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறையில் இருந்த ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தற்கொலை பலருக்கு ஐயத்தைக் கிளப்பியது. சிறையில் அதிக உயரத்தில் உள்ள மின் இணைப்பை எப்படி வாயால் கடித்து தற்கொலை செய்ய முடியும் என்ற கேள்வி அனைவராலும் எழுப்பப் பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கபட்ட புகாரின் பெயரில் விசாரனை நடத்திய தேசிய உரிமைகள் ஆணையம். சென்னை காவல் ஆணையரின் அறிக்கை கோரியது. இதனை தொடர்ந்து ஆணையர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக முடிவுக்கு வந்த ஆணையம்.  வழக்கை கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் முடித்து ...

காரணம் ஆயிரம்?

படம்
தற்போது நடந்து முடிந்திருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில்  சுமார் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.  இதை குறித்து சில பத்திரிகைகள் பலவாறு ஊகத்தை வைத்து பல வதந்திகளை பரப்பி வருகின்றன. இப்படி வாக்குகள் அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்?  வாக்கு சதவீதம் அதிகரிப்பதை வைத்து தேர்தல் முடிவுகளைக் கணிக்க முடியுமா? தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.  இதற்கு முன்பாக, 2011ஆம் ஆண்டின் சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிகபட்சமாக 78.29 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆகவே இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகரித்திருக்கும் வாக்கு சதவீதத்தை வைத்து, தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கலாம் என்ற விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, வாக்கு சதவீதம் வெகுவாக அதிகரித்தால் அது அப்போதைய ஆளும் கட்சிக்கு பாதகமாக இருக்கும் என்பது பொதுவான புரிதலாக இருக்கிறது.  ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து நடந்த பொதுத் தேர்தல்களில் வாக்கு சதவீதங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், வெவ்வேறு...

வாக்குப் பதிவு,.!

படம்
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அறிவிப்பு. ஓராண்டை கடந்தும் நீடிக்கும் நடவடிக்கை இந்திய வான்வௌியில் பாக். விமானங்கள் பறக்க மே 24 வரை தடை நீட்டிப்பு. 152 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் மேற்கு வங்கத்தில் 92 சதவீதம் வாக்குப்பதிவு; பல இடங்களில் வன்முறை; பாஜ வேட்பாளருக்கு தர்மஅடி. ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்றவர்களிடம் தகராறு செய்த வேட்பாளர் தமிழிசை வாக்காளர்கள் கடும் வாக்குவாதம்   போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரானின் கப்பலை அமெரிக்கா சிறைபிடித்தது.இந்திய மாலுமி சிக்கித்தவிப்பு. வெடி விபத்தில் 14 பேர் பலி திருச்சூர் பூரம் திருவிழாவில் வாணவேடிக்கை நிகழ்ச்சி கைவிடல். ஊதிய உயர்வு, போனஸ் உச்ச வரம்பை நீக்க வலியுறுத்தல் 40 ஆயிரம் சாம்சங் தொழிலாளர்கள் தென்கொரியாவில் போராட்டம்: மே 21 முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு. ஓட்டு போட தெரியாமல் முழித்த முன்னாள் அமைச்சர்திண்டுக்கல்சீனிவாசன்.பொத்தானுக்கு பதில் சிகப்பு விளக்கை  அமுக்கி ஓட்டு விழவில்லை என புகார் செய்த திண்டுக்கல் சீனிவாசன். ...