இடுகைகள்

ஊசிக்குள் மென்பொருள்

படம்
  நேபாள வெள்ளத்தில் சிக்கிய நீதிபதி சிவஞானம் உள்ளிட்ட 84 தமிழர்களின் நிலை என்ன? உறவினர்களின் டி.என்.ஏ. அறிக்கை 2 நாட்களில் நேபாளம் அனுப்பப்படும் என தகவல். 🔹ஈரான் எண்ணெய் கப்பல் மீது அடுத்தடுத்து ஏவுணைகளை வீசி தாக்குதல்; அமெரிக்காவின் நடவடிக்கையால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம். 🔹சென்னையின் 2-வது விமான நிலையத்தை செய்யூர் அல்லது கும்மிடிப்பூண்டியில் அமைக்க திட்டம்; 2 இடங்களை தேர்வு செய்து விமான நிலைய ஆணையத்திற்கு விஜய் அரசு கடிதம். 🔹ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க மறுக்கும் தவெக; முடிவெடுக்க அவகாசம் உள்ளதாக தவெக அமைச்சர்கள்  மழுப்பல். 🔹பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் அமித்ஷாவின் சென்னை வருகைக்கு பிறகே தவெக நிலைப்பாட்டில் மாற்றம் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டு. ஊசிக்குள் மென்பொருள்’ புற்றுநோயை mRNA தடுப்பூசி! எப்படி செயல்படுகிறது புற்றுநோய் சிகிச்சையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், நோயாளிக்கு ஏற்றபடி உருவாக்கப்படும் mRNA தடுப்பூசி தொழில்நுட்பம் மருத்துவ உலகில் கவனம் பெற்றுள்ளது. ‘Software in a Syringe’ என அழைக்கப்படும் இந்த அணுகுமுறை...

ஓடு.பார்க்கலாம்.. ஓடு... ஓடு..

படம்
  ஓடு... ஓடு... ஓடு... கரூரில் ஓடிய விஜய், சட்டமன்றத்தில் இருந்தும் ஓடி இருக்கிறார். எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லாதவர் என்பதை தினமும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார் விஜய். “வரும் திங்கட்கிழமை பதிலுரை அளிக்கிறேன். நான் பதிலுரை தரும்போது, யாரும் எழுந்து ஓடிறக் கூடாது’’ என்று சொல்லி விட்டு முதலமைச்சர் விஜய் என்ன செய்தார்?  அதைச் சொல்லிவிட்டு ஓடிவிட்டார். இதுதான் தமிழ்நாடு சட்டமன்றத்தை அவர் மதிக்கும் லட்சணமா? காவல் துறையை முதலமைச்சர் விஜய் கையில் வைத்துள்ளார். அத்துறையின் சார்பில் மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.  ஒவ்வொரு உறுப்பினர் பேசுவதையும் உன்னிப்பாக கவனித்து, குறிப்பு எடுத்து வைத்துக் கொண்டு அதற்கு பதில் சொல்ல வேண்டியது அவரது கடமை ஆகும். மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலுரை என்பதை இறுதியாகச் சொல்லலாம் என்றாலும், மிக முக்கியமான குற்றச்சாட்டுகளுக்கு அவ்வப்போது பதில் சொல்வது அவையின் மரபு ஆகும். அமைச்சர்களின் கடமையும் ஆகும்.  அதைக்கூட முதலமைச்சர் விஜய் செய்வது இல்லை. நகராட்சி நிர்வாகத் துறை அவர் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதற்...

ஒரு போட்டோ எடுக்க ரூ.6 கோடி.

படம்
◼️ மதுரையில் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் கொட்டித் தீர்த்த கனமழை. கர்டர் ரயில்வே தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியதால், போக்குவரத்து நிறுத்தம். ◼️ திங்கள் அல்லது செவ்வாய் முதல் கிராமப்புற ரேஷன் கடைகளிலும் வெங்காயம் விற்பனை. அடுத்த மாதம் முதல் கோதுமை மாவு பாக்கெட் விற்கப்படும் என்றும் அமைச்சர் வெங்கடரமணன் தகவல். ◼️ அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக தொடர விரும்பி இசக்கி சுப்பையா கடிதம் அளித்த விவகாரம். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேட்டி. ◼️ தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் கொலை. முதற்கட்டமாக இரண்டு பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை. ◼️ நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே பஞ்சாயத்து தலைவர் செங்கல்லால் அடித்துக் கொலை. தனது வீட்டிற்கு குடிநீர் வரவில்லை எனக் கூறி தாக்குதல் நடத்தியவர் கைது. ◼️ ஓசூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் லஞ்சம் வாங்கிய விவகாரம். கைதான இடைத்தரகரின் சேலம் வீட்டில் 6 கிலோ தங்கம், 27 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல். ◼️ டெல்லியில் ஏர் இந்தியா விமானம் தாழ்வாக பறந்து...

மானம்,மரியாதை இழந்து...!

படம்
மானம்,மரியாதை இழந்து...! கெஞ்சி கூத்தாடி ஆட்சியமைத்த விஜய் என்றும் மானம், மரியாதை இழந்து ஆதரவளித்த காங்கிரஸ் என்றும் முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.  தமிழ்நாடு முதல்வர் விஜய் பற்றி தற்போது வட மாநிலங்களிலும் அதிகளவு ரீல்ஸ் பரப்பப்படுகிறது. அடுத்த பிரதமர் வேட்பாளர் விஜய் என தவெகவினர் கூறி வருகின்றனர்.  இந்தசூழலில் முன்னாள் சபாநாயகர் அப்பாவு விஜய் அரசையும், தவெக கூட்டணி கட்சியினரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,  ”2026-ல் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததும் விசிக, CPI, CPM , IUML ஆகிய கட்சித் தலைவர்களையும் மற்றும் அதிமுகவில் ஒரு பிரிவு தலைவர் இல்லத்திற்கும் சென்று கெஞ்சி கூத்தாடி ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தவர் விஜய். ஆனால் காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தியையோ, தமிழ்நாடு கங்கிரஸ் தலைவரையோ நேரில் சந்தித்து ஆதரவு கேட்காத தற்குறி தவெகவு க்கு, மானம் மரியாதை இழந்து ஆதரவு கொடுத்து பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அவமானம் போதாது என்று, அடுத்த பிரதமர் விஜய் தான் என்று அமைச்சர் ஒருவர் சட்டமன்றத்தில் பேசிய போது சட்டமன்ற மேஜையை தட்...

மோ(ச)டி வித்தை

படம்
 📰 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப் 17 ராக்கெட். 18வது நிமிடத்தில் சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தம். 📰 கேள்விகளுக்கு திங்கள்கிழமை பதில் அளிப்பதாக கூறிவிட்டு அவையில் இருந்து வெளியே சென்ற முதலமைச்சர் விஜய். சட்டப்பேரவையில் இருந்து ஓடியது யார் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதாக உதயநிதி பதிலடி. 📰 டிவி சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என்பது போல் அமைச்சர்கள் பேரவையில் பதில். முதலமைச்சர் கவனிக்கும் துறைகளின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பது பற்றி உதயநிதி விமர்சனம். 📰 தவெக ஆட்சியில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. தனது தோட்டத்திலேயே மின் வயர்கள் திருடப்பட்டதாக புகார். 📰 காவல்துறை மானியக் கோரிக்கையில், எஸ்.ஐ. தேர்வு குறித்து தவறான தகவல். எழுத்துத் தேர்வு முடியாதநிலையில், உடல் தகுதித் தேர்வு முடிந்ததாக அறிவிப்பு. 📰 சென்னை மற்றும் புறநகரில் காற்றுடன் பெய்த கனமழை. மதுரையில் கொட்டித் தீர்த்த மழையால் வெள்ளக்காடாக மாறிய சாலைகள். 📰 தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதத்திலும் வாட்டி வதைக்கும் வெயில். அதிகபட்சமாக ...