தமிழ்நாட்டில் வேலை தேடுவோரே
இல்லையா.? சென்னை மாநகர பேருந்துகளில் 1,797 நடத்துநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தனியார் ஏஜென்சியுடன் தவெக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு போக்குவரத்து தொழிற்சங்கங்களும், ஊழியர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விபரீத முடிவால், குறிப்பிட்ட அந்த உ.பி நிறுவனம் வடஇந்தியர்களை பணிக்கு எடுக்கும் அபாயம் உருவாகியுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய 4 மண்டல பணிமனைகளுக்கு தேவையான மனிதவளம் மற்றும் அடிப்படை ஊதிய கட்டமைப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. அடையாறு மண்டலத்தில், தினசரி 350 பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஒரு நபருக்கான அடிப்படை வீதம் ரூ.27,679 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (கூடுதலாக 18% ஜி.எஸ்.டி). குரோம்பேட்டை மண்டலத்தில் தினசரி 320 பணியாளர்கள் தேவை. அடிப்படை வீதம் ரூ.27,679 மற்றும் 18% ஜி.எஸ்.டி. வடபழனி மண்டலத்தில் தினசரி 295 பணியாளர்கள் தேவை. அடிப்படை வீதம் ரூ.27,679 மற்றும் 18% ஜி.எஸ்.டி. அயனாவரம் மண்டலத்தில் தினசரி 256 பணியாளர்கள் தேவை. அடிப்படை வீதம் ரூ.27,679 மற்றும் 18% ஜி.எஸ்.டி. இதன்மூலம் ஒரு பணியாளருக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை தொகைக்கு மேல்...