நீட்டுக்கு அடுத்த ஆப்பு?

மருத்துவக் கல்லூரி சேர்க்கை மற்றும் தொடங்குவது தொடர்பான தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகள் காரணமாகத் தென் மாநிலங்களில் இனி புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாத மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை உள்ளிட்ட மருத்துவக் கல்வி தொடர்பான விதிகளை வகுக்க 'இந்திய மருத்துவ கவுன்சில்' செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2020 செப்டம்பர் மாதம் இது 'தேசிய மருத்துவ ஆணையம்' (என்எம்சி - National Medical Commission) என மாற்றப்பட்டது. இந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி மருத்துவ சேர்க்கை மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு விதிமுறைகளை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்கள்தான் தென்னிந்திய மாநிலங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இதன் காரணமாகத் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இனி புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவோ ஏற்கெனவே உள்ள கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களை அதிகரிக்கவோ முடியாது. இந்த விதிகள் வரும் கல்வியாண்டு