கோணல் சுழி,.!
ரயில்களில் தொடர்ந்து அச்சுறுத்தி தகராறு செய்வதையே வேலையாக்க செய்து வந்த மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவின் பேரில் இளைஞர் நவீன்(22) குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவர்களிடையே மோதலை ஏற்படுத்தி, பயணிகளுக்கு இடையூறு செய்து, பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக பல புகார்கள் அவர் மீது தொடர்ந்து எழுந்த நிலையில், திருத்தணியில் தனிப்படையினர் நவீனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். கும்மிடிப்பூண்டி அருகே சோழியம்பாக்கம் குளத்தில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை தர்சினி உயிரிழப்பு. பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும்.சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை. கோணல் சுழி,.! அ திமுக பிரச்சாரக் கூட்டத்தில் பறந்த தவெக கொடியைப் பார்த்து, ‘’பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க’’ என்று அதிமுக – தவெக கூட்டணி அமைந்துவிட்டது என்று குதூகலித்தார் எடப்பாடி பழனிசாமி. அந்த கொடியைப் பிடித்தது தவெக தொண்டர் அல்ல. அது அதிமுக தொண்டர்தான் என்பது பின்னர்தான் தெரியவந்தது. எடப்பாடி பழனிசாமிக்கும்...