இடுகைகள்

எரிகிறது...

படம்
  எரிகிறது... வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளை விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.  சிலிண்டருக்கு ரூ.29 உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் கடந்த மூன்று மாதத்தில் சிலிண்டர் விலை ரூ.89 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.957.50 ஆகவும், வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.3,283 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. போர்ச்சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று ஒன்றிய அரசு நியாயப்படுத்துகிறது.  ஆனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் பீப்பாய் 108 டாலருக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது சுமார் 15 டாலர் குறைந்துள்ளது.  ஆனால் சர்வதேசச் சந்தை நிலவரத்தை காரணம் காட்டி தொடர்ச்சியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படுவது அநியாயமாகும். ஒன்றிய ஆட்சியாளர்கள் வேறொரு விநோ தமான காரணத்தையும் முன் வைக்கின்றனர். 5 மாநில சட்டமன்றத் தேர்தல் காரணமாக எரி பொருள் மற்றும் சமையல் எரிவா...

ஒரு மாதத்திலேயேஎதிர்ப்பு அலை.!

படம்
👊 டெல்லியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம். காங்கிரசை விமர்சித்து டெல்லியில் வைக்கப்பட்ட பேனர்களால் பரபரப்பு. 😡 இந்தியா கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய திருமாவளவன். காங்கிரஸ் அணுகுமுறையால் தமிழ்நாடு, கேரளத்தில் கூட்டணி பலவீனமாகியுள்ளதாக விமர்சனம். ⚡ சென்னை மடிப்பாக்கத்தில் 8 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டதால் கடும் அவதி. மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதம். 🌧️ கேரளத்தில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழையால் ரெட் அலர்ட். கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை. 😱 பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலையில்லாத உடல் மீட்கப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல்கள். சிகிச்சைக்காக வந்த பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்தது அம்பலம். 🫩 ஸ்ரீவில்லிபுத்தூரில் அங்கன்வாடி திறப்பு விழாவில் ஒலித்த தவெக கட்சி பாடல்கள். அமைச்சர், தவெகவினர் அலப்பறையால் மக்கள் முகம் சுளிப்பு. 🥥 வளைகுடா போர்ச்சூழல் காரணமாக ஈரோட்டில் கொப்பரை தேங்காய் விலை சரிவால் விவசாயிகள் கவலை. கிலோ 280 ரூபாயில் இருந்து...

15லட்சம் கோடி முறைகேடு சிக்கலில்....?

படம்
  யார் இந்த  "ஜான் பிரிட்டோ" ?  த மிழக அரசியலில் கடந்த ஒருவார காலமாக ‘ஜான் பிரிட்டோ’ என்கிற என்கிற பெயர் அதிகம் அடிபடுகிறது.  இதனால் தமிழக அரசியல் களம் தகித்துக் கிடக்கிறது.  யாரிந்த ஜான் பிரிட்டோ? பிரபல லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மனைவி லீமா ரோஸின்(56) உடன்பிறந்த அண்ணன் ஜான் பிரிட்டோ பிரின்ஸ் (59). தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரும், தவெகவின் தேர்தல் மேலாண்மை  பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சிக்கு இவர் முறை மாமன்.   கோவையில் தொடக்கத்தில் தொழிலதிபராக அறியப்பட்டவர் ஜான் பிரிட்டோ பிலிப்ஸ்.  குறிப்பாக கோவையில் கடந்த 2011 காலகட்டத்தில் பிரபல ஜவுளி ஏற்றுமதியாளராக விளங்கினார் ஜான் பிரிட்டோ.  2011ல் சொத்து தொடர்பாக நடந்த கடத்தல் மற்றும் தாக்குதல் வழக்கில்  ஜான் பிரிட்டொ கைது செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் 2024, 2025ல் போதைப்பொருட்கள்     வழக்கில் சிக்கினார் ஜான் பிரிட்டோ. 2024ல் இலங்கைக்குப் படகு மூலம் கடத்த முயன்ற 109 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபட்டமைன் போதைப்பொருள் பிடிபட்டது; அதற்கு அடுத்த சில வாரங்கள...

கோட்டைசாமி எந்திரி ?

படம்
📄 மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார், விசிக முன்னாள் எம்.எல்.ஏ., பனையூர் பாபு. எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் அதிக வேலை என ஸ்டாலின் பேச்சு. 📄 டெல்லியில் இன்று `இந்தியா' கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம். 23 கட்சிகள் பங்கேற்க உள்ளதாகக் காங்கிரஸ் தகவல். 📄 தீர்ந்து போன சக்தி என்று குறிப்பிட்ட விஜய்க்கு அதிமுக பதிலடி. கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை. 📄 மாற்றம் வேண்டும் என நினைத்து மக்கள் பேராபத்தை ஆட்சியில் அமர்த்திவிட்டதாக டிடிவி தினகரன் விமர்சனம். பொய் வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது என்றும் உறுதி. 📄 நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தகவல். மணிப்பூர் அவலம்! மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு குக்கி மற்றும் மெய்தி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையின்தாக்கம் 3 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வரும் நிலையில், இந்த மோதலால் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 731 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.  தகவல் அறிய...