இடுகைகள்

அபத்தமான மோடி ஒப்பந்தம்!

படம்
  இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: மோடி யின் அபத்தமான வாதங்கள்.                                                                                     -பேரா.பிரபாத் பட்நாயக் முற்றிலும் நியாயப்படுத்தவே முடியாத இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் ஆவலில், மோடி அர சாங்கம் ஒன்றன்பின் ஒன்றாக மிகவும் அபத்தமான வாதங்களை முன்வைத்து வருகிறது.  குறிப்பாக, அமெரிக்காவிலிருந்து சிவப்புச் சோளம், சோயா பீன்ஸ் மற்றும் ‘உலர்ந்த டிஸ்டில்லர்ஸ் தானியங்க ளை’ (DDGs - ஆல்கஹால் தயாரிப்பில் தானியங்களி லிருந்து மாவுச்சத்தை எடுத்த பின் எஞ்சியிருக்கும் புரதச்சத்து நிறைந்த கால்நடைத் தீவனம்) வரி இன்றி இந்தியச் சந்தைக்குள் அனுமதிப்பதை அரசு நியாயப் படுத்துகிறது. இத்தகைய இறக்குமதி கால்நடைத் தீவ னத்தின் விலையைக் குறைத்து இந்திய விவசாயி களுக்கு உதவும் என்பது அரசின் வாதம். ஆனால், நா...

இருகுண்டர்கள்!

படம்
  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு. ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்து மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து. மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் போட்டி காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் போட்டி. திருச்சி ரயில்வே அலுவலக நுழைவாயிலுக்கு வைத்த இந்தி பெயர் நீக்கம். அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து. இலங்கை கடற்பகுதியில் ஈரான் போர் கப்பல் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா. நீர்மூழ்கி குண்டு மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 87 பேர் உயிரிழப்பு. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தியமாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு   6வது நாள் போர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவரான அயத்துல்லா அலி காமேனி, பாதுகாப்புத்துறை அமைச்சர் அஜிஸ் நசீர் சாதே, ஈரான் புரட்சிகர ராணுவப்படை தளபதிகளான முகம்மது பக்பூர், செய்யது மஜீத் மவுசவி, தேசிய பாதுகாப்பு ...

தமிழி்ல் இந்தி திணிப்பு?

படம்
தமிழில் எழுதப்பட்ட இந்தி பெயர் அகற்றம். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று (மார்ச் 4 தெற்கு ரயில்வே நிர்வாகம் திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலில் எழுதப்பட்ட இந்திப் பெயரை அகற்றி உள்ளது. திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு ‘கடமையின் நுழைவுவாயில்’ என்று பொருள் தரும் வகையில் “கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் தமிழில் எழுதப்பட்டிருந்தது. தெற்கு ரயில்வேயின் நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். ‘மொழி ஒன்று – வரி வடிவம் மூன்று’ எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான Hindi Imposition செயலில் ஒன்றிய பாஜக அரசு இறங்கியுள்ளது. தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என முதல்வர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து திமுகவினர் திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வ...

களப்பிரர்கள் ஆட்சி இருண்டகாலமா?யாருக்கு?

படம்
  திமுக கூட்டணியில் காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆலோசனை. திரிணாமுல் வென்ற தொகுதிகளில் ஏஐ மூலம் 30,000 வாக்காளர்கள் நீக்கம்: மம்தா குற்றச்சாட்டு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லையென செல்வப்பெருந்தகை விளக்கம். இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என டி.கே.எஸ்.இளங்கோவன் தகவல். திமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு. வேட்பாளர் யார் என்பதை இன்று அறிவிக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தம்பிதுரைக்கு மீண்டும் வாய்ப்பு. மற்றொரு உறுப்பினர் பதவியை அன்புமணிக்கு வழங்க எடப்பாடி பழனிசாமி முடிவு எனத் தகவல். தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்க வாய்ப்பு. வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவதால், வேட்பாளர்கள் பெயர்கள் வெளியாகும் என எதிர்பார்ப்பு எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம். மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோச...

1989 மூன்று முதலமைச்சர்கள் வென்ற தேர்தல்!

படம்
3 முதலமைச்சர்களை எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்கு அனுப்பிய 1989ம் ஆண்டு தேர்தல். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை நடந்த ஒவ்வொரு தேர்தலும் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகவே இருந்துள்ளது. அதில் மிக மிக முக்கியமான தேர்தல் 1989ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல். ஏனென்றால், தமிழ்நாட்டின் ஆட்சி கட்டிலை அலங்கரித்த 3 முதலமைச்சர்களை சட்டசபைக்கு முதன்முறையாக அனுப்பியது இந்த தேர்தலே ஆகும். அவர்கள்தான் மு.க.ஸ்டாலின். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி . மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் மகனும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முதன்முதலில் போட்டியிட்ட தேர்தல் 1984. ஆனால், அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்த நிலையில், அடுத்து 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 30 ஆயிரத்து 184 வாக்குகள் பெற, திமுக-விற்காக களமிறங்கிய மு.க.ஸ்டாலின் 50 ஆயிரத்து 818 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதன்பின்னர், மு.க.ஸ்டாலின் எந்த தேர்தலில் தோல்வியே காணவில்லை. கடந்த சட...