இடுகைகள்

யார் ஆட்சி நடத்துவது?

படம்
ரஷ்ய நாட்டில் இருந்து 30 நாட்களுக்கு மட்டும் கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கி இருக்கிறது என்ற செய்தி, ‘இந்தியா யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது?' என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. இந்தக் கேள்வி பலமுறை கேட்கப்பட்ட கேள்வியே ஆகும். அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்தபிறகு அதிகமாகக் கேட்கும் கேள்வியாக இருக்கிறது. மறைமுகமாக இருந்த அடிபணிதல் சமீப காலமாக வெளிப்படையாக ஆகிவிட்டது. “பாகிஸ்தான் மீதான இந்தியாவின் போரை நான்தான் நிறுத்தச் சொன்னேன்” என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார் அமெரிக்க அதிபர். கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. தீவிரவாதிகளின் 9 தளங்கள் மீது ஒருங்கிணைந்த துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாகிஸ்தானில் 4 தீவிரவாத முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. லாகூர் உட்பட, பாகிஸ்தான் முழுவதும் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை அழிக்க காமிகேஸ் ட்ரோன்கள் ஏவப்பட்டன. திடீரென இந்தப் போர் நிறுத்தப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்...

நடத்தை விதிகள்?

படம்
  தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல். வரும் 30-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வந்தன நடத்தை விதிகள். அரசு மற்றும் தனியார் சுவர்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிப்பு. 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு, புதுச்சேரிக்கு வெவ்வேறு தேதிகளில் தேர்தல். பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதை காட்டுவதாக காங்கிரஸ் விமர்சனம். மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, 29 என இரண்டு கட்டங்களாக தேர்தல். அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு. வெறுப்பு எனும் நெருப்பைத் தூண்டிவிட்டு பாஜக குளிர் காய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. சிறுபான்மையினர் உரிமைகளைக் காப்பதில் திமுக எப்போதும் அரணாக நிற்கும் என்று உறுதி. தவெக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி மீண்டும் திட்டவட்டம். பாஜக-வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் எனவும் பேட்டி. யாருடன் கூட்டணி என்பது குறித்த முடிவை இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்.பாமக செயல் தலைவ...

ரெட்டை. தலை பாஐக?

படம்
உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டுக்கு ரூ.2 மானியம், பாதிப்பை சந்திக்கும் தொழில் துறையினருக்கும் சலுகைகள் அறிவித்தது தமிழ்நாடு அரசு.  வணிக LPG எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு காரணமான ஒன்றிய அரசுக்கு கண்டனம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்.  கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு. டெல்லியில் மூன்றாவது முறையாக இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார் விஜய். அமெரிக்கா, இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான். தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் வரை போரை நீட்டிக்க தயார் என அதிரடி தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயரை ஆங்கிலத்தில் அதிகாரப்பூர்வமாக “Thoothukudi Airport” என்று மாற்றப்பட்டது . "வந்தே மாதரம்" பாஜகவின் இரட்டை நிலைப்பாடு! மத்தியில் ஆளும் கட்சி, 2028ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் நாகாலாந்து மாநிலத்தில் அதிகாரத்தைத் தக்கவைக்க விரும்பினால், வந்தே மாதரம் குறித்த அந்த மாநிலத்தின் கருத்துக்கள் பற்றி மௌனம் காக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பா ரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் விரக்தியில் தங்கள் கைகளைப் பிசைந்துகொண்டிருக்க வேண்டும். ஏனெ...