கோயபல்ஸ் நிம்மி மாமி!
இ ரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனியில் பிரச்சார அமைச்சராகவும், ஹிட்லருக்கு வலது கரமாகவும் திகழ்ந்தவன் கோயபல்ஸ் என்பதை அனைவரும் அறிவோம். அவனது சிறப்பு என்பதே ‘புளுகு’வதில் அவனுக்கு நிகர் வேறு எவரும் இலர் என்பதே ஆகும். இந்தியாவைப் பொருத்தமட்டில் காவிகள் அரசியலில் தலை தூக்கிய பிறகு, ஆர்.எஸ்.எஸ் – பாஜக இந்துத்துவ சங்கிக் கும்பல் சகல துறைகளிலும் ‘காவி அடிப்பதிலும்’, ‘புளுகித் தள்ளுவதிலும்’, காவிகளுக்கு நிகர் காவிகளே என்று சகல துறைகளிலும் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அண்மை எடுத்துக்காட்டுத் தான் மோடி- அமித்ஷா கை பானமாக விளங்கும் நிர்மலா சீதாராமன் அவிழ்த்துக் கொட்டிய புளுகு மூட்டைகள் ஆகும். ஏற்கனவே விவசாயிகளின் பல்வேறு உரிமைகளைப் பறித்து, கார்பரேட் நலன்கள் சார்ந்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, அதன் காரணமாக டெல்லியில் நடத்திய மாபெரும் விவசாயிகள் போராட்டத்தையும், காவிக் கூட்டத்தை குறைந்தபட்சம் அடிபணிய வைத்ததையும் நாடு மறந்து விடாது. அப்படி இருக்கின்ற பொழுது சிந்திக்கின்ற ஒவ்வொன்றையும் பாசிச பாஜக அரசு கார்ப்பரேட் நலன் கருதியே அமைவதால் ஏற்கனவே புண்பட்டுப் ப...