இடுகைகள்

ஏன் தேர்தல் இல்லை?

படம்
  தமிழ்நாட்டில் ஏன் தேர்தல் அறிவிக்கவில்லை? தமிழ்நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் 7 தொகுதிகள் காலியானதாக உள்ளன. இதில் 6 இடங்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த தொகுதிகள். அதிமுக ஆறு எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.  இதனையடுத்து காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது இன்பதுரை தெரிவித்துள்ளார். அதாவது அதிமுக நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் இருக்கும்போது, அவர்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கக்கூடாது. எனவே அந்த நான்கு தொகுதியிலும் தேர்தல் நடத்தக்கூடாது என்று அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் கரூர், விராலிமலையை சார்ந்த விஜயபாஸ்கர்களும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.  இதனையடுத்து மொத்தமான ஆறு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தக்கூடாது என அதிமுக சார்பில் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என அதிமுக சார்பி...

கூட்ணிக்கு என்னப் பெயர்?

படம்
 "குதிரை பேரத்தின் நம்பர் 1 குற்றவாளியே முதலமைச்சர் விஜய்தான்" -பரந்தாமன், திமுக முன்னாள் எம்.எல்.ஏ வைகோ கைது செய்யப்படுவாரா ? முதல்வர் விஜய் மீது FIR பதிவு செய்யப்படுமா ? ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவை ஆட்சிக்கு எதிராக செயல்பட வைக்க பேரம்பேசியதாகக் கூறி ஒருசிலரை கைதுசெய்ததோடு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறது தமிழ்நாடு அரசு.  ஊத்தங்கரை எம்.எல்.ஏ ராஜினாமாவும் செய்யவில்லை, தவெக ஆட்சிக்கு எதிராகவும் திரும்பவில்லை. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகம் மீது அவதூறு பரப்பும் ஒரே நோக்கில் செயல்படுகிறது தவெக. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்.எல்.ஏ-வான மன்னார்குடி எஸ்.காம்ராஜ் தற்போது தவெக கட்டுப்பாட்டில் இருக்கிறார். அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரிடம் டீல் பேசி பதவியை ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள் தவெகவினர்.  இதுபோக, திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுகவினர் எம்எல்ஏக்கள் இருவரை 'ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்' என தமிழ்நாடு முதல்வர் விஜய் பேசியதாக வைகோ பட்டவர்த்தனமாக பேசியிருக்கிறார். அதேநேரம், 'எங்கள் எம்எல்ஏக்கள...

குதிரைகள் மிரட்சி?

படம்
🔹  நியாயமற்ற வகையில் ஊதியம் வழங்கப்படும் ஜி ராம் ஜி திட்டத்தை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல். விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு ஊதியத்தை இறுதிசெய்யவும் கோரிக்கை. 🔹  தவெக தோழமைக் கட்சிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை. ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என கூட்டத்தில் பேச்சு. 🔹  இன்று தவெகவில் ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை உள்ள இருவரான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 முன்னாள் அமைச்சர்கள். அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ-க்கள் 15 பேரும் இணைய உள்ளதாக தகவல்.  🔹  அடுத்த கட்சி எம்எல்ஏக்களை தவெக குதிரை பேரம் பேசி இழுப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம். கல்லாப்பெட்டி கூட்டணி என்று கூறிய கட்சிகளை சோஃபா கூட்டணிக்குள் நுழைக்க முயற்சிப்பதாகவும் காட்டம். 🔹  அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி தாம்பரத்தில் திமுக மாணவரணியினர் போராட்டம். போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், வாகனத்தில் மேடை அமைத்து ஒலிப்பெருக்கி வைத்து முழக்கம். 🔹  நீட் குளறுபடிகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாணவர் அமைப்பினர் போராட்டம். ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான...

தூயசக்தியின் குதிரை?

படம்
குதிரை பேரத்துக்கான ஒப்புதல்! த.வெ.க. ஆட்சி அமைக்கவும், ஆட்சியில் தொடரவும் குதிரை பேரம் நடத்தியது, நடந்துக் கொண்டு இருக்கிறது என்பதை அக்கட்சியை ஆதரிக்கும் வைகோ ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார். இதைவிட ஆதாரம் தேவையில்லை. வைகோ அளித்துள்ள குதிரை பேர வாக்குமூலம் இதுதான்: நிருபர்: நீங்கள் முதலமைச்சரைச் சந்தித்தீர்களா? வைகோ: ஆமா. சந்திச்சேன். நிருபர்: ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள், நான் பிரச்சாரம் பண்றேன்னு முதலமைச்சர் விஜய் சொன்னதாக செய்தி வந்ததே...? வைகோ: ஆமாம். ரெண்டு எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்தால் இடைத்தேர்தல் வரும். அப்படி ஒரு இடைத்தேர்தல் வந்தால் நானே வந்து உங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்று முதலமைச்சர் என்னிடம் சொன்னார்... - இதுதான் வைகோ அளித்த ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். இவை அனைத்தும் அனைத்து ஊடகங்களுக்கு முன்னால் வைகோ சொன்னவை. அவரை யாரும் கட்டாயப்படுத்தி சொல்ல வைக்கவில்லை. அவராக முன் வந்து உண்மையைக் கக்கி இருக்கிறார். இப்படிச் சொல்லவில்லை என்று அவரே மறுக்க முடியாது. அது நான் இல்லை என்றும் அவரால் சொல்ல முடியாது. *விஜய் பெரும்பான்மையை நிரூபி...

அரசு ரகசியம் பாதுகாப்பு!

படம்
 🔹 தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறக்க தற்போதைக்கு வாய்ப்பே இல்லை கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி திட்டவட்டம். அணைகளில் நீர் இல்லாததால் மழை பெய்யும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் பேச்சு. 🔹 தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் விபி ஜி ராம் ஜி திட்டம் இன்று முதல் அமல். திட்டத்திற்கான நிதியில் ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 ஏற்க வேண்டும். 🔹 திமுகவில் 10 பேர் கொண்ட மறு சீரமைப்பு ஆலோசனைக் குழு அமைப்பு. கிளைக்கழகத்தில் தொடங்கி கட்சி கட்டமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யும். 🔹 இன்று நடக்கும் தவெக தோழமை கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என இடதுசாரி கட்சிகள் முடிவு. கூட்டணி குறித்து முடிவு எடுப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல். 🔹 பொள்ளாச்சியில் குழந்தைகளுக்கு தன்னிச்சையாக போலியோ சொட்டு மருந்து வழங்கி ரீல்ஸ் வெளியிட்ட தவெகவினர். அமைச்சர் விக்னேஷ் அறிவுறுத்தல்படி வழங்கியதாக அறிக்கை வெளியிட்டதால் அதிர்ச்சி. 🔹 தேர்தல் வாக்குறுதி படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி வலுக்கும் போராட்டம்.  🔹 வடலூரில் சாலையின் நடுவே ...