ஆட்சி,அதிகாரம் படுத்தும் பாடு!
தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் மு.க.ஸ்டாலினை ஜோசப்விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்றபோது விஜயை, தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கொறடா எ.வ.வேலு, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் வரவேற்றனர். த.வெ.க. சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகர் சபாநாயகராக போட்டியிடுகிறார். அரசியல் நி க லவரம்! சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என அக்கட்சியைச் சேர்ந்த 17 சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைச் செயலரிடம் மனு அளித்துள்ளனர். இதனால், அதிமுக சட்டமன்றக் குழு தலைவர் பதவியைத் தக்கவைப்பதில் பழனிசாமிக்குச் சிக்கல் எழுந்துள்ளது. 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. அதிமுகவில் மொத்தம் 47 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், சட்டமன்ற கட்சித் தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இதுவரை 17 எம்எல்ஏக்கள் மட்டுமே சட்டமன்றச் செயலரிடம் மனு அளித்துள்ளனர். ...