இடுகைகள்

சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!

படம்
 * கையால் ஆகாத ஒரு @@@@ ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு* பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! , சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாகத் திட்டமிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு விஜய் தலைமையிலான அரசு முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில், தற்போது அங்கு கைப்பற்றப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கட்டுவதற்கான பேச்சுவாத்தை நடப்பதாகவும், அதேவேளையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் எவ்விதமான முடிவும் எடுக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சொன்ன நோ, வெறும் ஒரு விமான நிலையத்தோடு மட்டும் முடிவடையாமல், அதனைச் சுற்றி திட்டமிட்டு இருந்த சுமார் 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மெகா உள்கட்டமைப்புத் திட்டங்களையும், 1 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் என மொத்தமாகப் பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. சீட்டுக்கட்டுப்போல் சரியும் திட்டங்கள் பரந்தூர் திட்டத்தை மையமாகக் கொண்டு சென்னைக்கு மேற்கே உருவாக்கப்படவிருந்த பிரம்மாண்ட...

அறிக்கை என்னாச்சு?

படம்
🔹 சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கோடை மழை. பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலைக்குப் பிறகு மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி. 🔹 தமிழ்நாட்டில் நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்ததால், சிரமம் அடைந்த மக்கள். அதிகபட்சமாக திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. 🔹 தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இரவில் மின் வெட்டு தொடருவதால், மக்கள் போராட்டம். புதுக்கோட்டை அரசு அலுவலகத்தில் அமைச்சர் முகமது பர்வேஸ் ஆய்வின்போதே மின்வெட்டு ஏற்பட்டதால் பரபரப்பு. 🔹 தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம். தற்போதைய டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம். 🔹 தென்காசி, நெல்லை மாவட்டத்தின் இருவேறு பகுதிகளில், தெருக்களில் நின்ற மக்களை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல். இருசக்கர வாகனங்களில் வந்து அட்டூழியத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலா என அறிய, 4 பேரைஹப் பிடித்து போலீஸ் விசாரணை. 🔹 டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் முடிந்து கடைகள் திறக்கப்பட்டதால் அலைமோதிய கூட்டம். தனியார் பார்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் வாங்கியதாக மதுகுடிப...

சைலன்ட் மோட்?

படம்
  சைலன்ட் மோட்? தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் அமர்ந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்ந்து நடந்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.  கோவையில் பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து கடலூரில் 25 வயது மதிக்கப்பட பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.  இதுபோல தமிழ்நாட்டில் தினம் ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை நடந்து வருகின்றது. அரசு என்ன செய்கிறது ? என திமுக ,அதிமுக ஆகியோர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்.  அவர் வெளியிட்ட பதிவில், கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதுபோல தொடர்ச்சியாக நாடாகும் குற்ற சம்பவங்களை பார்க்கும்போது ?தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என ஒன்று இருக்கின்றதா ? இல்லையா ? என்றே தெரியவில்லை.  இந்த சோபா மாடல் ஆட்சி அமைந்தது முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைனு கு...

7 நிமிசம் கொடுத்த மோடி !

படம்
  சென்னையில் இன்று நடைபெற இருந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா திடீர் ரத்து. முதல்நாள் கையெழுத்திட்ட திட்டத்தின் தொடக்க விழா மீண்டும் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் தமிழ்நாட்டில் சிறுவன் முதல் மூதாட்டி வரை பாலியல் தொல்லைக்கு ஆளாகும் கொடுமை. காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என உதயநிதி ஸ்டாலின் கண்டனம் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுவதுதான் முதல் கடமை என சி.வி.சண்முகம் பேட்டி. வரும் 1-ம் தேதி முடிவை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் டெல்லியில் ராகுல், சோனியாவைச் சந்திக்காமல் சென்னை திரும்பிய முதலமைச்சர் விஜய். காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காதது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கவும் மறுப்பு கர்நாடக முதலமைச்சராக நாளை தேர்வு செய்யப்படுகிறார் டி.கே.சிவக்குமார். சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை பதவியேற்பு விழாவை நடத்த திட்டம் கன்னியாகுமரி, நாகர்கோவில், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழை. குளச்சலில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு. மதுரை அலங்காநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்கம் கொள்ளை. 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்...

மேகேதாட்டு.......

படம்
  கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அண்மையில் பேசுகையில், “மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை ஒன்றிய  அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும்.  ஒன்றிய  அரசின் அனுமதி கிடைத்தவுடன் பூமி பூஜை நடத்தப்படும். இதனை தமிழக அரசு எதிர்க்க எந்த உரிமையும் இல்லை” எனக் கூறினார். தமிழகத்துக்கு எதிர்க்கும் உரிமை இல்லை என்று டி.கே.சிவகுமார் கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஜனநாயகத்திலும் கூட்டாட்சியிலும் இத்தகைய அணுகுமுறை விரும்பத்தக்கதல்ல.  மேகேதாட்டு கர்நாடக மக்களுக்கு நியாயமான தேவையாக இருக்கலாம். ஆனால் அந்தத் தேவையை முன்னிறுத்தி, காவிரி பாயும் பிற மாநிலங்களின் நியாயமான உரிமைகளையும் நிராகரிக்க முடியாது. தமிழ்நாட்டின் காவிரி உரிமைகள் என்பது கர்நாடகா வழங்கிய கருணையோ அல்லது அரசியல் சலுகையோ அல்ல.  தமிழ்நாட்டின் உரிமைகள் என்பது உச்ச நீதிமன்றத்தாலும் சட்டத்தாலும் உறுதி செய்யப்பட்ட உரிமைகள். இதனை டி.கே.சிவகுமார் போன்றவர்கள் மறந்துவிடக் கூடாது. கர்நாடகாவில் காவிரி ஆறு உற்பத்தி ஆவதாலே, அதன் முழுமையான உரிமையை அம்மாநிலம் மட்டும் கோர முடியாது.  ...