அதிகரிக்கும் பேரிடர்கள்- !
குறைவான மழை. பருவமழையின் புதிய சவால்கள் இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை வீடாக குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம், நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக இந்த சீசனில் 92% சராசரி மழை மட்டுமே பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த முன்னறிவிப்பு இந்திய பருவமழையின் இயல்பான பருவக்கால, பிராந்திய மாறுபாடுகளை முழுமையாக பிரதிபலிக்கவில்லை. இவை பிந்தைய கட்டத்தில்தான் தெளிவாகத் தெரியும். சராசரியை விடக் குறைவான மழைப்பொழிவு என்ற கணிப்பு, வரவிருக்கும் பருவத்தில் ஏற்படக்கூடிய தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகளின் (Extreme rainfall events) எண்ணிக்கையைக் குறிக்கவில்லை. கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளில் இத்தகைய நிகழ்வுகள் சீராக அதிகரித்து வருவது உடன், அவை அடிக்கடி பெரிய அளவிலான பேரிடர்களாக மாறிவருகின்றன. அண்மைக் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகரிப்பதற்கு காலநிலை மாற்றமே காரணம் என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2013-ல் நடந்த கேதார்நாத் துயரத்தில் இருந்து, கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது பெரிய மழை தொடர்பான பேரிடர் நிகழ்ந்துள்ளது. 20...