மாநில. உரிமைக்கு எதிரானது!
பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்ப்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது என முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “மாநிலப் பல்கலைக்கழகங்கள் அந்தந்த மாநிலச் சட்டங்களின் கீழ் நிறுவப்பட்டு, அவற்றின் நிர்வாகம், துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் அந்தச் சட்டங்களின்படியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இந்நிலையில், துணைவேந்தர் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உறுப்பினரைச் சேர்ப்பதற்கு மாநில அரசு இசைவு தெரிவித்திருப்பது உடனடியாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். நிறுத்த வேண்டும்.முற்றிலும். மாநில உரிமையை பலிகொடுப்பது.முட்டாள்தனமானது. மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல் குழுவின் அமைப்பு அந்தந்த பல்கலைக்கழகச் சட்டங்களில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பை மாற்ற வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட சட்டத்தில், சட்டப்பேரவை மூலம் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். நிர்வாக இச...