த.வெ.க,வை வெறுக்கிறோம்..
9ஆம் வகுப்பில் 3வது மொழி வேண்டாம்”: - உச்ச நீதிமன்றம் நவோதயா பள்ளி வழக்கு விசாரணையில், 9ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை கொண்டு வந்தால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குமரி மகா சபா என்ற அமைப்பு நவோதயா பள்ளிகளை அமைக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு நவோதயா பள்ளிகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முந்தைய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. தொடர்ந்து இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது. தான். இதைத்தொடர்ந்து முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த பிரம்மாண பத்திரத்தில், ”நவோதயா பள்ளிகள் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றன. இந்தி திணிப்புக்கு நவோதயா பள்ளிகள் வழிவகுக்கும். இது தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் இரு மொழிக் கொள்கைக்கு எதிரானது. தமிழகத்தில் 38 உறைவிட மாதிரி ...