முதல்வர் ஸ்டாலின்!
மக்களாட்சி மாண்பைக் காப்பாற்றுங்கள்! தேர்தல் நடைமுறையின் புனிதத்தை காத்து, ஜனநாயக அமைப்பின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துமாறு திமுக வலியுறுத்தி உள்ளது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அளித்த மனுவில் கூறி இருப்பதாவது;- "2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று, பாஜகவும், அக்கட்சியின் தூண்டுதலின் பேரில் செயல்படும் பிற அரசியல் கட்சிகளும் இணைந்து, வாக்கு எண்ணும் மையங்களில் குழப்பங்களை விளைவிக்கத் திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகைய சீர்குலைவு செயல்பாடுகள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் மட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் உள்ளிட்ட பிற பதற்றமான இடங்களுக்கும் பரவக்கூடும் என்றும் நாங்கள் அஞ்சுகிறோம். இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, பெரிய அளவிலான சட்டம் – ஒழுங்கு பிரச்சினை எழக்கூடும் என்ற நியாயமான அச்சம் நிலவுகிறது. இது, ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைமுறையை செயல்பட...