யார் ஆட்சி நடத்துவது?
ரஷ்ய நாட்டில் இருந்து 30 நாட்களுக்கு மட்டும் கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கி இருக்கிறது என்ற செய்தி, ‘இந்தியா யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது?' என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. இந்தக் கேள்வி பலமுறை கேட்கப்பட்ட கேள்வியே ஆகும். அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்தபிறகு அதிகமாகக் கேட்கும் கேள்வியாக இருக்கிறது. மறைமுகமாக இருந்த அடிபணிதல் சமீப காலமாக வெளிப்படையாக ஆகிவிட்டது. “பாகிஸ்தான் மீதான இந்தியாவின் போரை நான்தான் நிறுத்தச் சொன்னேன்” என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார் அமெரிக்க அதிபர். கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. தீவிரவாதிகளின் 9 தளங்கள் மீது ஒருங்கிணைந்த துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாகிஸ்தானில் 4 தீவிரவாத முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. லாகூர் உட்பட, பாகிஸ்தான் முழுவதும் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை அழிக்க காமிகேஸ் ட்ரோன்கள் ஏவப்பட்டன. திடீரென இந்தப் போர் நிறுத்தப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்...