இடுகைகள்

நான்கு தேர்தல்கள்-

படம்
காங்கிரசே உருவாக்கும்  '4' பிரச்னைகள்? தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு நீடிப்பதாக கூறப்பட்டாலும், காங்கிரஸ் கருத்து வேறுபாட்டில் ஈடுபட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய நான்கு மாநிலங்களில் வரும் ஏப்ரல்/மே மாத காலகட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இது 2026ம் ஆண்டை வெற்றியுடன் தொடங்க காங்கிரசுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற முழுமையான சட்டமன்ற தேர்தல்களான டெல்லி மற்றும் பீகார் ஆகிய இரண்டு இடங்களிலும் காங்கிரசுக்கு தோல்வியே மிஞ்சியது. எனவே தேசிய அரசியலில் தனக்கான இருப்பிடத்தை உறுதி செய்ய, 4 மாநில தேர்தலில் ஒரு இடத்திலாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது.  கடந்த 2025ம் ஆண்டின் இறுதியில் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெற்ற அமோக வெற்றியை தொடர்ந்து, மீண்டும் ஆட்சி அமைக்கும் நம்பிக்கையில் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அளவிலான தேர்தலில், அக்கட்சி தலைமையிலான கூட்டணி 38 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெ...

தமிழ்நாடு சட்டமன்றம்!

படம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலத்தின் கடந்த கால தேர்தல் வரலாறு குறித்து ஒரு பார்வை. அந்த வகையில் இங்கு எத்தனை முறை ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது? அதற்கான காரணம் என்ன? பதவியை இழந்தவர்கள் யார்? என்பன போன்ற பல முக்கிய கேள்விகளுக்கான பதில்களை இங்கு அறியலாம். 1976ம் ஆண்டு தொடங்கி 1991ம் ஆண்டு வரையில் என பதினைந்தே ஆண்டுகளில் 4 முறை தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, 4 முறை தேர்தலும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக சொன்னால், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, சட்டமன்றத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாதபோது அல்லது மத்திய அரசின் முக்கிய உத்தரவுகளை பின்பற்ற தவறுவது என, அரசியலமைப்பின் படி மாநில அரசு செயல்பட முடியாதபோது, குடியரசு தலைவர் ஆட்சி (பிரிவு 356) அமல்படுத்தப்படுகிறது. அப்போது, ஆளுநரை கொண்டு குறிப்பிட்ட மாநிலத்தை குடியரசு தலைவர் நேரடியாக நிர்வகிப்பார். சுதந்திர இந்தியாவில் 1976ம் ஆண்டு முதல்முறையாக தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதன் 31, ஜனவரி 1976-ல் தொடங்கி 29 ஜுன் 1977 வரை அதாவத...

தோற்போம் என்ன பந்தயம்?

படம்
  பெண்கள் இலவசமாக பேருந்துகளில் செல்வதால் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.மெட்ரொ பாதிக்கப்படுகிறது. பெண்களுக்கு இலவசப் பேருந்து கொடுக்கக்கூடாது என்கிறார் - மோடி. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும்: இந்திய வானிலை ஆய்வு மையம்   காங்கிரசின் கூட்டணி கலாட்டா? சுமார் ஏழு ஆண்டுகளாக, இந்திய அரசியலில் மிகவும் நிலையான கூட்டணியாகப் பார்க்கப்படும் திமுக - காங்கிரஸ் உறவு, இப்போது ஒரு பெரிய சோதனைக்கு உள்ளாகியுள்ளது. சித்தாந்த ரீதியாகவோ அல்லது தேர்தல் கணக்குகளாலோ அல்ல... காங்கிரஸின் உட்கட்சி பூசலால் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளது. மதுரையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் வீசிய வார்த்தைகள் திமுக தலைமையைக் கடுமையாகச் சீண்டியுள்ளன. "பூத் கமிட்டிக்கு கூட ஆள் இருக்கிறதா என்று திமுக மாவட்டச் செயலாளர்கள் ஏளனமாகப் பேசுகிறார்கள். கடந்த காலங்களில் உங்கள் தவறுகளுக்கு நாங்கள் பழி சுமந்து பதில் சொன்னோம். ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினை 'அண்ணன்' என்று அழைக்கிறார். அதே மரியாதையை சாதாரண காங்கிர...

காந்தி வேலை?

படம்
 தி.மு.க கூட்டணியை உடைத்து நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கும் முயற்சியில் சில காங்கிரசார் தீவிரமாக இறங்கிடக் காரணம்,மூலம்,விதை போட்டு வளர்க்கும் நபர் வேறு யாரும் இல்லை .பப்பு ராகுல்தான். பீகாரில் தேஜஸ்வியை முதல்வராகவிடாமல் தடுத்து கடைசிவரை கூட்டணியை உருவாக்கவிடாமல் சீரழித்து நிதீசை மீண்டும் முதல்வராக்கிய புண்ணியவானும் ராகுல்தான். தேஜஸ்வ்வி கட்சி வெல்லக்கூடிய தொகுதிகள் அறுபதை விடாப்பிடியாக சண்டையிட்டு வாங்கி ஐந்தில் மட்டும் வென்று அவரை நடுத்தெருவில் புலம்புவைத்தவரும் ராகுலேதான். இந்தியா கூட்டணி உருவானதும் அதில் சேர்ந்தவர்க்களை ஒவ்வொருவரக ஓடவைத்தவரும்,வைத்துக் கொண்டு இருப்பவரும் ராகுலே தான். தற்போது தனது சகுனித் தனத்தை மு.க.ஸ்டாலினிடம் தி.மு.க விடம் காட்டுகிறார். மாணிக் தாகூர்,ஜோதிமணி,பிரவின் சக்கரவர்த்தி மீண்டும்,மீண்டும் 'ஆட்சியில் பங்கு 'பேச்சுகள் மூலம் ஊகித்துக் கொண்ட ஸ்டாலின். ஊகம் சரியா என சரிபார்க்கவே கனிமொழியை ராகுலை சந்திக்கவைத்தார். அதில் ராகுலின் உண்மை உருவத்தை. அல்லது மறுபக்கத்தைக் கண்டு கொண்டார். தன்கட்சி இருமாநிலத்தில் மட்டும் ஆட்சியில் இருப்பதால் போதிய வருமான...

நண்பனே !எனது உயிர் நண்பனே!!

படம்
  அக்பர் -பீர்பால் நட்பின் கதை. அக்பர்,பீர்பால் கதைகள் வாசித்திருப்போம். பீர்பாலின் அறிவுக் கூர்மையை எடுத்துரைப்பதாகவே இருக்கும். அ வற்றில் சில புனையப்பட்ட கதைகள். அக்பர் ஆனால் இருவரின் உண்மையான நட்பை வரலாற்றாசிரியர்கள் கூறுவதை பார்ப்போம். பீர்பால் கி.பி. 1556-இல் அக்பரின் அரசவைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவருக்கு 28 வயது, அவர் அக்பரை விட 14 வயது மூத்தவர். பீர்பாலின் உண்மையான பெயர் குறித்து வரலாற்று ஆசிரியர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.  பீர்பாலின் உண்மையான பெயர் மகேஷ் தாஸ் . அலகாபாத் கோட்டையில் அமைந்துள்ள அசோகர் ஸ்தூபியில் பின்னர் பொறிக்கப்பட்ட விளக்கத்திலும் பீர்பாலின் உண்மையான பெயர் மகேஷ் தாஸ் என்றும், அவரது தந்தையின் பெயர் கங்காதாஸ் என்றும்குறிப்பிடப்பட்டுள்ளது. பீர்பால் இருபத்தி நான்கு ஆண்டுகள் அக்பரின் அரசவையில் இருந்தார், இது அக்பரின் ஆட்சிக் காலத்தில் சுமார் பாதி காலமாகும். அக்பரிடம் இணைவதற்கு முன்பாக, பீர்பால் பல அரசர்களின் அரசவைகளில் அரசவைக் கவிஞராக இருந்துள்ளார். அக்பருக்கும் பீர்பாலுக்கும் இடையே எதிர்பாராத சந்திப்பு நடந்தது, பீர்பாலின் புத்திசாலித்தன...