இடுகைகள்

விவாதிக்க மறுக்கும் மோடி அரசு

படம்
  எப்ஸ்டீன், நரவனே விவகாரங்களை விவாதிக்க மறுக்கும் மோடி அரசு மக்களவை நாள் முழுவதும் முடங்கியது முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கு மோடி அரசு அனுமதி மறுப்பதால் மக்களவை திங்களன்று நாள் முழுவதும் முடங்கியது.   பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உட னான பிரதமர் மோடியின் தொடர்பு குறித்த செய்திகளும், இந்தியாவின் பாதுகாப்பில் பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டதாக முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.   இந்திய விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்களின் நலன்களுக்கு எதிராக, அமெரிக்காவுடன் அவசர கதி யில் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருப்பதே, எப்ஸ்டீன் விவகாரத்தி லிருந்து தப்பிக்கவும்தான் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.   ஆனால், இந்த விவகாரங்கள் குறித்து பதிலளிக்காமல் மூடி மறைக்கும் வேலையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.  இவை அனைத்தும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் என்பதால், மக்களவையில் விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  ஆனால், அவற்றுக...

சனாதன (நீதிபதி) கள்"

படம்
“சனாதன ஒழிப்பு” பற்றி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர் சங்க மாநாட்டில் பேசியது குறித்து சமூக வலைதளத்தில் எதிர்வினை ஆற்றிய, சங்கி அமித் மாளவியா “80 சதவிகிதமான மக்களை இனப்படுகொலைக்கு ஆளாக்க சொல்கிறீர்களா?” என்று பதிவிட்டிருந்தார். சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்றால் சனாதனம் என்ற பெயரில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிற பாகுபாடுகளை ஒழிக்க வேண்டுமென்பதுதான் அர்த்தமே தவிர, அதைப் பின்பற்றுகிற இந்துக்களை கொல்ல வேண்டுமென்பது அர்த்தம் கிடையாது. இது தெரிந்திருந்தாலும் சங்கிகள், இதைப்பயன்படுத்தி ஒரு சமூகப் பதற்றத்தை உருவாக்கலாம், அதன் மூலம் தமிழ்நாட்டில் திராவிட அரசியலுக்கு எதிராக ஒரு வெறுப்புணர்வை உருவாக்கலாம் என்ற உள்நோக்கத்தோடு வன்ம கருத்துக்களை பரப்பினர். இதனால், அமித் மாளவியாவுக்கு எதிராக திருச்சி நகர காவல் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. அந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்துள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தனி நீதிபதி ஸ்ரீமதி, அரசியலமைப்புக்கு புறம்பான, பல்வேறு அபத்தமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.  “சனாதன ஒழிப்பு என்ற சொல்லாடல், அந்தத் தர்மத...

"என் பெயர் முகமது தீபக்.."

படம்
  உத்தராகண்ட் மாநிலம் கோத்வாரை சேர்ந்த 46 வயதான ஜிம் உரிமையாளர் தீபக் குமார். இவர் கடந்த வாரம் தனது நண்பர் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அருகே இருந்த 70 வயதான கடைக்காரர் ஒருவரிடம் பஜ்ரங் தள் அமைப்பினர் சிலர் பிரச்சனை செய்துள்ளனர். அதாவது அந்த முதியவர் பாபா ஸ்கூல் டிரஸ் என்ற பெயரில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். பாபா என்ற பெயரை இந்துக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் இதனால் கடையின் பெயரை மாற்ற வேண்டும் எனச் சொல்லி அச்சுறுத்தியுள்ளனர். இதைக் கண்ட தீபக், அவர்களிடம் நியாயம் கேட்டுள்ளார். அந்த முஸ்லீம் கடைக்காரருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இந்தக் கடை 30 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.. திடீரென வந்து பெயரை மாற்றச் சொல்வதை ஏற்க முடியாது என சொல்லியுள்ளார். அப்போது அங்கிருந்த பஜ்ரங் தள் உரிமையாளர்கள் தீபக்கையும் அச்சுறுத்தியுள்ளனர். மேலும், பெயரைச் சொல்லும்படியும் கட்டாயப்படுத்தியுள்ளனர். அப்போதும் அஞ்சாமல் அவர், "எனது பெயர் முகமது தீபக்" என்று கூறியுள்ளார். தனது இந்து பெயரில்முஸ்லீம் பெயரையும் இணைத்து, இந்தியாவின் ஒற்றுமை குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தும் நோக்கில் அவர் இப்...

மவுனம் கலைப்பாரா?

படம்
  நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கு மேல் பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பான் கட்டாயம்: வருமான வரி வரைவு விதிகள் வெளியீடு “ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டுக்கு நிதி நெருக்கடியை உருவாக்கி வருகிறது.”ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. தூய்மை பணியாளர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட உணவுத் திட்டம்.தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் மாற்றம்.வெங்கடப்பிரியா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல். இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு.வரும் 12-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் என விவசாயிகள் அறிவிப்பு. அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் கூண்டோடு பணிநீக்கம்! விளக்கம் சொல்ல விரும்பாத பதிவாளர். ஆந்திராவில் மக்கள் தொகையை அதிகரிக்க செயல் திட்டம்: முதல்வர் சந்திரபாபு தகவல். டிஜிட்டல் கைது மோசடிகள் சந்தேக பரிவர்த்தனைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை: வங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு உதகை அருகே மொரக்குட்டி வனப்பகுதியில் 8 வயது கொண்ட ...

மனிதர்களுக்கு ஏழாவது உணர்வு உள்ளதா?

படம்
மனிதர்கள் பொருட்களை நேரடியாகத் தொடாமலேயே உணர முடியும் என்ற புதிய ஆராய்ச்சி, விஞ்ஞான உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனில் உள்ள விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆய்வில், மனிதர்களுக்கு இதுவரை கவனிக்கப்படாத  ஒரு மறைந்த உணர்வு சக்தி  இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.  இதனை அவர்கள்  “தொலைதூரத் தொடுதல்” (Remote Touch)  என அழைக்கின்றனர். சிலர் இதை மனிதனின்  “ஏழாவது உணர்வு” ( 7th Sense ) என்றும் விவரிக்கிறார்கள். மனிதர்கள் பொருட்களை நேரடியாகத் தொடாமலேயே உணர முடியும் என்ற புதிய ஆராய்ச்சி, விஞ்ஞான உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆய்வில், மனிதர்களுக்கு இதுவரை கவனிக்கப்படாத ஒரு மறைந்த உணர்வு சக்தி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனை அவர்கள் “தொலைதூரத் தொடுதல்” (Remote Touch) என அழைக்கின்றனர். சிலர் இதை மனிதனின் “ஏழாவது உணர்வு” ( 7th Sense ) என்றும் விவரிக்கிறார்கள். பொதுவாக, தொடுதல் என்றால் ஒரு பொருளை நேரடியாக கையால் அல்லது உடலால் தொடுவது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இந்த புதிய ஆராய்ச்...