மேகேதாட்டு.......
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அண்மையில் பேசுகையில், “மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை ஒன்றிய அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும். ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்தவுடன் பூமி பூஜை நடத்தப்படும். இதனை தமிழக அரசு எதிர்க்க எந்த உரிமையும் இல்லை” எனக் கூறினார். தமிழகத்துக்கு எதிர்க்கும் உரிமை இல்லை என்று டி.கே.சிவகுமார் கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஜனநாயகத்திலும் கூட்டாட்சியிலும் இத்தகைய அணுகுமுறை விரும்பத்தக்கதல்ல. மேகேதாட்டு கர்நாடக மக்களுக்கு நியாயமான தேவையாக இருக்கலாம். ஆனால் அந்தத் தேவையை முன்னிறுத்தி, காவிரி பாயும் பிற மாநிலங்களின் நியாயமான உரிமைகளையும் நிராகரிக்க முடியாது. தமிழ்நாட்டின் காவிரி உரிமைகள் என்பது கர்நாடகா வழங்கிய கருணையோ அல்லது அரசியல் சலுகையோ அல்ல. தமிழ்நாட்டின் உரிமைகள் என்பது உச்ச நீதிமன்றத்தாலும் சட்டத்தாலும் உறுதி செய்யப்பட்ட உரிமைகள். இதனை டி.கே.சிவகுமார் போன்றவர்கள் மறந்துவிடக் கூடாது. கர்நாடகாவில் காவிரி ஆறு உற்பத்தி ஆவதாலே, அதன் முழுமையான உரிமையை அம்மாநிலம் மட்டும் கோர முடியாது. ...