உயர்வுக்கு அடித்தளம்
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkQOUftfxEp63avSTPWIlAKmQMdGkuxU0UmN23XkQj7akmQAnmFf4eHrGMKPAe3VRZb7oI2-LVUfhUwaa5g5uWbgbeRhrn8uQHIBfIX9z3h2aT9W8Sn94_1xlQA9uaUuqoiT-Q-Pe7JHSqDJ7rMwyMRtT72tP4dmz1C9qs65xaIp8LGgoxbHGyGG8CXsQ/w400-h264/20240727_090816.jpg)
மாநிலங்களுக்கு நிதி வழங்குவதே சான்று ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் ஒன்றிய பாஜ அரசு: அமைச்சர் உதயநிதி. ரூ.100 கோடி நில அபகரிப்பில் விஜயபாஸ்கருக்கு உடந்தை சென்னை வழக்குரைஞர் கைது. எத்தியோப்பியாவில் நிலச்சரிவு பலி எண்ணிக்கை 257. ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து பாஜக அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக ஆர்ப்பாட்டம். உயர்வுக்கு அடித்தளம் இட்டது யார்? மின் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகச் சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறது அ.தி.மு.க. அப்படி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தார்மீக அருகதை இருக்கிறதா அ.தி.மு.க.வுக்கு? “தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு முந்தைய அ.தி.மு.க. அரசே முழுக் காரணம்” என்று நிதி மற்றும் மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சொல்லி இருப்பதுதான் முழு உண்மை ஆகும். ஒன்றிய அரசு திணித்த ‘உதய் மின் திட்டத்தில்’ அன்றைய அ.தி.மு.க. அரசு இணையாமல் இருந்திருந்தால் இதுபோன்ற கட்டுப்பாட்டுக்குள் நாம் சிக்கி இருக்க மாட்டோம். 2016 சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டபோது அந்தக் கட்சிக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ய வந்தார் அன்றைய ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர் பிய