தாய்மாமன் சீர்.....
தாய்மாமன் சீர் தடியடி? . டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என த.வெ.க.வினர் பொய் பட்டியலை வெளியிட்டாலும் பல கடைகள் மூடாமல் இருப்பதை பொதுமக்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர். ; இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களின் மேல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது பொய்யர்களின. விஜயின் அரசு. நான் ரீல் தாய்மாமன் அல்ல ரியல் தாய்மாமன் என பேசிய முதலமைச்சர் விஜய்க்கு பள்ளி மாணவ, மாணவிகளை விட மதுக்கடைகள் தான் முக்கியமா? முதலமைச்சர் வெறும் வாயில் வடை சுடாமல், அராஜக ஆட்சி நடத்தாமல் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்! குதிரை பேரத்துக்கு மறைமுக குட்டு தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியானதாக உள்ளது. முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு மற்றும் அதிமுக எம்எல்ஏக்களாக தேர்வு பெற்ற 6 பேர் ராஜினாமா செய்த தொகுதிகள் இதில் அடங்கும். காலியான தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்தவகையில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்ப...