காவிரிக்காக பொங்கிய
காவிரிக்காக பொங்கிய பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு- என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். காவிரி உரிமை பறிக்கப்படும் நேரமான இன்று தனது வீறுகொண்ட ஆர்ப்பாட்ட போர்ப்பாட்டை நிகழ்த்திக் காட்டி இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். காவிரியில் தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய உரிமை கொண்ட நீரைத் தர மறுக்கிறது கர்நாடகம். கடந்த ஜூலை மாதத்தில் வெறும் 0.698 டி.எம்.சி.நீரை மட்டுமே வழங்கி இருக்கிறது கர்நாடகம். கடந்த ஐம்பது ஆண்டு களில் மிகக் குறைந்த நீரை கடந்த மாதம்தான் பெற்றுள்ளோம். சட்டப்படி பார்த்தால் நமக்கு 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகம் வழங்கி இருக்க வேண்டும். தண்ணீர் வழங்கத் தேவையில்லை என்ற துணிச்சல் கர்நாடகாவுக்கு எதனால் வந்தது? இங்குள்ள அரசு மீது அவர்களுக்கு மரியாதையோ பயமோ இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. ‘விஜய்க்கு அரசியல் தெரியாது, அனுபவம் இல்லை’ என்று தனது பேட்டிகளில் தொடந்து சொல்லி வருகிறவர் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார். ‘எங்களுக...