இடுகைகள்

ஓடிப் போவது யார்..!

படம்
  " 3நாள் டைம் தர்றேன், தயாராகி வாங்க!" - உதயநிதி இன்று சட்டமன்றத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை மற்றும் காவல்துறை மானிய கோரிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது தவெக அரசின் மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், ஒரு கட்டத்தில் முதலமைச்சருக்கு நேரடியாகச் சவால் விடுத்தார். "நான் கேட்கும் காரசாரமான கேள்விகளுக்கு எல்லாம் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, முதலமைச்சர் விஜய் அவர்கள் நன்றாக தயாராகி வர வேண்டும்; வரும் திங்கள்கிழமை இதற்கெல்லாம் அவர் முறையான பதிலுரையை வழங்க வேண்டும்" என பேசினார் உதயநிதி. உதயநிதி ஸ்டாலினின் இந்த சவாலுக்கு உடனடியாக மைக் பிடித்து பதிலடி கொடுத்தார் முதல்வர் விஜய். பேசுகையில், "எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் வரும் திங்கள்கிழமை நான் அவையில் விரிவாகவும், தெளிவாகவும் விளக்கமளிப்பேன். ஆனால், உங்கள் மூலமாக எதிர்க்கட்சியினரிடம் நான் ஒன்றை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். திங்கள்கிழமை நான் பதில் பேசும்போது அவையில் இருக்கும் யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது (வெளிநடப்பு செய்யக...

அரசுக்கு சிகப்பு எச்சரிக்கை

படம்
  தமிழகத்தின் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் மைனஸ் 1% குறைந்திருப்பது, மாநிலத்தின் வருவாய் இயந்திரத்துக்கு சிவப்பு எச்சரிக்கை” என முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “தமிழகத்தின் வருவாய் இயந்திரம் சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறது.  இதே நிலை தொடர்ந்தால், செலவுகளைக் குறைப்பதா, மேலும் கடன் வாங்குவதா என்ற கடினமான நிலைக்கு தமிழக அரசு விரைவில் தள்ளப்படலாம். ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி புள்ளிவிவரங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை.  2025 ஆகஸ்டில் ரூ.10,329 கோடியாக இருந்த தமிழகத்தின் ஜிஎஸ்டி வசூல், 2026 ஆகஸ்டில் ரூ.10,189 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது -1% (மைனஸ் 1) சரிவு.  ஆனால் இதே காலகட்டத்தில் ஒட்டு மொத்த, இந்தியா +9%, கர்நாடகா +13%, குஜராத் +15%, தெலங்கானா +16%, உத்தரப் பிரதேசம் +19%, மகாராஷ்டிரா +8%, தமிழகம் மட்டும் - 1% . சாதாரண மக்களுக்கு இந்த ஜிஎஸ்டி எண்ணைப் பற்றி ஏன் கவலை இருக்க வேண்டும். ? ஏனென்றால், தமிழக அரசின் சொந்த வரி வருவாயில் சுமார் 38% எஸ்ஜிஎஸ்டி மூலமாக மட்டுமே வருகிறது.  வளர்ச்சிப் பணிகளுக...

கடல் சூல் உலகு.,.!

படம்
  சட்டப்பேரவையில்  முக்கிய விவாதங்கள் * இன்றைய சட்டப்பேரவை நடவடிக்கைகளில்  அரசின் முடிவுகள் முக்கிய இடம் பெற்றுள்ளன.  குறிப்பாக, முந்தைய ஆட்சிக் காலத்தில் அமைதியான போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்துள்ளது.  * திருப்பூர் வடக்கு தொகுதியைச் சேர்ந்த தவெக எம்.எல்.ஏ வி. சத்யபாமா , சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இருவரும் இல்லாத நிலையில், மாற்றுச் சபாநாயகர் பட்டியலின்படி இன்று அவையை வழிநடத்தினார்.  தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் அந்தப் பொறுப்பை ஏற்ற முதல் பெண் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். * முதல்வர் விஜய் எதிர்காலத்தில் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிப்பார் என்ற தவெக தரப்பினரின் கருத்துகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையான கிண்டலுடன் பதிலளித்துள்ளார்.  விஜய் பிரதமராக வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் குறித்தும் அவர் விமர்சனம் செய்துள்ளார். இது அதிமுக–தவெக இடையேயான அரசியல் மோதல் தீவிரமடைவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. * தவெக ஆட்சி அமைந்துள்ள ...

தொடரும் நேபாளம்,..?

படம்
📰   மேட்டூர் அணையில் இருந்து 20000 கனஅடி நீர் திறந்தால் மட்டுமே கடைமடைக்கு வரும். கர்நாடகா வழங்க வேண்டிய நீரை கேட்டு பெற தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல். 📰  நேபாளத்தில் ஒரே வீட்டில் இருந்து 23 உடல்கள் மீட்பு. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 50ஆக அதிகரிப்பு. 📰  ஈரான் மீது அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதால் பதற்றம். அமெரிக்காவின் தாக்குதலுக்கு மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுக்கப்படும் ஈரான் எச்சரிக்கை. 📰  அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்த விவகாரத்தில் திடீர் திருப்பம். எம்எல்ஏவாக தொடர அனுமதிக்கக் கோரிய இசக்கி சுப்பையா மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம். 📰 இலவச மும்முனை மின்சாரத்திற்காக தட்கல் முறையில் விண்ணப்பித்த 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருப்பு. விண்ணப்பித்தவர்களிடம் வசூலித்த 2 ஆயிரத்து 400 கோடி ரூபாயை என்ன செய்தீர்கள் என தவெக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி. 📰  சட்டப்பேரவையில் பட்டாசு ஆலை உரிமம் தொடர்பாக காரசார விவதாம். ஆதாரம் இன்றி பேசியஅமைச்சர் கீர்த்தனா பேச்சுக்கு திமுக எதிர்ப்பு.  📰  சேவல் சண்டைக்கு தடை வி...

பொய்யிலே பிறந்து...

படம்
 📰 மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு . டெல்டா பாசனத்திற்காக 45 நாட்களுக்கு நீர் திறந்து விடப்படும் என தகவல். 📰 பாசன கால்வாய்களை தூர்வாராமல் தண்ணீர் திறப்பதா என விவசாயிகள் வேதனை. கடைமடை வரை தண்ணீர் செல்வதை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை. தவெக ஆட்சிக்கு ‘மைனஸ் 80 மார்க்’- நயினார் நாகேந்திரன் மதிப்பீடு 📰 நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 939 ஆக அதிகரிப்பு. 3 ஆயிரத்து 925 பேரை காணவில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு. 📰 ரூ.1000 கோடி FQL ஆன்லைன் முதலீட்டு மோசடியில் 4வது நாளாக ஆயிரக்கணக்கானோர் புகார்.சர்வதேச தொடர்பு இருப்பதால் வழக்கு விசாரணை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம். 📰 FQL ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டதால் அதிர்ச்சி. இளைஞர் சடலத்துடன் நத்தம்- மதுரை சாலையில் உறவினர்கள் மறியல். 📰 பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 44 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவிப்பு. உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் சட்டப்பேரவையில் அறிவிப்பு. 📰 பிரதமர் வேட்பாளர் விஜய் என்பது நடப்பாண்டின் மிகப்பெரிய காமெடி என...