இடுகைகள்

கர்நாடகாவை உலுக்கும் எய்ட்ஸ்

படம்
🔹 தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகம் மீண்டும் திட்டவட்டம். காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அறிவிப்பு. 🔹அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க புகார் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் இன்று விசாரணை. பதவி விலகிய 4 சட்டமன்ற உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்துகிறார் சபாநாயகர்.எத்தனை விசாரணை? 🔹மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக அன்புமணி குற்றச்சாட்டு. காங்கிரஸ் தனித்து நின்று கவுன்சிலராக கூட வெற்றி பெற முடியாது என்றும் விமர்சனம். 🔹கரூர் நெரிசலில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கிய ஆணையை ரத்து செய்த விவகாரம். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு. 🔹151 உயர்சிறப்பு மருத்துவ இடங்களைக் கைவிட்ட தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம். அரசின் மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகாதது ஏன் என்றும் கேள்வி. 🔹பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது. வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம். கர்நாடகாவை உலுக...

இந்தியா’ கூட்டணியே

படம்
“ தி.மு.க இல்லாமல் ‘இந்தியா’ கூட்டணியே இல்லை” - - ஆளூர் ஷாநவாஸ் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அமைதி காத்து வந்த வி.சி.க முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், தி.மு.க இல்லாமல் இந்தியா கூட்டணி இல்லை என்றும், தமிழ்நாட்டில் இருந்த அளவுக்கு இக்கூட்டணி வேறெங்கும் உறுதியாக இருக்கவில்லை என்றும் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்துப் பேசிய ஆளூர் ஷாநவாஸ், தமிழ்நாட்டில் இருந்த அளவுக்கு 'இந்தியா' கூட்டணி வேறெந்த மாநிலத்திலும் உறுதியாக இருந்ததில்லை என்றும், தி.மு.க இல்லாமல் இந்தியா கூட்டணியே கிடையாது என்றும் திட்டவட்டமாகக் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வி.சி.க சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்காத நிலையில்,  அமைதி காத்து வந்த அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் மௌனம் கலைத்திருக்கிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் வி.சி.க முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், தான் எப்படி விடுதலை சிறுத்தை கட்சிக்குள் வந்தேன் என்பதையும் தனக்கு எப்படி முதலிலேயே துணைப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது என்பதையும் கூற...
படம்
🔹 திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களை இன்று சரிபார்க்கிறது தேர்தல் ஆணையம். திமுகவும் தமிழ்நாடும் தான் நீட் தேர்வுக்கு எதிராக முதல் குரலை எழுப்பியது -மக்களவையில் தயாநிதி மாறன். 🔹மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல். ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதில் ஏமாற்றம் அளிப்பதாகவும் கருத்து. 🔹நெல்லை பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டதால் அதிர்ச்சி. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனிச் சட்டம் இயற்ற அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல். 🔹பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு. 20 பேர் பலி, 50-க்கும் மேற்பட்டோர் காயம்.

காவிரி நீர்!

படம்
  உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.  இதற்காக மாதம் ஒருமுறை கூட்டங்கள் நடத்தப்பட்டு, நீர் இருப்பு மற்றும் மழைப்பொழிவு நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், மேட்டூர் மற்றும் கர்நாடக அணைகளின் தற்போதைய நீர் இருப்பு, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் உள்ளது.  ஜூன் மாதத்தில் கர்நாடக அணைகளுக்கு எந்தவித நீர்வரத்தும் இல்லை. ஜூலை மாதத்தில் போதிய மழை இல்லாததால்...

மேகதாது :பா.ஜக துரோக நிலைபாடு!

படம்
 📌 காவிரியின் குறுக்கே அணை கட்ட தமிழ்நாடு அரசின் அனுமதி கர்நாடகாவுக்கு தேவையில்லை. நாடாளுமன்றத்தில் ஒன்றிய நீர்வளத்துறை இணையமைச்சர் அளித்த பதிலால் அதிர்ச்சி. 📌 தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் புதிய வானிலை மாற்றம் உருவாகி உள்ளதாக ஸ்பெயின் அரசு கவலை. இதுவரை 77 ஆயிரம் ஹெக்டேர் நிலம் எரிந்து சேதம் என தகவல். 📌 கரூர் நெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது. விஜய் அரசின் அரசாணை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை அதிரடி தீ்ர்ப்பு. 📌 போகிற போக்கில் அரசு வேலை வழங்குவதா என தவெக அரசுக்கு நீதிபதிகள் காட்டம். சாலை விபத்தில் தினந்தோறும் உயிரிழக்கும் நபர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க முடியுமா? என்றும் சரமாரி கேள்வி. 📌 எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை. 📌 ராணிப்பேட்டை தவெக மாவட்டச் செயலாளர் மீது பாலியல் புகார். 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் புகார். 📌 போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது ...

அடுத்து எத்தனால் கட்கரி

படம்
  ‘ E20 ஜனதா கட்சி’   நிதின் கட்கரிக்கு ’வேட்டு’?  பின்னணி என்ன? நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிராக டெல்லியில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ – காக்ரோச் ஜனதா கட்சி (CJP) டெல்லியில் தொடங்கிய போராட்டம் மத்திய கல்வித் துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானின் பதவியையே பறித்தது. ”காக்ரோச்” வழியில் தற்போது ‘E20 ஜனதா கட்சி’ (E20 Janta Party) என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டு பேசுபொருளாகி இருக்கிறது. இந்த கட்சியினர், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி ஆகியோரது ராஜினாமாவை கோருகின்றனர். ஒன்றுய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின், “எத்தனலாலில் பெட்ரோல் கலக்கும்” கொள்கைக்கு எதிராக உருவாகி இருக்கிறது இந்த E20 ஜனதா கட்சி. மத்திய அரசின் எத்தனால் கொள்கை கரும்பு, மக்காச்சோளம், அரிசி கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது ‘எத்தனால்’ (Ethanol). எத்தனாலை பெட்ரோலுடன் குறிப்பிட்ட சதவீதத்தில் கலந்து வழங்குவது என்பதுதான் ஒன்றிய அரசின் கொள்கை. இதன் பெயர் இபிபி திட்டம் (EBP – Ethanol Blended Petrol)...