இடுகைகள்

கலைஞர்-100

படம்
கலைஞர்-100 இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது.  ..நகப்பட்டின் மாவட்டத்தில் திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924ஆம் ஆண்டு ஜூன் 3-ல் முத்துவேலர்- அஞ்சுகம் அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். வளர்த்தெடுத்த ஊர் திருக்குவளை என்றாலும், கருணாநிதியை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்த ஊர் திருவாரூர். தனது 14ஆவது வயதில் சமூக இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1941: தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார் கருணாநிதி. 1944 பேபி டாக்கீஸ் என்று அழைக்கப்பட்ட திருவாரூர் கருணாநிதி திரையரங்கில் தன்னுடைய முதல் நாடகமான ‘சாந்தா (அல்லது) பழனியப்பன் ‘ நாடகத்தை அரங்கேற்றினார். 1946: முதல் திரைப்படமான ‘இராஜகுமாரி’ க்கு கதை வசனம் எழுதினார். 1949: சென்னை ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை அறிஞர் அண்ணா துவங்கினார். அண்ணாவின் படைத்தளபதியாக விளங்கிய கருணாநிதி திமுகவின் பொதுக்குழு மற்றும் பிரச்சாரக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1950: கருணாநிதி கதை-வசனம் எழு

கண்ணாடி போடுவாயா நீ

படம்
கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று துவங்குகிறது. சென்னையில் இன்று மாலை நடைபெறவுள்ள விழாவில் நூற்றாண்டு விழாவுக்கான இலச்சினை வெளியிடப்படுகிறது. புழல் சிறையில் காவலர்கள் நடத்திய சோதனையில் விஜயராஜ் என்ற கைதி படுக்கையில் மறைத்து வைத்திருந்த செல்போன், 2 பேட்டரிகள், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. கொடியரசன் என்ற கைதி படுக்கையில் மறைத்து வைத்திருந்த 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது .  மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்க குடியரசுத் தலைவரை சந்திக்க விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. டெல்லி எல்லையை முற்றுகையிடும் போராட்டம் குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்படும். கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் மேல் முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.  5  பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக கோகுல்ராஜ் தாயார் தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்! சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீ

இந்த மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு

படம்
  மக்களாட்சி நீக்கம் இந்தியாவில் ஒன்றிய மற்றும் மாநில கல்வி வாரியங்கள் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. ஒன்றியக் கல்வி வாரியங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான பாடத்திட்டத்தை பின்பற்றி வருகிறது. மாநிலக் கல்வி வாரியங்கள் அந்த மாநிலங்களுக்கு ஏற்ற பாடத்திட்டங்களை வகுத்துள்ளன. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) வழங்கும் புத்தகங்களை சிபிஎஸ்இ பின்பற்றுகிறது.  எஸ்சிஇஆர்டி மாநிலப் பாடத் திட்டத்தையும் பின்பற்றுகின்றன. அவ்வப்போது பாடத்திட்டங்களை மற்றுவது வழக்கம்.  அந்த வகையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர்கள் பகுதி நீக்கப்படும் என்று என்சிஇஆர்டி கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அறிவித்து இருந்தது. இது நடப்பு கல்வி ஆண்டான 2023- 2024-லேயே அமலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புக்கான பாடப்புத்தகங்களில் இருந்து சில பாடங்கள் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது.  அதாவது, தனிம வரிசை அட்டவணை (periodic table) உள்ளிட்ட பாடங்கள் அறிவியல் புத்தகங்களில் இருந்து நீக்கபப்ட்டுள்ளன.  சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் எரிசக்திக்கான ஆதாரம் உள்ளிட்

புகையிலை எதிர்ப்பு

படம்
  கேரளாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. நின்று கொண்டிருந்த ரயில் பெட்டி என்பதால் உயிரிழப்பு நல்வாய்ப்பாக தடுக்கப்பட்டுள்ளது.  இதே ரயிலுக்கு ஏற்கனவே தீ வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  ஜூலை 1 ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை (7 மாதங்கள்) சென்னை கடற்கரையில் இருந்து சேப்பாக்கம் வரை செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. *வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.84.50 குறைந்துள்ளது. ஒரு சிலிண்டர் ரூ.1,937க்கு விற்பனையாகிறது. *சென்னையில் குடிநீர் லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் செய்யப்பட்டு உள்ளது . இதனால் இன்று வழக்கம் போல் குடிநீர் லாரிகள் இயக்கும் என தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளது. *டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்திக்க உள்ளார். புகையிலை எதிர்ப்பு தினம். புகையிலையை புகைப்பவருக்கு மட்டுமில்லாமல் அந்த பாதிப்பு அருகில் உள்ளவர்களுக்கும் மிக பெ

7000 க(ள)னவு

படம்
காணாமல் போனதா 7000 நெல் மூட்டைகள்,? தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் தமிழ்நாடு வாணிப கழக திறந்த வெளி குடோனில் 22 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது.  தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். இதனால் தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் நெல் மூட்டைகள் மாயமானதாக கூறப்பட்ட தருமபுரி வாணிப கழக திறந்த வெளி குடோனில் இன்று மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.  அப்போது ஆட்சியர் சாந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. தமிழ்நாடு வாணிப கழக சார்பில் தருமபுரி மாவட்டத்திற்கு 22 ஆயிரம் நெல் மூட்டைகள் தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் வரவழைக்கப்பட்டது.  இந்த நெல் மூட்டைகளை ஆட்சியர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட வாணிப கழக திறந்த வெளி குடோனில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த குடோனில் இருந்த 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமானதாக தகவல்களை பரப்பினர். இதுகுறித்து எழுந்த புகார் காரணமாக விஜ

தேவை சட்ட நடவடிக்கை.

படம்
  இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் தனது மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி ஆலையை ஜப்பானின் ஓம்ரான் நிறுவனம் அமைக்கிறது. மவுண்ட்பேட்டன் பிரபு செங்கோல் கதை காலத்தில்  டெல்லியிலேயே இல்லை.இங்கிலாந்து சென்றிருந்தார். புனைகதைகள் வரலாறு ஆகாது” -என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செங்கோல் குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்தார். கோவையில் கத்தியை வைத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சிஎம்சி காலணி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் போன்ற விடியோக்களை பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான குழு சந்தித்துள்ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக குடியரசு தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் துரைசாமி விலகியதற்கான காரணங்கள் குறித்து எனக்கு தெரியாது. திமுகவுடன் கூட்டணி வைத்தது துரைசாமிக்கு பிடிக்கவில்லை. அவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையல்ல. மதிமுகவில் இருந்து திருப்பூர