கலைஞர்-100

கலைஞர்-100 இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. ..நகப்பட்டின் மாவட்டத்தில் திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924ஆம் ஆண்டு ஜூன் 3-ல் முத்துவேலர்- அஞ்சுகம் அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். வளர்த்தெடுத்த ஊர் திருக்குவளை என்றாலும், கருணாநிதியை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்த ஊர் திருவாரூர். தனது 14ஆவது வயதில் சமூக இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1941: தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார் கருணாநிதி. 1944 பேபி டாக்கீஸ் என்று அழைக்கப்பட்ட திருவாரூர் கருணாநிதி திரையரங்கில் தன்னுடைய முதல் நாடகமான ‘சாந்தா (அல்லது) பழனியப்பன் ‘ நாடகத்தை அரங்கேற்றினார். 1946: முதல் திரைப்படமான ‘இராஜகுமாரி’ க்கு கதை வசனம் எழுதினார். 1949: சென்னை ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை அறிஞர் அண்ணா துவங்கினார். அண்ணாவின் படைத்தளபதியாக விளங்கிய கருணாநிதி திமுகவின் பொதுக்குழு மற்றும் பிரச்சாரக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1950: கருணாநிதி கதை-வசனம் எழு