வரையறை மோசடி?
தொகுதி வரையறை மோசடி? நாட்டில், கடந்த 1951, 1961, 1971 ஆகிய மூன்று ஆண்டுகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. 1971ல் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 10.10 லட்சம் மக்கள் தொகை என்ற அடிப்படையில் 543 நாடாளுமன்ற தொகுதிகள் கொண்டுவரப்பட்டது. அதுதான், இன்றுவரை தொடர்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் - இந்தியாவிலேயே தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில், ஒன்றிய அரசின் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தியதன் விளைவாக மக்கள்தொகையில் எண்ணிக்கை விகிதாச்சாரம் நமக்கு குறைந்துவிட்டது. இதை அடிப்படையாக கொண்டு மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை முக்கியமாக கருதி 1976-ல் பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் ஆட்சி நடந்தபோது குடும்ப கட்டுப்பாடு போன்ற இந்தியாவுக்குரிய சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை முறையாக பின்பற்றக்கூடிய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்கிற காரணத்தினால் 2001 வரை, அதாவது அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதே தொகுதிகள்தான் இருக்கவேண்டும் என்று அரசியல் திருத்த சட்டம் 42 கொண்டு...