இடுகைகள்

இரண்டானவன் முடிவில்ஒன்றாவன்!

படம்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினார்கள். அவர்கள் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து அ.தி.மு.க. கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட 25 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதேபோல் எஸ்.பி.வேலுமணி தரப்பில் எங்களிடம் தான் அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே தாங்கள் நியமித்தவரைதான் அ.தி.மு.க. கொறடாவாக அங்கீகரிக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு 90 நாட்கள் வரை அதிகாரம் உள்ளது. ஆனால் மனு கொடுத்தவர்கள் 15 நாட்களுக்குள் சமரசமாகி மனுவை வாபஸ் பெறவும் அவகாசம் உள்ளது. அதன் அடிப்படையில் இந்த மனுக்களை வாபஸ் பெற நாளை (28-ந்தேதி) வரை அவகாசம் உள்ளது. அதன் பிறகும் மனுக்களை வாபஸ் பெறாவிட்டால் அந்த மனுக்கள் மீது ...

என்ன சத்தத்யே காணோம் அங்கிள்?

படம்
தமிழ்நாட்டில் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறப்பு. தட்பவெட்ப சூழலை கருத்தில் கொண்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.  ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்களை உடனே தவெகவில் சேர்ப்பது, கட்சித் தாவலை ஊக்குவிப்பதாகும் என மார்க்சிஸ்ட் விமர்சனம். அம்மா உணவகங்களில் ஜெயலலிதா புகைப்படங்கள் நீக்கப்பட்டதற்கு அதிமுக கண்டனம். விஜய் புகைப்படத்தை வைத்துவிட்டால் திட்டம் உங்களதாகி விடுமா என கேள்வி. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த 4-வது அதிருப்தி எம்எல்ஏ இசக்கி சுப்பையா. அதிமுகவினரின் பதவி விலகலை அடுத்து காலியான தொகுதிகள் எண்ணிக்கை 5-ஆக அதிகரிப்பு. குதிரைபேர அரசியலை நியாயப்படுத்த முடியாது என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம். ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவது வரலாற்று துரோகம் என மாணிக்கம் தாகூருக்கு பதிலடி.  சென்னை சைதாப்பேட்டையில் ஜாதி அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு ஒதுக்கீட்டில் தவெக எம்எல்ஏ தலையீடு இருப்பதாகவும் புகார் அளித்த இளைஞர்கள் மீது த.வெ.க எம்எல்ஏ தாக்குதல். காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என டி.கே. சிவக்குமார் உறுதி....

குற்றத்தை மறைக்க

படம்
தொடரும் ‘துல்லிய’த் தாக்குதல் கடந்த பத்து நாட்களில் நான்காவது முறை யாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப் பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இம்மாதம் 15ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூ.4.78உம், டீசல் லிட்டருக்கு ரூ.4.84உம் உயர்த்தப்பட்டது. தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.2.57 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொடர் விலை உயர்வுகளின் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.107.77 அளவுக்கும், டீசல் ரூ.97.55 ஆகவும் உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. இந்த எரிபொருள் உயர்வின் காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் ஆபத்து ஏற் பட்டுள்ளது. இது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடூரமான தாக்குத லாகும். ஆனால் ஒன்றிய ஆட்சியாளர்கள் இன்னமும் விலை உயரக் கூடும் என்றே அபாயச் சங்கு ஊதுகின்றனர். போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ள தால், பழங்கள், காய்கறிகள், அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் விலையும் மேலும் ஒரு சுற்று உயரும் ஆபத்து எழுந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு போர்ச்சூழ...

இதன் பெயர்தான்

படம்
  இதன் பெயர்தான் குதிரை பேரம்   எம்.எல்.ஏ,க்களை தூக்கிய பரபரப்பு பின்னணி   அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேரை குதிரை பேரம் மூலம் ராஜினாமா செய்ய வைத்து தலைமை செலயகத்திலேயே தவெகவில் இணைத்து உறுப்பினர்கள் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் உருவாகியுள்ள புதிய அதிகாரப் போட்டி, தற்போது அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுகவின் உட்கட்சி பிரச்னையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ஆளும் கட்சியான தவெக தனது அரசியல் பலத்தை சட்டமன்றத்தில் அதிகரிக்கும் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி அணியை சேர்ந்த மதுராந்தகம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா ஆகியோர் திடீரென நேற்று தலைமை செயலகம் வந்தனர். சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை 2.30 மணிக்கு நேரில் சந்தித்து தங்களது பதவி விலகல் கடிதங்களை வழங்கினர். இம்மூவரும் அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி...