அந்நிய செலாவணி :.ஒரு பார்வை.
இன்றைய உலகமயமாக்கல் சந்தையில் ஒரு நாட்டின் முதுகெலும்பாக இருப்பது அந்நிய செலாவணி. ஒரு நாடு அந்நிய செலாவணி வைத்திருக்கும் அளவைப் பொறுத்தே பொருளாதாரம் மதிப்பிடப்படுகிறது; ஏற்றுமதியும் இறக்குமதியும் முடிவாகிறது. முன்பெல்லாம், சில வாரங்களுக்கு மட்டும்தான் அந்நிய செலாவணி கையிருப்பு நம் நாட்டிடம் இருந்தது. ஆனால், கடந்த பல தசம ஆண்டுகளாக ஓர் ஆண்டு இறக்குமதிக்கு தேவையான அந்நிய செலாவணி கையிருப்பாக ஆர்பிஐ வைத்திருக்கிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, ஜூலை 3-ம் தேதி முடிந்த வாரத்தில், அந்நிய செலாவணி கையிருப்பு 726 கோடி டாலர் அதிகரித்து, 67,419.30 கோடி டாலர் இருக்கிறது’ என தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு ஆசியாவில் போர் தொடங்குவதற்கு முன்பாக, கடந்த பிப்ரவரி 27-ம் தேதி முடிந்த வாரத்தில், ரிசர்வ் வங்கியிடம் அதிகபட்சமாக 72,849.40 கோடி டாலர்கள் கையிருப்பு இருந்தது. அதன்பின், கச்சா எண்ணெய் விலை உயர்வு, தங்கம் இறக்குமதி அதிகரிப்பு ஆகியவற்றால் அதிகமாக டாலரை செலவிட வேண்டியிருந்ததால், இந்திய ரூபாய்க்கு நெருக்கடி ஏற்பட்டு, மதிப்புக் குறைந்தது, டாலரின் தேவையும் அதிகரித்து, கையிருப்பும் க...