இடுகைகள்

எது. தண்டனை?

படம்
  ‣ கொளத்தூர் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின். கண்ணீர்மல்க கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் வரவேற்பு. ‣ பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு 2 வாரம் அவகாசம் அளிக்கப்பதில் சிக்கல். எடியூரப்பா வழக்கில் ஒரு நாள் மட்டுமே உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்ததை சுட்டிக்காட்டி கேள்வி. ‣ தவெகவுக்கு ஆதரவு அளிப்பது பற்றி மாநில காங்கிரஸே முடிவெடுக்கலாம் என கே.சி.வேணுகோபால் அறிவிப்பு. சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி இன்று கூடி முக்கிய முடிவு. ‣ திருச்சி, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் கொட்டிய கோடைமழை. திண்டுக்கலில் பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர். ‣ தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்டவட்டம். பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை தொடர்வதாக அதிமுகவில சமீபத்தில் சேர்ந்த லாட்டரி அதிபர் லீமா ரோஸ் மாறுபட்ட கருத்து. ‣ விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தவெகவை புறக்கணித்த மக்கள். 33 தொகுதிகளில் ஒன்றில்கூட தவெக வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. ‣ திருத்தணி அருகே டி.வி.புரம் ஊராட்சியில் 4 நாட்களாக மின்விநியோகம் இல்லை என மக்கள் மறியல். சென்ன...

கணிப்பு வியாபாரம்!

படம்
கருத்துக் கணிப்பு வியாபாரம்!  ‛‛எக்சிட் போல்” என்ற பெயரில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எனக் கூறி பெரும்பாலான நிறுவனங்கள் வெளியிட்ட முடிவுகள் கேலிக்கூத்து ஆகி உள்ளன. நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஜெயித்ததா, பொய்த்ததா என பார்க்கையில் தவிடுப்பொடியானது என்றே சொல்ல வேண்டும்.  பீப்பில்ஸ் பல்ஸ், மேட்ரைஸ், பி-மார்க், சாணக்யா என பல நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் சராசரியாக திமுக கூட்டணி 125 முதல் 135 என பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் சராசரியாக அதிமுக கூட்டணி 75 முதல் 85 இடங்கள் பெற்று எதிர்க்கட்சியாகவும், சராசரியாக தவெக 11 முதல் 21 இடங்கள் வரை வெல்லும் எனவும் ஆரூடம் சொன்னார்கள். ஓட் வைப் என்ற நிறுவனம்  திமுக கூட்டணி 103-113 இடங்களும், அதிமுக கூட்டணி 114-124 இடங்களும், தவெக 4-10 இடங்களும் வெல்லும் என்றது.   ஆக்ஸிஸ் மை இந்தியா என்ற நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 92 முதல் 110 இடங்களும், அதிமுக 22-32 இடங்களும், தவெக 98-120 இடங்களும் கைப்பற்றும் என்றது. நேற்று வெளியான ...

நீங்கள் செய்வீர்களா?

படம்
  மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது ...

அக்னி நட்சத்திரம்?

படம்
  அக்னி நட்சத்திரம் இன்று (மே 4,) தொடங்கும் நிலையில், சென்னையில் கடலோரப் பகுதிகளில் நிலவும் வெப்பச்சலனம் காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறையும். வழக்கமான கடும் வெயிலுக்குப் பதிலாக, மேக மூட்டத்துடன் கூடிய வானிலை மற்றும் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், இது வெப்பத்தைக் குறைக்கும். கடுமையான வெப்ப அலையில் இருந்து தற்காலிக நிம்மதி கிடைக்கும், இருப்பினும் அக்னி நட்சத்திரம் என்பதால் குளுமையான சூழல் இருக்காது.வெயிலின் தாக்கம் குறைந்தாலும், மதிய நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். 2026-ஆம் ஆண்டுக்கான உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 157-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இந்தியாவை ‘மிகவும் மோசமான’ (Very Serious) பிரிவில் இக்குறியீடு வகைப்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு சார்பாக எழுதுவது, அரசியல் அழுத்தம் மற்றும் ஊடகங்களின் உரிமையாளர்களிடையே நிலவும் ஒருசார்பு நிலை போன்றவை இந்தியாவின் தரம் குறைய முக்கியக் காரணங்களாக சுட்டிக்காட்டப...

முதல்வர் ஸ்டாலின்!

படம்
  மக்களாட‌்சி மாண்பைக் காப்பாற்றுங்கள்! தேர்தல் நடைமுறையின் புனிதத்தை காத்து, ஜனநாயக அமைப்பின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துமாறு திமுக வலியுறுத்தி உள்ளது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அளித்த மனுவில் கூறி இருப்பதாவது;- "2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று, பாஜகவும், அக்கட்சியின் தூண்டுதலின் பேரில் செயல்படும் பிற அரசியல் கட்சிகளும் இணைந்து, வாக்கு எண்ணும் மையங்களில் குழப்பங்களை விளைவிக்கத் திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.  இத்தகைய சீர்குலைவு செயல்பாடுகள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் மட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் உள்ளிட்ட பிற பதற்றமான இடங்களுக்கும் பரவக்கூடும் என்றும் நாங்கள் அஞ்சுகிறோம்.  இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, ​​பெரிய அளவிலான சட்டம் – ஒழுங்கு பிரச்சினை எழக்கூடும் என்ற நியாயமான அச்சம் நிலவுகிறது.  இது, ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைமுறையை செயல்பட...