இடுகைகள்

வெற்றி செல்லாது ?

படம்
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருக்கும் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு (Election Petition) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தற்போதைய முதலமைச்சர் விஜய். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்  விஜய்யின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். முக்கிய குற்றச்சாட்டுகள் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தனது மனுவில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராகப் பல்வேறு அடுக்கடுக்கான புகார்களைப் பட்டியலிட்டுள்ளார்.  தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி 18 வயதுக்குக் குறைவான குழந்தைகளைப் பயன்படுத்தி விஜய் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். விஜய் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யும்...

"சுரன்"

படம்
📰  காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு. விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டம் தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி அமல். 📰  கும்மிடிப்பூண்டி அருகே வட மாநில தம்பதியின் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை. பீகார் மாநில கொடூரனை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள். 📰  கும்மிடிப்பூண்டி சிறுமி கொலைக்கு நீதி கேட்டு பொதுமக்கள் ஆவேச போராட்டம். ஒருநாள் கழித்து ஆறுதல் கூற வந்த தவெக எம்எல்ஏ உடன் வாக்குவாதம். 📰  3 வயது குழந்தையை வன்கொடுமை செய்து கொன்ற கொடூரஇளைஞரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவு. வட மாநில கொடூரன் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறையில் அடைப்பு. தமிழ்நாட்டில் ஒரே நாளில் அடுத்தடுத்து பாலியல் தொல்லைக்கு ஆளான 7 சிறுமிகள். குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா?பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கீறதா?என பொதுமக்கள் அச்சம்.கேள்வி? 📰  அக்னி நட்சத்திரம் முடிந்தும் விடாமல் கொளுத்தும் வெயில். தமிழ்நாட்டில் நேற்று 12 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவு. 📰  தமிழ்நாட்டில் தாம்பரம், செஞ்சி, தருமபு...

தனிமனித ஒழுக்கம்

படம்
கர்நாடகா மங்களூரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொண்ட சிஎம் விஜய், அங்குள்ள மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது காரை தானே ஓட்டியதாக கூறப்படுகிறது.  வாகனம் ஓட்டுவதில் அவருக்கு உள்ள ஆர்வம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நடிகராக இருந்த காலத்திலிருந்தே பல சந்தர்ப்பங்களில் அவர் தானாகவே வாகனம் ஓட்டியதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். இந்த பயணத்தின்போது அவரது மேலாளர் ஜெகதீஷ், உதவியாளர் ராஜேந்திரன், தனிப்பட்ட பாதுகாவலர் மூசா உள்ளிட்ட நெருங்கிய குழுவினரே உடன் இருந்ததாக கூறப்படுகிறது.  பொதுவாக சிஎம் விஜய்யின் பயணங்களில் இந்த குழுவினரே தொடர்ந்து உடன் இருப்பது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. வீடியோவில் காருக்குள் காணப்பட்ட ஒரு டம்ளரை மையமாக வைத்து சமூக வலைதளங்களில்   அது மதுதான்  எனபரவலாகிவருகிறது. . அந்த வீடியோவில் அந்த டம்பளரில் மது இருந்ததாக பேசப்பட்டு வருகிறது.  பொதுவாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் வைரலாகும் போது சம்பந்தப்பட்ட தரப்புகள் உடனடியாக விளக்கம் அளிப்பது வழக்கம்.  ஆனால் இந்த விவகாரத்தில் இதுவரை தவெக தரப்பிலிர...

காலம் கடந்த ஞானோதயம்!

படம்
  ஒற்றுமையைப் பற்றி ராகுல் வகுப்பு எடுத்துள்ளார். இது காலம் கடந்த ஞானோதயம் ஆகும்.  இந்த ஒற்றுமையை ஒவ்வொரு மாநிலத்திலும் கெடுத்தவரே ராகுல்தானே? இந்தியா கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் தான் ஆற்றிய உரையை ராகுல் காந்தி, சில நாட்கள் கழித்து வெளியிட்டு இருக்கிறார். ஜூன் 3 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் தான் என்ன பேசினேன் என்பதை ஜூன் 11 ஆம் தேதி வெளியிட்டு இருக்கிறார் ராகுல்.  இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள், காங்கிரஸ் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் அதிகம் பரவியதால் தனது உரையை வெளியிட வேண்டிய நெருக்கடி ராகுலுக்கு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் ராகுல் எப்படி நடந்து கொண்டார் என்பதை இடதுசாரிகளும், சமாஜ்வாடி கட்சியும், ராஷ்டிரிய ஜனதா தளமும் கடுமையான விமர்சனங்கள் வைத்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ஆற்றிய உரை மிக முக்கியமானது. கேரளாவில் காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிரெதிராக போட்டியிட்டன. இரண்டும் சம செல்-வாக்கு உள்ள கட்சிகள் ஆகும். அவை இர...