இடுகைகள்

மாமனாவது,சீராவாது ?

படம்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், மகளிர் தங்களது வாழ்க்கையில் தலைநிமிர்ந்து நிற்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டக் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை மகளிரின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 மாதம் மாதம் வரவு வைக்கப்பட்டு வந்தது. தேர்தல் அறிவித்துவிட்டால் இந்த உரிமைத் தொகை மகளிருக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்று கருதி, முந்தைய தி.மு.க அரசு கொடை நிதியுதவியுடன் சேர்த்து ரூ.5,000 தொகையை முன்கூட்டியே வங்கியில் வரவு வைத்து அவர்களை மகிழ்வித்தது. இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் கிட்டத்தட்ட 1.31 கோடிப் பெண்கள் கடந்த 2 வருடங்களாகப் பயனடைந்து வருகிறார்கள். இதன் மூலம் தாங்கள் பொருளாதாரச் சுதந்திரத்துடன் இருப்பதாக அவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டு வந்தனர். ஏன் கணவனிடம் கைநீட்டி, 'வெளியே செல்ல வேண்டும், இந்தப் பொருள் வாங்க வேண்டும்' என்று காசு கேட்காமல், தாங்களே தங்களுக்குத் தேவையானதை வாங்கும் அளவிற்குப் பொருளாதார விடுதலையைப் பெண்களுக்குத் திராவிட மாடல் அரசு வழங்கி வந்த...

அதிகாரம் பறிப்பு?

படம்
நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பித்தது தவெக அரசு. ஆதரவாக 144 உறுப்பினர்களும், எதிராக 22 பேரும் வாக்கு. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பினருக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கால், தலைமை அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பேரவையில் பதிலளிக்காமல் முதலமைச்சர் வீட்டுக்கு சென்று விஜய் அறிக்கை விடுவதாக உதயநிதி விமர்சனம். திமுக கூட்டணி வாக்குகளை வைத்தே விஜய் முதலமைச்சராகி இருப்பதாகவும் பதிலடி. வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 26 பேரின் கட்சிப் பதவிகள் பறிப்பு. தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை. கட்சியில் இருந்து தங்களை நீக்க பழனிசாமிக்கு அதிகாரம் இல்லையென சி.வி.சண்முகம் தரப்பு விளக்கம். சசிகலா, டிடிவி.தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்க்கவும் வலியுறுத்தல். என்டிஏ கூட்டணியில் இணைய கடைசி வரை தவெக தயாராக இருந்ததாக சி.வி.சண்முகம் தகவல். கூட்டணிக்கு வந்தவர்களை பழனிசாமி உதாசீனப்படுத்தி விரட்டி விட்டதாகவும் குற்றச்சாட்டு. சேலம் அருகே மனைவியின் 2வது கணவர் என நினைத்து தறித் தொழிலாளி ம...

வெற்றிவேல் யார்?

படம்
  விஜய்யின் ராஜகுரு வாழ்க்கை? ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் தொடர்ந்து சோதிடம் பார்த்து வந்த நிலையில் 2001ல் ஜெயலலிதா ஆட்சியை பிடிக்க, வெற்றிவேல் சொன்னது நடந்ததால் அவரை ஆஸ்த்தான சோதிடராக்கி இருக்கிறார் ஜெயலலிதா.  இதன் மூலம் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை தன் கைக்குள் வைத்திருந்திருக்கிறார் வெற்றிவேல். சென்னையில் தனக்கு செல்வாகும் செல்வமும் கூடிவிட்டதால் ராஜலட்சுமியை சென்னைக்கு அழைத்து வந்து குடித்தனம் நடத்தி இருக்கிறார்.   ஈரோடு பக்கமே வராத வெற்றிவேலை தேடித்தேடி கடைசியில் சென்னையில் அவரின் வீட்டை கண்டுபிடித்திருக்கிறார்.  வீட்டுக்குள் விடாமல் போலீசை விட்டு துரத்தி விட்டிருக்கிறார் வெற்றிவேல். தன்னைத்தேடி வந்துகொண்டிருந்ததால் சுமதிஸ்ரீக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் வெற்றிவேல்.  நீதிமன்றத்தில் வெற்றிவேலுவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது.   இதனால் ஈரோட்டில் தாய் வீட்டிற்கே சென்று தையல் தொழிலில் ஈடுபட்டு வந்த சுமதிஸ்ரீ கடந்த 2012ல் பத்திரிகைகளில் வெற்றிவேல் குறித்து வாக்குமூலம் அளித்து வந்தார். பிள்ளைகளுடன் வாழ்ந்தால்தான் யோகம்...

தூயசக்தி நாடகம்முடிந்தது!

படம்
  பிளவுபட்ட அ.தி.மு.க. என்னும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயன்று, உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருப்பதாக தவெக மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். இது தூய சக்தியா இல்லை, அடுத்த கட்சி MLAக்களைத் தூக்குற சக்தியா? என தவெகவுக்கு வாக்களித்த மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகி விட்டதாக சாடி உள்ளார். திமுக எம்எல்ஏக்கள் வெளி நடப்பு இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;தவெக ஆட்சி அமையவோ, தொடரவோ திமுக தடையாக இருக்காது என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திமுக எம்எல்ஏக்கள், நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்து உள்ளனர். சட்டமன்றத்தில் இருக்கும் தோழமைக் கட்சி எம்எல்ஏக்களான பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்து உள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை கூறிக்கொள்கிறேன். நிலைப்பாட்டை மதிக்கிறோம் இ.கம்யூ., மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய தோழமைக் கட்சிகள், குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது எ...

என்னவெல்லாம் சொன்னீர்கள்.செய்வீர்களா?.

படம்
நீட் தேர்வே ஒருகல்வி கார்பரேட்கள் மோசடிதான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் காட்டம். எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுகவினர் தவெகவுக்கு ஆதரவு. நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரிக்க முடிவு செய்திருப்பதாக அறிவிப்பு. அதிமுக கொறடாவை மீறி வாக்களித்தால் சட்ட நடவடிக்கை என எடப்பாடி தரப்பு எச்சரிக்கை. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யக்கூடும் என இன்பதுரை அதிரடி. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மராட்டியத்தை சேர்ந்த மருத்துவ மாணவரும் சிக்கினார். டெலிகிராம் வாயிலாக நீட் வினாத்தாளை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக வாக்குமூலம். தங்கம் வாங்குவதைக் குறைக்குமாறு பிரதமர் கூறியபின்னர் நேற்று(செவ்வாய்க்கிழமை) வெள்ளி விலை ரூ.12,000 அதிகரித்தது. இந்நிலையில் இன்று தங்கம் வெள்ளிக்கான அடிப்படை இறக்குமதி வரியும் 15% உயர்த்தப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் வெள்ளியின் விலையும் உயரும் எனத் தெரிகிறது. அரசவை சோதிடர் அ றிவுரையை கேளுங்க? என்ன பேச்செல்லாம் பேசினார் விஜய்? தி.மு.க. கூட்­ட­ணி­யைக் ...

அரசவைக் "குதிரை!"

படம்
  ரோமாபுரியை ஆண்ட மன்னன் கலிகுலா தான் செல்லமாக வளர்த்த இன்சிடாடஸ் இந்தக் குதிரைக்கு தனது அரசவையில் மிக முக்கிய பொறுப்பு கொடுத்ததாக வரலாற்று கதையாடல் உண்டு. அதனைக் குறிப்பிட்டு கலிகுலா – இன்சிடாடஸ் என குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் பதிவிட்டு இருக்க கூடிய எக்ஸ் தள்ளப்பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.  அதற்கு முக்கிய காரணம் இன்றைய தினம் தமிழக முதல்வர் விஜயின் ஆஸ்தான ஜோதிடரான ரதன் பண்டிட் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழக முதல்வவரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து தலைமை செயலாளர் உத்தரவு அளித்திருக்கிறார்.  இவர் ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் செய்தி தொடர்பாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தமிழக அரசின் இந்த செயல்பாட்டுக்கு பலகட்ட விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.  இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் கார்த்திக் சிதம்பரம் போட்டு இருக்க கூடிய பதிவு விஜய் அரசின் நிலைப்பாட்டை தாக்கிதான்.  ரதன் பண்டிட் தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜயின் ஆஸ்தான...

நீட்டே ஒரு கார்பரேட் மோசடிதான்!

படம்
  நேற்றுவரை ₹190-க்கு வித்த சரக்கு இன்னைக்கு ₹200 ரூவாயாம் அப்போ அந்த கூடுதல் பத்து ரூவா ஆதவ்க்கு போகுதா இல்ல விஜய்க்கு போகுதா தற்குறிகள்தான்விளக்கனும்.குடிமகன்கள் கோரிக்கை.! தனது பிறந்தநாளை ஒட்டி ஜெயலலிதா நினைவிடத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி மரியாதை. தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்தித்த முதலமைச்சர் விஜய் . விஜயின் கையை எடுத்து தனது கண்ணில் ஒற்றிக் கொண்ட லால்குடி எம்.எல்.ஏ.வும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ். நாகர்கோவில் அருகே அரசுப் பேருந்தில் பயணித்த லாயம் சுந்தரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு - கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். நீட் தேர்வு முறைகேடு-ரத்து! கடந்த மே 3ம் தேதி அன்று நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்பட்ட இளநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை (NEET Paper Leak) வெடித்துள்ளது. இதையடுத்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்வதாக NTA எனப்படும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளி...