இடுகைகள்

தேர்தல் நி(க)லவரம்.(03/04/26)

படம்
# திருச்சியில் நடைபெற்ற தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில், ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் துரைராஜை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார். # புதுச்சேரியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி . சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்லும் பிரதமர் இன்று மாலை புதுச்சேரி அஜந்தா சிக்னல் சந்திப்பு-அண்ணா சாலை வரை 1.7 கி.மீ.க்கு சாலை வலம் செல்கிறார்.  # சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில்,  தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரதோர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் பிரதமர் வருகை, அரசியல் கட்சித் தலைவர்களுக்கான பரப்புரை பாதுகாப்பு, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பு குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது. வரும் 6 மற்றும் 13ம் தேதிகளில் கூடுதலாக 250 கம்பெனி சி.ஆர்.பி.எப் வீரர்கள் தமிழ்நாடு வருகை தர உள்ளனர் # பாஜக தங்களுக்கு ஒரு ச...

தேர்தல்;அதிகார மாற்றம்!

படம்
  தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. மார்ச் 30ம் தேதி முதல் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பாணை அமலுக்கு வந்தது. அதை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இந்த நிலையில் பொறுப்பு டிஜிபியாக இருந்து வந்த வெங்கட்ராமனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிவிட்டு, புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தத்திற்கு தமிழகத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் லதா திரிபாதி அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழக சட்டமன்றத் தேர்தல் தயார் நிலை குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் புதிய டிஜிபியை நியமனம் செய்து ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி 1992 ஆம் ஆண்டு பிரிவு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோர் காவல்துறை டிஜிபியாக நியமிக்கப்படுகிறார். தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வர வேண்டும். மேலும் இந்த உத்தரவின் அடிப்படையில் பணியில் இருந்து மாற்றம் செய்யப்...

தேர்தல் நி(க)லவரம்!

படம்
  தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30-ந் தேதி தொடங்கியது. அரசியல் கட்சி தலைவர்கள் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  * தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள தி.மு.க. உதயநிதி ஸ்டாலின், வேலூரில் பேசியபோது, இன்றைக்கு பா.ஜ.க., ஏ.பி.சி என்று பட டீம்களை இறக்கி இருக்கிறார்கள். எத்தனை டீம் வந்தாலும் வெல்லப்போவது நம்ம தி.மு.க. டீம் தான். நம்மதான் மீண்டும் சாம்பியன் என்று பேசியுள்ளார்.  * சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள தே.மு.தி.க 10 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், நேற்று (ஏப்ரல் 1) திருத்தணியில் இருந்து தனது பரப்புரையை தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த் திருத்தணி தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.  * தி.மு.க. கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிடும் ம.தி.முக. 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம், சீர்காழி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், திடீர் முடிவாக 4 த...

துக்ளக் டிரம்ப்

படம்
  அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று மத்திய கிழக்கு போர் தொடர்பாக முக்கிய தகவல்களை அறிவிப்பார் எனச் சொல்லப்பட்டது. போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாகவே டிரம்ப் பேசுவார் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், டிரம்ப்பின் பேச்சு வழக்கம் போலத் தெளிவைத் தருவதற்குப் பதிலாகக் குழப்பத்தையே அதிகரித்தது.  வளைகுடா போர் 5வது வாரமாகத் தொடரும் சூழலில் இன்று காலை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். போரினால் விலைவாசி உயர்வு ஏற்படும் சூழலில், அமெரிக்க மக்கள் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இதனால் போரை முடிப்பது தொடர்பாக டிரம்ப் பேசுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். வழக்கம் போலத் தெளிவைத் தருவதற்குப் பதிலாகக் குழப்பத்தையே அதிகரித்தது.  அடுத்த சில வாரங்களில் ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், அவர்களை மிகக் கடுமையாகத் தாக்க உள்ளதாகவும் ட்ரம்ப் எச்சரித்தார். இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஈரான் போர் முழுமையடைய உள்ளது என்றார். அதாவது வேலையை முடிக்கப் போகிறோம் என்றும் மிக அருகே இருக்கிறோம் எனவும் டிரம்ப் குறிப்...