இடுகைகள்

தமிழ்நாட்டில் வேலை தேடுவோரே

படம்
இல்லையா.? சென்னை மாநகர பேருந்துகளில் 1,797 நடத்துநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தனியார் ஏஜென்சியுடன் தவெக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு போக்குவரத்து தொழிற்சங்கங்களும், ஊழியர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விபரீத முடிவால், குறிப்பிட்ட அந்த உ.பி நிறுவனம் வடஇந்தியர்களை பணிக்கு எடுக்கும் அபாயம் உருவாகியுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய 4 மண்டல பணிமனைகளுக்கு தேவையான மனிதவளம் மற்றும் அடிப்படை ஊதிய கட்டமைப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. அடையாறு மண்டலத்தில், தினசரி 350 பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஒரு நபருக்கான அடிப்படை வீதம் ரூ.27,679 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (கூடுதலாக 18% ஜி.எஸ்.டி). குரோம்பேட்டை மண்டலத்தில் தினசரி 320 பணியாளர்கள் தேவை. அடிப்படை வீதம் ரூ.27,679 மற்றும் 18% ஜி.எஸ்.டி. வடபழனி மண்டலத்தில் தினசரி 295 பணியாளர்கள் தேவை. அடிப்படை வீதம் ரூ.27,679 மற்றும் 18% ஜி.எஸ்.டி. அயனாவரம் மண்டலத்தில் தினசரி 256 பணியாளர்கள் தேவை. அடிப்படை வீதம் ரூ.27,679 மற்றும் 18% ஜி.எஸ்.டி. இதன்மூலம் ஒரு பணியாளருக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை தொகைக்கு மேல்...

வன்முறை,ஊழல் களங்கம்

படம்
மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் விற்க முயன்ற மணிகண்டன் (26), தினேஷ் (29) இருவரும் சென்னையை அடுத்த நரசத்பேட்டையில் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். 3000 மாத்திரைகள் அவர்களிடம் பறிமுதல் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் தொகையை உயர்த்தி அறிவித்த முதலமைச்சரின் அறிவிப்பு விளம்பரத்துக்காக மட்டுமே செய்யப்பட்டது?- மருத்துவர் எழிலன் நாகநாதன் கேள்வி நீட் தேர்வில் இன்னமும் குறைபாடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி. ▪️சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு. அமித் ஷா தலைமையில்நடக்கும் மாநாட்டில் 6 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு ▪️உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் முதலமைச்சரான பிறகு முதல்முறையாக விஜய் சந்திப்பு. கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இருவரும் இரவு விருந்தில் பங்கேற்றனர் ▪️சென்னை, திருப்பூர், தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை. கொடைக்கானலில் தொடர்ந்து 6வது நாளாக பெய்த மழையால் குளு குளு சீசன் 📰 மதுரை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் கைது.மாணவிகள் மாவட்ட ஆட்சிய...

த.வெ.க,வில் R.S.S.

படம்
  RSS ஊடுருவல்.. சிபிஎம் M.P, பகிரங்க குற்றச்சாட்டு! முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் அதிகாரிகள் ஊடுருவியிருப்பதாக தவெக அரசுக்கு ஆதரவு தரும் சிபிஎம் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிர்வாக ஆணையரகத்தால் வட்டாட்சியர் பயிற்சிக்காக அனுப்பப்பட்ட ஐயாச்சாமி என்பவர் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டவுடன் ஒரு குறிப்பிட்ட 4 தினங்களில் மட்டும்தான் மக்கள் வட்டாட்சியரை சந்திக்க வேண்டும். பகல் 12 மணி முதல் பகல் 1 மணி வரைதான் மக்கள் சந்திக்க வேண்டும்; இதர நேரத்தில் வட்டாட்சியரை சந்திக்க அனுமதிக்க முடியாது என்று சொல்லி வரக்கூடிய மக்களை அச்சுறுத்தி வந்தார். இந்தச் சூழ்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய தலைவர்கள், வட்டாட்சியரிடம் சென்று சின்னராவுத்தன்பட்டியைச் சார்ந்த ஏழை அருந்ததிய மக்களுக்கு 2004-ல் கொடுக்கப்பட்ட அந்த பட்டா அடிப்படையில் அளந்து அவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்று அந்த கோரிக்கையை வைப்பதற்காக அவரிடம் சென்றபோது அரசியல் கட்சிகளைச் சார்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது என்று ...

யார் அந்த சூப்பர் பவர்? -

படம்
சுற்றறிக்கை சர்ச்சை  திமுக கேள்வி முதல்வர் விஜய்க்கே தெரியாமல் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகிறதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக, தமிழக அரசின் செயல்பாடுகளை 'துக்ளக் தர்பார்' என விமர்சித்துள்ளது. இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நேற்றைய தினம் அதிகார ஆணவத் திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர், முகவரி, ஆகியவற்றை வருவாய் ஆய்வாளர்கள் சேகரித்து வட்டாட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இன்றைய தினம் மாண‘வ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழக காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வெளிப்பட்ட நிலையில், சுற்றறிக்கைகளை திரும்பப் பெறுவதாக தவெக அரசு பின்வாங்கியுள்ளது. அப்படியெனில், சுற்றறிக்கைகளை வெளியிடும்...

சென்ற 100நாட்கள்......

படம்
📄 முதலமைச்சர் அலுவலக டெண்டர் இறுதியாகும் முன்பே பணிகளைத் தொடங்கிய விவகாரம். பதிலுரையிலும்  விளக்கம் அளிக்காததால் மேலும் வலுக்கும் சந்தேகம். 📄கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அதிகாரப்பூர்வ கண்டனம் தெரிவிக்காத தமிழ்நாடு அரசு. சட்டப்பேரவையில் கர்நாடகத்தின் versionயே அமைச்சர் எதிரொலித்ததாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம். 📄தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்தை முதலில் பாட எந்த தடையும் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை என்றும் உயர் நீதிமன்றம் விளக்கம். 📄சென்னை பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க ஒப்புதல். 15 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு ரயில்வே வாரியம் ஒப்புதல். 📄சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரியை இணைக்கும் வகையில் புதிய கடல்வழி உயர்மட்டச் சாலை. பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு. இந்தியாவின் கடனை அடைக்க அமைச்சர் கில்லி சரத் சொன்ன  யோசனை.நிர்மலா சீதாராமன் கவனிக்கவும். அதானியை எதிர்த்து செய்தியா .கைது! அதானி குழுமம் குறித்து ‘தி வாசிங்டன் போஸ்ட்’  செ...