இடுகைகள்

இந்தியரைக் கொன்ற இஸ்ரேல்!

படம்
  அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.  இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது.  தொடர்ந்து, அமெரிக்க நட்பு நாடுகளான பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் துபாயில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி (வயது 86) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.   மூன்றாவது நாளாக இந்த போர் நீடித்து வரும் நிலையில் ஈரானை பொறுத்தவரை போரை நிறுத்துவதில்லை என திட்டவட்டமாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்கவிற்கு கூடுதல் சேதங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக துல்லியமான தாக்குதலை ஈரான் கையில் எடுத்துள்ளது.  குவைத்தில் மூன்று அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்...

பழிவாங்கும் பா.ஜ.க, அரசியல்!

படம்
  சி .பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை தனது பழிவாங்கும் அரசியலுக்கு மட்டுமே பா.ஜ.க. பயன்படுத்தி வருவதை அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் வந்திருக்கும் தீர்ப்பு அம்பலப்படுத்தி இருக்கிறது. முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.  துணை முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இதைப் பரப்புரை செய்தே டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. ஆனால் இப்போது என்ன நடந்துள்ளது?  அனைவரையும் விடுதலை செய்து விட்டது சி.பி.ஐ. நீதிமன்றம். மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார் மணீஷ் சிசோடியா. இவர்கள் சிறையில் இருந்ததற்கு பரிகாரம் என்ன?  இவர்கள் மீது அவதூறு கிளப்பி, அவமானப்படுத்தியதை எப்படி சீர்படுத்த முடியும்? இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது பா.ஜ.க.. அவர்களுக்கு வேண்டியது எல்லாம், குறுகிய காலப் பலன்கள். அதற்காகத்தான் சி.பி.ஐ., அமலாக்கத்துறையை பயன்படுத்துவார்கள்.  நீதிமன்றத்தில் கொட்டு வாங்குவதைப் பற்றி ...

அழிவின் பிடியில்

படம்
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம். 3 ஆயிரத்து 412 மையங்களில் 8 லட்சத்து 27 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். அடுத்த முறையும் திமுக வரவேண்டும் என்பது ஆசை அல்ல, தேவை" முதலமைச்சரின் 73வது பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற கூட்டத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி 210 இடங்களில் வென்று அதிமுக ஆட்சியமைக்கும் என பழனிசாமி நம்பிக்கை. என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியே அமையும் என பிரதமர் மோடி திட்டவட்டமாகக் கூறியதால் தொடரும் குழப்பம். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி. வெயிலையும் பொருட்படுத்தாமல் திமுகவினர் நேரில் வந்து வாழ்த்தியதாக வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி. மோடி எத்தனை முறை தமிழ்நாடு வந்தாலும் பாஜக, அதிமுகவிற்கு இங்கு இடமில்லை என செல்வப்பெருந்தகை விமர்சனம். முருகனை வைத்து மதவாத அரசியல் செய்வதை தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என திருமாவளவன் சாடல். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மறுக்கப்படுவது வலியைத் தருவதாக முதலமைச்சர் ரங்கசாமி வேதனை. சட்டப்பேரவையில் 13 முறை தீர்மானம் நிறைவேற்றியதாகவ...

அரபு போர் பதற்றம்!

படம்
  " தமிழ்நாடு"அரசு உதவி தொடர்புக்கு், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் – இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனை சுற்றியுள்ள  ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.  இதன் காரணமாக அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை கருதி, தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், நான், தமிழ்நாடு முதலமைச்சராக, வளைகுடா நாடுகளில் வசித்து வரும் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்.  அங்குள்ள தமிழர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.  மேலும் புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது தமிழ்நாடு அரசு, அங்கு...

ஈரானுக்காக களமிறங்கும்

படம்
  வல்லரசுகள்?   அயதுல்லா கமேனி கொல்லப்பட்ட செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, உலக அரசியல் சதுரங்க ஆட்டத்தில் காய்கள் வேகமாக நகரத் தொடங்கிவிட்டன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த அதிரடித் தாக்குதலுக்கு 'பதிலடி' கொடுக்க ரஷ்யாவும் சீனாவும் தங்களது ரகசியத் திட்டங்களைத் தீட்டி வருகின்றன. இது வெறும் ஈரான் பிரச்சனை மட்டுமல்ல, ஆசியாவில் தங்களது ஆதிக்கத்தைத் தக்கவைப்பதற்கான வாழ்வா சாவா போராட்டம்! புதின் சும்மா இருப்பாரா? தாக்குதல் நடந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலை "ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீதான அப்பட்டமான ஆக்கிரமிப்பு" எனக் கடுமையாகக் கண்டித்துள்ளது. ஐநா பாதுகாப்பு சபையில் (UN Security Council) அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா ஏற்கனவே தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது.  உக்ரைன் போரில் ஈரானின் ட்ரோன்கள் ரஷ்யாவுக்குப் பெரிய அளவில் உதவின. அதற்குப் பிரதிபலனாக, இப்போது ஈரானின் பாதுகாப்புக்குத் தேவையான அதிநவீன S-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை ரஷ்யா ரகசியமாக அனுப்பக்கூடும் என உளவுத் துறைகள் அஞ்சுகின்றன. ஈரானின் அணுசக்தி ம...

அமெரிக்கா - இஸ்ரேல் யுத்தவெறி;

படம்
ஈரானில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில், தொடக்கப் பள்ளி மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. எவுகணை தாக்குதலில் 40 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு. எந்த சாதியினருக்கு கல்வி இல்லை என்றார்களோ, அந்த சாதியில் பிறந்த நான் உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ளேன்.-மேடையில் கண்கலங்கி பேசிய அமைச்சர் கோவி செழியன். ஆயத்துல்லா அலி கமேனியின் மரணத்தை அறிவித்தது ஈரானிய அரசு ஊடகம்.ஈரானில் 40 நாட்கள் பொது துக்கம் அனுசரிக்கப்படுகிறது7 நாட்கள் பொது விடுமுறையையும் அறிவிப்பு. உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலை ஒரு மாபெரும் குற்றம்; இதற்கு பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என ஈரான் அதிபர் மாளிகை சூளுரை. பழிவாங்கும் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என ஈரான் ராணுவமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாட்டில் 2 (இரண்டு) சட்டமன்றத் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, தமிழ்நாட்டில் 2(இரண்டு) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டத...