இடுகைகள்

தாய்மாமன் சீர்.....

படம்
தாய்மாமன் சீர் தடியடி? . டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என த.வெ.க.வினர் பொய் பட்டியலை வெளியிட்டாலும் பல கடைகள் மூடாமல் இருப்பதை பொதுமக்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர். ; இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களின் மேல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது பொய்யர்களின. விஜயின் அரசு. நான் ரீல் தாய்மாமன் அல்ல ரியல் தாய்மாமன் என பேசிய முதலமைச்சர் விஜய்க்கு பள்ளி மாணவ, மாணவிகளை விட மதுக்கடைகள் தான் முக்கியமா? முதலமைச்சர் வெறும் வாயில் வடை சுடாமல், அராஜக ஆட்சி நடத்தாமல் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்! குதிரை பேரத்துக்கு மறைமுக குட்டு தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியானதாக உள்ளது. முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு மற்றும் அதிமுக எம்எல்ஏக்களாக தேர்வு பெற்ற 6 பேர் ராஜினாமா செய்த தொகுதிகள் இதில் அடங்கும். காலியான தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்தவகையில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்ப...

தவெக குட்கா அருண்.!

படம்
"நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று." நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும். 📃 சிவகங்கையில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 3 கிலோ போதைப் பொருள் சிக்கியது. மலேசியாவுக்கு கடத்த முயன்ற 4 பேரைக் கைது செய்து விசாரணை. 📃 தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடைபெறுவதாக ஆளுநரைச் சந்தித்து மீண்டும் புகார் அளிக்க திமுக திட்டம். எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியை குறிப்பிட்டு புகார். 📃 திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்குக் கோபம் வந்தால் தவெக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு. 📃 கர்நாடகா அரசின் அரசு மரியாதையோடு பழம்பெரும் பாடகி ஜானகி உடல் தகனம். 30 குண்டுகள் முழங்க பண்ணைத் தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது.   எழுத்தாளர் பூமணி காலமானார்.* சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளரும், கரிசல் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையுமான பூமணி காலமானார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் 1947 மே 12ஆம் தேதி பிறந்த பூமணியின் இயற்பெயர் பூ...

எண்ணித் துணிக கர்மம்

படம்
  பிர­த­மர் மோடியி டம் பத்­தி­ரிகை சுதந்­தி­ரம் குறித்து கேள்வி எழுப்­பிய நார்வே பெண் பத்­தி­ரி­கை­யா­ள­ரின் சமூ­க­வ­லை­தள பதி­வு­கள் இந்­தி­யா­வில் பெரும் விவா­தத்தை ஏற்ப டுத்­தி­யுள்­ளன. கடந்த மே மாதத்­தில் நார்வே நாட்­டின் ஒஸ்லோ நக­ரில் நடந்த இந்­தி­யா–­நார்வே உச்சி மாநாட்­டின் போது, அங்கு வருகை தந்த இந்­திய பிர­த­மர் மோடியிடம் நார்வே நாட்­டைச் சேர்ந்த பெண் பத்­தி­ரி­கை­யா­ளர் ஹெல் லிங் ஸ்வென் சன் பத்­தி­ரிகை சுதந்­தி­ரம் மற்­றும் மனித உரி­மை­கள் குறித்து கேள்வி எழுப்பினார்.  உல­கி­லேயே மிக உயர்ந்த பத்­தி­ரிகை சுதந்­தி­ரம் கொண்ட நார்வே நாட்­டின் பத்­தி­ரி­கையா ளர்­க­ளின் கேள்­வி­க­ளுக்கு ஏன் பதி­ல­ளிக்க மறுக்­கி­றீர்­கள் என்று அவர் கேட்­டார்.  உலக பத்­தி­ரிகை சுதந்­திர குறி­யீட்­டில் 180 நாடு­க­ளில் நார்வே 1வது இடத்­தி­லும், இந்­தியா 157வது இடத்திலும் உள்­ளதை சுட்­டிக்காட்டி அவர் கேட்ட இந்த கேள்­வியை பிர­த­மர் மோடி புறக்­க­ணித்­து ­விட்டு அங் கிருந்து சென்­றார்.  அதே நாளில் ஒன்­றிய வெளி­யு­றவு அமைச்­ச­கம் பிற பத்­தி­ரிகையாளர்­க­ளு­டன் இவ­ரை­யும் அழைத்து இந்­தி­யா­...

"சுரன்"

படம்
ஆளுநர் ஆட்சியா? தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிப்பதில் ஆளுநரின் தலையீடு கூடாது என கண்டனம் தெரிவித்து தி.க தலைவர், ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை! கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 10 பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிக்கும் பணி, அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவியின் தலையீட்டாலும், துணைவேந்தர் தேடுதல் குழுவில், விதிகளுக்குப் புறம்பாக யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினர் ஒருவரும் இடம்பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாலும் தடைப்பட்டிருந்தது.சட்டத் திருத்த மசோதாக்களை அன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்தார்! அதை எதிர்த்தும், அப்போது யு.ஜி.சி. கொண்டு வந்த புதிய விதியை எதிர்த்தும் ‘திராவிட மாடல்’ தி.மு.க. அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதே வேளையில், துணைவேந்தர் நியமனத்தைத் தமிழ்நாடு அரசே (முதலமைச்சரே) மேற்கொள்ளும் வகையில் கொண்டுவந்திருந்த 10 சட்டத் திருத்த மசோதாக்களை அன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத...

உலக மக்கள் தொகை சவால்!

படம்
  உலகெங்கும் வாழும் மக்களின் உரிமைகள், சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ‘உலகமக்கள் தொகை தினம்' உலகளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை சுமார் ‘830 கோடியை’ கடந்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலக மக்கள் தொகைப் பெருக்கத்தின் திசையைத் தீர்மானிக்கும் 8 முக்கிய நாடுகள் எவை என்ற விவாதம் தற்போது முன்னெழுந்துள்ளது. கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை 500 கோடியைத் தொட்டது. இந்த மைல்கல் உலக நாடுகளிடையே பெரும் விழிப்புணர்வையும் பொதுமக்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. இந்த வரலாற்று முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது ‘1989’ ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் ஆளும் குழு இந்தத் தினத்தை ஆண்டுதோறும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நிரந்தர நாளாக அறிவித்தது.  அதன்படி, 1990 ஜூலை 11 முதல் உலக மக்கள் . தினம் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக மக்கள் தொகை கொண்ட 8 நாடுகள்   ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சம...

குதிரை பேரத்துக்கு சாட்சி!

படம்
  குதிரை பேரம், கழுதை பேரம், நரி பேரம் அனைத்தையும் நடத்தி வருகிறவர்கள், அதே போன்ற பழியை மற்றவர்கள் மீது போடுவதற்காக, எப்படி எல்லாம் பிராடு தனங்களைச் செய்கிறார்கள் என்பதற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கே சாட்சி ஆகும்.  தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள எந்த அளவுக்கு கீழான செயலையும் விஜய் செய்வார் என்பதற்கு இது சாட்சி. பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வரும் போது கொறடா உத்தரவை மீறி தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமாம்.  இப்படி ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ.வான இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தினார்களாம் திருநாவுக்கரசு. அவருடன் சேர்ந்து சிலரைக் கைது செய்துள்ளார்கள். இந்த திருநாவுக்கரசுவை பேசச் சொன்னாராம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. அவரது தம்பி அசோக்குமாரையும் இத்துடன் சேர்த்துள்ளார்கள்.  இது பற்றி விசாரிக்க செந்தில்பாலாஜியையும் அசோக்குமாரையும் வரவழைத்து மிரட்ட நினைக்கிறது விஜய் போலீஸ். பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஊத்தங்கரை இளையராஜா ஆதரித்து வாக்களித்தால் என்ன ஆகும்?  இளையராஜாவுக்கு எம்.எல்.ஏ. பதவி...