பாஜக வை விடமிரள்கிறது?
🔹 காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு. வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதம் 15 நாட்கள் நீர் திறக்க கர்நாடகா அரசுக்கு ஆணை. 🔹தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க முடியாது என டி.கே.சிவக்குமார் மீண்டும் திட்டவட்டம். வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிப்பு. 🔹மேகதாது விவகாரத்தில் தவெக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. தவெக அரசை கண்டித்து வரும் 3-ம் தேதி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு. 🔹தண்ணீர் இல்லாமல், காவிரியின் கடைமடையான திருமருகல் ஒன்றியத்தில் கருகும் நெற்பயிர்கள். வயல், பாலம் பாலமாக வெடித்து குறுவை பொய்த்து போனதால் விவசாயிகள் வேதனை. 🔹யாருடைய அழுத்தத்துக்குப் பணிந்து திராவிட கழக பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது என மு.க.ஸ்டாலின் கேள்வி. சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் காவி என்பது உண்மையாகிவிட்டது என்றும் தவெக குறித்து விமர்சனம். 🔹எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே வந்தே மாதரம் மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம். இந்தியாவின் பிரிவினைக்கு காரணமான பாடல் வந்தே மாத...