மக்களாட்சியை கேலிக் கூத்தாக்கும்
மக்களாட்சியை கேலிக் கூத்தாக்கும் மக்கள் விரோதிகள்..! தமிழகத்தில் மே 10ம் தேதி புதிய அரசு பொறுப்பேற்ற, 5 மாதத்தில் தாராபுரம், மதுராந்தம் ெதாகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா மூலம் ஒரு தொகுதியை ஏற்கனவே இழந்துள்ள தவெக அரசுக்கு, காங்., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்ததன்மூலம் அரசுக்கு பெரும்பான்மை கிடைத்தது. இந்த சூழலில் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு அதிமுகவில் ஒரு பிரிவினர் தவெக ஆதரவு நிலை எடுத்தனர். இதில் அதிமுக எம்எல்ஏக்களான மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதையடுத்து முதல்வர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு உட்பட 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த பரபரப்பான சூழலில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் திருச்சி கிழ...