இடுகைகள்

இத்தாலி காதல் முதல்,.,

படம்
  '" இத்தாலிய கிராமத்து காதல் முதல் ஸ்ரீபெரும்புதூர் கண்ணீர் வரை'  சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம் 60 ஆண்டு கால இந்திய வாழ்க்கையின் வலிகளை முதன்முறையாக புத்தகமாக எழுதியுள்ளார் சோனியா காந்தி. இந்திய அரசியலின் மிக சக்தி வாய்ந்த, அதே நேரத்தில் எப்போதும் ஒரு புதிரான ஆளுமையாகவே பார்க்கப்படுபவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி (79) தனது சுயசரிதையை எழுதியுள்ளார். 544 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம், அமெரிக்காவின் புகழ் பெற்ற பதிப்பகமான ‘ஆல்ஃபிரட் ஏ நாஃப்’ மூலம் வரும் நவம்பர் 10 அன்று உலகளவில் வெளியாகிறது. அன்றைய தினம் அச்சுப் புத்தகம் மற்றும் மின்புத்தக வடிவில் வெளியிடப்படும். இதன் ஒலிப்பதிப்பு பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தால் வெளியிடப்படும். முதற்கட்டமாக 1,00,000 பிரதிகள் அச்சிடப்படும் என பதிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சில பகுதிகள் தற்போது வெளியாகி சர்வதேச மற்றும் இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுயசரிதை புத்தகம், 1965-ல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 19 வயது மாணவியாக இருந்த சோனியா...

இதுதான் (ஏ)மாற்றமா.?

படம்
தமிழ்நாட்டில் சென்னை புறநகர், கடலூர், சீர்காழி உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை. அடுத்த 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல். ▪️ தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஒரே வாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட முதலமைச்சர் விஜய். 543 என்ற எம்.பி.க்களின் எண்ணிக்கையே நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டதால் அதிர்ச்சி ▪️ தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் ’எட்டப்பர்கள்’  என ராகுல்காந்தி கூறியது விஜயைதானா என திமுக கேள்வி. கூட்டணியில் இருப்பவர்கள், தவெகவின் இரட்டை வேட நாடகத்தை கேள்வி கேட்பார்களா? இல்லை இதற்கும் முட்டுக்கொடுப்பார்களா எனவும் காட்டம். ▪️ சட்டப்பேரவையில் ஒரு நிலைப்பாடு, அமித்ஷா முன் ஒரு நிலைப்பாடு என இருக்கக்கூடாது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் விஜயின் செயல்பாடு குறித்து பிரேமலதா விமர்சனம். ▪️ இடதுசாரி கட்சிகள், மாணவர் அமைப்புகளுக்கு எதிரான சுற்றறிக்கைகளுக்கு கம்ப்யூனிஸ்ட்கள் கடும் கண்டனம். அதிகாரிகள் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளனரா என்றும் கேள்வி. ▪️ பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல். தமிழ்நாடு ம...

தமிழ்நாட்டில் வேலை தேடுவோரே

படம்
இல்லையா.? சென்னை மாநகர பேருந்துகளில் 1,797 நடத்துநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தனியார் ஏஜென்சியுடன் தவெக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு போக்குவரத்து தொழிற்சங்கங்களும், ஊழியர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விபரீத முடிவால், குறிப்பிட்ட அந்த உ.பி நிறுவனம் வடஇந்தியர்களை பணிக்கு எடுக்கும் அபாயம் உருவாகியுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய 4 மண்டல பணிமனைகளுக்கு தேவையான மனிதவளம் மற்றும் அடிப்படை ஊதிய கட்டமைப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. அடையாறு மண்டலத்தில், தினசரி 350 பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஒரு நபருக்கான அடிப்படை வீதம் ரூ.27,679 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (கூடுதலாக 18% ஜி.எஸ்.டி). குரோம்பேட்டை மண்டலத்தில் தினசரி 320 பணியாளர்கள் தேவை. அடிப்படை வீதம் ரூ.27,679 மற்றும் 18% ஜி.எஸ்.டி. வடபழனி மண்டலத்தில் தினசரி 295 பணியாளர்கள் தேவை. அடிப்படை வீதம் ரூ.27,679 மற்றும் 18% ஜி.எஸ்.டி. அயனாவரம் மண்டலத்தில் தினசரி 256 பணியாளர்கள் தேவை. அடிப்படை வீதம் ரூ.27,679 மற்றும் 18% ஜி.எஸ்.டி. இதன்மூலம் ஒரு பணியாளருக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை தொகைக்கு மேல்...

வன்முறை,ஊழல் களங்கம்

படம்
மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் விற்க முயன்ற மணிகண்டன் (26), தினேஷ் (29) இருவரும் சென்னையை அடுத்த நரசத்பேட்டையில் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். 3000 மாத்திரைகள் அவர்களிடம் பறிமுதல் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் தொகையை உயர்த்தி அறிவித்த முதலமைச்சரின் அறிவிப்பு விளம்பரத்துக்காக மட்டுமே செய்யப்பட்டது?- மருத்துவர் எழிலன் நாகநாதன் கேள்வி நீட் தேர்வில் இன்னமும் குறைபாடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி. ▪️சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு. அமித் ஷா தலைமையில்நடக்கும் மாநாட்டில் 6 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு ▪️உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் முதலமைச்சரான பிறகு முதல்முறையாக விஜய் சந்திப்பு. கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இருவரும் இரவு விருந்தில் பங்கேற்றனர் ▪️சென்னை, திருப்பூர், தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை. கொடைக்கானலில் தொடர்ந்து 6வது நாளாக பெய்த மழையால் குளு குளு சீசன் 📰 மதுரை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் கைது.மாணவிகள் மாவட்ட ஆட்சிய...