இடுகைகள்

பசுமை இந்தியா

படம்
    அம்பலமான ஊழல் நாட்டின் காடுகளைப் பாதுகாக்கவும், வளப்படுத்தவும் உருவாக்கப்பட்ட ‘பசுமை இந்தியா இயக்கத்தின்’ (Green India Mission) செயல்பாடுகளில் மிகப்பெரும் குறைபாடுகளும் முறைகேடுகளும் நடந்துள்ளதாகத் தலைமை கணக்குத் தணிக்கையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிய பாஜக அரசின்வெற்று விளம்பரப் பூச்சுகளை அம்பலப்படுத்தியுள்ளது.  தேசிய காலநிலைமாற்றக் கொள்கைத் திட்டத்தின் கீழ் உள்ள எட்டு முக்கிய திட்டங்களில் ஒன்றான இதில், நிதி ஒதுக்கீடு குறைவு, திட்டங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின்மை மற்றும் பலவீனமான கண்காணிப்பு ஆகியவை காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இலக்குகளை அடைவதில் இமாலயத் தோல்வி அடைந்துள்ளதை சிஏஜி அறிக்கை திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது. வனப்பகுதிகளின் தரத்தை மேம்படுத்துவதற் காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 91.87 சதவீதமும், புதிய காடுகளை உருவாக்குவதில் 97.57 சதவீதமும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதாவது 1.4 மில்லியன் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தில், வெறும்0.11 மில்லியன் ஹெக்டேர் மட்டுமே தரமுயர்த்தப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டிலும் முறைகேடுகள் நடந்துள்ளதுடன், எட்டு ...

கோடிகளில் பொய்.

படம்
  கோவை கல்லூரி மாணவர் கொலை.மாணவனை கொலையாளிகளுக்கு காட்டிக்கொடுத்தகாவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல். கர்நாடகாவில்3தமிழர்கள்சுட்டுக்கொலை.கொலைசெய்த  வனத்துறையினர் மீது கொலை வழக்கு. காஞ்சிபுரம் அருகே கோயில் திருவிழாவில் போதையால் நடந்த இரட்டைக் கொலை. இந்தியாவில் ரப்பர் விலை புதிய வரலாற்று உச்சம்.கிலோ ரூ.275 ஆக உயர்வு. பெங்களூர் - சென்னை ரயிலில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடி தங்க நகை பறிமுதல். வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு பயணியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்து 2 ஊழியர்கள் படுகாயம். திருவொற்றியூர் மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆறுதல் சொல்ல வந்த அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் பொதிமக்களால் முற்றுகை.விரட்டியடிப்பு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி  திமுக,அரசு தொடர்ந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை. கோடி க் கணக்கானபொய்யில் புரளும்  அரசு! ‘‘இரண்டு மாத காலத்தில் அரசின் கருவூலத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடியைக் கொண்டு வந்துவிட்டோம்’’ என்று மார்தட்டிச் சொன்னார் நிதி அமைச்சர் மரிய வில்சன். ‘‘15 ஆயி...

ஆட்சியில் சர்கஸ் கும்பல் -

படம்
  ஆட்சியில் சர்கஸ் கும்பல் - உதயநிதி சென்னையில் திமுகவில் தலைமை நிலையமான அறிவாலயத்தில், அக்கட்சியின் வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, “திமுக சட்டத்துறை போராடி பெற்றுக்கொடுத்த அனைத்தும் முக்கியமானவை. தேர்தல் காலங்களில் வார் ரூம் அமைத்து சட்டத்துறை செய்த பணிகள் யாராலும் செய்ய முடியாது. தமிழ்நாடே எதிர்பார்க்காத ஒரு தேர்தல் முடிவு இன்று வந்துள்ளது. சர்க்கஸ் கும்பல் கும்பல் ஆட்சிக்கு வந்ததை அடுத்து சட்டத்துறையின் பணி அவசியமானதாக தேவைப்படுகிறது. மோசமான பாசிச அரசாக தவெக அரசு செயல்படுகிறது. தூங்கி எழுந்திருத்தால் யாரை கைது செய்யலாம் என்று இந்த அரசு செயல்படு வருகிறது. இரண்டு வாரத்திற்கு முன் இந்த அரசு என்னையும் கைது செய்ய முயற்சித்தது. காலை 8 மணிக்கு என் வீட்டில் பேப்பர் படித்து கொண்டிருக்கும்போது காவல்துறை என் வீட்டுக்கு வந்தனர்.  டம்மி முதல்வர், வெட்கங்கெட்ட, கேடு கெட்ட அரசு என விவசாயிகள் கூட்டத்தில் பேசியதற்காக கைது செய்ய வந்துள்ளனர் என்று நினைத்தேன். ஆனால் காவிரியில் தண்ணீர் வரவேண்டும் என்று பேசியதற்காக கைது செ...

சட்டத்தின் பரிதாப நிலை?

படம்
  உலகில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் ஏழு முன்னணி நாடுகள்...! .1.இந்தோனேசியா : உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியா முதல் இடத்தில் உள்ளது. இந்நாட்டில் சுமார் 240 மில்லியன் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.    2.பாகிஸ்தான் : உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நாட்டில் சுமார் 230 மில்லியன் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 3.இந்தியா: உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் சுமார் 210 மில்லியன் இலாமிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.    4.வங்கதேசம் : உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் வங்கதேசம் 4வது இடத்தில் உள்ளது. இந்நாட்டில் சுமார் 150 மில்லியன் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.    5.நைஜீரியா: உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் நைஜீரியா 5வது இடத்தில் உள்ளது. இந்நாட்டில் சுமார் 100 மில்லியனுக்கு மேல் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறத...

கொடூர ஆட்சிக்கு

படம்
கோவை மட்டுமல்ல சாட்சி! போதைப் பொருள் வைத்திருப்பது யார் என்று சொல்கிறான் அந்த மாணவன். இதைத் தெரிந்துகொண்ட போதைப் பொருள் கும்பல் அந்த மாணவனையே கொடூரமாக அடித்தே கொல்கிறது.  ‘இது மாணவர்களுக்குள் நடந்த கோஷ்டி மோதல்’ என்று சட்டமன்றத்திலேயே மறைக்கிறார் அமைச்சர். இது கொடூரமான ஆட்சி என்பதற்குக் கோவையே சாட்சியாக அமைந்துள்ளது. போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்கப் போவதாகச் சொன்னார் முதலமைச்சர் விஜய். அவர் செல்பி எடுப்பதற்கும் ரீல்ஸ் போடுவதற்கும்தான் அரசு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.  ‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநிலக் கல்லூரியில் நடத்தியது த.வெ.க. அரசு. அதில் போதை மற்றும் புகையிலை இல்லாத வளாகம்’ என்ற விழிப்புணர்வுப் பரப்புரையைத் தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் விஜய்.  பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் அழிப்பு நடவடிக்கையை காணொலி மூலமாகப் பார்வையிட்டார். போதைப் பொருளை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்குப் பதக்கங்களை வழங்கினார்.  மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க வைக்கப்பட்டார்கள். போதைப் பொருட்களை முழுமை...