இடுகைகள்

இந்தியாவுக்கு முன்னுதாரணம்

படம்
  இந்தியாவுக்கு முன்னுதாரணம் - சிறந்த மாநிலம்' விருது வென்ற தமிழ்நாடு உடல் உறுப்பு தானத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, 2025'ம் ஆண்டு தமிழ்நாடு நாட்டிலேயே முதன்மை மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு 'சிறந்த மாநிலம்' என்ற தேசிய விருதைப் பெற்றுள்ளது.  டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற விழாவில், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல், பாராட்டினார்.  உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை ஒருங்கிணைப்பு மற்றும் உயிர்களை காப்பாற்றும் மருத்துவச் சேவைகளை திறம்பட செயல்படுத்தியதற்காக தமிழ்நாட்டுக்கு இந்த உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விருது, உறுப்பு தானத் துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னோடி மாநிலமாக திகழ்வதை மீண்டும் உறுதிப்படுத்துவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்குக - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் அதிமுகபொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்ட...

மாலையும்-லத்தியும்!

படம்
🔹 கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறப்பு. இன்று மாலைக்குள் தமிழ்நாடு எல்லைக்கு தண்ணீர் வந்துசேரும் என எதிர்பார்ப்பு. 🔹காவிரி நீரை பெற்றுத் தராத தவெக அரசுக்கு கண்டனம். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூரில் திமுக-வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம். 🔹காவிரி நீரை திறந்து விடக்கோரி உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது தமிழ்நாடு அரசு. இன்று மனுத்தாக்கல் செய்யப்படும் எனத்  தகவல். 🔹டெல்லிக்கு போராட சென்ற தமிழ்நாடு விவசாயிகளை தடுத்து நிறுத்தி நாக்பூரில் கைது செய்த மகாராஷ்டிரா போலீசார். தமிழ்நாட்டிற்கு வரும் ரயிலில் மீண்டும் ஏற்றிவிட்டதால் பரபரப்பு. 🔹ஸ்காட்லாந்தில் நடைபெற்று வந்த 23வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு. 13 தங்கம் உள்பட 39 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் இந்தியா. கொள்கைத்தலைவர்( ? ) பெரியார் படத்துக்கு மாலை – பெரியார் திடலுக்கு போலீஸ்! தனது கொள்கைத் தலைவராக தந்தை பெரியாரை அறிவித்துள்ள முதலமைச்சர் விஜய், பெரியார் திடலுக்கு முன்னால் போலீஸைக் குவித்துள்ளார்.  அவரால் அறிவிக்கப்பட்ட கொள்கைத் தலைவரான பெரியாரைப் பற்றி அவ...

கொளத்தூர் மோசடி...

படம்
  விரி பிரச்சினைக்காக மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை; சட்டமன்றத்தில் ஏற்கனவே விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக த.வெ.கட்சி அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களவைத் தொகுதி மறுவரையறை குறித்து தேசிய அரசியலில் விவாதம் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படலாம் என்று எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன. ஆகஸ்ட் 5 அன்று த.வெ.க அரசின் முதல்  பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பதும் அரசியல் வட்டாரங்களில் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. தமிழ்நாடு–கர்நாடகா இடையிலான காவிரி பேச்சுவார்த்தைக்காக திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கர்நாடகாவில் கபினி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற மாநில அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ள...

நீயா?நானா??

படம்
  பூமியில் விழும் டன் கணக்கான விண்வெளிக் குப்பைகள்..! விஞ்ஞானிகள் தகவல்  சிவகாசி அருகே 3 வயது பெண் குழந்தை அடித்து கொலை கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பாவில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு: சபரிமலை செல்லும் பக்தர்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தல் பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க அனுமதி இல்லை பெரு நாட்டில்  நாஸ்கா அருகே சுற்றுலா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழப்பு  திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பார்சல் லாரியில் இருந்து ரூ. 1 கோடி ரொக்கம் பறிமுதல் கூடலூர் அருகே உள்ள படன்தோறை குடியிருப்பு பகுதிகளில் உலாவும் காட்டு யானைகளை விரட்ட வரவழைக்கப்பட்டது கும்கி யானைகள். காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல். காவிரி பிரச்னைக்காக உச்சநீதிமன்றத்தில் அரசு நாளை வழக்கு; அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டிய தேவையில்லை.த.வெ.க,அமைச்சர் அறிக்கை. காவிரி நீரை உடனடியாக தமிழ...

வாக்குறுதிகள் என்னவாச்சு?"

படம்
'காவிரி விவகாரம் '  உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க அவசர மனு காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.  செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்க தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.  மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதன்பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதன் அவசியம் என்ன என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்  தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதிக் கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இப்பணியில் 19,000 அதிகாரிகளின் மேற்பார்வையில் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர்.  அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, 33 கேள்விகளைக் கொண்ட படிவ...