இடுகைகள்

பாஜக வை விடமிரள்கிறது?

படம்
🔹 காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு. வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதம் 15 நாட்கள் நீர் திறக்க கர்நாடகா அரசுக்கு ஆணை. 🔹தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க முடியாது என டி.கே.சிவக்குமார் மீண்டும் திட்டவட்டம். வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிப்பு. 🔹மேகதாது விவகாரத்தில் தவெக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. தவெக அரசை கண்டித்து வரும் 3-ம் தேதி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு. 🔹தண்ணீர் இல்லாமல், காவிரியின் கடைமடையான திருமருகல் ஒன்றியத்தில் கருகும் நெற்பயிர்கள். வயல், பாலம் பாலமாக வெடித்து குறுவை பொய்த்து போனதால் விவசாயிகள் வேதனை. 🔹யாருடைய அழுத்தத்துக்குப் பணிந்து திராவிட கழக பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது என மு.க.ஸ்டாலின் கேள்வி. சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் காவி என்பது உண்மையாகிவிட்டது என்றும் தவெக குறித்து விமர்சனம். 🔹எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே வந்தே மாதரம் மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம். இந்தியாவின் பிரிவினைக்கு காரணமான பாடல் வந்தே மாத...

கர்நாடகாவை உலுக்கும் எய்ட்ஸ்

படம்
🔹 தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகம் மீண்டும் திட்டவட்டம். காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அறிவிப்பு. 🔹அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க புகார் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் இன்று விசாரணை. பதவி விலகிய 4 சட்டமன்ற உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்துகிறார் சபாநாயகர்.எத்தனை விசாரணை? 🔹மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக அன்புமணி குற்றச்சாட்டு. காங்கிரஸ் தனித்து நின்று கவுன்சிலராக கூட வெற்றி பெற முடியாது என்றும் விமர்சனம். 🔹கரூர் நெரிசலில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கிய ஆணையை ரத்து செய்த விவகாரம். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு. 🔹151 உயர்சிறப்பு மருத்துவ இடங்களைக் கைவிட்ட தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம். அரசின் மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகாதது ஏன் என்றும் கேள்வி. 🔹பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது. வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம். கர்நாடகாவை உலுக...

இந்தியா’ கூட்டணியே

படம்
“ தி.மு.க இல்லாமல் ‘இந்தியா’ கூட்டணியே இல்லை” - - ஆளூர் ஷாநவாஸ் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அமைதி காத்து வந்த வி.சி.க முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், தி.மு.க இல்லாமல் இந்தியா கூட்டணி இல்லை என்றும், தமிழ்நாட்டில் இருந்த அளவுக்கு இக்கூட்டணி வேறெங்கும் உறுதியாக இருக்கவில்லை என்றும் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்துப் பேசிய ஆளூர் ஷாநவாஸ், தமிழ்நாட்டில் இருந்த அளவுக்கு 'இந்தியா' கூட்டணி வேறெந்த மாநிலத்திலும் உறுதியாக இருந்ததில்லை என்றும், தி.மு.க இல்லாமல் இந்தியா கூட்டணியே கிடையாது என்றும் திட்டவட்டமாகக் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வி.சி.க சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்காத நிலையில்,  அமைதி காத்து வந்த அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் மௌனம் கலைத்திருக்கிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் வி.சி.க முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், தான் எப்படி விடுதலை சிறுத்தை கட்சிக்குள் வந்தேன் என்பதையும் தனக்கு எப்படி முதலிலேயே துணைப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது என்பதையும் கூற...
படம்
🔹 திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களை இன்று சரிபார்க்கிறது தேர்தல் ஆணையம். திமுகவும் தமிழ்நாடும் தான் நீட் தேர்வுக்கு எதிராக முதல் குரலை எழுப்பியது -மக்களவையில் தயாநிதி மாறன். 🔹மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல். ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதில் ஏமாற்றம் அளிப்பதாகவும் கருத்து. 🔹நெல்லை பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டதால் அதிர்ச்சி. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனிச் சட்டம் இயற்ற அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல். 🔹பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு. 20 பேர் பலி, 50-க்கும் மேற்பட்டோர் காயம்.

காவிரி நீர்!

படம்
  உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.  இதற்காக மாதம் ஒருமுறை கூட்டங்கள் நடத்தப்பட்டு, நீர் இருப்பு மற்றும் மழைப்பொழிவு நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், மேட்டூர் மற்றும் கர்நாடக அணைகளின் தற்போதைய நீர் இருப்பு, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் உள்ளது.  ஜூன் மாதத்தில் கர்நாடக அணைகளுக்கு எந்தவித நீர்வரத்தும் இல்லை. ஜூலை மாதத்தில் போதிய மழை இல்லாததால்...