மூன்று மாத்ததிலே வாங்கியக் கடன்.!
தமிழக அரசின் நிதி நிலைமை மற்றும் கடன் சுமை குறித்த புதிய அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே தமிழக அரசு வாங்கியுள்ள கடன்களும், அதற்காகச் செலுத்தியுள்ள வட்டித் தொகையும் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் மொத்தக் கடன் சுமை சுமார் 10 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ள நிலையில், தற்போதைய புதிய புள்ளிவிவரங்கள் மாநிலத்தின் நிதி நெருக்கடியை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் மூன்று மாதங்களில் மட்டும், பல்வேறு மூலதன திட்டங்களுக்காகத் தமிழக அரசு இருபதாயிரத்து எண்ணூற்று எண்பத்தொன்று (20,881) கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. அதுவும் தேர்தல் நடை முறை ஏப்ரலில் அமுலுக்கு வந்து தேர்தலுக்குப்பின் த.வெ.க. ஆட்சி மே-10'ல் அமைந்த பின் அரசு வாங்கியது மாநிலத்தின் உள்கட்டமைப்புப் பணிகளான சாலை அமைத்தல் மற்றும் பாலங்கள் கட்டுதல் போன்ற தேவைகளுக்காக இந்தக் கடன்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு சொந்த வ...