இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

லட்சத்( தீவி) ல் ஒருவன்

படம்
தென் மாநிலமான கேரளாவில் இருந்து லட்சத்தீவு 524 கி.மீ தூரத்தில் அரபிக் கடல் பகுதியில் உள்ளது. இந்த் தீவுக்கு செல்ல கடல் மற்றும் விமான போக்குவரத்தையே சார்ந்திருக்க வேண்டும்.  இங்கு பெரும்பாலானவர்கள் மலையாளம், ஆங்கிலம், ஜெசேரி, திவேஹி ஆகிய மொழிகளை பேசுகிறார்கள். 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி இங்கு 64 ஆயிரத்து 473 பேர் வாழ்கிறார்கள். இந்த தீவின் மொத்த பரப்பரளவு 32.63 கி.மீ சதுர மீட்டர். மக்கள்தொகையில் பெரும்பகுதியினர்(75%) முஸ்லிம்கள்.  இவர்கள் உணவுக்காக மாட்டிறைச்சியை பயன்படுத்தும் வேளையில், மத்திய அரசின் பிரதிநிதியாக பிரஃபுல் கோடா வந்த பிறகு அவர் எடுக்கும் நடவடிக்கைகள் ஆர்.எஸ்எஸ், பாரதிய ஜனதா கட்சி சார்பானவையாக உள்ளன. இந்த நிலையில், சமீபத்தில் சீர்திருத்தம் என்ற பெயரில் அவர் அறிவித்துள்ள திட்டங்கள் உள்ளூர் மக்களை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.  இதனால், கடந்த இரண்டு தினங்களாக அங்கு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இது பற்றிய தகவல் இணையத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக பகிரப்பட்டது. இதன் பிறகு #SaveLakshadweep என்ற பெயரில் லட்சத்தீவை காப்பாற்றுங்கள் என்கிற ஹேஷ்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

படம்
  கொரோனாவிலிருந்து   மீண்ட சிலருக்கு அடுத்த பாதிப்பாக வந்து வதைக்கிறது Mucormycosis எனப்படும் கறுப்புப்பூஞ்சை நோய். இப்போது கொரோனாவைவிட அதிக அச்சத்துடன் இதுபற்றி விவாதிக்கிறார்கள். கண்களை பாதிப்பதுடன், மரணத்தையும் ஏற்படுத்துகிறது என்பதுதான் பயத்துக்குக் காரணம். வட மாநிலங்களில் சிலர் கறுப்புப் பூஞ்சையால் இறந்திருக்கிறார்கள். தமிழகத்தில் தூத்துக்குடியில் ஒருவர் இறந்ததாகச் செய்தி வெளியானாலும், அதை அரசு மறுத்திருக்கிறது. இதைக் கொள்ளை நோயாக அறிவித்தது மத்திய அரசு. ‘மாநிலங்களும் இப்படி அறிவிக்க வேண்டும்’ என்று மத்திய அரசு அறிவுறுத்தியதை அடுத்து தமிழக அரசும் இதேபோல செய்துள்ளது. இதன்படி, எந்த ஒரு மருத்துவமனையிலும் ஒருவருக்குக் கறுப்புப் பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், உடனே அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். கறுப்புப் பூஞ்சை நோய் பற்றிச் சில அடிப்படைத் தகவல்கள்: இது கொரோனா போல புது நோயா? இல்லை. இது ஏற்கெனவே இருக்கும் நோய்தான். மூக்கின் உட்புறத்தில் உள்ள சைனஸ் பகுதி, கண்கள் மற்றும் மூளையில் ஒருவித பூஞ்சைத் தொற்று ஏற்படுவதே இந்த நோய். கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோயாளிகள், ஸ்டீராய்டு சிக

ஊழல்தேவ்

படம்
ஜக்கி வாசுதேவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் : கட்டிஎழுப்பப்பட்டது எப்படி? – பாகம் 1 கோயம்புத்தூரின் இக்கரை பொலுவம்பட்டியில் 150 ஏக்கர் பரப்பளவுக்கு மிகப் பெரிய ஆசிரமத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் ஜக்கி வாசுதேவ். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் இந்த சாமியாரின் ஆசிரமம் பல்வேறு முறைகேடுகள் செய்து கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்கும் போதெல்லாம், “இவையெல்லாம் நிரூபிக்கப்பட்டவையா?” என்று கேள்வியெழுப்புவது இந்தச் சாமியாரின் வழக்கம். ஆகவே, இவரது ஆசிரமம் குறித்து பல்வேறு அரசு ஊழியர்கள், செயற்பாட்டாளர்கள், ஊழலை அம்பலப்படுத்துபவர்களிடம் பேசியது நியூஸ் லாண்ட்ரி. ஈஷா ஃபவுண்டேஷன் குறித்த பல்வேறு அரசு ஆவணங்களைப் பார்வையிட்டது. ஈஷாவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட நீதிமன்ற வழக்குகளை ஆராய்ந்தது. ஈஷா ஃபவுண்டேஷனின் கதை ஒரு வழக்கமான ஊழல் மற்றும் பேராசை பிடித்த சாமியாரின் கதைதான். நம் மக்களிடம் மதம் மற்றும் கலாச்சாரம் மீது இருக்கும் உணர்வைப்(sentiment) பயன்படுத்தி சட்டவிரோத காரியங்கள் செய்யப் பட்டிருக்கின்றன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இக்கரை