இடுகைகள்

கிருமி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒவ்வாமை எனும் ....

படம்
ஒ வ்வாமை எனும் அலர்ஜி என்பது வெளியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் நுழையும்போது, உடல் காட்டும் நோய் எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவது ஆகும். இது உடலில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.  உடம்பில் அலர்ஜி ஏற்பட்டால் அரிப்பு ஏற்படும்.  உடலில் தடிப்புகள் உருவாகும்.  உதடு வீங்கும். மூச்சு வாங்கும்.  அலர்ஜி என்பது எல்லா வயதிலும் வரும். அலர்ஜியால் உடம்பில் கொப்பளம் போல் உருவாகும்.  அது வெடித்து புண்ணாகி அரிப்பு ஏற்பட்டு சீல் உருவாகி காய்ச்சல் ஏற்படும். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளான நாய், பூனை ஆகியவற்றின் தோலில் உள்ள ஒரு பொருள், முடி ஆகியவற்றில் இருந்தும் அலர்ஜி ஏற்படலாம்.  அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு ஏற்பட்டதும் உடல் இம்யுனோகுளோபுலின் இ என்ற எதிர்ப்பு பொருளை உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக கண் மற்றும் சுவாச வழிகளில் ஹிஸ்டமின் போன்ற எதிர்ப்பு தன்மை மிகுந்த பொருட்கள் உருவாகின்றன.  இதுபோன்ற வேதிப் பொருட்கள் உடலில் உற்பத்தியாவதால் கண்ணில் நமைச்சல், கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொடர் து...

புதிய வகை கிருமிகள்!

படம்
விலங்கினங்களிடையே நாம் இதுவரை கண்டறியாத லட்சக்கணக்கான கிருமி வகைகள் காணப்படுவதாக  ஆய்வு ஒன்று குறிப்புணர்த்துகிறது. மனிதர்களைப் பாதிக்கவல்ல பெரும்பாலான நோய்க் கிருமிகள் விலங்குகளிடத்தில் இருந்து வந்தவைதான்.  பல்வேறு நோய்க் கிருமிகளை சுமக்கக்கூடிய ஒரு விலங்காக நாம் அறிந்துள்ள வௌவால் இனமொன்றை அமெரிக்க மற்று வங்கதேச விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். நாம் இதுவரை அறிந்திராத புதிய அறுபது வகையான கிருமிகள் அந்த வௌவால் இனத்தில் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.  நோய்க் கிருமிகளை சுமக்கவல்ல மற்ற விலங்கினங்களிலும் இப்படி புதிய வகை நோய்க்கிருமிகள் இருப்பதாகக் கணக்கிட்டால், இதுவரை அறிந்திராத மூன்று லட்சத்து இருபதாயிரம் வகை நோய்க் கிருமிகள் விலங்கினங்களிடையே இருப்பதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். இந்த நோய்க் கிருமிகளை நாம் அடையாளம் காணுவதென்பது எதிர்காலத்தில் தொற்று நோய்கள் மனிதரிகளிடையே பரவுவதைத் தடுக்க உதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இத்தனைக் கிருமிகளையும் கண்டறிய அறுநூறு கோடி டாலர்கள் செலவாகும் என ஆராய்ச்சிக் குழ...

இ-கோலி இந்தியாவை நெருங்குகிறது,,,

படம்
இ.கோலி பக்டீரியாவுக்கு 17வது நபர் ஜெர்மனியில் பலியாகி உள்ளார். பயங்கர நச்சுப்பொருளுடன் புதிய வகை பக்டீரியாவாக இ.கோலி பக்டீரியா உருவாகி உள்ளது.இந்த நுண் பக்டீரியாவானது புதிய மரபணு மாற்றத்துடன் உருவாகியுள்ளது. இதில் மனிதர்களை கொல்லும் ஜீன்கள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்பெயினில் இருந்து ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு வெள்ளரிக்காய் உள்பட காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த வெள்ளரிக்காயை சாப்பிட்டதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்  பக்டீரியாவான இ.கோலி பரவி உள்ளது என ஜெர்மனி முதலில் குறிப்பிட்டது. இந்த கருத்துக்கு ஸ்பெயின் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஜெர்மனி அறிவிப்பால் தங்கள் விவசாயம் செய்த உணவு வகைகளை ஏற்றுமதி செய்யமுடியாமல் போனது. எனவே எங்கள் இழப்புக்கு உரிய நிவாரணம் தரவேண்டும் என ஸ்பெயின் கூறியது. இ.கோலி பக்டீரியா உயிரைக் கொல்லும் மரபணுக்களுடன் அமைந்துள்ளது. இந்த இ.கோலி நுண் உப பக்டீரியாவின் திடீர் மரபணு மாற்றம் காரணமாக ஏற்பட்டு உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இகோலி பக்டீரியாவிற்கு பலியான 17வது நபராக ஹம்பர்க்...