இடுகைகள்

அவதூறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிளாஸ்டிக் அரிசி வதந்தியா

படம்
நேற்று பிளாஸ்டிக் அரசி பற்றிய இடுகையை படித்திருப்பீர்கள். நமக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையில் அப்படி ஒரு இடுகை இயல்பான சமூக எதிர்ப்பில் பதிவிட்டோம். இப்போது அதே பிளாஸ்டிக் அரிசியை பற்றி மாற்று  தளத்தில் ஒரு மாறுபட்ட கருத்துடன் கட்டுரை வெளியாகியுள்ளது. அது பிளாஸ்டிக் அரிசி என்பதே போய் புனைவு என்கிறது. மரவள்ளி,சர்க்கரை வெள்ளைக் கிழங்குகளினால் தயாரிக்கப்பட்ட வியட்நாமிய உணவுப் பொருள் தான் இன்று பல்வேறு வடிவங்களில் பிளாஸ்டிக் என்ற பெயர் கொண்டு உலகை பயமுறுத்துகிறது என்கிறது அக்கட்டுரை. பிளாஸ்டிக் அரிசியின் ஒரு பக்கத்தை பார்த்த நாம் இப்போது அதன் வரலாறாகக் கூறப்படும் இப்பக்கத்தையும் பார்த்து விடுவோம். ஆனால் உண்மையில் இது பிளாஸ்டிக் அரிசியின் உண்மையான மறுபக்கமா என்பதில் எந்த உறுதியும் இல்லை. காரணம் உலக கார்ப்பரேட்கள் தங்கள் லாபத்துக்காக எந்த அளவும் செல்வார்கள்.அவர்களுக்கு லாபம் எள்ளளவும் குறைந்து விடாமல் நாம அரசியல்வியாதிகள் பார்த்துக்கொள்வார்கள் என்பது நாம் உணர்ந்த கண் கூடான மெய். மக்கள் குடங்களை தூக்கிக்கொண்டு குடிநீருக்கு மைல் கணக்கில் அலைந்து 20 ரூபாய்க்கு ஒரு ...

உள்ளமும் நலம்தானா?

படம்
இந்தியா முழுக்கவே நீதிமன்ற பணியில் உள்ள நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளை நடுநிலையாக நின்று சோதித்து வழங்காமல் தங்கள் மனநிலைக்கேற்ப,சார்ப்புக்கேற்பத்தான் வழங்குகிறார்கள். சந்துரு போன்ற சிலர்தான் இதில் விதி விலக்கு . இப்போது தமிழகத்தை சார்ந்த கர்ணன்  செய்யும்  நீதிபோர்  மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. சக நீதிபதிகளுக்கு மட்டுமல்ல சாதாரண நமக்கும் அவரின் மனநிலை மீது சந்தேகம் உண்டாவதை தவிர்க்க இயலவில்லை. தடிமன்,தடிமனான சட்டப்புத்தகங்களை படித்தும்,ஓயாமல் வாத,பிரதிவாதங்களை கேட்டு,கேட்டும் மனம் வெறுத்துப்போயிருக்கலாம் .அதனாலேயே இந்த மனநிலை உண்டாகியிருக்கலாம். ஆனால் அவர் செய்யும் அபத்தங்களுக்கான எதிர் விளைவுகளை தடுக்க  தனது தாழ்த்தப்பட்ட சாதியை கேடயமாக பயன் படுத்துவதை பார்த்தால் பின்னணி ஏதாகிலும் இருக்கலாமோ எனது தோன்றுகிறது. இந்திய உயர் நீதிமன்றங்களில் கட்டப்பொம்மன் காலத்தில் போடப்பட்ட வழக்குகள் கூட தேங்கி லட்சக்கணக்கில் தூசி தட்டி வைக்கப்படுவதான நிலை இருக்கையில் தனக்கு வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி பணியை செம்மையாகப்பார்த்து தேக்கத்தை குறை...

விவசாயிகள் போராட்டமும் ஏச்சு .ராஜாவும்

படம்
தமிழ்­நாடு வஞ்­சிக்­கப்­பட்ட பிர­தே­ச­மாக மாறி வரு­கி­றது.  60, 70களில் ஓங்கி ஒலித்த ‘வடக்கு வாழ்­கி­றது, தெற்கு தேய்­கி­றது’ என்­கிற கோஷம் மீண்­டும் ஒலிக்­கத் தொடங்­கி­விட்­டது. எல்­லா­வி­ஷ­யங்­க­ளி­லும் தமி­ழ­கம் முற்­றாக புறக்­க­ணிக்­கப்­ப­டும் நிலை உரு­வாகி வரு­கி­றது. தண்­ணீர் பிரச்னை என்­பது இங்கு பூதா­க­ர­மாக வடி­வெ­டித்து நிற்­கி­றது. எதிர்­கா­லத்தை நினைத்­தால் என்ன ஆகுமோ என்ற பயம் ஏற்­ப­டு­கி­றது. திண்­டுக்­கல் நகர பேருந்து நிலை­யம் அருகே உள்ள ஒரு ஓட்­ட­லில் கை கழு­வும் இடத்­திற்கு மேல் ஒரு நோட்­டீஸ் ஒட்­டப்­பட்­டி­ருந்­தது.  அதில் ‘‘நம் தாத்­தாக்­கள் காலத்­தில் நதி­கள், ஆறு­க­ளில் தண்­ணீ­ரைப் பார்த்­தோம்’ நம் அப்­பாக்­கள் காலத்­தில் ஏரி, குளம், கிண­று­க­ளில் தண்­ணீ­ரைப் பார்த்­தோம்.  நம் காலத்­தில் பாட்­டில்­க­ளில் தண்­ணீ­ரைப் பார்க்­கி­றோம்.   இனி எதிர்­கா­லத்­தில்.....’’ என எழு­தப்­பட்­டி­ருந்­தது. இந்த அபா­யம்­தான் இப்­போதே நம்மை துரத்­தத் தொடங்­கி­விட்­டது. தமிழ்­நாட்டை இயற்­கை­யும் வஞ்­சித்து விட்­டது. இங்கு எல்லா வள­மும் இருக...

மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்

படம்
ஒட்டு மொத்த  பணக்காரர்கள் அல்லாத மக்களனைவரையும்  வங்கி வாசலில் காத்திருக்க வைத்தது போதாது என்று கரும் புள்ளி,குத்தி அனுப்பி வைத்த மோடியின் செயல் எழுப்பும் அதிர்வுகள்,மோசமான விளைவுகள் விலக குறைந்தது மூன்று மாசமாவது ஆகும். காரணம் இந்த மோடி தலைமையிலான ஆட்சியாளர்கள்,பொருளாதார நிபுணர்களின்(?) குளறுபடிகள்தான். 1,ஆறு மாத ஆலோசனையில் என்ன ஆலோசிக்கப்பட்டது?தடையினால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்றா?பண முதலைகளும் மோடி நண்பர்களுமானவர்கள் பாதிக்கபபடக் கூடாது என்றா? 2, தடை செய்யப்படப் போவது 500,1000 தாள்கள்.ஆனால் அதை அச்சிட்டாமல் 2000 தாட்களை அச்சிட உத்திரவிட்டது எந்த பொருளாதர நிபுணர். அம்பானி,அதானிக்கு 1000 தாட்களை விட 2000 தாட்களை பதுக்குவது வசதி என்பதுதானே இதன் மூலக் காரணம்? 3,ஏடிஎம் களில் வைக்க முடியா அளவில் வடிவமைத்தது கூட பரவாயில்லை.அதை வைக்க ஏடிஎம்களை,மென்பொருளை தயார் நிலையில் வைக்காதது ஏன்? 4,தடை அறிவிக்கும் முன்னர் வங்கிகளில் புதிய பணத்தை தயாரக வைக்க வேண்டும் என்ற அடிப்படை ,கூட தெரியாதவர்களதான், பொது  அறிவு இல்லாதவர்கள்தான்  ஆட்சியாளர்கள்,அதிகாரிகளாக ...