இடுகைகள்

உடல்நலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போதை அது அழிவு பாதை .

படம்
நவீன மருத்துவ முன்னேற்றம் காரணமாக ஆண்களின் ஆயுட்காலம் 67 வயதாக உயர்ந்திருக்கிறது. ஆனால், தகாத பழக்கங்களால் 50 வயதுக்குள்ளேயே தங்களை அழித்துக் கொள்கிற ஆண்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது வேதனையானது.  போதை பொருட்கள் பயன்படுத்தாத ஆண்களே இல்லை என்கிற அளவுக்கு இன்று பலரும் ஏதோ ஒரு பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.  தவறான நண்பர்கள், பார்ட்டி கலாசாரம், திடீரென ஏற்படும் வேலை இழப்பு, காதல் தோல்வி, விவாகரத்து, பொருளாதார நெருக்கடி, மன அழுத்தம் என்று பல்வேறு காரணங்களால் தகாத பழக்கங்களுக்கு ஆளாகி, அதற்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.  அவர்களே வெளியேற வேண்டும் என்று ஒரு கட்டத்தில் நினைத்தாலும் முடிவதில்லை. கொலைகள், தற்கொலைகள், விபத்துகள் என்று பெரும்பாலான ஆண்கள் இளவயதிலேயே உயிரிழப்பதன் பின்னாலும் இந்த போதை வஸ்துக்களே இருக்கின்றன.  உடல்ரீதியான, மனரீதியான பல்வேறு பாதிப்புகளையும் ஆண்கள் இதனால் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.  சமூகத்தில் நன்மதிப்பும் கெட்டுப்போவதுடன், அவருடைய குடும்பத்தார் சந்திக்கும் துயரங்களும் வார்த்தைகளால் விவரிக்கக் கூடியதல்ல.  போதைப் பொ...

பக்கவாதம் :வரும் முன் தடுக்க ..

படம்
மக்களில் மனிதனுக்கு வேகமாக வரக்கூடிய இரண்டாவது பெரிய  நோய் என்ற இடத்தை பிடித்திருப்பது பக்கவாதம்.  உடலின் ஒரு பக்கம் செயல் இழப்பதால், இதை பக்கவாதம் என்கிறோம். பல நோய்களுக்கு உள்ள விழிப்புணர்வு கூட, பக்கவாதத்திற்கு இல்லை. போதிய சிகிச்சை இன்றி, மரணங்களும் ஏற்பட்டு இருக்கின்றன. பக்கவாதத்தைத் தவிர்க்க முடியாது என்ற தவறான நம்பிக்கை உள்ளது. உண்மையில், 70 சதவீத பக்கவாதத்தை தடுக்க முடியும். பக்கவாதத்திற்கு சிகிச்சைகள் உண்டு.  பக்கவாதம்   வயதானவர்களுக்கு என்றில்லை;  யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில், அடைப்பு ஏற்படுவது அல்லது ரத்தக் கசிவு காரணமாக, மூளைக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதையே, பிரெய்ன் அட்டாக் என்கிறோம்; அதாவது பக்கவாதம். ரத்தக் குழாய் அடைப்புக் காரணமாகவே, பக்கவாதம் வருகிறது. எனவே, பாதிக்கப்பட்டவரை, நரம்பு மண்டல சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு, இரண்டு மணி நேரத்திற்குள் கொண்டு செல்ல வேண்டும்.  'கோல்டன் ஹவர்' எனப்படும், இரண்டு மணி நேரத்திற்குள், 'இன்ட்ராவீனஸ் த்ராம்போலிசிஸ்' சிகிச்சை அளித்தால் போதும். பக்கவாதம் ஏற்ப...

ஜெயா தொலைக்காட்சி உரிமையாளர் ?

படம்
செப்டம்பர் 27, 2014 தமிழகத்தின் வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலேயே மறக்க முடியாததோர் நாள்.  அன்றுதான், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, வி.என். சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரையும் ஊழல் வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் ஜான் டி குன்ஹா சிறைக்கு அனுப்பினார்.  நால்வருக்கும் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 1991 - 1996 ம் ஆண்டில் ஜெ முதலமைச்சராக இருந்த போது 66.65 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்த வழக்கில் விதிக்கப் பட்ட தண்டனை இது.  செப்டம்பர் 27 ல் சிறைக்கு அனுப்பபட்ட நால்வரும், அக்டோபர் 17 ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை அடுத்து, 18 ம் தேதி விடுதலையாகி சென்னை வந்தனர்.  நால்வரும் 22 நாட்கள் சிறையிலிருந்த இந்த காலகட்டத்தில் நடந்த முக்கியமானதோர் நிகழ்வுதான் தற்போது வெளியில் வந்திருக்கிறது. அதுதான் ஜெயா டிவியை சசிகலா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதாவது இந்த 22 நாட்களில் ஜெயா டிவி யின் 75 சதவிகித பங்குகள் சசிகலா பெயருக்கு மாறியிருக்கின்றன.  கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகத்தில் Ministry of C...

உப்பின் அளவு

படம்
 சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது  தேவையான  அளவுக்குக் கீழே உணவில் உப்பின் அளவைக் குறைப்போருக்கு இதயத் தொடர்பான நோய்கள் வரும் என்பதுதான். சாதாரணமாக உணவில் உப்பின் அளவு அதிகமாக பயன்படுத்துவோருக்கு இரத்த அழுத்தம் தொடர்பான நோய்கள் உருவாவதோடு அதுவே மாரடைப்பு ஏற்படுவதற்கும் ஒரு காரணமாக அமைகிறது என்ற கருத்து மருத்துவர்களிடையே உள்ளது.  இதனால் இரத்த அழுத்தம் தொடர்பான நோய்களுடன் வரும் நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் குறைக்க மருத்துவர்கள் ஆலோசனை கூறுவர். ஆனால், மாரடைப்பு வராமல் தடுப்பதற்காக அவ்வாறு உப்பைக் குறைத்துக்கொள்வதே மாரடைப்பு முதலான இதய நோய்களை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வுத்தகவல் பெரிய வெடிகுண்டை வீசியுள்ளது. டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையில் 40,000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 67 ஆய்வுகளின் முடிவில், உப்பைக் குறைத்துக் கொள்வோரின் உடலில் 2.5 சதவீதம் கொழுப்பு அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து உப்பைக் குறைத்து வந்தோரின் சிறுநீரகத்தில் ரெனின் என்ற புரதமும், அல...