இடுகைகள்

தேர்தல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

50கோடிகள்

படம்
  எஸ்.பி.ஐ (SBI) வங்கி கிளைகளில், ரூ. ஆயிரம், 10 ஆயிரம், 1 லட்சம், 10 லட்சம், கோடி போன்ற மதிப்புகளில் தேர்தல் பத்திரங்கள் கிடைக்கும். தனி நபர்களோ, கார்ப்பரேட் நிறுனங்களோ இந்த தேர்தல் பத்திரங்களை வாங்கி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கலாம். ஒருவர் எத்தனை தேர்தல் பத்திரமும் பெறலாம் என்று கூறப்பட்டது. தேர்தலின்போது கட்சிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிதி வழங்கியவர் பெயர் மற்றும் தொகை தொடர்பான தரவுகளை நிதியாண்டின் இறுதியில் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் (Representation of People Act-1951) முன்பு குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை தேர்தல் பத்திரங்கள் திட்டம் (Electoral Bond Scheme- 2018) மூலம் திருத்திய பாஜக அரசு, தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதி வழங்குபவரின் பெயர்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கத் தேவையில்லை என மாற்றியது. தேர்தல் பத்திரம் என்பது வெளிப்படைத் தன்மைக்கு எதிராக உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் 2019-ஆம் ஆண்டுத் தேர்தல் ஆணையம் தரப்பிலேயே முறையிடப்பட்டது. எனினும் அது மாற்றப்ப...

தேர்தல் ஆணைய யானை

படம்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு ஏப்ரல் 18ம் தேதி அனுப்பிய கடிதத்தில்   'ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு  பணம் பட்டுவாடா செய்யப்பட்டதை நிரூபிக்கும் ஆவணங்கள் சிக்கியுள்ளதை ஏப்ரல் 9ம் தேதி வருமான வரித்துறையினர்  தெரிவித்தனர். பணம் கொடுத்தது நிரூபிக்கவும் பட்டது. வாக்ககிளர்களுக்கு பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவது இபிகோ 171பி  பிரிவின் கீழ்  குற்றமாகும்.  இந்த விவகாரத்தில் கிடைத்துள்ள தகவல்களை பரிசீலித்த தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனே வழக்குப்பதிய ஆர்.கே .நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உத்தரவிடுகிறது.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி தினகரன்  மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது  உடனே வழக்குப்பதிந்து காவல்துறை   எடுத்த நடவடிக்கை குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு  தமிழ் நாடு மாநில  தலைமை தேர்தல் அதிகாரி, விரைவில் தகவல் தெரிவிக்க வேண்டும். " இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்ட...

பாதுகாப்பு-கையில் காப்பு?

படம்
- தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் குரல் எழுந்துள்ளது. அதிமுகவைத் தவிர மற்ற கட்சியினர் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை குற்றம் சாட்டுகின்றனர். ஜெயலலிதா தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டியது தனது ஹெலிகாப்டர் கணக்கு வேட்பாளர் கணக்கில் வருவது பற்றித்தான். பிரவின்குமாரின் தேர்தல் ஆணையம்  எதிர்கட்சிகளுக்கு எதிராக மட்டுமல்ல மக்களுக்கு எதிராகவும் நடந்து கொண்டுள்ளதாகத்தான் தெரிகிறது. ஒன்று பணம் வாங்கினால் கைது-சிறை என்று பாமர மக்களை ஒருபக்கம் மிரட்டி விட்டு வாக்கு சாவடி வரிசை வரை அதிமுகவினரை பணம் கொடுத்து இலைக்கு வாக்கு கேட்க அனுமதித்தது.அதற்காகவே மற்ற கட்சியினர் கூட்டம் போட்டு எதிர்ப்பதை தடுக்க 144 தடையை கொண்டு  வந்தது. இதனால் அப்போதைய கஞ்சிக்கு அதிமுக தரும் பணத்தை வாங்க மக்கள் பயந்து 1000 ரூபாய் வர வேண்டிய இடத்தில் மிகக் குறைவாக 200 மட்டுமே கொடுத்தது.இன்றைய விலைவாசி இருக்கும் நிலையில் இவ்வளவு குறைவாக வாக்குகளுக்கு விலை தந்தால் கட்டு படியாகுமா? கொலை செய்தவனை விட தூண்டியவனுக்குத்தான் தண்டன...

நான் அடிப்பது போல் ..........!

படம்
இந்த முறை தேர்தல் ஆணையம்,காவல்துறை செயல்பாடுகள் ஒட்டு மொத்தமாக அதிமுக வுக்கு துணை என்பது வெளிப்படையாகவே தெரிந்து விட்டது. சம்பளமே வாங்காமல் பணிபுரியும் காவல் உயர் அதிகாரி விசுவாசம் எப்படி இருக்கும் என்பது சின்னக் குழந்தைக்கு கூட தெரியும்.அவரை மாற்றாமலேயே துணைக்கு உப்புக்கு-சப்பாணியாக ஒருவரை நியமித்து எதிர் கட்சிகளின் வாயை அடை ப்பதாக ஆணையம் அதாவது பிரவீன் குமார் செயல்பாடிருந்தது காவல்துறை யாருடைய ஏவல் துறை என்பதும் தெரிந்த விடயம். காவல்துறையினருக்கு இம்முறை தபாலில் வாக்களிப்பதை ஒரு வாரம் முன்னதாகவே அனுமதித்து மாவட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்குப்பெட்டிகள் வைக்கப் பட்டு வாக்களித்தார்கள்.அவர்கள் வாக்களிப்பதை ஒரு கட்சிக்கும் தெரிவிக்கவில்லை அதிமுகவை தவிர்த்து.மாவட்டாட்சியர் அலுவலகத்தில் பணி புரிபவர்க்களுக்கே அன்று காலைதான் விபரம் தெரியும்.அதிமுகவை சார்ந்த  அரசு வழக்குரைஞர்கள் மட்டுமே கண்காணிக்க வந்திருந்தார்கள். காவலர்கள் அவர்களின் அதிகாரிகள் -அதிமுகவினரின் முன்னிலையிலேயே வாக்குச் சீட்டில் குறித்தார்கள்.அப்படி என்றால் வாக்குகள் எங்கு போயிருக்கும் என்று தெரி...

ஆதரவுமில்லை!அலையுமில்லை!!.

படம்
ந டந்து முடிந்த தேர்தல் பற்றி பல விமர்சனங்கள் பரபரப்பாக பேசப்படுகிறது. நம் பங்குக்கு நாமும் சொல்லி வைப்போம். மூன்று மாநிலங்களில் பாஜக.ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளது. டெல்லியில் இதுவரை இல்லா அளவு பாஜக இடங்களை கைப்பற்றீருந்தாலும் ஆட்சி அமைக்க  வலு காணாது.அங்கு ஆம் ஆத்மி பாஜக ஆட்சியமைக்க பச்சைக் கொடி காட்டினாலும் பாஜக அமைக்க முன் வரவில்லை.அக்கட்சி எடுத்த முடிவு புத்தி சாலித்தனமானது .தனது இடங்களை விட அதிகமான இடங்களை எதிர் கட்சிகள் இரண்டும் வைத்திருக்க நிம்மதியாக ஆட்சி செய்ய இயலாது . ஒரு தீர்மானத்தையும் இரு கட்சிகளின் ஆதரவின்றி நிறைவேற்றவும் முடியாது.தலைக்கு மேல் கத்தியை வைத்துக் கொண்டு முதல்வர் நாற்காலியில் உட்காருவது சரிவராது. மற்ற மூன்று மாநிலங்களில் பாஜக வென்றதற்கு இந்தியா எங்கும் மோதிக்கொண்டிருக்கும் மோடி ஆதரவு அலை தான் காரணம் என்று மக்களவை தொகுதியை மனதில் வைத்து ஒரு எண்ணம் ஊடகங்கள் மூலம் பரப்பப் படுகிறது. அப்படி ஒன்றும் இல்லை. மோடி ஆதரவு அலை என்பதை விட காங்கிரசின் மீதான அதிருப்தி அலை எனக் குறிப்பிடுவதே சரியாகும். ராஜஸ்...

கோட்டை விடுபவர் யார்?

படம்
புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துவந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைசார்ந்த முத்துக்குமரன் ஏப்ரல் 1ஆம் தேதி விபத்தில் சிக்கி பலியானதை அடுத்து புதுக்கோட்டையில் இடைத்தேர்தல் நடக்கிறது. தற்போது புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு ஜூன் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 18 வேட்பு மனுத் தாக்கல் ஆரம்பமாகிறது. புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக கார்த்திக் தொண்டமான் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தேதியை ஆணையம் அறிவிப்பதற்கு சிறிதுமுன்பு அதிமுக தமது வேட்பாளரை அறிவித்துள்ளது. கருணாநிதி நேற்றுதானே சொன்னார்.புதுக்கோட்டையில் அதிமுக அரசு நிவாரணப்பணிகளை செய்துமுடித்தவுடன் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும் என்று.அவர் வாயில் அல்வாவைத்தான் போட வேண்டும். வேட்பாளர் அறிவிப்பும் -தேர்தல் நன்னடத்தையும் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் கட்சிக்காரர் எம்.எல்.ஏ.வாக இருந்ததால் இத்தொகுதி இடைத்தேர்தலில் தமக்கே ஒதுக்கப்படும் என தா.பாண்டியன் கட்சி கனவு கண்டு கொண்டிருந்தது.அதிமுகவை பொறுத்தவரை கூட்டணியாவது-தர்மமாவ...

வாக்கு "வங்கி"?

படம்
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. வைகோவில் கலிங்கப்பட்டி பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியை பார்வையிட வந்த தேர்தல் பார்வையாளர் (பொது) ரமேஷ்குமார்சுதர்ன்சூரிடமம், அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார் வந்தும் மெத்தனபோக்கினை கைபிடித்ததாக புகார் கூறப்படுகி‌றதே எனகேட்கப்பட்டது.  இதற்கு அவர்பதில் கூறும் போது புகார் குறித்து சம்பவ இடத்தில் சென்று விசாரித்த போது அங்கு ஒருத்தரும் பணம் கொடுவில்லைஎனினும் புகாரில் உண்மையிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.[இவர் வரும் வரை அது யாருப்பா பணம் கொடுக்காமல் சென்றது.?இவர் வரும் வரை பணம் கொடுத்துக்கொண்டிருந்தால்தானே வாக்கு கிடைக்கும்?] இன்றைய நிலையில் பணக்கார கோவில் சங்கரன்கோவில்தானே? கையும் களவுமாக பணம் கொடுத்தஅ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை வைகோ தம்பி மற்றும் கலிங்கப்பட்டி மக்கள் பிடித்துக்காவல் துறையிடம் ஒப்படைத்தும் காவல்துறையினர் அவர்களை விட்டு விட்டு வைகோவை படையுடன் போய் விசாரித்த போதே இந்த தேர்தல் லட்சணம் புரிந்து விட்டது. தேர்தல் ஆணையம் முந்தைய தேர்தலில் இருந்தே அதிமுகவின் கிளை அமைப்பு போல்...

எச்சரிக்கை நேரம்,,,,

படம்
அதிமுக கூட்டணி வெற்றி தோல்வி அ.தி.மு.க. 147 13 தே.மு.தி.க., 29 12 மா. கம்யூ. 9 3 இ. கம்யூ., 9 1 மூ.மு.க. 0 1 ம.ம.க., 2 1 ச.ம.க., 2 0 பு.த., 1 0 பா.பி., 1 0 இ.கு.க., 1 0 கொ.இ.‌பே 1 0 திமுக கூட்டணி வெற்றி தோல்வி ...