பாதுகாப்பு-கையில் காப்பு?

-
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் குரல் எழுந்துள்ளது.
அதிமுகவைத் தவிர மற்ற கட்சியினர் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை குற்றம் சாட்டுகின்றனர்.
ஜெயலலிதா தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டியது தனது ஹெலிகாப்டர் கணக்கு வேட்பாளர் கணக்கில் வருவது பற்றித்தான்.
suran.
பிரவின்குமாரின் தேர்தல் ஆணையம்  எதிர்கட்சிகளுக்கு எதிராக மட்டுமல்ல மக்களுக்கு எதிராகவும் நடந்து கொண்டுள்ளதாகத்தான் தெரிகிறது.
ஒன்று பணம் வாங்கினால் கைது-சிறை என்று பாமர மக்களை ஒருபக்கம் மிரட்டி விட்டு வாக்கு சாவடி வரிசை வரை அதிமுகவினரை பணம் கொடுத்து இலைக்கு வாக்கு கேட்க அனுமதித்தது.அதற்காகவே மற்ற கட்சியினர் கூட்டம் போட்டு எதிர்ப்பதை தடுக்க 144 தடையை கொண்டு  வந்தது.
இதனால் அப்போதைய கஞ்சிக்கு அதிமுக தரும் பணத்தை வாங்க மக்கள் பயந்து 1000 ரூபாய் வர வேண்டிய இடத்தில் மிகக் குறைவாக 200 மட்டுமே கொடுத்தது.இன்றைய விலைவாசி இருக்கும் நிலையில் இவ்வளவு குறைவாக வாக்குகளுக்கு விலை தந்தால் கட்டு படியாகுமா?
கொலை செய்தவனை விட தூண்டியவனுக்குத்தான் தண்டனை அதிகம்.
ஆனால் தேர்தல் ஆணையம் சட்டப்படி பணம் கொடுத்தவனுக்கு கொடுக்க காவல்துறை,பறக்கும்படை பாதுகாப்பு.
பணம் வாங்கியவனுக்கு கையில் காப்பு என்பது விசித்திரம்.
சரி.அதுதான் இருக்கட்டும்.
இரண்டாவது.தேர்தல் வாக்குப்பதிவை வைகாசி பிறக்கும் வரை ஒத்திப்போடவேண்டும் என்ற தமிழக மக்கள் ஆவலை மீறி அதற்குள் வாக்குப்பதிவை நடத்தி முடித்தது.
suran-dinamalar
இதனால் பழைய குருடி கதவை திறடி என்று மீண்டும் மின்வெட்டு தமிழகத்தை தேர்தல் ஆணையம் கையில் இருந்து தன கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டதே.
25ம் தேதி முதல் எங்கள் பகுதியில் 6 மணி நேரம் மின் வெட்டு மீண்டும் வந்து மக்கள் உடலையும் ,மனதையும் கொதிக்க வைத்து வருகிறது.
இதற்காக த்தான்  வைகாசி வரை பிரச்சாரம் செய்ய அவகாசம் கொடுத்து காற்றடி காலம் துவங்கியதும் வாக்குப் பதிவை வைத்திருந்தால் இப்படி மக்கள் புழங்கி சாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
ஜெயா அரசு கடனை உடனை வாங்கி மின்தட்டுப்பாடு வராமல் பார்த்து கொண்டிருந்திருக்கும்.அதை கெடுத்தது தேர்தல் ஆணையம்தான் .
எப்படியோ அதிமுகவினர் தங்களை அதிரடி தோல்வியில் இருந்து காத்துக்கொள்ள மட்டுமே தேர்தல் ஆணைய செயல் பாடுகள் பயன் Photo: மீண்டும் பல மணிநேரம் இருட்டு தேர்தல் முடிந்தது மின்வெட்டு வந்ததுநெல்லை:தமிழகத்தின் மின் தட்டுப்பாடு கடந்த 2 மாதமாக அதிக  அளவில் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல்  நெருங்கியதால் ஆளுங்கட்சிக்கு மின்வெட்டு பெரும் நெருக்கடியாக  இருந்தது. இதையடுத்து, வெளியிலிருந்து கொள்முதல் செய்யப்படும்....- See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=89291பட்டுள்ளது.மக்கள் நலனுக்கல்ல.

இதன் கடைசியில் ஒரு பொன் மொழி.இது ஜெயலலிதாவுக்கு .
"இந்த மக்களவை தேர்தலில் உங்களுக்கு கிடைத்த சில இடங்களும் உங்கள் செல்வாக்கிலோ,ஆட்சித்திறமையிலொ கிடத்ததல்ல .உங்கள் தொண்டர்கள் கண்விழித்து காசு கொடுத்து வாங்கியதுதான்.
உங்கள் ஆட்சி-நிர் வாகத்திறமையை பற்றி தொகுதிக்குள் வாக்கு சேகரிக்க போக முடியாமல் திணறிய உங்கள் வேட்பாளர்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக பன்னீர் செல்வத்திடமிருந்து.
தஞ்சாவூரில் முகவர்கள் சென்ற பிறகு அதிமுகவினர்களை வைத்துக் கொண்டு வாக்குப்பதிவு எந்திரத்தில் வைக்கப்பட்ட முத்திரையை நீக்கி நோண்டிய  மண்டல  அலுவலர் மீது நடவடிக்கையும் இல்லை .அங்கு மீண்டும் வாக்குப்பதிவு இல்லை என்கிற பிரவின்குமாரின் நடுநிலை செயல்பாடுகள் வரவேற்கத்தக்கது.[ஜெயா கட்சியினரால் மட்டும்.}
suran-Sasi Kumar's photo.

பதில் மரியாதை...
  
 பஞ்சாப் மாநில, தேர்தல் பிரச்சார கூட்டத்தில், தன் காலில் விழுந்து வணங்கிய, பெண் வேட்பாளருக்கு பதில் மரியாதை செலுத்திய மோடி. ...
 
 மேலும் படிக்க : http://election.dinamalar.com/photo.php?id=257163

"கும்பிடே சரியில்லையே?"பாரத்து மோடியிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள் ,!"
Photo
------------------------------------------------------------------------------------------------------------------------


எச்சரிக்கை Heartbleed வைரஸ்

இந்திய இணைய வெளியில், ஹார்ட் ப்ளீட் (Heartbleed) என்னும் மோசமான வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக, இணையப் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் இந்திய வல்லுநர்கள் Computer Emergency Response Team of India (CERTIn) எச்சரித்துள்ளனர்.
 இது உலக அளவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பல கோடிக்கான பயனாளர்களின் பாஸ்வேர்ட், கிரெடிட் கார்ட் எண்கள் மற்றும் பல தனிநபர் தகவல்களைத் திருடி, குறிப்பிட்டவர்களுக்கு அனுப்புகிறது.
இணையத்தில் தகவல்கள் அனுப்பப்படுகையில், அது சுருக்கப்பட்டு அனுப்பப்பட்டு, பின்னர் தேவைப்படும் இடங்களில் விரிக்கப்பட்டு காட்டப்படுகிறது.
இணையத் தகவல் பரிமாற்றத்தில் இது ஒரு முக்கியமான தொழில் நுட்ப நடைமுறையாகும். இணைய ஒருங்கு முறையில் இது OpenSSL என அழைக்கப்படுகிறது.
தகவல் பாக்கெட்கள் பரிமாறப்பட்டு, அவை தேவைப்படும் கம்ப்யூட்டரை அடையும்போது, இந்த வைரஸ், சுருக்கப்பட்ட தகவல்களை விரிக்கும் குறியீடு போல நுழைந்து, கம்ப்யூட்டரைக் கைப்பற்றி தகவல்களைத் திருடி அனுப்புகிறது.
கம்ப்யூட்டரைக் கைப்பற்றியவுடன், அதன் மெமரியில் உள்ள தகவல்களைப் படிக்கிறது.
படித்து, தன் பைலில் பதிவு செய்து கொண்டு, வைரஸ் குறிப்பிடும் இணைய முகவரிக்கு அனுப்புகிறது.
இந்த வகை வைரஸ் செயல்பாடு மிக மிக மோசமான விளைவுகளைத் தரக்கூடியது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக மோசமான விளைவுகளைக் குறிப்பிடுகையில்,வைரஸ் ஒன்றின் செயல் தன்மையினை ஒன்று முதல் பத்து வரையிலான அளவுகோலில் குறிப்பிடுவார்கள்.
இந்த வைரஸைப் பொறுத்தவரை, அந்த அளவுகோலையும் தாண்டி, மோசத்தின் அளவை 11 எனக் குறிப்பிட்டு வருகின்றனர்.
OpenSSL என்பது, இணையத்தில் இயங்கும் 60 சதவீத சர்வர்களில் பயன்படுத்தப்படும் ஒரு இயக்கமாகும்.
SSL என்பது Secure Sockets Layer என்பதன் சுருக்கம். இதனை முதன் முதலில் வடிவமைத்துத் தந்தவர்கள் நெட்ஸ்கேப் நிறுவனம். இணையம் வழியே, தனிப்பட்ட டாகுமெண்ட்களைப் பரிமாறிக் கொள்ள பாதுகாப்பான வழிமுறையாக இதனை அமைத்தது.
நெட்ஸ்கேப் கம்யூனிகேட்டர் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர்கள் இதனை சப்போர்ட் செய்தன. பல இணைய தளங்களும், ரகசிய தகவல்களை (கிரெடிட் கார்ட் எண், வங்கி அக்கவுண்ட் எண் போன்றவை) பெற இதனைப் பயன்படுத்தின.
SSL பயன்படுத்தும் இணைய தளங்கள், வழக்கமான http: க்குப் பதிலாகத் தங்கள் இணைய முகவரியில் டttணீண்: பயன்படுத்தி வருகின்றன. HTTPS என்பதுவும் இதனைப் போன்ற ஒன்றுதான். SSL கிளையண்ட் கம்ப்யூட்டருக்கும், சர்வர் கம்ப்யூட்டருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துகிறது
. https தனிப்பட்ட முறையில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள பயன்படுத்தப்படுகிறது.
HTTPS என முன்னொட்டினைக் கொண்டு இயங்கும் சர்வர்கள் பாதுகாப்பு மிகுந்தவை என நாம் அறிவோம். வங்கிகள் மற்றும் முக்கிய நிதி பரிமாற்றம் சம்பந்தமான பல சர்வர்களின் முகவரிகளில் இதனைக் காணலாம். இது கூடுதல் பாதுகாப்பினைக் குறிக்கிறது.
 இத்தகைய சர்வர்களின் செயல்பாட்டில் இந்த வைரஸ் குறுக்கிட்டு தகவல்களைத் திருடுகிறது. மாறா நிலையில் தகுந்த பாதுகாப்பு கொண்டதாகக் கருதப்படும் விண்டோஸ் இயக்க முறைமையில் இயங்கும் கம்ப்யூட்டர்கள் கூட, இந்த தொழில் நுட்பத்தைச் சில வேளைகளில் பயன்படுத்த வேண்டியதிருக்கும்.
அப்போது ஹார்ட் ப்ளீட் வைரஸ் குறுக்கிடும் வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
heart
இதற்கிடையே ஹார்ட் ப்ளீட் வைரஸ் மொபைல் அப்ளிகேஷன்களையும் பாதித்துள்ளது என ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே மொபைல் பேங்கிங் வேலையை மேற்கொள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எப்படி இணைய தளங்களை இந்த வைரஸ் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளனவோ, அதே போல, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். சிஸ்டங்களில் இயங்கும் மொபைல் சாதனங்களில் இந்த வைரஸால் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.
எனவே, நிலையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் வரை மொபைல் சாதனங்கள் மூலம் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டாம் என இந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிறுவனம் கூகுள் ப்ளே சர்வரில் உள்ள 3 லட்சத்து 90 ஆயிரம் அப்ளிகேஷன்களை ஸ்கேன் செய்ததில், 1,300 அப்ளிகேஷன்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக கண்டறிந்துள்ளது. இவற்றில் அதிக அபாய வாய்ப்பு உள்ளதாக, வங்கிகள் பயன்படுத்தும் 40 அப்ளிகேஷன்களும், 10 ஆன்லைன் ஷாப்பிங் அப்ளிகேஷன்களும் உள்ளன.
இவற்றுடன் பலரும் பயன்படுத்தும் சில அப்ளிகேஷன்களும் கேள்விக்குறிகளாகி உள்ளன.
மெசேஜ் அனுப்ப பயன்படும் புரோகிராம்கள், உடல் நலம் குறித்த சாப்ட்வேர்கள், பல மொழி உள்ளீடுகளுக்குப் பயன்படும் கீ போர்ட் இன்புட் புரோகிராம்களும் இந்த வகை ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன.
இந்த வேளையில், ஆப்பிள் நிறுவனம் தன் இயக்க முறைமைகளான, ஐ.ஓ.எஸ்., ஓ.எஸ். எக்ஸ் மற்றும் ஐ க்ள்வ்ட் ஆகியவற்றில் இந்த வைரஸ் தாக்கம் இருக்க வாய்ப்பே இல்லை என அறிவித்துள்ளது. இருப்பினும், ஆப்பிள் சாதனப் பயனாளர்கள், தாங்கள் அணுகிப் பயன்படுத்தும் இணைய தளங்களின் நிலையை இது குறித்து அறிந்து கொண்டு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆப்பிள் சாதனங்கள் மூலம் Yahoo, Facebook மற்றும் Tumblr ஆகிய சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் அதிக கவனமாகச் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு ஏன் ஹார்ட் ப்ளீட் (Heartbleed) எனப் பெயரிட்டுள்ளனர் என்பதனைப் பார்க்கலாம். OpenSSL செயல்முறையில், இறுதி நிலையில், தகவல் சுருக்கத்தினை விரிக்கையில், இந்த இயக்கம் சோதனையிடும் அம்சத்தினை heartbeat என அழைக்கின்றனர்.
இதில் தான் இந்த வைரஸ் புகுந்து விளையாடுகிறது. எனவே தான் இந்த வைரஸிற்க்கு Heartbleed எனப் பெயரிட்டுள்ளனர்.
இந்த வைரஸ் பாதித்துள்ள இணைய சர்வர்களைப் பயன்படுத்தும் நம்மால், அந்த சர்வர்களை சரி செய்திட முடியாது. அதன் வழியாக இந்த வைரஸ் நம் தகவல்களையும் திருடலாம்.
அதிக பட்சம் நாம் அடிக்கடி நிதி சார்ந்த செயல்பாட்டிற்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை மாற்றிக் கொள்வதே நல்லது.
இன்னொன்றையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதற்கும் விண்டோஸ் எக்ஸ்பிக்கான மைக்ரோசாப்ட் சப்போர்ட் நிறுத்தத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. OpenSSL கட்டமைப்பில் மைக்ரோசாப்ட் சம்பந்தப்படவில்லை.
தனிநபர் பயனாளிகள் என்ன செய்திட வேண்டும்? நிதி மற்றும் தனிநபர் தகவல்களைப் பயன்படுத்தும் சேவைத் தளங்களில், இந்த வைரஸிற்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை, அடிக்கடி உங்கள் பாஸ்வேர்ட்களை மாற்ற வேண்டும். உங்கள் பாஸ்வேர்ட், இந்த வைரஸால் எளிதாகக் கண்டறிந்து திருடப்படக் கூடியதா என அறிய http://filippo.io/Heartbleed மற்றும் https://lastpass.com/heartbleed என்ற முகவரிகளில் உள்ள தளங்களை அணுகலாம்.
நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் இணைய தளங்களில், எடுத்துக்காட்டாக, Google, GitHub, மற்றும் Microsoft ஆகியவற்றில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு (twofactor authentication) தரப்பட்டிருந்தால், அவற்றைப் பயன்படுத்தவும்.
 உங்கள் வெப் பிரவுசர்களில் உள்ள குக்கீஸ், கேஷ் பைல்கள் மற்றும் ஹிஸ்டரி பைல்கள் ஆகியவற்றை முழுமையாக நீக்கவும்.

இவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் .

1. குரோம் பிரவுசர்:
 இதில் பிரவுசர் பாரில் chrome://settings/clearBrowserData எனக் கொடுத்து எண்டர் செய்திடவும். பின் கிடைக்கும் பக்கத்தில் எவற்றை எல்லாம் நீக்க வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். அவை Clear browsing history, Clear download history, Empty the cache, Delete cookies and other site and plugin data, என இருக்கும். இந்த பட்டியலில் தேவைப்படுபவற்றை அல்லது அனைத்தையும் நீக்கலாம்.

2. பயர்பாக்ஸ் பிரவுசர்:
இதில் Tools or History மெனு செல்லவும். அங்கு Clear Recent History என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் Time range to clear என்ற பிரிவில், நீங்கள் சந்தேகப்படும் நாட்களுக்கான காலத்தை வரையறை செய்து தரவும். அடுத்து “Details” என்பதில் கிடைக்கும் கீழ்விரி மெனுவில், எவை எல்லாம் நீக்கப்பட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுத்து எண்டர் செய்திடவும்.
3. இன்டர்நெட் எக்ஸ்புளோரர்
9 அல்லது அதற்குப் பின்னர் வந்தவற்றில், கியர் ஐகான் கிளிக் செய்து, அங்கு Tools > Safety > Delete browsing history எனச் சென்று நீக்கலாம். இங்கேயே temporary Internet files, and cookies போன்றவற்றை நீக்கவும் வசதிகள் கிடைக்கும். பயன்படுத்தவும்.

நன்றி:தமிழ் சி.என்.என்.
suran
-------------------------------------------------------------------------------------------------------------------------

இணையத்துடன் இணைய முடியவில்லையா?

நமது கணினி யில் இணைய   இணைப்பு பெற்று, சில தளங்களை நாம் காண்பதற்கு முகவரி அமைத்து இயக்கியவுடன், சில நொடிகளில் அந்த தளங்கள் நம் கம்ப்யூட்டர் திரையில் காட்டப்பட்டால், நாம் அத்தளத்தைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.
 ஆனால், அந்த தளம் நமக்குக் கிடைக் காமல், சில வேளைகளில் பிழைச் செய்திகள் காட்டப்படும். ஒவ்வொரு பிரவுசரும் இந்த பிழைச் செய்திகளை ஒருவித அமைப்பில் காட்டலாம். இருப்பினும் அவை தரும் தகவல்கள் பொதுவானதாகவே இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. பாதுகாப்பு சான்றிதழ் சிக்கல் (Certificate error):
இத்தகைய பிழைச் செய்திகள் பெரும்பாலும் SSL certificate error அல்லது Security Certificate error எனக் கிடைக்கும். இது HTTPS சுருக்கத்தில் ஏற்பட்ட பிழை.
 சில  இணைய தளங்களைப் பெற முயற்சிக்கையில் மட்டுமே இத்தகைய பிழைகள் காட்டபப்டும்.
suranஇது போன்ற தகவல் சுருக்கு முறைகளைக் கையாளுகையில், இணையதளங்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சான்றிதழை முதலில் அனுப்பு கின்றன. எடுத்துக்காட்டாக Google.com இணைய தளம், இதற்கென சான்றளிக்கும் அதிகார அமைப்பிடமிருந்து பாதுகாப்பான தளம் என்பதற்கான சான்றிதழைப் பெற்றிருக்கும்.
சான்றிதழ் அதிகார அமைப்பு வழங்கிய இந்த சான்றிதழுக்கு உரிமையாளரான Google.com என்ற தளத்திலிருந்து இது வருகிறதா என நம் பிரவுசர் இதனைச் சரி பார்க்கும். சரியான அதிகார அமைப்பிடமிருந்து இந்த சான்றிதழ் வழங்கப்பட்டதா எனச் சரி பார்க்கும்.
அதே போல, அந்த சான்றிதழில் கூறப்பட்டுள்ள Google.com தளம் உண்மையிலேயே அதுதானா? அல்லது அதே பெயரில் உள்ள வேறு ஒரு தளமா என்பதனையும் சரி பார்க்கும்.
நாம் பிழைச் செய்தி ஒன்றைப் பெற்றால், நாம் தேடும் Google.com தளத்திற்கு நாம் அழைத்துச் செல்லப்பட வில்லை என்று சந்தேகிக்கலாம். எடுத்துக்காட்டாக, வை-பி இன்டர்நெட் இணைப்பு உள்ள இடத்தில், நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கினை அணுகும்போது, இந்த பிழைச் செய்தி கிடைத்தால், வை-பி சார்ந்த நெட்வொர்க்கில் ஒருவர், உங்கள் வங்கிக் கணக்கினைக் காட்டும் தளத்தைப்போல ஒன்றை உங்களுக்குக் காட்டி உங்களை ஏமாற்றும் வழியை மேற்கொண்டுள்ளார் என்று பொருள்.
 நீங்கள் தேடும் தளம், அதற்கான பாதுகாப்பு சான்றிதழை புதுப்பிக்காமல் இருந்தாலும் இது போன்ற பிழைச் செய்தி கிடைக்கும்.

2. மால்வேர் எச்சரிக்கை:
சில நேரங்களில், இணைய தளங்களை அணுகுகையில், பிஷ்ஷிங் ("web forgery”) மற்றும் மால்வேர் எச்சரிக்கைகளை நாம் பெறலாம். நாம் எந்த பிரவு சரைப் பயன்படுத்தினாலும், அவை வழக்கமாக சில தீமை விளைவிக்கும் அபாயமான இணைய தளங்களின் பட்டியலையும் பெறுகின்றன.
இந்த பட்டியலில் உள்ள இணைய தளம் ஒன்றினை, நீங்கள் இறக்கிப் பார்க்க முயற்சிக்கையில் இந்த எச்சரிக்கை செய்தி காட்டப்படுகிறது. மால்வேர் புரோகிராம்களை இணைத்துக் கொண்டுள்ள இணைய தளங்கள், புகழ் பெற்ற இணைய தளங்களைப் போல தங்களைக் காட்டிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு கிரெடிட் கார்ட் எண்கள், பாஸ்வேர்ட் ஆகிய ரகசிய தகவல்களைத் திருடும் தளங்கள் பிரவுசரில் கிடைக்கும் போது, அவற்றின் முகவரிகள் பட்டியலிடப்பட்டு வைக்கப்படுகின்றன.
நீங்கள் இந்த பட்டியலில் உள்ள முகவரிகள் உள்ள தளங்களைப் பார்க்க முயற்சிக்கையில், இந்த எச்சரிக்கை செய்திகள் காட்டப்படுகின்றன. இது போன்ற செய்திகள் கிடைக்கும்போது, நாம் தொடர்ந்து அந்த தளத்தினைப் பார்க்க முயற்சிக்கக் கூடாது.

3. இணைய தளம் காணப்படவில்லை ("404 Not Found):
 அடிக்கடி கிடைக்கும் பிழைச் செய்திகளில் இதுவும் ஒன்று. இதன் பொருள்-- நீங்கள் காண முயற்சிக்கும் இணையதளம், இணையத்தில் இல்லை என்பதே.
இந்த தளம் நீக்கப்பட்டிருக்க வேண்டும்; அல்லது, நீங்கள் அதன் முகவரியைப் பிழையுடன் டைப் செய்திருக்க வேண்டும்.
 அல்லது நீங்கள் ஏதேனும் லிங்க் கிளிக் செய்து இதனைக் காண முயற்சித்திருந்தால், அந்த லிங்க்கில் எழுத்துப் பிழை இருக்க வேண்டும்.

4. சர்வர் காணப்படவில்லை (Server not found):
 பயர்பாக்ஸ் இந்த வகையிலும், கூகுள் Google Chrome could not find [website.com] எனவும் பிழைச் செய்தி காட்டினால், உங்கள் பிரவுசரால், நீங்கள் தேடும் இணைய தளத்தினைக் காண இயலவில்லை எனப் பொருள்.
 இங்கும் நீங்கள் முகவரியினைத் தவறாக டைப் செய்திருக்கலாம்; அல்லது உங்கள் டி.என்.எஸ். சர்வர் செயல் இழந்து இருக்கலாம்.

5. இணைக்க இயலவில்லை (Unable to connect):
 உங்கள் முகவரியைப் படித்த டி.என்.எஸ்.சர்வர், நீங்கள் விரும்பிய இணைய தளத்திடமிருந்து சரியான பதிலைப் பெறவில்லை என்ற பொருளில் இந்த செய்தி தரப்படுகிறது.
எனவே குறிப்பிட்ட இணைய தளம் செயல் இழந்து நிற்கலாம்.
இது போல நேர்கையில், http://www.downforeveryoneorjustme.com/ என்ற முகவரியில் உள்ள தளம் சென்று, குறிப்பிட்ட தளம் செயல் இழந்து உள்ளதா?
அல்லது உங்களுக்கு மட்டும் இணைப்பு கிடைக்கவில்லையா எனத் தெரிந்து கொள்ளலாம்.
இது போல பல பிழைச் செய்திகளை நீங்கள் பெறலாம். ஆனால், மேலே காட்டப்பட்டுள்ளவை தான், அடிக்கடி நாம் சந்திக்கும் பிழைச் செய்திகளாகும்.

நன்றி:கம்யூட்டர்  மலர்.

suranஇவ்வுலகில் வாழப்பிறந்தவர்கள் நாம் மட்டுமல்ல.நம் சக வாழ் உயிர்களுக்கும் இவ்வுலகில் சம பங்கு உண்டு.நாமும் இவர்களைப்போல் இவ்வுலகில் உருவான ஒரு விளங்கினம்தான்.சிந்திப்பதும்-தன்னலமும் மட்டுமே நமது தனி சிறப்பு.

இவ்வுலகில் வாழப்பிறந்தவர்கள் நாம் மட்டுமல்ல.நம் சக வாழ் உயிர்களுக்கும் இவ்வுலகில் சம பங்கு உண்டு.நாமும் இவர்களைப்போல் இவ்வுலகில் உருவான ஒரு விலங்கினம்தான்.சிந்திப்பதும்-தன்னலமும் மட்டுமே நமது தனி சிறப்பு.



--------------------------------------------------------------------------------------------------------------------------
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?