இடுகைகள்

உள்ளாட்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்மாவின் ஆணைக்கிணங்க உள்ளாட்சித் தேர்தல்

படம்
இந்த தேர்தலில் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களில் ஆண்கள் 2 கோடியே 88 லட்சம் பேர். பெண் கள் 2 கோடியே 92 லட்சம் பேர்.  இதர வாக்காளர்கள் 4,584 பேர். உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 91,098 வாக்குச் சாவடிகளில் நடைபெறவுள்ளது. இதில் 62,337 வாக்குச்சாவடிகள் ஊரகப்பகுதியிலும், 28,761 வாக்குச் சாவடிகள் நகர்ப்புறங்களிலும் அமைக்கப்படும். சென்னை மாநக ராட்சியில் மட்டும் 5,531 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.  கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.  கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வெள்ளை நிறத்திலும், ஊராட்சித் தலைவருக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன...

அழகிரி வெளியேற்றம்?

படம்
மதுரை மாநகராட்சியில்2009 ம் ஆண்டு தெற்கு மண்டல அலுவலக கட்டிடம் மேலமாரட் வீதியில் புதிதாக கட்டி திறக்கப்பட்டது. அப்போது அதில் ஒரு அலுவலகம் மாநகராட்சி அனுமதியின்படி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டது,அதில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நாடாளுமன்ற தொகுதி அலுவலகம் திறக்கப்பட்டு அந்த அலுவலகம் தொடர்ந்து இயங்கி வருகிறது.   இந்நிலையில், மதுரை மாநகராட்சி மன்ற கூட்டம், மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில்  நடந்தது. இதற்காக அனைத்து கவுன்சிலர்களுக்கும் 3 நாட்களுக்கு முன் வழங்கப்பட்ட கூட்ட அஜண்டாவில் இடம் பெறாத ஒரு தீர்மானம், அவசர தீர்மானமாக அச்சிட்டு ஒரு மணி நேரத்துக்கு முன் வழங்கப்பட்டது. அதில், மு.க.அழகிரியின் எம்.பி அலுவலகத்தை காலி செய்யும் தீர்மானம் இடம் பெற்று இருந்தது. இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அமளி ஏற்பட்டது.இதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எல்ராஜ், “மத்திய அமைச்சரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறீர்கள், 2009 முதல் இயங்கி வரும் அவரது எம்.பி. அலுவலகத்தை அகற்ற அவசரமாக தீர்மானம் கொண்டு வருகிறீர்கள். இதை கண்டித்து வெளிநடப்பு செய...

வாக்கு தவறி வி[போ]ட்டார்,

படம்
கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் ஊராட்சி மன்றத் தேர்தலில்சுயேச்சையாகப் போட்டியிடுபவர் கணேசன். இவர் இன்றுகாலை ஓட்டுப் போடச் சென்றபோது ஏற்கனவே நீங்கள் ஓட்டுப் போட்டுவிட்டீர்கள் என தேர்தல் அலுவலர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்ட கணேசன் அதிர்ச்சி அடைந்தார். 'நானே வேட்பாளர், எனது ஓட்டையே கள்ள ஓட்டுப் போட்டு விட்டார்களா?' என்று கோபமடைந்த அவர் அங்கு விசாரித்தபோது அது அ.தி.மு.க,வினரின் கைங்கரியம் என அறிந்தார். அதனால் கோபம் தலைக்கேறிய அவர் அ.தி.மு.கவினர்தான் இதற்குக் காரணம் என்று கோபமாக கூறியபடி திடீரென அங்கிருந்து வாக்குச் சீட்டுக்களை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினார். இதைப் பார்த்த போலீசார் அவரை விரட்டிப் பிடித்து வாக்குச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்தனர் பின் கைது செய்தனர்.கைதான கணேசன்  தனது வெற்றிவாய்ப்பு பறி போனதாக பரிதாபமாகக் கூறியபடியே போலீசாருடன் சென்றார். . _______________________________________________________________________________ ஓரியன் வாரிசுகள். இது ஒரியன் நட்சத்திரக்கூட்டத்துக்கு அருகே எடுக்கப்பட்டப் படம்.மிகவும் இளைய நட்சத்திரங்கள் இக்கூட...

வெறுத்துப்போன தா,தா,தா.பாண்டியன்.

படம்
                                           உ ள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க,ஆரம்பித்துவைத்த தனித்துப்போட்டி அ.தி.மு.கவையும் தொற்றிக்கொண்டது.கூட்டணி கட்சிகளைக் கழற்றிவிட தனித்துப்போட்டி என கூறாமல் கூட்டணிகளுக்கு மிச்சம் வைக்காமல் அனைத்துத் தொகுதிகளையும் தனது வேட்பாளர்களை நிறுத்தி ஆக்கிரமித்துக்கொண்டது. ஆனால் அது கதவை மூடிய பின்னும் மார்க்சிஸ்ட்,தா.பாண்டியன் கட்சியினர்{ இந்தியகம்யூனிஸ்ட் கட்சி என்று கூப்பிட இயலாதவாறு பாண்டியன்.அ.தி.மு.க,வின் துதிபாடி கட்சியாக்கிவிட்டார்.} தோட்டத்தின் கதவின் முன் தினம் முன்னிலையாகி அழைப்பை எதிநோக்கி நின்றனர்.ஆனால் எச்சிலைகள் வெளியே வந்து விழுந்தனவே தவிர அழைப்பு வரவே இல்லை.பேருக்கு சில அம்மா கட்சியினர் நலம் விசாரித்துவிட்டு சென்று விட்டனர். மார்க்சிஸ்டுகளுக்கு கொஞ்சம் சுயமரியாதை இருந்ததால் தனியே சில இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்து மோதி பார்க்கத்துணிந்து விட்டனர். ஆனால் தா.பாண்டியனோ அவர்கள் அவ்வாறு செய்வது அம்மாவை கோபப்படுத்திவிடும் இன்னும் கொஞ்சம்...