அம்மாவின் ஆணைக்கிணங்க உள்ளாட்சித் தேர்தல்


இந்த தேர்தலில் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களில் ஆண்கள் 2 கோடியே 88 லட்சம் பேர். பெண் கள் 2 கோடியே 92 லட்சம் பேர். 
இதர வாக்காளர்கள் 4,584 பேர்.

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 91,098 வாக்குச் சாவடிகளில் நடைபெறவுள்ளது. இதில் 62,337 வாக்குச்சாவடிகள் ஊரகப்பகுதியிலும், 28,761 வாக்குச் சாவடிகள் நகர்ப்புறங்களிலும் அமைக்கப்படும். சென்னை மாநக ராட்சியில் மட்டும் 5,531 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். 


கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். 

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வெள்ளை நிறத்திலும், ஊராட்சித் தலைவருக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக் கப்படும் வாக்குச்சாவடிகளில் ஒரு வார்டுக்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வார்டுக்கு இளநீல நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். 

10 மாநகராட்சிகள், 64 நகராட்சிகள், 255 பேரூராட்சிகளுக்கும் ஊரகப் பகுதிகளில் 193 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 332 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 3,250 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 50,640 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 6,444 கிராம ஊராட்சி தலைவர்கள் பதவிகளுக்கு அக்டோபர் 17-ல் முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

சென்னை, திண்டுக்கல் ஆகிய 2 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 273 பேரூராட்சிகளுக்கும் ஊரகப் பகுதிகளில் 195 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 323 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 3,221 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 48,684 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 6,080 கிராம ஊராட்சி தலைவர்கள் பதவிகளுக்கு அக்டோபர் 19-ல் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.


உள்ளாட்சி தேர்தலில் இந்த முறை கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் மட்டுமே மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுவர். 


மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்கிறது. 


இந்த உள்ளாட்சி தேர்தலில்  பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது.
                    அம்மாவின் ஆணைக்கிணங்க தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை 
                         மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் நேற்று வெளியிட்டார். 



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?