இடுகைகள்

தொழில் நுட்பம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குரோம் பிரவுசர் பற்றி...,

படம்
தினந்தோறும்  குறைந்த பட்சம் சில ஆயிரம் பேராவது, தங்களின் வழக்கமான பிரவுசரை விட்டுவிட்டு, குரோம் பிரவுசருக்கு மாறி வருவது இப்போது வழக்கமாகிவிட்டது.  இதற்குக் காரணம், இதன் பாதுகாப்பான தன்மை, எளிதான இடைமுகம், கூடுதல் வசதிகள், நம் விருப்பத்திற்கு வளைக்க வசதி எனப் பலவற்றைக் கூறலாம்.  கீழே அதனைப் பயன்படுத்துவதில் சில குறிப்புகள் தரப்படுகின்றன.  1. பிரவுசரில் திறந்து வைக்கப்பட்டுள்ள தளங்களுக்குச்செல்ல,கீ போர்ட் வழியாக ஒரு வழி உள்ளது.  முதலில், நீங்கள் விரும்பும் இணைய தளம் காட்டப்படும் டேப் எந்த இடத்தில் (1,2,3,4...) உள்ளது எனப் பார்க்கவும். பின்னர், கண்ட்ரோல் கீ அழுத்தி, அதன் இடத்திற்கான எண்ணை (Ctrl+3) அழுத்தினால், அந்த குறிப்பிட்ட டேப் உள்ள தளம் திரையில் கிடைக்கும். 2. ஸ்பேஸ் பாரினை அழுத்தினால், எந்த இணைய தளத்திலும், தளமானது ஒரு பக்கம் கீழாகச் செல்லும் என்பதனை நீங்கள் அறிந்திருக்கலாம்.  இதே போல, ஷிப்ட் கீ அழுத்தி ஸ்பேஸ் பார் அழுத்தினால், அதே போல பக்கங்களைத் தாண்டிச் செல்லலாம். 3. குரோம் அதன் எக்ஸ்டன்ஷன்களுக்குச் செல்ல ஷார்ட் கட் கீ வழிகளை அமைக்க...

"அதிர்ச்சி"கள்

படம்
அதிர்ச்சி-1 --------------- தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாத பல துறைகள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி முடித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை பெறாமல் போன காலி இடம் 89 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது வெறும் எண்ணிக்கையாக எடுத்துக் கொண்டால், ஆண்டு தோறும் அதிகரித்து வரும் எண்ணிக்கையாகவே கூற வேண்டும். ஆனால், பல கல்லூரிகளில் ஒரு துறையில் ஒரு மாணவர் கூட சேராமல் இருப்பதுதான் மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது. அந்த துறை ஏதோ வெளியில் தெரியாத, அதிகம் பிரபலமில்லாத துறையாகக் கூட இல்லை. எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், ஐடி போன்ற மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் துறைகளாகும். அந்த வகையில், தமிழகத்தில் உள்ள சுமார் 37 கல்லூரிகளில்  எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. அதேப்போல 30 கல்லூரிகளில் தகவல் தொழில்நுட்பம் எனப்படும் ஐடி துறையில் ஒரு ம...

DTH "விஸ்வரூபம்

படம்
கமல் வெளியிட்டுள்ள அறிக்கை . " புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்... அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத்துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது. ராஜ்கமல் நிறுவனத்தின் டி.டி.எச்., முயற்சியையும் புரிதல் இல்லாததால் புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம் என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம். ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம், இது சினிமா வர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி, தமிழ் சினிமாவை ஏன் உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளை கடக்க வைக்கும் முயற்சி என்று ‌என்னை பாராட்டுகிறது. இது சந்தோஷமான செய்தி.  டி.டி.எச்-ற்கு வெகுவான வரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை. ஆனால் ஒரு சிலர் மட்டும் நாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது. இந்த டி.டி.எச். என்பது என்ன எல்லோர் வீட்டிலும் இருக்கும் டி.வி. பெட்டியா என்றால்...

ஆண்ட்ராயிட் காலம்

படம்
கூகுளின் ஆண்ட்ராயிட் இயக்குதளமானது  2012 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பிரலமான கையடக்கத்தொலைபேசிகளின் இயக்குதளமாக விளங்குமென கார்ட்னர் ஆராய்ச்சி நிறுவனம்  கூறியுள்ளது. 2012ல் சந்தையில் 49% கையடக்கத்தொலைபேசிகள் ஆண்ட்ராயிட் இயக்குதளத்தினை கொண்டவையாக இருக்குமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வருடத்தில் ‘ஸ்மாட்போன்’ விற்பனை எண்ணிக்கையானது 468 மில்லியன்களாக இருக்குமெனவும் இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 57.7 வீத அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை ஆப்பிள் இயக்குதளமானது 2 ஆவது மிகப்பெரிய இயக்குதளமாக இருக்கும் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோக்கியாவுடன் இணைந்துள்ளதால் மைக்ரோசாப்டின் விண்டோசானது 3 ஆவது மிகப்பெரிய இயங்குதளமாக இருக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.