இடுகைகள்

தியாகி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு கம்யூனிஸ்ட் கலைஞனின் கதை.

படம்
பாவலர் ஓம் முத்துமாரி. இவரை அவரது நிகழ்ச்சி ஒன்றின் போதுதான் தற்செயலாக பார்த்தேன். அதுவும் கூட்டம் எதற்காக கூடியுள்ளது என்று எட்டிப்பார்த்த போதுதான் அவரின் கலை நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. ஆனால் சிறிது நேரம் பொழுதை போக்கலாம் என்று பார்க்க ஆரம்பித்து இரண்டு மணி நேர நிகழ்ச்சியின் முடிவில்தான் பிரமிப்புடன் வெளியேறினேன். நாட்டு நடப்பை பொதுவுடமை தத்துவங்களை இனிமையான் வசிகரிக்கும் குரலில் பாடுவதுடன் ஆட்டமும் பாவலர் போடுவதை காண கொடுத்துவைக்க வே ண்டும் .அ திலும் அவர் கிழவியாக வந்து காதில் பாம்படத்துடன் சுழன்று  ஆடி  நாட்டு  நடப்புகளை கிண்டல் செய்து பாடுவதை பார்க்க வேடிக்கையாக இருப்பதுடன் மட்டுமல்ல நம்மை சிந்திக்கவும் வைத்துவிடும். அவர் மறைவை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை . பாவலர் ஓம் முத்துமாரி மறைந்துவிட் டார்.  மண்ணில் புதையுண்டாலும் 70 ஆண்டுகாலம் ஆடிய அவரது கால்களின் சலங்கை ஒலிச் சத்தம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ... “வறுமை நமக்கு மாமன் முறை சிறுமை நமக்கு தம்பி முறை பொறுமை நமக்கு அண்ண...

வீர மங்கையும்- தியாகியும் ...

படம்
சாவதில் கூட முக்கியத்துவம் வேண்டும் . நாட்டில் எத்தனையோ பாலியல் வன்முறைகள்,பெண்கள் கொலைகள் நடந்தாலும் டெல்லி பெண் கற்பழிப்பும் அதன்பின்னான இறப்பும் முக்கியத்துவம் பெற்றதைப்பொல் வேறு கற்பழிப்புகள் வன்முறைகள் முக்கயத்துவம் பெற்ற தாக தெரியவில்லை. ஆனாலுமிந்த  சம்பவங்கள் கொஞ்ச நாளில் மறக்கடிக்கப்பட்டு விடும்.நினைவில் கொள்ள அடுத்த  நிகழ்வு வந்து விடும்.இதன் பரபரப்பை அந்த செய்தி ஆட்கொண்டு விடும். இன்றைய சரப்ஜித் சிங் மரணமும் அப்படித்தான். இன்று அவரது சாவுக்கு அரசு மரியாதை. இதே அரசு,மத்திய அரசும் 22 ஆண்டுகள் அவர் சிறையில் அடைபட்டி ருந்த போது அவரை விடுவிப்பதில் ஏன் முனைப்பாக செயல்படவில்லை. இந்த 22 ஆண்டுகாலத்தில் எத்தனை பாகிஸ்தான் கைதிகளை,படை வீரார்களை நாம் விடுவித்திருக்கிறோம்.அவர்களுக்கு பிணையாக சரப்ஜித் சிங் விடுவிப்பை கேட்டிருக்கலாமே? இவர் பாகிஸ்தான் சிறைக்கு சென்ற வரலாறே போதை தருவதுதான். இந்திய -பாக்   நாடுகளுக்கு  எல்லையாக  உள்ள பஞ்சாப் கிராமம் ஒன்றில் வசித்து வந்த சரப்ஜித் சிங் 27 வயது இளைஞராக இருந்த போது மது அருந்தி போதை தலைகேற  எல்லை...