ஏமாந்த சதாம் உசேன் .
சதாம் உசேன் அமெரிக்காவின் பிடியில் படுகொலை ஆன கதை நம்மை உலுக்கியது தெரியும் இது வேறு சதாம் உசேன் . மின்னஞ்சலில் வந்த தகவலை நம்பி ரூ.1.39 லட்சத்தை பறி கொடுத்தார் திருப்பத்தூர் இன்ஜினியர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சிவராஜ்பேட்டையை சேர்ந்தவர் சதாம் உசேன். பி.இ முடித்து விட்டு வேலைக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் சதாம் உசேனின் இமெயில் முகவரிக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு இமெயில் வந்தது. அதில், நாங்கள் குறிப்பிடும் வங்கியில் நீங்கள் 5 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.4.50 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் இதுகுறித்த மேல் விவரம் அறிய ஒரு செல்போன் நம்பரும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து கடந்த 9, 10ம் தேதிகளில் இமெயிலில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட சதாம் உசேன், பணம் செலுத்த வேண்டிய விவரம் குறித்து கேட்டுள்ளார். அப்போது மறுமுனையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசிய ஒரு பெண், தான் குறிப்பிடும் வங்கிகளில் பணம் செலுத்தினால் பெரிய நிறுவனங்கள் மூலம் உங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம...