இடுகைகள்

கோவில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மதம் பிடித்தவர்கள்.......,

படம்
தனது முகநூலில்[Facebook] கடவுள் இல்லையென்று தனது கருத்தைஎழுதியதற்காக 30 மாதச் சிறைத்தண்டனை பெற்றுள்ளார் இந்தோனேசியர் ஒருவர். Facebookஇல் ஒரு நாத்திகக் குழுவை உருவாக்கிய இந்நபர் அதில் நகைச்சுவையான கருத்துக்களையும் முகமது நபியை பற்றியும் தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார். மதரீதியான வெறுப்பையும்,மத எதிப்பையும் பரப்பினாரமென்று இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.இந்தோனேசியாவில்உள்ள மேற்கு சுமாத்ராவில் Muaro Sijunjung என்ற இடத்தில்வழ்க்கு நடை பெற்றுள்ளது. உலகில் உள்ள மக்கள் தொகை அதிகமான முஸ்லீம் நாடு இந்தோனேசியா.நீதிமன்றத்தால் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அவருக்கு கொடுக்கப்பட்டது.ஆனாலும் சில மதவெறியர்கள்அவரை நீதிமன்றம் முன்பாக காவல்துறையின் ஆதரவுடன் அடித்துதாக்கியுள்ளார்கள். மதம் ஆதரவாக பேசுபவர்களுக்கு உரிமை இருப்பது போல் மதம்.கடவுள் நம்பிக்கை யற்றவர்களுக்கும் அக்கருத்துக்களை வெளியிட உரிமை மறுக்கப்படுவது மோசமானது. சாலையில் மேடை அமைத்து காதை கிழிக்கும் ஒலிபெருக்கி வைத்து மதப்பிரச்சாரம் செய்யும் மனிதர்களுக்கான உரிமை இறை மறுப்பாளர்களுக்கு இல்லாதது ஏன்? தொலைக்காட்சி மூலமும் மணிக்கண...

குழந்தையை வீசும் சடங்கு?

படம்
கீழேபலர்கூடியிருக்க, ஒரு குழந்தை 30 அடி கோயிலின் உச்சியிலிருந்து தூக்கி வீசப்படுகிறது. மதச் சடங்குகளை நிறைவேற்றும் பொருட்டு, கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட்டில் சமீபத்தில் நடந்துள்ளது. உள்ளூர்வாசிகள் இவ்வாறு செய்தால் புதிதாக பிறந்த குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் என நம்புகின்றனர். இது முட்டாள்தனம் என்பதை விட வேறு என்ன பெயரிட்டு அழைக்கமுடியும். உடல்நலத்தை விட தவறினால் உடல் மோசம் அடையும் வாய்ப்புகள்தான் அதிகம். இவ்வாறு காற்றில் தூக்கி வீசப்படும் குழந்தைகள் 2 வயதுக்கும் கீழே இருப்பவையே. அவ்வாறு தூக்கி வீசப்பட்டுகீழே வரும்குழந்தைகளை அவர்களின் பெற்றோர் துண் விரித்து பிடித்துக் கொள்ள வேண்டும்-பிடித்துக் கொள்கின்றனர். துண்டு விலகினாலோ -வேகமாக காற்று வீசுவதாலோ,அல்லது குழந்தை அதிக பயத்தினால் அசைவு அதிகமாகி பெற்றோர் குறி தவறி விட்டால்? நாக்ரலா கிராமத்தில் நிகழ்ந்த திகம்பேசுவர கோயில் திருவிழா காணொளிக் காட்சியில் கோவிலின் மேற்புரத்தில் ஒரு நபர் அமர்ந்து கொண்டு குழந்தைகளை மேற்கண்டவாறு தூக்கி வீசுகிறார். அக்குழந்தைகளை கீழே காத்திருக்கும் கூட்டம் பிடித்துக் கொள்...

எச்சில் இலையில் கடவுள்,,?

படம்
கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சன கன்னடா என்ற மாவட்டத்தில் இருக்கும் குகி சுப்ரமணியா கோயிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது உருண்டு நேர்த்திக் கடன் செய்யும்முட்டாள்தனம் இன்றும் உள்ளது. ”இது சாதி உள்நோக்கம் கொண்டது.மனிதஉரிமைக்க்கு எதிரானது, இதை தடை செய்ய வேண்டும்” என்றுஎதிர்த்த சமுகஆர்வலரைத் தாக்கியுள்ளனர்.    மடிசனான என்று அழைக்கப்படும் இந்த நேர்த்திக்கடன் முறை மூட நம்பிக்கைகளை தொடர்ந்து மீள வலியுறுத்தவே பயன்படுத்தப்படுகிறது.மேல் சாதி-கீழ்சாதி வேறுபாடுகளை நிலை நிறுத்தவே இது போன்ற வழிபாட்டு முறைகள் வழிவகுக்கிறது.மத்திய-மாநில அரசுகள் இவ்வழிப்பாட்டு முறையை தடை செய்ய வேண்டும். முன்பு இந்த வழிபாடு முறைக்கு சில போராட்டங்கள் மூலம் தடை விதிக்கப்பட்டிருந்தது.ஆனால் இப்போது கர்நாடாக மாநிலத்தை ஆளும் பாரதீய ஐனதாஅரசு இந்த வழிபாட்டுக்கு இருந்த தடையை திங்கட்கிழமையன்று விலக்கிவிட்டது. அது என்ன பிராமணர்கள் எச்சில் இலை மீது உருள்வது.அப்படி உருள்பவர்களில் பிராமணர்கள் இல்லையே அதை மற்ற உருளும் மடையர்கள் கவனிக்கவில்லையா? ஏன் மற்றவர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது பிராமணர்கள...

புதையல்கள் அரசுக்குத்தான் சொந்தம்

படம்
.   வல்லரசு,,, விஜயகாந்த் படமல்ல,, உலகின்  வல்லரசாக மிஞ்சி இருக்கும் அமெரிக்கா  வல்லரசாக இல்லை என கருத்துக் கணிப்பில் கூறுகிறது. அமெரிக்கர்களே இந்த எண்ணத்தைக் கொண்டுள்ளனர். அமெரிக்காவின் புகழ்பெற்ற வார பத்திரிகையான’ டைம்’  ஆஸ்பன் கழகத்தோடு இணைந்து அமெரிக்கர்களிடம் ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. இந்த கருத்து கணிப்பில் பங்கேற்ற 3 அமெரிக்கர்களில் இரண்டு பேர் அமெரிக்கா வல்லரசாக தொடரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.                    அமெரிக்க அதிபர்கள் சர்வதேச விவகாரங்களில் மூக்கை நுழைப்பதை கைவிட்டு உள்ளூர் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருவதாகவும், மற்ற பிரச்சனைகளை விட பொருளாதார சீர்குலைவு மிகவும் ஆபத்து எனவும்  அமெரிக்கர்கள் கருதுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. ========================================================================   மக்களிடம் பெற்ற நகைக...