இடுகைகள்

ஊழல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரம்,ரம்,...ஊரடங்கு ஆரம்பம்.

படம்
  "நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் வேண்டாம் இன்று(05.01.22) ஆளுநர் சட்டப் பேரவை. கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து பேசும்போது குறிப்பிட்டதாவது:-  " நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் வேண்டாம் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு சமமற்ற தளத்தையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன; தொழிற் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையற்றது என்ற அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம். அதேபோல், அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்கல்வி படிப்புகளிலும் ஓ.பி.சி.க்கு 27சதவீத இடஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப்பள்ளியில் படித்து 7.5சதவீத இடஒதுக்கீட்டில் தொழிற்படிப்பு சேரும் மாணவர்களுக்கு அனைத்து கட்டணத்தை அரசே ஏற்கிறது. மேலும், அரசு பள்ளிகளை நவீனப்படுத்த 5 ஆண்டுகளில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். குறிப்பாக, 6,996 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள், கணினி கூடங்கள் அமைக்கப்படும். அதுமட்டுமல்லாது, இன்றைய காலத்துக்கு ஏற்ப பள்ளி பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். தமிழ்நாட்டுக்கென தகவல் தொழில்நுட்ப...

1,500 கோடி ரூபாய் ஊழல் .

படம்
நிலக்கரி இறக்குமதியில் மட்டும், ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் அளவுக்கு, ஊழல் நடந்துள்ளது என்றும், இந்தப் பணம், இந்தோனேஷியா வங்கிகளில் குவித்து சேமிக்கப்படுகிறது என்றும், ஒரு தகவலை, மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. தமிழக மின்வாரியத்துக்கு சொந்தமான, அனல் மின் நிலையங்களுக்கு ஆண்டுக்கு, 200 லட்சம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.  இதில், 140 லட்சம் டன் நிலக்கரி, உள்நாட்டின் கோல்  இந்தியாவின் துணை நிறுவனங்கள் மூலம் பெறப் படுகிறது. மீதி, 0 லட்சம் டன் நிலக்கரி இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்துவாங்கப்படுகிறது. அயல்நாடுகளில் நிலக்கரி விலை, 2009ம் ஆண்டில் டன் ஒன்று, 130 அமெரிக்க டாலர்களாக இருந்தது.  ஆனால், 2013ம் ஆண்டில் இருந்து நிலக்கரி விலை வீழ்ச்சி கண்டு, 30 டாலர் முதல் 40 டாலராகஉள்ளது.  இன்சூரன்ஸ் மற்றும் கப்பல் சரக்கு கட்டணம் ஆகியவற்றையெல்லாம் சேர்த்தால், ஒரு டன் நிலக்கரியின் இறக்குமதி விலை, 50 டாலர்கள் தான்.  அதாவது, இந்திய மதிப்பில்  3 ஆயிரத்து, 360 ரூபாய்.ஆனால், தமிழக மின்வாரியம், போலி ஆவணங்க...

மம்தாவை அலைக்கழிக்கும் சாரதா.

படம்
மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வரானது முதல் அடாவடி அரசியல் தான் நடத்திவந்தார். இடது சாரி கட்சியினரை திரினாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள் பார்க்கக்கூடாது,பேசக் கூடாது,திருமணத் தொடர்புகலை வைத்துக்கொள்ளக் கூடாது என்ற அளவில் தனது கட்சினருக்கு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தார். கிட்டத்தட்ட இங்குள்ள அ.தி.மு.க போன்று. கட்சிக்காரர்களோ மம்தாவை விட அதிகமாக உணர்ச்சிவசப்பட்டனர்.கம்யூனிஸ்ட்கள் வீட்டு பெண்களை கற்பழிப்போம் என்று கூட ஒரு தி.மு.காங்கிரஸ் எம்.பி.பேசி இந்தியா முழுக்க அதிர்ச்சியை ஊட்டினார். மம்தா கிட்டத்தட்ட சர்வாதிகாரி போல் ஆட்சியை நடத்த்னார். இப்போது தமிழ் நாடு முன்னாள் முதல்வர் போல் வசமாக ஊழலில் மாட்டிக்கொண்டு விடுபட முடியாமல் மிழிக்கிறார். சாரதா குழும ஊழலில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் முழுக்க தி.முல் காங்கிரசுக்காரர்கள்தான். அதில் எம்பி.க்கள்,ச.ம.உறுப்பினர்கள் என எல்லா தரப்பினரும் உண்டு.அதில்  இரு எம்.பிக்கள் தங்களுக்கு தொடர்பில்லை.மாம்தா பானர்ஜிக்குத்தான் பங்கு உண்டு.அவரை கைது செய்யுங்கள்.விசாரியுங்கள் என்று வாக்கு மூலமே சிபிஐயிடம் கொடுத்துள்ளனர். ஜெயலலிதா போலவே கட்சி,...

சந்திக்கு வந்த உள் நோக்கம்?

படம்
தமிழக நெற்களஞ்சியம் அழியும் அபாயம்! மூன்றாவது உலகப்போர் தண்ணீருக்காக ஏற்படும் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் மட்டுமல்ல ஆய்வாளர்களும் கூறிவருகின்றனர். உலகின் தட்பவெப்பமாற்றமும், பூமி வெப்பமடைதலும் இயற்கையை தலைகீழாக புரட்டிப்போட்டு வருகின்றன. இவை எல்லாம் இயற்கையின் தன்னியல்புச் செயல்கள் அல்ல. மாறாக மனிதன் இயற்கையை ஆள முயன்று தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் நடவடிக்கைகளின் நேரடி விளைவுகளே. இதன் மற்றொரு வெளிப்பாடுதான் தமிழகத்தில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம். இது தமிழகத்தையே பாலைவனமாக்கி விடும் என்பதை மறந்து விடக்கூடாதுபாண்டிச்சேரி தொடங்கி மன்னார்குடி வரை உள்ள பகுதிகளில் லிக்னைட் நிலக்கரியும், மீத்தேன் வாயுவும் குவிந்து கிடக்கின்றன என்று புவியியலாளர்கள் கண்டுபிடித்து கூறிய நாள் முதல் இவற்றைக் கொண்டு எவ்வாறு பணம் பண்ணலாம் என்று காத்துக்கொண்டிருந்த இந்திய அரசு இன்று தமிழகத்தின் நெற்களஞ்சியமான ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தையும் அதன் அருகில் உள்ள காவேரி பாயும் மாவட்டங்களையும் பாலைவனமாக்கும் திட்டத்துக்கு அனுமதி கொடுத்துள்ளது. இந்த தி...

கறைபடியவே படியாது

படம்
அரசியல்வாதிகளின் ஊழல்களை கண்டுபிடிக்க பல்வேறு பத்திரிகைகள் மற்றும் இணையதளங்கள், ரகசிய உளவு நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. வங்கிகளில் கறுப்பு பணத்தை எந்தெந்த வகையில் முதலீடு செய்ய உதவுகிறார்கள் என்பதை ரகசிய உளவு நடவடிக்கை மூலம் ‘கோப்ரா போஸ்ட்’ என்ற இணையதளம் வெளிக் கொண்டு வந்தது. ஆரம்பத்தில் இதற்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்தது. பின்னர், உண்மை இருப்பதை அறிந்து இதுகுறித்து விசாரிக்க குழு அமைத்தது. தற்போது, இந்த இணையதளம் சில எம்.பி.க்களிடம் லஞ்சம் பேசி சுற்றி வளைத்து பதிவு செய்து ஊடகங்களில் பரபரப்பாக வெளியிட்டுள்ளது.  இது குறித்து ‘கோப்ரா போஸ்ட்’ இணையதளத்தின் நிறுவனர் அனிருத்தா பஹால் கூறியதாவது: "சில எம்.பி.க்கள் சிபாரிசு கடிதங்களுக்கும் பணம் வாங்குவதை அறிந்து, அதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிவு செய்தோம். இதற்கு ‘ஆபரேஷன் பால்கன் கிளாவ்’ என்று பெயரிட்டோம். இதன்படி காங்கிரஸ், பா.ஜ., பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், அதிமுக கட்சிகளைச் சேர்ந்த சில எம்.பி.க்களை, அவர்களுக்கு நெருக்கமான தரகர்கள் மூலம் எங்கள் நிருபர்கள் தொடர்பு கொண்டனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மெட்டெரானியன் ஆயில் கம்பென...

ரயில் மூலம் 250 கோடி ரூபாய்,

படம்
மும்பையிலிருந்து ரயில் மூலம், குஜராத்துக்கு கடத்தப்படவிருந்த கோடிக்கணக்கான ரூபாயையும், நகைகள் மற்றும் விலை மதிப்புமிக்க கற்களையும், தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும், வருமான வரித்துறையினரும் பறிமுதல் செய்தனர். பைகளில் வைக்கப்பட்டிருந்த, ரூபாய் நோட்டுக்கள் மற்றும் தங்க நகைகளின் மதிப்பு, 250 கோடி ரூபாய் இருக்கலாம் என, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இவை யாருக்கு சொந்தமானவை என்ற மர்மம் விலகவில்லை. மும்பையிலிருந்து, ஆமதாபாத்திற்கு, ரயில் மூலம், கோடிக்கணக்கான மதிப்புள்ள, ரூபாய் நோட்டுக்களும், நகைகளும், விலை உயர்ந்த கற்களும் கடத்தப்பட உள்ளதாக, தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளுக்கு, தகவல் கிடைத்தது. உடன், அவர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளை உஷார்படுத்தினர்.வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவினரும், தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும், மும்பை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, நேற்று முன் தினம் இரவு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில், ரயில் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த, நான்கு லாரிகளை, வருமான வரித்துறை அதிகார...

ரெயில் பயணங்களில்

படம்
ரெயில்வே இலாகாவில் பன்சால் உறவினர்கள் செய்த மெகா ஊழல்கள் வெளியான விதம் அதிர்ச்சி தருவதாக  உள்ளது.நல்ல விறு விருப்பான கதையாக உள்ளது. மக்களுக்கு மத்தியில் ஆளும்  காங்கிரஸ் ஆட்சி மீது  அதிருப்தியை மேலும் அதிகரிக்க செய்துள்ள இந்த ஊழலை அம்பலப்படுத்தியவர் ஒரு ரெயில்வே போலீஸ்காரர்.அவர் இவ்வளவு பெரிய விவகாரமாக மாறும் என்று நினைக்காமல் தனது பணியை செய்துள்ளார். அந்த ரெயில்வே போலீஸ்டெல்லியில் உள்ள ரெயில்வே ஐ.ஜி.யின் கீழ் வேலை பார்த்து வருபவர் .  ரெயில்வே ஐ.ஜி.யும், ரெயில்வே வாரிய அதிகாரி மகேஷ்குமாரும் நீண்ட நாள் நண்பர்கள். அந்த பழக்கத்தின் அடிப்படையில் மகேஷ்குமார் லஞ்ச பணம் பரிமாற்றத்துக்கு ரெயில்வே ஐ.ஜி. உதவியை நாடினார்.  ரூ.90 லட்சத்தை நேரடியாக கொண்டு போய் கொடுத்தால், சிக்கலாகி விடும் என்று நினைத்த அவர் பணத்தை ஒப்படைக்கும் பொறுப்பை ரெயில்வே ஐ.ஜி.யிடம் கொடுத்தார். அந்த ஐ.ஜி. கொஞ்சமும் பொறுப்பின்றி தன் கீழ் உள்ள ஒரு போலீஸ்காரரை அழைத்து "மகேஷ்குமார் ஒரு சூட்கேஸ் தருவார். அதை வாங்கி கொண்டு போய் விஜய் சிங்லாவிடம் கொடுத்து விட்டுவா'...