ரம்,ரம்,...ஊரடங்கு ஆரம்பம்.


  "நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் வேண்டாம்

இன்று(05.01.22) ஆளுநர் சட்டப் பேரவை. கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து பேசும்போது குறிப்பிட்டதாவது:-


 "நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் வேண்டாம் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு சமமற்ற தளத்தையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன; தொழிற் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையற்றது என்ற அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

அதேபோல், அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்கல்வி படிப்புகளிலும் ஓ.பி.சி.க்கு 27சதவீத இடஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப்பள்ளியில் படித்து 7.5சதவீத இடஒதுக்கீட்டில் தொழிற்படிப்பு சேரும் மாணவர்களுக்கு அனைத்து கட்டணத்தை அரசே ஏற்கிறது.

மேலும், அரசு பள்ளிகளை நவீனப்படுத்த 5 ஆண்டுகளில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். குறிப்பாக, 6,996 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள், கணினி கூடங்கள் அமைக்கப்படும்.

அதுமட்டுமல்லாது, இன்றைய காலத்துக்கு ஏற்ப பள்ளி பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். தமிழ்நாட்டுக்கென தகவல் தொழில்நுட்ப கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது."

மேலும், இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு முதற்கட்டமாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இடைநிற்கும் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது” என்று கூறினார்.

https://youtu.be/VYT1jAkuHcw


தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி நாளை (ஜன.,6) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் வரும் ஞாயிறன்று (ஜன.,09) முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஞாயிறு முழு ஊரடங்கின் போது செயல்படும் சேவைகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:-

அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல், டீசல் பங்குகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவை இயங்காது.
உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படும்.

உணவு டெலிவரி செய்யும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் காலை 7 முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். இதர இ-காமர்ஸ் சேவைகளுக்கு அனுமதி இல்லை.

ஜனவரி 9 மற்றும் வார நாட்களில் இரவு ஊரடங்கின் போது விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக நிலையங்களுகு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். பயணத்தின் போது பயணச்சீட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

அனைத்து கடற்கரைகளிலும் நடைப்பயிற்சி மட்டும் மேற்கொள்ள அனுமதி.

வழிப்பாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

----------------------------------------------------------------

மாட்டிக்கொண்டார் ரா.பா'ஜி

அ.தி.மு.க ஆட்சியின்போது ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த மாதம் 18ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பண மோசடி தொடர்பான வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை கடந்த 17ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.

முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ராஜேந்திரபாலாஜி மொபைல் போன்களை ஆஃப் செய்துவிட்டு தலைமறைவானார். விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.பி.மனோகர் தலைமையில் 8 தனிப்படைகள் அமைத்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் போலிஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

ராஜேந்திரபாலாஜிக்கு உதவி செய்ததாக திருப்பத்தூரை சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலால் ஒரு தனிப்படை டெல்லிக்கும் சென்றது.

ராஜேந்திரபாலாஜி இப்படி ஒவ்வொரு இடமாக தப்பிக்கொண்டே வந்த நிலையில் அவரது நடமாட்டத்தை முடக்க அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. ராஜேந்திர பாலாஜியின் நண்பர்கள், கட்சியினர் என நெருக்கமானவர்கள், குடும்பத்தினருக்கு எந்த போன் வந்தாலும் அந்த அழைப்புகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டன.

மேலும் ரிசார்ட்கள், ஹோட்டல்களில் தங்கினால் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் அவர் ஒவ்வொரு ஊராக காரில் தப்பிக்கொண்டே இருந்தார்.

இந்த நிலையில் அவர் கர்நாடகாவில் இருப்பதாக தனிப்படை போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

சுமார் 20 நாட்களாக தனிப்படை போலிஸார் தேடி வந்த நிலையில், கர்நாடகாவில் பதுங்கி இருந்த ராஜேந்திர பாலாஜியை போலிஸார் இன்று சினிமா பணியில் பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 கி.மீ தூரம் காரில் விரட்டிச் சென்று ஹாசன் கலெக்டர் அலுவலகம் முன் முன்பாக சுற்றிவளைத்தனர்.

போலிஸ் வாகனத்தைக் கண்டு காரில் தப்பியோட முயன்ற ராஜேந்திர பாலாஜியை கர்நாடக மற்றும் விருதுநகர் தனிப்படை போலிஸார் ஹசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதன்மூலம் இந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது.



-----------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?