இடுகைகள்

ஏழை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏழைகளே இல்லை.

படம்
மன்மோகன் சிங் வாயை திறந்து பேசுவதில்லை. பேச ஆரம்பித்தால் பொய். பொய்யைத்தவிர வேறில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கை தலைவராகவும், மான்டேக் சிங் அலுவாலியாவை துணைத் தலைவராகவும் கொண்ட மத்திய திட்டக்கமிஷன், நேற்று முன்தினம், புள்ளிவிவர அறிக்கை ஒன்றை வெளியிட்டது.  அதில், நாட்டில் ஏழைகள் எண்ணிக்கை குறைந்து விட்டத.  மக்களின் வருமானம் அதிகரித்து விட்டது என புள்ளிவிவரங்கள் இடம்பெற்றிருந்தன. மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகள் நூற்றுக்கு பதினோரு பேர் மட்டும்தான்.  கிராமத்தில் ஏழைகள் விகிதம் நூற்றுக்கு 15 பேர் என்றால், நகரத்தில் 7 பேர்தான் ஏழைகள்! டெண்டுல்கர் கணிப்புமுறையில், 2004-05-ஆம் ஆண்டில் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்த ஏழைகள் எண்ணிக்கை 40 கோடி. 2011-12-ஆம் நிதியாண்டில் ஏழைகள் எண்ணிக்கை 27 கோடியாகக் குறைந்துவிட்டது; அதாவது 13 கோடி பேர் வறுமைக் கோட்டை தாண்டிக் குதித்துவிட்டார்கள்! இந்தக் கணிப்புமுறையில், ஐந்து நபர்கள் உள்ள ஒரு குடும்பம், நகர்ப்புறத்தில்மாதம்  தலா ரூ.1,...

மாடி வீட்டு ஏழை ?

படம்
மத்தியில் ஆளும் காங்கிரசு ஆட்சியில் முறைகேடுகள் வாரா,வாரம் அணிவகுத்து லட்சம் கோடிகள் என்ற கணக்கில் வந்தாலும் நமது பிரதமர் மன்மோகன் சிங் இன்னமும் மாடி வீட்டு ஏழையாகத்தான் உள்ளார். இந்த செய்தி வெளியானதிலிருந்து மனதுக்கு துன்பமாக இருக்கிறது. நம்மால் உதவ முடியவில்லையே என்ற கழிவிரக்கம் தூக்கத்தை விரட்டி விட்டது. இந்த செய்தியை படித்தால் உங்களுக்கும் அதே நிலை வரலாம்.எனவே இதயம் பலகீனமானவர்கள்,அடுத்தவர் துன்பத்தை,ஏழ்மையை தாங்கும் அளவு மன வலிமையற்றவர்கள் மேலே  படிக்க வேண்டாம் . நேற்றைய நிலவரப்படி அவரின் கையில், ஒரு பைசா கூட இருப்பு  இல்லை என்றும், அவரின் மனைவி குர்சரண் கவுரிடம், 20 ஆயிரம் ரூபாய் மட்டும் அன்றாட செலவுக்காக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.  அசையும் சொத்துகளின் மதிப்பு  4 கோடி ரூபாய் . இதில் குறைந்தபட்ச சொத்தாக  வெறும் 21 ஆயிரம் ரூபாய் மதிப்புள் ஒரு ஓட்டை மாருதி-800  கார் மட்டும் இருப்பதாக  அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கின்  மனைவி குர்சரண் கவுர் கணவர் அளவுக்கு அவ்வளவு ஏழை அல்ல. அவருக்கு...