இடுகைகள்

இன்று லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அன்றைய செய்தி இன்றைய வரலாறு

படம்
நேற்றைய  செய்தி இன்றைக்கு வரலாறு. வரலாறு கேட்கக் கதை போல் இருந்தாலும் அதை அனுபவித்தவர்கள் துன்பங்கள் தழும்புகளாக மாறுவதுடன் அவர்களை இந்த உலகை புரிய வைத்து பக்குவவப்படுத்தி விடுகிறது. அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாதது நமது தவறுதான். இயற்கையும் காலமும் நமக்கு நாளத்தூரும் பாடங்களை நடத்தி நமக்கு  பகுத்தறிவை தந்து  பக்குவப்படுத்தி வைக்கத்தான்  செய்கிறது. கடந்த கால அனுபவங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடம் படித்ததே இல்லை. அவர் எம்.ஜி.ஆருடன் ,கலைஞருடன் அரசியல் செய்தும் இருவரின் பெருந்தன்மையை அவர்  கொஞ்சமாவது கற்றுக்கொண்டதில்லை. அதிகாரம் இருக்கிறது என்பதால் காரணமே இல்லாமல் நள்ளிரவில் கலைஞரை வீட்டை உடைத்து,அவரை அடித்து உதைத்து இழுத்து கைது செய்தார். ஆனால் அவர் மீது குற்றம் சாட்ட காரணம் இல்லாததால் நீதிமன்றம் விடுவித்தது. ஆனாலும் ஜெயலலிதா கடைசிவரை ஆணவத்தின் உச்சமாகத்தான் இருந்தார்.அதனாலே அழிந்தரர். எப்படி இறந்தோம் ,என்று இறந்தோம்,என்பதையே அறியா இழி மரணம். ஆனால் அவர் அழிக்க நினைத்த கலைஞரோ  ஜெயலலிதா மரணத்துக்கும் அஞ்சலி செலுத்த...

பனங்கன்டி ராமராயநிங்கார்

படம்
 என்ற பனகல் அரசர்  பனகல் அரசர் தமிழ் நாட்டில் 1917ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத்தில்  நீதிக் கட்சியின் தலை வராகவும் - அதைத் தொடர்ந்து 1923ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் பிரதான மந்திரியாகவும் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் அப்பதவிகளில் வீற்றிருந்து 1928ஆம் ஆண்டு காலமானார். மருத்துவக் கல்லூரியில் மற்ற இனத்தவர் சேர்வதை தடுக்க பார்ப்பனர்களால் மருத்துவக் கல்லூரியில்  சேருவதற்கு கண்டிப்பாக சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட  த டையை உடைத்துத் தூக்கி எறிந்தவர். அந்தக் காலகட்டத்தில் கல்லூரிகளில் முதல்வர்களாக இருந்தவர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்கள்தாம்.  பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் கல்லூரியில் நுழைவது என்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது.அத்தகு கசப்பான சூழலில், கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கென்றே ஒவ்வொரு கல்லூரியிலும் குழு ஒன்றை அமைத்து, அவர்கள் மாணவர்களைச் சேர்க்க வழிவகை செய்து, பார்ப்பனர் அல்லாதார் வயிற்றில் பாலை வார்த்தார். பார்ப்பனர்களின் வேட்டைக்காடாக இருந்த கோயில்-களின் நிருவாகத்தை ஒழுங்குபடுத்த இந்து அறநிலையத் துறை...

பலவீனம் தான் பலம்....,!

படம்
ஜப்பானில் 15 வயது மாணவன் ஒருவனுக்கு ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது.  கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். பல மாஸ்டர்களிடம் போனான்.  எல்லோரும் அவனை பரிதாபமாய் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார்.  பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரேயொரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள் ஓடின.  குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை.  “குருவே.. ஜூடோ சாம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்றான்.  “இந்த ஒரேயொரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்” என்றார் குரு. மாணவன் பயிற்சியைத் தொடர்ந்தான். சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது.  முதல் போட்டி.  சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி.  ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்த மாணவன். போட்டி ஆரம்பமானது.  எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக மாணவன் வெற்றி பெற்றான். ...

சல்லிசான விலை

படம்
சூரியனை பிளாட் போட்டு ஒரு பெண் விற்றுள்ளார்.  இதுவரை தமிழகத்தில் குளம்,ஏரிகளை மனை களாகப் பிரித்து விற்று பனம் சம்பாதித்தவர்களைப் பார்த்திருக்கிறோம். அவர்களை விஞ்சி ஸ்பெயினை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்-லைன் வர்த்தக நிறுவனமான இ-பேயில் இதற்காக விளம்பரம் செய்து சுமார் 700 ப்ளாட்களையும் அவர் விற்றுள்ளார்.  ஆனால் தனக்கு சேர வேண்டிய பணத்தைத் தராமல் இ-பே நிறுவனம் மோசடி செய்துள்ளதாக தற்போது வழக்கும் தொடர்ந்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் கால்சியா பகுதியைச் சேர்ந்த 54 வயதாகும் மரியா டுரான் என்ற அந்தப் பெண், கடந்த 2010ம் ஆண்டில் இருந்து சூரியன் தனக்குச் சொந்தமானது என்று கூறி இந்த விற்பனையை செய்துள்ளார். சூரியன் தனக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து சூரியனை பிளாட் போட்டு விற்க முயற்சித்துள்ளார். ஒரு சதுர மீட்டர் நிலம் ஒரு யூரோ என்ற அடிப்படையில், பிரபல ஆன்-லைன் வர்த்தக நிறுவனமான இ-பேயில் விளம்பரம் செய்துள்ளார்.  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவருடைய இந்த விற்பனையை தெரிந்துக் கொண்ட இ-பே, சூரியனில் பிளாட் போட்டு விற்கும் அந்த பெண்ணின் விளம்ப...

திருநங்கைகளுக்கு உரிமை

படம்
 திருச்சி சிவா சாதனை! 45 ஆண்டுகளுக்கு பிறகு தனிநபர் மசோதா வெற்றி!! "திருநங்கைகளுக்கு சம உரிமை" மசோதா.  கடந்த 45 ஆண்டுகளுக்குப் பிறகு தனி நபர் கொண்டு வந்த தீர்மானம் ஒன்று முதன்முறையாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை கொண்டு வந்தவர் திமுக எம்பி திருச்சி சிவா.   மாநிலங்களவையில் கடந்த மார்ச் மாதம், திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்கும் தனிநபர் மசோதாவை, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தாக்கல் செய்தார். அதில், "சமூகத்தில் சுமுகமான முறையில் திருநங்கைகளும் தங்கள் வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில், ஆண்கள் மற்றும் பெண்களை போலவே திருநங்கைகளுக்கும் சமூகத்தில் சம உரிமை வழங்க வேண்டும்"  என்று குறிப்பிட்டிருந்தார்.  திருநங்கைகளின் வாழ்க்கைக்கான உரிமை, தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாத்தல், உடல் மற்றும் மனரீதியான கொடுமைகளில் இருந்து அவர்களை பாதுகாப்பது, அவர்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது, கவுரவமான வசிப்பிடங்கள் மற்றும் அவர்களுக்கான குடும்பங்களை அமைப்பதற்கான உரிமை, கருத்து சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளத...