அன்றைய செய்தி இன்றைய வரலாறு

நேற்றைய  செய்தி இன்றைக்கு வரலாறு.

வரலாறு கேட்கக் கதை போல் இருந்தாலும் அதை அனுபவித்தவர்கள் துன்பங்கள் தழும்புகளாக மாறுவதுடன் அவர்களை இந்த உலகை புரிய வைத்து பக்குவவப்படுத்தி விடுகிறது.
அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாதது நமது தவறுதான்.

இயற்கையும் காலமும் நமக்கு நாளத்தூரும் பாடங்களை நடத்தி நமக்கு  பகுத்தறிவை தந்து  பக்குவப்படுத்தி வைக்கத்தான்  செய்கிறது.

கடந்த கால அனுபவங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடம் படித்ததே இல்லை.
அவர் எம்.ஜி.ஆருடன் ,கலைஞருடன் அரசியல் செய்தும் இருவரின் பெருந்தன்மையை அவர்  கொஞ்சமாவது கற்றுக்கொண்டதில்லை.

அதிகாரம் இருக்கிறது என்பதால் காரணமே இல்லாமல் நள்ளிரவில் கலைஞரை வீட்டை உடைத்து,அவரை அடித்து உதைத்து இழுத்து கைது செய்தார்.

ஆனால் அவர் மீது குற்றம் சாட்ட காரணம் இல்லாததால் நீதிமன்றம் விடுவித்தது.

ஆனாலும் ஜெயலலிதா கடைசிவரை ஆணவத்தின் உச்சமாகத்தான் இருந்தார்.அதனாலே அழிந்தரர்.
எப்படி இறந்தோம் ,என்று இறந்தோம்,என்பதையே அறியா இழி மரணம்.

ஆனால் அவர் அழிக்க நினைத்த கலைஞரோ  ஜெயலலிதா மரணத்துக்கும் அஞ்சலி செலுத்தும் உயரத்திலேயே வாழ்கிறார்.

இனி அன்றைய 2001 கரும் நள்ளிரவு வரலாறு.. 

நள்ளிரவில் கொலைகார காவல்துறையால் குண்டுகட்டாக கலைஞரை தூக்கி எறியப்பட்ட அவரின் காரினுள் இரண்டு மஃப்டியில் இருந்த காவல்துறையினர் அமர்ந்து கொள்ள வேப்பேரி காவல்நிலையத்துக்கு போனதும் காவல்நிலையத்தின் வாயில்கள் அடைக்கப்பட்டன.

வெளியே நிருபர்கள் மீதும் கழகத்தினர் மீதும் லத்திசார்ச்.. கேட் இடுக்கில் மாட்டிக்கொண்ட பெண் நிருபர் மீது தடியடி நடத்த.. அவரது கால் முறிகிறது.
சாலையே தெரியாத அளவுக்குக் குவிந்துகிடந்த போலீஸார், நீதிபதியின் குடியிருப்புக்கு 100 அடி தூரத்திலேயே நிருபர்களைத் தடுத்து நிறுத்தினர்.

''செய்தி சேகரிப்பது எங்கள் உரிமை!'' என்றபடி நிருபர்கள் முன்னேற, '
'உங்களைத் தடுப்பது எங்கள் கடமை!'' என்று வக்கிரமாகச் சொன்ன ஒரு போலீஸ் அதிகாரி,
 லத்தி சார்ஜுக்கு உத்தரவு போட்டார்.

போலீஸ் ஸ்டேஷனை நெருங்க முயன்ற நிருபர்களுக்கு, அங்கேயும் காட்டுத்தனமான தாக்குதல் பரிசாகக் கிடைத்தது.

விழுந்த அடிகளில் இரண்டு மூன்று கேமராக்கள் நொறுங்க, உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, கிடைத்த இண்டு இடுக்கில் எல்லாம் புகுந்து ஓடினார்கள் நிருபர்கள்.

அதில் பெண் நிருபர்களைக்கூட விடாமல்... அவர்கள் தரையில் தடுக்கி விழுந்தபோதும் லத்தியால் தாக்கித் தள்ளியது போலீஸ்.
''சிறையில் அடைக்கப்படும்வரை கலைஞரை யாரும் ஒரு புகைப்படம்கூட எடுத்துவிடக் கூடாது. அவருடன் யாரும் ஒரு வார்த்தைகூட பேசிவிடக் கூடாது.


அதைக் கவனத்தில் கொள்ளுங்கள்'' என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பனிடம் இருந்து வந்த உத்தரவுதான் இத்தனைக்கும் காரணம் என்று பிற்பாடுதான் புரிந்தது.
கலைஞரை அப்படியே நிற்க வைத்து இருப்பதை பார்த்த அவரது மருத்துவர்.. "சார் அவருக்கு "வார்டிகோ" பிரச்சினை இருக்கு.

பத்து நிமிஷத்துக்கு மேல அவர் நிற்கக் கூடாது " என்ற போது.. "ஆங்.. அவரை பட்டு மெத்தையில் வச்சி பராமரிக்கவா" ன்னு கமென்ட் வந்த போது காவல்துறையின் கொடூற குணம் புரிய ஆரம்பித்தது.
கலைஞருக்கு என்னவேனாலும் ஆகும் நிலை..
அடுத்தடுத்து வந்த கார்களில் கலைஞரின் குடும்பத்தினர்..
கடைசியாக வந்த காரில் மாறன் வந்திறங்கிய போது ஒட்டுமொத்த கூட்டமும் நடுங்கித்தான் போனது.
நார்நாராக வேட்டி கிழிந்து உள்ளே இருக்கும் அன்டர்வேர் தெரிய தள்ளாட்டத்துடன்... ஓட்டமும் நடையுமாக வந்தவர் " நான் வயசானவன்.. ஹார்ட் பேஷன்ட்... மார்பில குத்திட்டாங்க.

ரொம்ப அடிச்சிட்டாங்க... முடியல, என்னால முடியல" ன்னு கதறிய போது.. அருகிலிருந்த துரைமுருகன் வாய்விட்டு "அய்யோ... அண்ணா... அய்யோ" என்று தலையில் அடித்துக்கொண்டு ஓலமிட்டு அழத் தொடங்கி விட்டார்.
உரத்த குரலில் கேள்விகள் கேட்ட முரசொலி மாறனின் சட்டையைப் பிடித்து கீழே தள்ளினார் ஒரு போலீஸ்காரர்.
இன்னொருவர் ஸ்டேஷனுக்குள் இருந்த நாற்காலியை அவரை நோக்கி எட்டி உதைக்க, மாறனின் காலில் சுளீரெனத் தாக்கியது அந்த நாற்காலி.

இதனைத் தொடர்ந்து மாறன் வாய்விட்டு அலறியது ஸ்டேஷனுக்கு வெளியிலும் கேட்டது.
"தலைவரின் செருப்பை கூட போட்டுக்க அனுமதிக்கல பாவிங்க.
இந்தா கொண்டாந்துருக்கேன்" என்று அவர் கையிலிருந்த கலைஞரின் வெள்ளை நிற செருப்பை நீட்ட.. அவரின் பேச்சை கூட கேட்கிற நிலையில் இல்லாத மாறன் கண்கள் குத்திட்டு வெறிக்க வெளிவாணத்தை பார்த்தவாறே நீதிபதியின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
ரிமாண்ட் போடப்பட்டு வெளியே வந்த கலைஞரின் சட்டை கிழிந்து.. வேட்டியை மார்புவரை அவரே தூக்கி பிடித்து தள்ளாடி நடந்து வந்த போது, குடும்பத்து பெண்கள் கதறியழ, கலைஞர் கைகளால் ஆறுதல் சொல்லி போலீஸ் வண்டியில் ஏறினார்.
கலைஞரை பொதுமருத்துமனைக்கு மருந்துவ சோதனைக்கு அழைத்து போவதாக சொன்ன பாவிகள் அரைமணிநேரம் அவரை அலைகழித்து... யாருடைய உத்தரவை பெற்றனரோ, மருத்துவமனைக்கு கொண்டு போகச் சொன்ன மாஜிஸ்திரேட் உத்தரவை மீறி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
ஜெயில் வளாகத்தை நெருங்க முடியாத அளவில் பாலத்துக்கருகே அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டன.
"தலைவா.. நீ சம்பளத்தை உயர்த்தி கொடுத்த போலீஸ்காரனே உன்னை அடிக்கறதை தாங்க முடியலையே" ன்னு தொண்டர் ஒருவர் மயங்கி விழ அவரை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.
சிறையின் முன்பு இருந்த சிமென்ட் தளத்தில் அப்படியே சப்பணமிட்டு அமர்ந்த கலைஞர் ஓங்கி உயர்ந்த சிறைக் கட்டடத்தை ஒரு தரம் நிமிர்ந்து பார்த்தார். குடும்ப டாக்டர் கோபாலும், கனிமொழியும் அடக்க மாட்டாமல் விம்மி அழத் தொடங்கிவிட்டார்கள்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட கனிமொழி, மேலே நிமிர்ந்து பாலத்தின் மேலே இருந்த பத்திரிகையாளர்களைப் பார்த்து, ''தலைவருக்கு சிறைச்சாலை பயம் இல்லை... ஆனால், நீதிபதி உத்தரவு போட்ட மருத்துவ வசதி எதுவும் சிறைச்சாலைக்குள் அவருக்குக் கிடைக்கப்போவது இல்லை. அவரைச் சிறையில் தள்ளினால் மறுபடி பார்க்க முடியுமா என்பதே சந்தேகம்தான்...'' என்று சொல்லிக் கதறினார்.
அதே சமயம் அங்கு வந்து சேர்ந்தார் துர்கா. அவர் மகன் உதயநிதியும் மகள் செந்தாமரையும் இறங்​கினர்.
''போட்டுட்டாங்களா... நிஜமாவே தலைவரை உள்ளே போட்டுட்டாங்களா?'' என்று நம்ப முடியாதவராக மறுபடி மறுபடி நிருபர்களிடம் கேட்டார் துர்கா.
''உங்கள் வீட்டுக்குள்ளும் போலீஸ் புகுந்ததாமே...?'' என்று நிருபர்கள் கேட்க,

''ஆமாம். மேயரைத் தேடிக்கிட்டு வர்றதா சொன்னாங்க. அவர் வீட்டில் இல்லைனு சொன்னபோதும், எங்களைத் தள்ளிவிட்டுட்டு உள்ளே புகுந்து சூறையாடினாங்க. வாசல் கேட்டில் தொடங்கி, உள்ளே இருக்கிற அறைகள்வரை கைக்குக் கிடைத்ததை எல்லாம் உடைச்சுத் தள்ளினாங்க.

பொம்பளைனுகூடப் பார்க்காம திரும்பத் திரும்பக் கையைப் பிடித்து இழுத்து. 'உன் புருஷன் எங்கேனு சொல்லு!?’னு என்னை சித்ரவதை பண்ணாங்க...'' என்று துர்கா சொல்ல,
மகள் செந்தாமரை, ''இவ்வளவு பத்திரிகைகாரங்க நாட்டில் இருக்கீங்களே... இந்தக் கொடுமையை யாருமே தட்டிக் கேட்க மாட்டீங்களா?''
என்று தாயின் தோளில் சரிந்து விம்மினார்.
ஸ்டாலின் மகன் உதயநிதி நம்மிடம், ''எதுக்குக் கைது... வாரன்ட் இருக்கா? என்பது போன்ற எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை. '

உங்கப்பன் பயந்து ஓடிட்டானா?’னு எகத்தாளமா என்னைக் கேட்டாங்க. இப்ப எங்க அப்பா எங்கே இருக்கார்னே தெரியலை...'' என்று உதயநிதி குமுறி அழுதார்.

அப்போது சென்னைக்கு உள்ளேயே தளபதியை மடக்கிக் கைது செய்யப்பட்டதாக செல்போனில் ஒரு தகவல் வந்து சேர்ந்தது. அனால், அது உண்மை இல்லை என்பது பின்னர் தெரிந்தது
நீதி கேட்டு வாசலில் அமர்ந்து கொண்ட கலைஞருடன் போலீஸார் கைகளை நீட்டி வாக்குவாதம் செய்ய.. அதே வேகத்தில் கலைஞரும் ஆக்ரோஷமாக பேசுவதை தூரத்தில் இருந்து காண முடிந்தது.
ஒரு போலீஸ்காரர் உள்ளே போய் ஃபைபர் சேர் ஒன்றை கொண்டு வர. . அவரின் அதிகாரி அந்த போலீஸை அடிக்க பாய்ந்தார்.
ஒரு வழியாக மறுநாள் காலை 7 மணிக்கு சிறையின் வாசல் திறந்து கலைஞரை அது உள்வாங்கி கொண்டது.
என்னண்னே நடக்குது இந்த நாட்டிலே? என்று வீரபாண்டியரை பார்த்து கேட்ட செல்விக்கு பதில் சொல்லும் முன்பே அவரின் வாய் அதிர்ச்சியில் கோனிக்கொண்டது.
காலை 8.30 மணிக்கு கோபாலபுரம் வீட்டுக்கு வந்த தளபதி அங்கு வந்த இல.கணேசனுடன் சிறிது நேரம் பேசிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். '

'தலைவரை அராஜகமாக அடித்து, இழுத்துக் கைது செய்து கொண்டு போயிருக்கிறார்கள். எங்கள் குடும்பத்துப் பெண்களிடம் போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டனர்.

எல்லா வெறியாட்டத்துக்கும் காரணமானவர்களைத் தண்டிக்காமல், எனது அரசியல் வாழ்க்கை இனி ஓயாது.

நானும் இன்னும் சிறிது நேரத்தில் நீதிபதி முன்பு சரண்டர் ஆகப் போகிறேன்...'' எனப் படபடப்புடன் நிருபர்களிடம் சொல்லி முடித்தார்.

ஆனால் கலைஞர்,தளபதி இருவர் மீதும் போய் வழக்கு கூட போட இயலாமல் ஜெயலலிதா தவிக்க நீதிமன்றம் இருவரையும் விடுவித்தது.
 ஜெயலலிதா அழிக்க நினைத்த இருவரும் அரசியலில் இன்றும்  சக்திகளாக உள்ளனர். 
இருவரையும் அழிக்க எண்ணிய ஜெயலலிதா ?
நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட  என்னும் அவலத்தின் மூலம் மையமாகி  போனார்.

பகுத்தறிவாளர் கலைஞரை  ஒழிக்க நடத்திய மித்ரு சம்ஹார யாகம் எத்தனை,?

தன்னை வளர்த்துக்கொள்ள,நீதிமன்ற தண்டனைகளில் இருந்து தப்பிக்க செய்த யாகங்கள் எத்தனை?

தவவாழ்க்கை வாழ குவித்த பண,சொத்து மூட்டைகள் எத்தனை?
,
சோதிடர்கள் கூறியதால் நடத்திய  பரிகாரங்கள் எத்தனை,கொடுத்த யானைகள் எத்தனை ?

ஆனால்  நடந்தவைகள்  என்ன?

தவ வாழ்க்கை தவறாக வாழ்ந்து காட்டிய  வாழ்க்கையாக அல்லவா போனது!

ஜெயலலிதா அழித்தொழிக்க நினைத்த திமுக ஆளுங்கட் சிக்கு இணையாக ச.ம.உ,க்களை கொண்ட எதிர் கடசியாக பணிபுரிகிறது.

கலைஞர் தனது 60 ஆண்டுகால சட்டமன்ற உறுப்பினர் பணிக்கு வைர விழா நாயகனாக இருக்கிறார்.

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே தொடர்ந்து போட்டியிட்ட 13 தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடிய பெருமைக்கு சொந்தக்காராகி காட்சியளிக்கிறார்.


இதை எல்லாம்  கூற வேண்டியதில்லை.அத்தனையும் கண் முன்னாள் கண்ட சாட்சிகள் நீங்கள்.ஆனாலும் சில ஊடகங்கள் இவற்றை மக்கள் மறக்கவேண்டும் என்பதற்காகவே பாடுபட்டு தேவையற்ற கருத்துக்களை,பொய்களை செய்திகளாக்கி வருகின்றன.

ஆனால் இதுதான் அன்றைய செய்தி

 இன்றைய வரலாறு.

===============================================================================================

ன்று,

மே-25.

  • அர்ஜெண்டினா தேசிய தினம்
  • அமெரிக்கா தனது முதல் அணுஆற்றலினால் இயங்கும் பீரங்கியைச் சோதித்தது(1953)
  • ஆப்ரிக்க ஒன்றியம் உருவானது(1963)
  • லிபனான் விடுதலை தினம்(2000)
=================================================================================================

நா.காமராசன், 
1942 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் பிறந்தார். 
அப்பா பெயர் நாச்சிமுத்து, அம்மா இலட்சுமி அம்பாள். 

 மதுரை தியாகராயர் கலைக்கல்லூரியில் படிக்கும் பொழுது அந்த நேரத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று சிறை சென்றவர். 
சிறு வயது முதலே தமிழ்மீது தீராத ஆர்வத்தைக் கொண்டிருந்தவர், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்பு துறையில் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

எம்.ஜி.ஆர் காலத்தில் திரைப்படத்துறையில் அறிமுகமான இவர் பல படங்களுக்குப் பாடல்களும் எழுதியுள்ளார்.  அ.தி.மு.கவில் பதவியை எம்.ஜி.ஆர்.நா.காமராசனுக்கு வழங்கியுள்ளார்.

காமராசனின் எழுத்துகளில் நிறைய புத்தகங்களும் வெளிவந்துள்ளன. இவரின் "தாஜ்மஹாலும் ,சில ரொட்டித்துண்டுகளும்"கவிதை நூல் பலத்த வரவேற்பை பெற்று இவரை சிறந்த கவிஞராக பிரபலப்படுத்தியது.

சென்னையில் வசித்து வந்த அவர், இன்று திடீரென உடல்நலக் குறைபாட்டின் காரணமாக உயிரிழந்தார். 
====================================================================================================
பாஜக அரசின் மூன்றாண்டு சாதனைவேதனை .
முதலாளிகளுக்கு வழங்கும் உதவிகளை, சலுகைகளை பாஜக மோடி அரசு விவசாயிகளுக்கு ஏன் தர மறுக்கிறது . 
தொழில் வளர்ச்சி போலவே, வேளாண்மை வளர்ச்சியும் நாட்டுக்கு முக்கியமில்லையா? 
ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் என்ற முறையில் தான் விவசாயத்தை- விவசாயிகளை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் மத்திய பாஜக மோடி அரசு புறக்கணிக்கிறது. 
 மோடி அரசின் முதலாளித்துவ அடிவருடி  அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். இல்லையென்றால் ஆட்சியாளர்களை மாற்ற மக்கள் தயங்க மாட்டார்கள் .
பாஜக மோடி அரசுதமிழ்நாட்டிற்கு துரோகம்:
பாஜக மோடி அரசு அமைந்ததில் இருந்தே தமிழ் நாட்டை ஒதுக்கியே வைத்துப்பார்க்கிறது.
காரணம் இங்கு அதன் வளர்ச்சி காணல நீர்.
காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு 2007ம் ஆண்டு வழங்கப்பட்டது. 
பலகட்ட போராட்டத்திற்கு பிறகு 2013 பிப்ரவரி 19ந் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.
 2016 செப்டம்பர் 20ந் தேதி காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. செப்-27ந் தேதி அக்டோபர் 4ந் தேதிக்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்று கறாராக உத்தரவிட்டது. 
உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவை ஏற்றுகொண்டது மட்டுமல்லாமல் அதற்கான பணிகள் துவங்கிவிட்டதாகவும் தெரிவித்தது.
திடீரென்று அக்டோபர் 3ந் தேதி அந்தர்பல்டி அடித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது. பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றித்தான் வாரியம் அமைக்க முடியுமென்று கர்நாடக மாநிலத்திற்கு சாதகமாக நடந்து கொண்டு தமிழகத்திற்கு பெருந்துரோகத்தை இழைத்தது. 
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் மூலம் மத்திய பி.ஜே.பி அரசு தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 
பன்மாநில நதிநீர்தாவா சட்டம் 1956ன் படியும் அதற்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட திருத்த சட்டப்படியும், மேலாண்மைவாரியம் அமைக்கப்பட்ட பிறகு ஒரு மாதத்திற்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டுமென்று இருக்கிறதே தவிர, அமைப்பதற்கே பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றும் செயலில் பி.ஜே.பி அரசு ஈடுபட்டது.
விவசாயிகள் கொத்து கொத்தாய் செத்துமடிவதைப் பற்றி கவலைப்படாத ஆட்சியாளர்கள் பசுவை காப்பாற்றுகிறேன் என்று பிரச்சனையை திசை திருப்புகிறார்கள். 
பால் சுரப்பு நின்று போன பசுக்களை பராமரிப்பது விவசாயிகளுக்கு பெரும் சுமை. மாட்டு தீவனத்தின் கடுமையான விலை உயர்வின் காரணமாக கறவை மாடுகளுக்கே தீவனம் போதுமான அளவு வழங்க முடியாத போது வயது முதிர்ந்த மாடுகளை விவசாயிகளால் எப்படி பராமரிக்க முடியும். 
பசு பாதுகாவலர்கள் வேண்டுமானால் சந்தை விலையை கொடுத்து இத்தகைய பசுக்களை வாங்கிக் கொள்ளட்டும். மாறாக மாடுகளை விற்பதை தடுத்து, மாட்டு வியாபாரிகளை தாக்குவது, மாட்டுகறி வியாபாரிகளை கொலை செய்வது போன்ற வெறித்தனமான வகுப்பு வாத நடவடிக்கையால் விவசாயிகள் ஒற்றுமையை சீர்குலைக்கும் வேலைகளில் மட்டும் தான்  பாஜக மோடி அரசு தீவிரம் காட்டுகிறது .
====================================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?