இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏழைத்தாய் மற்றும் விவசாயி மகன்கள்.

படம்
  வெ ங்காய விலை, உரிக்காமலேயே கண்களில் நீரை வரவழைக்கும் அளவிற்குத் தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனையொட்டி விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் வெங்காய ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் விநியோகத்தில் துரிதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றன. கடந்த செப்டெம்பர் மாதத்திலேயே சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்தை ஒட்டி,  வெங்காயத்திற்கான ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது மத்திய அரசு. மத்திய அரசு தெற்காசிய நாடுகளில் இருந்து வெங்காய இறக்குமதிக்கு பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகத் தெரிகிறது. பல மாநிலங்களில் தேர்தல்கள் அடுத்தடுத்து வரும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தலில் தனது ஓட்டுக்களை எப்படியாவது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, வெங்காய இறக்குமதியில் நுகர்வோர் பாதுகாப்புக்காக இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளையும் தளர்த்தி உள்ளது. குறிப்பாக வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் போது, அவ்வெங்காயத்தில் பூச்சிக்கொல்லி மருந்து நீக்கச் சான்றிதழை அவசியம் பெற வேண்டும் என்ற விதியை

பயமுறுத்தல்.

படம்
  மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதாக நாடு முழுவதும் மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மாநிலவாரியான நீட் தேர்ச்சி பட்டியலில் தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கையைவிட தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை பல மாநிலங்களில் கூடுதலாக இருந்தது அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தேர்வு முடிவுகள் நீக்கப்பட்டு மீண்டும் பட்டியலிடப்பட்டது. குளறுபடிகள் அதோடு தீர்ந்துவிடவில்லை. பல மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகலில் விடை குறிக்கும் பகுதி மாறியிருப்பதாக புகார் தெரிவித்தனர். அரியலூர் மாவட்டம் தத்தனூர்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தான் 680 மதிப்பெண்களுக்கு மேல் வரும் என எதிர்பார்த்த நிலையில் வெறும் 37 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததால் அதிர்ச்சியடைந்தார். அந்த மாணவி 3 வினாக்களுக்கு மட்டுமே பதிலளிக்காத நிலையில், 7 வினாக்களுக்கு பதில் அளிக்கவில்லை என தேர்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதனால் தனது விடைத்தாள் (OMR) மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பினார். கோவை மாவட்டம் கருமத்தம்ப

சாணமும்,கதிர் வீச்சுத் தடுப்பும்.

படம்
 செல்போன் கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்கும் என்று கூறி, மாட்டுச் சாணத்தால் ஆன ’சிப்’ ஒன்றை இந்திய அதிகாரி ஒருவர் அறிமுகப்படுத்தியுள்ளார். "மொபைல் ஃபோன்களில் பொருத்திக் கொள்ளக்கூடிய இந்த சிப்பை பயன்படுத்தினால், அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு குறையும்," என தேசிய பசு மாடுகள் ஆணையத்தின் தலைவர், மருத்துவர் வல்லபாய் கதிரியா தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ள இந்த கூற்றுக்கு எந்த அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாட்டுச் சாண 'சிப்' என்றால் என்ன? குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கோசாலாவில் (பசுமாடுகள் தங்குமிடம்) இந்த "சிப்" உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் ஃபோனின் மேல் புறத்தில் இதனை ஒட்டிக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி ஒட்டினால், மொபைலில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளை குறைத்து பாதுகாக்கும் என கூறப்படுகிறது. இந்த சிப்பை 50ல் இருந்து 100 ரூபாய்க்கு வரை விற்று வருகிறார்கள். அதோடு, மேலும் 500க்கும் மேற்பட்ட கோசாலாக்களில் இந்த சிப் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டி

எந்த விதிப்படி... இப்படி........

படம்
கொரோனாவால் கொடிகட்டிப் பறக்கும் பல்தேசிய பெரு நிறுவனங்கள்  அறிக்கையின் ஆதரப்படி உலகின் அரை பில்லியன் அளவிலான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்பட்டுள்ளனர். அதே வேளை 32 பல்தேசியப் பெரு நிறுவனங்களின் இலாபத் தொகை 109 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. ‘GAFAM’ என்று குறியிடப்படும் என்ற Google, Apple, Facebook, Amazon,Microsoft ஐந்து பெரிய நிறுவனங்கள் மட்டும் 46 பில்லியன் டொலர்கள் மேலதிக இலாபம் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களால் பெறும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. தவிர உலகின் ஏழு பெரும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், கொரோனா தொற்று நெருக்கடியல் 12 பில்லியன் டொலர்கள் அதிகரித்த இலாபம் ஈட்டும் எனக் கூறப்படுகிறது. பங்கு சந்தையை ஆக்கிரமித்துள்ள 100 பெரிய நிறுவனங்கள் சந்தையில் 3 ரில்லியன் டொலர்களை அதிகமாக முதலிட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் பெரும்பாலனவற்றிற்கு ஐரோப்பிய அரசுகள் கோரானா வைரஸ் நிவாரண நிதியை வழங்கி வருகின்றன. ஜேர்மனிய அரசு பல பில்லியன் யூரோக்களை பீ.எம்.டபிள்யூ கார் நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கான ஊதியத் தொகையை வழங்க, அதன் மறுபக்கத்தில் நிறுவனத்தின் பங்குதாரர்கள் 1.6