முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாணமும்,கதிர் வீச்சுத் தடுப்பும்.

 செல்போன் கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்கும் என்று கூறி, மாட்டுச் சாணத்தால் ஆன ’சிப்’ ஒன்றை இந்திய அதிகாரி ஒருவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

"மொபைல் ஃபோன்களில் பொருத்திக் கொள்ளக்கூடிய இந்த சிப்பை பயன்படுத்தினால், அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு குறையும்," என தேசிய பசு மாடுகள் ஆணையத்தின் தலைவர், மருத்துவர் வல்லபாய் கதிரியா தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ள இந்த கூற்றுக்கு எந்த அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாட்டுச் சாண 'சிப்' என்றால் என்ன?

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கோசாலாவில் (பசுமாடுகள் தங்குமிடம்) இந்த "சிப்" உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் ஃபோனின் மேல் புறத்தில் இதனை ஒட்டிக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அப்படி ஒட்டினால், மொபைலில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளை குறைத்து பாதுகாக்கும் என கூறப்படுகிறது.

இந்த சிப்பை 50ல் இருந்து 100 ரூபாய்க்கு வரை விற்று வருகிறார்கள். அதோடு, மேலும் 500க்கும் மேற்பட்ட கோசாலாக்களில் இந்த சிப் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டிற்கும் மேலாக இதனை தயாரித்து வருவதாகவும், ஆனால், அறிவியல்பூர்வமான சோதனைகளை செய்ததில்லை என்றும் குஜராத்தில் உள்ள அந்த கோசாலா அமைப்பு பிபிசியிடம் தெரிவித்தது.

மாட்டுச் சாணம் மற்றும் பிற பொருட்களால் ஆன இந்த சிப்பில், கதிர்வீச்சுகளை குறைப்பதற்கான திறன் உள்ளதாக ஆயுர்வேத இலக்கியம் கூறுவதாக கோசாலாவை பராமரிக்கும் தாஸ் பய் கூறுகிறார்.

"ஆனால் நாங்கள் எந்த பரிசோதனைகளையும் நடத்தவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

மாட்டுச் சாணத்தில் கதிர்வீச்சை குறைக்கும் திறன் உள்ளதா?

இல்லை. ஆனால், இவ்வாறான கூற்று முன்வைக்கப்படுவது இது முதல்முறையல்ல.

2016ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ்-இன் துணை அமைப்பு ஒன்றின் தலைவர் சங்கர் லால், மாட்டுச் சாணம் ஆல்ஃபா, பீடா மற்றும் காமா என மூன்று விதமான கதிர் வீச்சுகளையும் உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளது என தெரிவித்தார்.

ஆனால், இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என, ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் இதனை ஏற்க மறுத்துவிட்டனர்.

மாட்டுச் சாணத்தில் இதுபோன்ற எந்த திறனும் இல்லை என்கிறார் அசோகா பல்கலைக்கழகத்தில் இயற்பியலாளராக இருக்கும் கௌதம் மேனன்.

பெரும்பாலும் கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்க கவச பொருளாக உதவுவது ஈயம்தான்.

ஆனால், மாட்டுச்சாணத்துக்கு அப்படி ஒரு எந்த திறனும் இல்லை. ஆயிரக்கணக்கான இந்திய வீடுகளில் வாசல் சுவர்களில் இன்றும் மாட்டுச் சாணத்தை தட்டி வைக்கும் பழக்கம் உண்டு.

அதிக அளவில் கிடைக்கும் மாட்டுச் சாணம், கிராமப்புறங்களில் ஒரு முக்கிய பொருளாக பார்க்கப்படுகிறது, ஆனால், அதற்கும் கதிர்வீச்சில் இருந்து பாதுகாப்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்கிறார் பேராசிரியர் மேனன்.

மொபைல் போன்களில் இருந்து தீங்கு விளைவிக்கக்கூடிய கதிர்வீச்சு வருகிறதா?

கடந்த சில ஆண்டுகளாக மொபைல் போன்களால் ஏற்படக்கூடிய உடல்நலக் குறைவுகள் குறித்த கவலைகள் எழுந்துள்ளன. செல் போன்களை அதிகம் பயன்படுத்துவதால் புற்றுநோய் போன்ற மற்ற ஆபத்தான உடல்நலக்குறைவுகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை வெளியிட்ட சமீபத்திய பரிந்துரைகளில், மொபைல் போனில் இருந்து வரும் கதிர்வீச்சால் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும் என்று ஆய்வுகளில் கண்டறியப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

"செல்போன்களை பயன்படுத்தும்போது, அவை மின்திறன் இல்லாத மரபணு கதிர்வீச்சுகளையே குறைந்த அளவில் வெளிப்படுத்துகிறது. இதனால், ஒரு மனிதரின் உடல்நலத்துக்கு தீங்கு ஏற்படும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை" என்கிறார் பிரிட்டனின் மருத்துவ இயற்பியல் துறை வல்லுநரான பேராசிரியர் மால்காம் ஸ்பெரின்.

+----------------------+------------------+

முகநூல் புதிய வசதிகள்

ஃபேஸ்புக்கின் மெஸஞ்சர் சேவையில் புதிய தோற்றம், உரையாடலுக்கான தனி வண்ணம் உள்ளிட்ட புதிய அம்சங்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

தனது மெஸஞ்சர் சேவையில் அவ்வப்போது புதிய அம்சங்களை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. அப்படி சமீபத்தில் சில வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

"உலகளவில் நூறு கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருக்கும் எங்கள் சேவையின் நோக்கம், ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள பொதுவான ஒரு வழியாக இருக்க வேண்டும் என்பதுதான். தனிப்பட்ட முறையில் ஒருவரோடு ஒருவர் தொடர்பில் இருக்கும் வசதியை மக்கள் தேடி வரும் நிலையில் எங்கள் நோக்கம் இன்னும் முக்கியமானதாகிறது" என்று மெஸஞ்சர் பிரிவின் துணைத் தலைவர் ஸ்டான் கூறியுள்ளார்.

மேலும் செல்ஃபி ஸ்டிக்கர், வேனிஷ் மோட் (மறையும் வசதி), இன்ஸ்டாகிராமில் இருப்பவர்களைத் தொடர்பு கொள்ளும் வசதி ஆகியவையும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

கடந்த மாதம் மெஸ்ஞ்சரும், இன்ஸ்டாகிராமும் இணையும் வகையில் புதிய வசதியை ஃபேஸ்புக் அறிவித்தது. மெஸஞ்சர் செயலியிலிருந்து இன்ஸ்டாகிராம் பயனர்களைத் தொடர்பு கொள்ளும் வசதியும், அதே போல அங்கிருந்து மெஸஞ்சர் பயனர்களைத் தொடர்பு கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது.

----------------0---------------------8

*தமிழ்நாடு பொதுபணித்துறையில் வேலை*

TN அதிகாரபூர்வ இணையதளத்தில் Graduate &technician apprentice காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

விவரிவான தகவல்களுக்கு கிளிக் செய்யவும்  -> https://www.tnrecruitment.in/2020/10/tn-pwd-recruitment-2020apply-280.html

8-------------------------------8-------------------------

பின்னால் இருந்து

*நீ*

விமர்சிக்கப்பட்டால்

நினைத்துக் கொள்...

நீ

*முன்னால்*

இருக்கிறாய் என்று.

_----------------_-------------

ரிபப்ளிக் டிவி : அர்னாப் கோஸ்வாமியின் டி.ஆர்.பி. தில்லுமுல்லு !

ஊடக விவாதம் என்ற பெயரில் பாசிச பாஜக அரசின் இந்துத்துவ சார்பு கருத்துத் திணிப்புகளை அர்னாப்பின் ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகள் தொடர்ந்து செய்துவருகின்றன.

0னித இனத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததற்காக சர்வதேச இராணுவ தீர்ப்பாயம் ஜூலியஸ் ஸ்ட்ரைச்சர் (Julius Streicher) என்ற நாசி இனவெறி ஊடகக்காரரை குற்றவாளி என தீர்ப்பளித்து, 1946-ம் ஆண்டு தூக்கிலிட்டது.

தனது தீர்ப்பில் இப்படி கூறியது நீதிமன்றம்.. “மாதத்திற்கு மாதம், வாரத்துக்கு வாரம் தனது உரைகள் மற்றும் கட்டுரைகள் மூலம்,  யூத எதிர்ப்பு வைரஸை ஜெர்மானியர்களின் மனதில் பரப்பினார். மேலும் ஜெர்மானிய மக்களை தீவிரமான துன்புறுத்தலில் ஈடுபடத் தூண்டினார். 1935-ம் ஆண்டில் 600,000 பிரதிகளை எட்டிய டெர் ஸ்டர்மர்-ன்(Der Stürmer) ஒவ்வொரு இதழும் இதுபோன்ற கட்டுரைகளால் நிரப்பப்பட்டிருந்தது. அவை பெரும்பாலும் மோசமானவையாகவும் அருவருப்பூட்டுபவையாகவும் இருந்தன”

இந்தியாவில் இந்துத்துவ பாசிச அரசின் ஊதுகுழல்களாக இருக்கும் பெரும்பான்மை ஊடகங்கள் ஒவ்வொரு நாளும் மனித இனத்திற்கு எதிரான வெறுப்பு எனும் கொடிய வைரஸை பரப்பிக் கொண்டிருக்கின்றன. ஒடுக்குதலுக்கு உள்ளாகும் மதப் பிரிவினருக்கு எதிராக அவதூறு செய்வது, அரசின் பாசிச நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களை ‘தீவிரவாதிகளாக’ சித்தரிப்பது, ஆளும் அரசின் அரசியல் லாபங்களுக்காக ஒன்றுமில்லாத மரணங்களை பெரும் சதித்திட்டமாக சித்தரித்து குழப்பத்தை உண்டாக்குவது என ஒவ்வொரு நாளும் வெறுப்பில் திளைக்கின்றன இந்த ஊடகங்கள். இந்த வெறுப்பை உமிழும் ஊடகங்களின் முன்னோடியான அர்னாப் கோஸ்வாமி, தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகள் என்னும் டி. ஆர். பி மோசடியில் சிக்கியுள்ளார்.

நடிகர் சுசாந்த் சிங்கின் தற்கொலையை வைத்து மராட்டிய மாநிலத்தை ஆளும் சிவசேனை – காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்கவும் பீகார் தேர்தலில் ஆதாயம் தேடவும் பா.ஜ.க முனைந்தது. பா.ஜ.க போட்டுக்கொடுத்த இந்தத் திட்டத்தை செயல்படுத்த 24 நேரமும் உழைத்தன பாசிசத்தின் பாதந்தாங்கி ஊடகங்கள். பதவிக்காக தன்னுடைய இனவெறுப்பை தற்காலிகமாக கைவிட்டுள்ள சிவசேனை அரசாங்கம், பங்காளிகளின் சதியை முறியடிக்கும் வேலையில் இறங்கியது.

அதன் ஒருபகுதியாகத்தான் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியின் டி.ஆர்.பி மோசடி வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது. தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகளை கண்காணிக்கும், பார்-ஓ-மீட்டரை நிறுவி பராமரிக்கும் ஹன்சா ரிசர்ச் குரூப் பிரைவேட் லிமிடெட்  நிறுவனம் டி.ஆர்.பி மோசடியில் ஈடுபட்டதாக ரிபப்ளிக் டிவி, ஃபக்த் மராத்தி மற்றும் பாக்ஸ் சினிமா ஆகிய மூன்று தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது மும்பை போலீசில் புகார் அளித்திருக்கிறது.

குறிப்பிட்ட சேரிப்பகுதிகளில் ஸ்மார்ட் டிவி வசதியும் மாதந்தோறும் கணிசமான தொகையையும் கொடுத்துவிட்டு, பாரோ மீட்டரை நிறுவி விடுவார்கள். ஒரு பாரோ மீட்டர், 20 ஆயிரம் டிவி பார்வையாளர்களின் மதிப்பீட்டுக்கு இணையானதாக கணக்கிடப்படப்படுகிறது. இப்படி முறைகேடான வழியில் கிடைக்கும் தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகளைக் கொண்டு, ‘நாங்கள்தான் நம்பர் 1, தேசம் எங்களுடைய குரலைத்தான் கேட்கிறது’ என கூறிக்கொண்டு திரிந்திருக்கிறார் அர்னாப்.

செப்டம்பர் இறுதி வாரத்தில் ரிபப்ளிக் ஆங்கில செய்தி சானல் 5056 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள டைம்ஸ் நவ் செய்தி சானல் 1872 புள்ளிகளை பெற்றுள்ளது. இரண்டாம் இடத்துக்கும் முதல் இடத்துக்குமான வித்தியாசத்தை அதிகப்படுத்த ரிபள்டிக் டிவிக்கு டி.ஆர்.பி மோசடிகள் உதவியிருக்கலாம். முதல் இடம் என்ற சுயவிளம்பரம் மேலும் அதிக ‘உண்மையான’ பார்வையாளர்களை பெற்றுத்தரும், விளம்பர வருவாயும் அதிகரிக்கும்.

அண்டப்புளுகன் அர்னாப்

முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு மராத்தி சானல்களின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ரிபப்ளிக் டிவி மோசடியில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளதாக மும்பை போலீசு ஒப்புக்கொண்டாலும், நிறுவனத்தின் பிரதிநிதிகளை அழைத்து விசாரணை மட்டும் நடத்திக் கொண்டிருக்கிறது பங்காளிகளை மிரட்டினால் மட்டும் போதும் என சிவசேனை அரசாங்கம் கருதுவதால் மேலதிக நடவடிக்கைக்கும் வாய்ப்பிருக்காது என நம்பலாம். சங்கபரிவாரத்தின் தலைமையிலான பாசிச மத்திய அரசின் ஆதரவோடு இயங்கும் அர்னாப் கோஸ்வாமியை, மைய அரசின் கீழ் இயங்கும் ஒரு மாநில அரசாங்கத்தால் எதுவும் செய்துமுடியாது.

சங்க பரிவாரத்தின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறியின் ஒரு அங்கமாகவே அர்னாப் கோஷ்வாமியும், அவரது ரிபப்ளிக் டிவியும் உருவாக்கப்பட்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு, சமீபத்தில் அர்னாப் தனது பிரைம் டைம் விவாதத்தில் பேசிய இரண்டு தலைப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.

முதலாவது பாகிஸ்தான் உளவு அமைப்பிடம் பணம் பெற்றதாக சிறை தண்டனை விதிக்கப்பட்ட சையது குலாம் நபி ஃபை என்பவரை பத்திரிகையாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான கவுதம் நவ்லாகா ‘பல முறை’ சந்தித்து அறிவுஜீவிகளை அரசாங்கத்துக்கு எதிராக திரட்ட திட்டமிட்டதாக தேசிய புலனாய்வு முகமையின் குற்றச்சாட்டை ஒட்டிய விவாதம்.

பாக்நக்ஸல் என்ற ஹேஷ் டேக்குடன் குற்றம்சாட்டும் தரப்பில் அரசு தரப்பு அடிபொடிகள் நால்வரும் குற்றத்தை மறுக்கும் தரப்பில் இருவரும் பங்கேற்றனர். குற்றத்தை மறுக்கும் தரப்பின் விளக்கங்கள் எதையும் ரிபப்ளிக் டிவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிரவில்லை. குற்றம்சாட்டும் தரப்பின் அவதூறுகளை தீர்ப்பாகவே எழுதி, அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பரப்பியிருக்கிறது.

மற்றொரு தலைப்பு: அஸ்ஸாமில் உள்ள மதரஸாக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அந்த மாநில அரசாங்கம் நிறுத்தியது தொடர்பான விவாதம். இந்துமத கோயில்களின் கட்டுமானத்துக்காக பல ஆயிரம் கோடி மக்களின் வரிப்பணம் செலவிடப்படும் நிலையில், அஸ்ஸாம் மதரஸாக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி நிறுத்தப்பட்டது குறித்து விவாதிக்கிறார் அர்னாப். ஒரு மாநிலத்தின் முடிவை, பிற மாநிலங்களுக்கும் திணிக்க வேண்டும் என்பதும் சிறுபான்மை மதங்களுக்கு எந்தவித சலுகைகளும் தரப்படக்கூடாது என்பதை வலியுறுத்துவதே அந்த விவாதத்தின் நோக்கம்.

ஊடக விவாதம் என்ற பெயரில் பாசிச பாஜக அரசின் இந்துத்துவ சார்பு கருத்துத் திணிப்புகளை அர்னாப்பின் ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகள் தொடர்ந்து செய்துவருகின்றன. சங்கபரிவாரங்களின் கனவான இந்துத்துவ இந்தியாவிற்கு மக்களை தயார்படுத்தும் இந்த ஊடகங்களின் அரசியலை புரிந்துகொண்டு அம்பலப்படுத்துவதே நாம் உடனடியாக செய்ய வேண்டிய செயலாகும். ஏனெனில், வெறுப்பை விதைப்பது மனித குல விரோத செயல் என்பதை பாசிஸ்டுகள் ஒருபோதும் உணரப்போவதில்லை.

-------------------------------+---------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?