இடுகைகள்

நிகழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சென்ற ஆண்டில் -ஒரு பார்வை.

படம்
இதே மாதம் [2012] நடந்த முக்கிய நிகழ்வுகள். சின்னதாக ஒரு பார்வை. உலகம் பிப்., 2: எகிப்தில் கால்பந்து ரசிகர்களுக்கு இடையே நடந்த மோதலில் 74 பேர் பலி. பிப்., 5: இங்கிலாந்தில் பிறந்து 17 மணி நேரமே ஆன பெண் குழந்தைக்கு, இருதய அறுவை  வெற்றிகரமாக செய்யப்பட்டது. பிப்., 6: பிலிப்பைன்ஸ் நாட்டில் நிகழ்ந்த பூகம்பத்தில் 44 பேர் பலியாகினர். பிப்., 8: பொருளாதார சிக்கலில் உள்ள மொரீசியஸ்க்கு, இந்தியா சார்பில் 1,350 கோடி ரூபாய் கடன் வழங்குவதாக மன்மோகன் சிங் அறிவிப்பு. பிப்., 11: தென்ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலாவின் புகைப்படம், அந்நாட்டின் ரூபாய் நோட்டில் இடம் பெற்றது. பிப்., 18: ஊழல் புகாரில் சிக்கிய ஜெர்மனி அதிபர் கிறிஸ்டியன் பதவி விலகினார். பிப்., 21: மெக்சிகோவின் வடக்கு மாகாணத்தில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 44 கைதிகள் பலி. பிப்., 24: இலங்கை இறுதிக்கட்ட போரில், மனித உரிமைமீறலில் ஈடுபட்ட இலங்கை ராணுவ தளபதி ஷாவேந்திர சில்வா, ஐ.நா., அமைதிப்படை குழுவில் இருந்து நீக்கம். பிப்., 27: ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை, கொலை செய்யும் சதித்திட்டத்தை உக்ரைன் போலீசா...

ஒரு வேதனை-ஒரு சாதனை.

படம்
வலுவான லோக்பால் மசோதா அமைக்க வழி காட்டுவதாக 18 மாதங்களாக போராடி வந்த அன்னா ஹசாரே, இப்போது அரசியலில் களம் இறங்க இருப்பதாக அறிவித்து, குழுவை கலைப்பதாக அறிவித்துள்ளார். நாட்டில் பெருகி வரும்ஊழலை ஒழிக்க ஜன்லோக்பால் எனும்  மசோதா கொண்டு வரக்கூறி அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.   போராட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆங்காங்கே ஆதரவு குரல் ஒலித்தது. \ ஏராளமானோர் அன்னா ஹசாரேவுடன் சேர்ந்து போராட்ட களத்தில் குதித்தனர். ஹசாரேவுக்கு ஆதரவாக இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ்., கிரண் பேடி, வழக்கறிஞர் பிரசாந்த பூசன், கெஜ்ரிவால், பாபா ராம்தேவ், அக்னிவேஷ்,  ரவிசங்கர்ஜி உள்ளிட்டோரும்  ஆதரவாக கிளம்பினர்.   லோக்பால் மசோதா அமைக்க வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஹசாரே பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.   சிறையும் சென்று வந்தார்.  கடந்த இருவாரங்களுக்கு முன்னர் வலுவான லோக்பால் மசோதா மற்றும் ஊழல் கறைபடிந்த எம்.பி.க்களை விசாரிக்க சிறப்பு குழு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத...