சென்ற ஆண்டில் -ஒரு பார்வை.


இதே மாதம் [2012] நடந்த முக்கிய நிகழ்வுகள்.

சின்னதாக ஒரு பார்வை.

உலகம்

பிப்., 2: எகிப்தில் கால்பந்து ரசிகர்களுக்கு இடையே நடந்த மோதலில் 74 பேர் பலி.
பிப்., 5: இங்கிலாந்தில் பிறந்து 17 மணி நேரமே ஆன பெண் குழந்தைக்கு, இருதய அறுவை
 வெற்றிகரமாக செய்யப்பட்டது.
பிப்., 6: பிலிப்பைன்ஸ் நாட்டில் நிகழ்ந்த பூகம்பத்தில் 44 பேர் பலியாகினர்.
பிப்., 8: பொருளாதார சிக்கலில் உள்ள மொரீசியஸ்க்கு, இந்தியா சார்பில் 1,350 கோடி ரூபாய் கடன் வழங்குவதாக மன்மோகன் சிங் அறிவிப்பு.
பிப்., 11: தென்ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலாவின் புகைப்படம், அந்நாட்டின் ரூபாய் நோட்டில் இடம் பெற்றது.
பிப்., 18: ஊழல் புகாரில் சிக்கிய ஜெர்மனி அதிபர் கிறிஸ்டியன் பதவி விலகினார்.
பிப்., 21: மெக்சிகோவின் வடக்கு மாகாணத்தில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 44 கைதிகள் பலி.
பிப்., 24: இலங்கை இறுதிக்கட்ட போரில், மனித உரிமைமீறலில் ஈடுபட்ட இலங்கை ராணுவ தளபதி ஷாவேந்திர சில்வா, ஐ.நா., அமைதிப்படை குழுவில் இருந்து நீக்கம்.
பிப்., 27: ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை, கொலை செய்யும் சதித்திட்டத்தை உக்ரைன் போலீசார் முறியடிப்பு. 2 பயங்கரவாதிகள் கைது.

இந்தியா.

பிப்., 7: சிறப்பாக செயல்படாத ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, கட்டாய ஓய்வு அளிப்பதற்கான விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது.
பிப்., 8: கர்நாடக சட்டசபையில் மொபைல் போனில் ஆபாச படம் பார்த்த 3 அமைச்சர்கள் ராஜினாமா.
பிப்., 9: குஜராத் கலவரத்தில், சேதம் அடைந்த 500 வழிபாட்டு தலங்களுக்கு, நஷ்ட ஈடு வழங்க அம்மாநில ஐகோர்ட் உத்தரவு.
பிப்., 10: மும்பையில், 2003ல் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில், 52 பேர் பலியான வழக்கில், 3 பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை மும்பை ஐகோர்ட் உறுதி செய்தது.
பிப்., 14: டில்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே காரில் குண்டுவெடிப்பு. பெரும் சேதமில்லை.
பிப்., 15: ""சமூக இணையதளங்களை கண்காணிக்கும் திட்டம் இல்லை'', என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல் பதில்.
பிப்., 21: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா, மம்தா உள்ளிட்ட 7 முதல்வர்கள் எதிர்ப்பு.
பிப்., 26: போலியோவால் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கம்.

தமிழகம் 

பிப்., 3: "2 ஜி' அலைக்கற்றை ஊழல் வழக்கில், ஒதுக்கீடு செய்யப்பட்ட 122 லைசென்ஸ்களையும் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.
பிப்., 8: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எம்.திருமலை நியமனம்.
பிப்., 9: திருமங்கலம் அருகே திருமணத்திற்கு சென்று திரும்பிய வேன் சாலை யோர கிணற்றில் கவிழ்ந்து 10 பேர் பலி.
பிப்., 13: 2011ம் ஆண்டு, சிறந்த தமிழ் நூலுக்கான "சாகித்ய அகாடமி' விருது, "காவல்கோட்டம்' நாவலுக்கு வழங்கப்பட்டது. ஆசிரியர் வெங்கடேசன்.
பிப்., 19: இ.கம்யூ., மாநில தலைவராக தா.பாண்டியன் மீண்டும் தேர்வு.
பிப்., 20: தமிழக அரசால் நியமிக்கப்பட்ட இனியன் தலைமையிலான குழு, "கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது' என அறிக்கை தாக்கல் செய்தது.








இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?