இடுகைகள்

கொள்ளை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரா,ரா, கொள்ளையடிக்க வா ராவ்!

படம்
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பலரையும் பின்னுக்கு தள்ளி தலைமை செயலர் பதவி பெற்றார் ராவ் மோகன ராவ். சீனியாரிட்டி அடிப்படையில் 20-வது இடத்தில் இருந்த ராவ் பதவி பெற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  மூத்த அதிகாரிகள் பலரையும் தாண்டி ராவ் தலைமை செயலர் பதவி பெற்ற போதே சர்ச்சைகள் உருவாகின.  20 இடத்தில் இருந்தவரை ஜெயலலிதா தனக்கு பல உதவிகளை (?)செய்தவர் ,தான் கூறியவற்றை உடனே குறுக்கு வழிகளை கண்டு பிடித்து நிறைவேற்றுபவர் என்பதால்தான் எதிர்ப்புகளையும் மீறி தலைமைசெயலர் பதவியில் கொண்டு வந்து உட்காரவைத்து அழகு பார்த்தார். தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மூலம் கோடிகளை குவிக்கலாம் என்பதற்கு வித்திட்டவர் ராம மோகன ராவ். 1990-ம் ஆண்டுகளில் அன்றைய செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியராக ராம மோகனராவ் இருந்தார்.  நெடுஞ்சாலைத்துறை செயலராக இருந்த ராவ் தான் அரசு கான்ட்ராக்ட்டுக்கு கமிஷனை கட்டாயமாக்கியவர்.   2001 ம் ஆண்டு ராமமோகன ராவ் சிந்தனையில் உதித்த புதிய யோசனையே அரசு கான்ட்ராக்ட்டுக்கு 10 % கமிஷன் ஆகும்.  சோதனையில் சிக்காமல் பணத்தை இடமாற்றம் செய்யும் வித்தையை கண்டுபிடித்தவர் இவர் தான்....

"மண்ணில் புதைக்கப் படுகிறது."

படம்
ஜெயா அரசு தாது மணற் கொள்ளை விவகாரத்தை கையாளும் விதம் மிக சூழ்ச்சி மிக்கதாய் -குற்றவாளிகளுக்கு பக்க பலமாய் இருக்கிறது. லட்சம் கோடிகளில் மணற்கொள்ளை நடந்துள்ளது.விசாரணை குழுவும் மணற்கொள்ளை யை உறுதி செய்தே அறிக்கை அளித்துள்ளது.இதை 90%செய்த வைகுண்டராஜனை உள்ளே பி.ஆர்.பி.மாதிரி தள்ளாமல் வேறு இடங்களில் விசாரணை குழுவை ஆய்வு செய்ய சொல்லியும்-அதுவரை தாது மணற் சுரங்கங்களில் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று மட்டுமே முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார்.இதில் இருந்தே மணற்கொள்ளை யை  அப்படி புதைமணலில் புதைத்து வைகுண்டராஜனை காப்பாற்றும் எண்ணம் பகிரங்கமாகியுள்ளது. நில மோசடி வழக்குகளில் திமுகவினரை வெறும் ஆதாரமற்ற புகார்களை வாங்கிக்கொண்டே சிறையில் தள்ளியவர் கையும்-களவுமாக மாட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது கூட்டு களவாணித்தனத்தை தானே காட்டுகிறது. " கார்னெட் என்பது கனசதுர உருவில் உள்ள உறுதியும் பளபளப்புமிக்க கனிமம்.  உறுதியான தரை அமைப்பதற்கும், கண்ணாடி – சலவைக்கல் முதலானவற்றைத் துண்டிப்பதற்கும், பளிங்குக் கற்களைப் பாலீஷ் செவதற்கும்,மோதிரம் முதலான அணிகலன...

கனிமக் கொள்ளையின் மறு பக்கம்

படம்
சட்ட விரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுத்து, அர”க்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படுத்திய நிறுவனங்களின் மீது, ஆமை வேகத்தில், வேண்டா வெறுப்பாக, சட்ட ரீதியான நடவடிக்கை துவங்கி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஆதாரம், முன்னாள் மதுரை கலெக்டர் சகாயம், கடந்த மே மாதம் கொடுத்த ஆய்வு அறிக்கை.  கனிமக் கொள்ளையர்களின்அரசியல்- பணப் பலம் கருதி, இது கிடப்பில் போடப் பட்டு இருந்தது. இந்த அறிக்கையில் உள்ள சில தகவல்கள்,  ஊடகங்களில் வெளிவந்த பின் தான் நடவடிக்கை துவங்கப் பட்டது. இது போன்ற விடயங்களில்,ஆரவாரமாக துவங்கும் விசாரணை, கொஞ்ச காலத்தில்வீரியம் இழந்து காணாமல் போய்விடும்.வைகுண்டராஜன் கனிம மோசடி என்ன ஆனது என்பது இன்று யாருக்கும் தெரியாது.அரசியலில் இது சாதாரணமப்பா! ஆச்சரியம் இல்லை.  எனவே சகாயம் அறிக்கை,அதன் பின்னணி நாம் தெரிந்து வைத்துக்கொண்டால் இந்த கனிமக் கொள்ளையில் அரசியல்  விளையாட்டு-பண ஆள்பலம் .அவர்கள் இந்த தமிழ் நாட்டின் எதிர்காலத்தையே அரசியல் துணையுடன் அழித்து பணம் கொழித்து வருவதை அறிந்து நாம் பெருமூச்சுகள் விட முடியும். இது தின மலர் நாளிதழில் வெளிவந்த செ...