இடுகைகள்

நெல்லி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நெல்லி தரும் நலம் & அழகு.

படம்
 நெல்லிக்காய் தமிழ் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மருத்துவ குணம் நிறைந்த கனி.  பெரு  நெல்லிக்காய் எனப்படும் நாட்டு நெல்லிக்காய்தான் மிகவும் மருத்துவக் குணங்களைக்கொண்டது. மிகவும் நல்லது.   அந்த நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது.  நெல்லிக்காய் சாப்பிடுவதால், நம்  உடலுக்கு அதிக   நன்மைகள்கிடைக்கும். உடல் நோய்களை போக்கி நன்மைகளைத்தரும் நெல்லிக்காய் நமக்கு இளமையை மீட்டுத்தருகிறது. உடல் உள்ளே செய்யும் மருத்துவத்தை போலவே நம் தோல் இளமையை தரும் வெளி உபயோக நன்மைகளும் நெல்லிக்காயில் அதிகம்.  அதற்கு அந்த நெல்லிக்காயை சாறாகவோ அல்லது பொடியாகவே பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைகிறது. சருமத்தின் பொலிவு அதிகரிக்கும் , நரை முடி மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.  அதுமட்டுமின்றி, நெல்லிக்காய் சருமத்தில் உள்ள கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரித்து, இளமை தோற்றத்தை தக்க வைக்கும்.  நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில...

தினம் ஒரு நெல்லிக்காய்?

படம்
 .,,மருத்துவமனை போக வேண்டாம்!  அதியமானால் அவ்வைக்குக் கொடுக்கப்பட்டது’ என்ற சங்க காலக் கதைகள் முதல், 'நெல்லிக்காய் கலந்த கூந்தல் வளர்ச்சித் தைலம்’ என சமீபத்திய விளம்பரங்கள் வரை நெல்லிக்காயின் புகழுக்குக் குறைவே இல்லை.  ''தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். இன்றைய விலைவாசியில் டாக்டரைத் தேடிப் போவதும் ஆப்பிளைத் தேடிப் போவதும் ஒன்று தான். ஆப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும்.  ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது நெல்லிக்காய்; ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம். ''நெல்லிக்காயில் சிறப்பானது  என்று ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல முடியாது. நெல்லிக்காயே சிறப்பானதுதான்... 1.'காயம் என்ற நம் உடலைக் கற்பகம்போல் அழியாமல் வைத்திருக்கும் ஆற்றல்கொண்டது நெல்லிக்காய்’ என்று சித்தர்களே சொல்லி இருக்கிறார்கள்.  நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக...

"நெல்லிக்காய்-மின்னல்"

படம்
ஆஸ்திரேலியா, சூப்பர் கம்ப்யூட்ட ரை உருவாக்கியுள்ளது. இதற்கு ஜப்பானிய கடவுளின் பெயரை வைத்துள்ளது. ஒரு வீட்டை விட பெரிதாக உள்ள இந்த மெகா கம்ப்யூட்டர், வானிலை ஆராய்ச்சிக்கு மிகவும் பயனுள்ளது.  இதன் பெயர் "ரெய்ஜின்" ஜப்பானிய மொழியில் மழை மற்றும் மின்னல் என்று பெயர்.  அந்த நாட்டு மழை கடவுளின் பெயர். அவர்கள் ஒத்துழைப்பு இருந்ததால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. இருபதாண்டு உழைக்கும் திறன் படைத்த இந்த சூப்பர் கம்ப்யூட்டர், 700 கோடி மக்கள் கால்குலேட்டரை பயன்படுத்தி சேகரிக்கும் விவரத்தை ஒரு மணி நேரத்தில் கணக்கிட்டு விடும். 40 ஆயிரம் கம்ப்யூட்டர்களின் மெமரி சக்தியை கொண்டது. கான்பெர்ரா நகரில் உள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் தனி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டரை அறிமுகம் செய்து வைத்த விஞ்ஞானிகள் கூறுகையில், ‘வானிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிகளுக்கு இனி மற்ற நாடுகளுக்கு ஆஸி நிபுணர்கள் போக வேண்டாம். இங்கு எல்லா வசதிகளும் இதில் உள்ளது’ என்றனர். உலகின் 27வது சூப்பர் கம்ப்யூட்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் 15 நாடுகளில் சூப்பர் கம்ப்யூட்டர்கள...