


தமிழக மக்கள், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் போலி முகத்திரையைக் கிழித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை" எனத் தெரிவித்துள்ளார் கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :
“உள்ளாட்சித் துறை அமைச்சரா அல்லது ஊழலாட்சித் துறை அமைச்சரா என்று தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் கேட்கக்கூடிய அளவில் ஊழலில் மிகப்பெரிய வரலாற்று சாதனைகளை புரிந்து கொண்டிருக்கும்; மிக விரைவில் ஊழல் முறைகேட்டில் உலக அளவில் கின்னஸ் சாதனை படைக்க இருக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, பொது வாழ்வில் இதுவரை எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாமல் தூய்மையானவராக திகழும், அல்லும் பகலும், தமிழக மக்களின் தேவையறிந்து , அவர்களுக்காக பாடுபடும் எங்கள் கழகத் தலைவர் அன்புத் தளபதி பற்றி பேசுவதற்கு எந்த ஒரு அருகதையும் இல்லை.
ஊழலின் ஊற்றுக் கண்ணான, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மிகவும் கேவலமான முறையில், பிதற்றல்களுடன், அரசியலுக்கு உண்டான அடிப்படை நாகரிகம் கூட தெரியாமல், அநாகரீகமாக ஒரு அறிக்கை வெளியிட்டு “உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்து ஆகாது” என்ற பழமொழிக்கேற்ப தான் ஒரு 'ஊர்க்குருவிதான்' என்று நிரூபித்துள்ளார்.
தமிழக உள்ளாட்சித்துறை அமைப்பையே தனது உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் மட்டும் உரித்தான துறையாக மாற்றிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு, எங்கள் கழகத் தலைவரைப் பற்றி பேசுவதற்கு அருகதையில்லை. நேற்று அடித்த காற்றில் இன்று கோபுரத்தின் மீது சென்ற குப்பை ஒருபோதும் கோபுரக் கலசமாக மாற முடியாது!
மக்களைப் பற்றி சிந்திக்காமல் , மக்களைக் காப்பாற்றுவதை தவிர்த்துவிட்டு, தங்களைச் சிறைக்கு செல்லாமல் காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் இருக்கும் இந்த கேடுகெட்ட, தமிழக உரிமைகளை பறி கொடுத்த ஆட்சியைப் பற்றி தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற உண்மை கூடத் தெரியாமல், “பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருட்டாகி விடும்” என்று எண்ணிக் கொள்வதைப் போல, “முதல் அமைச்சர் அண்ணன் எடப்பாடியார் சிறப்பாக ஆட்சி செய்கிறார்” என்று உள்ளாட்சி நிர்வாகத்தை, ஊழல் நாறும் நிர்வாகமாக மாற்றியிருக்கும் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பேசுவது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவை.
பேரிடர் காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டியது ஒரு அரசின் கடமை. “பொய்யிலே பிறந்து பொய்களிலேயே வாழ்ந்து வரும்” அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இதை தனது பெரிய சாதனையாக, தான் ஊழல் செய்து சம்பாதித்த சொந்தப் பணத்தில் கொடுத்தது போல பறைசாற்றிக் கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச் சிறந்த மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். அப்படி என்றால் தினம் தினம் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது ஏன்? நோய்த் தொற்றின் தலைநகராகச் சென்னை மாறிக்கொண்டிருப்பது ஏன்?
கழகத் தலைவர் அவர்கள் அறிவித்த “ஒன்றிணைவோம் வா” முன்னெடுப்பின் கீழ் 18 லட்சம் உதவி எண் கோரிக்கைகள், 76 லட்சம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், 51 லட்சம் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி, 28 லட்சம் சமைத்த உணவுப் பொட்டலங்கள், 7 லட்சம் அரசிடம் சமர்ப்பித்த கோரிக்கைகள் என்று ஓர் அரசாங்கம் செய்ய வேண்டியதை தி.மு.க. கழக நிர்வாகிகள் துணையுடன் தனியொரு மனிதனாக செய்துள்ளார்.
ஆனால் தமிழக அரசும், அ.தி.மு.க.,வினரும் பாதிக்கப்பட்ட மக்கள் எத்தனை பேருக்கு நேரடியாக நிவாரண உதவிகள் வழங்கினர். நிவாரண களத்திற்கே வராமல் இருந்தது யார்? இதில் வீறுகொண்ட வேங்கை யார்? பொய்யையும், புரட்டையும் பரப்புபவர்கள் யார் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
நியாய விலைக் கடையில் விற்கப்படும், 19 வகை மளிகை பொருட்களின் தொகுப்பு, தரமற்றதாக இருப்பதால், மக்கள் வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இத்தனை நாட்கள் ஆகியும், பல கடைகளில், தலா, 10 தொகுப்பு கூட விற்கவில்லை. ஒரு அமைச்சராக இருந்து கொண்டு இதுகூடத் தெரியாமல் 500 ரூபாய் தொகுப்பை அரசின் பெரிய சாதனை என்று தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறார்.
மேலும், அரசின் சார்பில் இலவச அரிசி வழங்கப்பட்டதாக தம்பட்டம் அடிக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அந்த அரிசியின் தரத்தை ஒரு முறையாவது நேரில் பார்த்தாரா?
இப்படி மக்களுக்கு தரமில்லாத, பயனில்லாத பொருள்களை கொடுத்ததுதான் சாதனையா?
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குத் தலா 1,000 ரூபாய் 2 முறை வழங்கப்பட்டதாக கூறியிருப்பது சம்பந்தமாக எத்தனை பேருக்கு இதுவரை வழங்கப்பட்டது என்று வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?
புதிய முதலீடுகளைப் பெற்றிட தொழில் நிறுவனங்களுக்கு நேரடி அழைப்பாம்! இதுவரை இந்த அழைப்பின் பேரில் எத்தனை நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன?
123 தேசிய விருதுகள்!? உள்ளாட்சியில் சாதனைகள்!? பிறகு ஏன், கோவையில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது? குப்பைகள், சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமல் சுகாதார சீர்கேடு மிக்க நகரமாக கோவை உள்ளது?
2G அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும், கடந்த 21 டிசம்பர் 2017 அன்று, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்து, உத்தரவிட்டது கூட இந்த அமைச்சருக்கு தெரியாமல் போனது ஏன்?
“வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என்று அறிக்கை வெளியிடுவது அமைச்சர் பதவிக்கு அழகல்ல!
மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டிக் கொள்ளையடித்து அரசுக் கருவூலத்தைக் காலி செய்து , “கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்” என்ற ஒரே நோக்கத்துடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செயல்பட்டு, ஊழலும் - லஞ்சமும் புரையோடிப் போய், உள்ளாட்சித் துறை அமைப்பில் காணுமிடம் எல்லாம் ஊழலே நிறைந்திருக்கிறது.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி “ஊழல்களின் மொத்த இருப்பிடமாக” செயல்பட்டுக் கொண்டு, நாட்டையும், நாட்டு மக்களின் வரிப்பணத்தையும் சுரண்டி, மக்கள் நலன் மறந்து, மக்களை வாட்டி வதைத்து வருவது தமிழக மக்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரியும்.
தனக்கு எதிரான ஊழல் வழக்குகளை மறைக்கும் பொருட்டு , சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய லஞ்ச ஒழிப்புத்துறை, காவல்துறை போன்ற அமைப்புகளைத் தலையாட்டிப் பொம்மைகளாக்கி, அவற்றின் மீதான நம்பகத்தன்மைக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேராபத்து ஏற்படுத்தியிருப்பதையும் மக்கள் மறக்க மாட்டார்கள்.
நெருப்பில்லாமல் புகையுமா? ஒரு அமைச்சர் மீது தொடர்ந்து ஊழல் புகார்கள் வருகிறது என்றால் என்ன காரணம்? ஊழல் முறைகேடுகள் நடக்காமல் ஊழல் வழக்குகள் தொடர்ந்து போடப்படுமா? அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொல்வதுபடி “தான் குற்றமற்றவர்” என்றால், தகுந்த ஆதாரங்களுடன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாதது ஏன்? லஞ்ச ஊழல் தடுப்புத் துறை முன்பு ஆஜராகி விளக்கமளிக்காதது ஏன்? இதுகுறித்து பதிவிடுபவர்கள், பேசுபவர்கள் அனைவரையும் காவல்துறையை ஏவி விட்டு பொய் வழக்கு போட்டு கைது செய்வது ஏன்? தன்னுடைய முறைகேடுகள் எல்லாம் வெளியே தெரிந்துவிடும் என்பதாலா?
இப்படிப்பட்ட ஒருவர் ஒரு உத்தமர் போல தன்னைக் காட்டிக் கொண்டு, தான் செய்த ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளியில் வந்து கொண்டிருப்பதை பார்த்து “முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?” என்ற அச்சத்தில், அறிக்கை என்ற பெயரில் பிதற்றல்களுடன், கழகத் தலைவர் அவர்கள் மீது உண்மைக்கு புறம்பான, ஆதாரமில்லாத தகவல்களைக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக, பல்வேறு காரணங்களைக் கூறி, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை எல்லாம் அவமதித்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் உள்ளாட்சி ஜனநாயகத்தை சீர்குலைத்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டுள்ள பொய்களையும், புரட்டுகளையும் மக்கள் யாரும் நம்பமாட்டார்கள். தமிழக மக்கள், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் போலி முகத்திரையைக் கிழித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
---------------------3----------------------
இத்தாலியைப் பின் தள்ளிய
இந்தியா.
உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருகிறது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பீதியை கிளப்பி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா, இத்தாலி, ஈரான் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸின் தாக்கம் காணப்பட்டு வருகிறது. உலக அளவில் இதுவரை 4- லட்சத்து 06 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. மற்ற மாநிலங்களில்தான் இதன் பாதிப்பு அதிகம் உள்ளது. ஆனால், தற்போது, பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலங்களிலும் இந்த வைரஸ் தலைவிரித்தாடி வருகிறது.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 265,928 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை இந்த வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 7,473 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 129,095 ஆகவும் உள்ளது.
-----------------------------------------------
தேர்வல்ல.
மாணவர்கள் நலனே முக்கியம்.
கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் தேர்வு நடத்துவது சாத்தியமில்லை என்று கூறி 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்.
அத்துடன், 10-ம் வகுப்பு படித்த அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அவர்கள் அடுத்த வகுப்புக்கு உயர்த்தப்பட்டுள்ளனர் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
அகநிலை மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களுக்கு தரநிலை அளிக்கப்படும் என்றும் முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு - எஸ்.எஸ்.எல்.சி. - பொதுத் தேர்வினை ஜூன் 15ம் தேதி நடத்தியே தீருவது என தமிழக அரசு பிடிவாதமாக இருக்கிறது.
தேர்வு வேண்டாம் என்று பரவலாக கல்வியாளர்கள் வலியுறுத்திவந்தாலும், தமிழக அரசு தமது நிலையை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லாத நிலையில், அது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. நீதிபதி வழக்கை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில் தெலங்கானா அரசின் முடிவு வந்துள்ளது.
தமிழக அரசு பிடிவாதம் எதற்கு?
வெறும் 4,0000 க்குள் கொரோனா தொற்றாளர்கள் உள்ள தெலுங்கானா இப்படி தெளிவான முடிவிகளை எடுக்கையில் 34,000 தொற்றாளர்கள் இருக்கும் தமிழ் நாடு அரசு மூன்று லட்சம் மாணவர்களைத் தேர்வெழுத கட்டாயப்படுத்துவது ஏன்?
ஆரம்பம் முதலே கொரோனா நோயில் தமிழக அதிமுக அரசு எடுத்து வரும் முடிவுகள் கொரோனாவை சமூகப் பரவலாக்கும் முயற்சிகளாகவே உள்ளது.
திமுக கொரோனாவை எச்சரித்து கடும் நடவடிக்கைகளை எடுக்கக் கோரிய போது சட்டமன்றத்திலே கிண்டலடித்தார் எடப்பாடி.
பின் கொரோனா நோயாளி ஒருவர் இருந்தார் அவரும் நலமாகி விட்டார் என்றார்கள்.மூன்றே நாளில் போய்விடும் என்றார்.திமுக வினர் என்ன டாக்டர்களா என்றார்.
பின் முக்கவசத்துடன் தோன்றி பணக்கார்ர்களுக்கு,வெளிநாடு சென்று வந்தவர்களுக்கு மட்டும் வரும் என்றார்.
பலஆயிரக்கணக்கில் வியாபாரிகள் குவியும் கோயம்பேடு காய்கறி சந்தையை சரிவர பராமரிக காதல் அங்கு வந்து சென்றவர்கள் மூலம் வட தமிழகம் முழுக க கொரோனாவை பரவ வைத்தனர்
வீட்டில் இருந்து காய்கறி வாங்க மட்டும் ஒழுங்கு முறையில் மக்கள் வந்து சென்று தனிமனித இடைவெளியை கடைபிடித்த போது திடீரென நாளை முதல் நான்கு நாட்கள் கடுமையான ஊரடங்கு.ஒருவரும் வெளியே வரக்கூடாது என முட்டாள்தனமாக அறிவித்து வீட்டில் இருந்த மக களை எல்லாம் நான்கு நாட்களுக்கான காய்கறி,மளிகை வாங்க தெருக்களில் ஊர்வலமாக வலம் வர வைத்து அதுவரை இருந்த தனி மனித இடைவெளியை கேலிக்குரியதாக்கினார் எடப்பாடி.
டாஸ்மாக்கை திறந்து மேலும் கொரோனா பரவலுக்கு உற்சாகபானமளித்தார்.
இப்போது பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தியே தீர்வேன் என பிடிவாதம் பிடித்து கொரோனா பரப்ப வழி செய்கிறார்.
காரணம் " அக்டோபர், நவம்பரில் கொரோனா மிக உக்கிரமாக நாலு லட்சம் பேரை பிடித்துக்கொள்ளும்.அதற்குள் தேர்வை நடத்த வேண்டுமாம்."
அட அறிவாளிக்கு எதிராளிகளே.இப்போது மூன்று லட்சம் மாணவர்கள் ,மேலும் தேர்வு நடத்தும் அலுவலர்கள்,ஆசிரியர்கள் ,தேர்வு மய்யத்திற கு மாணவர்களை விட வரும் பெற்றோர்கள்,வாகன ஓட்டிகள. என ஒரு லட்சம் பேர்கள் வெளியே தேர்வு நடக்கும் பத்து நாட்கள் கூட்டமாக வந்து சென்றால்தான் நீங்கள் சொல்லும் அக டோபர்,நவம்பர் எண்ணிக்கை வரும் வாய்ப்புள்ளது.
நம்மில் பத்து % மட்டுமே கொரோனா தொற்றாளர்கள் இருக்கும் தெலுங்கானாவே தேர்வில்லை. அனைவரும் தேர்ச்சி என்கிறது.
இது போன்ற அறிவார்ந்த நடவடிக்கைகள்தான் அங்கு வெறும் 4000 கொரோனா நோயாளிகளுடன் இருக்கக் காரணம்.
உங்களின் அறிவற்ற,பிறர் சொல்லியும் கேட்காத திமிர்த்தனமும்தான் தமிழகம் தினமும் 1600 கொரோனா தொற்றாறாளர்களுடன் 40,000 என மராட்டியத்துடன் போட்டிபோடும் நிலைக்கு காரணம்.
நீங்கள்தான் அடிமை வம்சம்,பணம் குவிப்பதைத்தவிர வேறு தொழில் நுணுக்கம் தெரியாதவர்கள் என்றால் உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அதிகாரிகள் கூட அறிவார்ந்த ஆலோசனைகளை உங்களுக்கு சொல்வது கிடையாதா?
அல்லது நீங்கள் கேட்பது கிடையாதா?
பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமெனக் கோரி நடந்துவந்த வழக்கு ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை ஜூன் 15ஆம் தேதி நடத்த மாநில பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, ஜூன் 10ஆம் தேதிக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், தமிழ்நாடு உயர்நிலை - மேல் நிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, மாணவர்களின் எதிர்காலத்தைவிட, அவர்களது உயிர் முக்கியமானது என்றும் தற்போதைய சூழலில் அவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதைப் போல இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்தனர். தேர்வை ஏன் ஒத்திவைக்கக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணன், இது தொடர்பாக தாங்கள் ஒரு விரிவான திட்டத்தை வைத்திருப்பதாகவும் எவ்வித பாதிப்புமின்றி தேர்வு நடைபெறுமென்றும் தற்போதுதான் தேர்வை நடத்த சரியான தருணமென்றும் இது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல்செய்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக மேலும் பல வழக்குகள் ஜூன் 11ஆம் தேதி விசாரணைக்கு வரவிருப்பதால் அன்று விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்வதாக தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கை ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
----------------------------+------------------------------
ஆனால், குஜராத் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி பெறாத மாநிலமாகவே இன்றளவும் இருக்கிறது. சுகாதார துறையைப் பொறுத்தவரை பின்தங்கிய மாநிலமான பீகாரை விட குஜராத்தின் நிலை படுமோசம் என அதிர்ச்சித் தகவலை எடுத்துவைத்திருக்கிறது உலகளாவிய செய்தி நிறுவனமான பிபிசி.
'குஜராத் சுகாதார மாடலின் பயங்கரமான நிலை... அதிகரிக்கும் மரணங்கள்' என பிபிசியின் இந்தி மொழிப் பிரிவில் ஒரு அதிரவைக்கும் கட்டுரை வெளியாகியுள்ளது. அதன் சுருக்கமான வடிவம் பின்வருமாறு :
1. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத், கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக மரணங்களைச் சந்தித்த மாநிலம் இது.
2. இந்தியாவில் உள்ள கொரோனா நோயாளிகளில் 65 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில்தான் இருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் 74,860 பேர், தமிழ்நாட்டில் சுமார் 28,000 பேர், டெல்லியில் சுமார் 23 ஆயிரம் பேர், குஜராத்தில் சுமார் 18,000 பேர்.
3. ஆனால், மரண விகிதங்களை எடுத்துக்கொண்டால், மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது குஜராத். மகாராஷ்டிராவில் 2,587 பேர்; குஜராத்தில் 1,122 பேர்.
4. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் சுமார் 3 சதவீதம் பேருக்கு மரணம் நேர்கிறது. ஆனால், குஜராத்தில் இந்த சதவீதம் மிக அதிகம். மே மாத இறுதியில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக குஜராத்தில்தான் அதிக நோயாளிகள் இருந்தனர்.
5. இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்கள் அகமதாபாதும் சூரத்தும். பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அகமதாபாதில்தான் இருக்கிறார்கள். இறப்பும் இந்நகரில்தான் அதிகம்.
6. அகமதாபாதில் அம்தாவாத் நி பாட் என்ற பகுதியில் ஏழைகள் அதிகம். மக்கள் நெரிசலும் அதிகம். சமூக இடைவெளி என்பதே இங்கு சாத்தியமில்லை. இந்தப் பகுதியில் யாருக்காவது கொரோனா வந்தால் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்குத்தான் செல்லவேண்டும். அங்கே கவனிப்பும் இருக்காது, சிகிச்சையும் இருக்காது.
7. சற்று வசதியானவர்களாக இருந்தால் தனியார் மருத்துவமனையான எஸ்விபி மருத்துவமனைக்குச் செல்வார்கள். அங்கே சிகிச்சை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருக்கும்.
8. ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற அடிப்படை மருத்துவ உதவிகள் கிடைத்திருந்தால், கொரோனா பாதித்தவர்கள் விரைவிலேயே சிகிச்சைக்குச் சென்றிருப்பார்கள்.
9. ஆகஸ்ட் 2018வாக்கில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி குஜராத்தில் 1,474 ஆரம்ப சுகாதார நிலையங்களே இருக்கின்றன. பின்தங்கிய மாநிலமான பீகாரிலேயே 1,899 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன.
10. ஆயிரம் பேருக்கு எத்தனை படுக்கை வசதி என்று எடுத்துப் பார்த்தால், அதில் இந்திய சராசரியைவிட குஜராத் கீழே இருக்கிறது. அதாவது ஆயிரம் பேருக்கு 0.3 படுக்கையே இருக்கிறது. ராஜஸ்தானில் 0.6 படுக்கையும் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒடிஷாவில் 0.4 படுக்கையும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் 1.1 படுக்கை இருக்கிறது. அதாவது குஜராத்தைப் போல நான்கு மடங்கு.
11. குஜராத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் 29 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. சிறப்பு நிபுணர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். 90 சதவீத இடங்கள் காலியாக இருக்கின்றன. மக்களிடமும் விழிப்புணர்வு கிடையாது.
12. அகமதாபாத் சிவில் மருத்துவமனையிலிருந்து கணபதி மக்வானா என்பவரை குணப்படுத்திவிட்டதாக டிஸ்சார்ஜ் செய்தார்கள். ஆனால், அவரது உடல் பேருந்து நிலையத்தில் கிடந்தது.
இதுதாங்க உண்மையான மோ(ச)டி குஜராத் மாடல்.
இதைத்தான் இப்போது இந்தியா முழுக்க செய்கிறார் மோடி.
-விக்னேஷ் செல்வராஜ்
------------------8--------------------
கொந்தகை.
சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் மண்டை ஒடுடன் எலும்புகள், நத்தை ஓடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்து ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தொடங்கியது. ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி அகழாய்வு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
மே 20ல் அகரம், கீழடியில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. மணலூரில் மே 22ம் தேதி, கொந்தகையில் 27ம் தேதி முதல் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறுது.
கொந்தகையில் நடந்த அகழாய்வில் நான்கு முதுமக்கள் தாழிகளும், ஆறு சிறிய மண்பானைகளும் கண்டறியப்பட்டதால், கொந்தகை பண்டைய காலத்தில் இடுகாடாக இருந்திருக்க கூடும், என மதுரை காமராசர் பல்கலை கழகம் மற்றும் உயிரியல் துறை இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.
கொந்தகையில் குறைந்த பட்சம் 15 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் அலுவலர்கள் முடிவு செய்து அந்த பகுதியில் அகழாய்வு நடத்தி வரும் நிலையில் நேற்று (05.06.2020) அந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள கதிரேசன் என்பவரின் தோட்டத்தில் தென்னை கன்றுகள் நடுவதற்காக இயந்திரம் மூலம் குழிகள் தோண்டும் போது முதுமக்கள் தாழி முழு அளவில் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து நில உரிமையாளர் தொல்லியல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் மற்றும் தொல்லியல் குழுவினர் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று முதுமக்கள் தாழியை ஆய்வு செய்து தாழியினுள் இருந்த மண்டை ஓடு, எலும்புகள் உள்ளிட்டவைகளை பாதுகாப்பாக வெளியில் எடுத்தனர்.
பின்னர் அவை தொல்லியல் ஆய்வாளர்கள், மரபணு ஆய்வாளர்கள் ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது
காலத்தில் முதியோர்களை பராமரிக்க முடியாவிட்டால் பெரிய அளவிலான பானையினுள் அவர்களை வைத்து உணவு, தண்ணீருடன் மண்ணிற்குள் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. தற்து உணவு குவளை, தண்ணீர் பாத்திரம் உள்ளிட்டவற்றுடன் மண்டை ஓடு, எலும்புகள் கண்டறியப்பட்டது இதற்கு ஆதாரமாக கருதப்படுகிறது.
முதுமக்கள் தாழியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகள், மண்டை ஓடுகளை ஆய்வு செய்த பின்தான் இவற்றின் காலம் பற்றி அறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் அகரம் அகழாய்வில் அதிகமாக நத்தை கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "நத்தைகளில் இருவகை உண்டு, நன்னீரில் வளரும் நத்தைகளை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்துவார்கள். கடல் நீர் நத்தைகளை அழகு பொருளாக மட்டுமே பயன்படுத்துவார்கள்.
அகரத்தில் கிடைத்த நத்தை கூடுகள் அனைத்துமே நன்னீர் நத்தை கூடுகள். பண்டைய தமிழர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி உடல் உபாதைகளுக்கு தீர்வு கண்டறிந்த நிலையில், நத்தைகளை மருத்துவ ரீதியாக பயன்படுத்தினார்களா அல்லது உணவு பொருளாக பயன்படுத்தினார்களா என்பது ஆய்வின் முடிவில்தான் தெரிய வரும்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தற்போது கிடைத்து வரும் நத்தைகளை அதன் அளவுக்கு ஏற்ப தரம் பிரித்து ஆவணப்படுத்தி வருகிறோம். முழுமையான அளவில் கிடைத்த நத்தைகளை ஆய்விற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நத்தைகளை சமைத்து சாப்பிட்டால் சளி, இருமல் சிறு குழந்தைகளுக்கு உமிழ் நீர் வடிதல் உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும், ரத்தகட்டுக்கு நத்தையை அரைத்து ரத்தக்கட்டு உள்ள இடத்தில் வைத்து கட்டுப்போட்டால் விரைவில் குணமடையும். நத்தை ஓடுகள், மூலம் நோய்க்கு சிறந்த மருந்து. நத்தையின் சதை, விந்து எண்ணிக்கையை உயர்வடைய செய்யும் என்பதால், அகரத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் தொடர்ச்சியாக நத்தை கூடுகள் கிடைத்திருப்பதால் அங்கு சமையல் கூடமாக இருக்க வாய்ப்புண்டு. தொடர்ச்சியான அகழாய்வு மூலம் இதன் பயன்பாடு தெரிய வரும்" என சித்த மருத்துவர் வெங்கட்ராமன் தெரிவிக்கிறார்.
கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு பணியின்போது, ஒரு விலங்கின் எலும்புக் கூடு கண்டறியப்பட்டுள்ளது என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீழடியில் நடந்த அகழ்வாய்வில் இதுவரை கிடைத்த எலும்புத் துண்டுகளை விடப் பெரிதாக, ஒரு விலங்கின் எலும்புத் கூடு கண்டறியப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீழடியில் ஆறாவது கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி 19ஆம் தேதியன்று துவங்கப்பட்டன. கொந்தகை பகுதியில் நடந்துவரும் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், ஈமச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மண்ணாலான பாத்திரங்கள், மணிகள் ஆகியவை கிடைத்தன.
கொந்தகை பகுதியில் இதுவரை மூன்று குழிகள் தோண்டப்பட்டுள்ளன. முதல் குழியில் 2 முதுமக்கள் தாழிகளும், 2வது குழியில் 8 முதுமக்கள் தாழிகளும், மூன்றாவது குழியில் 2 தாழிகளும் கிடைத்தன.
இந்த நிலையில், கொந்தகையில் மார்ச் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட அகழாய்வில் எலும்புக்கூடு ஒன்று கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிபிசி தமிழிடம் பேசிய கீழடி அகழ்வாய்வு இயக்குநர் சிவானந்தம் எலும்புக் கூட்டை அகழ்வாய்வு செய்த இடத்தில் இருந்து எடுக்காமல் வைத்திருப்பதாகவும், கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு முடிந்ததும், வல்லுநர்களின் துணையோடுதான் பிற சோதனைகளை மேற்கொள்ளமுடியும் என்று தெரிவித்தார்.
'கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் அகழ்வாய்வு பணிகளை நிறுத்தியிருந்தோம். மே கடைசி வாரத்தில் பணிகளைத் தொடங்க அனுமதி கிடைத்தது. தற்போது ஒரு எலும்புக் கூடு உள்பட சில சிறிய பொருட்களையும் கண்டறிந்துள்ளோம். இவை அனைத்தையும் கண்டறிந்த இடத்தில் பிளாஸ்டிக் பைகளில் பாதுகாப்பாக சுற்றிவைத்துள்ளோம். கண்டறியப்பட்ட பொருட்கள் எந்த காலத்தை சேர்ந்தவை, எந்த விலங்காக இருக்கும் என எந்த தகவலையும் அறியமுடியவில்லை. அந்த எலும்புகளை எடுக்கும்போது அதிக கவனம் வேண்டும். பிரத்தியேகமான கருவிகளைக் கொண்டு பாதுகாப்பாக எடுக்கவேண்டும் என்பதால் காத்திருக்கிறோம்,'' என்றார் சிவானந்தம்.
மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக பொது மக்களை இங்கு அனுமதிப்பதில்லை என்றும் பாதுகாப்பை பலப்படுத்தி, இந்த பொருட்களை கண்டறியப்பட்ட களத்தில் வைத்துள்ளதாக தெரிவித்தார்.
கடந்த மே 28-ல் பெய்த பலத்த மழையால் அகழாய்வு செய்த இடங்களில் தண்ணீர் புகுந்திருந்தது. பணிகள் நிறுத்தி தண்ணீர் வற்றிய பின்னர் பணிகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
அதேசமயம், மணலூர் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில், ஒரு குழியில் சுடு மண்ணால் செய்யப்பட்ட உலை ஒன்றையும் கண்டறிந்ததாக சிவானந்தம் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக நடந்த அகழ்வாய்வில், 10-க்கும் மேற்பட்ட சங்ககால கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் முத்திரைக் கட்டைகள் (ரப்பா் ஸ்டாம்ப்), எழுத்தாணிகள், அம்புகள் , இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் எழுத்துகளுடைய மட்பாண்ட ஓடுகள் உட்பட 5300-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. அரிக்கமேடு, காவிரி பூம்பட்டிணம், உறையூா் போன்ற இடங்களில் நடந்த அகழாய்வில் கிடைத்ததைவிட அதிக எண்ணிக்கையில் தொடா்ச்சியாக பல கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கீழடியில் கண்டறியப்பட்டுள்ள பொருட்கள் மூலம் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான அடிப்படை ஆதாரங்களும் கிடைத்துள்ளன என அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர்.
------------------8---------------------
ஹாங்காங்
போராட்டம்.
அமெரிக்க
கலவரம்.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டங்கள் உலகம் முழுவதும் புருவங்களை உயர்த்தியுள்ள நிலையில், அதை சீனா மட்டும் வேறுபட்ட பார்வையில் ஆர்வத்துடன் உற்றுநோக்கி வருகிறது.
கடந்தாண்டு ஹாங்காங்கில் நடந்த ஜனநாயகத்துக்கு ஆதரவான மக்களின் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் இனவெறிக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது சீனா.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இனவெறிக்கு எதிரான போராட்டம் குறித்த செய்திகளுக்கு முன்னுரிமை அளித்து வரும் சீன ஊடகங்கள், அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையை மையப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி, இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் சீன அரசு, அமெரிக்காவில் உள்ள இன வேறுபாடு மற்றும் அநீதியைக் கண்டித்து மற்ற நாடுகளுடன் ஒற்றுமையுடன் நிற்பதுடன், இதன் மூலம் சர்வதேச அளவில் ஒரு பொறுப்புள்ள உலகளாவிய தலைவராக தன்னை சித்தரிக்க முயற்சிக்கிறது.
சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா, அமெரிக்காவின் உள்நாட்டு அமைதியின்மையை "ஃபெலோசியின் அழகிய நிலப்பரப்பு" என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது
மற்றொரு சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸின் தலைமை ஆசிரியர் ஹு ஜிஜின், அமெரிக்க அரசியல்வாதிகள் இப்போது "தங்கள் சொந்த ஜன்னல்களிலிருந்து இந்த அழகிய காட்சியை அனுபவிக்க முடியும்" என்று தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவால் "பயங்கரவாதத்தின் அறிகுறிகளைக் காட்டும் கலகக்காரர்கள்" என்று வகைப்படுத்தப்பட்ட ஹாங்காங் போராட்டக்காரர்களை ஆதரித்த ஃபெலோசி உள்ளிட்ட அமெரிக்க அரசியல்வாதிகளை சீனா நீண்டகாலமாக கண்டித்துள்ளது.
ஹாங்காங் சீன பிரதேசமாக இருந்தாலும், அங்கு 'ஒரு நாடு; இரு அமைப்பு முறை' எனும் கோட்பாட்டின்கீழ், சில தன்னாட்சி அதிகாரங்களை ஹாங்காங் பெற்றுள்ளது.
99 ஆண்டுகள் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் 1997இல் சீனாவுடன் இணைந்தது.
வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் பொது விவகாரங்களுக்கான மில்லர் மையத்தின் மூத்த பேராசிரியரான அய்ன் கோகாஸ், அமெரிக்காவும் சீனாவும் உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அரசியல் நிகழ்வுகளால் தூண்டப்பட்ட உறுதியற்ற தன்மையை உள்நாட்டில் எதிர்கொண்டு வருவதாக கூறுகிறார்.
சீனா தனது சொந்த தேசிய பாதுகாப்பு இலக்குகளை அடுத்து நிலைக்கு கொண்டு செல்வதற்கு, தற்போது அமெரிக்காவில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ளும் எண்ணத்தில் இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
அமெரிக்காவின் "இரட்டை நிலைப்பாடு"அமெரிக்கா தனது உள்நாட்டில் நிலவரம் அசாதாரணமான சூழ்நிலையில், 'இரட்டை நிலைப்பாட்டை' கடைப்பிடிப்பதாக சீனா மற்றும் ஹாங்காங்கை சேர்ந்த தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
"அமெரிக்காவில் நடக்கும் கலவரத்தை, அங்குள்ள உள்ளூர் அரசாங்கங்கள் எப்படி கையாளுகின்றன என்பதை பாருங்கள். ஆனால், இதே மாதிரி ஹாங்காங்கில் நடைபெற்ற போராட்டத்தின்போது, அமெரிக்கா எடுத்த நிலைப்பாடு குறித்து நமக்கு தெரியும்," என்று கூறுகிறார் ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவரான கேரி லாம்.
சீனா மற்றும் ஹாங்காங்கின் தலைவர்கள் கூறும் இதுபோன்ற கூற்றுகளை சமூக ஊடகங்களில் பகிரும் சீனர்கள், அமெரிக்காவை "இரட்டை நிலைப்பாடு கொண்ட நாடு" என்று விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக, அமெரிக்க அரசு போராட்டங்களை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் தேவைக்கு அதிகமான காவல்துறையினரை குவிப்பது, போராட்டக்காரர்கள் மற்றும் நிகழ்விடத்தில் பணியில் ஈடுபட்டுள்ள செய்தியாளர்களை கண்மூடித்தனமாக தாக்குவது உள்ளிட்ட ஜனநாயகத்துக்கு எதிரான செயலில் ஈடுபடுவதாக சீன ஊடகங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
ஜார்ஜியா மாநில பல்கலைக்கழக பேராசிரியர் மரியா ரெப்னிகோவா, அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்த சீன அரசு ஊடகங்களின் தீவிரம் முன்னெப்போதுமில்லாத ஒன்று என்று கூறுகிறார்.
"இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று, ஏனென்றால் சீன ஊடகங்கள் அதை உருவாக்கவில்லை" என்று பேராசிரியர் ரெப்னிகோவா கூறுகிறார். எனினும், அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டங்களின் கோர முகத்தை காட்டும் சீன ஊடகங்கள், அதை ஹாங்காங் காவல்துறையினரின் இயல்புக்கு மாறான பக்கத்துடன் ஒப்பிடுவதாக அவர் குறிப்பிடுகிறார்.
உள்நாட்டு அமைதியின்மையை கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவின் தோல்வியை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் சீனா, உலக அரங்கில் தன்னை மிகவும் பொறுப்பான நாடாக நிலைநாட்டிக்கொள்ள முயற்சிக்கிறது.
அமெரிக்காவில் நிலவி வரும் இனவெறி மற்றும் காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் பதிவிட்ட ட்வீட்களை சீன அரசு அதிகாரிகள் ரீட்வீட் செய்து வருகின்றனர்.
"என்னால் மூச்சுவிட இயலவில்லை" என்று ட்வீட் செய்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், ஹாங்காங் விவகாரத்தை சீனா கையாள்வது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் முன்வைத்த விமர்சனங்களின் திரைப்பிடிப்புகளை பதிவிட்டிருந்தார்.
-------------------8----------------------