இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிர்வாக திறமையற்றவர்.

படம்
உலகம் முழுவதும் உள்ள 200க்கும் மேலான நாடுகள் கொரோனா வைரஸின் தாக்கத்தால் சிக்கிச் சின்னாபின்னமாகி வருகின்றன. அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. தொடக்கத்தில் கொத்துக்கொத்தாக உயிர் பலிகளை கொண்டிருந்த ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளே தற்போது 3 மாத முழு ஊரடங்குக்கு பிறகு மெல்ல மீண்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் நான்கு கட்ட ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்ட போதும், கொரோனாவினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக அதிகப்படியான கொரோனா சோதனைகளை மேற்கொள்ள அரசு தவறிவிட்டது என்றே பல தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. ஆகவே இப்படியான இக்கட்டான சூழல் நிலவும் வேளையில் மக்களை வீட்டிலேயே இருத்தி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு தவறிவிட்டது எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. முன்னறிவிப்பில்லாமல், திடீரென மார்ச் 24ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வேலையின்றி, பசிப்பிணியால் வாடிய புலம்பெயர்ந்த தொ

எது நேர்மறை.?

படம்
எது பாசிட்டிவ் பார்வை? – ஜெ. ஜெ.ஜெயரஞ்சன் ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகள், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட அன்றைய நடவடிக்கைகள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பேசி வருகிறார். இந்நிலையில் இன்று (11/06/2020) மோடி அரசின் விவசாயம் தொடர்பான மூன்று அவசர கால சட்டங்கள் வேளாண் துறைக்கு பயனளிக்கும், ஆனால் விவசாயிகளுக்கு பயனளிக்காது என்று வெளியான ஒரு கட்டுரை பற்றியும் அது குறித்த தனது பார்வையையும் பகிர்ந்துள்ளார். விலை கொள்கை தற்போது விவசாயிகளுக்கு அல்லாமல் வியாபாரிகளுக்கு சாதகமாக மாற்றியைக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ள ஜெ.ஜெயரஞ்சன் அதற்கு விளக்கமும் தெரிவித்துள்ளார். முழுக் காணொலியையும் கீழே காணலாம்...  நன்றி: மின்னம்பலம். ------------------------------------

தேர்தல்தான் முக்கியம்.

படம்
விரைவில் பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான தேர்தல் பிரச்சாரத்தைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்  பாஜக தொடங்கி உள்ளது.  இதை பாஜக முன்னாள் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் புலம்பெயர்வு தொழிலாளர்கள் இரயில் பயணம் செய்யத்தேவையான நிதி மத்திய அரசிடம் இல்லை என்றும், மாநில அரசின் பங்கில்தான் புலம்பெயர்வு தொழிலாளர்களின் இரயில் பயணம் சாத்தியமாகும் என்றும் தெரிவித்தனர். ஆனால் இந்த கரோனா காலத்திலும் தேர் தல் பிரச்சாரத்தில் இறங்கிய பாஜக சத்தியப் பேரணி (விருட்சுவல் ரேலி) என்ற பெயரில்  இணையவழி பிரச் சாரத்தை தொடங்கியுள்ளது. இதற்காக பீகாரின் பல்வேறு இடங்களில் ஒருலட்சம் பிரமாண்ட எல்.ஈ.டி.   எனப்படும் பெரிய மின்னணுத் திரைகள் அமைக்கப்பட்டன. அனைத் திற்கும் அதிநவீன இணைய இணைப்பு வேகமாக வழங்கப்பட்டது. இதற்கான தொகை குறைந்த பட்சம் ரூ.200 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். பீகார் முழுவதும் முக்கிய இடங்களில் இவ்வாறு பெரிய எல்.ஈ.டி. திரைகள் அமைக்க மூன்று தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிகள்

சாதனை படைக்கும் வேலுமணி

படம்
தமிழக மக்கள், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் போலி முகத்திரையைக் கிழித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை" எனத் தெரிவித்துள்ளார் கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு : “உள்ளாட்சித் துறை அமைச்சரா அல்லது ஊழலாட்சித் துறை அமைச்சரா என்று தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் கேட்கக்கூடிய அளவில் ஊழலில் மிகப்பெரிய வரலாற்று சாதனைகளை புரிந்து கொண்டிருக்கும்; மிக விரைவில் ஊழல் முறைகேட்டில் உலக அளவில் கின்னஸ் சாதனை படைக்க இருக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, பொது வாழ்வில் இதுவரை எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாமல் தூய்மையானவராக திகழும், அல்லும் பகலும், தமிழக மக்களின் தேவையறிந்து , அவர்களுக்காக பாடுபடும் எங்கள் கழகத் தலைவர் அன்புத் தளபதி பற்றி பேசுவதற்கு எந்த ஒரு அருகதையும் இல்லை. ஊழலின் ஊற்றுக் கண்ணான, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மிகவும் கேவலமான முறையில், பிதற்றல்களுடன், அரசியலுக்கு உண்டான அடிப்படை நாகரிகம் கூட தெரியாமல், அநாகரீகமாக ஒரு அறிக்கை வெளியிட்டு “உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி ப

மோ(ச)டி பிம்பம்.

படம்
'குஜராத் மாடல்’ எனும் வெற்று பிம்பம் சில ஆண்டுகளாக பா.ஜ.க ஆதரவாளர்களாலும், வலதுசாரி ஊடகங்களாலும் ஊதிப் பெரிதாக்கப்பட்டு வருகிறது. பொய்களாலும், புரட்டுகளாலும் கட்டமைக்கப்பட்ட ‘குஜராத்’ மாடல் வளர்ச்சி என ஏமாற்றித்தான் கடந்த முறை ஆட்சியைப் பிடித்து பிரதமர் ஆனார் மோடி. ஆனால், குஜராத் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி பெறாத மாநிலமாகவே இன்றளவும் இருக்கிறது. சுகாதார துறையைப் பொறுத்தவரை பின்தங்கிய மாநிலமான பீகாரை விட குஜராத்தின் நிலை படுமோசம் என அதிர்ச்சித் தகவலை எடுத்துவைத்திருக்கிறது உலகளாவிய செய்தி நிறுவனமான பிபிசி. 'குஜராத் சுகாதார மாடலின் பயங்கரமான நிலை... அதிகரிக்கும் மரணங்கள்'  என பிபிசியின் இந்தி மொழிப் பிரிவில் ஒரு அதிரவைக்கும் கட்டுரை வெளியாகியுள்ளது. அதன் சுருக்கமான வடிவம் பின்வருமாறு : 1. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத், கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக மரணங்களைச் சந்தித்த மாநிலம் இது. 2. இந்தியாவில் உள்ள கொரோனா நோயாளிகளில் 65 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்