இடுகைகள்

ஆகஸ்ட், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இணையம் என்றால் இனி ...?

படம்
கூகுள் தன் கிளை நிறுவனங்களை எல்லாம் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முயற்சித்து வரும் வேளையில் அதற்கு நேர்மாறான பாதையில் நடை போடுகிறது ஃபேஸ்புக்.  இப்படி ஒரே குடையின் கீழ் நிறுவனங்களை கொண்டுவரும்போது வெளிப்பார்வைக்கு கூகுள் டெக் உலகின் அரசன் போல காட்சியளித்தாலும் நிஜம் அதுவல்ல. ஃபேஸ்புக்தான் டெக் உலகின் ரியல் சாம்ராட். ஃபேஸ்புக்கில் பயனாளிகள் தாங்களாக முன்வந்து தங்களைப் பற்றிய தகவல்களை பகிர்கிறார்கள்.  இதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது.  ஃபேஸ்புக் தன் கிளை நிறுவனங்கள் மேல் தன் ஆதிக்கத்தை செலுத்தாமல் அவற்றை சுதந்திரமாக செயல்பட வைக்கிறது.  இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஒக்குலஸ் போன்றவை எல்லாம் தத்தமது தனித்திறமைகளோடு விளங்குகின்றன.  இதனால் கூகுளை விட பயனாளிகள் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறது ஃபேஸ்புக். இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், மெசஞ்சர் என பல தளங்கள் இருந்தாலும் ஃபேஸ்புக்தான் நாம் அதிகம் பயம்படுத்தும் தளமாக விளங்குகிறது. ஆனால்  அந்தத் தளத்தின் உலகளாவிய ஆதிக்கத்தை  ஒரே ஒரு குறைபாடுதான் தடுத்து கொண்டிருக்கிறது .  அது- 'சர்ச்' ஆப்ஷன்.  இதை களைய திட்டங்கள் வகுத்து வ

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ..,

படம்
  நாகர்கோயில் அருகிலுள்ள ஒழுகினசேரியில்தான்  கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தார்.  தந்தையார் சுடலைமுத்துப் பிள்ளை, தாயார் இசக்கி அம்மாள்.  இவர்களுடைய மூத்த மகன் தான் தமிழகத்தில் புகழின் உச்சியில் இருந்த என்.எஸ்.கே. எனும் என்.எஸ்.கிருஷ்ணன். இவர் படித்தது என்னவோ நான்காம் வகுப்புதான். தமிழும் மலையாளமும் இவருக்கு நன்கு தெரியும். தந்தைக்கு பெயருக்கு ஒரு வேலை இருந்தது.  தாயார் ஒரு குடும்பத் தலைவிதான். மேல் வருமானத்துக்காக இவர் ஒரு சோற்றுக்கடை வைத்து நடத்தி வந்தார். மிக ஏழ்மையான குடும்பம்.  அப்போதெல்லாம் சினிமா கொட்டகைகள் கிடையாது. கிருஷ்ணன் நாடகக் கொட்டகைக்குச் சென்று அங்கு சோடா, கலர் விற்கத் தொடங்கினார்.    எல்லா ஊர்களிலும் நாடகம் போட் ஒரு கொட்டகை இருக்கும். 1924இல் கிருஷ்ணனின் தந்தை தன் மகனை ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ப்பதற்காக அழைத்துச் சென்றார். அந்தக் காலத்தில் பல ஊர்களில் பாய்ஸ் நாடகக் குழுக்கள் இருந்தன.  அவற்றில் பெரும்பாலும் சிறுவர்கள்தான் நடித்து வந்தனர். அவர்களுக்குப் பகலில் ஒரு வாத்தியார் பாடம் எடுத்து கதை, வசனங்கள் என்று சொல்லிக் கொடுப்பார்கள். பாடத் த

இந்தியாவில் இணையம்.

படம்
முதல் இணைய தளத்தையும் அதனைத் தேடி அறிய பிரவுசரையும் தந்தவர் டிம் பெர்னர்ஸ் லீ.  URL, HTML, மற்றும் HTTP போன்ற பெயர்களை எல்லாம் அவர்தான் கொடுத்தார்.   தொடக்கத்தில் இணையம், யார் வேண்டுமானாலும் மேம்படுத்தக் கூடிய தகவல் மையமாகவும், அனைவரும் தங்களுக்குத் தேவையான தகவலைத் தேடி எடுத்துக் கொள்ளக் கூடிய தகவல் களஞ்சியமாகவும் தான் வடிவமைக்கப்பட்டது.  அப்படி துவக்கப்பட்ட இணையம்  1991ல் செயல்படத் தொடங்கி  ஆகஸ்ட் 6 அன்று தனது வெள்ளி விழா ஆண்டாகிய 25 ஐ அடிந்துள்ளது. “கல்வி சார்ந்த தகவல்கள் அனைத்தும், அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும்” என்ற  நோக்கம்தான்    டிம் பெர்னர்ஸ் லீ  இணையதளம் தோற்றுவிக்க  யொசனையை தூண்டியது.  அந்த நோக்கத்துடன் 1989ல் பணியாற்றத் தொடங்கி, 1990ஆம் ஆண்டு இதனை வடிவமைத்து சோதனை செய்திட்டார் பெர்னர்ஸ் லீ.  தகவல் மையமாக அமைந்தாலும், அங்கு அந்த தகவல் உள்ளது என எப்படி அறிவது? என்ற கேள்வி, இணையத்தை  அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது .  மேற்கண்ட  கேள்விக்கான விடையை, முதலில் உருவான இணைய நிறுவனங்களில் ஒன்றான யாஹூ தந்தது. ஸ்டான் போர்டு பல்கலையின் மாணவரான ஜெர்ரி யங் மற்றும் தொ

பாலியல் சட்டதிட்டம்......,

படம்
ஐக்கிய நாடுகளின் கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் உள்ள பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பேர், தமது வாழ்நாளில் ஒரு  முறையாவது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.  அதில் பாதிக்கும் மேலானோர் தமது பதினாறு வயதுக்குள் இத்தகைய சூழலில்  சிக்குகின்றனர் என தெரியவந்துள்ளது. நிதர்சனம் என்னவென்றால், எண்பது சதவிகிதம் பேர், தமக்கு நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றி வெளியில்  சொல்வதேயில்லை.  இதைப் பற்றி தெரிவிக்காமல் இருக்க ஒரு பக்கம் பயம்தான் காரணம் என்றாலும், மறுபக்கம் தமது சமூக சூழலால்  நாணி இதை அவமானம் எனக் கருதி போலீசாரிடம் தெரிவிப்பதில்லை. இவை அனைத்துக்கும் மேலாக, பாலியல் துன்புறுத்தல் பற்றிய  அறியாமை நிலவுவதும் முக்கியக் காரணம் எனலாம். டெல்லியில் நிகழ்ந்த கூட்டு பலாத்காரத்துக்குப் பின் பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான  சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. பலாத்காரத்துக்கு தண்டனை வழங்கும் ஐ.பி.சி. 375-ல் சீர்திருத்தம் செய்யப்பட்டது. 1. பெண்ணின் விருப்பம் இன்றியோ; 2. அவளது அனுமதி இன்றியோ; 3. பயமுறுத்தி சம்மதிக்க வைத்தோ; 4. மணமுடித்த பெண்ணை கணவன்