இடுகைகள்

செப்டம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அந்த ஏழு நாட்கள் உணவு முறை.

படம்
உங்கள் உடலில் தேவையற்ற கொழுப்பைக்குறைத்து உடலை கச்சிதமாகவும் ,ஆரோக்கியமாகவும் ,வலிமையாகவும் வைத்துக்கொள்ளும் முறையை நீங்கள் தேடிக்கொண்டிருக்கலாம். உங்களுக்காக ஒரு ஏழு நாட்கள் இயற்கை உணவு முறை. இதுதான் தற்போது பல இடங்களில் பலர் தேர்வு செய்யும் முறையாக உள்ளது. ஒருவாரம் மட்டுமே இதை நீங்கள் இந்த உணவு பழக்கத்தை மேற்கொண்டால் போதும்.உடல் கச்சிதமாகி விடும். அதன் பின் நீங்கள் அப்படியே உடல் நிலையை பராமரித்தல் போதும். இந்த ஏழு நாள் உணவுப்பழக்கத்தை மேற்கொள்ளுகையில் உங்களுக்கு உடற்சோர்வு முதல் நாளில் ஏற்படுவது இயற்கை. ஆனால் நீங்கள் அளவுக்கு அதிகமாக சோர்வு, படபடப்பு, மயக்கம் என்று உணர்ந்தால் , இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடி அவரின் அறிவுரையை கேட்க வேண்டும். மருத்துவர் அல்லது டயட்டீஷியனிடம் தொடர்ந்து அறிவுரை பெற வேண்டும்.  சர்க்கரை நோய் உள்ளவர்கள், முதியவர்கள் இந்த முயற்சியில் கண்டிப்பாக இறங்க வேண்டாம். முதல் நாள் பழங்களால் ஆன டயட்டே முதல் நாள் மெனு.  பழங்களைத் தவிர காய்கறிகள், சாதம் எதையும் தொடவே கூடாது.  தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், எலுமிச்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போ

புதிய இந்தியாவா? மற்றோரு எத்தியோப்பியா!

படம்
நாட்டின் பொருளாதாரத்தில் பிரதமர் மோடி & பிஜேபியின் சாதனைகள்.... 2014ல் 8.3% ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வருடாந்திர வளர்ச்சி விகிதம் தற்போது 5.3% ஆக உள்ளது. அதாவது 68.7% வீழ்ச்சியடைந்துள்ளது.. 2014ல் 4.9% ஆக இருந்த உற்பத்தி தயாரிப்பு தற்போது 0.10% ஆக உள்ளது. அதாவது 97% வீழ்ச்சியடைந்துள்ளது.. 2014ல் 4.9% ஆக இருந்த தொழில்துறை உற்பத்தி தற்போது 1.20% ஆக உள்ளது. அதாவது 75% வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார வீழ்ச்சியை தடுக்க போதிய வாய்ப்புகள் இருந்தும் மோடி அரசு அதனை நழுவ விட்டிருக்கிறது. இதனால் பொருளாதார வீழ்ச்சிக்கு இன்னும் காங்கிரஸ் கட்சியை குறை சொல்லிக்கொண்டிருக்க கூடாது என்று பாஜக வை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பதாவது : இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதற்கு முந்தைய அரசை இனியும் குறை சொல்லக்கூடாது. நமக்கு ஏராளமான வாய்ப்பும் நேரமும் இருந்தது. பொருளாதாரம் தொடர்ந்து சரிந்த போதும் நான் பேசவில்லை. தற்போது, ஒரு காலாண்டு கணக்கை வைத்து மட்டும் பேசவில்லை. தொடர்ந்

இந்திய கோடீசுவரர்கள் அதிகரிப்பு,

படம்
இந்திய பொருளாதார வளர்ச்சி கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு, ‘5.7 சதவிகிதம்’ என்று வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து 6-ஆவது மாதமாக சரிவைக் கண்டுள்ளது. இந்திய பொருளாதாரம் சந்தித்து வரும் நெருக்கடிகளைத் தொடர்ந்து, பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் டாலர் முதலீடுகளை திரும்ப எடுத்துக்கொண்டு ஓடுவதும், இறக்குமதி அதிகரிப்பு காரணமாக இந்திய சந்தையில்இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகள் மத்தியில் டாலர் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதும் ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது. புதன்கிழமையன்று நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.72 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.  இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஜூன் காலாண்டில் வெறும் 5.7 சதவிகிதம் என்ற அளவிற்கு, 3 ஆண்டுகளில் இல்லாத மோசமான இடத்திற்கு சென்றது.  இது இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்திய பதற்றமே, அவர்கள் தங்களின் முதலீடுகளை அவசர அவசரமாக திரும்பப் பெறுவதற்கான காரணமாக அமைந்துள்ளது.புதிய முதலீடுகள் வராத நிலை

கண்டவர் விண்டிலர்.விண்டவர் கண்டிலர்.

படம்
‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவரைப் பார்த்ததாக கூறியது அத்தனையும் பொய்’ என்று அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி. வீரமணி ஆகியோர்கூறியிருந்தனர்.  இது விவாதங்களை கிளப்பிவந்த நிலையில், ‘அனைத்துஅமைச்சர்களும் அப்பல்லோவில் ஜெயலலிதாவைப் பார்த்தோம்’ என்று மற்றொரு அமைச்சரான செல்லூர் ராஜூ கூறியுள்ளது, பலரையும் தலையிலடித்துக் கொள்ளச் செய்துள்ளது. தமிழக மக்களை வைத்து, அமைச்சர்கள் லாவணிப் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால், கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம்தேதி இரவு 10.15 மணியளவில், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதில், காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைந்ததன் காரணமாகஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிரக் கண்காணிப்பில் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.அவரது உடல் நிலைகுறித்து தினம்தோறும் அமைச்சர்கள், அரசுத் துறையினர், மருத்துவமனை நிர்வாகம் ஊடகங்களுக்கு தகவல்களை அளித்துக் கொண்டிருந்தனர். ஜெயலலிதா டிவி பார்த்தார். இட்லி சாப்பிட்ட

அமைதிப்படை கமல்?

படம்
தற்போதைய கமல்ஹாசன் பேட்டிகளில் அவர் இதுவரை தென்பட்ட கருப்பு சட்டை,பகுத்தறிவு,பெரியாரை சிந்தனைகள்,இடதுசாரி முற்போக்கு எண்ணங்கள் மறைந்து முற்றிலுமாக வலதுசாரி காவித்தனம் மெருகேறுகிறது. அறிமுகப்படுத்தும் போதே இடதுசாரிகள்,கா ங்கிரஸ்,திமுகவால் சரியான நடைமுறை இல்லை என்று சொல்லிய பணமதிப்பிழப்பை மோடி செய்தது சரியான செயல் என்று தற்போது அளக்கிறார்.  நடைமுறைய சரிவரவில்லை என்று பகிரங்கமாக ஆடிட்டர் குருமூர்த்தி போல் பேசுவதை விட சில தவ றுகள் நடந்திருக்கலாம் என்றும் ,மோடி சிறப்பாக செயல்படுகிறார் பயனுக்கு மக்கள் காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என்பதும் மோடிவித் தை க்கு ஆதரவாகவே கமல் தெரிகிறார். தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் போது அதற்கு வழிகாட்டியாகவும்,பின்னணியாகவும் இருக்கும்  பாஜக மத்திய அரசை பாராட்டுவது எந்தவகையில் சரியாக வரும். கமல்ஹாசன் சொல்லும்   ஊழல் ,முறைகேடுகளாலான   ஆட்சி தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருப்பதற்கு  முற்றிலும் பாதுகாப்பை தருவது பாஜகதான். ஆளுநரை அதற்காக பாஜக  பயன்படுத்துவதையும் தெரியாதவர் அல்ல கமல். அது தமிழ்நாட்டு கடைகோடி மக்களுக்கும் தெரியும் நிலை இருக