அமைதிப்படை கமல்?

தற்போதைய கமல்ஹாசன் பேட்டிகளில் அவர் இதுவரை தென்பட்ட கருப்பு சட்டை,பகுத்தறிவு,பெரியாரை சிந்தனைகள்,இடதுசாரி முற்போக்கு எண்ணங்கள் மறைந்து முற்றிலுமாக வலதுசாரி காவித்தனம் மெருகேறுகிறது.

அறிமுகப்படுத்தும் போதே இடதுசாரிகள்,கா ங்கிரஸ்,திமுகவால் சரியான நடைமுறை இல்லை என்று சொல்லிய பணமதிப்பிழப்பை மோடி செய்தது சரியான செயல் என்று தற்போது அளக்கிறார்.



 நடைமுறைய சரிவரவில்லை என்று பகிரங்கமாக ஆடிட்டர் குருமூர்த்தி போல் பேசுவதை விட சில தவ றுகள் நடந்திருக்கலாம் என்றும் ,மோடி சிறப்பாக செயல்படுகிறார் பயனுக்கு மக்கள் காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என்பதும் மோடிவித்தை க்கு ஆதரவாகவே கமல் தெரிகிறார்.

தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் போது அதற்கு வழிகாட்டியாகவும்,பின்னணியாகவும் இருக்கும்  பாஜக மத்திய அரசை பாராட்டுவது எந்தவகையில் சரியாக வரும்.


கமல்ஹாசன் சொல்லும் ஊழல் ,முறைகேடுகளாலான  ஆட்சி தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருப்பதற்கு  முற்றிலும் பாதுகாப்பை தருவது பாஜகதான்.

ஆளுநரை அதற்காக பாஜக  பயன்படுத்துவதையும் தெரியாதவர் அல்ல கமல்.
அது தமிழ்நாட்டு கடைகோடி மக்களுக்கும் தெரியும் நிலை இருக்கையில் கமலுக்கு தெரியாமல் இருக்காது.

காவிரி மேலாண்மை ஆணையம்,ஜல்லிக்கட்டு,நீட் தேர்வில் ஏமாற்று,விவசாயிகள்  என்று பாஜக மோடிஅரசு தொடர்சியாக தமிழ் நாட்டு மக்களை வஞ்சகம் செய்யும் மோடியை பாராட்டுவது இந்திய அரசியலில் மற்றோரு நிதிஷ் குமாராகத்தான் கமல்ஹாசனை வளர்க்கும்.

இன்றைய அரசியல் குதிப்பு கமல்ஹாசனை முதலில் அறிவிப்பு வெளிவரும் போது பெருவாரியாக மாற்றம்விரும்பிகள் ஆதரித்தது அவரின் இடதுசாரி,பகுத்தறிவு எண்ணங்கள் வெளிப்பாடுகளுக்குத்தான்.

ஆனால் அரசியல் சாக்கடையில் இறங்கும் முன்னரே அவரின் "நீலச்ச்சாயம் வெளுத்துப்போச்சு டும் ,டும் ,டும் "
என்ற பாட்டு அவருக்கே பொருந்தி விடுமோ என்ற பயம் இயல்பாகவே அவரின் தீவிர ரசிகனான எனக்கு உண்டாகிறது.


தலைமைச் செயலகம் முதல் கிராம நிர்வாக அலுவலகம் வரை கையூட்டு  கலவி இருக்கையில் நேரடி முதல்வராக விருப்பம் தெரிவிக்கும் கமல்ஹாசன் எப்படி ஆட்சியை ஊழலற்றதாக கொண்டு செல்வார் என்ற எண்ணம் உருவாக்குகிறது.

ஸ்டாலின் போன்ற துணை முதல்வர்,மேயர்  பொறுப்பில்,இருந்த ஒருவருக்குத்தான் அதிகாரிகள்,அலுவலர்களின் யார் ஊழல் பெருச்சாளி ,நடுநிலை ஊழல்வாதி,நாணயமானவர் என்ற இனங்கண்டு அதற்கேற்ப பதவிகளை வழங்கி ஓரளவுக்கு முறைகேடற்ற ஆட்சியை வழங்க இயலும்.
கமலுக்கு இதை இனங்காண்பது கடினம்.

முதலில் டெல்லியில் ஆட்சி அமைத்த கெஜ்ரிவால் இது போன்ற அதிகாரிகளால் இரண்டு மாதம் கூட ஆட்சி செய்யமுடியாமல் போனதை கணக்கில் எடுத்து அரசியலில் இறங்கி சில நாட்கள் தன்னை வலுப்படுத்திக்கொண்டு பின்னர் முதல்வராவதுதான் நலம்.

கமல்ஹாசனை அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பி அழைத்ததற்கு அவரின் முற்போக்கு ,பகுத்தறிவு சிந்தனை கருத்துக்கள்தான் காரணம்.
இதைத்தான் மீண்டும்,மீண்டும் நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.


ஆனால் விளம்பரத்தாலும் ,புகைப்பட ஜாலங்களாலும் (போட்டோ ஷாப் )ஹிட்லர் பாணியில் இவர் வல்லவர்,இவர் ஆட்சிக்கு வந்தால் பாலாறு ஓடும்,தேனாறு ஓடும் என்று பணிக்கு அமர்த்தப்பட்ட தகவல் தொழில் நுட்பக்குழு சமூக வலைத்தளங்கள்,ஊடகங்களில் காட்டிய பலூன் தனமான வளர்சியால்  ஆட்சியில் அமர்ந்த பாஜக மோடியை ஆதரிப்பது என்பது தனது நாற்காலி கனவில் வரும் நாற்காலியின் கால்களை தானே ஒடித்துக்கொள்வதாகத்தான் உள்ளது.

"விளம்பரத்தால் உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது "என்ற பாடல் வரிகளுக்கேற்ப மோடியின் செயல் திறன் தற்போது உலக அளவில் இந்தியாவை வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கத்தான் வைத்துள்ளது.

15 லட்ச ரூபாய் ஒவ்வொருவர் கணக்கில் வரவு வைத்ததில் இருந்து ஜப்பான் 80000 கோடிகள் புல்லட் ரெயில் இலவசமாக இந்தியாவுக்கு பெற்றுவந்ததாகவும் பொய் சொல்லி மோடி அம்பலப்பட்டதை பார்த்தும் செயல் திறன் மிக்கவர் என்று கமல் இன்னமும் சொன்னால் அவரும் பக்தாள் கூட்டத்தை சேர்ந்த அமைதிப்படை என்றுதான்  நாங்கள் முடிவுக்கு வர  முடியும். 

கடைசியாக கமல்ஹாசன் அவர்களுக்கு  இரண்டு குறிப்புகள் .

தமிழகத்தில் மக்கள் அடிமனதில் மோடி நம் மாநிலத்துக்கு எதிரானவற்றையே செய்கிறார்.பாஜக ஒரு மதவாத கட்சி என்ற இரு கருத்துக்களும் உறுதியாக உள்ளது.அதனால்தான் சாதாரண சாரணர் தேர்தலில் கூட பாஜக செயலாளர் எச்.ராஜா டெபாசிட் போய் அவமானப்பட்டுள்ளார்.

பாஜவுடனான கூட்டணி கட்சி சிவசேனாவே பாஜகவையும்,மோடியையும் அவ்வப்போது விமர்சிக்கிறது.
நேற்று கூட "மோடி செயல்பாடுகளால் இந்திய வளர்ந்துள்ளது மோடிக்கு ஆதரவான அலைதான் இந்தியா முழுக்க என்றால் மக்கள் ஏன் துன்பப்படுகிறார்கள்.யார் வளர்ந்துள்ளர்கள் அம்பானியும்,அதானியும்தானே ?"
என்று அதன் பத்திரிகையில் எழுதியுள்ளது.
இவைகளை கணக்கில் கொள்ளுங்கள்.
ஆனால் நேற்று நீங்கள் ஊழலை ஒழிக்க பாஜகவுடன் கைகோர்க்க தயார் என்று  அறிவித்துள்ளது உங்கள் கொள்கை பிடிப்பு என்ன என்பதை காட்டுகிறது.
ஆண் -பெண் ,இரவு-பகல் என்பது போல் இடது சாரி -வலதுசாரி என்றுதான் உள்ளது நடுசாரி என்பது உலகை ஏமாற்றும் வலதுசாரிகளுக்கான அமைதிப்படை ,ஐந்தாம்படை என்று கூட சொல்லலாம்.
ஒன்று ஆணாக இருக்க வேண்டும்.அல்லது பெண்ணாக இருக்க வேண்டும்.நடுவாந்திரம் என்பது சரியான தீர்வல்ல.தேர்வல்ல .
==========================================================================================
ன்று,
செப்டம்பர்-26.
  • உலக கடல்சார் தினம்
  •  இசை அறிஞர் பாபநாசம் சிவன் பிறந்த தினம்(1890)
  • கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை நினைவு தினம்(1954)
  • ஏமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது(1962)
===========================================================================================
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டில்லி டல்கத்தாரோ ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கல ந்துகொண்டவர்களுக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த நுழைவு சீட்டு சீனாவில் தயாரிக்கப்பட் டுள்ளது.
வாழ்கபாஜக , வளர்கமேக் இன் இந்தியா . 
 சீனாவில் தயாரான பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று ஆர்எஸ்எஸ், பாஜக.வினர் பல முறை வலியுறுத்தி வருகின்றனர். 
இதற்காக இந்திய தயாரிப்பு பொருட்களை அதிகப்படுத்தும் வகையில் 2014ம் ஆண்டு ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
கார்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் பொருட்கள் தயாரிக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தி வருகிறார். 
ஆனால்  பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் சீனாவில் தயாரான நுழைவு சீட்டு பயன்படுத்தப்பட்டு,இந்திய தயாரிப்புகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகியுள்ளது. மேலும், இந்த நுழைவு சீட்டில் ஆங்கிலமும், சீன மொழியும் இடம்பெற்றுள்ளது. தேசிய மொழி என்று பாஜக.வினர் கூறி வரும் இந்தி மொழி இதில் இடம்பெறவில்லை. 
அந்த நுழைவு சீட்டில் ‘மேட் இன் சீனா லோகோதான்  இடம்பெற்றுள்ளது.
வாழ்கபாஜக , வளர்கமேக் இன் இந்தியா . 


=============🧐

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?