இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெற்றி தொடரட்டும்......

படம்
1993ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதனால் அங்கு எதிர்ப்புக் கிளம்பியதால் வேறு இடத்திற்கு மாற்றத் திட்டமிடப்பட்டது. 1994ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஆலையை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. நாளடைவில் ஆலை அமைக்கப்பட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு அதிகளவில் உடல் நிலை மோசமடைந்ததால் தேசிய அறக்கட்டளை என்ற அமைப்பு 1996ஆம் ஆண்டு ஆலையை மூடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. சட்டப் போராட்டங்கள்: அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 1998ஆம் ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டது. அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர், காற்று மாசு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் 1998ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆலையை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஆலை இயங்க அனுமதி பெற்றது. அதன்பின் 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்ட விதிமீறல்களை சுட்டிக்காட்டி, ஆலையை மூடும்படி உயர் ந

நீங்கள் 'இந்தி'யர்களா?

படம்
 மத்திய தொழிற்பாதுகாப்புப்படை அம்மணி திருமதி கனிமொழி கருணாநிதியைப் பார்த்து நீங்கள் இந்துயரா எனக் கேட்டதில் அர்த்தம் உள்ளது. காரணம் பழமையான இந்தியாவின் பூர்வீக்க் குடிகள் திராவிடர்கள்தான் ஆரியர்களான வடிந்தியர்கள் வந்தேறிகள் என்ற உண்மை மரபணு ஆய்வின் மூலம் தெரிய வந்துவிட்டது. இந்தியாவின் முந்தைய நாகரிகம், அதாவது வடமேற்கில் இருந்த சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்தபின் ஆரியர்கள் இந்த பகுதிக்கு வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த சிந்துவெளி நாகரிகமானது, எகிப்திய மற்றும் மெசோபோடாமிய நாகரிக காலகட்டத்தை சேர்ந்தது. ஆனால், ஹரப்பன் (சிந்துவெளி) நாகரிகமும் ஆரிய நாகரிகம்தான், வேத நாகரிகம்தான் என்கிறார்கள் இந்து வலதுசாரிகள். இந்த இரண்டு குழுக்களுக்குமிடையே கருத்து மோதல்கள் அதிகரித்தப்படியே வருகிறது. குறிப்பாக 2014ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபின் இரண்டு தரப்பிற்கு இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது. பட மூலாதாரம், GETTY IMAGES இந்த பழமையான மரபணு ஆராய்ச்சியின் முடிவானது மக்கள் எங்கிருந்து எங்கு குடிபுகுந்தார்கள் என்ற விவகாரத்தில் புரிதலை வழங்குகிறது. ஹார்வர்ட் பல்கலைக்

2G இல்லாத இந்தியாவும்

படம்
  வஞ்சக எண்ணமும் கடந்த சில நாட்களுக்கு முன்பு  முகேஷ்அம்பானி டெலிகாம் துறை தொடங்கப்பட்ட 25வது வருட மாநாட்டில் முக்கியமான வார்த்தைகளை உதிர்த்துள்ளார். அதாவது 2G இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது தான் அது. வறுமை இல்லாத இந்தியா, போலியோ இல்லாத இந்தியா என்ற அரசியல் வாதிகளின் பொன்மொழி போன்று இது ஒரு புதிய பதம் தான். 2G என்பது ஆரம்ப கட்டங்களில் NOKIA 1100 போன்ற Feature Phones வழியாக பேசும்  முறை தான். இன்னமும் இந்தியாவில் 35 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள். அதனை தான் ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதால் கொஞ்சம் பின்புலத்தையும் பார்ப்போம். டெலிகாம் துறையில் ஜியோ என்பது மிக சமீபத்திய வருகை தான். அவர்களது இலக்கு என்பது புதிய இளைஞர் கூட்டம். அதனால் அவர்களுக்கு இணையம் பயன்படுத்த உதவும் டேட்டா நெட்ஒர்க் என்பதில் தான் அதிக முக்கியத்துவம் இருந்தது.  முந்தைய 2G, 3G முறைகளில் போன் கால் பேசுவதற்கு ஒரு தொழில்நுட்ப வழியும், டேட்டா முறைக்கு இன்னொரு தொழில்நுட்ப வழியும் பயன்படுத்தப்படும்.  ஆனால் அண்மையில் VoLTE என்ற Voice Over LTE தொழில்நுட்பமும் பிரபலமாகி இருந்தது.

மோ(ச)டி கேர்ஸ்

படம்
  கொரோனா நிவாரண நிதியைப் பெறுவதற்காக PM Cares(பி.எம் கேர்ஸ்) எனும் நிதி அளிக்கும் திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி. பி.எம் கேர்ஸ் எனப்படும் சேரிட்டபிள் ட்ரஸ்ட் அரசின் அதிகாரபூர்வ நிவாரண நிதி அல்ல என்றும் இத்திட்டத்தில் முறைகேடு நடைபெறலாம் என்றும் சர்ச்சை கிளம்பியது. பி.எம் கேர்ஸ் மூலம் பெறப்படும் நிதி குறித்த கணக்கை இவர்கள் யாரிடமும் காட்டவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இது ஒரு தனியார் சேரிட்டபிள் டிரஸ்ட். இது தனியார் நிதி என்பதால் RTI எனப்படும் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள்ளும் வராது எனக் கூறப்பட்டது. இந்த நிதி மத்திய தணிக்கை குழு (CAG)யின் வரம்புக்கு வெளியே இருப்பதால் அரசின் எந்த தணிக்கையாளர்களும் இந்த நிதி செலவழிக்கப்படும் விதத்தைக் கேள்வி கேட்கவே முடியாது எனத் தகவல் வெளியானதால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், பி.எம் கேர்ஸ் மூலம் மோடி அரசு பல கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக மே17 இயக்கம் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக மே17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பெரும்தொற்றில் இந்தியாவே நிலைகுலைந்துபோயிருக்கும் வேளையில் எரிகிற வீட்டில்