இடுகைகள்

மே, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எளிமையான,நேர்மையான பயங்கவாதி !

படம்
  இந்தியாவில்  உருவாகியுள்ள ஆபத்தான நிலை . தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு ! "மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியையும் நல்லகாலத்தையும் மக்கள் அனுபவிக்கவில்லை. பின் எந்த அடிப்படையில் இந்தத் தேர்தலில் இத்தனை பெரிய வெற்றியை அவரால் எட்ட முடிந்தது?" - லண்டன் அறிஞரின் ஆய்வு 2014 நாடாளுமன்ற வெற்றியின்போது “வளர்ச்சி” (விகாஸ்) எனும் பெயரில் மோடி அலை வீசியது என அவ்வெற்றிக்கு விளக்கமளிக்கப்பட்டது.  இந்தத் தேர்தலில் (2019) மோடி தனது ஐந்தாண்டுகளுக்கு முந்திய ‘விகாஸ்’ எனும் முழக்கத்தை எல்லாம் தன் பிரச்சாரக் கூட்டங்களில் முன்வைக்கவில்லை.  ஏனெனில் தனது இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியையும் நல்லகாலத்தையும் மக்கள் அனுபவிக்கவில்லை என்பது அவருக்குத் தெரியும். வேலை வாய்ப்புகள், விவசாயக் கடன்கள் என எல்லா அம்சங்களிலும் அவரது ஆட்சியின் தோல்வியை எழுதாதவர்களும் பேசாதவர்களும் இல்லை. பின் எந்த அடிப்படையில் இந்தத் தேர்தலில் இத்தனை பெரிய வெற்றியை அவரால் எட்ட முடிந்தது? இந்து தேசியவாதத்திற்கான ஏற்பு வளர்ந்துகொண்டே போவதையும் பாரம்பரியமாக பா.ஜ.க-வ

57 அமைச்சர்கள்!

படம்
 மோடி அரசில் இடம்பெற்ற 57 அமைச்சர்கள்!  24 பேர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.  அவர்களின் விவரம்- 1. ராஜ்நாத் சிங். 2. அமித் ஷா 3. நிதின் கட்கரி 4. அர்ஜுன் முண்டா 5. அரவிந்த் சாவந்த் 6. தர்மேந்திர பிரதான் 7. ஹர்ஷ வர்தன் 8. சதானந்த கவுடா 9. கஜேந்திர சிங் ஷெகாவத் 10. கிரிராஜ் சிங் 11. ஹர்சிம்ரத் சிங் பாதல் 12. மகேந்திரநாத் பாண்டே 13. முக்தர் அப்பாஸ் நக்வி 14. நரேந்தி சிங் தோமர் 15. நிர்மலா சீதாராமன் 16. பியூஷ் கோயல் 17. பிரகாஷ் ஜவடேகர் 18. பிரகலாத் ஜோஷி 19. ரமேஷ போக்ரியால் நிஷாங்க் 20. ராம் விலாஸ் பாஸ்வான் 21. ரவி சங்கர் பிரசாத் 22. ஸ்மிருதி இரானி 23. சுப்ரமணியம் ஜெய் சங்கர் 24. தவார்சந்த் கெலாட். இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு) 1. சந்தோஷ் குமார் கங்வார் 2. ராவ் இந்தர்ஜித் சிங் 3. ஸ்ரீபாத் யெசோ நாயக் 4.ஜிதேந்திர சிங் 5.கிரண் ரிஜிஜு 6. பிரகலாத் சிங் படேல் 7. ராஜ்குமார் சிங் 8. ஹர்தீப் சிங் புரி 9. மன்சுக் மந்தாவியா   இணை  அமைச்சர்கள் 1.பக்கான் சிங் கலாஸ்டே 2.அஸ்வினி குமார் சோபே 3.அர்ஜுன் ராம் மேக்வால் 4.வி.கே.சிங்

ஆர்எஸ்எஸ் ஆட்சி

படம்
மோடி ஆட்சி என்பது  மத்தியில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மீண்டும் பொறுப்பேற்க உள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி முடிக்க வேண்டும் என்று கூறியிருப்பதை ஒருவேண்டுகோள் என்றோ, ஆலோசனை என்றோ கடந்து சென்று விட முடியாது. ஆர்எஸ்எஸ் என்கிற பாசிச பாணி அமைப்பின் அரசியல் முகமாக விளங்குகிற பாஜகவிற்கு அதை நடத்துகிற நிறுவனம் இட்டுள்ள கட்டளை என்றே கருத வேண்டும்.  அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டும் பணியை விரைவில் துவங்குவது குறித்து வெளிப்படையாக மோடி அறிவிக்க வேண்டும் என்று மோகன் பகவத் கட்டளையிட்டுள்ளார். நாட்டு மக்கள் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிற வாழ்வாதார பிரச்சனைகளை திசைதிருப்பும் வகையில் குறுகிய தேசிய இன வெறியைதூண்டிவிடும் வகையிலும், மக்களிடம் பகைமை தீயை மூட்டும் வகையிலும்தான் பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் அமைந்திருந்தது.  இதன் மூலம் பெரும்பாலான வட மாநிலங்களில் அவர்களால் வெற்றி பெற முடிந்தது. இந்த நிலையில், ஒரு மிகப்பெரிய கலவரத்திற்கு கால்கோள் விழாநடத்தும் வகையில்தான் ஆர்எஸ்எஸ் மீண்டும் அயோத்தி பிரச்சனையை பற்ற வைத்துள்ளது.

வெற்றியின் அடிப்படை

படம்
"தாகத்துக்கு தண்ணீர் கேட்டால்  மேகத்துக்கு குழாய் அமைப்போம்"   என்று சொல்வதுபோல மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு பற்றி பேசுகிறார்.  மக்களவைத் தேர்தலின்போது பேசியதையே தற்போதுகட்காரி தனது டுவிட்டர் பக்கத்திலும் கூறியுள்ளார். அதில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதுதான் தனது முதல் வேலை என்று அவர் கூறியிருப்பதாகவும், அதை பாராட்டி வரவேற்பதாகவும்நடிகர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது பங்கிற்கு டாக்டர் ராமதாஸ் பாமகவின் கனவுத்திட்டமான இதை நிறைவேற்ற முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் தமிழகத்தின்மீதான அமைச்சரின் இந்த அக்கறை பாராட்டத்தக்கது என்றும் கூறி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.  அத்துடன் இந்தக் கோரிக்கை அதிமுக கூட்டணியில் இணைவதற்கு அவர் வைத்த பத்து கோரிக்கைகளில் மிக முக்கியமான கோரிக்கைஎன்றும் கூறியிருக்கிறார். அவரது மறைமுகமான ஒரே கோரிக்கைதனது மகனை தேர்தலில் வெற்றி பெறச் செய்வதும் எப்படியாவது அமைச்சராக்குவதும்தான். ஆனால் அதை நேரடியாக சொல்ல முடியாது என்பதால். மிக தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்தஅதிமுக ஆட்சியை

கிருஷ்ணா - கோதாவரி

படம்
தமிழகத்தில் நடந்து முடிந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிவான ஓட்டுகளில், அதில் ஒவ்வொரு கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம், கூட்டணிக் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகித விவரங்கள் விரிவாகக் காணலாம்.   ந டந்து முடிந்த 17-வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் பதிவான மொத்த வாக்குகள் 4.22 கோடி, மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.91 கோடி. தமிழகத்தில் பதிவான வாக்குசதவிகிதம் 71.87. இது கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குகளைவிடக் குறைவு. 2014-ல் மொத்த வாக்காளர்கள் 5.3 கோடி, பதிவான வாக்குகள் 4.3 கோடி. பதிவான வாக்கு சதவிகிதம் 73.82.  தி.மு.க கூட்டணி : 2014-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க 95 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.  இது பதிவான மொத்த வாக்குகளில் திமுக பெற்றது 23.6 விழுக்காடாகும்.  ஆனால்அத்தேர்தலில் தி.மு.க ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை . இந்தமுறை தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் 2.23 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளன.  இது பதிவான மொத்த வாக்குகளில் 52.64 விழுக்காடாகும்.  இதில் தி.மு.க மட