இடுகைகள்

செப்டம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

24,000 ஆண்டுகள் பழமையானது

படம்
தூத்துக்குடி தேரிப் பகுதிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேரிக் காட்டுப் பகுதிகள் 24 ஆயிரம் ஆண்டுகள்  பழமையானது என்று வெப்ப உமிழ்வு ஒளிர் நிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ பீர்பால் சானியின் பழைய அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சி யாளர் மொர்தெகாய்.  இவர் வெப்ப உமிழ்வு ஒளிர் நிலை நிகழ்வை வைத்துக் காலத்தினை கணிக்கும் வல்லுநர். இவர் ஆத்தூர் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் வெளியே தெரிந்த கட்டிடங்களை ஆய்வு செய்ய வந் தார். இவர் அங்குள்ள இடங்களை பார்வையிட்டார்.  பின் செங்கல் கட்டிடங்கள், கல் தூண்கள், அதில் வரையப்பட்ட சிற்பங்கள், மேலும் நங்கூரம் போன்ற அமைப்புகள். நுழைவு வாயில் போன்றவற்றை பார்வையிட்டார். பின் அவர் நிரு பர்களிடம் கூறியதாவது: நாங்கள் ஏற்கனவே இந்த பகுதி யில் பல ஆய்வுகள் நடத்தியுள் ளோம். தேரி குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்த போது 24 ஆயிரம் வருடம் பழமையானது என்பதை கண்டு கொண்டோம். அதன் பிறகு கொற்கை துறை முகம் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கொற்கை ஒரு துறைமுகமாக இருந் தது என்பது வரலாற்றுக் குறிப

என்னமோ நடக்குது,கேவலமா இருக்குது.!

படம்
ஐந்து ட்ரில்லியன் டாலர் மெய்ப்படுமா?   இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் சிகாகோவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது, “5 ட்ரில்லியன் டாலர்பொருளாதார இலக்கை நோக்கி,இந்தியா எவ்வாறு முன்னேறிக் கொண்டிருக்கிறது?” என்றுகிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போதுதான், “ஐந்து ஆண்டுகளில் ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை எட்டுவதற்கு முதலீடுகள் முக்கியத் தேவை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் "2008 ஆம் ஆண்டு, இந்தியாவின்  ஜிடிபி-யில் 40 சதவிகிதப் பங்குமுதலீடுகளாக இருந்தது. ஆனால்,இதுவே 2018ஆம் ஆண்டில், முதலீடுகளின் பங்கு 29 சதவிகிதமாகச் சரிந்துள்ளது” என்றும் கிருஷ்ணமூர்த்திசுப்பிரமணியன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சூழலில், முதலீட்டை ஊக்குவிப்பதற்கான மூன்று வழிகள் இருப்பதாகவும், “முதலாவது, நிலம் கையகப்படுத்துவது தொடர் பான சட்டங்களில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்; இரண்டாவது, தொழிலாளர்களை ஊக்குவிக

காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்...?

படம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் பிரிவு மாணவர்களுக்கு “தத்துவம்” என்ற பெயரில் ஒரு பாடத்தை அறிமுகப்படுத்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதனை எடப்பாடி அரசாங்கம் அனுமதித்துள்ளது என்பது தெளிவு. திராவிட இயக்கத்தின் ஒரு பகுதி எனும் தகுதியை அ.தி.மு.க. வெகு நாட்களாகவே இழந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அ.தி.மு.க.வை பா.ஜ.க.வின் துணை அமைப்பாக மாற்றிவிடுவார்களோ என கருதும் அளவிற்கு இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் கூட்டணியின் சரணாகதி வேகமாக அரங்கேறி வருகிறது. இந்த சரணாகதியின் தற்போதைய நிகழ்வுதான் பொறியியல் மாணவர்களுக்கு “தத்துவம்” குறித்த பாடத்திட்டங்கள். இதில் மாணவர்கள் என்னென்ன படிக்க வேண்டும் என  அண்ணா பல்கலைக் கழகம் முன்வைத்துள்ளது? வேதங்கள், உபநிடதங்கள், பகவத் கீதை. இதில் பாரபட்சம் எனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காக, பிளேட்டோ மற்றும் பிரான்சிஸ் பேக்கன் ஆகியோரின் படைப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடும் விமர்சனம் எழுந்ததால் துணை வேந்தரும் ,ஆர்.எஸ்.எஸ் காரருமான சூரப்பா, இது கட்டாயம் கிடையாது எனவும் விருப்ப பாடங்கள்தான்