இடுகைகள்

ஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வரலாற்றை திரிப்போர்.

படம்
1917 ஆகஸ்ட் 20 இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள். அன்று தான் இந்தியாவுக்கான வெள்ளைக்கார மந்திரியாக இருந்த Edwin Montague இந்தியாவின் வருங்காலம் பற்றி பிரசித்தி பெற்ற அறிவிப்பை லண்டன் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். "The policy of His majesty government with which the government of India or complete Accord, is that of the increasing association of Indians in every branch of administration the general development of self government institutions with the view of progressive realisation of responsible government in India was an integral part of British empire." அதாவது, இந்தியாவின் பொறுப்பாட்சி படிப்படியாக உருவாக்கும் நோக்கத்துடன் நிர்வாகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் இந்தியர்களை அதிகமாகப் பங்கெடுத்துக் கொள்ளச் செய்வதும் சுயாட்சி அமைப்புகளை வளர்ச்சி பெறச் செய்வதும் தான் பிரிட்டிஷ் அரசின் கொள்கை என்று அந்த அறிவிப்பு விளக்கியது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்திய அரசியல் களம் சூடுபிடித்தது. இன்றைய திராவிடக் கட்சிகளின் முன்னோடியான 'நீதிக் கட்சியின்

முற்றிலும் அபஸ்பரம்

படம்
  பாஜகவின்  ‘கர்நாடக’கச்சேரி கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக தலைவர் எடியூரப்பாவிற்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார்.  சட்டப் பேர வையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள் ளது. இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை யாகும். தற்போதைய நிலையில் பாஜகவிற்கு ஆட்சியமைக்கும் அளவிற்கு உரிய பெரும்பான் மை இல்லை என்பது தெரிந்தே ஆளுநர் ஆட்சி யமைக்க அனுமதியளித்திருப்பது அப்பட்டமான குதிரை பேரத்திற்கே வழி வகுக்கும். கர்நாடக சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்கு களும் கிடைத்த நிலையில் குமாரசாமி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.  அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரில் 3 பேரை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் ரமேஷ் குமார் புதனன்று இரவு அறிவித்தநிலையில், வியாழ னன்று காலை எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அவசர அவசரமாக அவரும் பதவியேற்றுள்ளார்.  கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் பாஜக விற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் ஆளுநர் அவரை பதவியேற்க அழைத் தார். எ

‘மக்களாட்சியின் கறுப்பு நாள்’

படம்
 விபரீத பாதையில் மோடி  அரசு இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஐம்பது நாட்களை பூர்த்தி செய்துள் ளதை பற்றி தன்னைத்தானே பாராட்டி புளகாங்கிதம் அடைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. முதல் ஐந்தாண்டுகளை காட்டிலும் வளர்ச்சிப் பணிகள் வேகம் அடைந்துள்ளதாக அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் கடந்த ஐந்தாண்டுகளில் கூறப்பட்டு வந்த பல்வேறு மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவ சாயிகள் விரோத, மாணவர்கள் விரோத திட்டங்க ளை சட்டமாக்குவதில்தான் மோடி அரசு முன்னை விட வேகமாக உள்ளது.  கடந்த ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவின் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்த வேகம் காட்டப்படுகிறது. சிறுபான்மை இஸ்லாமிய மக்களை வேட்டை யாடும் நோக்கத்துடன் தேசிய புலனாய்வு முக மைக்கு கூடுதல் அதிகாரம் தரும் மசோதா எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையில் நிறைவேற் றப்பட்டுள்ளது.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் ஆர்டிஐ சட்ட திருத்த மசோதா மக்களவ

சிக்கிய கொள்ளைய(அமைச்ச)ர்கள்

படம்
சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், அந்த வழக்கு கடந்து வந்த பாதைகள் பற்றிய முழு விவரம் ✦ 21 ஜூலை, 2017 சிலைக்கடத்தல் வழக்கில் விசாரணை அதிகாரியாக ஐஜி பொன்.மாணிக்கவேலை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் நியமித்தார். பொன்.மாணிக்கவேல்  ✦ ஜூலை, 2017 ஐஜி பொன் மாணிக்கவேலின் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு. ✦ செப்டம்பர், 2017 தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். ✦ செப்டம்பர், 2017 தமிழக அரசின் மேல்முறையீட்டால் ஐஜி பொன் மாணிக்கவேலின் விசாரணை இரண்டு மாதங்கள் தாமதமாகத் தொடங்கியது. ✦ செப்டம்பர், 2017 மேல்முறையீடு தள்ளுபடி ஆன பிறகு சிலை கடத்தல் விசாரணைக்கு என 200 காவலர்களை தமிழக அரசு ஒதுக்கியது. ✦ செப்டம்பர் 2017 - மே 2018 பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்பு - அரசு அதிகாரிகள் உட்பட பலர் கைது. ✦ ஜூன் 2018 ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு ரயில்வே காவல் பணி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. ✦ 31 ஜூலை, 2018 காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சிலை செய்ததில் மோசடியில் ஈடுபட்டதாக அறநிலையத்துறையின் கூடுதல்