இடுகைகள்

செப்டம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாஜக வின் ஊதுகுழல் சாமி.

படம்
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கும்பலுடன் இணைந்து தனது சுய ஆதாயத்திற்காக தேவேந்திரகுல மக்கள் நலன்களை காவு கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.  அவரின் இந்தநடவடிக்கையை முறியடித்து தேவேந்திர குல மக்களை பாதுகாப்போம் என்று தேவேந்திர சமுக பாதுகாப்பு கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. இதுகுறித்து சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த இந்தகூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பூ.சந்திரபோஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.முருகவேல்ராஜன், மு.ஊர்காவலன், டாக்டர் இளங்கோ, எம்.சி.கார்த்திக் ஆகியோர் கூறியதாவது:- "புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தேவேந்திர குல மக்களின் ஏகோபித்த பிரதிநிதி அல்ல.  பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் தமிழ்நாட்டில் தனங்களுக்கென ஒரு வாக்கு வங்கியை உருவாக்குவதற்கும், ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு இடையே மோதலை உருவாக்கி ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமையை சிதைப்பதற்கு திட்டம் வகுத்து அதை நடைமுறை படுத்துவதற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை  ஒரு கருவியாக பயன்படுத்துகிறது. அரசியல் ரீதியாக தேவேந்திரகுல மக்கள் மத்தியி

மூன்று மாநிலங்களில் வீழ்ச்சி...!

படம்
ஏ பிபி நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் ராகஸ்தான்  சத்திஸ்கர் மற்றும் மத்தியப் பி ரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக  தோல்வி அடையும் என தெரிய வந்துள்ளது. தற்போது வட மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன.    இந்த மாநிலங்களில் தேர்தல் நிலவரம் குறித்து ஏபிபி நியூஸ் மற்றும் சிவோட்டர் நிறுவனம் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது.   அதில் இந்திய அளவில் பாஜக பின்னடைவை பெற்றுள்ளதும்,மக்களுணரவுகள் பாஜக,மோடி அரசுக்கு எதிராக பல்வேறு காரணங்களுக்காக உள்ளதாகவும் தெரிகிறது. அந்த கணிப்பின் முடிவுகளைப்  பார்ப்போம் . ராஜஸ்தான் : ராஜஸ்தான் மாநிலத்தில் 200 இடங்கள் உள்ளன.  இதில் கடந்த தேர்தலில் பாஜக 163 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும் மற்ற கட்சிகள் 16 இடங்களிலும் வெற்றி பெற்றன.   தற்போது இந்த கணக்கெடுப்பில் அது முழுமையாக மாறி உள்ளது.   பாஜகவுக்கு 57 இடங்களும், காங்கிரசுக்கு 130 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 13 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற முறை பாஜகவுக்கு கிடைத்த 45.2% வ

மற்றொரு திடுக்கிடும் தகவல்..

படம்
 ரபேல் விமானம் ஊழலில் அதிக விலை கொடுப்பதை எதிர்த்த பாதுகாப்புத் துறை அதிகாரியை கட்டாய விடுப்பில், அனுப்பிவிட்டு, இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்திருக்கிறார்கள்  பாஜக -மோடி    ஆட்சியாளர்கள். ரபேல் போர் விமானக் கொள்முதல் ஊழலில், மோடி அரசு தப்பிக்க முடியாத அளவிற்கு, ஆதாரங்கள் பெருகி வருகின்றன. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், நாட்டின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸை, திட்ட மிட்டே வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தில்‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ இணைக்கப்பட்டு இருப்பதாகவும், இதில் ரூ. 40 ஆயிரம்கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ள தாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட், நாட்டின் பாதுகாப்புக்கான தளவாடங்கள் தயாரிப்பில் 70 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நிறுவனம் எனும்போது, வெறும் 5 லட்ச ரூபாய் முதலீட்டில், ஆரம்பித்து 1 மாதம் மட்டுமே ஆகக்கூடிய ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ எவ்வாறு, ரபேல் விமான ஒப்பந்தத்திற்கு தகுதி பெற்றது என்ற கேள்விகளையும் தலைவர்கள் எழுப்பி வருகின்றனர்.  ஆனால், மத்திய பாஜக அரசிடம் தற்போது வரை முறையான பதில் இல்லை.ஆரம்பத்தில், பிரான்ஸ் நாட்

எந்த பிரதமருக்கும் இல்லாப் பெருமை

படம்
உலகில் எந்த ஒரு பிரதமருக்கும் இல்லாப் பெருமை நம் பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது. அது " ஊழல் மோடி " என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதுதான். இதோ அதன் இணைப்பு : http://www.corruptmodi.com/. மோடி அரசால் இந்த இணையத்தளம் முடக்கப்படுவதற்கு முன் அங்கு சென்று வந்துவிடுங்கள். முடிந்தால் A முதல் Z வரை ஆங்கில எழுத்துக்களை வரிசைப்படுத்தி மோடி அரசின் முறைகேடுகள்,ஊழல்களை தந்துள்ளதை நகல் எடுத்துக்கொள்ளுங்கள். zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz ஆதார் திட்ட முரண்பாடுகள் ஆதார் தொடர்பாக இரண்டு முக்கிய விஷயங்களின் அடிப்படையில் விவாதங்கள் வைக்கப்படுகின்றன. அமெரிக்க அரசால் அதன் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சமூக பாதுகாப்பு எண் (SSN) எஸ்.எஸ்.என், ஆதாரின் முன்னோடித் திட்டம் என்று கூறி ஆதாரை நியாயப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அந்த எண்ணை பெறுவது மக்களின் விருப்பம், எஸ்.எஸ்.என் வாங்கவேண்டும் என்று அமெரிக்க அரசு மக்களை கட்டாயப்படுத்தவில்லை. 1935 ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.