இடுகைகள்

ஜூன், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீதிபதி சதாசிவம்

படம்
"கான்வென்டில் படித்தால் தான் சாதிக்க முடியும் என, நினைத்திருந்த எங்களுக்கு, அரசுப் பள்ளியில் படித்தாலும் சாதிக்க முடியும் என, என் மகன் நிரூபித்துள்ளார்," இந்திய தலைமை நீதிபதியாக  தமிழகத்தைச் சேர்ந்த   நீதிபதி சதாசிவம் பதவியேற்கிறார்.  சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக தற்போது  அல்டமாஸ் கபீர் உள்ளார். தலைமை நீதிபதி கபாடியா ஓய்வு பெற்ற பின் கடந்த ஆண்டு, செப்டம்பர், 29ம் தேதி, தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமிக்கப்பட்டார். இவர், ஜூலை, 18ம் தேதி ஓய்வு பெறுகிறார். கபீருக்கு அடுத்த நிலையில் உள்ள நீதிபதி சதாசிவம், தலைமை நீதிபதியாக, 19ம் தேதி, பதவியேற்கிறார். ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, கடப்பாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர், நீதிபதி சதாசிவம். 1949ம் ஆண்டு, ஏப்., 27ம் தேதி பிறந்தார். சிங்கம்பேட்டை, அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பு முடித்தார். சென்னை, சட்டக் கல்லூரியில், பி.எல்., பட்டம் பெற்றார். குடும்பத்தில், முதல் பட்டதாரியான இவர், கிராமத்தில், முதலாவதாக, சட்டப் படிப்பு முடித்தவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.   தந்தை பழனிச்சாமி ,தாய் நாச

இந்தியாவை முழுக வைக்கும் கடன் ,

படம்
இந்தியாவிற்கு "ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி" வெளிநாட்டு கடன் உள்ளது.  இது குறுகிய கால வெளிநாட்டுக்கடன்கள். இதை இன்னும் 9 மாதங்களில் திருப்பிச்செலுத்த வேண்டியது அவசியம். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா இன்னும் ஓராண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டிய குறுகிய காலக்கடன்கள் பெருகி இருப்பது பெரும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். இன்னும் 9 மாதங்களில், அதாவது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சுமார் ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடிகுறுகிய காலக்கடன்களை வெளிநாடுகளுக்கு இந்தியா திரும்பச் செலுத்த வேண்டி உள்ளது. இந்த குறுகிய காலக் கடன்கள் 6 ஆண்டுகளில் 3 மடங்காக உயர்ந்துள்ளது. உலகப் பொருளாதாரம் சரியத் தொடங்கிய காலக்கட்டத்தில், 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் இது ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 200 கோடி மட்டுமே இருந்தது. இந்தக் காலகட்டத்தில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை கடன்களால் சரி கட்டப்பட்டுள்ளது.

மூட்டை கட்டிய அன்சுல் மிஸ்ரா.

படம்
மதுரையில் அழகிரி சாம்ராஜ்யத்தை ஒடுக்க நியமிக்கப்பட்டவர்கள்தான் சகாயம்,அடுத்து அன்சுல் மிஸ்ரா போன்ற மாவட்ட ஆட்சியர்கள். இப்போது அழகிரி அமுங்கி விட்டார். சகாயம் துணிகள் விற்க [கோ -ஆப் டெக்ஸ் ]அனுப்பப்பட்டு விட்டார்.கல்கோரி விவகாரத்தில் அதிமுகவினரிடமும் அடங்காமல் இருந்ததால் இப்போது அன்சுல் மிஸ்ராவும் வணிகவரி கணக்கு-வழக்கு பார்க்க ஒதுக்கப்பட்டூ விட்டார். கலெக்டராக இருந்த சகாயம் கடந்தாண்டு மே மாதம் கோ ஆப்டெக்ஸ் இயக்குனராக மாற்றப்பட்டார். திருவண்ணாமலை கலெக்டராக இருந்த அன்சுல் மிஸ்ரா மதுரைக்கு மாற்றப்பட்டார். 2012 மே 28ல் புதிய கலெக்டராக அன்சுல் மிஸ்ரா பொறுப்பேற்றார். கிரானைட் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி பல்வேறு உண்மைகளை இவர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். பெரிய நிறுவனங்களுக்கு சீல் வைத்தார். கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 800க்கு மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர் நியமனத்தில் ஆளுங்கட்சியினரின் பரிந்துரைகளை இவர் ஏற்கவில்லை. நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை மட்டும் நியமனம் செய்தார். இது ஆளும் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.வ

"மோடி"[யின்] மந்திரம் ?

படம்
  தற்கொலைகள் ,  ---------------------------  தமிழ்நாடு முதலிடத்தில்.  ---------------------------------------------------------------- கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் 1,35,445 பேர் தற்கொலை செய்திருக்கின்றனர்.  தேசிய குற்றப்பதிவுத் துறை அளித்திருக்கும் புள்ளிவிவரங்களின் படி மேற்கு வங்கத்தை தவிர்த்து விட்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த இந்திய தற்கொலைகள் பற்றிய அறிக்கையின்படி மொத்தம் 79,773 ஆண்களும், 40,715 பெண்களும் உயிரை துறந்திருக்கின்றனர். தற்கொலை விகிதப்படி பார்த்தால் ஒரு இலட்சத்திற்கு 11.2 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.  ஒரு மணிநேரத்திற்கு 15 தற்கொலைகளும், ஒரு நாளைக்கு 371 தற்கொலைகளும் நடக்கின்றன. பாலின ரீதியில் 242 ஆண்களும், 129 பெண்களும் ஒரு நாளில் தற்கொலை செய்து கொள்கின்றனர். தேசிய குற்றப் பிரிவுத் துறை இந்திய அளவில் நடக்கும் தற்கொலைகளில் மொத்தம் 16,927 தற்கொலைகள் நடந்த தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து மராட்டிய மாநிலம் 16,112 தற்கொலைகளுடன் இரண்டாம் இடத்திலும், மேற்கு வங்கம் மூன்றாம் இடத்திலும், 14,328 தற்கொலைகள் நடந்த ஆந்திரா நான்காம் இடத்த

தங்கம்......கடன் வழங்ககூடாது !

படம்
ரிசர்வ் வங்கி உத்தரவு !!. தங்கம் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக 50 கிராம் எடைக்கும் அதிகமான தங்க நாணயங்கள் மற்றும் ஆபரணங்கள் பேரில் கடன் வழங்ககூடாது என ஊரக வங்கிகளுக்கும்  ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. விலை மிகவும் சரிவடைந்திருந்ததையடுத்து மே மாதத்தில் தங்கம் இறக்குமதி 162 டன்னாக மிகவும் உயர்ந்து இருந்தது. தங்கம் பயன்பாட்டில் உலக அளவில் நம்நாடு முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக கிராமங்களில் வசிப்பவர்கள் தங்கத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் கிராமங்களில் போதுமான அளவிற்கு வங்கி வசதி இல்லை. இந்தியாவில் விற்பனையாகும் தங்கத்தில் கிராமங்களின் பங்கு 60 சதவீதமாக உள்ளது. எனவே தங்க நாணயங்கள் மீது கடன் வழங்குவதில் ஊரக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு ஏற்கனவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்க பரஸ்பர நிதி திட்ட யூனிட்டுகள் பேரில் கடன் வழங்ககூடாது என்று வங்கிகளுக்கு ஏற்கனவே தடை உள்ளது. மத்தி

குற்றம் கண்டு பிடியுங்கள்,

படம்
  30 லட்சம் வெல்லுங்கள். விண்டோசில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து, அதை தவிர்க்க சிறந்த வழிமுறைகளை கூறுவோருக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் சாப்ட்வேர்களின் பல்வேறு வரிசைகளை வெளியிட்டு வருகிறது. கடைசியாக, விண்டோஸ்,8 சாப்ட்வேரை வெளியிட்டுள்ளது. இதையடுத்து மற்றொரு நவீன வரிசையை வெளி யிடும் நடவடிக்கையில் மைக்ரோசாப்ட் இறங்கி உள்ளது. இந்நிலையில், விண்டோஸ் சாப்ட்வேரில் இருக்கும் பல்வேறு குறைபாடுகளை பயன்படுத்தி கொண்டு, ஹாக்கர்கள் எனப்படும் இணையதளத் தில் வைரசை பரப்பி குறிப்பிட்ட சாப்ட்வேர்களை முடக்குதல் அல்லது அதில் இருந்து தகவல்களை திருடுதல் போன்றவற்றை மேற்கொள்பவர்கள் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர். சமீபத்தில், அமெரிக்காவின் சிடாடெல் நகரத்தில் வங்கியின் சாப்ட்வேரில் புகுந்து வாடிக்கையா ளர்களின் ரூ.2,950 கோடியை சத்தமில்லாமல் மர்ம நபர்கள் சுருட்டினர். இதேபோல் ஈரானின் அணு திட்டத்தையும் 2010ம் ஆண்டில் மர்ம நபர்கள் புகுந்து குளறுபடிகளை செய்தனர்.  இதில் குறிப்பிடத்தக

வாரத்திற்கு 40 மணி நேரமே உழையுங்கள்.

படம்
இன்றைய சமுதாயத்தில் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட அளவில்தான் உழைக்க வேண்டும்.  வாழ்க்கையே உழைப்பு ஆனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒரு வாரத்திற்கு 40 மணி நேரம்தான் உழைப்புக்கு செலவிட வேண்டும். உடல் உழைப்பை வெளிப்படுத்தி செய்யும் வேலையாக இருந்தாலும், சிந்தித்து செய்யும் வேலையாக இருந்தாலும் இந்த கால அளவை தாண்டி ஒருவர் வேலை செய்வது அவருக்கு நல்லதல்ல என்கிறது இந்த ஆய்வு. வாரத்திற்கு 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு உடனே தெரியாது என்றும் நடுத்தர வயதை கடந்த பின்பு தான் இந்த பாதிப்பு தெரிய வரும். , குறிப்பாக, முளையின் சுறுசுறுப்பு குறைய ஆரம்பிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் ஆராய்சியாளர்கள்.  இதுகுறித்து  மேலும் கூறிய ஆய்வாளர்கள், சாப்ட்வேர் நிறுவனங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை செய்பவர்கள் தினமும் 10 மணி நேரத்துக்கு குறையாமல் வேலை செய்கின்றனர். இதனால் தான் இவர்கள் எளிதில் சோர்வடைகின்றனர், மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். அதி

விலை உயரும் அபாயம்

படம்
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.  இதையடுத்து பெட்ரோல்,டீசல், எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்து அத்யாவசிப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.  சர்வ‌தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு ‌ஏற்பவும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாலும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அடிக்கடி உயர்த்தி வருகிறது.  சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.  காலை நேர வர்த்தகத்தின் போது ரூ.59.78 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு பகல் நேர வர்த்தகத்தின் போது மேலும் கடுமையாக சரிந்து ரூ.60.24 ஆக ஆனது.  இது இந்திய பங்குச் சந்‌தைகளையும், ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான தொழில்களையும் கடுமையாக பாதித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து ரூபாய் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வால் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர