இடுகைகள்

ஜனவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னய்யா நடக்குது..

படம்
தேர்வாணையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து அடுத்தடுத்து வரும் தகவல்கள் அதிர்ச்சி யளிப்பதாக உள்ளன.  முறைகேடாக தேர்வு எழுதி தேர்வான சிலரை தகுதிநீக்கம் செய்வது, சில இடைத் தரகர்களை கைது செய்வது என விசாரணையின் திசை நகர்ந்து கொண்டிருக்கிறது.  ஆனால் உயரதிகாரிகள் தொடர்பில்லாமல் இத்தகையதொரு வலைப்பின்னல் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை.  தேர்வர்களை குறிப்பிட்ட தேர்வுமய்யத்தில் எழுத ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் சாதாரண பதிவறை எழுத்தருக்கு கிடையாது என்பது உலகறிந்த உண்மை. வெறும் இரண்டு,மூன்று பேர்கள் மட்டும் சேர்ந்து இப்படி முறைகேடு செய்யும் அளவு பலகீனமானதா தேர்வாணையம்.? தற்போது காவல் உதவி ஆய்வாளர் தேர்விலும் ,குருப்-2 தேர்விலும் கூட பல முறைகேடுகள் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. ஒரு காவல் அதிகாரி குடும்பமே தேர்வில் வெற்றி பெற்று முறைகேடு வெளியான நிலையில் அந்த காவல் அதிகாரி தலைமறைவாகிவிட்டார். ஆனால் வழக்கம் போல அடி நிலையில் உள்ள சிலரை மட்டும் பலிகடாவாக்கி விட்டு உயர்மட்டத்தில் உள்ளவர்களை தப்பிக்க விட்டால் இத்தகைய முறைகேடுகள் தொடர்வதை ஒருபோதும் தடுக்க முடியாத

தேவையா சுங்கசாவடிகள்.

படம்
சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளை குறித்தும், பரனூர் சுங்கச்சாவடி தாக்கப்பட்டது குறித்தும் பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் விரிவாக தனது பார்வையைப் பதிவு செய்துள்ளார். அவரது கட்டுரை பின்வருமாறு : செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டுள்ளது மிகமிக வருத்தமான விஷயம். அதனை முற்றிலுமாக சீரமைக்க ஒரு வாரம் ஆகும் என்றும் அதுவரை அனைத்து வாகனங்களும் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்றும் சொல்கிறார்கள். மிக மிக சந்தோஷமான விஷயம். பிரச்னைக்கு மூல காரணம் என்ன? அரசுப் பேருந்து ஓட்டுனர் ஒருவரிடம் சுங்கக் கட்டணத்தை டோல்கேட் ஊழியர் கேட்டுள்ளார். அதற்கு அவர் ஏற்கனவே எடுத்தாகி விட்டது என்று சொல்லி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மனித தாக்குதலில் போய் முடிந்துள்ளது. வடநாட்டிலிருந்து வந்து பணியாற்றும் ஊழியரான அவர் அரசுப் பேருந்து ஓட்டுனரை கடுமையாக தாக்கியுள்ளார்.யார் மீது தவறோ? அதெல்லாம் இருக்கட்டும். அங்கிருந்தவர்களுக்கு மத்தியில் உதித்த ஒரே கேள்வி, எங்கிருந்தோ வந்த ஒரு வடநாட்டு ஆசாமி எப்படி தமிழ்நாட்டில் அதுவும் ஒரு அரசுப் பேருந்து

மூக்கை நுழைப்பது சரியா?

படம்
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடியேறும் இஸ்லாமியர் நீங்கலாக மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது மத்திய பா.ஜ.க. அரசு. இந்த சட்டத்திருத்தம் முற்றிலும் ஒருதலைபட்சமானது. இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என தெரிவித்து இந்தியா முழுவதும் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தில், இந்தியாவில் மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 6 தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், ஐக்கிய ஐரோப்பிய இடது சாரிகள் மற்றும் நோர்டிக் கிரீன் இடது சாரிகள் அரசியல் குழு சார்பில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த வரைவு தீர்மானத்தில் இந்தியாவின் குடியுரிமை சட்டம் ஒரு ஆபத்தான மாற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ”சட்டரீதியாக சிறுபான்மையினரின் குடியுரிமையை பறிப்பதற்காகவே இந்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அமல்படுத்தப்பட்டால் உலகில் நாடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, மிகப்பெரிய மனித துயரத்தை ஏற்படுத்தும்” என்றும் அந்த தீர்

மொழிப் போர்.....

படம்
1937-ல் காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்பட்டபோது ராஜாஜி இந்தி படிப்பதை மேனிலைக் கல்வியில் கட்டாயம் ஆக்கினார். குழந்தைக்குத் தாய் கட்டாயப்படுத்தித் தான் பாலூட்ட வேண்டும் என்று விளக்கம் தந்தார். இந்தி ரயில் வண்டி அதில் போனால் வேகமாக முன்னேறலாம் என்றும் சொன்னார். பெரியார் கொதித்து எழுந்து சுயமரியாதை இயக்கத்தின் மூலமும், நீதிக்கட்சியின் மூலமும் போராட்டங்கள் நடத்தினார். இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் தமிழுக்குப் பதிலாகத் திணிக்கப் பார்க்கிறார்கள் என்கிற எண்ணம் வலுப்பெற்றுப் போராட்டங்கள் நடைபெற்றன. பெண்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். தீரர் சத்தியமூர்த்தியும் ராதாகிருஷ்ணனும் காங்கிரஸிலேயே இந்தி திணிப்பை எதிர்த்தார்கள்; எனினும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார் ராஜாஜி. இந்திய குடிமக்கள் மீது ஆங்கிலேய அரசு போலவே கிரிமினல் சட்டத்தைத் தாகூர் மற்றும் ஜின்னாவின் எதிர்ப்புகளைக் கண்டுகொள்ளாமலே பயன்படுத்தினார் ராஜாஜி. நடராசன் என்ற இளைஞர் சிறைக்கொடுமையின் காரணமாக 1939 ஜனவரி 15 அன்று உயிர் நீத்தார். அவரையடுத்து தாளமுத்து என்ற இளைஞரும் சிறைக்கொடுமை தாங்காது 1939 மார்ச் 13ஆம் நாளன்று சிறைச்சாலையிலேயே

ஆன்மிக அரசியல் அசிங்கங்கள்

படம்
தமிழக மக்களை கொடுமைப்படுத்தும் எவ்வளவோ சட்டங்களை மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ளது.வருகிறது. தி.முக. உட்பட எதிர்கட்சிகள்,மக்கள் மட்டுமின்றி கலைஞர்கள் கமல்ஹாசன்,சித்தார்த்,பிரகாஷ்ராஜ்,சூர்யா,கார்த்தி,ஜிவி பிரகாஷ் உன் பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு சுய்கின்றனர்.அதற்காக ஆளுங்கட்சிகளின் அடக்குமுறைகளையும் சந்திக்கின்றனர்.ஆனால் இவை எதையுமே கண்டுகொள் https://www.patrikai.com/rajinis-message-is-false-outlook-journalist-g-c-sekar-exposed/ ளாமல் கோடிபளை குவிக்கும் நடிப்பிலேயே கவனமாக இருந்தவர்,இருப்பவர் நடிகர் ரசினிகாந்த். அதுகூட பரவாயில்லை.போராடும் மக்களை போராடக்கூடாது,போராடுபவர்கள் சமூக விரோதிகள் என்று புத்திமதி சொல்லித்திரிந்தார். தனது படங்கள் வரும்போதுதான் ஓடவைக்க சில விதண்டாவாதங்களை சொல்பவர் இவர். தற்போது துக்ளக் 50 ஆண்டு விழாவில் 1971 ல் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ராமர் சிலை நிர்வாணமாகக்கொண்டு வரப்பட்டது.செருப்பு மாலை போடப்பட்டது என பிதற்றினார். அதை துக்ளக் மட்டுமே வெளியிட்டதாகவும் அந்த இதழ் கிடைக்காமல் பிளாக்கில் பத்து ரூபாய் துக்ளக்கை ஐம்பது ரூபாய்க்கு வாங்கினார்கள் என்

தொடரும் ஸ்டெர்லைட் அயோக்கியத்தனம்.

படம்
விசாரணை முடிந்தது ஸ் டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. 06.01.20 அன்று பேராசிரியர் பாத்திமா பாபு சார்பில் வழக்கறிஞர் யோகேஸ்வரன் அவர்கள் ஆஜராகி நிலமோசடி, புகைபோக்கி, காற்று மாசு, பசுமை வளையம், மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தியான பொருட்கள் மற்றும் நச்சு கழிவுகள் அவற்றைப் மோசமாக பராமரிப்பது பற்றி வாதிட்டார். மேலும் ஸ்டெர்லைட் நச்சு ஆலை பொது தொழிற்சாலை பகுதியில் அமைந்துள்ளதையும் பற்றி சிறப்பாக விளக்கினார். 07.01.20 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் வழக்கறிஞர் டி.மோகன் அவர்கள் ஆலை துவங்கியது முதல் மூடப்படும் வரை, உற்பத்தி நடவடிக்கைகளில் வெளியேறும் இரசாயனங்கள், உலோகங்கள் அடங்கிய கழிவு, நீரை சுத்திகரிக்கும் முறையில் உள்ள குறைபாடுகள், ஆலையின் அலட்சியமான நடவடிக்கைகள், மாசு கட்டுபாட்டு வாரியத்தின் கண்காணிப்பின்மை ஆகியவற்றால் நச்சு பொருட்கள் சுற்றுச்சூழலில் கலந்தன என்றும் ஆலையின் உள்ளே அபாயகரமான கழிவுகள் புதைக்கப்படும் இடங்கள், ஜிப்ச