மூக்கை நுழைப்பது சரியா?

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடியேறும் இஸ்லாமியர் நீங்கலாக மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது மத்திய பா.ஜ.க. அரசு.
இந்த சட்டத்திருத்தம் முற்றிலும் ஒருதலைபட்சமானது. இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என தெரிவித்து இந்தியா முழுவதும் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தில், இந்தியாவில் மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 6 தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், ஐக்கிய ஐரோப்பிய இடது சாரிகள் மற்றும் நோர்டிக் கிரீன் இடது சாரிகள் அரசியல் குழு சார்பில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த வரைவு தீர்மானத்தில் இந்தியாவின் குடியுரிமை சட்டம் ஒரு ஆபத்தான மாற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



”சட்டரீதியாக சிறுபான்மையினரின் குடியுரிமையை பறிப்பதற்காகவே இந்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அமல்படுத்தப்பட்டால் உலகில் நாடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, மிகப்பெரிய மனித துயரத்தை ஏற்படுத்தும்” என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்தல், முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு மாறாக எதிர்ப்பு தெரிவிப்பவர்களை அரசியல் தலைவர்களை இந்திய அரசு அச்சுற்றுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக சுமார் 5 பக்கங்கள் கொண்ட தீர்மானத்தை ஐரோப்பிய யூனியனில் உள்ள 150க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் தாக்கல் செய்துள்ளனர்.



இந்த தீர்மானம் வரும் புதன் கிழமை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வருகிறது. வியாழக்கிழமை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், மத்திய அரசு, நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவர்களுக்கு முறைப்படி அதன் நகல் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், குடியுரிமை சட்டத் திருத்தம் முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், இது குறித்த எந்த விவாதமும், தீர்மானமும் நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் உள் நாட்டு பிரச்னைகளை இந்திய மக்களே போராட்டம் மூலமும்,ஆட்சிமாற்றம் மூலமும் தீர்த்துக் கொள்வோம் என்ற நிலையில் வெளிநாடுகள் தேவையின்றி மூக்கை நுழைப்பது தேவையில்லாது.
அதுவும் அமெரிக்க,ஐரோப்பிய மேலைநாடுகள் மூக்கை நுழைத்த ஈராக்,சவூதி,சிரியா,ஆப்கன் மற்றும் கீழை நாடுகள் நிலை என்னவாக இருக்கிறது நாம் அறிந்ததே.
--------------------------------------------------------
காறித் துப்பும்.?

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாட்டின் தலைநகரான டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியரசு தினத்தன்றும்கூட, ஓயாமல் போராட்டக்காரர்கள் பா.ஜ.க. அரசு எதிராக போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.
இருப்பினும், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது தனது காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது மோடி அரசு. அந்த வகையில், டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தின் போது குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஒருவர் முழக்கமிட்டதை அடுத்து, பா.ஜ.க., தொண்டர்கள் சிலர் அந்த நபர் மீது அங்கிருந்த இரும்பு நாற்காலிகளைக் கொண்டு தாக்கியுள்ளனர்.
அதனைக் கண்ட அமித்ஷா, கூட்டத்தில் திரண்டிருந்த மக்கள் யாரும் திரும்பி பார்க்க வேண்டாம் என கூறியுள்ளார். மேலும், பா.ஜ.க.,வினர் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக முழக்கமிட்ட நபரைத் தாக்கிவிட்டு “பாரத் மாதா கி ஜெய்” என கோஷமிட்டனர். இது தொடர்பான வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகிறது.



இந்நிலையில், மத்திய அரசையும், மக்களுக்கு எதிராக பல்வேறு சதி திட்டங்களை தீட்டும் பா.ஜ.க.,வின் மதவாத செயல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக அமித்ஷாவை கடுமையாக சாடி ட்வீட் செய்துள்ளார்.



அதில்,“உள்துறை அமைச்சர் அமித்ஷா தைரியமில்லாதவர். அவருடைய காவல்துறை, குண்டர்கள், ராணுவத்தினரை கட்டுப்படுத்தி தனக்கான பாதுகாப்பை அதிகரித்துக்கொள்கிறார்.
ஆனால், போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை நடத்துகின்றனர். குறுகிய மற்றும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவோர் என்றால் அது அமித்ஷாவாகதான் இருக்கும். வரலாறு இந்த மிருகத்தின் மீது காறி உமிழும்” என அனுராக் பதிவிட்டுள்ளார்.
--------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?