இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இணைய சேவை முடக்கம்

படம்
இணைய சேவை முடக்கம் இந்தியாவில் கடந்த ஆண்டு 134 முறை   பாகிஸ்தானில் 12 முறைதான் "குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றிய பிறகு எது குறித்தும் கவலைப்பட வேண்டாம் என்று நான் அசாமிலுள்ள சகோதர, சகோதரிகளிடம் உறுதியளிக்க விரும்புகிறேன். உங்களது உரிமைகள், தனித்துவமான அடையாளம், அழகான கலாசாரம் உள்ளிட்ட எதையும், யாராலும் உங்களிடமிருந்து பறிக்க முடியாது என்று உங்களிடம் உறுதியளிக்கிறேன். அவை தொடர்ந்து செழித்து வளரும்" என்று டிசம்பர் மாதம் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.  ஆனால், அப்போது நிலவிய பிரச்சனை என்ன தெரியுமா? மேற்கண்ட பதிவின் மூலம் தனது கருத்தை அசாம் மக்களிடம் தெரிவிக்க பிரதமர் விரும்பினார்; ஆனால், அப்போது அசாம் மக்களால் இணையத்தையே பயன்படுத்த முடியவில்லை. கடந்த புதன்கிழமை, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டவுடன், அதற்கு எதிரான போராட்டங்கள் அசாம், மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமல்ல, உத்தரப் பிரதேசத்தில

வாயைத்திறந்தாலே

படம்
பொய் .பொய்யைத் தவிர வேறில்லை. இந்தியாவில் தடுப்பு காவல் மையம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோதி புது டெல்லியில் ஏன் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பு மையம் இங்கு (மாட்டியா) கட்டப்படுவதை நீங்கள் காணலாம்." அசாமின் குவால்பாடா மாவட்டத்தின் மாட்டியா கிராமத்தில் வசிக்கும் சமூக செயல்பாட்டாளர் ஷாஜகான் அலி இவ்வாறு கூறுகிறார். சட்டவிரோத வெளிநாட்டினரை வைத்திருக்க இந்த பிரமாண்டமான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது, அதற்கான நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் கொடுக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களுக்கான தடுப்புக்காவல் மையம் இல்லை என்றும், அது ஒரு வதந்தி என்றும் கூறினார். ஆனால், பிரதமர் மோதி கூறியதற்கு மாறாக, நாட்டின் முதல் மற்றும் மிகப்பெரிய தடுப்பு மையம் அசாமின் மாட்டியா கிராமத்தில் இரண்டரை ஹெக்டேர் நிலத்தில் கட்டப்பட்டு வருகிறது. படத்தின் காப்புரிமை DILIP SHARMA/BBC தடுப்பு மைய கட்டுமான பணிகள் இந்த தடுப்பு மையத்தின் கட்டுமானத்தை மேற்பார

குடிமக்கள் பதிவேடு.

படம்
இந்தியாவின் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. அதாவது, என்.பி.ஆர்-ஐ மேம்படுத்த மற்றும் 2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடங்க ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இதனால், இது குறித்து சர்ச்சைகள் தொடங்கியுள்ளன. நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) கொண்டு வருவதற்கான முதல் படி இது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் இந்த கூற்றை அரசாங்கம் நிராகரிக்கிறது. அசாமில் மேற்கொள்ளப்பட்ட என்.ஆர்.சி நடவடிக்கை மூலம் போதிய ஆவணங்கள் இல்லாத சுமார் 19 லட்சம் பேர் இந்தியக் குடிமக்கள் இல்லை என்று இந்திய அரசு கூறி இருப்பதால் இந்த அச்சம் எழுந்துள்ளது. அமைச்சரவையின் இந்த முடிவுக்குப் பின்னர், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "இந்திய தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) உடன் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு (என்.பி.ஆர்) எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டின் விதிகளும் வேறுபட்டவை. என்.பி.ஆர்-இன் தரவை என்.ஆர்.சி-க்கு பயன்படுத்த முடியாது. மாறாக இது 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தொட

சரிந்த பிம்பம்

படம்
ஜார்கண்டில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியைத் தழுவி இருக்கிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவை தொடர்ந்து ஜார்கண்டிலும் ஆட்சியை இழக்கிறது. இதுவரை 80 தொகுதிகளின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளில் வென்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 16 தொகுதிகளில் வென்றுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் 1 தொகுதியில் வென்றுள்ளது. இதனால் 47 தொகுதிகளை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி பெற்றுள்ளது. அதேவேளையில் மாநில ஆளுங்கட்சியான பாஜக 25 தொகுதிகளில் வென்றுள்ளது. சரி. பா.ஜ,கவின் இந்த தோல்விக்கு என்ன காரணம்? ஏன் தொடர்ந்து தோல்வியைத் தழுவுகிறது? இந்தக் கட்டுரையில் 5 காரணங்களை தொகுத்துள்ளோம். ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டு பா.ஜ.க ஆட்சி பரவலாக அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக மாநில முதல்வர் ரகுபர் தாஸ் மோசமாகப் பெயரெடுத்திருந்தார். இதுதான் பா.ஜ.க தோல்விக்கு முதன்மையான காரணம். கட்சிக்கு உள்ளேயே அவர் மீது அதிருப்தி நிலவியது. ஈகோ பார்க்கிறார், நியாயமான ஆலோசனைகளுக்கு செவிமடுக்க மறுக்கிறார் என கட்சிக்காரர்களே அதிருப்தியை வெள