இடுகைகள்

ஆகஸ்ட், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொய் +போட்டோஷாப்=பாஜக.

படம்
நான்காண்டு மோடி சாதனை.? அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச் சரிந்து வருகிறது.  வியாழக்கிழமையன்று டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 70.82 பைசாவாக மாறி தள்ளாடிக் கொண்டிருக்கிறது.  மோடி அரசு ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.59 ஆக இருந்தது.  இந்த நான்காண்டு காலத்தில் இந்திய பணமதிப்பு மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனா உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு தான்தோன்றித்தனமாகத் திணித்துவரும் வரி உயர்வு, ஈரான் மீதான பொருளாதாரத் தடை நடவடிக்கை போன்றவை உலக பணச்சந்தையில் மோசமான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.  இதனால் டாலருக்கு நிகரான மற்ற வளரும் நாடுகளின் பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைகின்றது.  அதன் ஒரு பகுதியாகவே இந்திய ரூபாயின் மதிப்பும் இந்த நிலைக்கு ஆட்பட்டிருக்கிறது என்று ஒருபகுதி பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இது உண்மையாக இருந்தாலும், இந்திய ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்துவதில் மோடி அரசின் கொள்கைகள் தொலைநோக்குப் பார்வை கொண்

பாம்பின்கால் பாம்பறியும்

படம்
2017 – 18ஆம் ஆண்டிற்கான மத்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை இன்று வெளியானது. அதில் பணமதிப்பிழக்கத்திற்கு பின்பு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட பணத்தில் 99.30 சதவீதம் பணம் மீண்டும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தேசம் முழுவதும் பரவலாக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் விமானங்கள் மூலமாக இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தங்களின் அன்றாடத் தேவைகளுக்காகவும் கூட மக்கள் காலை முதல் நள்ளிரவு வரை வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் நின்று பணத்தினைப் பெற்றார்கள். முன்னறிவுப்பு இன்றி எடுக்கப்பட்ட அந்த நடவடிக்கைகளால்  இந்திய மக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். 2917-18க்கான இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை. கருப்பு பணத்தின் பயன்பாட்டினை ஒழிக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மத்திய அரசு கூறியது.  இதனால்  அச்சமயத்தில் சுமார் ரூ. 15 லட

போதை தரும் மாமுல் .

படம்
தமிழக அரசின் பெயரளவிலான தடையை மீறி, மாநிலம் முழுவதும் நாள்தோறும் பல கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.  இவற்றை கடத்தி வரும் ' கும்பலின் 'நெட்வொர்க்' குறித்த பலத்  தகவல்கள் அதிரவைக்கின்றன .  தமிழகத்தில் புகையிலை மற்றும் நிக்கோட்டின் கலப்புள்ள குட்கா, பான் மசாலா மற்றும் வாயில் போட்டு மெல்லக் கூடிய புகையிலைப் பொருட்களைத் தயாரிக்க, இருப்பு வைக்க, விற்பனை செய்ய தமிழக அரசு, கடந்த 2013ல் தடை விதித்தது.  இந்த தடை உத்தரவை அமல் படுத்த மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டன. இருப்பினும் மறைமுகமாகவும், அதிகாரிகள் துணையுடனும் மாநிலம் முழுவதும் தங்கு தடையின்றி குட்கா, ஹான்ஸ், கணேஷ், பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்பட்டன.  குட்கா விற்பனையில் அமைச்சர்கள்,போலீஸ் அதிகாரி வரை ஆதாரப்பூர்வமாக மாட்டியும்  எந்த வித நடவடிக்கையும் எடப்பாடி அரசால் எடுக்கபப்டாததால் தற்போது முழு வீச்சில் தமிழகம் முழுக்க பான்பராக்,குட்கா வகைகளும் கஞ்சா உட்பட்ட போதைப்பொருட்களும்  விற்கப்படுகின்றன.  இவ்வாறு தமிழகத்தில் தினமும் பல கோடி ரூபாய் ம

போலிகளின் ஆட்சி..,

படம்
இந்தியாவில் கடந்த 10மாத காலத்தில் சுமார் 60 லட் சம் பேர், வேலையிலிருந்து வெளியேறி இருப்பது,அல்லது வேலையிழந்திருப்பது  மத்தியஅரசே வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.  இவர்களில் சுமார் 46 லட்சம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் அமைந்துள் ளது. ஏற்கெனவே பார்த்தவேலையைக் கைவிட்டவர்கள் குறித்த தகவல்களை, ஏப்ரல் மாதத்துக்குப் பிறகுதற்போது அரசு வெளியிட்டுள்ளது.  இதில், அமைப்பு சார்ந்தவேலைகளிலிருந்து விலகிய நபர்களின் எண்ணிக்கையை, தொழிலாளர் சேமநல நிதிய அமைப்பு அளித்த தரவுகள் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. அதில், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் தொழிலாளர் சேமநல நிதிய அமைப்பில் 1 கோடியே 7 லட்சம் பேர் இணைந்துள்ளனர் என்றால், இதே காலத் தில் 60 லட்சத்து 40 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமைப்பு சார்ந்த துறைகளில் உருவாக்கப்படும் வேலைகள் மற்றும் இழக்கப்படும் வேலைகளின் எண்ணிக்கை குறித்து அளவிடுவதற்கு, தொழிலாளர் சேமநல நிதியத்தின் தரவுகளைத் தான் அண்மைக்காலமாக மத்திய அரசு