பொய் +போட்டோஷாப்=பாஜக.

நான்காண்டு மோடி சாதனை.?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச் சரிந்து வருகிறது. 
வியாழக்கிழமையன்று டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 70.82 பைசாவாக மாறி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. 

மோடி அரசு ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.59 ஆக இருந்தது. 
இந்த நான்காண்டு காலத்தில் இந்திய பணமதிப்பு மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனா உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு தான்தோன்றித்தனமாகத் திணித்துவரும் வரி உயர்வு, ஈரான் மீதான பொருளாதாரத் தடை நடவடிக்கை போன்றவை உலக பணச்சந்தையில் மோசமான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 


இதனால் டாலருக்கு நிகரான மற்ற வளரும் நாடுகளின் பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைகின்றது. 
அதன் ஒரு பகுதியாகவே இந்திய ரூபாயின் மதிப்பும் இந்த நிலைக்கு ஆட்பட்டிருக்கிறது என்று ஒருபகுதி பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இது உண்மையாக இருந்தாலும், இந்திய ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்துவதில் மோடி அரசின் கொள்கைகள் தொலைநோக்குப் பார்வை கொண்டதாகவோ, உள்நாட்டு நலனைப் பாதுகாப்பதாகவோ இல்லை.

 சொல்லப்போனால் மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கை அமலாக்கமும் சேர்ந்து கொண்டு தன் பங்கிற்கு இந்திய ரூபாயின் மதிப்பை சரியச் செய்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஒரு நாட்டின் ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்து, அந்நியச் செலாவணி போதுமான கையிருப்பு இருப்பதே அந்நாட்டின் பொருளாதார நிலை ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறி. 

ஆனால் இந்திய ஏற்றுமதி அளவு மன்மோகன் சிங் அரசின் கடைசி ஆண்டில் 31,440 கோடி டாலராக இருந்தது.

 மோடி ஆட்சி புள்ளிவிபர கணக்குகளை மாற்றிக் காட்டிய பிறகும்கூட இப்போது 30,280 கோடி டாலராக குறைந்திருக்கிறது. அதேசமயம் இறக்குமதி அளவு 45,020 கோடி டாலரில் இருந்து 45,970 கோடி டாலராக அதிகரித்திருக்கிறது. 

எனவே வர்த்தகப் பற்றாக்குறை 15,680 கோடி டாலராக அதிகரித்திருக்கிறது.
இந்திய ஏற்றுமதி கடந்த நான்கு ஆண்டுகளில் 5.1 சதவிகிதம் என மிதமாக உயர்ந்திருக்கும்போது, இறக்குமதி 22.8 சதவிகிதமாக பெருமளவுஅதிகரித்திருக்கிறது. 

கடந்த இரு நிதியாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 44.5 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையிலும் விலை உயர்ந்து வருகிறது. 

ஏற்கெனவே கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதே உள்நாட்டில் எரிபொருட்கள் விலையை குறையாமல் பார்த்துக் கொண்ட மோடி அரசு தற்போதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தப் போவதில்லை. 

இதனால் வர்த்தகப் பற்றாக்குறை இன்னும் அதிகரிக்கும், டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு மேலும் சரியும், வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்திய மக்கள் மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படுவார்கள், உள்நாட்டுத் தொழில்கள் இன்னும் நலிவைச் சந்திக்கும் என்பதே ரூபாய் மதிப்பு சரிவு வெளிப்படுத்தும் அறிகுறியாகும்!
=====================================================================================
பொய் +போட்டோஷாப்=பாஜக .
கேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூ.25 கோடி நிதி அளித்தார்களா?
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு,பாஜக சார்பில் ரூ. 25 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள் ளது என்று பாஜகவினர் சமூகவலைத் தளங்களில் பிரச்சாரம் செய்தது  பொய்யான தகவல்  என்பது அம்பலமாகியுள்ளது.

கேரளம் மிகப்பெரிய அழிவைச் சந் தித்துள்ள போது, பலரும் தங்களால் இயன்ற உதவிகளை கேரளத்திற்கு அளித்து வருகின்றனர். 

ஆனால், ஆர்எஸ்எஸ், பாஜக-வினர்உள்ளிட்ட சங்-பரிவாரங்கள் மட்டும் கேரள வெள்ளப் பாதிப்பைக் கொண்டாடினர்

. கேரள மக்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதும், ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்ததும்தான் இந்த பேரழிவுக்கு காரணம் என்று வன்மம் கக்கினர். 

ஆர் எஸ்.எஸ்,காரன் ஒருவன் துபாயில் இருந்து கேரளமக்களை கிண்டல் செய்து வெள்ளநிவாரணமாக ஆணுறைகளை அனுப்பட்டுமா என்று கேட்டதுடன்.கம்யூனிஸ்ட்கள் ஆள்வதால்தான் இந்த வெள்ளம் வந்துள்ளது என்றும் டுவிட்டரில் இடுகையிட மிகப்பெரிய அளவில் அவனுக்கு எதிர்ப்பு கிளம்பு இடுகையை நீக்கிவிட்டான்.
ஆனாலும் கடும் எதிர்ப்பைக்கண்ட அவன் வேலை செய்யும் நிறுவனம் அவனது மனிதாபிமானமற்ற செயலைக்கரணம் கட்டி வேலையை விட்டு விலக்கி சொந்த மாநிலமான கேரளவுக்கே செல்ல கூறி ஆணையிட்டுவிட்டது.

கேரள நிவாரண நிதிக்குபாஜகவினர் நிதி அளிக்காதது மட்டுமன்றி, மற்றவர்களும் நிதியளிக்க வேண்டாம் என்று தடுத்த சம்பவங்களும்அரங்கேறின.
இது கேரள மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

பாஜக-வின் உண்மை முகம் அறியாமல் இதுவரை அக்கட்சியில் இருந்த பலர், கூட்டம்கூட்டமாக அங்கிருந்து வெளியேறியதும் நடந்தது.

இதனால்  கேரள மக்களை சமாளிக்கும் வேலையில் தற்போது இறங்கியுள்ள பாஜகவினர் வழக்கம்போல, ‘போட்டோஷாப்’ கலை மூலம் போலியான புகைப்படங்களை வெளியிட்டு பொய்ப்பிரச் சாரங்களை அவிழ்த்துவிடத் துவங்கியுள்ளனர்.

அதில் ஒன்றாகத்தான், பாஜகவைச் சேர்ந்த ஸ்ரீதரன் நாயர் என்பவர், அவரது முகநூலில் “பாஜக அமைச்சர்களும்,நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 25 கோடி ரூபாயை வழங்கியுள்ளனர் ” என்று குறிப்பிட்டு, ஒரு புகைப்படத்தை உலவவிட்டார்.

அந்த புகைப்படத்தில், பாஜக மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், பாஜக எம்.பி. முரளிதரன் ஆகியோர்கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் காசோலையை வழங்குவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. 

எப்போது எப்போது என்று எதிர் பார்த்த கேரள பாஜக-வினரும், ஸ்ரீதரன்நாயர் வெளியிட்ட புகைப்படத்தை, இஷ்டத்திற்கு முகநூலிலும், ட்விட்டரிலும் ஆயிரக்கணக்கில் ஷேர் செய்து, பெருமை பீற்ற ஆரம்பித்தனர்.
இது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

நிதியளித்தது உண்மைதானா? என்று சமூகவலைத்தளங்களில் சர்ச்சைகள் எழுந்தன. 
அதற்கேற்பவே, கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள் என்பது போல, பாஜகவினரின் புளுகுக் கதை எட்டுமணிநேரம்கூட நீடிக்கவில்லை. 

மத்திய அமைச்சர் கண்ணந்தானம் தலைமையில் முதல்வரிடம் நிதியளிப் பது போன்ற புகைப்படம் உண்மைதான் , ஆனால், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பொரேசன் சார்பிலானநிதியளிப்பில்தான் அவர் கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் சீக்கிரத்திலேயே வெளிப்பட்டு விட்டது.

படத்தை வெளியிட்ட ஸ்ரீதரன் நாயர்,கவனமாக இந்துஸ்தான் பெட்ரோலியநிறுவனத்தின் அதிகாரிகளை புகைப் படத்திலிருந்து வெட்டியெறிந்துவிட்டு, அமைச்சர் கண்ணந்தானமும், பாஜக எம்.பி. முரளிதரனும் இருப்பது போன்றபடத்தை மட்டும் போட்டு- பாஜக சார்பில்ரூ. 25 கோடி நிதி என்று கூறியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பாஜக சார்பில் ஒரு பைசா கூட நிதி அளிக்கப்படாத நிலையில், ஸ்ரீதரன் நாயர் உள்ளிட்ட பாஜகவினர் செய்த பொய்ப்பிரச்சாரம், கேரள மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், தற்போது பாஜக-வுக்கு எதிராகவே பூமாராங் ஆக திரும்பியுள்ளது.
பாஜக பொய்யை அம்பலப்படுத்திய கேரள மக்கள்.
========================================================================================
ஆஸ்துமா உள்ளோர், ஆஸ்துமாவே இல்லாதோரின் மூக்கில் ஒற்றிய மாதிரிகளை, மவுன்ட் சினாய் மருத்துவ அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சேகரித்தனர்.
அந்த மாதிரிகளை, 'ரிபோ நியூக்ளிக் ஆசிட்' சோதனைக்கு அனுப்பினர். அந்த முடிவுகளை, ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளிடம் தந்து, இதில் யாருக்கு ஆஸ்துமா உள்ளது என, கண்டறியுமாறு கேட்டனர்.


அந்த மென்பொருள், ஆஸ்துமா உள்ளோரின் மூக்கு திரவ மாதிரிகளில் இருக்கும், 90 விதமான பயோ மார்க்கர்ஸ் எனும் உயிரிக் குறியீடுகளை ஒப்பு நோக்கி, யாருக்கு ஆஸ்துமா இருக்கிறது என்பதை துல்லியமாக சொல்லிவிட்டது.
இந்த எளிமையான மூக்கு சோதனை முறையை, மேலும் பலரிடம் நடத்தி, அதன் துல்லியத்தை உறுதிப்படுத்த, விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
அதில், அவர்களுக்கு வெற்றி கிடைத்தால், மெல்லிய ஆஸ்துமா இருப்போர் கூட, கடுமையான, பி.டி.எப்., போன்ற சோதனைகளை செய்யாமலேயே, நோய் இருப்பதை கண்டறியலாம்.

=====================================================================================
ன்று,
ஆகஸ்ட்-31


  • மலேசிய விடுதலை தினம்(1957)

  • கிர்கிஸ்தான் விடுதலை தினம்(1991)

  • வடகொரியா தனது முதலாவது செயற்கைகோளை ஏவியது(1998)
======================================================================================
ஹாஹ் ஹா 
"மோடி ஒரு முட்டாள்" என்ற வாசகத்தை தாங்கிப் பிடித்திருந்த ஒருவரை பிரதமரை கிண்டல் செய்வதாக  டெல்லி போலீஸ் கைது செய்தது.
போலீஸ் கைது செய்ய வரும் போது, அந்த சமூக(செயற்பாட்டாளர் )விரோதி  "நான் நீரவ் மோடியைத்தான் அப்படி கூறினேன், (நரேந்திர மோடியை அல்ல) என்றார்.
ஆனால் அதை டெல்லி போலீஸ் ஏற்க மறுத்தது. 
" நீங்கள் எங்களை முட்டாளாக்க முடியாது. ஏனென்றால், எங்களுக்கு தெரியும், எந்த யார் முட்டாள்  என்று"
ஆண்களே உங்கள் உடல் பற்றி சில தகவல்கள் 
ஆண்களின் உடல் பற்றிய பல ஆச்சர்யமூட்டும் அதிர்ச்சிகரமான தகவல்களை ஆண்களே அறிந்திருக்க வாய்ப்பில்லை...
பெண்களின் மார்பகங்களில் மட்டும் தான் பால் சுரக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஆணும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவன் தான் என்பதை நாம் நினைவில் கொள்வதே இல்லை. ஆண்களின் மார்புப் பகுதியிலும் பால் சுரக்க வைக்க முடியும். ஆனால் குழந்தை பசியாறும் அளவுக்கு சுரக்கவோ குழந்தைக்கு பாலூட்டவோ முடியாது. அது ஹார்மோன்களால் தீர்மானிக்கப்படுகிறது.
பெண்கள் மாதவிலக்கால் படும் அவதி அவர்களுக்கு மட்டுமே புரியும் என்று கூறுவார்கள். 
ஆனால் ஆண்களுக்கும் மாதவிலக்கு பருவம் உண்டு என்றால் நம்புவீர்களா? 
ஆனால் அதுதான் உண்மை.
மாதத்தின் சில நாட்களில் இந்த அறிகுறிகள் இருக்கும். அந்த சமயங்களில் பெண்களைப் போல அவர்களுக்கு ரத்தப்போக்கு உண்டாவதில்லை. ஆனால், உலகில் 26 சதவீதம் பேர் இந்த விஷயத்தை உணர்ந்திருக்கிறார்களாம்.
மாதத்தின் குறிப்பிட்ட அந்த நாட்களில், கொடூரமான பசி, அதீத கோபம், சோர்வு ஆகியவை உண்டாகும். ஏன் சில சமயங்களில் அழுகை கூட வருமாம். பெண்களைப் போலவே ஆண்களுக்கும் ஹார்மோன் சுழற்சி உண்டு.
ஆண்களுடைய பாதங்கள் பெண்களின் பாதங்களைவிட அகலமாக இருக்கும். ஆண் பெண் இருவரும் ஒரே உயரமுடையவராக இருந்தாலும் கூட, ஆணின் பாதத்தைவிட பெண்ணின் பாதம் அகலம் குறைவாகத்தான் இருக்குமாம்.
ஆண்களின் தாடை மற்றும் கன்னப்பகுதிகளில் முடி வளர்வதைத் தான் நாம் தாடி என்கிறோம். இந்த தாடி 5000 முதல் 25000 முடி வரை வளர்ந்திருக்குமாம்.
ஆண்களுடைய தாடி வருடத்துக்கு 6 இன்ச் வரையிலும் வளரக்கூடியது. 
ஆண்கள் தங்களுடைய வாழ்நாள் முழுக்க 27 அடி நீளம் வரையிருக்கும் முடியை ஷேவ் செய்கிறார்களாம். ஆண்கள் ஒரு வருடத்துக்கு ஷேவ் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் மொத்தம் 60 மணி நேரம். 
வாழ்நாளில் 5 மாத காலங்கள் ஷேவ் செய்ய மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறதாம்.
========================================================================================
2016ம் ஆண்டு குடியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருப்பது சீனா அங்கு குடியால் பாதிக்கப்பட்டு இறந்த பெண்களின் எண்ணிக்கை 59,000 இறந்த ஆண்கணின் எண்ணிக்கை 6,50,000.
இராண்டாவது இட்த்தில் இருக்கும் இந்தியாவில் குடியால் உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை 42,000 ஆண்களின் எண்ணிக்கை 2,90,000. உலக அளவில் முதிர்ச்சியடையாமல் உயிரிழந்தவர் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும் பொழுது ஏழாவது முக்கிய காரணமாக இருப்பது மதுக்குடியாகும். இதுவும் 2016ம் ஆண்டு புள்ளி விவரமாகும்.
=========================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?