இடுகைகள்

ஆகஸ்ட், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மந்தநிலை என்பது உண்மையில்லை ..?

படம்
  வங்கிகள் இணைத்தால்  இந்திய பொருளாதாரம்  உயரும்? மோடி அரசின் தவறான நடவடிக்கைகளால் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் 5 ரூபாய் பிஸ்கெட் தொடங்கி ஆட்டோ மொபைல் துறை வரை பல தொழில்கள் முற்றிலும் முடங்கி உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது. பொருளாதாரவளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் ஜூன் வரையிலான பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதம் ஆக குறைந்துள்ளது. நாடுமுழுவதும் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்த நிலையில் பல வங்கிகளை இணைத்து இனிமேல் 12 வங்கிகளாக செயல்படும் என அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். இதுமட்டுமின்றி பொதுத்துறை வங்கிகளுக்காக பல்வேறு சீர்திருத்தம் என்ற பெயரில் பல அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். இந்த நிதியாண்டில் 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபம் ஈட்டியுள்ளன.  பாங்க் ஆப் பரோடா, விஜயா பாங்க், தேனா பாங்க் ஆகியவை இணைக்கப்பட

(ரிசர்வ்)"பேங்க் ஆப் இந்தியா"?

படம்
 ரிசர்வ்ஸ்(பணத்தை)வை கொடுத்ததால் இனி ரிசர்வ் "பேங்க் ஆப் இந்தியா"? இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) வாரியம் 1,76,051 கோடி ரூபாயை அரசுக்கு மாற்ற ஒப்புதல் அளித்தது, இதில் சர்ப்லஸ் அல்லது டிவிடெண்ட் 1,23,414 கோடி ரூபாயும், மற்றும் ஒரு முறை அதிகப்படியான ஒதுக்கீடு என்பதின் கீழ் ரூ .52,637 கோடியும் அடங்கும். ரிசர்வ் வங்கி வங்கிகளைப் ஒழுங்குபடுத்தும் பணிகளைச் செய்யும் ஒரு மைய வங்கி என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விசயங்களில் ஒன்றே. ஆகையால்,  சாதாரண கமர்சியல் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள்  போலன்றி ரிசர்வ் வங்கி  டிவிடெண்ட்  அறிவிக்கும் அமைப்பு அல்ல . பின், அதன் சர்ப்ளஸை எந்த தர்க்கத்தில் இந்திய அரசிடம்  பரிமாற்றம் செய்கிறது என்பதை இங்கே பார்க்கலாம் மத்திய வங்கியாய் இருக்கும்  ரிசர்வ் வங்கி முதலில் எவ்வாறு லாபம் ஈட்டுகிறது? ரிசர்வ் வங்கி பல சேவைகளை செய்யும் ஒரு முழுமையான மத்திய வங்கியாகும். இந்திய நாட்டின் பணவீக்கம் அல்லது பண மதிப்பை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல், இந்திய அரசு மற்றும் மாநில அரசாங்கங்களின் கடன்களையும் நிர்வகிக்கிறது. மேலும், வங்க

இந்திய பொருளாதாரத்தை மீட்க RBI-யின் ரூ.1.76 லட்சம் கோடி உதவுமா?

படம்

பூமியின் நுரையீரலில் தீ

படம்
உலகிற்கே  உயிர் கொடுத்து வரும் அமேசான் காடு இன்று கார்ப்பரேட்களின் லாபவெறி யால் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. இந்த பூவுலகின்  55 லட்சம் சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அமேசான் காடுகள்தான், இன்றும் அரிய உயிரினங்களின் புகலிடமாக இருந்து வருகிறது. அரிய வகை  ஜாக்குவார் சிறுத்தை, அனகோண்டா பாம்புகள், ஆட்களை கொல்லும் எலக்ட்ரிக் ஈஸ்ல் என்ற மீன், விஷத் தவளைகள்,  ஆட்கொல்லி வவ்வால் உள்ளிட்ட ஏராளமான அரிய வகை உயிரினங்கள் இங்கு இருக்கின்றன.   உலகில் வெளியிடப்படும் மொத்த கார்பனில் 25 விழுக்காடை இந்த காடுகளே உள்வாங்கி  வெப்ப மயமாதலை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின் றன.  உலகிற்கு தேவையான ஆக்ஸிஜனில் 20 விழுக்காட்டை உருவாக்கிக் கொடுப்பதோடு,  மனி தர்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 40 விழுக்காட் டையும் தருவது இந்த காடுகளே.  அப்படிப்பட்ட அமேசான் காடு கடந்த 20 நாட்களாக  பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலகிற்கே  உயிர் கொடுத்து வரும் அமேசான் காடு இன்று கார்ப்பரேட்களின் லாபவெறி யால் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.  இந்த பூவுலகின்  55 லட்சம் சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அமேசான் காடுகள்தான்,