பூமியின் நுரையீரலில் தீ

உலகிற்கே  உயிர் கொடுத்து வரும் அமேசான் காடு இன்று கார்ப்பரேட்களின் லாபவெறி யால் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
இந்த பூவுலகின்  55 லட்சம் சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அமேசான் காடுகள்தான், இன்றும் அரிய உயிரினங்களின் புகலிடமாக இருந்து வருகிறது.

அரிய வகை  ஜாக்குவார் சிறுத்தை, அனகோண்டா பாம்புகள், ஆட்களை கொல்லும் எலக்ட்ரிக் ஈஸ்ல் என்ற மீன், விஷத் தவளைகள்,  ஆட்கொல்லி வவ்வால் உள்ளிட்ட ஏராளமான அரிய வகை உயிரினங்கள் இங்கு இருக்கின்றன.
  உலகில் வெளியிடப்படும் மொத்த கார்பனில் 25 விழுக்காடை இந்த காடுகளே உள்வாங்கி  வெப்ப மயமாதலை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின் றன.
 உலகிற்கு தேவையான ஆக்ஸிஜனில் 20 விழுக்காட்டை உருவாக்கிக் கொடுப்பதோடு,  மனி தர்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 40 விழுக்காட் டையும் தருவது இந்த காடுகளே.  அப்படிப்பட்ட அமேசான் காடு கடந்த 20 நாட்களாக  பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

உலகிற்கே  உயிர் கொடுத்து வரும் அமேசான் காடு இன்று கார்ப்பரேட்களின் லாபவெறி யால் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
 இந்த பூவுலகின்  55 லட்சம் சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அமேசான் காடுகள்தான், இன்றும் அரிய உயிரினங்களின் புகலிடமாக இருந்து வருகிறது.
அரிய வகை  ஜாக்குவார் சிறுத்தை, அனகோண்டா பாம்புகள், ஆட்களை கொல்லும் எலக்ட்ரிக் ஈஸ்ல் என்ற மீன், விஷத் தவளைகள்,  ஆட்கொல்லி வவ்வால் உள்ளிட்ட ஏராளமான அரிய வகை உயிரினங்கள் இங்கு இருக்கின்றன.

 உலகில் வெளியிடப்படும் மொத்த கார்பனில் 25 விழுக்காடை இந்த காடுகளே உள்வாங்கி  வெப்ப மயமாதலை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின் றன.
உலகிற்கு தேவையான ஆக்ஸிஜனில் 20 விழுக்காட்டை உருவாக்கிக் கொடுப்பதோடு,  மனி தர்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 40 விழுக்காட் டையும் தருவது இந்த காடுகளே.  அப்படிப்பட்ட அமேசான் காடு கடந்த 20 நாட்களாக  பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இடதுசாரி அரசுகள் இருந்த வரை கார்ப்பரேட் களால் உள்ளே நுழைய முடியவில்லை.

வலதுசாரி அரசு அமைந்தவுடன் முதல் வேலையே அமே சான் காடுகளை அழிப்பதாகத்தான் இருந்தது.
கடந்த ஜூலை மாதம் மட்டும் 1345 சதுர கி.மீட்டர் அளவுக்கு மரங்கள் வெட்டப்பட்டன.
அரசு தடுக்கவில்லை. காடுகள் அழிக்கப்படுவது தொடர்பான செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகின. உடனே பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி முகமையின் தலைவரை பணிநீக்கம் செய்தார் ஜனாதிபதி.
 அடுத்து சுரங்க நிறுவனங்க ளை அனுமதிக்க அரசு முடிவு செய்தது.
அதற்கு எதிராக பழங்குடிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றியும் பெற்றனர்.
  இதையடுத்தே  அமேசான்  காடுகள் தீவிர மாக பற்றியெறிய துவங்கியிருக்கின்றன.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 72,843 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
இது கடந்தாண்டை விட 83 சதவிகிதம் அதிகம் ஆகும்.
 நிதிமூலதனத் தின்  லாபவெறிக்கு இந்த பூமியின் நுரையீரலில் தீ பற்றவைக்கப்பட்டிருக்கிறது.
இதனை உடனே அனைத்து நிதிமூலதனத்தின் லாபவெறிக்கு தீ வைத்தால்தான் நாம் உயிர் பிழைக்க முடியும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
  ஏண்டா இப்படி?
பாஜக முன்னாள் மத்திய அமைச்சரும், சாமியாருமான சின்மயானந்தா, மாணவிகள் பலரின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டதாக சட்டக் கல்லூரிமாணவி ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
 லக்னோவில் இருந்து 200 கி.மீ.தூரத்தில் இருக்கிறது சுவாமி சுக்தேவானந்தா கல்லூரி.

 அதாவது, சின்மயானந்தாவிற்கு சொந்தமான கல்லூரி. பாஜக தலைவர்களில் ஒருவரான இவர்மத்திய அமைச்சராகவும் இருந்தவர். இந்நிலையில், இங்கு படிக்கும்மாணவி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன் வீடியோ மூலமாக பகிரங்கபுகார் ஒன்றை வெளியிட்டார்.
 “சனந்த் சமாஜ் அமைப்பை சேர்ந்தபெரிய தலைவர் (சின்மயானந்தா) ஒருவர் பல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டார். அவர் தற்போதுஎன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
 யோகி ஜி, மோடி ஜி பிளீஸ்உதவி செய்யுங்கள், எங்களை காப்பாற்றுங்கள்.
                   சின்மயானந்தா                  புகார் கொடுத்தவர்                      

நான் இப்போது உயிரோடு இருக்கிறேன் என்று தெரியும்.
ஆனால்நான் இனியும் உயிரோடு இருப்பேனாஎன்று தெரியாது. அந்த சந்நியாசியிடம் போலீசும், நீதிபதிகளும் கட்டுப்பட்டு இருப்பதாக கூறுகிறார்.
அவரின் பாக்கெட்டில் எல்லோரும் இருப்பதாக சந்நியாசி என்னிடம் கூறுகிறார்.
ஆனால் அவருக்கு எதிராக எல்லா ஆதாரமும் என்னிடம் இருக்கிறது” என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்நிலையில் அந்த வீடியோ வெளியிட்ட சில மணி நேரத்தில், சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவி காணாமல் போய்உள்ளார். நான்கு நாட்கள் ஆகியும் அந்த பெண் எங்கே போனார் என்ற விவரம் தெரியவில்லை.
இது தொடர்பாக அந்த பெண்ணின்தந்தை, தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார்.
 பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தாதான் தன்னுடைய மகளை கடத்தி உள்ளார்.

அவர் என்னுடைய மகளை கொலை செய்திருக்கக் கூட வாய்ப்புள்ளது. போலீசார் இதை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, சின்மயானந்தா மீது, கடத்தல் மற்றும் குற்றச்செயல் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 ஏண்டா இப்படி?போலி சாமியார் என்பதினால் சின்மயானந்தா இப்படியா? பாஜகவில் இருப்பதால் இப்படியா??
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
 முடி உதிர்கிறதா?
முடி உதிர பல காரணங்கள் உள்ளன. ஆனால், முக்கிய காரணமாகவும் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்ட காரணமாக இருப்பது இரண்டு உண்டு. அவை உடல் சூடும் மன அழுத்தமும் தான்.
உடல் சூட்டால் முடி உதிரும், மன அழுத்த பிரச்சனையும் ஏற்படும். உடல் சூட்டைக் குறைத்து முடி உதிர்வை தடுத்து, முடி வளர வழி என்ன எனப் பார்க்கலாம்.
பெண்கள் செவ்வாய், வெள்ளியன்று எண்ணெய்த் தேய்த்து குளிப்பது, ஆண்கள் புதன், சனியன்று எண்ணெய் தேய்த்து குளித்து வர உடல் சூடு குறையும். முடி உதிர்வு நிற்கும்.
உள்ளங்கை, உள்ளங்காலில் மருதாணி வைப்பதும் உடல் சூட்டைக் குறைக்கும்.


வாரம் ஒருமுறை நெல்லி முள்ளியை, அதிகம் புளிக்காத தயிரில் ஊறவைத்து அரைக்கவும். இதை தலையில் ஹேர் பேக்காக போட்டு, 15-20 நிமிடங்கள் கழித்து அலசலாம். உடல் சூடு தணியும்.
மனஅழுத்தம் நீங்கும்.
முடி உதிர்வு பிரச்சனை நிற்கும்.

சோற்று கற்றாழை ஜெல்லுடன் சம அளவு கறிவேப்பிலை எடுத்து அரைத்து, இரண்டையும் நன்றாக கலக்கவும். இதை கூந்தலில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளித்திட உடல் சூடு தணிந்து முடி வளரும்.
கரிசலாங்கண்ணி இலை, நெல்லிக்காய், கறிவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து, மூன்றையும் அரைத்து, சிறு சிறு தட்டைகளாக தட்டி வெயிலில் காயவைக்கவும்.
இதை தேங்காய் எண்ணெயில் போட்டு, இந்த எண்ணெயை தினமும் தடவி, 50 முறை சீப்பால் வாரி ஒரு மணி கழித்து குளித்து வர முடி கருமையாக வளரும்.

கற்றாழை லேகியம், வெண்பூசணி லேகியம், கற்றாழை ஜூஸ், நீர் மோர், பாதாம் பிஸின், சப்ஜா விதை, வெள்ளரி விதை, தர்பூசணி விதை, சுரைக்காய் விதை ஆகியவை உடல் சூட்டைக் குறைக்கும். இதனால் முடி உதிர்வு நிற்கும்.

மன அழுத்தம் நீங்கிட சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது முக்கியம்.
வாழைப்பழம், டார்க் சாக்லேட், முட்டை, பாதாம், வால்நட், விதைகள், கேரட், ஈரல், கீரைகள், உலர் அத்தி, மாம்பழம், கொய்யா, மீன், மாதுளை போன்றவை சாப்பிட மகிழ்ச்சி தரும் ஹார்மோன்கள் தூண்டப்படும்.
இவற்றை பின்பற்றுங்கள், உடல் சூடும், மன அழுத்தமும் குறையும்.
முடி உதிரல் நிற்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
 "சாமிக்கும் உண்டிங்கே சாதி".
பீகார் கவர்னர் பாகு சவுகானை கவுரவிக்கும் நிகழ்ச்சி பாட்னாவில் நடந்தது.
பிரிஜ் கிஷோர்

 இதில் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, அமைச்சர் பிரிஜ் கிஷோர் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் அமைச்சர் பிரிஜ் கிஷோர் பேசுகையில்" கடவுள் சிவபெருமான், சமூகம், கல்வியில் பின்தங்கிய "பிந்த்"  ஜாதியை சேர்ந்தவர்.
அவர் சுடுகாடு,சாம்பல் என்று அலைந்ததிலிருந்தே இது தெரிந்திருக்கும்."
 எனக் கூறினார். 
இதுவரை மதம் ,சாதியை வைத்து மக்களை பிரித்து வாக்குக்களை சூறையாடி வந்த பாஜக தற்போது கடவுளர்களையும் சாதிவைத்து ஒதுக்க ஆரம்பிக்கின்றனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
 நடைப்பயிற்சி
நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்வதால் உடல் மற்றும் மனதிற்கு நல்லது என்று நாம் அறிவோம். ஆனால் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் எத்தகைய நன்மைகளை வழங்குகிறது என்பதை அறிவீர்களா ?


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?