(ரிசர்வ்)"பேங்க் ஆப் இந்தியா"?

 ரிசர்வ்ஸ்(பணத்தை)வை கொடுத்ததால் இனி ரிசர்வ் "பேங்க் ஆப் இந்தியா"?
இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) வாரியம் 1,76,051 கோடி ரூபாயை அரசுக்கு மாற்ற ஒப்புதல் அளித்தது, இதில் சர்ப்லஸ் அல்லது டிவிடெண்ட் 1,23,414 கோடி ரூபாயும், மற்றும் ஒரு முறை அதிகப்படியான ஒதுக்கீடு என்பதின் கீழ் ரூ .52,637 கோடியும் அடங்கும்.

ரிசர்வ் வங்கி வங்கிகளைப் ஒழுங்குபடுத்தும் பணிகளைச் செய்யும் ஒரு மைய வங்கி என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விசயங்களில் ஒன்றே.
ஆகையால்,  சாதாரண கமர்சியல் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள்  போலன்றி ரிசர்வ் வங்கி  டிவிடெண்ட்  அறிவிக்கும் அமைப்பு அல்ல .

பின், அதன் சர்ப்ளஸை எந்த தர்க்கத்தில் இந்திய அரசிடம்  பரிமாற்றம் செய்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்

மத்திய வங்கியாய் இருக்கும்  ரிசர்வ் வங்கி முதலில் எவ்வாறு லாபம் ஈட்டுகிறது?

ரிசர்வ் வங்கி பல சேவைகளை செய்யும் ஒரு முழுமையான மத்திய வங்கியாகும். இந்திய நாட்டின் பணவீக்கம் அல்லது பண மதிப்பை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல், இந்திய அரசு மற்றும் மாநில அரசாங்கங்களின் கடன்களையும் நிர்வகிக்கிறது.

மேலும், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களை மேற்பார்வை செய்து அவைகளை ஒழுங்குபடுத்துவதும்  செய்கிறது. நாட்டின் நாணயம் மற்றும் பண பரிவர்த்தன முறைகளை நிர்வகிக்கவும் செய்கிறது நமது  ரிசர்வ் வங்கி .
இந்த செயல்பாடுகளையெல்லாம் செய்யும்போது, ரிசர்வ் வங்கி தனக்கான லாபத்தை ஈட்டுகிறது. இயல்பாக,எந்த மத்திய வங்கியாக இருந்தாலும் அதனிடம் உள்ள அந்நிய செலவானி கையிருப்பின் மூலம் தனக்கான வருவாயை ஈட்டுகின்றன. இந்த  வருவாயை இந்திய ரிசர்வ் வங்கி பத்திரங்களாக மற்ற  மத்திய வங்கிகளில் வைப்புத்தொகையாக வைத்திருக்கும்.

ரிசர்வ் வங்கி சந்தையில் விற்கப்படும் ரூபாய் மதிப்பிடப்பட்ட அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்வதனால் வருவாய் அடைகிறது. மேலும், குறுகிய காலத்திற்கு வங்கிகளுக்கு தேவைப்படும் நிதியைக் கடன் கொடுக்கும் பொழுது ஓவர்நைட்  சார்ஜ் செய்கிறது.
இதையும் தாண்டி மத்திய  மற்றும் மாநில அரசுகள் கடன்களை மேலாண்மை செய்வதால் அதற்க்கென்று தனியாக கட்டணங்களையும் வசூலிக்கின்றது.


ரிசர்வ் வங்கியின் செலவீனங்களை பொறுத்தவரையில் இந்திய நாணயத்தாள்களை அச்சிடுவது, தனது ஊழியர்களுக்கு செய்யும் செலவு போன்றவைகளே முதன்மையாக இருக்கின்றது.
இதையும் தாண்டி, அரசாங்கத்தின் சார்பாக பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு வங்கிகளுக்கு கொடுக்கப்படும் கமிஷன் தொகையும், இந்த  பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்புகளும் நமது ரிசர்வ் வங்கிக்கு செலவு கணக்கில் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிவிடெண்ட்  அல்லது இலாபங்களை மாற்றுவது தொடர்பாக அரசாங்கத்திற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான ஏற்பாட்டின் தன்மை என்ன?
இதில், முதலில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், ரிசர்வ் வங்கி தனது லாபத்தில் இருந்து இந்திய அரசாங்கத்திற்கு  டிவிடெண்ட்  கொடுக்க வில்லை என்பதே ஆகும்.
1935 ஆம் ஆண்டில் இதே  ரிசர்வ் வங்கி  ஒரு தனியார் பங்குதாரர்களின் வங்கியாக உருவாக்கம் செய்திருந்தாலும், 1949 ஜனவரியில்  ரிசர்வ் வங்கியை தேசியமயமாக்கி, தனது இறையாண்மையின் கீழ் கொண்டுவந்தது இந்திய அரசு.

1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் பிரிவு 47 (உபரி இலாபங்களை ஒதுக்கீடு) இன் படி, “சர்ப்லஸ் ” –  என்ற  வார்த்தைக்கு “செலவினம் போக மீதமுள்ள வருமானம்” என்று பொருள்கொள்ளப்பட்டு சர்ப்லஸ்  தொகையை இந்திய அரசாங்கத்திற்கு மாற்றுகிறது.

பிரிவு 47 (உபரி இலாபங்களை ஒதுக்கீடு) சொல்லப் பட்டவைகள் பின் வருமாறு:

“மோசமான மற்றும் சந்தேகத்திற்கிடமான கடன்களுக்கான ஏற்பாடுகளைச் செய்தபின், சொத்துக்களின் தேய்மானம், ஊழியர்களுக்கான பங்களிப்பு மற்றும் மேலதிக நிதியம் [மற்றும் பிற எல்லா விஷயங்களுக்கும்] சரி செய்த பின்  மீதமுள்ள , இலாபங்கள் மத்திய அரசுக்கு செலுத்தப்படும். ”
ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியம் ஜூலை-ஜூன் கணக்கியல் ஆண்டு முடிந்ததும் ஆகஸ்ட் தொடக்கத்தில் பிரிவு 47-ல் சொல்லப்பட்டுள்ள  இந்த சர்ப்லசை  ஆண்டு தோறும் பரிமாற்றம் செய்யும்.

இந்த வருவாய் அல்லது இலாபங்களுக்கு ரிசர்வ் வங்கி வரி செலுத்துகிறதா?
இல்லை. ரிசர்வ் வங்கியின் சட்டம், 1934 இன் பிரிவு 48, ரிசர்வ் வங்கிக்கு வருமான வரி மற்றும்  சொத்து வரி உட்பட வேறு எந்த வரியையும் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

சர்ப்ளஸ் விநியோகம் குறித்து வெளிப்படையான கொள்கை உள்ளதா?
தெளிவான வெளிப்படையான கொள்கை இல்லை என்றே சொல்லாம்.  ஆனால்  ஒய்.எச்.மாலேகம்  தலைமையிலான குழு 2013 ல் இருப்புக்களின் போதுமான அளவு மற்றும் உபரி விநியோகக் கொள்கையை மறுஆய்வு செய்த போது, அரசாங்கத்திற்கு அதிக பணபரிமாற்றம் செய்ய வேண்டும் என்று  பரிந்துரை செய்தது.
2013க்கு முன், ரிசர்வ் வங்கி  தனது சர்ப்லஸின் ஒரு பகுதியை தற்செயல் நிதி யாக வைத்திருக்கும்.
இந்த நிதி மூலம்,எதிர்பாராத சூழ்நிலைகளை சந்திப்பதற்காகவும், உள் மூலதனச் செலவுகள் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் முதலீடுகளைச் சந்திப்பதற்காகவும் இயங்கி  வந்தன.

 இந்த தற்செயல் நிதியை தனது மொத்த கணக்கு வழக்கில் பன்னிரண்டு சதவீதமாக ரிசர்வ் வங்கி  நடைமுறைப் படுத்தி வந்தது குறிப்பிடத்தகது
ஆனால் மாலேகம் குழு பரிந்துரைக்குப் பின்னர், 2013-14 ஆம் ஆண்டில், ரிசர்வ் வங்கி உபரி மொத்த வருமானத்தில் 99.99% வரை  அரசாங்கத்திற்கு பரிமாற்றம் செய்ய ஆரம்பித்துவிட்டன.
 2012-13 ஆம் ஆண்டில் இந்த சர்ப்லஸ் மரிமாற்றம் வெறும்  53.40 சதவீதமாகத் தான் இருந்தன.

இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் வேறுபடுகின்றனவா?
ரிசர்வ் வங்கியின் இருப்புக்கள் அதன் தேவைகளை விட அதிகமாக உள்ளன என்ற கருத்தை இந்திய அரசாங்கம் நீண்ட காலமாக முன் வைக்கத்தான் செய்கின்றன.
 இந்த நிதியை அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கிகளுக்கு மூலதனத்தை வழங்க பயன்படுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனும்  பரிந்துரைத்திருந்தார்.

ஆனால், மத்திய வங்கியோ………நிதி அதிர்ச்சிகளிலிருந்து ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை மனதில் வைத்தும், நிதி ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து சந்தைகளுக்கு நம்பிக்கையை வழங்க வேண்டியதன் அவசியத்தை உனர்ந்தும் அதன் இருப்புக்களை அரசாங்கத்திற்கு பகிராமல் கட்டமைக்கத் தான் விரும்பின.

மேலும், அதன் பார்வையில், இருப்பு நிலையின் அளவைப் பொறுத்தே ஒரு  மத்திய வங்கியின் சுயாட்சியைப் பேணிக்காக்க முடியும் என்று எண்ணி வந்தது.
எவ்வாறாயினும்,பண பரிமாற்றத்தின் அளவு  மத்திய வங்கியின் அரசாங்கத்துடனான உறவை வரையறுப்பதில் ஒரு முக்கிய காரணியாக இருக்கவில்லை என்பது முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் துவ்வூரி சுப்பாராவ் கருத்தாய் உள்ளது.
 இது பற்றி அவர் தெரிவிக்கையில் “இரு தரப்பினரும் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டி ஒரு தீர்வு எடுத்துள்ளனர்” என்று  தெரிவித்து உள்ளார்.ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் பண பரிமாறறதுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பதவியிலிருந்து கட்டாயமாக விலகி செல்லவைக்கப்பட்டு பாஜக,ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைக்சேர்ந்த குருமூர்த்தி போன்றவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அது சார்பான சக்திகாந்ததாஸ் ரிசர்வ் வங்கி ஆளுனராக்கப்பட்டுள்ளார்.
இவர் பொருளாதாரத்தை முதனிலைப்படிப்பாக கொண்டவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இவரது பொருளாதாரக்கொள்கை வலதுசாரித்தனமிக்கது.

உபரி பரிமாற்றத்தை மற்ற மத்திய வங்கிகள் எவ்வாறு நிர்வகிக்கின்றன?
இந்தியாவைப் போலவே, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் உள்ள மத்திய வங்கிகள் அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னர் முடிவு செய்கின்றன.
 ஆனால் ஜப்பானில், அரசாங்கமே தீர்மானிக்கிறது.

மிகவும், குறிப்போடு சொல்ல வேண்டும் என்றால், எந்த நாட்டிலும் இந்த பண பரிமாற்றம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதத்தை தாண்டாது.ஆனால் தற்போது இந்தியாவில் பணப்பரிமாற்றம் உலகிலேயே அதிக விகிதம் கொண்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
   இஞ்சி சமையலறை மருத்துவர்!
 
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.
11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.
12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்து என்ன செய்வது என்பது குறித்து யோசிக்கவில்லை... -

பதவி விலகிய கண்ணன் கோபிநாதன் ஐ.ஏ.எஸ்

காஷ்மீர் சிறப்புச் சட்டம் 370 நீக்கப்பட்டதன் காரணமாகத்தான் நீங்கள் இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தீர்கள் அது குறித்து?

நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவினை எடுக்கவில்லை.
மிகவும் ஆராய்ந்து தான் இம்முடிவை எடுத்தேன். நான் பார்க்கின்ற வேலையும், செய்கின்ற சேவையும் என்னுடைய எண்ணங்களை வெளிப்படையாக பேசவிடுவதில்லை.
நான் சுதந்திரமாக என்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்த விரும்பினேன். அதனால் தான் எனக்கு என்னுடைய சுதந்திரம் தேவை என்று விரும்பினேன்.
 அதற்காக நான் வேலையை ராஜினாமா செய்வதும் சரிதான் என்று முடிவெடுத்தேன். காஷ்மீரில் பேசும் சுதந்திரம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டதை நாம் கண்டும் காணாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றோம்.
காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரம் ரத்து என்ற முடிவு, என்னுடைய ராஜினாமாவால் மாறிவிடப்போவதில்லை என்பதை நான் உறுதியாக உங்களிடம் கூற விரும்புகிறேன்.
இது போன்ற முடிவுகளை எடுக்க முழுமையான அங்கீகாரம் ஒரு அரசுக்கு உள்ளது.
ஆனால்  சட்டப்பூர்வமாக, ஜனநாயகத்தோடு, அரசியல் சாசன முடிவாக அது அமைய வேண்டும். ஒரு குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் நாம் ஒரு ஊசி போடுகின்றோம்.
வலியில் ஒரு குழந்தை அழவும் கூடாது என்றால் அது எப்படி?
 நாம் அவர்களின் குரலை, அவர்களின் எண்ணங்களை கேட்கவேண்டும். அவர்களின் கோபங்களை சரிசெய்ய பல்வேறு வழிகள் இருக்கின்றன.
ஆனாலும் நாம் அவர்களின் எண்ணங்களை கேட்க வேண்டும்.

இந்த நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது ஜம்மு-காஷ்மீர் விவகாரத்திக்கு மட்டும் குரல் கொடுத்தது ஏன்?

இந்த நாட்டில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றது தான்.
ஏன் இது இல்லாமல் அது என்ற கேள்விகள் எப்போதும் எழுந்து கொண்டுதான் இருக்கின்றது. பல்வேறு பிரச்சனைகளுக்காக எப்போதும் ஒரே விதமான தாக்குதல்களால் உந்தப்பட்டு மக்கள் குரல் கொடுப்பதில்லை. ஆனால் நம் எண்ணங்களையும் கருத்துகளையும் சுதந்திரமாக அறிவிப்பதற்கான சூழலில் பிரச்சனை என்பது என்னை உறுத்திக் கொண்டே இருந்ததால் தான் இம்முடிவு.

காஷ்மீர் விவகாரத்தில் மட்டும் அல்ல.
 எங்கெல்லாம் குரல்கள் ஒடுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் குரல் கொடுக்கும் கட்டாயம் நமக்கு இருக்கின்றது.

நீங்கள் தற்போது உங்களின் பதவியை விட்டு விலகி விட்டீர்கள்.

 தற்போது உங்களின் கருத்து சுதந்திரத்தை எப்படி இந்த பிரச்சனையை இணைத்து போராடப்போகின்றீர்கள்?

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா வெளியிட்ட அஃபிடிவிட் படித்தேன். நம் அரசாங்கம் எதையாவது செய்து கொண்டே இருக்கும். ஆனால் நம் நாட்டின் இதர தனி அங்கங்களும், அரசின் முடிவுகளுக்கு சாதகாமாக எப்படி இயங்குகிறது என்று தான் தெரியவில்லை. நம்முடைய சில துறைகள் அரசின் கீழ் இயங்குவதில்லை. நாம் அனைவரும் அரசின் கீழ் எப்போதும் இருப்பதில்லை .
நான் அரசின் ஒரு அங்கமாக இருந்த போது, நான் ஏன் இதை செய்தேன் என்ற கேள்வி மிகவும் முக்கியமானதாகவும், அதற்கு நான் பதில் அளிக்க கடமைப்பட்டவனாகவும் இருக்க வேண்டும். ஆனால் தற்போது அந்நிலை இல்லை. எதிர்ப்புகளையும் மாற்றுக் கருத்துகளையும் எப்படி அணுக வேண்டும் என்பதை உணர்ந்த ஒரு முதிர்ச்சியான ஜனநாயகமாக இந்தியா செயல்பட வேண்டும்.

உங்களுடைய முடிவுகள் குறித்து உங்களுடன் பயின்ற,பயிற்சிப்பெற்ற சக Ias அலுவலர்கள்என்ன கூறினார்கள்.?

ஐ.ஏ.எஸ் வட்டாரத்தின் உள்ளும் வெளியும் இருக்கும் நண்பர்களும் சரி, இதர நண்பர்களும் சரி, இதை எப்படி எடுத்துக் கொண்டாலும் ஒருவருடைய தனிப்பட்ட முடிவை மதிக்க கற்றுக் கொண்டுள்ளோம். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு என்பதால் என்னுடைய நண்பர்கள் எனக்கு ஆதரவாகவே இருக்கின்றார்கள்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் நீங்கள் பணி புரி்ந்துள்ளீர்கள். ஒரு மாவட்ட ஆட்சியராக நீங்கள் நிறைய போராட்டங்களையும் தடையையும் பார்த்திருப்பீர்கள் தானே?

ஒரு மாவட்ட ஆட்சியராக, ஒரு போராட்டம் வந்தால் அதனை கட்டுப்படுத்துவது மிக முக்கியமான கடமையாகும். போராட்டங்கள் தடை செய்யப்படுமே தவிர, கருத்து சுதந்திரத்திற்கு எங்கும் தடையில்லை. இரண்டுக்குமான வித்தியாசத்தை உணர வேண்டியது ஒரு கலெக்டரின் முக்கிய பங்கு. கலவரங்கள் ஒடுக்கப்பட வேண்டும். ஆனால் அமைதி வழியிலான போராட்டங்களை மேற்கொள்ள மக்களுக்கு என்றும் உரிமையுண்டு. அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்ற நம் நாட்டில் இந்த போராட்டங்களையும் ஒடுக்க நினைப்பது எப்படி சரியாகும்?

அரசியலுக்கு வரும் எண்ணம் ?

இப்போதைக்கு இந்த ராஜினாமா தான் மிகவும் முக்கியம். உண்மையை சொன்னால், நான் அடுத்து என்ன செய்யப் போகின்றேன் என்றும் கூட யோசிக்கவில்லை. ஆனால் எனக்கு கொஞ்சம் நேரம் தேவையில்லை. நான் மக்களுடன் இணைந்து செயல்படவே விரும்புகின்றேன். நான் அரசியலில் சேர்வது குறித்தும் யோசிக்கவில்லை. நான் அரசியலில் இணைகின்றோனோ இல்லையோ, அரசியலில் இணைவதை தவறான முன்னுதாரணமாக இளம் தலைமுறையினர் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறினார்.

 மத்திய அரசின் தனிவிவகாரத்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு, நீங்கள் உங்களின் சேவையை தொடர வேண்டும் என டையூ டாமன் நிர்வாகம் அவருடைய வீட்டின் முன்பு அறிவிக்கை செய்தியை ஒட்டியுள்ளது.
சில்வஸ்ஸாவில் இருக்கும் அரசு விருந்தினர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த கண்ணன் கோபிநாதன் தற்போது அங்கு இல்லை. 
ஆனால் அந்த வீட்டில் அரசு ஒட்டியுள்ள அறிவிக்கையில்
“ஒரு சிவில் சேவை செய்யும் ஒருவரின் ராஜினாமா கடிதத்தை அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே அந்த ராஜினாமா செல்லுபடியாகும். உங்களின் கடிதம் குறித்து இதுநாள் வரையிலும் எம்முடிவும் எட்டப்பட்டவில்லை. முடிவுகள் எடுக்கும் வரை உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடமையையும் பொறுப்பையும் நீங்கள் நிறைவேற்ற வேண்டும்” 
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
தலாய் லாமாவின் மறுபிறவி மரணம்.
தாய்லாந்தில் வசித்து வந்தவர் பிரபல புத்ததுறவி சோங்யால் லேக்கல்.
வயது 72.

 இவர் சோங்கல் ரிம்போசே என்றும் அழைக்கப்பட்டு வந்தார்.
1947ல் திபெத்தில் பிறந்த இவர், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு மதம் குறித்த ஆய்வு படிப்பை முடித்தவர்.

திபெத்திய வாழ்க்கை மற்றும் இறப்பு என்ற புத்தகத்தை இவர் எழுதினார்.
இந்தப் புத்தகம் 30 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்று சாதனை படைத்தது.
 இந்த நூலின் ஒலிப்பேழையும் விற்பனையில் சாதனைப் படைத்தது.

இதனைத் தொடர்ந்து இவரை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர ஆரம்பித்தனர்.
முகநூல், காணொளிகளில் இவரது சொற்பொழிவுகள் பிரபலமாயின.
 உலகெங்கும் 23 நாடுகளில் இவருக்கு ஆதரவாளர்கள் பெருகினர்.


இவருடைய சீடர்கள், சோங்யாலை 13வது தலாய் லாமா குருவின் மறுபிறவி என்று நம்பி வந்தனர். இவருடைய புகழும் பரவியது.
இந்நிலையில், கடந்த 1994ம் ஆண்டு பெண் சீடர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறினார்.
நீதிமன்றத்திற்கு வெளியே இந்த வழக்கினை சோங்யால் தீர்த்துக் கொண்டார்.

இதன்தொடர்ச்சியாக பல இளம்பெண்கள் சோங்யால் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர்.
ஆதாரம் இல்லாததால் சோங்யாலுக்கு எந்தவித தண்டனையும் கிடைக்கவில்லை.

ஆனால், புத்த விசாரணை ஆணையம் சோங்யாலுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியது. 
பல்வேறு புகார்கள் உண்மை என்ற போதும், குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. 
இது ஒருபக்கம் இருக்க, சோங்யாலுக்கு ஆதரவாளர்கள் பெருகி அவர் பிரபலமான புத்ததுறவியாக அடையாளம் காணப்பட்டார்.

எழுத்தாளர் மேரி ஃபின்னிகன் என்பவர், திபெத்திய பௌத்த மதத்தில் பாலியல் மற்றும் வன்முறை என்ற ஆய்வு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், புத்ததுறவி சோங்யாலை ஒரு கவர்ச்சியான, இரக்கமற்ற தலைவர் என்று எழுதினார். இதனடிப்படையிலும் சோங்யால் பரபரப்பாக பேசப்பட்டவர்.

இவ்வாறாக சர்ச்சையின் நெருங்கிய நண்பராக இருந்த சோங்யால் தாய்லாந்தில் நேற்று காலமானார்.

தலாய்லாமாவின் மறுபதிப்பான இவருக்கு புற்றுநோய் இருந்ததாகவும் அதன்காரணமாக  இறந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?