இடுகைகள்

ஜூன், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் பாஜகவில் இருந்து ஏன் விலகுகிறேன்?

படம்
                                                                                                                                      - சிவம் ஷங்கர் சிங் மிஷிகன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றவர். வடகிழக்கு இந்தியாவில் பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கான புள்ளிவிவரப் பகுப்பாய்வை நடத்தியவர்.  2015–16இல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சட்டமியற்றுவதற்கான உதவியாளர்கள் (LAMP) என்ற அமைப்பின் உறுப்பினர்,                 - சிவம் ஷங்கர் சிங் அமைப்பு முறைகளையும் தேசங்களையும் கட்டமைக்கப் பல பத்தாண்டுகளோ அல்லது நூற்றாண்டுகளோ தேவைப்படுகிறது. பாஜக விஷயத்தில் நான் காணும் மிகப் பெரிய தோல்வி என்னவென்றால் மிக அற்ப நோக்கங்களுக்காக சில மகத்தான விஷயங்களை அது அழித்துள்ளது என்பதுதான். 1. தேர்தல் பாண்டுகள்: இது அடிப்படையில் ஊழலை சட்டபூர்வமானதாக ஆக்குகிறது. கார்ப்பரேட்டுகளும் அந்நிய சக்திகளும் நம் அரசியல் கட்சிகளை விலைகொடுத்து வாங்குவதை அனுமதிக்கிறது. இந்த பாண்டுகள் அனாமதேயத்தன்மை வாய்ந்தவை. "இந்த குறிப்பிட்ட கொள்கையை நீங்கள் இயற்றினால் நங்கள் உங்களுக்கு ரூ. 1000 கோடி கொடுக்கிறோம்"

மோடி யின் பிரம்மாண்ட தோல்வி!

படம்
சுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாமரர்களை ஏமாற்றி இந்திய பிரதமர் நாற்காலியைக் கைப்பற்றிய நரேந்திர மோடியின் இந்த நான்காண்டு ஆட்சிக்காலத்தில் அப்படி ஒரு பணவரவே சுவிஸ் வங்கியில் இருந்து வராதது மட்டுமல்ல   " சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப்பணம் மோடியின் ஆட்சிக்காலத்தில் கடந்த மூன்றாண்டுகளில்தான் பண மதிப்பிழப்பிற்குப் பின்னர் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இக்கணக்கு சுவிஸ் வங்கிகள் தங்கள் அரசுக்கு தெரிவித்த புள்ளிவிபரங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது ." கணக்கில் வராத பணத்தை வெளியே கொண்டுவருவதற்கென இந்திய அரசு மேற்கொண்ட 'பண மதிப்பு நீக்க நடவடிக்கை' பலனைத் தரவில்லை என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆக மோடி கூறிய வாக்குறுதிகள் எதுவுமே இந்த நான்காண்டில் நிறைவேற்றப்படாததுடன் "இந்தியா அணைத்து துறைகளிலுமே பாதாளத்தில் இறங்கியுள்ளதும் உலகவங்கி,உலக ஆய்வாளர்கள் மூலம் தெரியவந்துள்ளது." மேடைகளில் நவரசங்களில் உணர்ச்சியை வெளிப்படுத்த

ஆன்மிக அரசு?

படம்
யோகி ஆதித்யநாத் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சமயத்தில், உத்தரப்பிரதேச மாநிலம் குற்றங்கள் அற்ற மாநிலமாக இருந்திடும் என்று ரொம்பவும்தான் தம்பட்டம் அடிக்கப்பட்டது.   காரணம் யோகி முற்றும் துறந்த அன்பே உருவான சாமியார் என்று  பாஜகவினரால் மக்களிடம் கதைக்கப்பட்டன. யோகியின் அரசு ஆன்மிக அரசாக செயல்படும் என்றனர். அரசுக்கட்டிடங்களுக்கு காவி அடிக்கப்படத்தைத் தவிர ஆன்மிகம் அங்கு இல்லை. இந்துத்துவ வெறி தான் தலைவிரித்தாடுகிறது. மாற்று மதத்தினர் குறிப்பாக முஸ்லிம்கள் மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட ,பின்தங்கிய ஏழைகள் தான் தாக்குதலின் குறையாக உள்ளனர்.புதிய உடை உடுத்தியததற்காக தாழ்த்தப்பட்ட இளைஞர் தாக்கப்படுவது சாதாரண விடயம். சில கிராமங்களில் இறைசசி வாங்கி செல்லும் மக்கள் பசுவை கொன்றதாக கொலை செய்யப்படுவது வழமையாகிவிட்டது. அதுவும் முஸ்லீம் கையில் இருந்தால் சாவுதான்  கண்டிப்பாக. இம்மாநிலத்தில் 2017இலேயே ‘என்கவுண்டர்’ கொலைகள் தொடங்கிவிட்டன. கிரிமினல்களைக் கண்டதும் சுட்டுக்கொல்ல காவல்துறையினருக்கு கட்டளைகள் அளிக்கப்பட்டன.  முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீதே அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்தில் 15 கிரிம