இடுகைகள்

அக்டோபர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அட விளக்கெண்ணை...தரும் பொலிவு!

படம்
 விளக்கெண்ணை  எனப்படும் ஆமணக்கெண் ணை  ஆமணக்கு செடியின் விதைகளினால் தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான எண் ணை ஆகும்  .  இந்த எண் ணை யில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று.  எனவே இத்தகைய எண் ணையை   அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும்.  அக்காலத்தில் எல்லாம் அழகு பொருட்கள் என்ற ஒன்றும் இல்லை. அப்போது மக்கள் தங்கள் அழகைப் பராமரிப்பதற்கு பெரும்பாலும் எண் ணை யைத் தான் பயன்படுத்தி வந்தனர். அதிலும் குறிப்பாக கூந்தலை நன்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்ப்பதற்கு, தலைக்கு தேங்காய் எண் ணை யை  வி ட விளக்கெண் ணை யைத் தான் பயன்படுத்தி வந்தனர்.  ஆகவே அத்தகைய சிறப்பு வாய்ந்த விளக்கெண் ணை , சற்று அடர்த்தியாக இருக்கும்.  மேலும் சருமத்தை கெமிக்கலால் செய்த அழகுப் பொருட்களை பயன்படுத்தாமல் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அதற்கு விளக்கெண் ணை  சரியான ஒன்றாக இருக்கும்.   விளக்கெண் ணை ய் பயன்படுத்தினால் கிடைக்கும்   நன்மைகள். கூந்தலுக்கு கெமிக்க

உச்சத்தில் ஒரு ஊழல் பேர்வழி!

படம்
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக உலககபாடி இறுதிப்போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்தியா உலக சாம்பியன் ஆனது.  ஆனால் அதே நாளில் இன்னொரு பதவியேற்பும் நடந்தது. பதவியேற்புக்கும், கோப்பையை வென்றதற்கும் சம்பந்தம் இல்லை.  ஆனால்ஒன்று நாட்டிற்கு தலைநிமிர்வு மற்றொன்று தலைகுனிவு நாட்டுக்கு மட்டுமல்ல.  உலகுக்கே ஏன்?  உலக அளவில் மருத்துவர்களுக்கான அமைப்பு உலக மருத்துவக் கழகம்.  இதில் உலகெங்கிலும் இருக்கும் லட்சக்கணக்கான மருத்துவர்கள், உறுப்பினர்களாக உள்ளனர். 112நாடுகளை சேர்ந்த பல்துறை மருத்துவ நிபுணர்கள், இதில் அங்கம் வகிக்கின்றன.  இந்தஉயரிய அமைப்பின் தலைவராக கேத்தன்தேசாய் எனும் இந்தியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெருமை தானே என சில தேசபக்தர்கள் சொல்லக்கூடும்.  அப்படி தேர்வு செய்யப்பட்டவர் நேர்மையானவராக, சாதனைகள் புரிந்தவராக, உலகமே மெச்சும் புதிய கண்டுபிடிப்புக்களை செய்து மருத்துவத்தை அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் மாபெரும் சேவை செய்தவராக இருந்தால் நாடே பெரு விழா எடுத்து அவரை பாராட்டி இருக்கும். ஆனால் தேர்வானவரோ பல ஊழல்குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்.  அவர் வீட்டில் வருமா

கேரளாவின் குப்பைத்தொட்டி தமிழ் நாடு?

படம்
ஆற்றில் மணல் எடுக்க தடை, மலைகளை குடைந்து குவாரி அமைக்க தடை, தொழிற் சாலை கழிவு, மருத்துவமனை கழிவுகளை அவர்களேசுத்திகரித்துக் கொள்ள வேண்டும்.  கோழி, மாட்டிறைச்சிக்கழிவு மற்றும் மீன் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டக்கூடாது; வனத்திலும், திறந்தவெளி பரப்பிலும் பாலித் தீன் கழிவுகளை பயன்படுத்தக்கூடாது'  -என, ஏராளமான விதிமுறைகளை வகுத்துள்ளது கேரள அரசு.அதை கேரளா மக்களும் பிறழாமல் கடை பிடிக்கிறார்கள். ஆனால் ஆற்று மணலை அரசே ஆளுங்கட்ச்சிக்காரர்கள் மூலம் விற்பனை செய்கிறது தமிழக அரசு.ஆனால் அவர்களோ அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மேல் மணலை தோண்டி ஆறுகளையே காணமால் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அதே போல் மருத்துவ கழிவுகள் பாதிப்பு குறித்து, கேரள மக்களிடம் உள்ள விழிப்புணர்வு, தமிழக மக்களிடம் இல்லை என்பது சோகம்.  அரிசி, பால், முட்டை, கறிவேப்பிலை, காய்கறி, மணல், மாடு...இவையெல்லாம் இங்கிருந்து அங்கே செல்பவை. இறைச்சி கழிவு, மருத்துவ கழிவு, பாலித்தீன் குப்பை, செருப்புக்கழிவு... இவையெல்லாம் அங்கிருந்து இங்கே வருபவை. தமிழகத்துக்கும், கேரளாவுக்குமான பண்ட மாற்று முறை, இப்போதைக்கு இப்படித்தான் இருக்கிறது.

இந்த "போஸ் "போதுமா?

படம்
மனிதன் மட்டுமல்ல.வரவர உலகில் மற்ற உயிரினங்களும் காமிராவுக்கு "போஸ் "கொடுப்பதில் பயங்கர தேற்றம் ஆகி விட்டன. இதற்கும் உலக நாடுகள் அனைத்துக்கும் நம் பிரதமர் சென்று  செல்பி,காமிரா முன் கலக்கியதற்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ.? இந்த "போஸ் "போதுமா?என்று சவால் விடும் சில புகைப்படங்கள்.

என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு...???

படம்
வைகோ என்னாச்சி வைகோ...?? என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு அனைத்து கட்சி கூட்டம் பார்த்து அலறுறீங்க அடி வயிற்றில் கை வைத்து பதறுறீங்க விவசாயிக்காக கூட்டம் கூட்டுவது தப்பா வைகோ என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு......??? பச்சை தலைப்பாகையும் கருப்பு தூண்டுமாய் அலைந்தீர்கள் பருப்பு வேகாமல் பாதியிலேயே கழட்டினீர்கள் வல்வெட்டித்துரைப்பற்றி பேசினீர்கள் அங்கே வாழாவெட்டியாய் பலரை ஆக்கினீர்கள் என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு.....?? பிரபாகரனை பற்றி பேசினீர்கள் பரிதாபமாக அவரை மாற்றினீர்கள் கூடங்குளம் பற்றி கொந்தளித்தீர்கள் கூட நிற்காமலேயே வந்துவிட்டீர்கள் என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு....?? மோடி கூட நின்னு ஜோரா முழங்கினீர்கள் மோசம் போயி விட்டதாக புலம்புனீர்கள் மோஷன் போன சிறுவனைப்போல கதறுறீங்க வேஷம் போட்ட கோமாளியாய் பதறுறீங்க என்னய்யா ஆச்சி வைகோ உங்களுக்கு....?? விஜயகாந்தை முதலமைச்சரான அறிவிச்சீங்க இருக்கும்வரை ஜெயாதான் முதல்வர் என்று கூவுறீங்க எதிர்க்கட்சி தலைவரா இருந்தவரை எதிர்காலம் இல்லாமல் ஆக்கிடீங்க பிரேமலதா பின்னாலே நின்று நீங்க பிணம்தின்னி கழுகாக மாறுனீங்க என்னய்யா ஆச்சி வைகோ உங்களு