இடுகைகள்

நவம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அழகிரி வெளியேற்றம்?

படம்
மதுரை மாநகராட்சியில்2009 ம் ஆண்டு தெற்கு மண்டல அலுவலக கட்டிடம் மேலமாரட் வீதியில் புதிதாக கட்டி திறக்கப்பட்டது. அப்போது அதில் ஒரு அலுவலகம் மாநகராட்சி அனுமதியின்படி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டது,அதில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நாடாளுமன்ற தொகுதி அலுவலகம் திறக்கப்பட்டு அந்த அலுவலகம் தொடர்ந்து இயங்கி வருகிறது.   இந்நிலையில், மதுரை மாநகராட்சி மன்ற கூட்டம், மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில்  நடந்தது. இதற்காக அனைத்து கவுன்சிலர்களுக்கும் 3 நாட்களுக்கு முன் வழங்கப்பட்ட கூட்ட அஜண்டாவில் இடம் பெறாத ஒரு தீர்மானம், அவசர தீர்மானமாக அச்சிட்டு ஒரு மணி நேரத்துக்கு முன் வழங்கப்பட்டது. அதில், மு.க.அழகிரியின் எம்.பி அலுவலகத்தை காலி செய்யும் தீர்மானம் இடம் பெற்று இருந்தது. இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அமளி ஏற்பட்டது.இதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எல்ராஜ், “மத்திய அமைச்சரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறீர்கள், 2009 முதல் இயங்கி வரும் அவரது எம்.பி. அலுவலகத்தை அகற்ற அவசரமாக தீர்மானம் கொண்டு வருகிறீர்கள். இதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்”எ

அந்நிய செலவாணி - பண வீக்கம்

படம்
இவைகளைப்பற்றி அதிகம் பேசுகிறோம்.ஆ ட்சியாளர்களும் ,பொருளாதார மேலேயுள்ள[?]நிபுணர்களும்  அடிக்கடி இதைக்கூறி இந்தியா முன்னேறுகிறது .வல்லரசாகிறது என்று கதைக்கிறார்களே.உண்மை நிலவரம் என்ன? இதோ சிறு விளக்கம். நீங்களே இதை படித்து விட்டு இந்திய நிலையை கூடிக்கழித்துப்பாருங்கள்.ஆட்சியாளர்கள் -கூறும் கணக்கு சரியாவே வராது.                     $    இந்திய ரூபாயின் அந்நியச் செலாவணி மதிப்பு குறிப்பாக அமெரிக்க டாலருக்கு எதிராக பெருமளவு குறைந்திருக்கிறது. நவம்பர் 22ல் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.52.32. மார்ச் 2009க்குப் பின்னர் இதுவே மிகப் பெரும் சரிவு. இந்த ஆண்டில் இதுவரை 17 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆசிய நாடுகளில் இந்தியாவிற்கே மிகக் கடுமையான பாதிப்பு. ஆனால் மறுபுறத்தில், நம்மை விட பொருளாதாரம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் அமெரிக்காவின் டாலர் உயர்வது கூடுதல் வேடிக்கை. ஏன் இந்த முரண்பட்ட நிலைமை என்பதும் இன்று விளக்கப்பட வேண்டியதொன்றாகும். இவற்றிற்கெல்லாம் விடை தேடுவதற்கு முன்னர் அந்நியச் செலாவணி மதிப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பது குறித்து அறிந்து கொள்வது அவசியம். செல

இந்தியாவை சூடான் அளவு முன்னேற்றுவோம்?

படம்
பிரதமர் மன்மோகன்சிங் ”கடந்த 5 ஆண்டு காலத்தில் இளைஞர் காங்கிரஸ் பெரும் பலம் உள்ள இயக்கமாக உருவெடுத்துள்ளது. இது ராகுலின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். நாட்டில் பல்வேறு நல்ல பல திட்டங்களை காங்கிரஸ் அரசு செய்து வருகிறது. இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. இதனை எட்டுவதில் பெரும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. இதற்கு பெரும் சவால்களை எதிர்நோக்கும் நிலையில் இருக்கிறோம். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்பது அவசர கோலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல. சிந்தித்துதான் எடுத்துள்ளோம். அன்னிய முதலீட்டில் சில நிபந்தனைகள வைத்துள்ளோம். இது சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளை ஊக்கப்படுத்தும். விவசாயிகள் நல்ல விலை பெறுவர்” என்று ராகுல் காந்தி தலைமையில் நடந்த இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் வருத்தத்துடன் மொழிந்திருக்கிறார். நீங்கள் சந்தித்த சவால்கள். புதிய பொருளாதார திட்டம்,உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் என்ற பெயரில் லாபம் தந்த பொதுத்துறை நிறுவனங்களை வெளிநாட்டி ற்கு விற்ற நல்லதை சொல்லவா? அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய அணு உலைகளை அமெரிக்காவிற்கு திறந்து வைத்து விட்டு போபால் போல் பெரும்

டேம்-999 ?

படம்
அணை-999 இல் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் 999 என்ன? முல்லை பெரியாறு அனை கட்டப்பட்டபோது அணிக்கான இடத்தை ஆங்கிலேய அரசு திருவிதாங்கூர் அரசிடம் இருந்து 999 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்றுள்ளது.அதைத்தான் சகான் ராய் தனது படத்துக்கு அணை-999 என்று வைத்து குசும்புத்தனம் செய்துள்ளார். முல்லை பெரியாறு அணை, 120 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேய ஆட்சியினரால் கட்டப்பட்டது. அப்போது, தமிழகத்துக்கு அணை கட்ட, 8,000 ஏக்கர் நிலத்தை, 999 ஆண்டு குத்தகைக்கு தர, திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதால், இந்த ஒப்பந்தமே செல்லாது எனவும், புதிய அணை கட்டப் போவதாகவும் கேரளா கூறுகிறது. ஆனால், தமிழகத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள, 8,000 ஏக்கரில் புதிய அணையை கட்டாமல், கேரளாவுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப் போவதாகச் சொல்கிறது. இதன் மூலம், அணையின் மொத்த கட்டுப்பாட்டையும், தன் பிடிக்குள் கொண்டு வர, கேரளா முயற்சிக்கிறது. தற்போதைய நிலையில், முல்லை பெரியாறில், 136 அடி வரை தண்ணீர் தேக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவே, 10 டி.எம்.சி., தான். இதில் தண்ணீர் வெளியே

வருகிறது வால் மார்ட்-

படம்
சிறு வியாபாரிகள் வாழ்வை குலைக்குமா [ர்ட்]  ? வெளிநாட்டு நிறுவனங்கள், பல்பொருள் வர்த்தக துறையில் 51 சதவீதம் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுபோல், ஒரு பொருள் சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதமாக இருந்த அன்னிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பை 100 சதவீதமாக உயர்த்தியது.  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி துணை கவர்னர் சக்கரவர்த்தி”சில்லரை வர்த்தக துறையில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டால், இடைத்தரகர்களின் தலையீடு குறைந்து விலைவாசி (பணவீக்கம்) குறையும். குறிப்பாக உற்பத்தியாளரும் நுகர்வோரும் பயனடைவர்” என்றுள்ளார். ரிசர் வங்கி கவர்னர்கள் முதலில் ரூபாயின் மதிப்பு உயர்வுக்கும் ,பணவீக்கத்துக்கும் நிவாரணம் தேடட்டும்.அவர்களின் பொருளாதார நிபுணத்துவ [?] முடிவுகளால் இதுவரை நாட்டில் பணவீக்கத்தையும் ,விலை வாசி உயர்வையும் தடுக்க முடியவில்லை.இவர்களின் பொருளாதார முடிவுகளின் லட்சணம்தான் இந்தியா முழுக்க அவலமாக சிரிக்கிறதே.         அந்நிய முதலீடு என்றால் வால்மார்ட்தான் முதலிடம் பிடித்து முதலில் நுழையும் அதனால் அமெரிக்காவிலே வேலை இழந்தவர்கள்-காணாமல்ப

ஓய்வை {கொட} நாடு

படம்
”நவம்பர் -30 முதல் தமிழக முதல்வர் கொடநாடு மாளிகையில் ஓய்வெடுக்கப்போகிறார்.அரசுப்பணிகளை சில வாரங்கள் அங்கிருந்தே செய்வார்.” இது தமிழக அரசின் செய்தி குறிப்பு. தமிழக அரசின் தலமைச்செயலகத்தை மீண்டும் கோட்டைக்கு மாற்றாமல் கொடநாடுக்கு மாற்றியிருக்கலாம். ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தமிழக மக்களுக்கு தான் பாடுபடுவதாகக் கூறிவரும் ஒருவர் ‘பெங்களூர் நீதி மன்றத்தில் இரு நாட்கள் பதில் கூறி வந்ததற்காக சில வாரங்கள் ஓய்வா? மழை வெள்ளத்தில் தமிழகம் தத்தளிக்கும் போது நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தாமல் கொடநாடு செல்வதுதான் மக்கள்பணியாற்றுவதா?  பாவம்.மின்,பால்,பேருந்து கட்டணங்களை உயர்த்திய அசதியாக இருக்கும். மிக முக்கிய நிலையில் நாடு சென்று கொண்டிருக்கும் போது ஒய்வு என தள்ளிப்போவது சரியா.? விடாத மழையின் பாதிப்பால் ஏராளமான மக்கள் வீட்டைவிட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு அரசின் ஆதரவு கரத்தை எதிர்பார்த்திருக்கின்றனர்.  விலைவாசி ஒருபக்கம் கடித்து தின்கிறது.மறுபக்கம் சில்லறை விற்பனையில் அந்நியர்களைக்கொண்டு வர மத்திய அரசு துடியாய் துடிக்கிறது. அதைக்கூட விடுங்கள் .இப்போது பேரிடர் மேலாண்மை எனப்படும் மழை,வ